Monday, December 21, 2009

படு ரொமாண்டிக்கான பாடல் ஒன்னு...

பழைய பாடல்கள் அப்பப்போ கேக்கறதுண்டுன்னாலும், ஒரு சில பாடல்களைக் கேக்கும் போது "பலமுறை இந்த பாட்டைக் கேட்டுருக்கோம், ஆனா இந்த பாட்டோட அழகை இது நாள் வரைக்கும் கவனிக்காம இருந்துட்டோமே" அப்படின்னு தோனும். அப்படி பட்ட பாடல் ஒன்னைப் பத்தி இன்னிக்குச் சொல்றேன். படு ரொமாண்டிக்கான அழகான காதல் ரசம் ததும்பும் பாடல்...வேற யாரு எழுதிருக்க முடியும். கவியரசர் கண்ணதாசன் தான். கர்ணா படத்துல வர்ற "மலரே மௌனமா?" பாடல் அமைஞ்ச தர்பாரி கானடா ராகத்துல அமைஞ்ச இன்னொரு சூப்பர் பாடல் இது. எனக்கு இப்பாடலில் மிகவும் பிடித்த சில பஞ்ச் வரிகளை சிவப்புல குறிச்சிருக்கேன்.

படம் : போலீஸ்காரன் மகள்
இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடல் : கண்ணதாசன்
பாடியவர்கள் : P.B.ஸ்ரீநிவாஸ் & S.ஜானகி

PBS:
பொன் என்பேன் சிறு பூவென்பேன்
பொன் என்பேன் சிறு பூவென்பேன்
காணும் கண்ணென்பேன்
வேறு என்னென்பேன்

SJ:
என்னென்பேன் கலை ஏடென்பேன்
என்னென்பேன் கலை ஏடென்பேன்
கண்கள் நானென்றால் பார்வை நீயென்பேன்
Both:
ஆஹாஹா ... ஓஹோஹோ ...

PBS:
கொத்துமலர் எடுத்து முத்துச் சரம் தொடுத்து
சிட்டு முகம் பார்த்தே சிரித்திருப்பேன்
கொத்துமலர் எடுத்து முத்துச் சரம் தொடுத்து
சிட்டு முகம் பார்த்தே சிரித்திருப்பேன்

SJ:
தொட்டவுடன் நெஞ்சில் துள்ளி வரும் வெள்ளம்
கண்டு கண்டு நானும் களித்திருப்பேன்
தொட்டவுடன் நெஞ்சில் துள்ளி வரும் வெள்ளம்
கண்டு கண்டு நானும் களித்திருப்பேன்

PBS:
உன்னை நான் அறிவேன் என்னை நீ அறிவாய்
உன்னை நான் அறிவேன் என்னை நீ அறிவாய்
உன்னை நான் அறிவேன் என்னை நீ அறிவாய்
உன்னை நான் அறிவேன் என்னை நீ அறிவாய்

SJ:
நம்மை நாம் அறிவோம் வேறு யார் அறிவார்
நம்மை நாம் அறிவோம் வேறு யார் அறிவார்


PBS (Background humming by SJ):
பொன் என்பேன் சிறு பூவென்பேன்
பொன் என்பேன் சிறு பூவென்பேன்
காணும் கண்ணென்பேன்
வேறு என்னென்பேன்

SJ:
சின்னச் சின்ன பறவை அன்னை அவள் மடியில்
தவழ்வது போல் நான் தவழ்ந்திருப்பேன்
சின்னச் சின்ன பறவை அன்னை அவள் மடியில்
தவழ்வது போல் நான் தவழ்ந்திருப்பேன்

PBS:
கண்ணை மெல்ல மறைத்து உன்னைக் கையில் எடுத்து
காலமெல்லாம் நான் அணைத்திருப்பேன்

கண்ணை மெல்ல மறைத்து உன்னைக் கையில் எடுத்து
காலமெல்லாம் நான் அணைத்திருப்பேன்

SJ:
உன்னை நினைத்திருப்பேன் என்னை மறந்திருப்பேன்

PBS:
கண்ணில் கலந்திருப்பேன் நெஞ்சில் நிறைந்திருப்பேன்

SJ (Background humming by PBS):
என்னென்பேன் கலை ஏடென்பேன்
என்னென்பேன் கலை ஏடென்பேன்
கண்கள் நானென்றால் பார்வை நீயென்பேன்

