Monday, December 21, 2009

படு ரொமாண்டிக்கான பாடல் ஒன்னு...

பழைய பாடல்கள் அப்பப்போ கேக்கறதுண்டுன்னாலும், ஒரு சில பாடல்களைக் கேக்கும் போது "பலமுறை இந்த பாட்டைக் கேட்டுருக்கோம், ஆனா இந்த பாட்டோட அழகை இது நாள் வரைக்கும் கவனிக்காம இருந்துட்டோமே" அப்படின்னு தோனும். அப்படி பட்ட பாடல் ஒன்னைப் பத்தி இன்னிக்குச் சொல்றேன். படு ரொமாண்டிக்கான அழகான காதல் ரசம் ததும்பும் பாடல்...வேற யாரு எழுதிருக்க முடியும். கவியரசர் கண்ணதாசன் தான். கர்ணா படத்துல வர்ற "மலரே மௌனமா?" பாடல் அமைஞ்ச தர்பாரி கானடா ராகத்துல அமைஞ்ச இன்னொரு சூப்பர் பாடல் இது. எனக்கு இப்பாடலில் மிகவும் பிடித்த சில பஞ்ச் வரிகளை சிவப்புல குறிச்சிருக்கேன்.

படம் : போலீஸ்காரன் மகள்
இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடல் : கண்ணதாசன்
பாடியவர்கள் : P.B.ஸ்ரீநிவாஸ் & S.ஜானகி

PBS:
பொன் என்பேன் சிறு பூவென்பேன்
பொன் என்பேன் சிறு பூவென்பேன்
காணும் கண்ணென்பேன்
வேறு என்னென்பேன்

SJ:
என்னென்பேன் கலை ஏடென்பேன்
என்னென்பேன் கலை ஏடென்பேன்
கண்கள் நானென்றால் பார்வை நீயென்பேன்
Both:
ஆஹாஹா ... ஓஹோஹோ ...

PBS:
கொத்துமலர் எடுத்து முத்துச் சரம் தொடுத்து
சிட்டு முகம் பார்த்தே சிரித்திருப்பேன்
கொத்துமலர் எடுத்து முத்துச் சரம் தொடுத்து
சிட்டு முகம் பார்த்தே சிரித்திருப்பேன்

SJ:
தொட்டவுடன் நெஞ்சில் துள்ளி வரும் வெள்ளம்
கண்டு கண்டு நானும் களித்திருப்பேன்
தொட்டவுடன் நெஞ்சில் துள்ளி வரும் வெள்ளம்
கண்டு கண்டு நானும் களித்திருப்பேன்

PBS:
உன்னை நான் அறிவேன் என்னை நீ அறிவாய்
உன்னை நான் அறிவேன் என்னை நீ அறிவாய்
உன்னை நான் அறிவேன் என்னை நீ அறிவாய்
உன்னை நான் அறிவேன் என்னை நீ அறிவாய்

SJ:
நம்மை நாம் அறிவோம் வேறு யார் அறிவார்
நம்மை நாம் அறிவோம் வேறு யார் அறிவார்


PBS (Background humming by SJ):
பொன் என்பேன் சிறு பூவென்பேன்
பொன் என்பேன் சிறு பூவென்பேன்
காணும் கண்ணென்பேன்
வேறு என்னென்பேன்

SJ:
சின்னச் சின்ன பறவை அன்னை அவள் மடியில்
தவழ்வது போல் நான் தவழ்ந்திருப்பேன்
சின்னச் சின்ன பறவை அன்னை அவள் மடியில்
தவழ்வது போல் நான் தவழ்ந்திருப்பேன்

PBS:
கண்ணை மெல்ல மறைத்து உன்னைக் கையில் எடுத்து
காலமெல்லாம் நான் அணைத்திருப்பேன்

கண்ணை மெல்ல மறைத்து உன்னைக் கையில் எடுத்து
காலமெல்லாம் நான் அணைத்திருப்பேன்

SJ:
உன்னை நினைத்திருப்பேன் என்னை மறந்திருப்பேன்

PBS:
கண்ணில் கலந்திருப்பேன் நெஞ்சில் நிறைந்திருப்பேன்

SJ (Background humming by PBS):
என்னென்பேன் கலை ஏடென்பேன்
என்னென்பேன் கலை ஏடென்பேன்
கண்கள் நானென்றால் பார்வை நீயென்பேன்

This feature is powered by Dishant.com - Home of Indian Music


'வர்ல்ட் மூவிஸ்' சேனல்ல எப்பவோ அரைகுறையா பாத்துட்டு நிறுத்திய இரானிய திரைப்படம் ஒன்னு ஞாபகத்துக்கு வந்துச்சு. இரானிய படங்கள் பாத்தா தான் உலகத் திரைப்படங்கள் பாத்ததா ஒத்துக்குவாங்கன்னு தமிழ் வலையுலகில் இயங்கி வர்ற இந்த மூனு வருஷ காலத்துல புரிஞ்சிக்கிட்டேன். இரானிய திரைப்படம் பத்தி ஞாபகத்துக்கு வந்துச்சுன்னு சொன்னேன் இல்லியா? சென்னை திரும்பறதுக்காகப் பாரிஸ்லேருந்து துபாய் வந்துட்டுருந்த போது எமிரேட்ஸ் விமானத்துல இருந்த தொலைக்காட்சி திரையில 'Arabic Movies' அப்படீங்கற லிஸ்டைப் பார்த்துட்டு வந்தது. ஆனா இரானிய படங்கள் வேறு அரேபிய திரைப்படங்கள் வேறுன்னு அஞ்சு நிமிஷம் பாத்ததுமே புரிஞ்சுடுச்சு. அரேபிய நாடுகளில் பாலிவுட் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கறது ஏன்னும் புரிஞ்சது.

ஏன்னா நான் பார்த்த படம் அப்படி. படத்தோட பேரு Omar w.Salma. இதே படத்தோட இரண்டாவது பகுதியும் வந்துட்டதா கேள்வி பட்டேன். பாலிவுட் மசாலா திரைப்படங்களே தோத்துப் போற அளவுக்கு பயங்கர மசாலா கதை. "கோகுலத்தின் சீதை" மாதிரி ப்ளேபாய்களான அப்பா-மகன் இருவர். அப்படி பட்ட ப்ளேபாயான ஓமரை எப்படி சல்மாவின் காதல் திருத்துகிறது என்பதே கதை.



படத்தை பயங்கர கில்மாவா எடுத்துருக்காங்க. சல்மாவா நடிச்சிருக்கற அம்மணி மாய் அஸ் எல்தீன்(Mai Ezz El Din) செம க்யூட்டுங்க. சிரிச்சா ரொம்பா அழகா இருக்காங்க. திருத்தம்...சிரிச்சாலும் ரொம்ப அழகா இருக்காங்க. இரானிய படங்கள் மாதிரி இருக்கும்னு எதிர்பார்த்த நான் பார்த்த அந்த அரேபிய படம் எனக்கு பல ஆச்சரியங்களைத் தந்தது. மேற்கத்திய நாடுகளுக்கு இணையான உடைகள். துள்ளலான இசை. இன்னும் பல பல :)






இந்த மாதிரி படங்கள் எல்லாம் எந்த அரேபிய நாட்டுல எடுக்கறாங்க சாமி? துபாய் மக்கள்ஸ் யாராச்சும் இந்த மொழி படங்களைப் பாத்துருக்கீங்களா? உங்களுக்கு தெரிஞ்ச விபரங்களைச் சொல்லிட்டு போங்கங்கோ!

பி.கு: நான் ஓமர் சல்மா படத்தை sub-title இல்லாம தான் பார்த்தேன் :)

Tuesday, December 08, 2009

பாரிமுனையில் கைப்புள்ள

"அடுத்த வாரம் நான் பாரிசுக்குப் போறேன்"

"பஸ்லியா? டிரெயின்லயா?"

ஒரு சோதனையா ரெண்டு மூனு பேரு இதே கேள்வியைக் கேட்டுட்டாங்க. அதனால ஒரு வரலாற்றுச் சான்றா இருக்கட்டுமேன்னு -




மேல இருக்கும் படம் மோனாலிசா ஓவியம் இருக்கும் லூவர் அருங்காட்சியகத்தில்(Louvre Museum) எடுத்தது.



ரொம்ப நாளா ஒரு பதிவு டிராஃப்டலேயே இருக்கு. அப்போ எழுதி வச்சதை அப்படியே இப்ப இந்த பதிவுல போடறேன். நாய் சேகராகிய நான், கிம்ச்சீ நினைவுகள் அப்படின்னு எல்லாம் தலைப்பு யோசிச்சு வச்சு இன்று "light of the day" காணப் போகும் அந்த அரைகுறை பதிவுக்கு வயசு மூனு.

"நாய் சேகராகிய நான்
11.11.2003

கிம்ச்சீ நினைவுகள்


நானும் பயணம் சம்பந்தப் பட்ட பதிவு எதுவும் எழுதக் கூடாது எழுதக் கூடாதுன்னு பாத்து பாத்துருந்து, ஒரு வாரமா கை துறுதுறுன்னும் போதெல்லாம் கூட கட்டிப் போட்டு வச்சிருந்தேன். சொம்மா பயணத்தையே எழுதிட்டிருந்தாலும் போர் அடிச்சிடுமில்லியா...அதான். ஆனா பாருங்க இன்னிக்கு நம்ம தம்பி ராயல் ராம் சாமியோட பேசிட்டு இருக்கும் போது "நீங்க எங்கேயும் ஃபாரின்லாம் போனதில்லியா"ன்னு ஒரு கேள்வி கேட்டு வச்சாரு. (கறி தோசை, ஈரல் இட்லி இது போல இன்னும் சில சமாசாரங்களைப் பத்தி சொல்லி நாக்கு ஊற வச்சி வெறுப்பேத்தி விட்டுட்டு தான் இந்த கேள்வியைக் கேட்டாரு. கறி தோசையோட ரெசிப்பி எல்லாம் வேணும்னா
ராயலைக் கேளுங்க). "அட ஆமா இல்லை...நாம கூட மூனு வருசத்துக்கு முன்னாடியே ஃபாரின் ரிட்டன் இல்ல?:)"அப்படின்னு நினைச்சிக்கிட்டேன். "போயிருக்குறேம்பா ஒரே ஒரு வாட்டி போயிருக்குறேன்" அப்படின்னேன். "எந்த ஊரு"ன்னு கேட்டாரு ராம். "கொரியா"ன்னு சொல்லி வாயை மூடறதுக்குள்ள லகலகன்னு ஒரு சிரிப்பு. "உங்களுக்கு இந்த நாடு தான் கெடச்சிதா...அமெரிக்கா, யூகே மாதிரி வேற நல்ல ஊரே கெடக்கலியா?"ன்னு ஒரு கேள்வி கேட்டாரு.

அப்பவே தலைபாடா அடிச்சிக்கிட்ட்டாரு ஆப்டெக்ல நமக்கு ப்ரொக்ராமிங் சொல்லிக் குடுத்த வாத்தியாரு... "பாயிண்டர்ஸையும், அரேஸையும் டர்போ சில ஒழுங்கா படிச்சிக்க... அப்ப தான் கஷ்டமான ப்ராப்ளங்களுக்கும் சுலபமா ப்ரோகிராம் எழுத முடியும்னு". கேட்டோமா அதையெல்லாம்? இல்லியே...லேப்ல போய் ஒக்காந்தா கை தானாவே graphics.hக்கும் conio.hக்கும் தானே போவும்? அப்பவே ஒழுங்கா ஒரு ஃபாக்டோரியல், ஃபிபோனேசி இந்த மாதிரி எதாச்சும் ஒரு புரோகிராம் உருப்படியா எழுத கத்துக்கிட்டிருந்தோம்னா இந்நேரம் நமக்கும் ஆஃபிஸ்ல ஃபைவ் டே வீக் கிடைச்சிருக்கும், அமெரிக்கா, ஆஸ்திரேலியான்னு ஆன்சைட்டும் கெடச்சிருக்கும், நம்ம 12பி ஸ்யாம் மாதிரி "
"ஹியர் டு கோ"ன்னு சோக்கா பீட்டரும் வுட்டுருக்கலாம். நமக்கு எங்கே...மலைக்கு நடுவுலேருந்து சூரியன் உதிக்கற மாதிரியும், சக்கரம் சுத்தற மாதிரியும் அவுட்புட் வர்ற கிராஃபிக்ஸ் ப்ரோகிராம்ல தானே மனசு லயிச்சிச்சு?




கொசுவத்தி சுத்தனும்னு நெனச்சி எழுத உக்காந்தா, கொசு மட்டும் தான் வருது, வத்தி வர மாட்டேங்குது. சரி எதோ ஒப்பேத்தறேன். இன்னைய தேதியிலிருந்து ஒரு இருபது வருஷத்துக்கு முன்னாடி...முன்னாடி என்னானு கேக்கறீங்க? அதானே? இன்னைய தேதியிலிருந்து இருபது வருஷத்துக்கு முன்னாடி இப்போ இருக்கறதை விட ஒரு இருபது வயசு இளமையா இருந்தேன். இப்ப பெருத்து கறுத்தக்குட்டியா ஆயிட்டாலும் அப்போ சிறுத்தை குட்டியா இருந்தேன். அந்த சிறுத்தை..."



இப்போ படிச்சிப் பாக்கும் போது எனக்கே அந்த டிராஃப்ட் ரொம்ப சில்லறையா தெரியுது. கொடுமை என்னன்னா கறுத்தக் குட்டி, சிறுத்தை குட்டின்னு எல்லாம் பில்டப் குடுத்து எழுதுன அந்த பத்தி ஏன் எழுதனேன்னு எவ்வளோ யோசிச்சாலும் இன்னும் நியாபகத்துக்கு வர மாட்டேங்குது.

இந்த பதிவு இன்னிக்கு வருதுன்னா அதுக்கு காரணம் இந்த பாட்டு தான். ஏனோ இரவு பதினோரு மணிக்குக் கேட்டுக்கிட்டு இருக்கும் போது மனசு கொஞ்சம் லேசான நேரத்துல எதாச்சும் எழுதுவோமேன்னு தோனுச்சு. நீங்களும் கேட்டுப் பாருங்க.



அடுத்த வாரம் இந்த நேரமெல்லாம்...ரிட்டர்ன் ஆஃப் தி கைப்புள்ள.

Wednesday, September 30, 2009

விஜய் டிவியும் அனிமல் ப்ளானெட்டும்

ஒரு ரெண்டு மாசம் முன்னாடி இருக்கும்னு நெனைக்கிறேன், ஞாயித்துக் கிழமை சாயந்திரம் விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சி போய்க்கிட்டுருந்தது. அன்னைக்கு விவாதிக்கப்பட்ட தலைப்பு வாழ்க்கையில் முடிவுகள் எடுப்பதில் மனதை உபயோகிப்பவர்கள் Vs மூளையை உபயோகிப்பவர்கள் அப்படின்னுட்டு. மனதை உபயோகிப்பவர்கள் என்ற தரப்பில் பேசியவர்கள் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களாம். அந்த நேரத்தில் அவர்களுக்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்து விடுவார்களாம். நல்லது செய்ய போய் ஏமாந்து போன அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்கள்.

மூளையை உபயோகிப்பவர்கள் என்ற தரப்பில் பேசியவர்கள் எதையும் தீர்க்கமாக ஆய்ந்து முடிவெடுப்பார்களாம். உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்களாம். ஒரு விஷயத்தில் இருக்கிற லாஜிக்கைத் தவறாமல் பார்த்து ஆராய்ந்து முடிவெடுப்பார்களாம். இரு தரப்பினருக்கும் இடையே விவாதம் நடைபெற்று சூடு பற்றிக் கொண்டிருந்தது. மனதை உபயோகிப்பவர்கள் Vs மூளையை உபயோகிப்பவர்கள் என்ற தலைப்பே தவறு என்று என் தந்தையார் கூறினார். அதை பற்றிய விவாதம் இப்போது நமக்கு வேண்டாம்.

மனதை உபயோகித்து முடிவெடுப்பதாகச் சொல்லிய அணியினர் மூளையை உபயோகித்து முடிவெடுப்பதாகச் சொல்லிய அணியினரைப் பார்த்து "நீங்கள் ஒரு நெடுஞ்சாலையில் உங்கள் காரில் அதிவேகமாகச் சென்று கொண்டிருக்கிறீர்கள், அப்போது உங்கள் பாதையின் குறுக்கே ஒரு மாடோ அல்லது ஒரு நாயோ குறுக்கிடுகிறது என்று வைத்துக் கொள்வோம். வண்டியை அபாயமில்லாமல் நிறுத்துமளவுக்கு உங்களிடம் நேரமில்லை. அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டார்கள்.

அப்போது மூளை அணியினைச் சேர்ந்த ஒரு பெண்மணி "நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கும் போது என்னால் வண்டியை நிறுத்த முடியாத போது அந்த நாயின் மீது ஏற்றி விட்டுச் சென்று விடுவேன். அந்நேரத்தில் என்னுயிரையும் எந்நலனைப் பற்றி மட்டும் தான் சிந்திப்பேன்" என்றார். உடனே மனது அணியில் இருந்தவர்கள் நாங்களாக இருந்தால் எங்கள் உயிருக்கு ஆபத்து வந்தாலும் நாயைக் காப்பாற்றவே கடைசி வரை முயல்வோம் என்றனர்.

அதன் பின்னர் மனது அணியில் இருந்தவர்கள் "நாயோ மாடோ சாலையைக் கடப்பதாக நினைக்க வேண்டாம். நீங்கள் பெற்ற உங்களுடைய குழந்தை நெடுஞ்சாலையில் அவசரமாகக் குறுக்கே வந்து விடுகிறது, நீங்கள் வேகமாக வண்டியை ஓட்டிக் கொண்டு வந்து விடுகிறீர்கள், இப்போது என்ன செய்வீர்கள்" என்று கேட்டனர். அதற்கு மூளை அணியில் முன்னர் பதில் சொன்ன அதே பெண் சொன்னார் "நாயாக இருந்தாலும், மாடாக இருந்தாலும், நான் பெற்ற என் குழந்தையாக இருந்தாலும் எனக்கு ஆபத்து ஏற்படுகிறது என்ற சூழ்நிலை ஏற்படும் போது நான் நிற்காமல், குறுக்கே வருபவர்கள் மீது ஏற்றிக் கொண்டு சென்று கொண்டே இருப்பேன்" என்றார்.

அது வரை அவர் பேசியது ஒரு மாற்று கருத்து என்ற அளவில் ஓரளவு ஏற்றுக் கொள்ளும்படியானது என்று வைத்துக் கொண்டாலும் அதற்குப் பின் அவர் சொல்லியது தான் என்னை மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் கொள்ளச் செய்தது "குழந்தை வேண்டுமானால் இன்னொன்று பெற்றுக் கொள்ளலாம். நம்முயிருக்கே ஆபத்து எனும் போது இவ்வாறு செய்வதில் தவறொன்றுமில்லை" என்றார். இதை கேட்டதும் எனக்கு ரத்தம் கொதிக்கத் தொடங்கியது. அவர் கடைசியில் சொல்லிய கருத்து மிகவும் ஆபாசமானது என்பது என் எண்ணம். ஆணும் பெண்ணும் இணைந்து துய்க்கும் இன்பத்தின் உபரி (by-product) தான் குழந்தை என்ற ஒரு எண்ணம் கொண்டவரால் மட்டும் தான் இவ்வாறு பேச முடியும் என்பது என் கருத்து.

