Monday, January 30, 2006

3டி திருவிழா - 1

ஆனந்த விகடனில் 3D படங்களை நம்மில் பலரும் பார்த்து ரசிச்சிருப்போம். எனக்கு தெரிந்து அந்த படங்கள் விகடனில் 10 ஆண்டுகளுக்கு முன்னரும் வந்தன அதன் பிறகு சமீபத்தில் 2005ஆம் ஆண்டும் வந்தன. சமீபத்தில் வந்த படங்கள் சிகப்பு-பச்சை நிற சிறப்பு கண்ணாடி கொண்டு பார்க்கும் வகையது. ஆனால் முன்னர் வந்த படங்கள் கண்ணாடி இன்றி பார்க்கும் வகையது. 3டி திருவிழாவில் இங்கு நீங்கள் கண்ணாடி இல்லாமல் பார்க்கக் கூடிய படங்களைக் கண்டு ரசிக்கலாம். ஆனந்த விகடனில் இப்படங்களைப் பார்த்தவர்களுக்கு இதை எப்படி பார்க்க வேண்டும் என தெரிந்திருக்கும்.

உங்களுக்கு பார்க்க தெரியாதா? கவலை இல்லை. கீழே கொடுத்திருக்கிற டிப்சை கடைபிடிச்சீங்கனா சுலபமா பார்க்கலாம்.
1. படத்துல எதாச்சும் ஒரு புள்ளியை தேர்ந்தெடுத்து நல்லா கூர்ந்து பார்த்துட்டே இருங்க.
2. அந்த புள்ளியையே தொடர்ந்து கவனிச்சு பார்க்கணும். கொஞ்ச நேரம் பார்த்துட்டு ஒன்னும் தெரியலனு விட்டுடக் கூடாது.
3. பார்த்துட்டே இருந்தீங்கனா ஒரு மாதிரி கலங்கலா படம் மாறறது போல தெரியும். கலங்கலா தெரியுதுனு விட்டுடாதீங்க. இப்ப தான் நீங்க அந்த புள்ளியை இன்னும் கவனமா பார்க்கணும்.
4. திடீர்னு நீங்க பார்த்துட்டு இருக்கிற படம் மேலெழற மாதிரி இருக்கும். அப்பவும் முன்ன கவனமா பார்த்துட்டு இருந்த மாதிரியே பாருங்க.
5. 3டி பார்வை கிடைச்சிருக்குமே? பார்த்து ரசிங்க. வாழ்த்துகள்.

ஆனந்த விகடன்ல பார்க்கும் போது புத்தகத்தை மேலும் கீழும் அசைச்சு நம்ம வசதிக்கு ஏத்த மாதிரி பார்த்திருப்போம். ஆனா இங்கே படம் தெரியற கணினி திரை அசையாது என்பதால் நம்ம தலையைத் தான் ஆட்டி அசைச்சு பார்க்க வேண்டியிருக்கும். ஆனாலும் படத்தைப் பார்த்ததும் அதே ஆனந்த விகடன் மகிழ்ச்சி கிடைக்கும்.

3டி படம்னு இதை நாம சொன்னாலும் கண்ணாடி இல்லாம பார்க்கக் கூடிய இந்த படங்களை உலகம் முழுவதும் ஸ்டீரியோகிராம்னு(Stereogram) சொல்றாங்க. இதுல இரண்டு வகை. முறையற்ற புள்ளிகளை அடிப்படையாக் கொண்டு உருவான ஸ்டீரியோகிராம்களை Single Image Random Dot Stereograms (SIRDS)னு சொல்றாங்க. ஒரு படத்தை அல்லது பொருளையோ ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை ஓவர்லே(Overlay...மன்னிக்கவும் தமிழில் என்னங்க?) உருவாகும் படங்களை Single Image Stereograms (SIS)னு சொல்றாங்க. கீழே இரண்டி ஸ்டீரியோகிராம் கொடுத்து இருக்கேன்.

முதல் படம் SIS வகையைச் சேர்ந்தது. இதுல கண்டுபிடிச்சு பார்க்க ஒன்னுமில்லை. பார்க்கறதும் ரொம்ப சுலபம். 3டி பார்வை கிடைச்சதும் படத்தோட பிரம்மாண்டத்தை ரசிங்க.


இந்த படம் SIRDS வகையைச் சேர்ந்தது. நல்லா கவனிச்சு பார்த்தா தான் 3டி உருவமும் அதுல மறைஞ்சிருக்கற உருவமும் என்னன்னு தெரியும்.



சரி! இந்த படத்தைக் கண்டுபிடிக்க ஒரு குறிப்பு: "ஒத்தை ரூபா தந்தா ஒரு ரவுண்ட் தான். ரெண்டு பத்து ரூபா தந்தா உன் இஷ்டம் போல தான்". இப்ப இன்னும் ஈஸியா கண்டுபிடிச்சிருப்பீங்களே. பார்த்தவங்க அது என்னன்னு சொல்லணும்.

3டி திருவிழா கைப்புள்ள Callingஇல் தொடரும். வர்ற நாட்களில் இன்னும் சில தகவல் சொல்றேன் ஸ்டீரியோகிராம் பத்தி.

Sunday, January 29, 2006

ஏலி ஏலி லாமா சபக்தானி

மரத்தடியில் படித்த ஒரு அருமையான கதை. படித்துப் பாருங்கள்.

ஏலி ஏலி லாமா சபக்தானி

சிறு வயதில் இயேசுவின் சிலுவையின் மேல் அழுதப்பட்டிருக்கும் INRI என்பதன் விளக்கம் அறிய முயன்றிருக்கிறேன். பல காலம் கழித்து நான் அறிந்து கொண்டது - INRI என்பது Iesus Nazarenus Rexum Iudaeorum (Jesus of Nazareth, King of Jews - நாசரெத்தூர் யோவான் யூதர்களின் தலைவன்)என்பதன் ஊடகம்.சரி,அதுக்கென்ன இப்போ என்கிறீர்களா? மேலுள்ள கதைக்கு தொடர்புடைய தகவல் என்று தோன்றியதால் இங்கு தந்துள்ளேன்.



மேலும் கிறித்தவ ஆலயங்களில் பொதுவாகக் காணப்படும் சிலுவை க்ரக்ஸ் இமிட்டேட்டா அல்லது க்ரக்ஸ் கேப்பிட்டேட்டா(Crux immissa or Crux capitata)என்று அழைக்கப்படுகிறது. சிலுவைகளின் வரலாறு அறிய இங்கு சுட்டவும்.

Saturday, January 28, 2006

யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் தமிழ்நாடு

விந்திய மலைதொடருக்கு வடக்கே படிப்பதற்கோ வேலை காரணமாகவோ செல்ல நேரிடும் என்னை போன்றோருக்கு ஏற்படும் ஒரு வித்தியாசமான பிரச்சனை - அவ்வப்போது பல நாட்களுக்கு தமிழில் பேசவே வாய்ப்பு கிடைக்காதது. அங்கே அவர்கள் பேசும் இந்தி மொழி நமக்கு எளிதாக புரியும். ஆனால் நாம் பேசுவது தமிழா,மலையாளமா,தெலுங்கா என்று கூட அவர்களால் யூகிக்க முடியாது. அந்த கடுப்பில் தென்னிந்தியர்களைப் பொதுவாக 'மதராசி' என்று அழைப்பார்கள். அவர்களுடைய மதராசில் தமிழ்நாடு,கேரளா,கர்நாடகம்,ஆந்திர பிரதேசம் எனும் நான்கு மாநிலங்களும் அடக்கம். இதை பற்றி எல்லாம் கவலை படாமல் நம்மாள் ஒரு படி மேலே போய் இன்னும் தான் இருக்கும் மாநிலத்திற்கேற்ப பஞ்சாபி,குஜராத்தி,மராட்டி என மற்ற மொழிகளையும் கற்று ஒரு கலக்கு கலக்கி விடுவான். இது போதாது என்று அங்கு அவர்கள் பேசும் வட்டார வழக்குகளையும் ஒரு கை பார்த்து விடுவான். இந்தியிலேயே யோசிக்கவும் பேசவும் பல பேர் பழகி விடுவதால் சில சமயம் தமிழ் பேசவே வாய்ப்பின்றி போய்விடும். அப்போது யாராவது நம்மூர் ஆள் வந்து தமிழில் பேச வாய்ப்பு கிடைத்தால் அந்த மகிழ்ச்சி இருக்கிறதே அதை சொல்ல முடியாது...அனுபவித்தால் தான் தெரியும்.

அவ்வாறு இரு தமிழர்கள் வேறு ஒரு மொழி பேசும் மாநிலத்தில் சந்திக்கும் போது கடைபிடிக்க வேண்டிய ஒரு அடிப்படை பண்பாடு, நம் மொழி புரியாதவர் இன்னொருவர் யாரேனும் தங்கள் உரையாடலில் பங்கு பெறுகிறார் எனில், அவருக்கும் புரியும் விதத்தில் இந்தியிலோ அல்லது ஆங்கிலத்திலோ பேசுவது. அதனை நான் முடிந்த வரை கடைபிடிப்பவன். அதே போல தமிழ் பேசும் மற்ற நண்பர்களையும் கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்வேன்.

ஒரு முறை நானும் ஒரு தமிழ் நண்பனும் பல நாட்களுக்குப் பிறகு சந்தித்து தமிழில் பேசிக் கொண்டிருந்தோம். பைசா பொறாத ஏதோ ஒரு பிஸ்கோத்து விஷயத்தைத் தான் பேசி சிரித்துக் கொண்டிருந்தோம். அப்போது நாங்கள் பேசி சிரித்துக் கொண்டிருப்பதை பார்த்த இன்னொரு நண்பன்(தமிழ் தெரியாதவன்) அருகில் வந்தான். "என்ன பேசுறீங்கனு சொன்னா நானும் சிரிப்பேன் இல்ல?" என்றான். தமிழ் நண்பன் "உனக்கு சொன்னா புரியாதுடா. இது எங்களுக்கு மட்டும் தான் புரியும்" என்றான். (ஆமாம் பின்ன...கவுண்டமணி,செந்தில் ஜோக்கை சொன்னால் அவனுக்கு புரியுமா என்ன?). அவன் அன்று என்ன மூடில் இருந்தானோ தெரியவில்லை,"நீங்கள் மதராசிகளே இப்படி தாண்டா! இல்ல-பில்ல அங்க-பிங்க அப்படினு புரியாத மொழியில் ஏதோ பேசிக் கொள்வீர்கள். எங்களுக்கு எதுவும் புரியாது. எப்ப தான் மாற போறீங்களோ?" என்று கொட்டித் தீர்த்தான்.

எனக்கோ சரியான கடுப்பு. அவனே வலிய வந்து நாங்கள் பேசிக் கொண்டிருக்கையில் தலையிட்டு நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்று கேட்டு விட்டு எங்களைத் திட்டுகிறானே என்று. இதுவே மூவருக்கும் பொதுவான விஷயம் என்றால் நாங்கள் கண்டிப்பாக இந்தியிலோ அல்லது ஆங்கிலத்தில் தான் பேசியிருப்போம். ஆனால் என் கூட இருந்த தமிழ் நண்பன் "அது ஒண்ணுமில்லைடா! நாங்க ரெண்டு பேரும் ஒரு சதித் திட்டம் தீட்டிட்டிருந்தோம். அந்த சதித் திட்டம் வெற்றிகரமா நிரைவேறிடுச்சுனா இந்தியாங்கிற இந்த நாடு கூடிய சீக்கிரம் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் தமிழ்நாடு ஆயிடும். அதுக்கப்புறம் யாரும் தமிழைத் தவிர வேற எந்த லாங்குவேஜும் பேச முடியாது. தமிழ் இல்லாத மத்த லாங்குவேஜ் பேசறவங்களை என்ன பண்ணலாம்னு தான் நாங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருந்தோம். அப்போ தான் நீ வந்து கேட்டே...அத உன்கிட்ட எப்படி சொல்லறதுனு தான் தட்டிக் கழிச்சேன்" என்றானே பார்க்கலாம். அதுவரை கடுகடுவென்று இருந்த அந்த நண்பன் தன்னையும் அறியாமல் சிரித்து விட்டான். நாங்கள் இருவரும் சேர்ந்து சிரிக்க அங்கிருந்த இறுக்கம் தளர்ந்த்து. அதன் பிறகு நாங்கள் சந்தித்துக் கொள்ளும் போதெல்லாம் அந்நண்பன் "யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் தமிழ்நாடு" இன்னும் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று கேட்டு சிரிப்பான்.