This feature is powered by Dishant.com - Home of Indian Music


'வர்ல்ட் மூவிஸ்' சேனல்ல எப்பவோ அரைகுறையா பாத்துட்டு நிறுத்திய இரானிய திரைப்படம் ஒன்னு ஞாபகத்துக்கு வந்துச்சு. இரானிய படங்கள் பாத்தா தான் உலகத் திரைப்படங்கள் பாத்ததா ஒத்துக்குவாங்கன்னு தமிழ் வலையுலகில் இயங்கி வர்ற இந்த மூனு வருஷ காலத்துல புரிஞ்சிக்கிட்டேன். இரானிய திரைப்படம் பத்தி ஞாபகத்துக்கு வந்துச்சுன்னு சொன்னேன் இல்லியா? சென்னை திரும்பறதுக்காகப் பாரிஸ்லேருந்து துபாய் வந்துட்டுருந்த போது எமிரேட்ஸ் விமானத்துல இருந்த தொலைக்காட்சி திரையில 'Arabic Movies' அப்படீங்கற லிஸ்டைப் பார்த்துட்டு வந்தது. ஆனா இரானிய படங்கள் வேறு அரேபிய திரைப்படங்கள் வேறுன்னு அஞ்சு நிமிஷம் பாத்ததுமே புரிஞ்சுடுச்சு. அரேபிய நாடுகளில் பாலிவுட் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கறது ஏன்னும் புரிஞ்சது.

ஏன்னா நான் பார்த்த படம் அப்படி. படத்தோட பேரு Omar w.Salma. இதே படத்தோட இரண்டாவது பகுதியும் வந்துட்டதா கேள்வி பட்டேன். பாலிவுட் மசாலா திரைப்படங்களே தோத்துப் போற அளவுக்கு பயங்கர மசாலா கதை. "கோகுலத்தின் சீதை" மாதிரி ப்ளேபாய்களான அப்பா-மகன் இருவர். அப்படி பட்ட ப்ளேபாயான ஓமரை எப்படி சல்மாவின் காதல் திருத்துகிறது என்பதே கதை.



படத்தை பயங்கர கில்மாவா எடுத்துருக்காங்க. சல்மாவா நடிச்சிருக்கற அம்மணி மாய் அஸ் எல்தீன்(Mai Ezz El Din) செம க்யூட்டுங்க. சிரிச்சா ரொம்பா அழகா இருக்காங்க. திருத்தம்...சிரிச்சாலும் ரொம்ப அழகா இருக்காங்க. இரானிய படங்கள் மாதிரி இருக்கும்னு எதிர்பார்த்த நான் பார்த்த அந்த அரேபிய படம் எனக்கு பல ஆச்சரியங்களைத் தந்தது. மேற்கத்திய நாடுகளுக்கு இணையான உடைகள். துள்ளலான இசை. இன்னும் பல பல :)






இந்த மாதிரி படங்கள் எல்லாம் எந்த அரேபிய நாட்டுல எடுக்கறாங்க சாமி? துபாய் மக்கள்ஸ் யாராச்சும் இந்த மொழி படங்களைப் பாத்துருக்கீங்களா? உங்களுக்கு தெரிஞ்ச விபரங்களைச் சொல்லிட்டு போங்கங்கோ!

பி.கு: நான் ஓமர் சல்மா படத்தை sub-title இல்லாம தான் பார்த்தேன் :)

Tuesday, December 08, 2009

பாரிமுனையில் கைப்புள்ள

"அடுத்த வாரம் நான் பாரிசுக்குப் போறேன்"

"பஸ்லியா? டிரெயின்லயா?"

ஒரு சோதனையா ரெண்டு மூனு பேரு இதே கேள்வியைக் கேட்டுட்டாங்க. அதனால ஒரு வரலாற்றுச் சான்றா இருக்கட்டுமேன்னு -




மேல இருக்கும் படம் மோனாலிசா ஓவியம் இருக்கும் லூவர் அருங்காட்சியகத்தில்(Louvre Museum) எடுத்தது.



ரொம்ப நாளா ஒரு பதிவு டிராஃப்டலேயே இருக்கு. அப்போ எழுதி வச்சதை அப்படியே இப்ப இந்த பதிவுல போடறேன். நாய் சேகராகிய நான், கிம்ச்சீ நினைவுகள் அப்படின்னு எல்லாம் தலைப்பு யோசிச்சு வச்சு இன்று "light of the day" காணப் போகும் அந்த அரைகுறை பதிவுக்கு வயசு மூனு.