ஒரு வேளை உண்மையில் அத்தகைய சூழ்நிலையில் அப்பெண் அவ்வாறு செய்யக் கூடியவராக இல்லாமலும் இருக்கலாம். நாம் சொல்லிய கருத்தில் இருந்து எந்நிலையிலும் பின்வாங்கக் கூடாது என்ற ஒரு வைராக்கியத்திலும் அவ்வாறு பேசி இருக்கலாம். அப்பெண்ணே தான் பேசியதைப் பின்னாளில் பார்த்தால் கண்டிப்பாக வருந்தலாம். கேவலம் ஒரு விவாதத்தில் ஜெயிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாமா? இவ்வாறு பேசி ஜெயித்து யாருக்கு எதை நிரூபிக்கப் போகிறோம் என ஒரு கணம் மனதை உபயோகித்து வேண்டாம், மூளையை உபயோகித்தாவது ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம் இல்லையா?

இதே போல் தான் நீயா நானா நிகழ்ச்சியில் நான் பார்த்த வேறு சில பாகங்களில் பங்கு பெற்ற கணவன்-மனைவியர் சிலர் பேசிய பேச்சுக்களும். எதிர் அணியில் இருந்த கணவனைப் பற்றி "என் கணவர் இந்த மாதிரி" என்று கணவரின் சில குறைகளைப் பற்றி மனைவியும், "என் மனைவி இந்த மாதிரி" என்று மனைவியின் சில குறைகளைப் பற்றி கணவரும் கூறுவதைப் பார்த்திருக்கிறேன். ரெண்டு பேர் தனியாக உட்கார்ந்து பேசிக் கொள்ள வேண்டிய ஒரு விஷயத்தை ஒரு அரங்கத்தில் எல்லோர் முன்னிலையிலும் கூறுவதை என்னால் ஏனோ sportiveஆக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

தன்னுடைய வாழ்க்கைத்துணை தன்னுடைய குறைகளைப் பற்றி ஒரு பொதுவிடத்தில் வேற்று மனிதர்களிடம் கூறுவதைப் பார்த்து "நீ என்னிடம் இதை முன்பே சொல்லியிருக்கலாமே" என்ற பார்வை பார்த்த ஒரு சிலரையும் அந்நிகழ்ச்சியில் கண்டிருக்கிறேன். தன்னுடைய வாழ்க்கைத் துணையின் குறைகளைப் பற்றி வேற்று மனிதர்களிடம் பகிர்ந்து கொண்டுவிட்டு நாளை தன் கணவரையோ மனைவியையோ எவ்வாறு கண்ணோடு கண் வைத்து நேருக்கு நேராகப் பார்த்து பேசுவார்கள் என்பதும் எனக்கு இன்னும் விளங்கவில்லை. விஜய் டிவிக்கு அது வியாபாரம், சம்பந்தப் பட்டவர்களுக்கு அது வாழ்க்கையில்லையா? ஏன் அதை உணர மறுக்கிறார்கள்?

நான்கு நாட்களுக்கு முன் அனிமல் ப்ளானெட் (Animal Planet) அலைவரிசையில் ஒரு நிகழ்ச்சியைக் கண்டேன். 'Heart of a Lioness' என்பது அந்நிகழ்ச்சியின் தலைப்பு. சபா டக்ளஸ் ஹாமில்டன்(Saba Douglas Hamilton) என்பவர் வனவிலங்குகளைப் பற்றி ஆய்வு மேற்கொள்பவரும், தொலைக்காட்சித் தொகுப்பாளரும் ஆவார். கிழக்காப்பிரிக்க நாட்டான கீனியாவில் பிறந்து வளர்ந்தவரான அவர் இங்கிலாந்தை மூலமாகக் கொண்டவர். சம்புரு வனவிலங்கு சரணாலயத்தில் (Samburu Wildlife Reserve) தாங்கள் கண்ட ஒரு விநோதமான காட்சியைப் பற்றி சபாவிற்குத் தெரியப் படுத்துகின்றனர் வனவிலங்கு பாதுகாவலர்கள்.

ஒரிக்ஸ் (Oryx) எனும் வகை மானின் குட்டி ஒன்றை ஒரு பெண் சிங்கம் வளர்ப்பதைப் பற்றிய செய்தி தான் அது. அதை நம்ப முடியாமல் தானே கண்டறிவதற்காக சபா காட்டுக்குள் பயணித்து ஒரு ஆவணப் படத்தை எடுத்திருக்கிறார். அப்படம் தான் "Heart of a Lioness". முதன் முதலில் மான் குட்டியின் பின்னே அப்பெண் சிங்கம் மெல்ல நடந்து செல்வதைப் பார்த்து நான் அடைந்த ஆச்சரியத்திற்கு அளவே இல்லை. ஆப்பிரிக்க காடுகளில் மிகுந்த அனுபவம் கொண்ட சபாவும் தான் இது போல ஒரு நிகழ்வை அது வரை கண்டதே இல்லை என்கிறார்.


அச்சிங்கத்திற்கு அங்கிருந்த மக்கள் 'Kamunyak' என்று பெயர் சூட்டியிருந்தனர். அப்பெயருக்கு அவர்களுடைய மொழியில் 'ஆசிர்வதிக்கப்பட்டவள் - Blessed One' என்று பொருளாம். தன்னுடைய உணவாகக் கூடிய ஒரு பிராணியைக் கமுன்யாக், பேணி வளர்ப்பதற்கான காரணத்தை அறிய முற்படுகிறார் சபா. சிங்கங்களைப் பற்றிய ஆய்வாளர் ஒருவரின் மூலம் கமுன்யாக்கின் இவ்விசித்திர குணத்திற்கான காரணம் ஒரளவுக்குத் தெரிய வருகிறது. அது சிங்கங்கள் எப்போதும் ஒரு சமூகமாக(Pride) வாழ்வன. மற்ற கொடிய விலங்குகளைப் போல் அல்லாமல் சிங்கங்கள் ஆண் சிங்கம், சில பெண் சிங்கங்கள், அதன் குட்டிகள் என்று எப்போதும் ஒரு கூட்டமாகவே வாழும் தன்மையுடையவை.

காடுகளில் மனிதர்களின் குறுக்கீட்டால், காடுகள் சுருங்கி அதன் காரணமாக சிங்கங்களின் வாழும் முறைமையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுவிடுகின்றன. கிழக்கு ஆப்பிரிக்க பழங்குடியினரான மசாய் இன மக்கள் சிங்கங்களைத் தங்களுடைய மிகப்பெரும் எதிரிகளாகக் கருதுகின்றனர். அத்தோடு சிங்கங்களை வேட்டையாடுதல் வீரத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இவ்வாறு பல்வேறு காரணங்களினால், தன்னுடைய இயல்பான குடும்ப நிலை பாதிக்கப்பட்டு தன் சொந்தங்களை எல்லாம் இழந்து ஒரு சிங்கம் அனாதையாவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனவாம். அவ்வாறு கமுன்யாக் எனும் அச்சிங்கம் தனிமை படுத்தப் பட்டிருக்கலாம். அதனுடைய குட்டிகளை அது பறிகொடுத்திருக்கலாம்.


அதன் காரணமாக, தன் குட்டியை ஒத்த மான் குட்டியைத் தன்னுடைய குட்டியாகப் பாவித்து அன்பாய் நடத்துகிறது. மான் குட்டி சிங்கத்திடம் வந்து சேர்ந்த நாளிலிருந்து இமை பொழுதும் அக்குட்டியை விட்டுப் பிரியாமல் தன் கண்காணிப்பிலேயே வைத்துக் கொண்டதாம் கமுன்யாக். கிட்டத்தட்ட 15 நாட்கள் இரவும் பகலும் சிங்கத்தையும், மான் குட்டியையும் பின் தொடர்கிறார் சபா. அக்காலக் கட்டத்தில் கமுன்யாக் வேட்டையாடச் செல்லவில்லையாம். ஒன்றும் சாப்பிடவும் இல்லையாம். மான் குட்டியைக் கொன்று தின்று வரும் மற்ற விலங்குகளையும் கமுன்யாக் விரட்டி விடுமாம். தன் குட்டியைத் தன்னொடு கொண்டு செல்ல வந்த தாய் மானையும் கமுன்யாக் விரட்டி விட்டதாம்.

பதினைந்து நாட்கள் கண்ணும் கருத்துமாக மான் குட்டியைத் தன் கண்காணிப்பிலேயே வைத்துக் கொண்டது அச்சிங்கம். மான்குட்டியும் சரியாக உணவு உட்கொள்ளவில்லை என்ற போதிலும், அவ்வப்போது புல் மேயும். சிங்கங்களை எதிரிகளாகக் கருதும் மசாய் இன மக்களாலேயே, இச்சிங்கம் கடவுளால் அனுப்பி வைக்கப்பட்ட தூதர் என்ற ரீதியில் போற்றப் பெற்றது. சிங்கம் ஆகாரம் ஏதும் உட்கொள்ளாமல் வாடுவதைக் கண்ட வனவிலங்கு சரணாலயத்தின் வார்டனும் சிங்கத்துக்கு மாமிசம் தரச் செய்கிறார். கமுன்யாக் அதையும் சாப்பிட மறுக்கிறது.


பதினாறாம் நாள், கமுன்யாக்கும் அம்மான் குட்டியும் ஒரு குட்டையில் சிறிது நீரருந்துகின்றன. அதன் பின்னர் சிங்கம் அயர்ந்து கொஞ்சம் இளைப்பாறுகிறது. மான் குட்டி சிங்கத்தின் பார்வையிலிருந்து சற்றே விலகிச் செல்லுகிறது. கமுன்யாக்கும் அதை பின் தொடராமல் அமர்ந்திருக்கிறது. அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு பெரிய ஆண் சிங்கம் மான்குட்டியைத் தூக்கிக் கொண்டு சென்று விடுகிறது. இதை நேரடியாகப் படம் பிடித்துக் கொண்டிருந்த சபா நாதழுதழுக்கப் பேசியதை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை. அதன் பின்னர் நடந்தது எந்தக் கல்லையும் கரையச் செய்வது.

தான் பெற்ற தன் குட்டியைப் பறிகொடுத்தது போல கமுன்யாக் செய்வதறியாது திகைக்கிறது. ஆண் சிங்கம் மான் குட்டியைத் தூக்கிச் சென்ற இடத்திற்கு கமுன்யாக் பின் தொடர்ந்து செல்கிறது. ஆனால் வலிமை பொருந்திய பெரிய சிங்கத்தை எதிர்த்து போராடும் சக்தியில்லாமல் தான் பதினைந்து நாட்களாகப் பார்த்து பார்த்து வளர்த்த மான்குட்டி கொல்லப்படுவதை பார்க்கிறது. கமுன்யாக் என்ற அந்த சிங்கம் அந்நேரத்தில் எப்படி நடந்து கொண்டது என்பதை அந்நிகழ்ச்சியைப் பார்த்தால் மட்டுமே உணர முடியும்.

இது எல்லாம் நடந்தது 2001 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில். அதன் பின்னர் கமுன்யாக் மேலும் 5 மான் குட்டிகளை வளர்த்ததாம். ஆனால் முதல் மான்குட்டியைப் போல மற்ற குட்டிகளால் நீண்ட நாட்கள் தாக்குப் பிடிக்க முடியவில்லையாம். 2004ஆம் ஆண்டுக்குப் பின்னர் கமுன்யாக்கை யாரும் பார்க்கவில்லையாம். ஆனால் அச்சிங்கத்திற்கு ஒரு தேவதைக்குரிய மதிப்பினையும் மரியாதையையும் தந்திருக்கின்றனர் அங்குள்ள மக்கள்.

இந்நிகழ்ச்சிக்குத் தொடர்புடைய சுட்டிகள் சில:

அனிமல் ப்ளானெட் காணொளிகள்

http://www.lewa.org/oryx-lioness.php

http://www.douglas-hamilton.com/Site/HolFAQ.html


மான்குட்டியை வளர்க்கும் சிங்கத்தினைப் பற்றிய நிகழ்ச்சியினை அனிமல் ப்ளானெட்டில் கண்டதும் எனக்கு விஜய் டிவியில் நான் இரு மாதங்களுக்கு முன்னர் கண்டிருந்த நீயா நானா நிகழ்ச்சியில் அப்பெண் பேசிய பேச்சு நினைவுக்கு வந்தது. தன்னுடைய உணவாகக் கூடிய ஒரு உயிரிடம் அன்பு செலுத்தும் ஒரு கொடிய விலங்கையும், வறட்டு வாதத்துக்காகத் தான் பெற்ற பிள்ளையானாலும் பலி கொடுப்பதைப் பற்றி சிறிதும் கூச்சமின்றி பேசும் பெண்ணையும் பார்த்தது உண்மையிலேயே விந்தையிலும் விந்தை தான். அனிமல் ப்ளானெட்டில் கண்ட நிகழ்ச்சியைப் பற்றி கூகிளில் தேடிக் கொண்டிருந்த போது, அந்நிகழ்ச்சியை ஏற்கனவே பார்த்திருந்தவர்கள் சிலர், விவிலியத்தில்(Bible) இருந்து சில வரிகளை மேற்கோள் காட்டியிருந்தனர். அது -

"The wolf also shall dwell with the lamb, The leopard shall lie down with the young goat,
The calf and the young lion and the fatling together; And a little child shall lead them."
Isaiah 11:6

ஓநாயோடு செம்மறி ஆட்டுக்குட்டியும், சிறுத்தையோடு ஆடும், சிங்கத்தோடு கன்றுக்குட்டியும் அன்போடு தன் இயல்பை மாற்றிக் கொண்டு உறவாடும் காலத்தில், இவ்விலங்குகளை விட உயர்ந்த மதி கொண்ட மனிதன் தன்னுடைய இயல்பினை மறந்து விலங்கினின்றும் தாழ்ந்து கொண்டே செல்கிறான் என்பதறிந்து வேதனையே மிஞ்சுகிறது.

Monday, September 07, 2009

வேண்டாதவைகள்

அன்னிக்கு ஒரு நாள் ஞாயித்துக் கெழமை. வீட்டுலேருந்து தெருவுல இறங்கி நடந்து எங்கேயோ போய்க்கிட்டிருந்தேன். தெருவுல பத்து வயசு பையன் ஒருத்தன் சத்தமா பாட்டு பாடிக்கிட்டு போய்க்கிட்டுருந்தான். "ச்சூ...ச்சூ...மாரி... ச்சூ...ச்சூ...மாரி..." அப்படிங்கிற பூ படத்து பாட்டை. பாட்டோட இந்த முதல் வரியைப் பாடுன அந்த பையன் பாட்டுக்கு நடுவுல இருக்குற வரிகளைப் பாடலை. அவனுக்கு மறந்து போச்சா...இல்லை ஞாபகத்துக்கு வரலியா என்னன்னு தெரியலை. ஆனா பாட்டோட கடைசி வரியை மட்டும் அழுத்தம் திருத்தமா பாடுனான். "கொல்லை பக்கம் போகாத கொட்டி கெடக்கு ஜாங்கிரி" அப்படின்னு. அந்த கடைசி வரியைப் பாடுனப்போ அந்த பையன் ரொம்ப எஞ்சாய் பண்ணி பாடுன மாதிரி இருந்துச்சு. முகமெல்லாம் ஒரே சிரிப்பு. பாட்டோட மத்த வரிகளை எல்லாம் விட்டுட்டு அந்த பையன் இந்த கடைசி வரியை மட்டும் பாடுனதை பாத்த எனக்கும் சிரிப்பு சிரிப்பா வந்துச்சு. வெட்கத்தை விட்டு உண்மையைச் சொல்லனும்னா அந்த பாட்டை டிவில முதல் முறை கேட்டப்பவே அந்த கடைசி வரி மட்டும் தான் என் மனசுல நின்னுச்சு. "அடுத்தவன் கிட்ட இருக்கற நல்லதை எல்லாம் விட்டுடுங்க வேண்டாததை எல்லாம் கத்துக்கிட்டு வந்துருங்க" அப்படின்னு சின்ன வயசுல அம்மா அடிக்கடி திட்டுனதும் ஞாபகம் வந்துச்சு. பள்ளிக்கூட நண்பன் மன்னாரு(பட்டப்பெயர் தான்) கூட, நாங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரி வீணா போற சம்பவம் எதாச்சும் நடந்துச்சுன்னா - உதாரணத்துக்கு ரெண்டு பேரும் பரிட்சையில ஒரே மாதிரி கம்மி மார்க் வாங்குனாலோ, க்ளாஸ்ல பேசி ஒன்னா வெளியே நின்னாலோ ஒரு வாக்கியத்தை அடிக்கடி சொல்லுவான் "டேய் வுடுடா! நாம ரெண்டு பேரும் ஒரே குட்டையில ஊறுன மட்டைங்க. இதை எல்லாம் போய் பெருசா எடுத்துக்கிட்டு"ன்னு. இது காலப்போக்குல "ஒரே குட்டை...ஒரே மட்டை..வுடுடா"ன்னு சுருக்கமா சொன்னாலும் புரிஞ்சுக்கற மாதிரி ஆகிப் போச்சு. வலையுலகத்துலேயும் நான் ஊறுன அதே குட்டையில் ஊறிய சில "எஞ்சோட்டு ஃப்ரெண்டுங்க" இருப்பாங்கங்கிற நம்பிக்கையில ஒரு முழுக்க முழுக்க வேண்டாத சமாச்சாரங்களை உள்ளடக்குன பதிவு. இப்பதிவு ஒரு சாராருக்கு ஒவ்வாமையைத் தரலாம். அப்படி தர்ற பட்சத்தில் இந்தப் பதிவைச் சாய்ஸ்ல விட்டுடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அப்போ ஆறாவது படிச்சிட்டுருந்தேன்னு நெனைக்கிறேன். வருஷம் அனேகமா 1989ஆ தான் இருக்கனும். அப்போ இந்தியாவின் பிரதம மந்திரியா இருந்த ராஜீவ் காந்தி அப்போதைய சோவியத் யூனியன்ல சுற்றுப்பயணம் மேற்கொள்ளறாரு. அரசு முறை பயணத்தில் அவருக்கு வழங்கப்பட்ட வரவேற்பினை தூர்தர்ஷனில் நேரடியாக ஒளிபரப்பினார்கள். எனக்கு 'live'ஆகப் பார்த்த ஞாபகம் தான். மாஸ்கோவில் அவருக்கு ரஷிய நாட்டின் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு வழங்கப்படுகிறது. எப்படி? ரஷிய நாட்டின் பாரம்பரிய உடை அணிந்த ஒரு இளம்பெண் ஒரு தட்டில் பெரிய கேக் ஒன்றை ஏந்தி ராஜீவை வரவேற்க வருகிறார். பெரிய கேக்கின் நடுவில் ஒரு சிறிய கின்னத்தில் உப்பு வைக்கப்பட்டிருக்கிறது. அந்நாட்டின் பாரம்பரிய வரவேற்பு முறையின் படி, வரவேற்கப்பட்டவர் கேக்கின் ஒரு சிறு துண்டை எடுத்து கின்னத்தில் உள்ள உப்பில் தோய்த்து சாப்பிட வேண்டும். ராஜீவும் அவ்வண்ணமே செய்கிறார். ஆனால் அதற்கு முன்னர் அவர் செய்தது தான் என் கவனத்தைக் கவர்ந்தது - அவர் செய்தது அவ்விளம்பெண்ணின் இதழோடு இதழ் பதித்தது. மறுநாள் வெளிவந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் ராஜீவ் ரஷிய பெண்ணை முத்தமிடும் படம் முதல் பக்கத்தில் வெளியானது. அன்று ஸ்கூலுக்குச் சென்றதும் எஞ்சோட்டு பையன் ஒருத்தன் என்னை பார்த்து கேட்டது "டேய்! நேத்து ராஜீவ் காந்தி எப்படி கிஸ் அடிச்சான் பாத்தியா?" :) இது நாள் வரையிலும் ராஜீவும் மிக்கைல் கோர்பசேவும் அப்பயணத்தின் போது என்ன பேசிக் கொண்டார்கள் என்பதும், அப்பயணத்தின் முக்கியத்துவம் என்னவென்பதும் எனக்குத் தெரியாது. அதெல்லாம் யாருக்கு வேணும்ங்கறீங்களா? அதுவும் சரி தான். நிற்க. பிரபலமாக இருக்கும் நடிகர்கள், அரசியல்வாதிகள் இவர்களை எல்லாம் வயது வித்தியாசம் பார்க்காமல் ஏக வசனத்தில் குறிப்பிடும் பண்பு எப்படி வந்தது என யோசித்துப் பார்க்கிறேன். கம்பனையும், பாரதியையும், இளங்கோவையும், கண்ணனையும் பற்றிப் பேசும் போது சொன்னான், செய்தான், எழுதினான், பாடினான் என்று உரிமையோடு அழைக்கிற அதே நெருக்கம் தான்னு நெனைக்கிறேன் :)