Friday, January 27, 2006

மறவேன் மறவேன் என்று...


"மறவேன் மறவேன் என்று வேலின் மேல்
ஆணையிட்ட மன்னரும் மறந்தாரோ மயிலே"

தூர்தர்ஷன் மட்டுமே ஒரே தொலைக்காட்சி சேனல் என்று இருந்த காலத்தில், இரவு 9.00 மணிக்கு தேசிய ஒளிபரப்பு தொடங்குவதற்கு முன் மெல்லிசை பாடல்கள் ஒளிபரப்பப்படும். டி.கே.கலா(கில்லி புகழ்) பாடிய மேற்கண்ட பாடல் அடிக்கடி வரும்். ராஜா ரவி வர்மாவின் இவ்வோவியத்தைக் கண்டதும் அப்பாடல் தான் நினைவுக்கு வந்தது. அப்பாடலை எவரேனும் நினைவில் கொண்டிருந்தால் மற்ற வரிகளையும் தெரியப்படுத்துங்கள்.

சொல்றோம்ல : மல்லிகட்டாணி

ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் மல்லிகட்டாணி(Mulligatawny) சூப் என்பது ரொம்பவே பிரபலம். இந்த மல்லிகட்டாணி சூப்புக்கும், தமிழர் உணவு முறைமைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஐந்து நட்சத்திர ஓட்டல்களில்(நான் அறிந்த வரை) ஏனோ நாம் வீட்டிலோ அல்லது சாதாரண ஓட்டல்களிலோ சாப்பிடும் போது கிடைக்கும் பாரம்பரிய சுவை கிடைத்ததில்லை. அப்படி இருக்க மல்லிகட்டாணிக்கும் தமிழ் உணவு முறைக்கும் என்ன தொடர்பு?

மல்லிகட்டாணி நாம் சாப்பிடும் எந்த ஒரு உணவு வகை போலவும் இல்லையே என்று தோன்றும். சுவையில் வேண்டுமானால் தொடர்பு இல்லாமல் இருக்கலாம்...ஆனால் பெயரில் தொடர்பு கண்டிப்பாக இருக்கிறது. மல்லிகட்டாணி என்ற பெயர் "மிளகு + தண்ணி"யிலிருந்து மறுவி வந்ததேயாகும். Mulligatawny = Milagu + Tanni. ஆங்கிலோ-இந்திய வம்சாவழியினர்(Anglo-Indians) தமிழர்களிடமிருந்து கற்ற ஒரு உணவு வகை 'ரசம்'. இதை அவர்கள் மிளகு தண்ணி என்று அழைத்தார்கள். சோற்றுடனும் நூடுல்சுடனும் சேர்த்து அவர்கள் இதை உண்டனர். ஆங்கிலேயர்கள் ஆங்கிலோ-இந்தியர்களிடமிருந்து 'மிளகு தண்ணியைக்' கற்றுச் சென்று அதனை மல்லிகட்டாணி ஆக்கி விட்டார்கள். அடுத்த முறை மல்லிகட்டாணி சூப் குடிக்கும் போது ரசத்தை தான் வேறு பெயரில் நிறைய காசு குடித்து குடிக்கிறோம்னு ஞாபகம் வச்சுக்குங்க.

இதனை விகிபீடியாவிலும் காணலாம்.

Tuesday, January 24, 2006

பெஞ்சு மேல குந்திக்கிட்டு

இந்தியாவின் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகளிலிருந்து மிகச் சிறந்த மாணவர்களைக் கண்டெடுத்து, வேலை ஏதும் கொடுக்கவில்லை என்றால் என்ன ஆகும்? இன்போசிஸில் பயலுக பெஞ்சு மேல குந்திக்கிட்டு அவங்க மின்னணு தகவல் பலகையில் அடிச்ச லூட்டியைப் பாருங்க கீழே. கீழ இருந்து மேல படிச்சுட்டு வந்தீங்கனா நல்லா ரசிக்கலாம்.

இதனால் சகல மென்பொருள் நிறுவனங்களையும் கேட்டு கொள்வது என்னவென்றால், என்னை மாதிரி மென்பொருள் அல்லாத நிறுவன்ங்களில் பணிபுரிபவர்களின் நலனுக்காக தமிழ் தகவல் பலகையை உடனே தொடங்குங்கள். பசங்களின் முழு திறமையையும் அப்போது தான் நாங்கள் ரசிக்க முடியும்.

-----Original Message-----
From: Adheraj Singh
Sent: Tuesday, July 27, 2004 2:12 PM
To: Students05
Subject: Must read:discussion on infy bulletein board........its
just too gud...

Hi
This mail demonstrates what happens when you leave a bunch of bright engg. with absolutely nothing to do. Also shows how many people in Infy were on bench at that time.
Discussion in Infy’s Bulletin Board. Talk about twisting, well in this case mutating, the subject of conversation . Make sure you read from bottom to top for maximum enjoyment. Please do read the whole of it...
...... READ FROM BOTTOM TO TOP
Cheers
Adheraj


-----Original Message-----
From: Aniljoshi
Posted At: Friday, September 03, 1999 11:39 AM
Posted To: General
Conversation: What is Maithili?
Subject: German’s ,Jews, Aryans

We sit before the monitor staring into the pixels, making faces the whole day like monkeys. And you claim that you are not in this monkey business? Beats me!!
ANIL JOSHI
-----Original Message-----
From: AnandV
Posted At: Friday, September 03, 1999 11:13 AM
Posted To: General
Conversation: All Infoscians are dravidians
Subject: All Infoscians are dravidians

My theory is first step to identify software engrs.I’m more interested in showing that software engrs are not monkeys (bcas they are not aryans) which my house owner believes!!!
-----Original Message-----
From: DHRUVAV
Posted At: Friday, September 03, 1999 11:09 AM
Posted To: General
Conversation: All Infoscians are dravidians
Subject: teachers and dravidian

Your theory only proves that Software engineers are not
aryans.Therefore
they can be any thing other than aryans and not only dravidians.
-----Original Message-----
From: AnandV
Posted At: Friday, September 03, 1999 11:04 AM
Posted To: General
Conversation: All Infoscians are dravidians
Subject: All Infoscians are dravidians

B’cas only teachers (arya’s) are aryans. So all software engr’s
are
dravidians.All Infoscians are software engrs........Hence the proof...
-----Original Message-----
From: raghavendrak
Posted At: Friday, September 03, 1999 11:00 AM
Posted To: General
Conversation: What is Maithili?
Subject: Aryans- H aryana

Let me get it clear.Are u suggesting that all people in haryana
are
monkeys?????
-----Original Message-----
From: ashokkm
Posted At: Friday, September 03, 199910:59 AM
Posted To: General
Conversation: What is Maithili?
Subject: Aryans- H aryana

No, Only the native of Haryana are are aryans b’coz U just
remove the ‘H’
in Haryana so it becomes aryana.Agreed or not????
-----Original Message-----
From: raghavendrak
Posted At: Friday, September 03, 1999 10:54 AM
Posted To: General
Conversation: What is Maithili?
Subject: German’s ,Jews, Aryans are Indians

Then even monkeys are aryans!!!!!!(I think they too have 10 fingers).
That’s what ramayan says. So all vanars were also aryans!!!
-----Original Message-----
From: Aniljoshi
Posted At: Friday, September 03, 1999 10:50 AM Posted To: General Conversation: What is Maithili?
Subject: German’s ,Jews, Aryans are Indians

How logical!! Now I could easily prove that even Africans are
Aryans. They
have 10 fingers- so they are aryans. They have 10 toes on their
feet - so
they are aryans. Thanks for proving that all are aryans.
ANIL JOSHI
-----Original Message-----
From: Kedardesai
Posted At: Friday, September 03, 1999 10:40 AM Posted To: General Conversation: What is Maithili?
Subject: Proof:German’s ,Jews, Aryans are Indians

Indians invented the decimal system. Ravan(Jew) had ten heads,
Ram’s
father(aryan + German)had ten chariots (Dash-rath) etc.Thus , the
base is
10. There fore they are all Indians
-----Original Message-----
From: Aniljoshi
Posted At: Friday, September 03, 1999 9:58 AM Posted To: General Conversation: What is Maithili?
Subject: MAJOR FALLACY- Aryans/Germans

Germans don’t play cricket. So cricketers can’t be germans. QED
ANIL JOSHI
-----Original Message-----
From: Dinni Lingaraj
Posted At: Friday, September 03, 1999 9:56 AM Posted To: General Conversation: What is Maithili?
Subject: MAJOR FALLACY- Aryans/ Germans

It just occured that a better subject would have been “CRICKET”
but this
one stopped ....”Are our cricketers Aryans/Germans ?”
So we got to solve this one !


-----Original Message-----
From: Aniljoshi
Posted At: Friday, September 03, 1999 9:55 AM Posted To: General Conversation: What is Maithili?
Subject: Major fallacy/Aryans & Germans

Let the ‘intellectuals’ decide... you will know who you are soon enough.
ANIL JOSHI
-----Original Message-----
From: Yeshwant Dattatreya
Posted At: Friday, September 03, 19999:39 AM Posted To: General Conversation: What is Maithili?
Subject: MAJOR FALLACY- Aryans/Germans

OH BOY!! WHO ARE WE?
-----Original Message-----
From: ashokkm
Posted At: Friday, September 03, 19999:37 AM Posted To: General Conversation: What is Maithili?
Subject: Major fallacy/Aryans & Germans

According to maxmuller, Aryans came from Middle East.
According to Bal Gangadhar Tilak, Antarctica was the home place
of Aryans.
And Swami Dayanand Saraswati says Aryans were originally from
India b’coz
the place “saptsandhav” that is described many times in their
book is
nothing but Doab region between Ganga & Jamuna.
And One theory according Bhagwandas is that Aryans were
originally from
India then they went to middle east and after some time they
returned back
to India.
So there are different theories about the origin of Aryans but
recent
belief is that only India was their native-land.
-----Original Message-----
From: Aniljoshi
Posted At: Friday, September 03, 19999:37 AM Posted To: General Conversation: What is Maithili?
Subject: MAJOR FALLACY- Aryans/Germans

So, at present we are at a point where MK’s son is a Russian,
implying MK
is a Russian. MK is a ardent follower of Ravan who is a German
Jew. Looks
like the german govt running Karnataka(see our previous
discussions for a
proof of it) is conniving with the Russian govt at Tamilnadu (who
support
German) to fight the Italian Govts reps at 10 Janpath road. Some
heavy
international politics we have going on here. Wat’s d’ya say man!!
ANIL JOSHI
-----Original Message-----
From: amajumder
Posted At: Friday, September 03, 1999 9:21 AM Posted To: General Conversation: What is Maithili?
Subject: MAJOR FALLACY- Aryans/Germans
Importance: High

Might be Russians too.. that explains why MK’s son is called
STALIN.
-----Original Message-----
From: raghavendrak
Posted At: Friday, September 03, 1999 9:13 AM Posted To: General Conversation: What is Maithili?
Subject: MAJOR FALLACY- Aryans/Germans

Say this to the DMK and they’re gonna kick u!! according to them
ravan was
a dravidian and was attacked by ram as ram was an aryan. So if
ram was a
german, and assuming he was a ‘hitlerite ‘aryan, then ravan must
have been
a jew!!!
-----Original Message-----
From: Aniljoshi
Posted At: Thursday, September 02, 1999 6:57 PM Posted To: General Conversation: What is Maithili?
Subject: MAJOR FALLACY- Aryans/Germans

No, on the contrary it proves that Ravan was a German since it
was he who
owned the Pushpak Viman. The passengers could belong to any country.
ANIL JOSHI
-----Original Message-----
From: vishnoor
Posted At: Thursday, September 02, 1999 5:44 PM Posted To: General Conversation: What is Maithili?
Subject: major fallacy...

