Thursday, July 27, 2006

கிறுக்கு புடிச்சுடுச்சு...

என்ன கிறுக்குன்னு ஒரு எட்டு வந்து பாத்தீங்கனாலே புரிஞ்சிடும்...


1. வந்ட்டாருடா வெண்ரு வெட்டுக்கிளி கண்ணால அவுட் ஆஃப் ஃபோகஸ் படம் புடிக்க...


2. சில்ஹுவெட் படம் ஜஸ்ட் மிஸ் மாமே


3. ஹி...ஹி...வெள்ளை கலர் செம்பா :)



4. பயலுங்களோட ஒரு "செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்"


5. நேட் ஜியோ பாக்குறியா அவுட் ஆப் ஃபோகஸ்ல?


6. கலர்ஃபுல்லா சிரிச்சா கொறஞ்சா போய்டுவே?


7. ஏபிசிடி உங்கொப்பன் தாடி


8. சீபியா டோனில் ஒரு மெகா சைஸ் சட்டி


9. மேகம் கொட்டட்டும்...


10. மழை பேஞ்சு ஊரெல்லாம் தண்ணி


11. ஹ்ம்ம்...இப்பிடி கேப்மாரித்தனம் செஞ்சாத் தான் பளாக் எல்லாம் படிக்க முடியுது :(

படத்தை எல்லாம் பாத்துட்டு உங்க ஃபீலிங்ஸ் ஆஃப் இந்தியாவையும் சொல்லுங்க சாமிகளா...

Saturday, July 22, 2006

செம்பருத்தி விநாயகர்

புதுசா வாங்கின டிஜிட்டல் கேமராவுக்குப் பளாக்ல செம்பருத்தி விநாயகரோட பிள்ளையார் சுழி போடறேன். இங்கே க்ளையண்ட் ஆபீசுல வச்சிருக்கிற விநாயகர் சிலைக்கு தினமும் ஒரு பூ அலங்காரம் நடக்கும். இன்னிக்கு செம்பருத்தி பூவுக்கு சான்ஸ்.

டிஜிட்டல் கேமரா வாங்க ஆலோசனைகளை வழங்கிய நாகை சிவா, பேராசிரியர் கார்த்திக், ஜனா, ஐயப்பன் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. நான் வாங்குன கேமரா Canon Ixus750. இது வரைக்கும் எடுத்த படம் எல்லாம் நல்லா வந்திருக்கு.


கெஸ்ட அவுஸ் வெளியில தன்னுடைய வேலையைப் பாத்துட்டு இருக்குற குருவி. (சிட்டுக் குருவி இல்லப்பா!). இதோட பேரு என்னன்னு சொன்னீங்கன்னா நல்லாருக்கும்.


மரத்து மேல அனகோண்டா. ஆனா எங்களை எல்லாம் ஒன்னும் செய்யாதில்ல...ஹ...ஹ...ஹஹ்ஹ


ஒரு மழை நாள் இரவில் சுவற்றில் மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருக்கும் அட்டை. ஈரத்தின் மீது ஊர்ந்து செல்வதினால் அது வாலுக்குப் பின்னாடி பாருங்க ஈரமும் ஊறு(ர்)கிறது.

இந்த படங்களை பதிவிறக்கம் செஞ்சு Photo Editor இல்ல வேற எதாச்சும் image editing softwareஇல் ஜூம் செஞ்சு பாத்தீங்கன்னா இன்னும் பெருசாத் தெளிவாத் தெரியும்.
மேலே இருக்குற குருவியை மட்டும் ஜூம் செஞ்சு கீழே இன்னொரு படம் போட்டிருக்கேன் பாருங்க.

கீழே இன்னொரு படம் போட்டிருக்கேன்னு எழுதிட்டு படத்தை ஏத்த முயற்சி பண்ணறேன்...ஏறவே மாட்டேங்குது. இந்த மாதிரி கப்பித் தனமா எதாச்சும் பண்ணிட்டு அசடு வழியறதுக்காகவே வெள்ளைக்காரன் சூப்பரா ஒரு வார்த்தை கண்டுபுடிச்சி வச்சிருக்குறான்...Oops!!!


ஊப்ஸுக்குக் காரணமா இருந்த அந்த குருவி படம் தான் மேலே நீங்க பாக்குறது. இதோட பேரு என்னன்னு யாருக்காச்சும் தெரிஞ்சா சொல்லுங்க.

நான் எடுக்க முயற்சி செய்யும் அவுட் ஆப் போகஸ் படங்கள் இந்த மாதிரியானவை.
Philly
Bokeh
யாராச்சும் விஷயம் தெரிஞ்சவங்க உதவி செஞ்சா நல்லாருக்கும்.

Tuesday, July 04, 2006

'வருத்தப்படாத' அப்பாவிற்கு...

இவ்வளவு நாள் வெறும் வருத்தப்படாத வாலிபராய் இருந்து நேற்றிரவு ஒரு பெண் குழந்தைக்குத் தந்தை ஆனதன் மூலம் 'வருத்தப்படாத அப்பா'வாகப் பதவி உயர்வு பெறும் வ.வா.ச.வின் போர்வாள் கை தேவிற்கும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய உளங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குட்டி பாப்பாவிற்கும் அங்கிளுடைய வாழ்த்துகள்.