நாளமில்லா சுரப்பிகள் ஹார்மோன்களை லிட்டர் லிட்டராக சுரப்பதை நிறுத்தி தினமும் அரை லிட்டர் என்ற வீதத்தில் சுரந்து கொண்டிருந்த பதின்ம வயதுகள் முடிவடையவிருந்த பருவம் அது. கிண்டி பொறியியல் கல்லூரியில் முதலாண்டு படித்துக் கொண்டிருந்தேன். 1995ஆம் ஆண்டில் வெளிவந்த எத்தனை தமிழ் படங்களைத் தியேட்டரில் பார்த்திருப்பேன் என நினைவிலில்லை. ஆனால் 'U' சான்றிதழ் அல்லாத அவ்வாண்டில் வெளிவந்த சில 'பெயர் பெற்ற' படங்களை நானும் எஞ்சோட்டுப் பையன்களும் தியேட்டரில் தவறாது பார்த்துவிடுவோம். அது போல தான் ஒரு பிரபல ஆங்கில 'expletive' ஒன்றைத் தலைப்பாகக் கொண்டு கிரிக்கெட் விளையாட்டின் ஆடுகளத்தை நினைவுபடுத்தும் சென்னை ஆனந்த் தியட்டேரில் அப்போது ஓடிக் கொண்டிருந்த படத்தைப் பார்க்க நானும் எனது கூட்டாளிகள் இருவரும் புதன் கிழமை மதிய க்ளாஸ்களை பங்க் அடித்து விட்டு மதியான சாப்பாட்டை ஏசிடெக் கேண்டீனில் சாப்பிட்டு விட்டு கிளம்பினோம். பெசண்ட் நகரிலிருந்து அயனாவரம் வரை செல்லும் 23C வழித்தடப் பேருந்தில் காந்தி மண்டபம் நிறுத்தத்தில் மூவரும் ஏறினோம். ஷோ ஆரம்பிக்க கொஞ்ச நேரமே இருந்த காரணத்தினால் பேருந்து ஆயிரம் விளக்கு மசூதிக்கு எதிரில் மெதுவாக செல்லும் போதே இறங்கி விட வேண்டும் என்று மூவரும் முடிவு செய்தோம். அப்படி இறங்காவிட்டால் பஸ் டிவிஎஸ் பேருந்து நிறுத்தத்தில் தான் நிற்கும். நீண்ட தூரம் பின்புறம் நடந்து வர வேண்டும். அந்த ப்ளான் பிரகாரம் நான் முதலில் பஸ்சின் கடைசி படிக்கட்டில் நின்று கொண்டிருந்தேன். எனக்கு பின்னாடி என் கூட்டாளிஸ் ரெண்டு பேரும் நின்று கொண்டிருந்தார்கள். ஆனால் எதிர்பார்த்தபடி பஸ் ஆயிரம் விளக்கு எதிரில் ஸ்லோவாகவில்லை. என் பின்னாடி நின்று கொண்டிருந்த ரெண்டு பேரில் ஒருவன் எதிர்பாராத விதமாக என்னை பஸ்சிலிருந்து தள்ளி விட்டு விட்டான். எப்படியோ சேதாரம் இல்லாமல் சிங்கிள் பீஸாகக் கீழே இறங்கிவிட்டேன். என்னுடன் வந்த ரெண்டு பேரும் டிவிஎஸ் வரை பஸ்சிலேயே சென்று விட்டனர்.

இந்த இடத்தில் கதையின் ஹீரோ...அட நான் தானுங்கோ...சராசரி தமிழ் பட ஹீரோ மாதிரி செயல்படாமல் ஒரு ஹாலிவுட் ஹீரோ மாதிரி வித்தியாசமாக செயல்பட்டேன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அப்படி என்ன பண்ணேன்? பஸ்சுலேருந்து நாம தள்ளி விட்டவன் செத்தானா பொழச்சானான்னு ரெண்டு பேரும் பயந்துக்கிட்டே டிவிஎஸ் பஸ் ஸ்டாப்லேருந்து பின்னோக்கி ஆனந்த் தியேட்டர் வரை வேக வேகமாக நடந்து வந்தார்கள். அப்படி ஓட்டமும் நடையுமாக வந்தவர்களை வரவேற்ற கதையின் ஹீரோ சொன்னது "டேய்! 20 ரூ டிக்கெட் தாண்டா கெடைச்சது. படம் போடப் போறான் சீக்கிரமா வாங்கடா". படத்தின் முதல் பாதியை என்னோடு அமைதியாகப் பார்த்த இருவரும் இடைவேளையின் போது விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினார்கள். "டேய் மாமா! பஸ்சுலேருந்து தள்ளி விட்டுட்டோம்னு நீ எங்க சட்டையைப் புடிப்பேன்னு பயந்துக்கிட்டே வந்தோம். நீ என்னடான்ன டைம் வேஸ்ட் பண்ணாம டிக்கெட் வாங்கி வச்சிட்டு வெயிட் பண்ணிக்கிட்டிருக்கே...அதுவும் பால்கனி டிக்கெட்" என்றார்கள். அப்போ தான் நானும் தெரிஞ்சிக்கிட்டேன் இந்த மாதிரி ஓடற பஸ்சுலேருந்து யாராச்சும் தள்ளி விட்டாங்கன்னா அவங்க சட்டையைப் புடிக்கனும்னுட்டு. ஓடற பஸ்சுலேருந்து ரிஸ்க் எடுத்து பாக்கற அளவுக்குப் படத்துல "ஒன்னும்" இல்லை. ஒரு வேளை பஸ்சுலேருந்து விழுந்து எதாவது ஒன்னு ஆயிருந்துச்சுன்னா மறுநாள் தினத்தந்தில ஹெட்லைன்ஸ் எப்படி வரும்னு யோசிச்சுப் பார்த்தேன் - "கில்பான்சி படம் பார்க்க சென்ற அண்ணா பல்கலைக்கழக மாணவர் 23சி பஸ் ஏறி டிக்கட் வாங்கினார். வர்க் ஷாப் காக்கி சீருடை அணிந்திருந்தார்". கேக்கவே கொஞ்சம் கேவலமா தான் இருக்கில்ல? ஆனா ஒன்னே ஒன்னு சொல்லிக்க ஆசை படறேன்.

அன்னிக்கு என்கூட பஸ்சுல வந்த ரெண்டு பேருல ஒருத்தன்(அதாவது என்னை புடிச்சித் தள்ளாதவன்) ஒருத்தன் என்ன ஒருத்தன் - அவன் பேரு தியானேசுவரன் - ஷேன் வார்னையும் இளையராஜாவையும் ஒப்பிட்டு பதிவெழுதினானே அவனே தான் - கில்பான்சி படத்திலும் ஒரு நேர்மையையும் ethicsஐயும் எதிர்பார்க்கும் அவனை மாதிரி ஆன ஆளை இது வரைக்கும் நான் பாத்ததேயில்லைங்கங்கோ. நான் சொல்லும் காலகட்டத்தில் பலராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு பழம்பெரும் "விஞ்ஞான் நூலின்" பெயரைக் கொண்டு எடுக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணரின் பக்தையான மலையாள தேசத்தோடு தொடர்புடைய அந்த இயக்குனரின் படம் அவனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. "ஒளிவிளக்கான" இயக்குனரால எடுக்கப்பட்ட "பஞ்சபூதங்களில்" ஒன்றின் பெயரைக் கொண்ட அந்த திரைப்படத்தைப் பார்த்து விட்டு பெரிதும் பாராட்டினான். "மச்சி! ஏண்டா உனக்கு அந்த படம் பிடிக்கலை, இந்த படம் பிடிச்சிருக்குன்னு கேட்டேன்". அதுக்கு அவன் சொன்ன பதில் "என்னடா படம் அது? கேவலமா இருந்துச்சு. அந்த படத்தைப் பார்த்தா எதோ வாழறதே கில்மாவுக்காகத் தாங்கிற மாதிரி இருக்கு. ஆனா இந்த படம் ஃபீலிங்சுக்கு முக்கியத்துவம் குடுக்குது மச்சி. நம்மளை நம்பி வந்தவங்களோட உணர்வுகளைப் புரிஞ்சுக்கலைன்னா என்னாகும்னு நல்லா சொல்லிருக்காங்க. நல்ல படம் அது" அப்படின்னான். பட்...அந்த சின்ன வயசுலேயே அவ்வளவு நீதியோடயும் நியாயத்தோடயும் நேர்மையோடயும் சிந்திச்ச அவனோட அந்த அப்ரோச் எனக்கும் பிடிச்சிருந்தது :)

Wednesday, August 12, 2009

ஒரு வித்வானைப் பாத்து கேக்கற கேள்வியாய்யா இது?

டிவியில எதோ ஒரு நிகழ்ச்சிக்கு இடையில விளம்பரம் ஒன்னு வந்தது. ஹேப்பிடெண்ட் Happydent சூயிங் கம்முக்கான விளம்பரம் அது. ஹேப்பிடெண்ட் சூயிங் கம் மென்னுட்டு யானையோட தந்தமெல்லாம் பளிச்சுன்னு வெளிச்சம் அடிக்கிற மாதிரி வரும்.

"அம்மா! பேசாம நம்மளும் இந்த மாதிரி ஒரு யானை வளர்க்கலாமா?"

"ஏன்?" - இது மை த மம்மி.

"நம்ம வீட்டுக்கு வர்ற வழியெல்லாம் இருட்டா இருக்குல்ல? இந்த மாதிரி யானை இருந்துச்சுன்னா வழியெல்லாம் தந்தத்தால வெளிச்சம் கொடுத்துக்கிட்டே வருமில்ல கார் ஹெட்லைட் மாதிரி?"

"யானைக்கு சாப்பாடு?"

"அதான் அர்ச்சனாக்கு(என்னோட பொண்ணு) தெனம் மத்தியானம் மம்மம் ஊட்டறீங்கல்ல? அதை தான் அவ முழுசா சாப்பிடாம மிச்சம் வெச்சிடறால்ல? அதை தெனமும் ஒரு வேளை அந்த யானைக்குப் போட்டா அதை சாப்பிட்டுக்கிட்டு தானா ஒரு ஓரமா நம்ம வீட்டுல வளர்ந்துக்கிட்டு போவுது"

அந்த நேரம் பாத்து சீன்ல எண்ட்ரி ஆன எங்கப்பா சொன்னது "நாங்க உன்னை அடிக்கிறோமோ இல்லையோ, கண்டிப்பா இந்த மாதிரி ஐடியா கொடுக்கிறதுக்காக யானை வந்து உன்னை பொடறியிலேயே அடிக்கும்"

ஒரு வேளை நாம உண்மையிலேயே 'born ahead of time'ஓ? யாருமே நம்மளைப் புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்களே?

****************************************************

கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸோட மைசூர்பா எல்லாரும் வாங்கி சாப்பிடுங்க. உடம்புக்கு நல்லதோ இல்லையோ...மூளைக்கு ரொம்ப நல்லது. சமீபத்துல எங்க ஆஃபிசு நண்பர் ஒருவர் தன் சொந்த ஊரான கோவைக்குப் போயிட்டு வரும் போது கிருஷ்ணா ஸ்வீட்ஸ்லேருந்து மைசூர்பா வாங்கிட்டு வந்து எல்லாருக்கும் தந்தாரு.

நான் அதை அதிகமா கூட சாப்பிடலைங்க. கொஞ்சமா கிள்ளி தான் வாயில போட்டேன். திடீர்னு எனக்கு ஒன்னு தோனுச்சு. பஞ்சதந்திரம் படத்துல நாயர் கேரக்டர்ல வர்ற ஜெயராம் சொல்லுவார்ல - "என் பையனுக்கு ஹார்ட்ல தொளா" அப்படின்னு. அந்த மாதிரி ஹார்ட்ல துளை இருக்கறவங்க, தினமும் நெய், வெண்ணை மற்றும் இதர கொழுப்பு சத்தும் கொலஸ்டராலும் உள்ள உணவுகளையோ இல்ல இனிப்புகளையோ சாப்பிட்டா என்னன்னு?

ஏன்னா அதிகக் கொழுப்புச் சத்தும் கொலஸ்டராலும் உள்ள உணவுகளைச் சாப்பிட்டா இதயத்துல அடைப்பு ஏற்படும்ல? ஏற்கனவே இதயத்துல ஓட்டை இருந்துச்சுன்னா இது மாதிரி சாப்பிடறதுனால அது அந்த ஓட்டையைப் போய் அடைச்சிடும்ல?

ஓப்பன் ஹார்ட் சர்ஜரி, பை பாஸ் சர்ஜரி இதெல்லாம் பண்ணறதுக்குப் பதிலா மைசூர்பா தெரபி பண்ணலாம் தானே? இந்த கண்டுபிடிப்புக்கு காசு பணம் எல்லாம் வேணாம்ங்க. ஏதோ ஒரு நோபல் பரிசோ, ஒரு பாரத் ரத்னாவோ இல்லை ஒரு ஆஸ்கர் அவார்டோ பாத்து போட்டு குடுத்தா நல்லாருக்கும்.

****************************************************

நேத்து காலையில ஆஃபிசு போறதுக்கு பஸ்சுக்காகத் திருவான்மியூர் டெர்மினஸ் கிட்ட நின்னுக்கிட்டிருந்தேன். ஃபுல் ஷர்ட், ஃபுல் பேண்ட் போட்டு டக் இன் பண்ணிக்கிட்டு, கால்ல பாலிஷ் செஞ்ச ஷூ போட்டுக்கிட்டு காதுல இயர்ஃபோன் மாட்டிக்கிட்டு மொபைல் ஃபோன்ல பாட்டு கேட்டுக்கிட்டு நின்னுக்கிட்டிருந்தேன். போதாக்குறைக்கு முதுகுல லேப்டாப் பேக் வேற மாட்டிருந்தேன். வெள்ளை வேட்டியை மடிச்சி கட்டிக்கிட்டு ஒரு பச்சை கலர் துண்டைக் கழுத்துல போட்டுக்கிட்டு, அவ்வை ஷண்முகி படத்துல ஷண்முகி மாமி சொல்ற மாதிரி காதெல்லாம் குசுகுசுன்னு வெள்ளை முடியோட ஒரு பெரியவர் என்கிட்ட வந்தாரு.

பஸ் டெர்மினஸ் பக்கம் கையைக் காட்டி "உள்ள பஸ் இருக்குங்களா தம்பி"னு கேட்டார்.

பஸ் டெர்மினஸுக்குள்ள பஸ் இல்லாம எப்படி இருக்கும். இவரு எந்த நம்பர் பஸ்ஸைப் பத்தி கேட்கறாருன்னு நெனச்சிக்கிட்டே என் காதுல மாட்டிருந்த இயர் ஃபோனைக் கழட்டிட்டு கொஞ்சம் குனிஞ்சு கேட்டப்போ தான் அவர் கேட்டது தெளிவா காதுல விழுந்தது "உள்ளுக்குள்ள கக்கூஸ் இருக்குங்களா தம்பி"

"உள்ளே போய் கேட்டு பாருங்க" அப்படின்னேன். அதுக்கப்புறம் பஸ் வந்தது, நான் அதுல ஏறி ஆஃபிசு போயிட்டேன்.

ஆஃபிஸ் முடிஞ்சு நண்பர் ஒருத்தர் தன்னோட கார்ல அடையாறுல டிராப் பண்ணார். கார்ல CDல எதோ பாட்டு ஓடிட்டிருந்தது. அது புடிக்காம எஃப் எம் ரேடியோ வச்சாரு. சூரியன் எஃப் எம்ல புதுசா சினிமா நகைச்சுவை காட்சிகளின் ஒலி வடிவத்தை ஒலிபரப்பறாங்க போல. சொன்னா நம்ப மாட்டீங்க. அவரு ரேடியோ வச்ச நேரம் "என்ன பாத்து ஏண்டா அந்த கேள்வியைக் கேட்டே? இத்தனை பேரு இருக்காங்கல்ல அவங்களை எல்லாம் கேட்டிருக்கலாம்ல? அது ஏண்டா என்னை பாத்து கேட்டே? ஒரு வித்வானைப் பாத்து கேக்கற கேள்வியாய்யா இது"ன்னு செந்திலைக் கவுண்டர் திட்டிக்கிட்டிருந்தாரு. அதை கேட்டுட்டு அப்படியே எனக்கு புல்லரிச்சு போச்சு.

****************************************************

தேசதுரோக கேசுங்கிற சந்தேகத்துல தில்லி போலீஸ் என்னை விசாரிச்சு இன்னையோட சரியா எட்டு வருஷம் முடியுதுங்க. "தேச துரோக கேஸ் அளவுக்கெல்லாம் நான் வர்த் இல்லைய்யா"ன்னு எவ்வளவோ சொல்லியும் நம்ப மறுத்துட்டாங்க. இப்போ பாருங்க அதை பத்தியெல்லாம் பதிவெழுதி பெருமை பட்டுக்க வேண்டியிருக்கு?

****************************************************

என் தம்பி(எங்க சித்தி பையன்) அவனுக்கும் எனக்கும் 18 வய்சு வித்தியாசம்னு ஏற்கனவே சொல்லிருக்கேன். அவன் ஆரம்பத்துலேருந்து வட இந்தியாவுலேயே செண்ட்ரல் ஸ்கூல்ல படிச்சதுனால அவனுக்குத் தமிழ் அதிகமா தெரியாது. வீட்டுல நல்லா தமிழ் பேசுவான்னாலும் சில செந்தமிழ் வார்த்தைகள் எல்லாம் சொன்னா அவனுக்குப் புரியாது. சில வருஷங்கள் முன்னாடி வரைக்கும் அவனை வலுக்கட்டாயமா உக்கார வச்சி - "டேய்! இப்ப நீயே இருக்குறே...நாளைக்கே நீ படிச்சி வளர்ந்து பெரியவனாகி நம்ம நாட்டோட பிரதம மந்திரியாவோ, முதல் குடிமகனாவோ ஆயிட்டேன்னு வை, அப்போ நம்மளோட சமூகத்துல மலிந்து கிடக்கிற கொடுமைகளையும் மூட பழக்க வழக்கங்களையும் போக்குறதுக்காகவும், மத நல்லிணக்கம் ஏற்படறதுக்காகவும் நீ என்ன பண்ண போறே"ன்னு கேப்பேன். அவனும் "மத நல்லிணக்கம்னா என்னண்ணா?" அப்படின்னுவான். நானும் எதோ எனக்கு தெரிஞ்ச அளவுக்கு லைட்டா விளக்கம் கொடுப்பேன். அவனும் யோசிச்சு பாத்துட்டு "தெரியலியேண்ணா" அப்படின்னுவான். "ஒரு இந்திய நாட்டு பிரஜையா இருந்துக்கிட்டு உன்னை வளர்த்து ஆளாக்குன சமுதாயத்துக்காக ஒன்னும் செய்யாம தெரியலியேன்னு பதில் சொல்றியே. தெரியலியேங்கிறதெல்லாம் ஒரு பதிலாடா"ன்னுவேன்.