After defeating ravana .... Sri Rama flew back in Ravana’s
pushpak vimana &
This is what the Mordern Lufthansa is . It is the modern version
of the
older pushpaka vimana.
The pushpak vimana was “driven” by hansa or swans....
The insignia of Lufthansa is also a swan... This further proves Sri Rama was a German Hail Rama ....

----------
From: khandelwalh
Posted At: Thursday, September 02, 199912:54 PM Posted To: General Conversation: What is Maithili?
Subject: major fallacy...

the argument is wrong.
the conclusion is fallacious

-----Original Message-----
From: vishnoor
Posted At: Thursday, September 02, 1999 4:44 PM Posted To: General Conversation: What is Maithili?
Subject: Mithla

Rama was an aryan ;
Germans claim to be aryans so Rama was a German Hail Rama....

----------
From: ashokkm
Posted At: Thursday, September 02, 199911:53 AM Posted To: General Conversation: What is Maithili?
Subject: Mithla

And what about Home minister Advani & Noble Prize winner Economics Dr.
Amartya Sen???
-----Original Message-----
From: Sudha Vedula
Posted At: Thursday, September 02, 19994:02 PM Posted To: General Conversation: What is Maithili?
Subject: Mithla & Maithili

God Shiva is also a foreigner because
Mt.Kailash is in China. Buddha was also a foreigner because
Lumbini(?) is
in
Nepal. So was Guru Nanak, because Talwandi is in Pakistan. So was
Porus. So
was Gandhari.....:)
-----Original Message-----
From: Vikas Sharma
Posted At: Thursday, September 02, 1999 10:14 AM Posted To: General Conversation: What is Maithili?
Subject: Mithla & Maithili

Recently one Congress leader, in defense of Sonia, quoted that
Sita was
also a foreigner because Janakpuri is in Nepal.
-----Original Message-----
From: Pranav Chandra
Posted At: Wednesday, September 01,1999 1:10 PM Posted To: General Conversation: What is Maithili?
Subject: Mithla & Maithili

Maithili is a language which derives it’s name from the region in
Bihar
where it is spoken, the old kingdom of Mithla.
There is a reference to the area even in Ramayana- Janak( Father
of Sita)
was king of Mithla and has been referred to as MithlaNaresh at
many places
in RamCharitraManas - therefore Sita was also called Maithili.

----------
From: Subhashis Roy
Posted At: 1999”N9OE?1”ú 13:03
Posted To: General
Conversation: What is Maithili?
Subject: what is Maithili ?
Importance: High

Maithili brahmins are known for their gastronome qualities !!!
-----Original Message-----
From: yogesh_pm
Posted At: Wednesday, September 01,1999 12:12 PM Posted To: General Conversation: What is Maithili?
Subject: re: what is maithili

Maithili is a language spoken in central bihar. It has its own
literature.It has its root in the old kingdom of that area.It is
similar to
Hindi.
-----Original Message-----
From: himanshudas
Posted At: Wednesday, September 01, 1999 9:06 AM Posted To: General Conversation: What is Maithili?
Subject: What is Maithili?

Hi!
Who or what is Maithili, in context of Indian literature?

Sunday, January 22, 2006

சர்தார்ஜி ஜோக்குகள்

ஒரு சர்தார்ஜி புகைப்படக்காரரை ஒரு சாவு வீட்டில் பத்து பேர் சேர்ந்து அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வழியாகச் சென்ற ஒருவர் "ஏங்க அவரைப் போட்டு அடிக்கறாங்க?" என்று மற்றொருவரைக் கேட்கிறார்.
"பின்ன என்னங்க? இறந்தவர் உடலைப் போட்டோ எடுக்கச் சொன்னால் ஸ்மைல் ப்ளீஸ் என்றால் என்ன செய்வார்களாம்?"

சர்தார்ஜிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. எதிர்முனையில் இருப்பவர் "சந்தா! உங்கள் மகள் இறந்து விட்டாள்" என்கிறார்.
துக்கம் தாளாமல் கட்டிடத்தின் 100 வது தளத்திலிருந்து சர்தார்ஜி குதித்து விடுகிறார்.
50வது தளத்தை அடையும் போது அவருக்கு நினைவுக்கு வருகிறது தனக்கு மகள் இல்லையென்று.
25வது தளத்தை அடையும் போது அவருக்கு நினைவுக்கு வருகிறது தனக்கு இன்னும் திருமணமாகவில்லையென்று.
10வது தளத்தை அடையும் போது அவருக்கு நினைவுக்கு வருகிறது தன் பெயர் சந்தா அல்ல பந்தா என்று.

ஓவியக் கண்காட்சியில் சர்தார்ஜி கேட்கிறார்"பார்க்க படுகேவலமாக இருக்கும் இதை தான் மாடர்ன் ஆர்ட் என்கிறீர்களா?"
பதில் வருகிறது"சாரி சார்! அது ஓவியம் அல்ல கண்ணாடி"

ஒரு சின்ன குவிஸுங்கோ - பதில்

சொன்னா ஆச்சரியப்படுவீங்க! இந்த இவேசுபிரான் சிலை இருப்பது நமது சென்னையில் தான். அட! எங்கப்பா? எங்களுக்கு தெரியாம? என்று கேட்பவர்களுக்காக - பரங்கிமலை என்று அழைக்கப்படும், புனித தோமையார் மலையின் (St.Thomas Mount)மேல் கிட்டத்தட்ட 300 அடி உயரத்தில் உள்ளது.

என்னப்பா? நாங்க எத்தனை வாட்டி போயிருக்கோம் நாங்க பார்த்ததேயில்லியே? எனக் கேட்பவர்களுக்கு - இவ்வாலயத்தின் பிரதான நுழைவாயில் நந்தம்பாக்கம், போரூர் செல்லும் பட் சாலை(Butt Road) வழியாக உள்ளது. வந்த வழியாகவே திரும்பிச் சென்றால் இச்சிலையைக் காண முடியாது. பட் சாலை வழியாக தேவாலயத்துக்கு வந்து், வடகிழக்கு புறமாக சற்று கீழிறங்கினீர்களானால் இச்சிலை தெரியும். இல்லையெனில் பரங்கிமலை ஆபீசர்ஸ் ட்ரெயினிங் அகாடெமி(OTA) அருகாமையில் ஒரு சிறிய பாதை உள்ளது, அவ்வழியாகச் சென்றால் முதலில் இச்சிலையைக் கண்டபின் தான் ஆலயத்துக்குச் செல்ல முடியும். படத்தில் சிறியதாகத் தோன்றினாலும் கிட்டத்தட்ட 15அடி உயரமுள்ள சிலை இது.

சரி அவ்வளவு தூரம் போய் சிலையைப் பார்த்துட்டீங்க! சிலைக்குப் பக்கத்துல் நின்னு பார்த்தா மீனம்பாக்கம் விமான நிலையத்து ஓடுபாதை அழகாகத் தெரியும். விமானம் மேலெழுந்து பறப்பதையும் பார்க்கலாம். கீழே இருக்கும் படத்தைப் பாருங்க. மலை மேலிருந்து எடுத்த புகைப்படம் இது. விமானம் take-off ஆகறதைத் தான் நான் எடுத்தேன். ஆனா அது இந்த படத்துல இங்க தெரியலை. படத்துல சமதளமாகக் கீழே தெரிவது தான் சென்னை விமான நிலைய ஓடுபாதை(ரன்வே).

எதிர் பார்த்த அளவு இதில் யாரும் பங்கு கொள்ளவில்லை எனினும் முயற்சி செய்த ராமநாதனுக்கு ஒரு "ஓ..."

Saturday, January 21, 2006

Iam just a Man...

கீழ இருக்கற படங்களைக் கொஞ்சம் பாருங்க!

நாம் வாழும் கிரகமான பூமியினுடைய அளவை மற்ற கிரகங்களோடு ஒப்பிட்டு பாருங்கள்.

இப்போது அதனை வியாழன் மற்றும் சனி கிரகங்களுடன் ஒப்பிடுங்கள்
( முதல் வரிசையில் உள்ள முதல் பந்து தான் பூமி)

இப்போது அதே பூமியை சூரியனுடன் ஒப்பிடுங்கள்.

(சிவப்பு அம்புக் குறி சுட்டும் முதல் வரிசையில் உள்ள ஐந்தாவது புள்ளி தான் பூமி)

சூரியனுடன் ஒப்பிட்டு பார்க்கையில் பூமி வெறும் ஒரு புள்ளி தான். அதில் வாழும் மனிதன் எம்மாத்திரம்?

இப்போது இவை அனைத்தையும் படைத்தவனை எண்ணிப் பாருங்கள். தன்னிலை மறந்து தான் என்ற அகந்தையுடன் வாழும் காலத்தை மற்றவர்களுக்கும் தனக்கும் பயனற்றதாக ஆக்குகிறோம். மதத்திற்காகவும் பணத்திற்காகவும் போரிட்டு மாள்கிறோம்.

யோசித்து பார்க்கையில் 'Iam just a Man... imperfect lowly' என்பது சில சமயம் விளங்குகிறது. நாம் தோன்றியதும் உண்டு,உடுத்து,உறங்கி மாய்வதற்கில்லை என்றும் புரியும். ஆனால் இந்த சிந்தனை எல்லாம் சில கணங்களுக்குத் தான். அடுத்த கணமே 'போய் பொழப்பைப் பாருடா லூஸுப் பையா' என்ற ஒரு எண்ணம் தலையில் தட்டி உட்காரச் சொல்லுகிறது.

காரணம்??? தெரிஞ்சாச் சொல்லுங்க!

Thursday, January 19, 2006

இந்திய விமானப் படை அகாடெமியிலிருந்து...1

என்றைக்கும் இல்லாதத் திருநாளாகக் கடந்த ஏழு ஆண்டுகளில் முதன் முறையாக பொங்கல் நாளன்று "சுட்டி"(இந்தியில் விடுமுறை) கிடைத்தது. தில்லியில் இருந்த வரை அலுவலகத்திற்கு அருகில் இருக்கும் "அண்ணா ரெஸ்டாரண்ட்" நடத்தும் நம்மூர் காரர் அண்ணாவின் தயவால், அது பொங்கல் தினம் என நினைவு படுத்திக் கொள்ள ஒரு தொண்ணையில் சர்க்கரை பொங்கல் கிடைக்கும். மற்றபடி "இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக" வருபவற்றை எல்லாம் பொங்கல் அன்று கடைசியாக 1999ஆம் ஆண்டு பார்த்ததாக ஞாபகம். இந்தூருக்கு மாற்றம் செய்து அந்த ஒரு தொண்ணை பொங்கலுக்கும் வச்சாங்கய்யா ஆப்பு என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே புதுவருடம் ஞாயிற்றுக் கிழமை தொடங்கியதால் 14 ஆம் தேதி 'மகர சங்கராந்தி'யை முன்னிட்டு விடுமுறை என்று அறிவித்து விட்டார்கள். லீவுக்காக ஏங்கினாலும் ஒவ்வொரு முறையும் லீவு விட்டா என்ன பண்ணறதுன்னு தெரியாம முழிக்கிறது வழக்கம். "வடநாட்டுக்கு" பொழைக்கப் போன என்னை மாதிரி ஆளுங்களுக்கு ஏது போக்கிடம்? சரி ஒரு ரெண்டு நாள் லீவு போட்டுட்டு ஐதராபாத்தில் இருக்கும் சித்தியைப் பார்த்து வரலாம் என்று தோன்றியதால், விட்டேன் ஜூட் ஐதராபாத்திற்கு.