"நாய் சேகராகிய நான்
11.11.2003

கிம்ச்சீ நினைவுகள்


நானும் பயணம் சம்பந்தப் பட்ட பதிவு எதுவும் எழுதக் கூடாது எழுதக் கூடாதுன்னு பாத்து பாத்துருந்து, ஒரு வாரமா கை துறுதுறுன்னும் போதெல்லாம் கூட கட்டிப் போட்டு வச்சிருந்தேன். சொம்மா பயணத்தையே எழுதிட்டிருந்தாலும் போர் அடிச்சிடுமில்லியா...அதான். ஆனா பாருங்க இன்னிக்கு நம்ம தம்பி ராயல் ராம் சாமியோட பேசிட்டு இருக்கும் போது "நீங்க எங்கேயும் ஃபாரின்லாம் போனதில்லியா"ன்னு ஒரு கேள்வி கேட்டு வச்சாரு. (கறி தோசை, ஈரல் இட்லி இது போல இன்னும் சில சமாசாரங்களைப் பத்தி சொல்லி நாக்கு ஊற வச்சி வெறுப்பேத்தி விட்டுட்டு தான் இந்த கேள்வியைக் கேட்டாரு. கறி தோசையோட ரெசிப்பி எல்லாம் வேணும்னா
ராயலைக் கேளுங்க). "அட ஆமா இல்லை...நாம கூட மூனு வருசத்துக்கு முன்னாடியே ஃபாரின் ரிட்டன் இல்ல?:)"அப்படின்னு நினைச்சிக்கிட்டேன். "போயிருக்குறேம்பா ஒரே ஒரு வாட்டி போயிருக்குறேன்" அப்படின்னேன். "எந்த ஊரு"ன்னு கேட்டாரு ராம். "கொரியா"ன்னு சொல்லி வாயை மூடறதுக்குள்ள லகலகன்னு ஒரு சிரிப்பு. "உங்களுக்கு இந்த நாடு தான் கெடச்சிதா...அமெரிக்கா, யூகே மாதிரி வேற நல்ல ஊரே கெடக்கலியா?"ன்னு ஒரு கேள்வி கேட்டாரு.

அப்பவே தலைபாடா அடிச்சிக்கிட்ட்டாரு ஆப்டெக்ல நமக்கு ப்ரொக்ராமிங் சொல்லிக் குடுத்த வாத்தியாரு... "பாயிண்டர்ஸையும், அரேஸையும் டர்போ சில ஒழுங்கா படிச்சிக்க... அப்ப தான் கஷ்டமான ப்ராப்ளங்களுக்கும் சுலபமா ப்ரோகிராம் எழுத முடியும்னு". கேட்டோமா அதையெல்லாம்? இல்லியே...லேப்ல போய் ஒக்காந்தா கை தானாவே graphics.hக்கும் conio.hக்கும் தானே போவும்? அப்பவே ஒழுங்கா ஒரு ஃபாக்டோரியல், ஃபிபோனேசி இந்த மாதிரி எதாச்சும் ஒரு புரோகிராம் உருப்படியா எழுத கத்துக்கிட்டிருந்தோம்னா இந்நேரம் நமக்கும் ஆஃபிஸ்ல ஃபைவ் டே வீக் கிடைச்சிருக்கும், அமெரிக்கா, ஆஸ்திரேலியான்னு ஆன்சைட்டும் கெடச்சிருக்கும், நம்ம 12பி ஸ்யாம் மாதிரி "
"ஹியர் டு கோ"ன்னு சோக்கா பீட்டரும் வுட்டுருக்கலாம். நமக்கு எங்கே...மலைக்கு நடுவுலேருந்து சூரியன் உதிக்கற மாதிரியும், சக்கரம் சுத்தற மாதிரியும் அவுட்புட் வர்ற கிராஃபிக்ஸ் ப்ரோகிராம்ல தானே மனசு லயிச்சிச்சு?




கொசுவத்தி சுத்தனும்னு நெனச்சி எழுத உக்காந்தா, கொசு மட்டும் தான் வருது, வத்தி வர மாட்டேங்குது. சரி எதோ ஒப்பேத்தறேன். இன்னைய தேதியிலிருந்து ஒரு இருபது வருஷத்துக்கு முன்னாடி...முன்னாடி என்னானு கேக்கறீங்க? அதானே? இன்னைய தேதியிலிருந்து இருபது வருஷத்துக்கு முன்னாடி இப்போ இருக்கறதை விட ஒரு இருபது வயசு இளமையா இருந்தேன். இப்ப பெருத்து கறுத்தக்குட்டியா ஆயிட்டாலும் அப்போ சிறுத்தை குட்டியா இருந்தேன். அந்த சிறுத்தை..."



இப்போ படிச்சிப் பாக்கும் போது எனக்கே அந்த டிராஃப்ட் ரொம்ப சில்லறையா தெரியுது. கொடுமை என்னன்னா கறுத்தக் குட்டி, சிறுத்தை குட்டின்னு எல்லாம் பில்டப் குடுத்து எழுதுன அந்த பத்தி ஏன் எழுதனேன்னு எவ்வளோ யோசிச்சாலும் இன்னும் நியாபகத்துக்கு வர மாட்டேங்குது.

இந்த பதிவு இன்னிக்கு வருதுன்னா அதுக்கு காரணம் இந்த பாட்டு தான். ஏனோ இரவு பதினோரு மணிக்குக் கேட்டுக்கிட்டு இருக்கும் போது மனசு கொஞ்சம் லேசான நேரத்துல எதாச்சும் எழுதுவோமேன்னு தோனுச்சு. நீங்களும் கேட்டுப் பாருங்க.



அடுத்த வாரம் இந்த நேரமெல்லாம்...ரிட்டர்ன் ஆஃப் தி கைப்புள்ள.