நான் இந்த மாதிரி அவனை பாக்கறப்பெல்லாம் கேக்க ஆரம்பிச்சதை பாத்து கொஞ்ச நாள்ல அவனும் உஷாராயிட்டான். நான் "இப்ப நீயே இருக்கறே" அப்படின்னு ஆரம்பிச்சாலே "அண்ணா அம்மா கூப்பிடறாங்க, தண்ணி தாகம் எடுக்குது" அப்படின்னுட்டு ஓடிடுவான். ஓட முடியாத படி இக்கட்டான சூழ்நிலையில மாட்டிக்கிட்டான்னா "ஏழைகளுக்கு உதவி செய்வேன்" அப்படின்னுவான். "என்ன உதவிடா"ன்னு நானும் குடைஞ்சா "வயசான பாட்டிகளுக்கெல்லாம் இலவசமா கண்ணாடி வாங்கி தருவேன், ஸ்கூல்ல படிக்கிற பசங்களுக்கெல்லாம் இலவசமா புக்ஸ் வாங்கி தருவேன்" அப்படின்னு எதாச்சும் சொல்லிட்டு ஓடிடுவான்.

சமீபத்துல ஒரு நாள் பஸ்சுல ஜன்னலோர சீட்டுல அவன் உக்காந்துருந்தான், அவன் பக்கத்துல நான். தப்பிச்சு ஓட முடியாத படி என் கஸ்டடிக்குள்ள இருந்தான். மேலே கேட்ட மாதிரியே ஒரு கேள்வி கேட்டேன். "அண்ணா! ஏற்கனவே மெட்ராஸ்ல வெயில் ரொம்ப அதிகமா இருக்குது. நீங்க வேற வறுத்தெடுக்காதீங்க" அப்படின்னான்.

இந்த காலத்து பசங்க எவ்வளவு சீக்கிரம் பெரியவங்களாயிடுறாங்க? இல்லீங்களா? :)

****************************************************

ஆறு வருஷ கொடுமைக்கு கடைசியா ஒரு நல்ல விடிவுகாலம் கெடைக்கப் போவுதுன்னு நெனக்கிறேன். கன்னியாஸ்திரி வேடத்துல இருக்கற அபி ஆதியைப் பாத்து "டேய்! இது வரைக்கும் நான் உன் கிட்ட சண்டை கூட போட்டதில்லைடா. நான் செஞ்சதெல்லாம் தற்காப்பு தான். இனி நடக்கப் போறது தான் போர்" அப்படீங்கறாங்க. உடனே ஆதியும் "இறுதிக்கட்ட போரா"ன்னு கேக்கறாரு. அபியும் "ஆமாம்டா இறுதிக் கட்ட போர்"னு கன்ஃபர்ம் பண்ணியிருக்காங்க. ஒரு மூனு மாசத்துக்கு முன்னாடியே கோலங்கள் இயக்குனர் திருச்செல்வத்துக்கு சினிமா இயக்கற வாய்ப்பு கெடைக்கிருக்குன்னு குங்குமம் பத்திரிகைல போட்டுருந்துச்சு. அதனால சீக்கிரமே கோலங்கள் சீரியலை முடிக்கப் போறதாவும் சொல்லிருந்தாங்க. இதை உண்மைன்னு நம்பி கோலங்களால் பாதிக்கப்பட்ட என்னை போன்ற இன்னொரு அலுவலக நண்பர் கிட்ட இந்த விஷயத்தைச் சொன்னேன். அவரும் சந்தோஷமா இந்த விஷயத்தைப் போய் வீட்டுல சொல்லி வாங்கி கட்டிக்கிட்டாராம். இப்போ அபியும் ஆதியுமே கன்ஃபர்ம் பண்ணிட்டாங்க...இறுதிக் கட்ட போர்னு. எப்படியும் இன்னும் ஒரு வருஷத்துல இறுதிக் கட்ட போர் முடிஞ்சிடாதுங்க?

****************************************************

Saturday, July 18, 2009

இதையெல்லாம் சொன்னா எனக்கு கிறுக்கு புடிச்சுருக்கும்பாங்க

நான் கூட ஒரு ஸ்லம்டாக் மில்லியனேர் தாங்க. உனக்கு எந்த போட்டியில ஒரு கோடி ரூபாய் கெடைச்சுதுன்னெல்லாம் கேக்கப்பிடாது. அந்த படத்துல கதாநாயகனைக் கேக்கற கேள்விகளுக்கும் அவன் வாழ்வில் நிகழ்ந்த ஏதோ ஒரு சம்பவத்துக்கும் தொடர்பிருப்பதாக இருக்கும். அதனால அக்கேள்விகளுக்கு அவன் சரியான பதில் சொல்வான். ஹாட் சீட்ல உக்கார வைச்சு யாரும் என்னை கேள்வி எல்லாம் கேக்கலைன்னாலும், எனக்கு நியாபகத்துல இருக்கற சில பல பிஸ்கோத்து விஷயங்களுக்கும், நான் என் வாழ்வில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்ட கேட்ட சில நிகழ்வுகளுக்கும் தொடர்பு இருக்கிறது. அப்படிப்பட்ட பிஸ்கோத்து விஷயங்கள் எனக்கு இன்னமும் நியாபகம் இருக்கக் காரணமாக இருந்த அந்நிகழ்வுகளை நினைவு கூறும் ஈக்வலி பிஸ்கோத்துத் தனமான பதிவு இது.

1. 2004ஆம் ஆண்டில் ஒரு நாள்னு நினைக்கிறேன். அப்போ நான் டெல்லியில இருந்தேன். ஞாயித்துக்கிழமை காலை டிபன் சாப்பிட்டுட்டு டிவி போட்டா சன் டிவில சப்தஸ்வரங்கள் ஓடிக்கிட்டிருக்கு. அந்த நிகழ்ச்சியில ஒரு பொண்ணு பாடிக்கிட்டு இருந்துச்சு. அதை பாத்ததும் எனக்கு ஆச்சரியம். அந்த பொண்ணோட முகம் ரொம்ப பரிச்சயமா இருந்துச்சு. சின்ன வயசுல எங்கேயோ பாத்துருக்கோமேன்னு நெனச்சிட்டு இருக்கும் போதே அந்த பொண்ணோட பேரும் சட்டுன்னு நியாபகம் வந்துடுச்சு. அப்படியே கொசுவத்தியை ஒரு பதினைஞ்சு வருஷம் பின்நோக்கி சுத்துனேன். அப்போ நாங்க சென்னையில் திருவல்லிக்கேணியில் வாழ்ந்துட்டு இருந்தோம். பள்ளிக்கூடம் முடிஞ்சதும் மாலை வேளைகளில் அக்பர் சாகிப் தெருவில் மசூதிக்கு எதிரில் இருந்த திருவல்லிக்கேணி ஹிந்தி வித்யாலயாவில் ஹிந்தி வகுப்புகளுக்குப் போயிக்கிட்டிருந்தேன். அந்த வகுப்புகள்ல தான் அந்த பொண்ணும் ஹிந்தி படிச்சுது. நான் அப்போ ஏழாவது படிச்சிட்டு இருந்தேன். அந்த பொண்ணு அப்போ அஞ்சாவது படிச்சிட்டுருக்கும்னு நெனக்கிறேன். ஆனா அந்த பொண்ணோட பேரும் முகமும் நியாபகம் இருந்ததுக்குக் காரணம் 'ராஷ்ட்ரபாஷா' வகுப்பில் ரெண்டு பேரும் ஒன்னா படிச்சோம்ங்கிறது இல்லை. அங்கே சுந்தர்ராஜன் சார் சுந்தர்ராஜன் சார்னு ஒரு மாஸ்டர் இருந்தார். அரசாங்கப் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டு மாலை வேளைகளில் ஹிந்தி வகுப்பு எடுக்கிறதுக்காகத் தினமும் கே.கே.நகர்லேருந்து திருவல்லிக்கேணி வருவார். அவரை மாதிரி ஒரு பர்ஃபெக்ஷனிஸ்டைப் பாக்க முடியாது. தான் எடுக்கிற வகுப்புகளுக்கான நோட்ஸை ரொம்ப சிரத்தை எடுத்து எழுதி வச்சிருப்பாரு. ஒவ்வொரு பாடத்துக்கும் ஒவ்வொரு நம்பர் கொடுத்து மாணவர்களுக்கு அந்த நோட்ஸை விநியோகம் பண்ணறதுக்குன்னு ஒரு சிஸ்டம் வச்சிருப்பாரு.

ஹிந்தி வகுப்புகளை மிஸ் பண்ணாம எல்லா நோட்ஸ்களையும் ஒழுங்கா எழுதி வச்சிருந்தேன். ஒரு நாள் நான் மேல சொன்ன அந்த பொண்ணு என்கிட்ட வந்து "போன ரெண்டு வாரமா எனக்கு ஃபீவர். அதனால நான் க்ளாஸுக்கு வரலை. உங்க நோட்ஸை வீட்டுக்குத் தந்தீங்கன்னா எழுதிட்டுத் தரேன்"னு சொல்லி வாங்கிக்கிட்டு போச்சு. நான் எழுதி வச்சிருந்த அந்த நோட்டு புத்தகத்தை வாங்கிட்டுப் போன அந்த பொண்ணு அதுக்கப்புறம் ஒரு ரெண்டு வாரத்துக்கு க்ளாஸுக்கு வரலை. மாஸ்டர் ஒவ்வொரு க்ளாஸ்லயும் கொடுக்கற நோட்ஸை என்னால எழுத முடியலை. சில பாடங்களை நான் வேற நோட்ல எழுதி வைக்க வேண்டியதாப் போச்சு. அதுக்கு மேல நான் கொடுத்த் என் நோட்புக்குக்கு என்னாச்சோங்கிற கவலை வந்துடுச்சு. சரின்னுட்டு மாஸ்டர் கிட்ட அந்த பொண்ணோட வீட்டு விலாசத்தை வாங்கிக்கிட்டு அவங்க வீட்டுக்கே போய் கேக்கலாம்னு முடிவு பண்ணேன். அவங்க வீடும் திருவல்லிக்கேணியில் பெரிய தெருவுல தான் இருந்துச்சு. பக்கத்துல தானே இருக்குன்னு க்ளாஸ் ஆரம்பிக்கிறதுக்கு ஒரு கால் மணி நேரத்துக்கு முன்னாடி அவங்க வீட்டுக்குப் போனேன். மணி ஒரு அஞ்சே முக்கால் இருக்கும். அவங்க வீட்டுல அவங்க அப்பா தான் இருந்தார். நான் அவங்க வீட்டுக்கு வந்த காரணத்தைச் சொன்னேன். "She is sleeping. You please wait. I will call her" அப்படின்னாரு. அப்புறம் "Come on my Child, some one has come to see you" அப்படின்னு தன் மகளைக் கூப்பிட்டாரு.

இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல்ல இங்கிலீஷ் பேசச் சொன்னாலே நானெல்லாம் பேசுனதில்லை. வீட்டுல கூட இங்கிலீஷ் பேசறவங்க இருக்காங்கன்னு நான் கேள்வி பட்டுருக்கேன். ஆனா அப்போ தான் முதன்முறையா பார்த்தேன். அதோட அப்பல்லாம் மதியானம் தூங்கற பழக்கம் எனக்கு கிடையாது. தூங்கவும் எங்க வீட்டுல விட மாட்டாங்க. "விளக்கு வைக்கிற நேரத்துல கை கால் கழுவிட்டு சாமி கும்பிட்டுட்டு படிக்க ஒக்காந்துடணும்" இது எங்கம்மா தடிப்பசங்க எங்க ரெண்டு பேருக்கும் போட்ட ரூல். கிட்டத்தட்ட ஆறு மணி ஆகுது, ஹிந்தி க்ளாசுக்கு வேற நேரம் ஆகுது, தூங்கிட்டுருக்கற பொண்ணை அவங்க அப்பா இப்படி கொஞ்சி கொஞ்சி கூப்பிடறாரேன்னு எனக்கு ஒரே ஆச்சரியம். அவங்க அப்பா கூப்பிட்டதும் கண்ணைக் கசக்கிட்டே அந்த பொண்ணு ஷிம்மீஸோட கீழே இறங்கி வந்துச்சு. இங்கே ஒரு கிளை கதை சுத்திக்கறேன். இந்த ஷிம்மீஸ் பத்தியெல்லாம் உனக்கு எப்படி தெரியும்னு நீங்க கேக்கறது எனக்கு புரியுது. சின்ன வயசுல வீட்டுக்குப் பக்கத்துல இருக்கற பொண்ணுங்க யாராச்சும் வீட்டுக்கு வந்தா எங்கம்மா "போம்மா! போய் கவுன் மாட்டிக்கிட்டு வா. ஷிம்மீஸோடயா வெளியில வர்றது"ன்னு கேப்பாங்க. பனியனோட நாங்க வெளியில போனாலும் எங்க ரெண்டு பேருக்கும் திட்டு தான். ஸோ அப்போ தான் தெரியும் வெள்ளை கலர்ல இருக்கற அந்த கவுன் பேரு தான் ஷிம்மீஸ்னு. இங்கே இன்னொரு கிளை கதை சுத்திக்கிறேன். சமீபத்துல ஒரு நாள் எனக்கு ஒரு சந்தேகம். இந்த ஷிம்மீஸ்ங்கிற வார்த்தைக்கு ஸ்பெல்லிங் என்னன்னு. அது ஆங்கில வார்த்தையா தமிழ் வார்த்தையான்னு ஒரு சந்தேகம். எல்லாம் ஒரு பொது அறிவு சந்தேகம் தான் :)

Shimmy, Shimmies அப்படின்னு போட்டு கூகிள்ல தேடுனா ரிசல்டுகள் வந்தது. அப்போ முதலை படம் போட்ட நான் வச்சிருந்த லெக்காஸ்ட்(Lacoste) டி-ஷர்ட் பத்தியும் நினைவு வந்துச்சு. அந்த சட்டையில 'La Chemise Lacoste' அப்படின்னு எழுதிருக்கும். நான் அதை பல நாள் 'லா கெமிஸ் லெக்காஸ்ட்'னு தான் படிச்சிருக்கேன். ஆனா பிரெஞ்சு மொழியில 'Che' னு ஆரம்பிச்சா அதை 'ஷே'னு படிக்கனும்னு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் செவாலியே விருது வாங்கனப்போ தெரிஞ்சுக்கிட்டேன். Chemise அப்படிங்கறதை 'ஷெமிஸ்' னு படிக்கலாம்னு தோனுச்சு. ஷெமிஸ்னா என்னான்னு www.dictionary.comல தேடியதும் "A woman's loose fitting shirt like undergarment'னும் பழைய ஃபிரெஞ்சு மொழியில் "Shirt" அப்படின்னும் தெரிஞ்சது. அநேகமா Shimmy, Shimmies சொற்களுக்கு Chemise என்ற ஃபிரெஞ்சு சொல் மூலமா இருந்துருக்கலாம் போலிருக்கு. திரும்பவும் இப்போ மெயின் கதைக்கு வருவோம். அதுக்கப்புறம் என்னோட நோட் புத்தகத்தை வாங்கிக்கிட்டு நான் வந்துட்டேன். அப்புறம் இன்னொரு விஷயம் நான் IITல படிச்சிட்டு இருந்தப்போ என் பேரைப் போட்டு கூகிள்ல தேடுனா முதல் பத்து பக்கங்கள்ல ஐஐடி வலைதளத்தில் என் பேரு வரும். அதே நெனப்புல...சரி இந்த பொண்ணு சப்தஸ்வரங்கள்ல எல்லாம் பாடிருக்கே ஒரு வேளை பிரபலம் ஆகிடுச்சோன்னு ஒரு நாள் கூகிள்ல தேடுனேன். மறுபடியும் ஒரு பொது அறிவுக்காகத் தான்:) பாத்தா விஜய் ஆண்டனி இசையில் சுக்ரன் படத்தில் அந்த பொண்ணோட அதே பேரு அதே இனிஷியல் உள்ள ஒருத்தங்க "உச்சி முதல் பாதம் வரை" அப்படின்னு ஒரு பாட்டு பாடிருக்காங்க. அநேகமா ரெண்டு பேரும் ஒன்னாத் தான் இருப்பாங்கன்னு நெனக்கிறேன்.

http://www.thenisai.com/tamil/songs-music/sukran-tamil-songs.htm

2. காதலன் படத்துல 'ஊர்வசி ஊர்வசி' பாட்டுல பிரபு தேவா அண்ணா மேம்பாலத்துல ஒரு பஸ் மேலே ஏறி ஆடிக்கிட்டு வருவாரு பாத்துருக்கீங்களா? சென்னையில் ஓடற பேருந்துகள்ல ஒவ்வொரு பேருந்துக்கும் சைடுல அந்த பேருந்தோட டிப்போ எண் எழுதிருக்கும். பிரபு தேவா ஆடிக்கிட்டு வந்த அந்த பஸ்ஸோட டிப்போ எண் 'BF505'. அடுத்த வாட்டி ஊர்வசி ஊர்வசி பாட்டு பாத்தீங்கன்னா கவனிச்சு பாருங்க. அந்த பேருந்து அப்போல்லாம் பட்டிணப்பாக்கத்துலேருந்து சுங்கச்சாவடி போற 'C6' என்ற வழித்தடத்தில் ஓடிக்கிட்டு இருந்துச்சு. இப்போ அந்த வழித்தடமே இல்லை. பிற்காலத்துல A, B, Cஅப்படின்னு டிப்போ பேரைக் குறிக்கிறதுக்காகப் பயன்படுத்தப் பட்ட எழுத்துகள் ரெண்டெழுத்துகளா மாத்தப் பட்டது. அதன்படி அடையார் டிப்போவைச் சேர்ந்த அந்த பஸ் 'ADF505'ஆக மாற்றப்பட்டது. இது எல்லாம் நியாபகம் இருக்கறதுக்குக் காரணம் நான் ஒரு நாள் ஸ்கூல் முடிச்சிட்டு மயிலை இராதாகிருஷ்ணன் சாலையிலிருக்கும் எல்லோ பேஜஸ் பேருந்து நிறுத்ததில் இருந்து திருவல்லிக்கேணி பெரிய தெரு வர்றதுக்கு 45B வழித்தடம் கொண்ட பஸ்ஸில் நின்னுக்கிட்டு வந்துட்டு இருந்தேன். எங்க பஸ்ஸுக்கு முன்னாடி சைக்கிளில் ஒரு முஸ்லிம் பெரியவர் போய்க்கிட்டிருந்தார். அவரு ராணி மேரி கல்லூரி கிட்டே இடது பக்கம் கடற்கரை சாலையில் திரும்பினார். அப்போ கடற்கரை சாலையில் வானொலி நிலையம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து புறப்பட்டு C6 வழித்தடத்தில் அந்த BF505 டிப்போ எண் கொண்ட பேருந்து வேகமாக வந்தது. சைக்கிளில் போய்க்கிட்டிருந்த அந்த பெரியவரைப் பின்னாளில் இருந்து அந்த பஸ் இடித்தது. இதை நான் 45B பஸ்ஸில் நின்னுக்கிட்டு பாத்துட்டு இருந்தேன். இதெல்லாம் ஏன் நியாபகம் இருக்கு? இதனால யாருக்கு என்ன பயன்னு தெரியலை. ஆனா இந்த மாதிரி டிரிவியா(trivia) விஷயங்கள் மனசுல நல்லா நிக்குது அது ஏன்னு தெரியலை.