பொங்கல் அன்று சென்னைக்கு வீட்டுக்குச் செல்லாமல் ஐதராபாத்திற்கு சென்றதற்கு மற்றுமொரு காரணம் சித்தி இருப்பது இந்திய விமானப் படை அகாடெமி வளாகத்தில். இந்த இடத்தை எல்லாம் பார்ப்பதற்கு மற்றுமொரு வாய்ப்பு கண்டிப்பாகக் கிடைக்காது, சித்தி அங்கிருக்கும் போதே பார்த்து விட வேண்டும் என்பதால் குளிரையும் பொருட்படுத்தாது அதிகாலை 3.30 மணிக்கு ஐதராபாத்திற்கு ரெயிலைப் பிடித்தேன் போபாலிலிருந்து. துண்டிகல் (Dundigal) என்ற இடத்தில் அமைந்து உள்ள இவ்வகாடெமி ஐதராபாத்திலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ளது. 12 சிறிய கிராமங்களைச் சேர்த்து உருவானது பரந்து விரிந்து கிடக்கும் இவ்விடம். விமானப்படை வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கும் இவ்வளாகத்தினுள் நுழைந்ததுமே "Alma Mater of the Air Warrior" என்று எழுதப்பட்ட தகவல் பலகைகள் நம்மை வரவேற்கின்றன. மனதிற்கு மகிழ்ச்சி தரும் தூய்மையையும், பசுமையையும் இராணுவ ஒழுங்கையும் இங்கு மூலை முடுக்கெங்கிலும் காணலாம். சமீபத்தில் நேஷனல் ஜியோகிராஃபிக் (Nat Geo) சேனலில் வந்த 'மிஷன் உடான்'(Mission Udan) என்ற நிகழ்ச்சியையும் துண்டிகலில் தான் படமாக்கி இருக்கிறார்கள். அதைப் பற்றி எனது ஆங்கில வலைப்பூவிலும் எழுதியிருக்கிறேன்.

எப்படியாச்சும் ஒரு போர் விமானத்தையாவது அதனுடைய இயற்கை சூழலில் பார்த்து விட வேண்டும் என்ற ஆவல் அங்கு சென்றதும் மேலிட்டது. காரணம் எந்த பக்கம் பார்த்தாலும் பெருசு பெருசா நெஜ விமானம் சைசுக்கு பொம்மைங்க. பொம்மையே இவ்ளோ சூப்பரா இருந்துச்சுனா மெய்யாலுமே எவ்ளோ சோக்கா இருக்குமுனு ஒரு ஏக்கம். நானெல்லாம் எப்பவோ பைலட் ஆயிருக்க வேண்டியவன்...ஏதோ என் கஷ்டகாலம் இப்படி வந்து நட்டையும் போல்டையும் வாங்கி கொடவுன்ல போடுற எடத்துல மாட்டிக்கிட்டேன். அப்படி பைலட் ஆயிருந்தேனா இந்நேரம் ஒரு நாலஞ்சு எதிரி கப்பலைப் போட்டு தள்ளியிருப்பேன்.(சரி...சரி...அடங்கிட்டேன்)

சித்திக்கு தெரிந்த ஒரு பைலட் (ஸ்குவாட்ரன் லீடர் ராங்கில் இருப்பவர்) விமானப் படை விமானத்தை அருகிலிருந்து பார்க்கும் ஆசையைப் பூர்த்தி செய்தார். அவரிடமிருந்து கேட்டு தெரிந்து கொண்ட சில விஷயங்கள்:
விமானப்படையில் பைலட் பயிற்சிக்கு சேரும் கேடட்கள்(Cadets), முதல் ஆறு மாதத்திற்கு கீழே உள்ள எச்.டி.பி-32(HDP-32) என்ற பயிற்சி விமானத்தில் கண்டிப்பாகப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இது மணிக்கு 180 கி.மீ.வேகத்தில் பறக்கக் கூடிய இலகு ரக ஜெட் எஞ்சின் பொறுத்தப்படாத இரண்டு பேர் அமரக் கூடிய ஒரு சிறிய விமானம்.


(அட யாருப்பா அது ஸ்டைலா,பர்சனாலிடியா வண்டியை ஓட்டறது...அட இவரு தான் நம்ம கைப்புள்ளயா!)


(இது கைப்புள்ள இல்லாத களையிழந்த HDP-32 விமானம்)

இந்த ஆறு மாத பயிற்சிக்குப் பின் சூர்யகிரண்(Suryakiran) எனும் ஜெட் ரக விமானத்தில் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இப்பயிற்சியின் முடிவுகளைத் தொடர்ந்து அவர்கள் Mig-21 ரகப் போர் விமானப் பைலட்கள் ஆகிறார்களா அல்லது ஹெலிகாப்டர்/சரக்கு விமானம்(Transport Aircraft) பைலட்கள் ஆகிறார்களா என்று முடிவு செய்யப்படும். போர் விமானப் பைலட்கள் துண்டிகலிலும், ஹெலிகாப்டர்/சரக்கு விமானப் பைலட்கள் பெங்களூரை அடுத்து உள்ள யெலஹங்காவிலும் மேலும் ஒரு ஆண்டுக்கு தங்கள் பயிற்சியைத் தொடர்கிறார்கள்.

சரி இன்னும் கொஞ்சம் மேட்டர் இருக்கு சொல்லறதுக்கு. திரும்பவும் வாங்க...வர்ற பதிவுகள்ல சொல்லறேன். எனக்கே தெரியுது மெகா சீரியல் ரேஞ்சுக்கு பிலிம் ஓவராவும் மேட்டர் கம்மியாவும் காட்டியிருக்கேனு. அடுத்த வாட்டி நல்லப் புள்ளயா நடந்துக்குவேன். காட் ப்ராமிஸ்பா.

ஒரு சின்ன குவிஸுங்கோ!

கீழே இருக்குற இந்த படத்தைப் பாருங்க.


இந்த அழகிய இயேசுபிரானின் சிலை எங்கே இருக்குன்னு சொல்லுங்க பார்ப்போம். டாய் வெண்ரு! என்ன விளையாடறியா? இது கூட எங்களுக்கு தெரியாதானு பல பேர் கேக்கலாம். இத சாக்கா வச்சு தெரியாதவங்க நாலு பேர் தெரிஞ்சுக்குவாங்க இல்லியா?

(சே! பாழாப் போன பின்னூட்டம் வாங்கறதுக்கு என்னென்ன டகாய்த்தி வேலை, டயலாக் எல்லாம் விட வேண்டியிருக்கு. இதுக்காச்சும் யாருனா எதனா சொல்றாங்களானு பார்ப்போம்)

இளையராஜா உங்களைக் கேட்கிறார்


சிம்பொனி வடிவத்தில் திருவாசகம் போன்ற தன்னுடைய புது முயற்சிகளைக் குறித்து இசைஞானி இளையராஜா தங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறார்.
பதிலளிக்க கீழ்கண்ட இணைய தளத்திற்கு செல்லுங்கள்.

Wednesday, January 18, 2006

பாட்டு படிக்கேன் : ஒரு ஜீவன் அழைத்தது

நடிகர்கள் முரளி மற்றும் மோகனுக்கு ஆரம்பக் காலத்தில் மிகவும் கைகொடுத்தது, மொட்டை அவர்கள் படங்களுக்கு அமைத்த இசை என்று சொன்னால் அது தவறாகாது. அந்த வகையில் முரளி நடித்த படமான கீதாஞ்சலி(1985)இல் இளையராஜா வைரமுத்துவின் இப்பாடலைச் சித்ராவோடு சேர்ந்து பாடியிருப்பார். பாடுவோர் குரலே இசையாக சில பாடல்களுக்கு அமையும் எனக் கேட்டிருக்கிறேன். அப்படி அமைந்த அதிக ஆர்கெஸ்ட்ரேஷன் இல்லாத ரம்மியமான ஒரு காதல் பாடல் தான் "ஓரு ஜீவன் அழைத்தது..."

என்னை மிகவும் கவர்ந்த வரிகள்:

பெண் : காணாத அன்பை நான் கண்டுகொண்டேன்
காயங்கள் எல்லாம் பூவாக

ஆண் : காமங்கள் ஒன்றே என் காதலல்ல
கண்டேனே உன்னைத் தாயாக

தன் காதலியினுள்ளும் தன் தாயினைத் தேடும் தூய்மையான அன்பு கொண்ட காதலனின் மனதை ஒரு வரியில் படம் பிடித்த கவிஞருக்கு ஒரு 'ஓ....' தன் இசையால் நம் நெஞ்சில் என்றும் நிலைக்கச் செய்த இசைஞானிக்கு ஒரு 'ஓ...'

புல்லைத் தின்னும் காலம்

ட்ரிங்...ட்ரிங்...ட்ரிங்...

என்னோட செல்போன் தான் அடிக்குது. அம்மா தான் பேசறாங்க சென்னையிலிருந்து.

"என்னப்பா எப்படியிருக்கே! நல்லாயிருக்கியா?"

"நான் நல்லா இருக்கேன்மா. நீங்க எல்லாம் நல்லா இருக்கீங்களா?"

"நாங்க எல்லாம் நல்லா இருக்கோம். குளுரெல்லாம் எப்படி இருக்கு? டெல்லியிலே இந்த தடவை 2 டிகிரியாமே குளுரு?"

"ஆமா! டெல்லியிலே செம குளுரு...ஆனா இந்தூர்ல ஒன்னும் இல்லை. ஒரு ஜேக்கட் இருந்தா போதும் சமாளிச்சுடலாம். டெல்லியிலே 6 வருஷம் இருந்துட்டு இதெல்லாம் ஜுஜுபியா தான் இருக்கு"

"குளுரு கம்மினு அலட்சியமா இருக்காதே...ஸ்வெட்டர் எல்லாம் போட்டுக்கிட்டே வெளியில போ"

"சரி சாப்பிட்டியா?"

"என்னடா இன்னும் மேட்டருக்கு வரலியேனு யோசிச்சுட்டு இருந்தேன்"

"சரி என்னா உங்க வீட்டுல இன்னிக்கு குசினி?"

"இன்னிக்கு எங்க வீட்டுல வெறகு வைக்கலை"

"அப்புறம்...?"

"வெளியிலே தான் எங்கேயாவது போய் சாப்பிடணும்"

"காலையிலே என்ன டிஃபன்?"

"இன்னிக்கு சண்டே இல்ல... அதனால மேகி"

"அப்ப மத்த நாளெல்லாம்?"

"கார்ன் ப்ளேக்ஸ் இல்லன்னா ஓட்ஸ்"

"ஏன் இட்லி தோசை எதுவும் சாப்பிடக் கூடாதா?"

"காலங்காத்தாலே இட்லி கடை போட்டு உக்காந்திருந்தா காலையில 7 மணிக்கு வர்ற கம்பெனி பஸ்ஸுக்கு டாட்டா சொல்ல வேண்டியது தான்"

"ஹூம்...வீட்டுல கார்ன் ப்ளேக்ஸ், மேகி, ப்ரெட் இதெல்லாம் குடுத்தா எறங்காது. இப்ப எறங்குதாமா?"

".......................................!!"

என் மனசுக்குள்ளேயே "எறங்குது ஆத்தா! வீட்டுல குடுக்கறத தின்னுருந்தா நல்ல புத்தி இல்ல வந்திருக்கும். அதெப்படி தின்போம்? குதிரையும் புல்லைத் தின்னும் காலம் ஒன்னு வருமாமே...அப்போ எல்லாம் எறங்கும். There is always a first time"

Tuesday, January 17, 2006

ச்சு...ச்சு...பின்னிட்டாருய்யா!

இன்றைய தமிழ் திரைப்படங்களை நாம் எவ்வளவு தான் சாடினாலும், அவ்வப்போது பாலைவனச் சோலை போல சில இயக்குனர்கள் தங்கள் திறமையையும் தனித்தன்மையையும் நிலைநாட்டிக் கொண்டு தான் வந்து இருக்கிறார்கள். அப்படி என்னைக் கவர்ந்த, உச்சு கொட்ட வைத்த சில தமிழ் திரைப்படக் காட்சிகள்:

1. அழகன் திரைப்படத்தில் மறைந்த தங்களது தாயைக் காண அந்த வீட்டில் உள்ளக் குழந்தைகள் ஏங்கிக் கிடக்கும். ஆனால் வீட்டில் அம்மாவின் நினைவாக ஒரே ஒரு புகைப்படம் தான் இருக்கும். அதுவும் கதவைத் திறக்க முயற்சி செய்வது போல பின்பக்கம் திரும்பி நிற்பது போல் இருக்கும் புகைப்படம். தாயின் முகத்தைக் காண ஏங்கும் அந்த வீட்டின் கடைக்குட்டிக் குழந்தை, சோபாவின் மீது ஏறி நின்று புகைப்படத்தைத் திருப்பி பார்க்கும் தாயின் முகம் தெரிகின்றதா என்று. பல காட்சிகளில் விளக்கப் பட வேண்டிய ஒரு ஆழ்மன ஏக்கத்தை ஒரு ஷாட்டில் வடித்திருப்பார் பாலச்சந்தர். உண்மையிலேயே காமிராவைக் கொண்டு ஒரு கவிதை புனைந்திருப்பார்.

2. மகாநதி திரைப்படத்தில் ஜெயிலில் இருக்கும் தன் தந்தையைக் காண வரும் பெரிய மனுஷியாகி விட்ட மகள் ஷோபனா, ஆசி பெற தந்தையின் காலைத் தொடுவதற்கு குனிந்து ஜெயில் சுவரைத் தொடும் காட்சி. அதைக் கண்ட கமல்ஹாசன் கண்கலங்குவதும், அவர் முகத்தில் காட்டும் உணர்ச்சிகளும் கல்லையும் கரையச் செய்யும் காட்சி. இக்காட்சியை இயக்குனர் சந்தானபாரதி அமைத்தாரா அல்லது சினிமா வட்டாரத்தில் பேசப்படுவது போல இயக்கத்தில் தலையிட்டு கமல் தன் கற்பனையைப் புகுத்தினாரா தெரியாது. ஆனால் யார் அமைத்திருந்தாலும் ஒரு வகுப்பின் தொடல் அக்காட்சியில் புலப்படுகிறது. (புரியலையா...அதாங்க 'A Touch of Class')

3. மூன்றாவது காட்சி முந்தைய இரண்டினைப் போல விஷுவலாக இல்லாமல், ஒரு மனிதனின் தன்மை மாறுப்படுவதை அழகாக வேறுபடுத்திக் காட்டுவதற்காக அமைக்கப்பட்ட ஒரு ஆர்ப்பாட்டமில்லாத காட்சி. படம் பதினாறு வயதினிலே. கிராமத்தில் கோமணம் கட்டிய சிறுவர்கள் ஒரு ஓணானை அடித்துக் கொண்டிருப்பார்கள். அந்த வழியாக வரும் சப்பாணி(கமல்)"டேய்!பாவம்டா அது அதை அடிக்காதீங்கடா" என்பார். அதைக் கேட்ட சிறுவர்கள் "போடா சப்பாணி! ஒனக்கு ஒன்னுமே தெரியாது. இராமரு காட்டுக்கு போகும் போது அணில் கல்லைக் கொண்டாந்து குடுத்துச்சு. ஆனா இந்த ஓணான் இருக்கே அது ஒன்னுக்கு தான் விட்டுக் குடுத்துச்சு" என்பார்கள். இதைக் கேட்ட சப்பாணி "டேய் விட்டுருங்கடா! ஓணான் இனிமே ஒன்னுக்கே விடாதுடா!" என்பார். சப்பாணி சொல்வதைப் பொருட்படுத்தாமல் சிறுவர்கள் ஓணானை அடித்துக் கொல்வார்கள். இந்த காட்சியைப் பார்க்கும் போது வெறும் சிரிப்புக் காட்சியாகத் தோன்றினாலும், கிளைமாக்ஸுக்கு மிகவும் உதவும் ஒரு காட்சி. ஒரு ஓணானைக் கூடக் கொல்ல விரும்பாத அப்பாவி சப்பாணி தான் விரும்பும் பெண்ணைக் காப்பதற்காகத் தன்னை விட வலிமையான பரட்டையின் தலையில் கல்லைப் போட்டுக் கொல்வதை ஒரு அற்புதமான காண்டிராஸ்டாகப் பயன்படுத்தியிருப்பார் இயக்குனர் பாரதிராஜா.
உங்களுக்கு தெரிந்த உச்சு கொட்டச் சொல்லும் காட்சிகளையும் சொல்லுங்களேன்.

சொல்றோம்ல : பாண்டிச்சேரி

பாண்டிச்சேரி என்ற ஊரின் பெயர் ஆங்கில/ஃபிரெஞ்சு எழுத்துப் பிழையால் வந்தது என்றால் நம்ப முடிகிறதா? பாண்டிச்சேரி என்று ஒரு ஊரே உண்மையில் கிடையாது. ஆரம்ப காலம் தொட்டே அதற்கு 'புதுச்சேரி' என்று தான் பெயர். புதுச்சேரியை அக்காலத்தில் ஆண்டு கொண்டிருந்த ஃபிரெஞ்சு நாட்டவர் புதுச்சேரி என்பதனை 'Poudichéry' என்று எழுதினர். 'Poudichéry' என்ற சொல்லில் உள்ள 'u' வை எந்த புண்ணியவானோ 'n' என்று படிக்க அது 'Pondichéry' ஆனது. நாளடைவில் எழுதும் போதும் படிக்கும் போதும் 'Pondichéry' என்பதனை உபயோகப்படுத்தத் துவங்க இல்லாத ஒரு ஊரான 'பாண்டிச்சேரி' உருவானது. நம்மவர்கள் அதையும் சுருக்கி 'பாண்டி' ஆக்கிவிட்டார்கள். சென்னையிலிருந்து பாண்டிச்சேரி(மன்னிக்கவும்...புதுச்சேரி) செல்லும் அனைத்து பேருந்துகளிலும் 'பாண்டி' என்றே எழுதக் கண்டிருக்கிறேன். புதுச்சேரி அரசு பேருந்துகளில் மட்டும் 'என் பேர் சப்பாணி இல்லை கோபாலகிருஷ்ணன்' என்று சொல்லும் விதமாக புதுச்சேரி என்று எழுதியிருக்கும். ஆனாலும் மெட்ராஸ் சென்னை என்றும் பாம்பே மும்பை என்றும் ஏற்றுக் கொள்ளப் பட்ட அளவுக்கு 'புதுச்சேரி' வெற்றி பெறவில்லை என்றே தோன்றுகிறது. எங்கோ எப்போதோ படித்த பெயர் காரணத்தை இன்று விகிபீடியாவிலும் ஊர்ஜிதப் படுத்திக் கொண்டேன்.

கீழ்கணட ஊர்களின் பெயர்களைப் பாருங்கள். ஆங்கிலேயர்கள் நம்மூர் பெயர்களை இவ்வாறு எழுதினார்கள்/படித்தார்கள்.
Wandiwash- வந்தவாசி
Tinnevelly- திருநெல்வேலி
Pallamcottah- பாளையங்கோட்டை
Tranquebar- தரங்கம்பாடி
Punjalamcoorchy - பாஞ்சாலங்குறிச்சி

இப்பெயர்களை எல்லாம் ஆங்கில மொழிபெயர்ப்பாக அப்படியே தமிழில் வாசித்தால்?....வண்டிவாஷும், பஞ்சாலம்கூர்ச்சியும் நல்லாவா இருக்கு? ஏதோ நம்ம புண்ணியம் 'பாண்டிச்சேரி'யோடு தப்பித்தோம்.

Monday, January 16, 2006

பாட்டு படிக்கேன் : கண்கள் எங்கே...

பி.சுசீலா அவர்களின் குரலின் இனிமையை நான் உணர்ந்து ரசிக்க ஆரம்பித்தது சமீப காலமாகத் தான். அவருடைய பாடல்களைத் தேடித் தேடி கேட்க வைத்த பாடல் அன்பே வா படத்தில் வரும் 'லவ் பர்ட்ஸ்...லவ் பர்ட்ஸ்...". அதைப் பற்றி இன்னுமொரு சமயம் எழுதுகிறேன். கடந்த இரு நாட்களாக நான் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருப்பது கே.வி.மகாதேவன் - கவிஞர் கண்ணதாசன் கூட்டணியில வந்த கர்ணன்(1963) படப்பாடல் "கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே...". நடிகர் திலகமும் தேவிகாவும் நடித்துள்ள பாடல் என எண்ணுகிறேன்.

இப்பாடல் முழுவதும் பி.சுசீலாவின் குரலில் ஒரு மயக்கத்தைக் கேட்பவர்கள் உணரலாம். பசலை நோயால் வாடும் தலைவி தலைவனை நினைந்து பாடுவதாக அமைந்துள்ள காதல் பாடல். உடனே பசலை நோய்னு உனக்கு எப்படிடா தெரியும்னு கேட்காதீங்க...எல்லாம் ஒரு யூகம் தான்! அடுத்தது பசலை நோய்னா என்னன்னு ஒரு நியாயமானக் கேள்வி(எனக்கும் எழுந்தது தான்) எழலாம். அது என்னன்னு எனக்கும் தெரியாது...ஆனா அது ஒரு கில்மாவான நோய்னு மட்டும் தெரியும். தலைவி மயங்கி மயங்கி பாடும் குஜ்லீஸான சில வரிகள்:

"இனம் என்ன குலம் என்ன
குணம் என்ன அறியேன்
ஈடு ஒன்றும் கேளாமல்
எனை அங்கு கொடுப்பேன்
கொடை கொண்ட மதயானை
உயிர் கொண்டு நடந்தான்
குறை கொண்ட உடலோடு
நான் இங்கு மெலிந்தேன்"

உங்களுக்கும் இதே மாதிரியான(!) ராஜா காலத்து திரைப் பாடல்கள் தெரிஞ்சா சொல்லுங்கண்ணா!

Tuesday, January 10, 2006

சொல்றோம்ல : கம்மநாட்டி

ஐய்யய்யோ! யாரும் என்னை தப்பா நினைக்காதீங்க. நான் யாரையும் திட்டலை. 'சொல்றோம்ல' - இது இந்த தொடரோட தலைப்பு. 'கம்மநாட்டி' என்கிற சொல் தற்போது தமிழ் மொழியில் ஒருவரைத் திட்டுவதற்காக மட்டுமே பயன்படுத்தப் பெறுகின்றது. ஆனால் இச்சொல் கணவனை இழந்த கைம்பெண்ணைக் குறிப்பதற்காக முன்காலத்தில் பயன்படுத்தப் பட்டது. இதே பொருளில் இன்னும் கிராமங்களில் பயன்படுத்தப் பெறுகின்றது. 'அவ கம்மநாட்டி ஆயிட்டா!' என்று கிராமத்தில் வயதான ஆயாக்கள் சொல்லுவதை நானே பலமுறை கேட்டிருக்கிறேன்.