3. இன்னொரு விநோதமான பழக்கம் ஒன்னு எனக்கு இருக்கு. யாரையாச்சும் ஒருத்தங்களைப் பாத்தா இவங்க இந்த பிரபலம் மாதிரி இருக்காங்களே, இல்லை ஏற்கனவே பாத்த இன்னொருத்தர் மாதிரி இருக்காங்களேன்னு தோனும். இது மாதிரி தான் நிஜ வாழ்க்கையில் கிழக்கே போகும் ரயில் ராதிகா, டிங்கிள் சிறுவர் புத்தகத்தில் வரும் சுப்பாண்டி, லிட்டில் மெர்மேய்டு இவங்களை எல்லாம் பாத்துருக்கேன்:) 2000 ஆண்டுல ஒரு நாள், அப்போ நான் சம்மர் ப்ராஜெக்ட் செஞ்சிக்கிட்டு இருந்தேன். தில்லி கரோல் பாக்ல இருக்கற ஒரு அலுவலகத்துக்குத் தான் தினமும் போவேன். அங்கே ஒரு சர்தார்ஜி ஒருத்தர் வந்திருந்தாரு. அவரு நான் அந்த ப்ராஜெக்ட் செய்திட்டு இருந்த அந்த கம்பெனியோட வாடிக்கையாளர். அவரைப் பாத்ததும் இவரை எங்கேயோ பாத்துருக்கேன்னு தோனுச்சு. ரொம்ப யோசிச்சிப் பாத்ததுல எங்களுக்கு "Structural Engineering" வகுப்பு எடுத்த எங்க பேராசிரியர்மாதிரியே இருந்தாரு அந்த கறுப்பு சர்தார்ஜி :) இதே மாதிரி நான் இந்தூர்ல இருக்கும் போது தனசேகர்னு ஒரு பையன் என் கூட ஆஃபிசுக்கு பஸ்ல வருவான். பஸ்ல வரும் போது தான் அவனோட பழக்கம். தமிழ் பையன். ஆனா எங்க கம்பெனிக்கு கன்சல்டண்டா சென்னையிலிருந்து வந்துருந்தாப்பல. 2006 வரைக்கும் டச்ல இருந்தோம். அதுக்கப்புறம் டச் விட்டுப் போச்சு. சமீபத்துல திடீர்னு ஒரு நாள் என் சென்னை நம்பருக்கு ஃபோன் பண்ணான். எனக்கு பயங்கர ஆச்சரியம். ஏன்னா நான் அந்த இடைப்பட்ட காலத்துல சித்தூர்கட், அகமதாபாத், பெங்களூர்னு பல இடங்களில் இருந்தேன். ஆனா அதை எல்லாம் மீறி சரியா என்னை என் சென்னை நம்பர்ல புடிச்சான். 'நான் தனசேகர் பேசறேன்'ன்னு சொன்னதும் எனக்கு சட்டுன்னு யாருன்னு புரியலை. மேலே முதல் வரியில இருக்கற டெக்னாலஜியை உபயோகிச்சப்புறம் தான் நினைவு வந்தது - அந்த பையன் யாருன்னு. அந்த பையனோட நான் தொடர்பு படுத்தி வச்சிருந்த முகம் பழைய நடிகை சுமித்ராவோடது. அச்சு அசலா சுமித்ராவுக்கு மீசை வச்ச மாதிரியே இருப்பான். சிரிச்சான்னா சுமித்ரா மாதிரியே கன்னத்துல குழி விழும். "ஏய்! சுமித்ரா எப்படிப்பா இருக்கறே"ன்னு நான் கேட்டதும் "அட கடவுளே! இன்னும் நீங்க அந்த பேரை மறக்கலியா"அப்படின்னான். உங்கள்ல யாருக்காச்சும் இந்த மாதிரி தோணியிருக்கா?

4. இது என்னோட இருநூறாவது பதிவு. நூறாவது பதிவு போட்டது 2006ல. முதல் நூறு போட ஆறு மாசம், அடுத்த நூறு போட மூனு வருஷம். இதையெல்லாம் சொன்னா எனக்கு கிறுக்கு புடிச்சுருக்கும்பாங்களோ?

Thursday, July 09, 2009

Indian Short Stories : The Postmaster

ஒன்னு கவனிச்சிருக்கீங்களா? நம்ம பக்கத்துல இருக்கற சில விஷயங்களோட அருமை, நாம அதுக்குப் பக்கத்துல இருக்கறப்ப புரியறதில்லை. அந்த விஷயம் நம்மை விட்டு தூரம் போகும் போதோ இல்லை நாம தூரம் போயிடும் போதோ தான் அதோட அருமை புரியுது. இது ஒன்னும் பெரிய கண்டுபிடிப்பெல்லாம் இல்லை, எல்லாருக்கும் தெரிஞ்ச சாதாரணமான மேட்டர் தான். சின்ன வயசுல நூலகத்துலேருந்து எடுத்துட்டு வந்து புத்தகங்கள் படிப்பேன் - பெரும்பாலும் காமிக்ஸ், கதை புத்தகங்கள் தான். அதுவும் வெளிநாட்டு எழுத்தாளர்கள் எழுதுன ஆங்கில கதைகள் தான். அப்புறமா எப்பவோ எப்படியோ ஆர்.கே.நாராயணன் பத்தித் தெரிஞ்சிக்கிட்டேன். அதுக்கப்புறம் அவர் என்னை வெளிநாட்டு எழுத்தாளர்கள் பக்கம் போக விடலை. கதைகள் படிக்கிறதுலயும் சிறுகதைகள்னா எனக்கு ரொம்ப பிடிக்கும், தொடர்கதைகள்/நாவல்களில் அவ்வளவா விருப்பம் இருந்ததில்லை. லேண்ட்மார்க், ஒடிசி போன்ற பெரிய புத்தகக் கடைகளுக்குப் போனோம்னா 'Indian Writing' அப்படின்னே ஒரு தனிப் பகுதி இருக்கும். அப்படியே கதைகள் படிக்கனும்னா 'Indian Writing' பகுதியில் இருக்கும் இந்திய எழுத்தாளர்களால் எழுதப்பட்ட கதைகளைத் தான் நான் விரும்பிப் படிக்கிறது. ஏன்னா இந்த கதைகள்ல இருக்கற கதாபாத்திரங்களோடவும், காட்சிகளோடவும் நம்மை நாமே தொடர்பு படுத்திப் பாத்துக்க முடியும்.

எனக்கு ரொம்ப பிடிச்ச கதைகள்ல ஒன்னு இரவீந்திரநாத் தாகூர் அவர்களால் வங்காள மொழியில் எழுதப்பட்டு, ஆங்கிலேயர் ஒருவரால் மொழிபெயர்க்கப் பட்ட "The Postmaster" என்ற கதை. ஆங்கில கதை தான்னாலும் எல்லாரும் ரசிக்கனும்ங்கிறதுக்காக நான் என் தமிழ் வலைப்பூவில் இதை போடறேன். இந்த கதை மெட்ரிகுலேஷன் பாடத் திட்டத்தில்(நான் படிச்ச காலத்தில்), எட்டாம் வகுப்பு ஆங்கில புத்தகத்தில் ஒரு பாடமாக இருந்தது. அப்போ அந்த கதை என் மனசைத் தொட்ட மாதிரி எனக்கு தோனலை. ஆனா ஏனோ எனக்கு நினைவில் இருந்து, பல வருடங்கள் கழித்து அந்த கதையின் அருமை புரிந்து, அந்த ஒரு கதைக்காக இரவீந்திரநாத் தாகூர் அவர்களின் கதைத் தொகுப்பையே வாங்க வைத்தது.
கதை என்னன்னு சுருக்கமாச் சொல்லிடறேன். கல்கத்தாவிலிருந்து உலாப்பூர் எனும் சின்னஞ்சிறு கிராமத்துக்கு போஸ்ட் மாஸ்டராக மாற்றம் பெற்று வருகிறார் கதையின் நாயகனான போஸ்ட்மாஸ்டர். சிறிய கிராமம் என்பதால் அங்கே அவருக்கு அவ்வளவா வேலையில்லை, அதோட அவருக்கு அந்த இடம் பிடிக்கவும் இல்லை. அந்த கிராமத்தில் ரத்தன் என்ற பேருடைய ஒரு பதின்மூன்று வயது மதிக்கத் தக்க பெண் இருந்தாள். யாருமில்லா அனாதை பெண் அவள். போஸ்ட்மாஸ்டருக்கு எடுபிடியாக சில வேலைகள் செய்து கொண்டு தபால் அலுவலகம் அருகேயே வசித்து வந்தாள். அது வரை தான் யாரிடமிருந்தும் கண்டிராத அக்கறையை போஸ்ட்மாஸ்டர் தன் மீது செலுத்தக் கண்டு அவர் மீது மிகுந்த மரியாதை கொள்கிறாள். போஸ்ட்மாஸ்டர் அவருக்கு எழுதப் படிக்கக் கற்றுத் தருகிறார். திடீரென போஸ்ட்மாஸ்டருக்கு உடம்பு சரியில்லாமல் போகிறது. ஒரு தாயாய், தங்கையாய் கூடவே இருந்து அவரை குணப்படுத்துகிறாள் ரத்தன். உடம்பு சரியானதும் அவ்வூரில் இருந்து மாற்றம் வேண்டி மேலிடத்துக்கு விண்ணப்பிக்கிறார் போஸ்ட்மாஸ்டர். அவருடைய விண்ணப்பத்தை மேலிடம் நிராகரித்த காரணத்தினால், தன் வேலையை ராஜினாமா செய்து விட்டு கல்கத்தாவுக்குத் திரும்ப உத்தேசிக்கிறார். அப்போது தன்னையும் அவருடன் கூட்டிச் செல்லுமாறு அந்த சின்ன பெண் வேண்டுகிறாள். 'அது எப்படி முடியும்' என்று கேட்டுவிட்டு போஸ்ட்மாஸ்டர் சென்று விடுகிறார். கதை சுருக்கத்தை எழுதும் போதே உணர்ச்சிகள் மேலிடுகிறது. அதனால் ஆங்கிலத்தில் கதையைப் படிச்சிப் பாருங்க. எனக்கு தோன்றியதை அங்கங்கே சொல்லுகிறேன்.

For his first job, the postmaster came to the village of Ulapur. It was a very humble village. There was an indigo-factory near by, and the British manager had with much effort established a new post office.

The postmaster was a Calcutta boy - he was a fish out of water in a village like this. His office was in a dark thatched hut; there was a pond next to it, scummed over with weeds, and jungle all around. The indigo agents and employees had hardly- any spare time, and were not suitable company for an educated man. Or rather, his Calcutta background made him a bad mixer - in an unfamiliar place he was either arrogant or ill-at-ease. So there was not much contact between him and the residents in the area.

But he had very little work to. do. Sometimes he tried to write poems. The bliss of spending one's life watching the leaves trembling in the trees or the clouds in the sky - that was what the poems expressed. God knew, however, that if a genie out of an Arab tale had come and cut down all the leafy trees overnight, made a road, and blocked out the sky with rows of tall buildings, this half-dead, well-bred young man would have come alive again.

The postmaster's salary was meagre. He had to cook for himself, and an orphaned village-girl did housework for him in return for a little food. Her name was Ratan, and she was about twelve or thirteen. It seemed unlikely that she would get married. In the evenings, when smoke curled up from the village cowsheds, crickets sounded in the bushes, and a band of intoxicated Baul singers in the next village sang raucously to the clapping of their hands, the postmaster would sit on his dark veranda and let his poetic feelings be stirred by the stirring of the leaves. Then he would go inside, light a dim lamp in a corner of the room and call for Ratan. Ratan would be waiting at the door for this, but she did not come at the first call - she would call back, 'What is it, Dadababu, what do you want?'

'What are you doing?' the postmaster would say.

'I must go and light the stove in the kitchen

'You can do your kitchen work later. Get my hookah ready for me.'

Soon Ratan came in, puffing out her cheeks as she blew on the bowl of the hookah. Taking it from her, the postmaster would say abruptly, 'So, Ratan, what do you remember about your mother?' She would talk for a long time: some things she remembered, others she did not. Her father loved her more -than her mother did, but she did not remember much about him. He used to come home in the evening after working hard all day, and one or two evenings were clearly etched in her memory. As she talked, Ratan edged nearer to the postmaster, and would end up sitting on the ground at his feet. She remembered her little brother: one distant day, during the rainy season, they had stood on the edge of a flooded pit and played at catching fish with sticks broken off trees - this memory was far more vividly fixed in her mind than many more important things. Sometimes these conversations went on late into the night, and the postmaster then felt too sleepy to cook. There would be some vegetable curry left over from midday, and Ratan would quickly light the stove and heat some chapati: they made their supper out of that.

Occasionally, sitting on a low wooden office-stool in a corner of his large hut, the postmaster would speak of his family - his younger brother, mother and elder sister - all those for whom his heart ached, alone and exiled as he was. He told this illiterate young girl things which were often in his mind but which he would never have dreamt of divulging to the indigo employees and it seemed quite natural to do so. Eventually Ratan referred to the postmaster's family - his mother, sister and brother - as if they were old friends. She even formed affectionate imaginary pictures of them in her mind.

பல இடங்களிலும் இக்கதையை நம்மோடு தொடர்பு படுத்திக் கொள்ள முடிகிறது. மேலே உள்ள பத்தியும் அத்தகையது தான். நமக்கு தெரிந்தவர்கள் தம்முடைய உறவினர்களைப் பற்றி நம்மிடம் சொல்லும் போது, அவர்களைப் பற்றிய ஒரு உருவகத்தை மனதில் வைத்துக் கொள்வோம். "எங்க சித்தின்னா எனக்கு உயிர்" என்று நம் நண்பன் நம்மிடம் சொன்னால். ஒரு கனிவான பெண்ணின் முகம் நம் மனதில் உருவகப் படுத்திப் பார்ப்பதை நம்மால் தடுக்க முடியாது. போஸ்ட்மாஸ்டரின் குடும்பத்தைப் பற்றிய உருவகங்களையும் தன் மனதில் உருவாக்கிக் கொள்கிறாள் ரத்தன்.

It was a fine afternoon in the rainy season. The breeze was softly humid; there was a smell of sunshine on wet grass and leaves. Earth's breath - hot with fatigue - seemed to brush against the skin. A persistent bird cried out monotonously somewhere, making repeated and pathetic appeals at Nature's midday durbar. The postmaster had hardly any work: truly the only things to look at were the smooth, shiny, rain-washed leaves quivering, the layers of sun-whitened, broken-up clouds left over from the rain. He watched, and felt how it would be to have a close companion here, a human object for the heart's most intimate affections. Gradually it seemed that the bird was saying precisely this, again and again; that in the afternoon shade and solitude the same meaning was in the rustle of the leaves. Few would believe or imagine that a poorly paid sub-postmaster in a small village could have such feelings in the deep, idle stillness of the afternoon.

இயற்கையை இதை விட அழகாக வர்ணிக்க முடியுமா? மேலே உள்ள பத்தி ஒரு "reader's delight" என்றால் அது மிகையில்லை.

Sighing heavily, the postmaster called for Ratan. Ratan was at that moment stretched out under a guava tree, eating unripe guavas. At the sound of her master's call she got up at once and ran to him.

'Yes, Dadababu, you called?' she said, breathlessly.

'I'm going to teach you to read a little,' said the postmaster. He taught her daily at midday from then on, starting with the vowels but quickly progressing to the consonants and conjuncts.

During the month of Sraban, the rain was continuous. Ditches, pits and channels filled to overflowing with water. The croaking of frogs and the patter of rain went on day and night. It was virtually impossible to get about by road - one had to go to market by boat. One day it rained torrentially from dawn. The postmaster's pupil waited for a long time at the door, but when the usual call failed to come, she quietly entered the room, with her bundle of books. She saw the postmaster lying on his bed: thinking that he was resting, she began to tip-toe out again. Suddenly she heard him call ' her. She turned round and quickly went up to him saying, 'Weren't you asleep, Dadababu?'

'I don't feel well,' said the postmaster painfully. 'Have a look - feel my forehead.'

He felt in need of comfort, ill and miserable as he was, in this isolated place, the rain pouring down. He remembered the touch on his forehead of soft hands, conch-shell bangles. He wished his mother or sister were sitting here next to him, soothing his illness and loneliness with feminine tenderness. And his longings did not stay unfulfilled. The young girl Ratan was not a young girl now. From that moment on she took on the role of a mother, calling the doctor, giving him pills at the right time, staying awake at his bedside all night long, cooking him convalescent meals, and saying a hundred times, 'Are you feeling a bit better, Dadababu?'

கதையிலேயே மிகவும் பிடித்த இடம் எனக்கு மேலே உள்ள பத்தி தான். ஏனென்றால் இதை நானும் உணர்ந்திருக்கிறேன். தில்லியில் நான் மட்டும் தனியாக இருக்கும் போது என்றாவது உடம்பு சரியில்லாமல் போகும் போது அம்மா மென்மையாக நெற்றியைத் தொட்டுப் பார்த்து 'இப்போ ஜூரம் எப்படிப்பா இருக்கு'ன்னு கேட்டால் எப்படி இருக்கும் என்று தோன்றியதுண்டு. அவ்வேளைகளில் மேலே உள்ள இவ்வரிகளும் நினைவுக்கு வந்து விடும். அச்சமயங்களில் விழியோரங்களில் வடியும் நீர்த் துளிகளை என்ன செய்தாலும் நிறுத்து இயலாது.

Many days later, the postmaster got up from his bed, thin and weak. He had decided that enough was enough: somehow he would have to move from this place. He wrote at once to his head office in Calcutta, applying for a transfer on grounds of ill-health.

Released from nursing the postmaster, Ratan once again took up her normal place outside his door. But his call did not come for her as before. Sometimes she would peep in and see the postmaster sitting distractedly on his stool or lying on his bed. While she sat expecting his summons, he was anxiously awaiting a reply to his application. She sat outside the door going over her old lessons numerous times. She was terrified that if he suddenly summoned her again one day, the conjunct consonants would all be muddled up in her mind. Eventually, after several weeks, his call came again one evening. With eager heart, Ratan rushed into the room. 'Did you call, Dadababu?' she asked.

'I'm leaving tomorrow, Ratan,' said the postmaster.

‘Where are you going, Dadababu?'

'I'm going home.'

'When are you coming back?'

'I shan't come back again.'

Ratan did not question him further. The postmaster himself told her that he had applied for a transfer, but his application had been rejected; so he was resigning from his post and returning home. For several minutes, neither of them spoke. The lamp flickered weakly; through a hole in the crumbling thatched roof, rain-water steadily dripped on to an earthenware dish. Ratan then went slowly out to the kitchen to make some chapati. She made them with none of her usual energy. She kept stopping, turning things over in her mind. When the postmaster had had his meal, she suddenly asked, 'Dadababu, will you take me home with you?'

'How could I do that!' said the postmaster, laughing. He saw no need to explain to the girl why the idea was impossible.

All night long, whether dreaming or awake, Ratan felt the postmaster's laugh ringing in her ears. 'How could I do that!'

When he rose at dawn, the postmaster saw that his bath-water had been put out ready for him (he bathed according to Calcutta habits, in water brought in a bucket). Ratan had not been able to bring herself to ask him what time he would be leaving; she had carried the bath-water up from the river late at night, in case he needed it early in the morning. As soon as he finished his bath, the postmaster called her. She entered the room softly and looked at him without speaking, waiting for her orders. 'Ratan,' he said, 'I'll tell the man who replaces me that he should look after you as I have; you mustn't worry just because I'm going.'

No doubt this remark was inspired by kind and generous feelings, but who can fathom the feelings of a woman? Ratan had meekly suffered many scoldings from her master, but these kindly words were more than she could bear. The passion in her heart exploded, and she cried, 'No, no, you mustn't say anything to anyone - I don't want to stay here.' The postmaster was taken aback: he had never seen Ratan behave like that before.