சில வருடங்களுக்கு முன்னாடி தினமலர் வாரமலரில் 'திண்ணை' என்று ஒரு தொடர் வந்து கொண்டிருந்தது. அதில் படித்தது, கம்மநாட்டி என்ற சொல் "கைம்மை நோற்றி" என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து மறுவி வந்ததேயாகும். கணவனை இழந்த ஒரு பெண், கைம்மையை ஒரு நோன்பாக நோற்பவள் ஆவாள். 'கைம்மை நோன்பை நோற்பவள்' என்னும் பொருளில் விதவைப் பெண்ணை கைம்மை நோற்றி என்றார்கள். அதெல்லாம் சரி தாங்க ஆனா இதுக்கெல்லாம் நோன்பு, ப்ரேக் ஃபாஸ்ட், லஞ்சுன்னு பேர் கொடுத்தவங்க யாராயிருப்பாங்க? எதுக்கு அது அவங்களுக்கு மட்டும் நோன்பு?

நான் சில்ஹுவெட் காதலன்


பல வருடங்களுக்கு முன் ஹிண்டு பேப்பரில் வந்த ஒரு போட்டோவைப் பார்த்து வாட்டர் கலரில் கிறுக்கியது. இங்கு கொஞ்சம் சுமாராக இருக்கிறது, நேரில் பார்ப்பதற்கு இதை விட சுமாராக இருக்கும். சில்ஹுவெட் ஓவியங்களோ, சினிமாவில் சில்ஹுவெட் காட்சிகளோ பார்ப்பது என்றால் எப்போதும் ஒரு தனி பிரியம். கற்பனைக்கு நிறைய தீனி கொடுப்பதாலோ என்னவோ? சில்ஹுவெட்டிற்கு தமிழ் பதம் 'நிழலுருவம்' என்று எண்ணுகிறேன். காதல் காட்சிகள், பல தமிழ் படங்களில் சில்ஹுவெட் ஷாட்ஸாக வந்துள்ளது. தற்போதைக்கு எம்ஜிஆர் சரோஜா தேவி நடித்த ஒரு படமும் காதலுக்கு மரியாதை டைட்டில் பாடலும் தான் நினைவுக்கு வருகிறது.

சில்ஹுவெட் என்ற சொல் Étienne deSilhouette என்கின்ற கை இறுக்கமான ஒரு பிரெஞ்சு நிதி அமைச்சரின் பேரின் பின்னால் வழங்கப்படுவதாகக் கேள்வி. சரி சில்ஹுவெட்டைப் படமாப் போட்டாச்சு, அதப் பத்தி ஒரு பீலாவும் விட்டாச்சு ஒரு கவிதையும் எழுதிடுடா கைப்புள்ள பேஜ்வியூஸ் எகிறும்னு மண்டைக்குள்ள ஏதோ ஒரு குறுகுறுப்பு. உனக்கு படமும் ஒழுங்காப் போடத் தெரியாது, கவிதையும் ஒழுங்கா எழுதத் தெரியாது...எதுக்கு இந்த வேலையெல்லாம்னு இன்னொரு குறுகுறுப்பு. ஆனா இதையெல்லாம் தாண்டி கைப்புள்ள அட் ப்ரெசெண்ட்ல ஹைக்கூ ஒண்ணு எழுதியே தீரணும்னு முடிவெடுத்துட்டான். இந்தா வாங்கிக்கங்க -

"ட்ராக்குக்கு அந்தாண்ட
அடியாளோட வர்றாரு
உங்க நைனா!

ட்ராக்குக்கு இந்தாண்ட
அருவாளோட வர்றாரு
எங்க நைனா!

நீ வாம்மா மைனா
ரயில் வரும் தெசையிலே
கைகோர்த்து நடப்போம்
சில்ஹுவெட் அவுட்லைனா!"

Sunday, January 08, 2006

ஆறாவது விரல்

எனக்கு இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு. அப்பல்லாம் ஸ்கூல் முடிஞ்சதும் மே மாசம் ஒவ்வொரு வருஷமும் தென்னாற்காடுல இருக்கற கிராமத்துக்கு எங்க ஆயா(அம்மாவோட அம்மா) வீட்டுக்கு போறது வழக்கம். அங்க ஆயா அவங்க மாமனார் கட்டின ஸ்கூல்ல நிர்வாகியாவும் டீச்சராவும் இருந்தாங்க. டீச்சர் பேரன்கிறதனாலயும் மெட்ராஸ்காரன்கிற்தனாலயும் எப்பவும் நமக்கு தனி மரியாதை தான். ஆயாவுக்கு அவங்க மாமனார் ஸ்கூல நடத்தறதுல ஒரு தனி ஈடுபாடு. அதனால அந்த ஊர்ல தனியாவே இருந்தாங்க. துணையா மணினு ஒரு நாய் இருந்துச்சு.

ஊருக்கு போறதுனா எனக்கு எப்பவுமே கும்மாளம் தான். அதுக்கு முதல் காரணம் புக்ஸ ஒன்னரை மாசத்துக்குத் தொட வேணாம் . மனசுக்கு பிடிச்சதை இஷ்டத்துக்கு செய்யலாம். தங்கர் பச்சான் படத்துல வர்ற பாஷையைப் பேசற ஊரு...அதை கேக்கறதுக்குனே பசங்க கிட்ட பேச்சு கொடுக்கறது. துடைப்பக்குச்சியில நுனாக்காயை சொருகி வானத்துல அடிக்கறது...அது விசுக்குனு ஒரு சத்தத்தோட ராக்கெட் வேகத்துல பறந்து போகும்...யாரோட காய் ரொம்ப தூரம் போகுமுனு போட்டியே நடக்கும். சாயந்திரம் ஆத்தக் கடந்து குடிகாட்டுல பலூன் வாங்கறது, வீட்டுக்கு திரும்பும் போது கரும்பு காட்டு நரிக் கதை கேக்கறது, ராத்திரி பசங்களோட சேர்ந்து தவளை அடிக்கறது இப்படினு மெட்ராஸ்ல கிடைக்காத சின்ன சின்ன சந்தோஷம் நிறைய.

ஆயா தனியா இருந்ததுனால அவங்களுக்கு சின்ன சின்ன உதவியெல்லாம் அவங்க ஸ்கூல் பசங்க செய்வாங்க. சுப்பிரமணியும் அவங்களோட ஸ்டூடண்ட் தான். அமைதியான அடக்கமான பையன்னு ஆயா அடிக்கடி சொல்லுவாங்க. செம்பட்டை தலையும் கிழிஞ்ச டவுசருமா வெடவெடனு இருப்பான். அவனோட வலது கை கட்டைவிரலில ஒரு விரல் எக்ஸ்ட்ரா இருக்கும். அத முதல் தடவை பார்த்ததுலேருந்தே எனக்கு ஒரு மாதிரியா இருந்துச்சு. "ஏம்மா அந்த பையன் கையில மட்டும் ஆறு விரல் இருக்கு. எனக்கு பார்க்கவே புடிக்கலை" அப்படினு சொன்னா "உஷ்! அந்த மாதிரியெல்லாம் பேசக் கூடாது" அப்படினு அதட்டுவாங்க. தோட்டத்துல கீரை பறிச்சு கொடுக்கறது, நுங்கு சீவி தர்றது இப்படினு சின்ன சின்ன வேலை எல்லாம் செஞ்சு தருவான்.

"சுப்பிரமணி! மெட்ராஸிலேருந்து பாப்பாவும் பேரப் பிள்ளைகளும் வந்திருக்காங்க! அப்பா கிட்ட சொல்லி இளநீ சீவி தர சொல்லறியா?"னு ஆயா கேட்டா ரெண்டு கையையும் கட்டிக்கிட்டு "சரிங்க டீச்சர்"னு சொல்லி விறுவிறுனு ஓடி அவனே இளநியையும் கொண்டாந்துடுவான். அப்பல்லாம் ஆயா இந்த மாதிரி உதவி செய்யற பசங்களுக்கு பொட்டுக்கடலை ஒரு கைப்பிடி அள்ளிக் கொடுப்பாங்க. சுப்பிரமணிக்கு பொட்டுக்கடலை கொடுத்தா மட்டும் எனக்கு கோபம் கோபமா வரும். அதுக்கு காரணம் அவனோட அந்த ஆறாவது விரல். இத்தனைக்கும் அவனுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையோ சண்டையோ இல்லை. ஆறாவது விரல் இருந்ததுனால எனக்கு அவனைப் பிடிக்கலை. அவன் மேல வெறுப்பு ஒவ்வொரு நாளும் கூடுச்சே தவிர குறையலை.

கிராமத்து பம்புசெட்ல இறங்கி குளிக்கணும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை. ஆனா சின்னப் பையன்கிறதனால ஆயா எப்பவும் என்னை தனியா விடமாட்டாங்க. ஒரு நாள் யார்கிட்டயும் சொல்லிக்காம பம்பு செட் தொட்டியிலே குளிக்கப் போனேன். அங்க சுப்பிரமணி குளிச்சுட்டு இருந்தான். அவனைப் பார்த்ததும் கோவம் வந்தாலும் நான் எதுவும் பேசாம தொட்டியில இறங்கப் போனேன். சுப்பிரமணி என்னைப் பார்த்து "ராஜா! தண்ணியில இறங்காதே! அங்கே பாசி பிடிச்சிருக்கு. வழுக்கி விழுந்துடுவே!" அப்படினு சொன்னான். "டேய்! உன் வேலையைப் பாரு! எனக்கு எல்லாம் தெரியும்" அப்படினு அவனப் பார்த்து கத்தினேன். எனக்கு பிடிக்காத ஒருத்தன் எனக்கே புத்தி சொல்லறதா? "வேணாம் ராஜா போகாத!"னு திரும்பவும் சொன்னான். எனக்கு கோபம் பொத்துக்கிட்டு வந்துச்சு. "சீ!வாயை மூடு" அப்படினு கத்திட்டு நான் தொட்டி பக்கம் போனேன்.

சுப்பிரமணி உடனே"டீச்சர்! ராஜா தொட்டியில எறங்கப் போறான்"னு கத்துனான். "டேய்! உனக்கு என்னடா நான் என்ன பண்ணா?"அப்படினுட்டு அவன் பக்கம் வந்து அவன் தலைமுடியைப் பிடிச்சு இழுத்து கும் கும்முனு அவன் வெறும் முதுகுல என் கைமுட்டியால குத்தினேன். அவ்வளவு வெறி எங்கிருந்து வந்துச்சுனு தெரியலை. அவன் என்னை விட பெரிய பையனாயிருந்தாலும் டீச்சர் பேரன்றதுனால என்னை ஒண்ணும் செய்யாம அங்கிருந்து அழுதுகிட்டே போயிட்டான். அப்போ என் வெறி அடங்குனாலும் உடனே எனக்கு பயம் தொத்திக்கிச்சு. வீட்டுக்கு போனதும் நல்ல பூசையிருக்குன்னு. இதை நினைச்சுக்கிட்டே நான் மெதுவா வீட்டுக்குப் போனேன். ஆனா நான் பயந்த மாதிரி எதுவும் நடக்கலை. சுப்பிரமணி இந்த விஷயமா யாருகிட்டேயும் எதுவும் சொல்லலை. எதனால அப்படி ஒரு அரக்க குணம் மனசுல தோணுச்சுனு இப்போ யோசிச்சு பார்த்தா அதுக்கு பதிலே கிடைக்க மாட்டேங்குது.

அதுக்கப்புறம் கொஞ்ச வருஷம் சுப்பிரமணியைப் பாக்கற வாய்ப்பே கிடைக்கலை. நான் ஊருக்குப் போன போதும் சுப்பிரமணி ஆயா வீட்டுக்கு வரலை. அவன் ஏழாவதோட படிப்பை நிறுத்திட்டு அவங்க அப்பாவோட வயல் வேலை செய்யறதா கேள்வி பட்டேன். எப்பவாச்சும் ஆறு விரல் இருந்ததுக்காக ஒருத்தன் மேல இவ்வளவு வெறித்தனமா நடந்துக்கிட்டோமேனு நினைச்சா கொஞ்சம் கஷ்டமாயிருக்கும். ஒரு நாள் சுப்பிரமணி திடீர்னு மெட்ராஸ்ல எங்க வீட்டுல வந்து நிக்கறான். பார்த்தா கூட ஆயாவும் இருக்காங்க...அவங்க கீழ் தாடையிலே கட்டு போட்டிருக்கு. எங்களுக்கெல்லாம் ஒரே அதிர்ச்சி...என்னாச்சோ? ஏதாச்சோனு. "நேத்து ஸ்கூலுக்கு கிளம்பும் போது, நிலைப்படில தடுக்கி விழுந்துட்டேன்மா! தாடையிலே நல்ல அடி. சுப்பிரமணியும் அவங்க அப்பாவும் தான் என்னைக் கூடவே இருந்து பார்த்துக்கிட்டாங்க. தையல் போட்டிருக்கு" என ஆயா சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவங்களுக்கு கண் கலங்கிடுச்சு. அதை பார்த்த அம்மாவும் அழ ஆரம்பிச்சிட்டாங்க.

சுப்பிரமணி செஞ்ச உதவியோட முழு அளவு புரியலைன்னாலும் செல்போனும், ஏன் வீட்டில போனே இல்லாத அந்த நேரத்தில அவன் இல்லாட்டி ஆயா ரொம்ப கஷ்டப் பட்டிருப்பாங்கனு மட்டும் புரிஞ்சது. "தாங்க்ஸ்" என்று சொல்லி அவன் உதவியை அப்போதும் கொச்சைப் படுத்தினேன். அலட்டிக் கொள்ளாமல் மெலிதாக ஒரு புன்னகை பூத்தான். கொஞ்ச நேரம் இருந்துவிட்டு சுப்பிரமணி ஊருக்குக் கிளம்பத் தொடங்கினான். "போயிட்டு வரேங்க டீச்சர்! போயிட்டு வரேங்க அக்கா!" என்று கைகூப்பினான். கூப்பின கைகளிலேருந்து கோபுரம் வச்சது போல எட்டிப் பார்த்துக் கொண்டிருச்சு அந்த 'ஆறாவது விரல்'.

பெண்ணே!

ஹி...ஹி...இதுவும் மீனாதானுங்கோ(நம்புங்க)! படம் வாட்டாக்குடி இரணியன். "பொற்காலம்" நல்லாருக்குனு நம்ம மச்சான்ஸ் எல்லாம் உசுப்பிவிட்டதன் விளைவு..."பெண்ணே!"


நான் கவிதைனு எழுதினது எல்லாத்தயும் தமுக்கடிச்சாச்சு. இனிமேல் புதுசா ஏதாச்சும் எழுதினாத் தான் உண்டு.

பொற்காலம்

கவிதை என்ற பெயரில் நான் முதன்முதலில் எழுதியது. பொற்காலம் படம் வந்த நேரமது. பொற்காலம் ஃபாண்ட்(எழுத்துரு) மிகவும் என்னை கவர்ந்தது. அதை தமிழ்ப் பேப்பரிலிருந்து பார்த்து பார்த்து அப்படியே காப்பியடித்தேன். அட! மீனா படத்தையும் வரையலாமே என்று தோன்றியதும் பக்கத்திலிருக்கும் பென்சில் உருவம் உருவானது. கண்,காது, மூக்கு வைத்திருந்தால் அது மீனா என்று சொன்னாலும் நம்ப முடியாது. அதனால் அப்படியே விட்டுவிட்டேன். தஞ்சாவூரு மண்ணு எடுத்து என்னுடைய அப்போதைய விருப்பப் பாடல். சரி அதே எதுகை மோனை ஸ்டைலில் எதாவது எழுதலாம் என்று தோன்றியதன் விளைவு தான் "பொற்காலம்". எப்படிங்க பரவாயில்லியா?

Saturday, January 07, 2006

பாட்டு படிக்கேன் : நல்ல வாழ்வு தொடங்கும்...

மொட்டையின்(அட நம்ம ராஜா தானுங்கோ...ஹி...ஹி) இசையில் சமீபத்தில் ரசித்தது சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படத்தில் வரும் "நல்ல வாழ்வு தொடங்கும்..." வாலியின் வரிகளை மஞ்சரியும் திப்புவும் பாடியிருக்காங்க. பாடலின் துவக்கம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. என் சிற்றறிவுக்கு எட்டிய வரை வங்காளத்தில் உள்ள 'பவுல்' மக்களின்(Baul is a mendicant sect of Bengal - இறைவனின் புகழைப் பாடிக் கொண்டு யாசித்துண்டு வாழும் ஒரு மக்கள் கூட்டம்) இசையை நினைவுபடுத்துவது போன்றிருந்தது. தபலாக்களின் நடனத்திலிருந்து மீண்டதும் கேரளத்து பஞ்சவாத்தியத்துடன் ஐயப்பனின் புகழைப் பாடுகிறார் திப்பு. "ஏழைக்கிறைவன் எங்கள் பந்தள ராஜனடா..." திப்புவின் குரலில் அப்படியொரு குழைவு...இனிமை. பாடலைக் கேட்டதும் மனதில் ஒரு அமைதி நிலவுகிறது. ராஜாவின் இசையில் தமிழிலும் மலையாளத்திலும் மஞ்சரி சமீப காலத்தில் பல பாடல்களைப் பாடியிருக்கிறார். இன்னுமொரு சித்ராவா? "பொண்ணா பொறந்த..." என்ற பாடலும் மஞ்சரியின் குரலில் நன்றாக உள்ளது.

மனம் வாங்கச் சென்றேன்!

பலமனம் என்னிடம் இருந்தும்
புதுமனம் ஒன்று வாங்க
பலவாக எண்ணிச் சேன்றேன்
மனம் விற்கும் மார்கெட்டிற்கு

வாங்க சார் வாங்க!
ஆடிக்கழிவை முன்னிட்டு ஒருமனம்
வாங்கினால் இன்னொன்று ஃப்ரீ
இன்முகத்தோடு வரவேற்றார் கடைகாரர்

உள்ளோன்று வைத்து புறமொன்று
பேசும் மனம் ஓராயிரம்
பிறர் துன்பத்தில் இன்பம்
காணும் இருகலரில் கிடைக்கும்

மனம் இரண்டாயிரம் இல்லாதவரையும்
ஏய்த்து காசுபார்க்கும் மனம்
தள்ளுபடி போக வெறும்
பத்தாயிரம் தான்வாழ பிறரைக்

கெடுக்க துணிந்திடும் மனம்
இருபதாயிரம் குற்றங்கள் செய்வாருக்கு
துணை செல்லும் இம்போர்ட்டட்
மனம் ஐம்பதாயிரம் தன்

மனதின் சாட்சி கொன்று
மானுடத்தை அழிக்க அஞ்சாத
வீரமனம் ரூபாய் ஒருலட்சம்
அடுக்கிய கடைகாரரை நிறுத்தி

நான் சொன்னேன் இம்மனங்கள்
யாவும் இருக்கின்றன என்னிடத்தில்
உண்மையினை என்றும் இயம்பிடும்
தூயமனம் பகைவருக்கும் தீங்கு

நினைந்திடாத வெள்ளைமனம் அடுத்தவர்
துன்பத்தைக் கண்டு பதறும்
தெய்வமனம் எண்ணியவை யாவருக்கும்
நல்லவையாய் அமைய ஏங்கும்

அன்புமனம் இத்தகைய மனங்களிலே
எவையேனும் உள்ளனவா? கேட்டவனை
ஒருவாறாகப் பார்த்து சொன்னார்-
நீங்கள் கேட்கும் ஓல்டுஃபேஷன்

மனங்கள் எல்லாம் எடைக்கு
வாங்கி விற்கும் பிளாட்பாரக்
கடைகளிலே செகண்ட் ஹாண்டில்
கிடைத்திடலாம் போணியாகும் நேரமிது
---கொஞ்சம் ஓரமா நில்லுங்க ப்ளீஸ்!

Friday, January 06, 2006

Ilaiyaraaja on creativity

It’s only imitation.Creativity is impossible to define in fine arts and music. First of all, creativity is not a process. Process connotes a quality of science, of physics and chemistry, a methodology, which can be used by anybody to explain a thing. Creativity is a happening. Like laughter.There is no such thing as a ‘creative’ moment if you want to know the real truth. Everything exists in nature and we just stumble upon it, either accidentally or by sweat. But you must have the awareness, the consciousness to know what you are stumbling upon, what you are knocking against.Only the Creator can create, and create every moment, if you care to see, to look around.

I could come across a new Sa or a Ga that can perhaps be called creative. But everything is already beautiful contained between the two music nodal points Sa and Sa. So where is the question of being creative? Everything exists already.A small sparrow spreads out its wings, beats them with all its force, contracts its body and takes to the sky. So does a hawk. Both the moments are creative. It is your apparatus; call it spiritual if you want to, that must be tuned to come face to face with those moments. Each one takes according to his equipment.Aristotle said Man is a highly imitative animal. Man is not intelligent at all in the sense in which Osho uses the term intelligence. He learns only by imitation.

Where now is ‘creativity’? There can be, and there exists creative intelligence, an awareness that my predecessors in music have left behind. I take it from them. If you want and if you can, you are also welcome to it. The moments are forever. Whatever you claim you have created, is only that what you have found. You underline your discovery.Everything has its own in-built pattern, a form. An elephant runs, so does a horse. Can you reckon the elephant’s speed in terms of horsepower?

Poetry has a form, painting has a form, music has a pattern and form. One can never ever alter it. When you look at a painting your visual faculties only are at work. But in poetry and music and the words that carry the sounds, the person who redresses it, the arrangement of sounds and the visuals that the words themselves generate are different. The imagery bombards our senses on two levels - aural and visual. Music and poetry have an edge over the other forms of art.Every tree, every seed is a chip with its own characteristics. Mother earth nourishes each one of them in the required measure. But the chip takes only what it needs to qualify or characterize itself. So is it with music – rock or jazz or reggae – there is an organic structure within it. As all things have.

Surprising as it may sound to you, there is a mysterious link among them, as in all beings of Nature, which cannot be defined or explained by our logic. Each genre of music has its own beauty.Earth provides the proper environment for the genesis, growth and development of music and people. Like earth, every human being is endowed with all the emotions, but the proportion and expression varies. I may be late in getting angry. The quality and dimension of Sankaracharya’s anger will be different. The display of anger by a murderer will be on a totally different key. Why I say this, is each kind of music, like human beings, has its own body corpus, inherent organic structure and strength. It is upto the seeker to tap and draw from nature his nourishment.

All music is beautiful and intrinsically moving and divine. What you need is an ear for it.Film music is contextual, obviously. And it is limited. Whereas the symphony that I create (for the London Philharmonic Society) is non-contextual, free and there is no limit or barrier. The field is wide open, and not constrained by 24 frames!Whatever I have done over the years in film music isn’t a banquet. It is just papad and pickle that I carefully prepared, and they can hold their own taste for any length of time. And it is totally different from others.I have never felt that I have become stagnant, my music stale. Because it is done with total involvement. It will always be as fresh as the morning dew.

Sound is sound - pure and total. Simple. In the seven notes, which note is good, which is bad and which is indifferent?You know something? A simple tune is the most powerful and is easily carried on the lips of the listener. It gathers the strength of a storm. As an ordinary man is rare to find, so are simple tunes the most difficult to create. Children are simple and that’s why they grasp the simple tunes spontaneously. You must have the mind of a child, the innocence of a child to create a simple tune.That is the Kingdom of God.

Thursday, January 05, 2006

'நியூ' படத்தில் பிடித்தது

'நியூ' திரைப்படம் சர்ச்சைக்குள்ளாகி ஆபாசமான படம் என்று முத்திரை குத்தப்பட்டு சமீபத்தில் திரையிட தடை விதிக்கப்பட்டது அறிந்ததே. அப்படத்தை நான் காணவில்லை எனினும் டிவியில் பார்த்த ஒரு சிறு பகுதியிலேயே என் மனதினைக் கவர்ந்த காட்சி ஒன்று உண்டு.