ஏனோ தெரியவில்லை, காதல் கொண்டேன் திரைப்படத்தில் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதிய பாடல் வரிகள் தான் மேலே இருக்கும் வரிகளைப் படித்தால் மனதில் தோன்றுவது.

"காதல் இல்லை இது காமம் இல்லை
இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை"

அண்ணா என்று பொருள்பட 'தாதா' என்று ரத்தன் போஸ்ட்மாஸ்டரை அழைத்தாலும். இக்கதையில் சொல்லப்பட்டிருக்கும் உறவுக்குப் பெயரில்லை என்றே எனக்கு தோன்றுகிறது.

A new postmaster came. After explaining the job to him, the resigning postmaster got ready to leave. Before going, he called Ratan and said, 'Ratan, I've never been able to pay you anything. Today before I go I want to give you something, to last you for a few days.' Except for the little that he needed for the journey, he took out all the salary that was in his pocket. But Ratan sank to the ground and clung to his feet, saying, 'I beg you, Dadababu, I beg you - don't give me any money.' Then she fled, running.

The departing postmaster sighed, picked up his carpet-bag, put his umbrella over his shoulder, and, with a coolie carrying his blue-and-white-striped tin trunk on his head, slowly made his way towards the boat.

When he was on the boat and it had set sail, when the swollen flood-waters of the river started to heave like the Earth's brimming tears, the postmaster felt a huge anguish: the image of a simple young village-girl's grief-stricken face seemed to speak a great inarticulate universal sorrow. He felt a sharp desire to go back: should he not fetch that orphaned girl, whom the world had abandoned? But the wind was filling the sails by then, the swollen river was flowing fiercely, the village had been left behind, the riverside burning-ground was in view. Detached by the current of the river and the journey ahead, he reflected philosophically that in life there are many separations, many deaths. What point was there in going, back? Who belonged to whom in this world?

But Ratan had no such philosophy to console her. All she could do was wander near the post office, weeping copiously. Maybe a faint hope lingered in her mind that Dadababu might return; and this was enough to tie her to the spot, prevent her from going far. Oh poor, unthinking human heart! Error will not go away, logic and reason are slow to penetrate. We cling with both arms to false hope, refusing to believe the weightiest proofs against it, embracing it with all our strength. In the end it escapes, ripping our veins and draining our heart's blood; until, regaining consciousness, we rush to fall into snares of delusion all over again.

கதையைப் படித்து முடித்ததும் பல விதமான உணர்ச்சிகள் மனதில் தோன்றுவதை என்னால் தடுக்க முடிந்ததில்லை. அனாதையான ஒரு சின்ன பெண் அன்புக்காக ஏங்குகிறாள். நல்ல உள்ளம் கொண்ட ஒரு மனிதர் அவர் வாழ்வில் தோன்றுகிறார். அவள் எதிர்பார்த்த அன்பு அவளுக்கு சில நாட்கள் கிடைக்கிறது. ஆனால் அந்த அன்பும் அக்கறையும் அவளுக்குத் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கும் என நம்பத் தொடங்குகிறாள் அப்பெண். ஆனால் தன் பயணத்தின் போது சந்திக்கும் ஒரு சகப் பயணியைப் போலவே அப்பெண்ணை நினைக்கிறார் அம்மனிதர். அவ்விடத்தை விட்டுச் செல்லும் வேளையில் அம்மனிதருக்கும் மனம் பாரமாக இருந்த போதிலும் "இதெல்லாம் வாழ்வின் ஒரு பகுதியே" என்று தன்னைத் தானே தேற்றிக் கொள்கிறார். ஆனால் கல்வியறிவில்லாத அப்பெண்ணுக்கோ அத்தகைய சித்தாந்தங்கள் எதுவும் தெரியவும் இல்லை, அவளால் அவற்றை புரிந்து கொள்ளவும் முடியவில்லை. ஒரு விதத்தில் நாமும் பல இடங்களிலும் அந்த சின்னப் பெண் ரத்தனைப் போலத் தான் நடந்து கொள்கிறோம் என எண்ணுகிறேன். இதற்கு மேல் என்னிடம் சொல்ல வார்த்தைகள் இல்லை.

இக்கதையை 1950களில் 'தீன் கன்யா' என்ற பேரில் சத்யஜித் ரே அவர்கள் வங்காள மொழியில் ஒரு திரைப்படமாக எடுத்திருக்கிறார். மூன்று வெவ்வேறு கதைகளினைக் கொண்ட அப்படத்தில் தி போஸ்ட்மாஸ்டரும் ஒரு கதை. இந்த கதையை விஷுவலாக எப்படி சொல்லியிருக்கிறார் என்று பார்ப்பதற்காகவே அப்படத்தின் டிவிடியைத் தேடி அரும்பாடுபட்டு வாங்கினேன். ஆனால் இக்கதையைப் படிக்கும் போது தோன்றிய உணர்வுகள் திரைப்படமாகப் பார்க்கும் போது எனக்குத் தோன்றவில்லை.

மேலே உள்ள கதை இணையத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சுருக்கப்பட்ட வடிவம் தான்(abridged version). புத்தகத்தில் இருப்பது போலவே இக்கதையைப் படிக்க வேண்டும் என்றால் கீழே உள்ள சுட்டியில் பதிவர் ஒருவர் புத்தகத்தின் பக்கங்களை ஸ்கேன் செய்து வலையேற்றியிருக்கிறார் படித்துப் பாருங்கள்.
http://solitary-vine.blogspot.com/2008/08/postmaster-by-rabindranath-tagore.html

இக்கதையை அழகாக ஆய்வு செய்து ஆங்கிலத்தில் ஒரு பதிவெழுதியிருக்கிறார் சம்யுக்தா என்ற பதிவர். அதையும் படித்துப் பாருங்கள்.
http://beautifulmind-sam.blogspot.com/2008/07/postmaster-by-rabindranath-tagore.html

Tuesday, July 07, 2009

IV Std 'E' Section

சில பள்ளிக்கூட நினைவுகள்...ஆணி புடுங்கற நேரத்துல சட்டுன்னு மனசுல வந்தது.

****************************************************

"உன் ரப்பரைக் கொஞ்சம் கொடேன், அழிச்சிட்டுத் தரேன்"
"ஐ...அஸ்கு புஸ்கு"

இப்ப யாராச்சும் என்கிட்ட எதாச்சும் கேக்கனும், அவங்களுக்கு நான் அஸ்கு புஸ்கு சொல்லனும்னு ரொம்ப ஆசையா இருக்கு :(

உதாரணத்துக்கு "கேன் ஐ பாரோ யுவர் லேப்டாப் அடாப்டர் ஃபார் சம்டைம்?" - "Can I borrow your Laptop Adaptor for sometime?"
"ஐ...அஸ்கு புஸ்கு"ன்னு சொன்னா மனசுக்கு எவ்வளவு இதமாயிருக்கும்? நம்ம மனசுக்குத் தான் :)

****************************************************

"வாட் இஸ் தி நாய்ஸ் ஓவர் தேர்"(What is the noise over there?)
"மிஸ் திஸ் பாய் இஸ் கில்லிங் மீ மிஸ்"

****************************************************

"ரப்பர் எப்படி செய்வாங்க தெரியுமாடா?"
"தெரியாதே"
"பென்சில் தோல் சீவி அதை பாத்திரத்துல போட்டு பால் ஊத்தி
மறு நாள் காலைல பாத்தா ரப்பர் வந்துருக்கும்"

இதை உண்மைன்னு நம்பி பென்சில் சீவி பென்சில் பாக்ஸ்ல போட்டு வீட்டுக்குப் பல தடவை எடுத்துட்டு போயும் பாம்புக்கு...சே...பென்சில் தோலுக்குப் பால் ஊத்த விட்டதில்லை :(

****************************************************

"மயில் றெக்கை இருக்கில்ல அத புக்குக்குள்ள வெச்சி அரிசி போட்டேன்னு வை...மறு நாள் மயில் குட்டி கிடைக்கும்"
"நெஜமாவாடா?"
"ஆமாம்டா...எங்க வீட்டுல அந்த மயில் குட்டி பெருசாயி முட்டை கூட போட்டுச்சே"

****************************************************

"டேய்! அவன் ஷுல சாணியை மிதிச்சிட்டு வந்திருக்காண்டா"
"சீத்தாங்கோல் விடுடா"

ரெண்டு பேரும் சேர்ந்துக்கிட்டு -
"ஐயயே...சாணி மிதிச்சிட்டு வந்திருக்கான்...சீத்தாங்கோல்"

- ஸ்கூலைத் தவிர இந்த சீத்தாங்கோலை எங்கேயுமே பயன்படுத்துனது இல்லை. அதுக்கு என்ன அர்த்தம்னு இன்னிக்கு வரைக்கும் தெரியாது.

****************************************************

ரிங்கா ரிங்கா ரோஸஸ்
பாக்கெட் ஃபுல் ஆஃப் போஸஸ்
ஹஷ்ஷா புஷ்ஷா
ஆல் ஆஃப் யூ டவுன்(வீ ஆல் ஃபால் டவுன்)

Ring-a Ring-a roses,
Pocket full of poses.
Husha, Busha.
We all fall down.

- ஸ்கூலை விட வீட்டு பக்கத்துல இருக்கற பசங்களோடயும் (பொண்ணுங்களோடயும் தான்:) ) இந்தப் பாட்டைப் பாடிக்கிட்டு கையைப் புடிச்சிக்கிட்டு ரவுண்டு சுத்தி கீழே விழுந்த நியாபகம் அதிகமா இருக்கு.

****************************************************

"நேத்து ஒலியும் ஒளியும்ல புன்னகை மன்னன் படத்துலேருந்து பாட்டு போட்டான் பாத்தியா?"
"ஆமா, நானும் பாத்தேன்"
"அதுல சப்பாத்திக்கு குருமா குருமா பாட்டுல சார்லி சாப்ளின் வேஷம் போட்டுக்கிட்டு கமல் ஓடி வந்து திடீர்னு ரேவதி கன்னத்தைக் கிள்ளி முத்தம் குடுப்பான் பாத்தியா?"
"அட பாவி...இரு இரு மிஸ் கிட்ட சொல்றேன்"
"டேய் சொல்லாதடா"
"நான் சொல்லத் தான் போறேன்"
"நீயும் தானே லேஸ் கட்ட கீழே குனியும் போது பதினாறும் பெற்று ப்ளாட்ஃபாரத்தில் வாழ்கன்னு சொன்னியே அதை நான் மிஸ் கிட்ட சொல்லுவேன்"
"சொல்லிக்கோ"
"அப்போ நீயும் சொல்லிக்கோ"
"மிஸ் மேல உனக்கு பயம் இல்லையா?"
"உனக்கு பயம் இல்லையா?"
"நான் சொன்னதை விட நீ சொன்னது தான் பெரிய விஷயம்"

கலைஞானியோட படத்தை ரசிச்சி ஒரு வார்த்தை சொல்லிட்டதுக்காக நாலாவதுலேருந்து
அஞ்சாவது போற வரைக்கும் இப்படியே ஒருத்தன் என்னை ப்ளாக்மெயில் பண்ணிக்கிட்டே
இருந்தான். ப்ளாக்மெயில் பண்ணவன் பேரு ரஜினிகாந்த். உண்மையாவேங்க.

****************************************************

ஹ்ம்ம்ம்...வயசானாலும் மனசு இன்னும் குழந்தையாவே இருக்கே...என்ன பண்ணறது? :(

Wednesday, July 01, 2009

இலக்கியவானில் உதயம் பகலவன் ப்ரமிளா

நேத்து வழக்கம் போல கடுமையா உழைச்சிட்டு இருந்தேன். உங்க வீட்டு உழைப்பு எங்க வீட்டு உழைப்பு இல்லை...முத்து முத்தா முகத்துல வியர்த்து இருக்கறதைத் தொடைச்சிக் கூட விட்டுக்காத கடும் உழைப்பு. அதுவா பூமியின் புவி ஈர்ப்பு சக்தியின் காரணமா நிலத்துல கீழே விழுந்தா தான் உண்டு. நெத்தி வியர்வையை நிலமே கேட்டு வாங்கிக்கிற மாதிரியான உழைப்புன்னு வையுங்களேன். அந்த நேரத்தில் தான் என்னோட கூகிள் சாட் பொட்டியில், பார்த்தனின் தடந்தோள்களை அலங்கரிக்கும் காண்டீபத்தின் ரீங்காரத்தையும், பார்த்தனின் சாரதியின் இதழ்களைத் தழுவும் பேறு பெற்ற பஞ்சஜன்யத்தின் ஆஹாகாரத்தையும் ஒத்த ஒரு ஒலி கேட்டது "Are you there?"ன்னு.

அந்த ஒலிக்குச் சொந்தக்காரர், நான் வலையுலகில் நுழைந்த நாளிலிருந்தே அறிந்த ஒரு நண்பர். "உரையாடல் சிறுகதை போட்டிக்கு நான் ஒரு கதை எழுதிருக்கேன். கொஞ்சம் படிச்சிப் பாருங்க"ன்னு ஒரு லிங்க் கொடுத்தார். அவருடைய பல முகங்களை நான் பாத்திருக்கிறேன் - அறம் செய்ய விரும்புறவரா, ஆறுவது சிணுங்கறவரா,
இயல்வது கரக்கறவரா, ஈவது விலக்கறவரா, உடையது விளம்பறவரா, ஊக்கமது கைவிடாதவரா, எண் எழுத்து இகழாதவரா, ஏற்பது இகழாதவரா, ஐயமிட்டு உண்ணறவரா, ஒப்புரவு ஒழுகறவரா, ஓதுவது ஒழியறவரா, ஒளவியம் பேசறவரா இப்படின்னு பல முகங்கள். ஆனா அன்னிக்கு அந்த பதிவைப் படிச்சிட்டு நான் பாத்த முகம் "அடங்கொன்னியா! இந்த ஆளு இங்கே இருக்க வேண்டிய ஆளே இல்லைடா"ன்னு நெனைக்க வச்சது. "இங்கே இருக்க வேண்டிய ஆள் இல்லைன்னா, பின்ன வேலூர் ஜெயில்ல இருக்க வேண்டியவரா"ன்னு எல்லாம் கேக்கப்பிடாது.

இவ்வளவு சீரிய(ஸ்) இலக்கியவாதிக்கு, ஒரு இலக்கியவாதிக்கே இணையான புனைப்பெயரும் இருப்பது தேவையானது என நான் நினைத்தேன். "இலக்கியவாதியான உங்களுக்கு ஒரு இலக்கியத் தரமான புனைப்பெயர் வைக்கணுமே?" அப்படின்னேன். "நீங்களே வையுங்களேன்"னு ரொம்பப் பெருந்தன்மையோட அந்த பாக்கியத்தை எனக்கு அளிச்சார். எனக்கு ரெண்டு பேரு மனசுல தோனுச்சு. முதல் பேர் "விழிவிண்மீனுக்கடியவன்".
விழிவிண்மீனுக்கடியவன் = விழி + விண்மீனுக்கு + அடியவன்
விழி = நயனம்(நயன்)
விண்மீன் = தாரா
அடியவன் = தாசன்(தாஸ்)

இரண்டாவதா எனக்கு ஒரு பேரு தோனுச்சு. அது தான் தன்னோட இலக்கிய வாழ்க்கைக்கு ஏத்ததா இருக்கும்னு அதையே ஏத்துக்கிட்டாரு. அந்த பேரு...

"பகலவன் ப்ரமிளா"

அந்த பேருக்கான விளக்கம் - பகலவனான ஞாயிறு ஒளி பொருந்தியவன். அளவிலாத சக்தியைக் கொண்டவன் அவன். இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் சக்திக்குக் காரணமாயிருப்பவனும் அவனே. இவ்வளவு வலு பொருந்தியவனாய் இருந்தாலும் தடாகத்தில் மலரும் மெல்லிய தாமரை மலரை மலரச் செய்பவனும் அவனே. ஆயினும் பாலைவனத்தில் அகப்பட்டுக் கொள்ளும் உயிரினங்களைப் பாரபட்சமின்றிச் சுட்டெரிக்கவும் அவன் தயங்குவதில்லை. இத்தன்மைத்தாய பகலவனை ஒத்தவரான கவிஞர், தன்னுடைய மக்களை மகிழ்விக்கக் கூடிய எழுத்துகளின் காரணமாய் படிப்பவர் முகங்களை மலரச் செய்பவர், அதே சமயம் தவறு செய்பவர் என்று அவர் தம் மனதில் கருதி விட்டால் எந்த ஒரு பாரபட்சமுமின்றி சுட்டெரிக்கத் தயங்காதவர்.

பகலவன் சரி...அது என்ன ப்ரமிளா? எதுக்கு அந்த பேரு? ஒன்னுமில்லை சாரே. சீரியஸ் இலக்கியம் எழுதறவங்க தன் புனைப் பேருல ஒரு பாதியிலாவது ஒரு அம்மணி பேரை வச்சி எழுதாம சாதிச்சதா வரலாறே கெடையாது. ப்ரமிளாங்கிற பேரைக் கேட்டதும் என்ன தோனும்? பலருக்கு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அரங்கேற்றம் படம் நியாபகத்துக்கு வரலாம், வெகு பலருக்கு சேச்சி நடிச்சி பிரபலமான தம்புராட்டி படம் நியாபகத்துக்கு வரலாம். க்ளாமரும் நடிப்பும் ஒரு சேர நிரம்பிய ஓல்டு ஆனாலும் கோல்டான ப்ரமிளாவைப் போன்ற கவர்ச்சியான எழுத்துக்குச் சொந்தக்காரர் என்பது இந்த புனைப் பெயரின் இரண்டாம் பாகத்தில் தொக்கி நிற்கும் பொருள்.

எழுத்தாளர், இலக்கியவாதி, இதழியலாளர் இப்படியாக இன்னும் பல ஆளர்களை ஆளப் போகும் 'பகலவன் ப்ரமிளா'வின் வலைப்பூ கீழே.



பகலவனும் சரி ப்ரமிளாவும் சரி இரண்டு காண்டிராஸ்டிங் சிறப்புகளைக் கொண்டிருப்பவர்கள் ஆதலால் சிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் பெயரான "பகலவன் ப்ரமிளா" ஜனனம். பேரு பாக்க காமெடியா இருந்தாலும் பதிவெல்லாம் டெரரா தான் இருக்கும். சீரியஸ் இலக்கியம் மட்டும் தான் எழுதுவார் பகலவன் ப்ரமிளா. ஏகவசனமா இருந்தாலும் அவருடைய இலக்கிய படைப்புகளை வாசித்து விட்டு "நீ இலக்கியவாதிடா, நீ இலக்கியவாதிடா, நீ இலக்கியவாதிடா"ன்னு மயில்சாமி மாதிரி உணர்ச்சிவசப்பட்டு பாராட்டற காலமும் வரத் தான் போகுது. அதை நானும் பாக்கத் தான் போறேன். அந்த நாள் வரும் போது...வரும் போது...வேணாம்... வரும் போது சொல்றேன் என்ன பண்ணுவேன்னு.

நீர் ஊற்று

Tuesday, June 30, 2009

ஜீஜாபாய் கதைகள் : இந்த காலத்துப் பொண்ணுங்க!