அது தேவயானி தன் காணாமல் போன் மகனை நினைத்து அழுதுகொண்டே பேசுவதாக அமைந்த ஒரு காட்சி. "என் மகன் எப்போதும் என் கையால் தான் சாப்பிடுவான். சாப்பாடு ஊட்டும் போது சாப்பாட்டை மட்டும் சாப்பிட மாட்டான். என் விரலையும் சேர்த்து தான் சாப்பிடுவான்" - இந்த ஒரு இடத்தில் நிற்கிறார் எஸ்.ஜே.சூர்யா. ஏனேனில் இது நான் அனுபவித்த ஒன்று. வெறும் ரசம் சாதமே ஆனாலும் அம்மா கையால் ஊட்டிக் கோண்டால் எப்போதுமே ஒரு பிரமாதமான தனி ருசியை உணர்ந்திருக்கிறேன். அம்மாவைக் கேட்டால் உன் கையாலேயே நல்லா பெசஞ்சு சாப்பிட்டு பாருன்னு சொல்லுவாங்க. ஆனால் பல முறை முயன்றும் தோல்வி தான்.

தன் கையால் சாப்பிடும் போது கிடைக்காத அந்த ருசி அம்மா கையால் சாப்பிடும் போது மட்டும் எப்படி கிடைக்கிறது...நிஜமாகவே அம்மா விரலை சாப்பிடுகிறோமா? இந்த காட்சியை பார்த்தவர்களும் பார்க்காதவர்களும் இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று தெரியப்ப்டுத்துங்களேன்!

பாட்டு படிக்கேன் : புத்தன் வந்த திசையிலே...

1962ஆம் ஆண்டு சீனப் போர்தொடுப்பின் போது தேசிய உணர்வைத் தூண்டுவதற்காக தயாரிக்கப்ப்ட்டு வெளிவந்த படம் "இரத்த திலகம்(1963)". இப்படத்தில் வரும் "புத்தன் வந்த திசையிலே..." பாடலைக் கேட்கும் போதெல்லாம் உணர்ச்சிவசப் பட்டிருக்கிறேன். காரணம் கவியரசு கண்ணதாசனின் அமுத வரிகள். பாடல் வரிகளுக்காகவும் கற்பனை நயத்திற்காகவும் பலமுறை கேட்கத் தூண்டும் பாடல்கள் உண்டு. இது அவ்வகையில் வந்த ஒரு மிகச் சிறந்த பாடல். கே.வி.மகாதேவனின் இசையும் பாடலுக்கு பலமூட்டும் விதமாக அமைந்திருக்கும்.

தாய்நாட்டைக் காக்க, போருக்காக வீரர்களை அழைப்பதாக அமைந்த இப்பாடலில் பலமுறை ரீவைண்ட் செய்யச் சொல்லும் வரிகள் இதோ:
"மக்களுக்கு புத்தி சொல்லி வா
மனைவி கண்ணில் முத்தமிட்டு வா
பெற்றவர்க்கு தாள் பணிந்து வா
பேர் எடுக்க போர் முடிக்க வா வா வா

மறுபடிக்கும் வீழ்வதில்லை வா
மரணமேனும் பெறுவதென்று வா
பருவ நெஞ்சை முன்னிறுத்தி வா
பகைவனுக்கும் ஓருயிர் தான் வா வா வா"

பகைவனுக்கும் ஓருயிர் தான் வா - மெய்சிலிர்க்கச் செய்யும் கற்பனை நயம். 'Genius' written all over the song. Some songs get you on an emotional high...I consider this one as the best among them.

இதே படத்தில் 'ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு...' என்ற பாடலும், 'பசுமை நிறைந்த நினைவுகளே...' பாடலும் கவிஞரின் மணிமகுடத்திற்கு மேலும் இரு மாணிக்கங்கள். 'ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு... பாடலில் என்னைக் கவர்ந்த வரிகள் -
"மானிட இனத்தை ஆட்டி வைப்பேன்
அவர் மாண்டு விட்டால் அதை பாடி வைப்பேன்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை"
He has been quite prophetic in his words above. Indeed Kannadasan still lives through his immortal songs.

A parallel reference which I found in English is 'Ozymandias' by P.B.Shelley
"I met a traveller from an antique land
Who said:—Two vast and trunkless legs of stone
Stand in the desert. Near them on the sand,
Half sunk, a shatter'd visage lies, whose frown
And wrinkled lip and sneer of cold command
Tell that its sculptor well those passions read
Which yet survive, stamp'd on these lifeless things..."
The lines above probably capture the permanence of real art.

Wednesday, January 04, 2006

சொல்றோம்ல: டபாய்க்கிறே?

சென்னைத் தமிழ் சற்றேனும் நீங்கள் அறிவீர்கள் ஆனால் "டாய்...டபாய்க்கிறே!" என்று பலரும் திருவாய் மலர்ந்தருள கேட்டிருப்பீர்கள். டபாய்க்கிறே என்பது ஏமாற்றுவதைக் குறிப்பதாகத் தலைநகரில் வழங்கப்படுகிறது. என்ன அது "டபாய்க்கிறே".

திருவல்லிக்கேணி அக்பர் சாஹிப் தெருவில் நான் படித்த இந்தி வகுப்பில், மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட நாராயணன் சார் பல ஆண்டுகளுக்கு முன் கொடுத்த விளக்கம். டபாய்க்கிறே என்று வெறுமனே சொல்வது இப்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் இதன் முன்னோடி "ஏன் டபாய்க்கிறே?".

"ஏன் டபாய்க்கிறே?" = "ஏண்டா அப்பா ஏய்க்கிறே?". இவ்வளவு ஏக்கமாகக் கேட்கும் அளவுக்கு யாரும் இப்போது டபாய்ப்பது கிடையாது என்பது வேறு விஷயம்.

"சொல்றோம்ல" என்ற தலைப்பில் பல வழிகளில் அறிந்ததை வரும் நாட்களில் வழங்குவேன்.

தஞ்சை ப்ரஹதீஸ்வரர்- அரிய படம்

Tuesday, January 03, 2006

இன்றும் இளமை இதோ இதோ...

இன்று பணிக்கு வரும் போது பல நாட்களுக்குப் பின் சகலகலாவல்லவன் படத்தில் வரும் "இளமை இதோ இதோ..." பாடலை வாக்மேனில் கேட்டேன். கேட்ட மாத்திரத்தில் உற்சாகம் தொற்றி கொண்டது. நான் கவனித்த மற்றுமொரு விஷயம் கால் நூற்றாண்டைக் கடந்தும் அப்பாடல் இன்னும் அதே இளமை துள்ளலுடன் சோடை போகாமல் ஒலித்தது தான். சிறுவயதில் வாய் ஓயாமல் அப்பாடலை முணுமுணுத்தது நினைவுக்கு வந்தது. என்னுடைய சொற்ப இசையறிவை வைத்து நான் கண்ட இன்னுமொன்று - அப்பாடலின் "Out of the world orchestration and complex music patterns". கிட்டதட்ட 7 நிமிடங்களுக்கு ஒலிக்கும் இப்பாடலின் ஒவ்வொரு பகுதியும் மற்ற பகுதியை நினைவு படுத்தாதபடி புதுமையாக அமைந்திருக்கும். பாடல் ஒலிக்கும் போது அடுத்த பகுதி எவ்வாறு ஒலிக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது திண்ணம். கேளுங்கள்...மகிழ்ச்சியில் ஆழுங்கள்.

வரும் நாட்களில் 'பாட்டு படிக்கேன்' என்ற தலைப்பில் பாமரனாய் நான் ரசித்த, என்னை மகிழ்வித்த, வியப்பில் ஆழ்த்திய பாடல்களைப் பற்றி (மொழி பாகுபாடின்றி) பதிய எண்ணியுள்ளேன்.

Monday, January 02, 2006

சிரி...சிரி

Husband: En manaivi romba TV parkira doctor.
Doctor: Entha alavukku??
Husband: Current cut aanalum TV-i Torch adichupaarkira doctor!!

What is the difference between Love marriage &Arranged marriage?
First one is Tharkolai..and the next one isThittamitta kolai

Patient: Doctor vaithu vali, porukka mudiyala doctor.
Doctor: Vaithu valikirappa yaen neenga porukkaporeenga????

Vijayakanth: Andha TV mela case podanum..
Thondan: Ean thalaiva??
Vijayakanth: Nama katchi arambichadha Vilayattuseidhigal-la potrukkan..

Sardar Son: O God! Please make Newyork the capital ofPunjab.
Sardar: Why are you praying for that?
Sardar Son: That is what I have written in my exam...

Why are Egyptian's children always confused??
Because after death,their daddy becomes the Mummy!!

Sardar1: Train kandupidichadu nallatha pochu..
Sardar2: Yaen??
Sardar1: Illaina thandavalam yellam veenapoirukkum...!!

Teacher: Can you tell me something about Raja Ram Mohan Roy?
Sardarji: They were 4 best friends..!

Man: Doctor en wifekku peyi pudichirukku..
Doctor: Eppadi sollureenga???
Man: Munnadi kalakalannu sirichava ippo lakalakalakanu sirikkira..!"

Smile is the only CURVE that makes everything STRAIGHT."

திருவாசகத்துக்கு உருகியவன்

நல்லிசை நாடும் இவ்வுலகம் உம்மிசையதனில்
திளைத்து எழும்-மாந்தர் இம்மைக்குண்டு
திரையிசை தான் எவ்விசையோ மறுமைக்கும்
எனஐயன் ஈசனவன் அருள்பெற்று அருட்தந்தை
துணைகொண்டு திருவான வாசகத்தை
உம்மிசை கேட்டு வளர்ந்த வெம்மை
வாழ்வாங்கு வாழ்விக்க அருந்தவ்மே தான்
புரிந்து ஈன்று எமக்கு அளித்தீரோ?

நான் என்றும் எனது என்றும்
தான் என்றும் தனது என்றும்
தன்னுண்மை தன்மை யறியா திறுமாந்து
இருந்தோம் யாம்! மாணிக்கர் தம்
பண்குழைத்த உம்முயர் இசை அமுது
அதனால் இறைவன் உறை இருதயத்தின்
ஈரம் தனை கண்டோமே! மொழி
இலா பேரின்பம் தனை கொண்டோமே!

ஆழ்கடலின் ஆழத்தினும் அளவிலாத ஆசையுடன்
ஏங்கும் உந்தன் தொண்டர் மனம்
எம்மிசை இறைவன் ஆட்சியிலே ஒருமுறையோ
பேரின்பம் பன்முறையுன் வரம் வேண்டி
இறைஞ்சுகிறார் பலகோடி அவர் தமக்கு
அருள்புரிய பிறப்பறுக்கும் நல்லிசை யதனை
பற்பலவும் படைத்திடுவாய்! பிறந்து விட்ட
இப்பிறப்பின் பொருள தனையாம் அறிய!

(சிம்பொனி இசையில் திருவாசகத்தை கேட்டு உருகியது)

Sunday, January 01, 2006

Delhi...

Delhi was the place which my higher studies took me to after 21 years of Z-grade pampering at home. Even though i got an MBA seat at IIT Delhi...it wasn't good enough to bequeath the Gold plated Cross pen from my Uncle{which I had layed my eyes upon since Class XII}...since we had traded for an MBA from IIM or M.Tech from IIT.

Seat of Post Graduation

If one knew the magic words "It depends upon the situation/context/circumstance" and if one had good hands-on of MS-Excel Chart Wizard, one could solve even the toughest of business cases and impress one's Professor. Two years passed in a jiffy, before I could realise why MBAs are in such demand...and what an MBA is supposed to do in an Office. I spent four more years in Delhi after my MBA before getting transferred to Indore in Madhya Pradesh.

More of my hostel life, Delhi experiences in my future posts.