ஜீஜாபாய் யாருன்னு எல்லாருக்கும் தெரியும் தானே? மராட்டிய மாமன்னர் சிவாஜியின் அம்மா தான் ஜீஜாபாய். சிறுவயது முதலே தன் மகனுக்குக் கதைகள் சொல்லி அவரை ஒரு அறிவாளியாகவும், நீதிமானாகவும், வீரனாகவும் வளர்த்தார். கதை கேட்டா அறிவாளி ஆவறோமா, நீதிமான் ஆகறோமா இல்லை வீரனாகறோமான்னு எல்லாம் எனக்கு தெரியாது. ஆனா கதை கேக்கறது எனக்கு ரொம்ப புடிக்கும், அதுல இருக்கற ஃபேண்டஸி எலிமெண்ட்டுக்காக. அதுவும் எங்க வீட்டு ஜீஜாபாய் சொன்னா ரொம்ப சுவாரசியமா இருக்கும். ஆ...ன்னு வாயைப் பிளந்துக்கிட்டு கேப்பேன். நான் மாவீரன் சிவாஜின்னா எங்கம்மா ஜீஜாபாய் தானே...ஹி...ஹி... எங்கம்மா அதுவும் கதையைச் சொன்னா சும்மா சொல்ல மாட்டாங்க, திரைக்கதையோட வசனத்தோட ஏற்ற இறக்கத்தோட கிட்டத்தட்ட நடிச்சே காட்டுவாங்க. அப்படி எங்கம்மா கிட்ட கேட்ட ஒரு கதை/நிகழ்வு/உரையாடல் தான் இது.

என் மகள் பிறந்திருந்த நேரம் அது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மனைவியையும் மகளையும் பார்ப்பதற்காக நானும் என் அம்மாவும் அப்பாவும் அம்பத்தூர் சென்று விட்டு ஒரு மாலை வேளையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். திருவான்மியூர் செல்லும் 47D பேருந்தில் மூவரும் ஏறினோம். மூவருக்கும் வெவ்வேறு இடங்களில் உட்கார இடம் கிடைத்தது. அம்மாவுக்கு ஒரு பழக்கம். வீட்டில் இருக்கும் போது பொதுவாகத் தூங்க மாட்டாங்க. ஆனா எங்கேயாச்சும் வெளியே பேருந்துலேயே ரயிலிலேயோ போறதுன்னா போதும் ஏறி உக்காந்ததுமே தூக்கம் வந்துடும். ஆனா பக்கத்துல யாராச்சும் உக்காந்து பேச்சு குடுத்துக்கிட்டே வந்தாங்கன்னா தூங்க மாட்டாங்க. அப்படி ஒரு விநோதமான பழக்கம். எங்கம்மா மகளிர் இருக்கைகள் இருக்கற இட புறத்துலயும் நானும் எங்கப்பாவும் வலது புறத்துலயும் உக்கார்ந்துருந்தோம். அன்னிக்கு எங்கம்மா பக்கத்துல ஒரு 20 வயசு மதிக்கத் தக்க பொண்ணு உக்கார்ந்துருந்துச்சு. ஏறி உக்காந்ததும் தூங்குவாங்களே என்ன பண்ணறாங்கன்னு திரும்பி பார்த்தேன். அந்த பொண்ணு கிட்டே பேசிட்டு வந்துட்டு இருந்தாங்க. இன்னும் கொஞ்ச தூரம் போனதும் மறுபடியும் பார்த்தேன். இப்போ முன்னைவிட சுவாரசியமா சிரிச்சி சிரிச்சி ரெண்டு பேரும் பேசிக்கிட்டே வந்தாங்க. அட! என்னடா இவ்வளோ ஆழமா பேசிக்கிட்டு வராங்களேன்னு நானும் கவனிச்சிக்கிட்டே வரேன். ஆனா அவங்க சிரிச்சி பேசிக்கிறது மட்டும் குறையவே இல்லை. என் பக்கத்துல உக்காந்துருந்தவன் என்னை மாதிரியே காதுல (ஐ-பாட்) மாட்டிக்கிட்டு இருந்ததுனால என் கிட்ட யாரும் பேச வேற இல்லை. அதனால எனக்கு வேற ஒரே பொறாமை. கடைசியா அந்த பொண்ணு தி.நகர் பேருந்து நிலையத்து கிட்ட இறங்கி எங்கம்மாவுக்கு கை காட்டிட்டு போற வரைக்கும் அவங்க பேசிக்கிட்டே தான் வந்தாங்க. அந்த பொண்ணு இறங்கிப் போனதும் தூங்க ஆரம்பிச்சிட்டாங்க.

வீட்டுக்குப் போனதும் முதல் வேலையா அப்படி என்ன அவ்வளவு இண்டெரெஸ்டிங்கா சிரிச்சி சிரிச்சி பேசிக்கிட்டே வந்தாங்கன்னு தெரிஞ்சிக்க எனக்கு ஒரே ஆர்வம். எங்கம்மா எனக்கு மிமிக்ரியோட ஏற்ற இறக்கத்தோட சொன்ன கதையோட உரையாடல் வடிவம் தான் கீழே.

"டைம் என்னங்க ஆச்சு"

"ஆறு நாப்பதுமா"

"நீங்க எது வரைக்கும் போறீங்க ஆண்ட்டி?"

"திருவான்மியூர் வரைக்கும்மா"

என்னை காட்டி "அந்த அங்கிள் கூடத் தான் வந்தீங்களா?" :(

"அங்கிள் முன்னாடி உக்கார்ந்துருக்காரு பாரு அவரு தான். அது என் பையன்". இதை சொல்லிட்டு எங்கம்மா என் கிட்ட சொன்னது "இருபது வயசு பொண்ணே உன்னை அங்கிள்ங்கிறா. முதல்ல தொப்பையைக் குறைச்சிக்க" அதுக்கு நான் சொன்னேன்"இனிமே தொப்பை இருந்தா என்ன இல்லாட்டி என்ன, அதான் கல்யாணம் ஆகி குழந்தை கூட பொறந்துடுச்சே"ன்னு. நறுக்குன்னு மண்டையில ஒரு கொட்டு விழுந்துச்சு.

"சாரி ஆண்ட்டி"

"அம்பத்தூர்ல தான் உங்க வீடா?"

"இல்லம்மா, மருமகளுக்குக் குழந்தை பொறந்துருக்கு. அதை பாத்துட்டு வீட்டுக்குப் போயிக்கிட்டிருக்கோம்"

"எங்க வீடு எங்கேருக்கு சொல்லுங்க பாப்போம்"

"தெரியலையேம்மா"

"நீங்க போற வழில தான்"

"நாங்க போற வழில நெறைய இடம் இருக்கு. நான் எதைன்னு சொல்லறது?"

"சும்மா ஒரு கெஸ் பண்ணுங்களேன்"

"சைதாப்பேட்டையா?"

"அதான் இல்லை. டி.நகர்ல தான் எங்க வீடு. டி.நகர் பஸ் ஸ்டாண்டுக்குப் பின்னாடி ஒரு ரோடு போகுதில்லை. அதுல செக்கண்ட் லெஃப்ட் திரும்புனா ஒரு அபார்ட்மெண்ட் வரும். அதுல ஃபிஃப்த் ஃப்ளோர்ல தான் எங்க வீடு"

"ஓஹோ"

"அம்பத்தூர்ல என் ஃப்ரெண்டு வீடு இருக்கு. அங்கே தான் போயிட்டு வரேன்"

"அப்படியா? என்னம்மா பண்ணறே நீ"

"நான் கரெஸ்ல B.C.A.படிக்கிறேன் ஆண்ட்டி"

"கரெஸ்னா என்னம்மா?"

"என்னது உங்களுக்கு கரெஸ்னா என்னன்னு தெரியாதா?"

"தெரியாதும்மா"

"கரெஸ்பாண்டென்ஸ்ல போஸ்டல்ல படிக்கிறதை தான் ஷார்ட்டா கரெஸ்னு சொல்லுவாங்க"

"அப்படியாம்மா"

"ஆண்ட்டி! நான் ரொம்ப குண்டா இருக்கேனா ஆண்ட்டி?"

"ஏம்மா! உனக்கு என்ன? நல்லா ஸ்லிம்மா அழகாத் தானே இருக்கே?"

"போங்க ஆண்ட்டி. நீங்க பொய் சொல்றீங்க. நான் குண்டா இருக்கேன்னு எனக்கே தெரியும். இப்போ என்னோட வெயிட் எவ்வளோ தெரியுமா 46 கேஜி. நான் 40 கேஜி யைத் தாண்டுனதேயில்லை".

"இதெல்லாம் போய் ஒரு வெயிட்டுன்னு சொல்லறியேம்மா. இந்த வயசுல நல்லா சாப்பிட்டு உடம்பைப் பாத்துக்க வேணாமா?"

"என் வெயிட் அதிகமாயிடுச்சுன்னு நான் அஞ்சு மாடி படிக்கட்டுல தான் ஏறிப் போறேன். லிஃப்ட் எல்லாம் கூட யூஸ் பண்ணறதில்லை. டி.நகர் பஸ் ஸ்டாண்டுலேருந்து எங்க வீட்டுக்குப் போக 15 நிமிஷம் ஆகும். அது கூட நான் ஆட்டோல போகாம நடந்தே தான் போறேன்"

"ஹ்ம்ம்ம்"

"என் பேரு என்னன்னு சொல்லுங்க பாப்போம்?"

"...."

"என்னை பாத்து நான் க்றிஸ்டியன்னு நீங்க நெனச்சிருப்பீங்க. அதான் இல்லை. நான் ஹிண்டு தான். ஃப்ரெண்டு வீட்டுலேருந்து வரும் போது என் பொட்டு கீழே விழுந்துடுச்சு. என் பேரு பத்மப்ரியா"

"இல்லைம்மா. அப்படியெதுவும் நான் நெனக்கலை"

"எங்க வீட்டுலேயே நானும் எங்கப்பாவும் தான் கறுப்பு. எங்கப்பாவுக்கும் அம்மாவுக்கும் லவ் மேரேஜ். எங்கம்மா மலையாளி. என் தம்பி எங்கம்மா மாதிரி நல்லா சிவப்பா இருப்பான். எங்கப்பா கறுப்பா இருந்தாலும் தங்கம் தெரியுமா?"

"தம்பி என்னம்மா பண்ணறான்"

"இப்போ தான் லெவெந்த் படிக்கிறான் ஆண்ட்டி"

"திருவான்மியூர்ல இறங்கப் போறதாச் சொன்னீங்களே? உங்க வீடு அங்கே தானா?"

"இல்லம்மா. இன்னும் கொஞ்சம் தூரம் போகனும் ECRல இருக்கு"

"ஹை! ECRஆ. அங்கே தான் விஜய் வீடு கூட இருக்கு இல்லை"

"ஆமாம்மா. உனக்கு விஜய்ன்னா ரொம்ப பிடிக்குமா?"

"ஆமாம் ஆண்ட்டி! விஜய் படம்ன்னா ஒன்னு விடாமப் பாத்துடுவேன்"

"அப்போ ஒரு நாள் எங்க வீட்டுக்கு வாயேன். அப்படியே விஜயையும் பாத்துட்டுப் போ"

"அதெல்லாம் வேணாம் ஆண்ட்டி. இப்படியே தூரத்துலேருந்து விஜயைப் பாக்கறது தான் எனக்கு புடிச்சிருக்கு."

"ஆனா கல்யாணம்னு ஒன்னு பண்ணிக்கிட்டா விஜய் மாதிரி நல்லா ஹைட்டா அழகா இருக்கற பையனைத் தான் பண்ணிப்பேன் ஆண்ட்டி. அதுக்கு தான் என் வெயிட்டைக் கூட குறைச்சிக்கிட்டு இருக்கேன். எங்க சித்தி பொண்ணு ஒருத்தி இருக்கா. அவ தோனின்னா உயிரையே விடுவா. தோனி மாதிரி மாப்பிள்ள தான் வேணும்னு இப்பவே சொல்லிக்கிட்டு இருக்கா."

"ஆண்ட்டி! நீங்க ஃப்ரீ டைம்ல என்ன ஆண்ட்டி பண்ணுவீங்க?"

"வீட்டு வேலையே சரியாயிருக்கும்மா. அப்படி கொஞ்சம் டைம் கெடைச்சதுன்னா டிவி பார்ப்பேன்"

"மதியானம் தூங்க மாட்டீங்களா?"

"இல்லம்மா"

"நானும் தூங்க மாட்டேன். ஆனா எங்கம்மாவுக்கு மத்தியானம் தூங்கல்லைன்னா சாயந்திரம் எல்லாம் ரொம்ப கஷ்டப் படுவாங்க"

"நீ என்னம்மா பண்ணுவே ஃப்ரீ டைம்ல"

"டிவி பாப்பேன், பாட்டு கேப்பேன். ஃப்ரெண்ட்சுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவேன்".

"ஹ்ம்ம்ம்"

"ஆண்ட்டி உங்க மொபைல் நம்பர் குடுங்க. நான் உங்களுக்கும் இனிமே எஸ்எம்எஸ் அனுப்பறேன்"

"என் கிட்ட மொபைல் இல்லையேம்மா"

"அங்கிள் கிட்ட சொல்லி ஒரு மொபைல் வாங்கிக்கங்க ஆண்ட்டி. மொபைல் ரொம்ப யூஸ்ஃபுல்"

"சரிம்மா"

"நான் எறங்க வேண்டிய எடம் வந்துடுச்சு ஆண்ட்டி. அப்புறம் பாக்கலாம். டாட்டா"

"சரிம்மா"

இந்த முழு கதையையும் கேட்டுட்டு, எனக்கும் என் தம்பிக்கும் நல்ல டைம்பாஸ் ஆச்சு. கதையைச் சொல்லிட்டு எங்கம்மா சொன்னது "இந்த காலத்து பொண்ணுங்களும் அவங்க நெனப்புங்களும்"

Thursday, June 25, 2009

ஸ்பெஷல் எஃபெக்ட்ஸோடு கிரிக்கெட் வெளையாடுதல்

"வெயிட்ஸ் ஃபார் தி க்ரீஸ். இருடா கூச் போட்டுக்கிட்டு வந்துடறேன். கூச் இல்லாம சரியா ரன் வர மாட்டேங்குது". எங்க வீட்டு மொட்டை மாடில நானும் என் தம்பியும் அண்டர் ஆர்ம்ஸ் கிரிக்கெட் ஆடும் போது பேசப்படற வசனம் தான் மேல பாத்தது. அது என்னா கூச்? முன்னாள் இங்கிலாந்து கேப்டன் க்ரஹாம் கூச்சைப்(Graham Gooch) பத்தி தான் என் தம்பி சொல்றது. அது சரி? அது என்ன கூச் போட்டுக்கிட்டு விளையாடறது? 1980-கள்ல டிவில கிரிக்கெட் உன்னிப்பா நீங்க கவனிச்சிருந்தீங்கன்னா - பேட்ஸ்மேன் க்ளவ்ஸ்(Gloves) போட்டுக்கிட்டு வெளையாடும் போது சில வகை க்ளவ்ஸ்ககளில் ஆட்காட்டி விரலும் நடு விரலும் சேர்ந்தாப் போல ஒரே விரலா இருக்கற மாதிரி இருக்கும். இந்த மாதிரி க்ளவ்ஸை நாங்க முதன் முதல்ல பார்த்தது க்ரஹாம் கூச் போட்டுக்கிட்டு வெளையாடும் போது தான். அதனால அதுக்கு கூச்னே பேரு வச்சிட்டோம். நானும் என் தம்பியும் கிரிக்கெட்டைக் கவனிக்கிறோமோ இல்லையோ, கிரிக்கெட் வீரர்கள் உபயோகிக்கிற உபகரணங்களையும் அவங்க செய்யற சேஷ்டைகளையும் ரொம்ப உன்னிப்பா கவனிப்போம். குறிப்பா எந்தெந்த பேட்ஸ்மேன் எந்தெந்த பேட் உபயோகிக்கிறாங்கன்னு கவனிக்கிறது எங்க ரெண்டு பேருக்குமே ரொம்ப புடிக்கும். ஏன்னா அதை எல்லாம் நாங்க மொட்டை மாடியில கிரிக்கெட் விளையாடும் போது பண்ணலாமில்ல அதுக்குத் தான். அப்போல்லாம் அப்படி ஒரு அல்ப சந்தோஷம். இந்த மாதிரி கிரிக்கெட்டில் நாங்க நோட் பண்ண கடைபிடிச்ச எட்செட்ரா சமாச்சாரங்களைப் பத்தினது தான் இந்தப் பதிவு. கிரிக்கெட் நுணுக்கங்கள் பத்தி இதுல எதுவும் இருக்காது. ஏன்னா அத பத்தி எனக்கு எதுவும் தெரியாது :)

கூச் னு சொன்னேன் இல்லை? அது எப்படி இருக்கும்? கீழே கூச்சோட படத்துல அவரோட க்ளவ்ஸை உன்னிப்பா பாருங்க.


இதுல சரியாத் தெரியலைன்னா அதுக்குக் கீழே இருக்கற அலன் பார்டர் படத்தைப் பாருங்க.



இந்தப் படத்துல நான் சொல்ற 'கூச்' தெளிவாத் தெரியும். எந்த பேட்ஸ்மேன் போட்டிருந்தாலும் இந்த மாதிரி க்ளவ்ஸ் போட்டிருந்தாங்கன்னா அது எங்களை பொறுத்த வரை 'கூச் வச்ச க்ளவ்ஸ்' தான். "சரி நான் கூச் போட்டுக்கிட்டு வரேன்"னு மேல என் தம்பி சொன்னாருல்ல? அதுக்கு என்ன அர்த்தம்னு தானே கேக்கறீங்க. பந்தை உருட்டிப் போட்டு மொட்டை மாடில நாங்க கிரிக்கெட் விளையாடுனாலும், கிரிக்கெட் வீரர்கள் கடை பிடிக்கிற அத்தனை ஸ்டைலையும் பந்தாவையும் நாங்களும் கடைபிடிப்போம். எங்க தாத்தா ஏர் ஃபோர்ஸ்ல பஞ்சாப்ல இருந்த போது அவருக்குக் கிடைச்ச ஒரு நீல கலர் கம்பளி க்ளவ்ஸ் ஒன்னு தான் எங்க கிரிக்கெட் க்ளவ்ஸ். மெட்ராஸ்ல அடிக்கிற வெயிலுக்கு கம்பளி க்ளவ்ஸ் எல்லாம் போட்டா உள்ளங்கைல வேர்த்துக் கொட்டும். ஆனாலும் நாங்க க்ளவ்ஸ் இல்லாம கிரிக்கெட் ஆடுனதே கெடையாது. க்ளவ்ஸ் ஏற்பாடு பண்ணியாச்சு. க்ளவ்ஸ்ல கூச் இல்லாம வெளையாடுனா ரன் சரியா அடிக்க முடியாதே? அதுக்கு என்ன பண்ணறது? சைக்கிள் பிராண்ட் த்ரீ இன் ஒன் ஊதுபத்தி அட்டை பெட்டி இருக்கில்ல. அது நீளமா இருக்கும். அதை சரிசமமா மூனு துண்டுகளா அகல வாக்குல கத்திரிகோலால வெட்டிப்போம். அதுல ஒரு துண்டு எங்களுக்கு கூச் செய்யப் போதும். அந்த அட்டைப் பெட்டி துண்டை எடுத்து அது மேல ஒரு வெள்ளை பேப்பரைச் சுத்தி "Power" லோகோ வரைஞ்சுக்கிட்டா கூச் தயார்.

அதை அப்படியே எடுத்து வலது கையில க்ளவுஸை மாட்டிக்கிட்டு முதல் ரெண்டு வெரல்ல எடுத்து சொருகிக்க வேண்டியது தான். இது தான் கூச்.

இப்பவே கண்ணைக் கட்டுதா? அட...இன்னும் இருக்குங்க. கூச் வச்ச க்ளவ்ஸ் போட்டுக்கிட்டா மட்டும் போதாதுன்னு என்னோட தம்பி பேட்(Pad) எல்லாம் கால்ல கட்டுவாரு. அது எப்படின்னு கேக்கறீங்களே? முன்னெல்லாம் க்ரீம் பிஸ்கெட் டப்பாக்குள்ள பிஸ்கெட் நமத்து போகாம இருக்க வெள்ளை கலர்ல வரி வரியா ஒரு காகிதம் வெப்பாங்க தெரியுமா? அது தான் என் தம்பியோட கிரிக்கெட் பேட். கால்ல வச்சா அந்த பேப்பர் முட்டிக்குக் கீழே ஒரு நாலு இன்ச் தான் வரும். இருந்தாலும் அதை மறக்காம ரப்பர் பேண்ட் போட்டு கட்டிக்கிட்டுத் தான் வெளையாடுவாரு. இதுக்கே மொட்டை மாடி கிரிக்கெட்ல LBW எல்லாம் கெடையாது, வெளையாடறதும் எழுபத்தியஞ்சு பைசா சின்ன ரப்பர் பந்தை வச்சு தான். இந்த கிரிக்கெட் மேட்ச்ல எல்லாம் 50 ரன்னோ 100 ரன்னோ அடிச்சா பேட்ஸ்மேன் பேட்டை உயரத் தூக்கி காட்டுவாரு பாத்துருக்கீங்களா? அதே மாதிரி நானும் என் தம்பியும் மட்டும் ஆடற மேட்ச்ல 50-ஓ, 100-ஓ அடிச்சா மொட்டை மாடில பேட்டை எல்லாம் தூக்கிக் காப்போம். யாரும் பாக்கலைன்னாலும் கை தட்டுலன்னாலும் பேட்டைத் தூக்கி தான் காமிப்போம். அப்போ பிரபலமா இருந்த அசாருதீன் ஒவ்வொரு முறை பந்தை அடிக்கறதுக்கு முன்னாடியும் தன்னோட கழுத்துல இருக்கற ஒரு கறுப்பு கலர் தாயத்தை வெளியில இழுத்துத் தொட்டுப்பாரு. அது மாதிரி எங்களுக்கும் செய்யனும்னு ஆசை. தாயத்து வேணும்னு வீட்டுல கேட்டா எங்களை மந்திரிச்சு விட்டுடுவாங்க இல்லை. அதுக்காக பழைய கயிறு ஒன்னை எடுத்து அதுல அம்மன் டாலரையோ முருகன் டாலரையோ கோத்துக்கிட்டு அதை கழுத்துல மாட்டிக்கிறது. ஒவ்வொரு பந்தையும் அடிக்கிறதுக்கும் முன்னாடி சட்டைக்குள்ளிருந்து டாலரை இழுத்து இழுத்து தொட்டுப் பாத்துப்போம். இதுவாச்சும் பரவால்லை. சில சமயம் பேட்ஸ்மென் பிட்சை சமப் படுத்தறதுக்காக பேட்டை வச்சி தரையில குத்துவாங்க பாத்துருக்கீங்களா? அதை கூட நாங்க மொட்டை மாடில செஞ்சிருக்கோம். "யாருடா மொட்டை மாடில லொட்டு லொட்டுன்னு தட்டுறது"ன்னு கீழே இருந்து அம்மாவோ அப்பாவோ வந்து திட்டுன்னாலும் அந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் எல்லாம் குடுக்காம கிரிக்கெட் வெளையாடலன்னா வெளையாடுன மாதிரியே இருக்காது.

(ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் தொடரும்...)

பி.கு: 'க்ளவ்ஸ்'னு இருக்கற இடத்துல எல்லாம் 'க்'-க்குப் பதிலா 'ப்' போட்டு படிச்சிட்டு கமெண்ட் போட்டால் மிக மிகக் கொடூரமான முறையில் தயவு தாட்சண்யமின்றி மட்டுறுத்தப் படும் என எச்சரிக்கப்படுகிறது.

Wednesday, June 24, 2009

கவியரசரின் இரத்தத் திலகம் படப்பாடல் ஒன்று

ஜூன் 24 - இன்று கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பிறந்தநாள். அலுவலகம் வரும் வழியில் அபூர்வ ராகங்கள் படப் பாடலான ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் கேட்டுக் கொண்டு வந்தேன். இங்கு வந்ததும் கவியரசரைப் பற்றிய ஒரு அருமையானப் பகிர்வைத் தந்திருந்தார் ஆயில்யன். அதன் பின்னர் ரத்தத் திலகம் திரைப்படத்தில், நான் மிகவும் ரசிக்கும் ஒரு பாடலை இணையத்தில் தேடத் துவங்கினேன். இப்படத்தில் உள்ள பசுமை நிறைந்த நினைவுகளே பாடலும், ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு பாடலும் மிகப் பிரபலமானவை. ஆனால் அப்பாடல்களைப் போல அத்தனை பிரபலம் ஆகாத ஒரு பாடலைத் தான் நான் தேடினேன். வெகு பிரபலம் என்று சொல்லமுடியா விட்டாலும் பாடலின் வரிகள் அப்படத்தில் உள்ள மற்றப் பாடல்களுக்குச் சற்றும் குறையாததாக இருக்கும். அந்த பாடல் இன்று ராகா இணையத் தளத்தில் கிடைத்தது. நீங்களும் கேட்டுப் பாருங்க.



படம் : இரத்தத் திலகம்(1963)
பாடல் : கவியரசு கண்ணதாசன்
இசை : K.V.மகாதேவன்
பாடியது : T.M.சௌந்தரராஜன்


புத்தன் வந்த திசையிலே போர்
புனித காந்தி மண்ணிலே போர்
சத்தியத்தின் நிழலிலே போர்
தர்மத் தாயின் மடியிலே போர்
போர்...போர்...போர்....
(புத்தன் வந்த திசையிலே...)

பரத நாட்டுத் திருமகனே வா
பச்சை ரத்தத் திலகமிட்டு வா
பொருது வெண்தளத்தை நோக்கி வா
பொன்னளந்த மண்ணளக்க வா
வா...வா...வா...வா...வா...

புத்தன் வந்த திசையிலே போர்
புனித காந்தி மண்ணிலே போர்
சத்தியத்தின் நிழலிலே போர்
தர்மத் தாயின் மடியிலே போர்
போர்...போர்...போர்....

மக்களுக்கு புத்தி சொல்லி வா
மனைவி கண்ணில் முத்தமிட்டு வா
பெற்றவர்க்குத் தாள் வணங்கி வா
பேர் எடுக்க போர் முடிக்க வா வா வா
வா...வா...வா...வா...வா...

புத்தன் வந்த திசையிலே போர்
புனித காந்தி மண்ணிலே போர்
சத்தியத்தின் நிழலிலே போர்
தர்மத் தாயின் மடியிலே போர்
போர்...போர்...போர்....

மறுபடிக்கும் வீழ்வதில்லை வா
மரணமேனும் பெறுவதென்று வா
பருவ நெஞ்சை முன்நிமிர்த்து வா
பகைவனுக்கும் ஓருயிர் தான் வா வா வா
வா...வா...வா...வா...வா...

புத்தன் வந்த திசையிலே போர்
புனித காந்தி மண்ணிலே போர்
சத்தியத்தின் நிழலிலே போர்
தர்மத் தாயின் மடியிலே போர்
போர்...போர்...போர்....



1962ஆம் ஆண்டு சீனப் போர்தொடுப்பின் போது தேசிய உணர்வைத் தூண்டுவதற்காக தயாரிக்கப்ப்ட்டு வெளிவந்த படம் "இரத்த திலகம்(1963)". பாடல் வரிகளுக்காகவும் கற்பனை நயத்திற்காகவும் பலமுறை கேட்கத் தூண்டும் பாடல்கள் உண்டு. இது அவ்வகையில் வந்த ஒரு மிகச் சிறந்த பாடல்.

எனக்கு இப்பாடலில் மிகவும் பிடித்த வரி, பாடலுக்கு முத்தாய்ப்பாக அமைந்திருக்கும் "பகைவனுக்கும் ஓர் உயிர் தான் வா" என்பது. இதை பாடலில் கேட்கும் போதெல்லாம் எனக்கு மெய் சிலிர்க்கும். "போரில் உயிரிழப்பதை குறித்து அஞ்ச வேண்டாம், உன்னைத் தாக்க வரும் பகைவனும் அப்போரில் உயிரிழக்கலாம்" என்று ஐந்து சொற்களில் பாடலுக்கு உயிர் கொடுத்திருப்பார்.

இசைஞானி இளையராஜா கவியரசர் கண்ணதாசன் குறித்த தன்னுடைய நினைவுகளைப் பகிர்கிறார் கீழே உள்ள இந்த ஒலிக்கோப்பில். தான் முதன்முதலில் கவியரசரைக் கண்ட போது அவரை வெறுத்தது, "தேன் சிந்துதே வானம்" பாடல் பதிவின் போது கவிஞரைக் கண்டு வியந்தது, தன் மனதில் கவியரசருக்கு எவ்வளவு உயர்ந்த இடம் உள்ளது என்றெல்லாம் மனம் திறந்திருக்கிறார். இதையும் கேட்டு ரசியுங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA

Tuesday, June 23, 2009

குழந்தைகளுக்கான கிராமியப் பாடல்கள்

தலைப்பைப் பாத்துட்டு பெரிசா திறனாய்வுக் கட்டுரை மாதிரி எதையும் எதிர்பாக்காதீங்க. ஏதோ எனக்கு தெரிஞ்ச சில விஷயங்களைச் சொல்றேன். குழந்தைகளுக்குப் பாடற பாட்டுன்னா நமக்கு எந்த பாட்டு நியாபகத்துக்கு வரும்? "நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடிவா மலை மீதேறிவா" இல்லன்னா "சாஞ்சாடம்மா சாஞ்சாடு சாயக்கிளியே சாஞ்சாடு" இந்த பாடல்கள் தான். ஏன்னா இந்தப் பாடல்கள் மிகப் பிரபலமான பாடல்கள். நம்மில் பலரும் இதை பத்தி கேள்வி பட்டிருப்போம்.

நான் சின்ன வயசுலே எங்க அம்மா பாடி கேட்ட ரெண்டு பாடல்களைப் பத்தி இங்கே சொல்றேன். பாடல்னு சொல்ல முடியாது. இதப் பாடற பெரியவங்க குழந்தையோட குழந்தையா ஒன்றிப் போகற மாதிரியான ஒரு உரையாடல்னு சொல்லலாம். அஞ்சாறு வரிகள் கொண்ட சின்னப் பாடல்கள் தான். இது ஏன் இவ்வளோ நாள் கழிச்சு இப்போ எனக்கு நியாபகம் வருதுன்னா எனக்காகவும் என் தம்பிக்காகவும் எங்க அம்மா பாடுனதை இப்போ என் பொண்ணுக்காக அதாவது அவங்க பேத்திக்காகப் பாடறாங்க. இதெல்லாம் எங்கம்மாவுக்கு எப்படி தெரியும்னு கேட்டேன், அவங்களுக்கும் சரியா நியாபகம் இல்லை. இதுக்கே எங்கம்மா முழுசும் கிராமத்துலேயே வளர்ந்தவங்க கிடையாது. ஏர் ஃபோர்ஸில் வேலை செஞ்ச எங்க தாத்தா கூட கல்கத்தா, நாக்பூர், பஞ்சாப், பெங்களூர் இப்படின்னு இந்தியாவிலேயே பல இடம் போனவங்க தான். எங்க தாத்தாவோட(அம்மாவைப் பெத்த அப்பா) ஊரு தென்னாற்காடு மாவட்டம் திட்டக்குடி தாலுகாவில் இருக்கற ஒரு சின்ன கிராமம். எங்க ஆயாவோட(அம்மாவைப் பெத்த அம்மா) ஊரு சிதம்பரம். அநேகமா இந்த ரெண்டு பகுதிகள்ல எங்கேயோ குழந்தைகளுக்குக் கிராமத்துப் பெண்கள் பாடற பாட்டாத் தான் இருந்திருக்கும். ஏன் இவ்வளவு உறுதியாச் சொல்றேன்னா கண்டிப்பா எங்கம்மா இதையெல்லாம் பஞ்சாப்ல கத்துக்கிட்டிருக்க முடியாது :)

பாடல் 1:
நிலாவ நிலாவ எங்கெங்க போன?
வண்ணாங்கொளத்துக்கு மண்ணள்ளப் போனேன்
மண்ணு யான்?
வீடு கட்ட
வீடு யான்?
புள்ள பெற
புள்ள யான்?
கோரைப் பாய்ல குதிச்சு வெளையாட
தாழம் பாய்ல தவழ்ந்து வெளையாட

அதோ பாரு
உங்க அம்மாவும் அப்பாவும்
கட்டுச்சோறு கட்டிக்கிட்டு
கருவாடு சுட்டுக்கிட்டு
நாயை முன்னால வுட்டு
பூனையைப் பின்னால வுட்டு
அதோ பாரு
அங்க வர்றாங்க...

இதை பாடறவங்க தரையில மல்லாக்கப் படுத்துக்கிட்டு, கால் ரெண்டையும் கோபுரம் மாதிரி(ஆங்கில எழுத்து A மாதிரி) வச்சிக்கிட்டு குழந்தையை கால் மேல சாய்ச்சிக்கிட்டு முன்னேயும் பின்னேயும் ஆட்டிப் பாடற பாட்டு. மேல பாத்தீங்கன்னா "மண்ணு யான்"னு தான் எழுதிருக்கேன். "மண்ணு ஏன்"னு எழுதுனாலோ பாடுனாலோ அந்த ஃபீல் வராது. நாயை முன்னால வுட்டு பூனையைப் பின்னால வுட்டு
அதோ பாரு அங்க வர்றாங்க...ன்னு சொல்லிட்டு மேலே பாக்கனும். அப்போ குழந்தையும் மேல பாக்கும், அப்போ குழந்தைக்கு கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைப்பாங்க.

பாடல் 2:
ஈச்சங்காட்டுக்குப் போயி வாரேன்
வீட்டைப் பாத்துக்க சின்னாயி
பந்த மேல பனங்கா(பலகை) கெடக்குது
அதையும் பாத்துக்க சின்னாயி
ரத்தம் எல்லாம் இங்கே போ
சக்தி எல்லாம் இங்கே வா
கோழி முட்டை பொரிச்சு தரேன்
கோழி கிட்ட சொல்லாதே
வாத்து முட்டை பொரிச்சு தரேன்
வாத்து கிட்ட சொல்லாதே
காக்கா முட்டை பொரிச்சு தரேன்
காக்கா கிட்ட சொல்லாதே...

இந்த பாட்டுக்குன்னு ஒரு தனி ரிதம் இருக்கு. கொஞ்சம் வேகமாப் பாடனும், எதுகை மோனையோட நல்லாருக்கும். குழந்தையை உட்கார வச்சி கால் ரெண்டையும் நீட்டி ரத்தம் "எல்லாம் இங்கே போ சக்தி எல்லாம் இங்கே வா"ன்னு சொல்லும் போது ரெண்டு காலையும் நல்லா நீவி விடுவாங்க. என் பொண்ணுக்கு எங்கம்மா இந்த மாதிரி பண்ணும் போது ரொம்பப் பிடிக்கும். "கோழி முட்டை பொரிச்சு தரேன்
கோழி கிட்ட சொல்லாதே"ன்னு சொல்லிக்கிட்டே கால் விரல்கள்ல நெட்டி முறிப்பாங்க. ரெண்டு கால்லயும் இருக்கற பத்து விரல்களுக்கும் ஒவ்வொரு பறவை பேர் சொல்லுவாங்க. சில சமயம் பத்து பறவை பேர் நியாபகம் வரலைன்னா ஆட்டு முட்டை, யானை முட்டை எல்லாம் கூட பாட்டுல வந்துடும் :)

இன்னொரு விஷயம். வீட்டுல ஒரு சின்ன குழந்தை வந்துடுச்சுன்னு வையுங்களேன். நீங்க இத்தனை நாள் இத்தனை வருஷம் வளர்ந்து பெரியவனானப்போவெல்லாம் உங்களுக்குப் பாக்க கெடைக்காத உங்க அம்மா அப்பாவோட இன்னொரு முகம் உங்களுக்குப் பாக்க கெடைக்கும். உதாரணத்துக்குக் கல்லூரி பேராசிரியரா இருந்து ஓய்வு பெற்ற எங்க அப்பான்னா எனக்கு எப்பவும் ஒரு மரியாதை கலந்த பயம் இருந்துக்கிட்டே இருக்கும். என்னோடயும், என் தம்பியோடயும் சிரிச்சிப் பேசி ஜோக் எல்லாம் அடிப்பாருன்னாலும், தன்னோட பேத்தியைத் தூக்கிக்கிட்டு வாசல்ல நின்னுக்கிட்டு "கா...கா..."ன்னு கத்தி காக்காவைக் காட்டறப்போ அவரு குழந்தையோட குழந்தை ஆகறதைப் பாத்தா எனக்கே கொஞ்சம் ஆச்சரியமா இருக்கு. அதோட தாத்தாக்களுக்கும் பேத்திகளுக்கும் நடுவில் எப்போவும் இந்த விளையாட்டுத் தனங்கள் இருக்கும் போலிருக்கு. எங்கம்மாவோட சின்ன வயசுல அவங்க தாத்தா(அம்மாவைப் பெத்த அப்பா) எங்கம்மாவைப் பாத்து பாட்டு பாடுவாராம்.
"பஞ்சாப் லேடி கொஞ்சம் கஞ்சு இருந்தா தாடி"ன்னு :)

அதே மாதிரி நாம நம்ம பெத்தவங்க கிட்ட பேச முடியாததை பேரக்குழந்தைகள் தாத்தா/பாட்டி வயசுள்ளவங்க கிட்ட சுலபமாப் பேசிடுதுங்க. அதுங்களுக்கு அந்த வயசு வித்தியாசம் எல்லாம் புரியறதில்லை. அவங்க வித்தியாசமா எதாச்சும் பேசுனாலும் பெரியவங்க கண்டுக்கறதில்லை. இதை நானே கண்கூடாப் பாத்துருக்கேன். என்னோட தாத்தா(அம்மாவோட அப்பா) ஏர்ஃபோர்ஸ்லேருந்து ஓய்வு பெற்றதும் பெங்களூர்ல துணிக்கடை வச்சிருந்தாரு. டொம்லூர் பகுதியில் ஒரு சின்னக் கடை தான். அந்த கடைக்குப் பக்கத்துல இருக்கற வீடுகள்லேருந்து சில சின்னக் குழந்தைகள் சாயந்திர வேளைகள்ல எங்க தாத்தா கடைக்கு வந்து வெளையாடும்ங்க. அப்போ நான் காலேஜ் முடிச்சிட்டு வேலைக்குச் சேந்துருந்த சமயம். ஒரு நாள் நானும் தாத்தா கூட கடைக்குப் போயிருந்தேன். ராஷ்மின்னு ஒரு சின்னப் பொண்ணு அடிக்கடி எங்க தாத்தா கடைக்கு வரும். அந்த பொண்ணு கன்னடப் பொண்ணு, பெங்களூர்ல இருக்கறதுனால தமிழ் புரியும்னாலும் தமிழ் பேச வராது. எங்க தாத்தா பல வருஷமா பெங்களூர்ல இருந்தாலும் அவருக்குக் கன்னடம் பேச வராது. இவரு தமிழ்ல கேக்கற கேள்விகளுக்கு அந்தப் பொண்ணு புரிஞ்சிக்கிட்டு கன்னடத்துல பதில் சொல்றதை பாக்கறதுக்கே சுவாரசியமா இருக்கும். ஸ்கூலுக்குப் போனது, போயிட்டு வந்து டிபன் சாப்பிட்டது இதை பத்தி எல்லாம் கேள்வி கேட்டுட்டு எங்க தாத்தா அந்த பொண்ணு ராஷ்மி கிட்ட கேட்ட கேள்வி - "என்னை கட்டிக்கிறியாடி?". அந்த ஆறு வயசு பொண்ணுக்கு அது என்னா புரிஞ்சுதோ தெரியாது. ஆனா அது சொன்ன பதில் "ஐ...நிம் தலே" :)