Sunday, July 02, 2006

ஆறு போட கூப்புட்டாக

இத்தனை வருச சர்வீசுல நாம செஞ்ச சாதனைகளைப் பத்தி ஆறு ஆறா எழுதச் சொல்லி 'மனதின் ஓசை' ஹமீது கூப்புட்டாக, நம்ம விவசாயி இளா கூப்புட்டாக... இப்பிடியே இன்னும் ஒரு நாலு "கூப்புட்டாக" வரிசையாப் போட்டா ரைமிங்கா படிக்கிறதுக்கு நல்லாத் தான் இருக்கும். அதுக்குன்னு பொய்யாச் சொல்ல முடியும்? இல்ல அதெல்லாம் சொல்லித் தான் நமக்குப் பழக்கமா?(சரி...சரி :) அடங்குறேன்) நம்மளப் பத்தி நாமளே தமுக்கு அடிச்சிக்கிறதுக்குத் தானே இப்பிடி ப்ளாக்கைத் தொறந்து வச்சி கல்லாவுல ஒக்காந்துருக்கோம்? அதுக்குன்னே ரெண்டு பேரு வெத்தலை பாக்கு வெச்சு அழைக்கும் போது கசக்குமா என்ன? நம்ம பதிவுகள்ல எங்கேயாச்சும் எப்படியாச்சும் சொருவிடனும்னு நெனச்சி ஸ்டாக்ல வச்சிருந்த பைசா பொறாத சில பல வெசயங்களை,, 'அவுக கூப்புட்டாக'வை சாக்கா வெச்சி இப்ப இங்கே கொண்டாந்து கொட்டறேன். கொட்டறதுக்கு வழிவகை ஏற்படுத்தி கொடுத்த மாவீரன்'மனசின் மைக்செட்' ஹமீது, எம்.ஏ.எல்.எல்.பி அவர்களே, வேளாண் தமிழன் 'விவ்' ரிச்சர்ட்ஸ் அவர்களே...ஒங்க ரெண்டு பேத்துக்கும் டேங்ஸ்பா.

மொதல்ல என்னைப் பத்தி ஆறு
1. பேரு : பேருக்கா பஞ்சம்? சென்னையில் வாழும்/வாழ்ந்த பல்லாயிரக் கணக்கான மோகன்களின் ஒரே பட்டப்பேரான 'லூஸ் மோகன்', மேல் வீட்டு ஆண்ட்டி சூட்டிய 'மோகு', வடநாட்டில் 'வாக்கப்பட்ட' பாவத்துக்காக 'மோகன் பியாரே', ஸ்கூலில் 'மோசி', காலேஜில் 'மாம்ஸ்' அல்லது 'மோகனா', ப்ளாக்கில் கைப்புள்ள

2. ஊரு : பல நாளா வெளியூரு தான். ஆனா நாப்பது வருசத்துக்கும் மேலா சென்னையில இருந்து, செம்பரம்பாக்கம் தண்ணி குடிச்சாலும் தோப்பனார் இன்னும் தன்னோட ஊரு சிதம்பரம்னு தான் சொல்லிக்கிறாரு.

3. படிப்பு/வேலை : எந்த கட்டைவிரலால கைநாட்டு வச்சா செல்லும்னு தெரியுற அளவுக்கு இருக்குது/ப்ளாக் படிக்கிறதுக்கு நடுவுல வேலை செய்யறதுக்கு வெளியூருல ஒக்காத்தி வச்சு பஞ்சப்படி அளக்கற ஒரு வேலையும் இருக்குது.

4. கடவுள் : இருக்காரு. நம்மோட மனசாட்சியும் கடவுளும் ஒன்னு தான் என்பது பல நாள் நம்பிக்கையா இருந்துச்சு. அதாவது இறை வழிபாடு என்பது அவசியமானது இல்ல அப்படிங்கிற மாதிரி. கொஞ்சம் பெரியவனா ஆனதும், நமக்கும் மேல ஒரு சக்தி இருக்கு. அந்த சக்தியின் தாக்கத்தினாலும் அருளினாலும் தான் நம்முடைய மனசாட்சியும் நல்வழியில் இயங்கி நமக்கு நல்வழி காட்டுகிறது, அதனால் அந்த சக்தியை(supreme power) வழிபடுதல், நம் மனசாட்சியினை(conscience) நல்வழியில் இட்டுச் செல்லவும், நாம் நல்ல செயல்களைச் செய்யவும், நல்ல எண்ணங்களை உருவாக்கிக் கொள்ளவும் உதவும் என்ற அளவில் தற்போது உள்ளது என்னுடைய கடவுள் நம்பிக்கை.

5. கொளுகை : அவரும் இருக்காருங்க. அவங்கவங்க அவங்கவங்களோட 'சொந்த வியாபாரத்தைக்' கவனிச்சாலே எல்லாரும் சந்தோஷமா இருக்கலாம்ங்கிறது நம்ம கொளுகை. என்னைப் போல ஒருவனும் இல்லை என நான் எண்ணுவது எவ்வாறு தவறாகாதோ அதே போல அடுத்தவன் எண்ணுவதிலும் தவறில்லை என்ற எண்ணம் எந்நாளும் என் மனதில் இருக்க வேண்டும். என்னைப் போலவே அனைத்து மனிதர்களும் இருக்க முடியாது என்பதனால் தான் பல நிறங்களிலும், உருவங்களிலும், மொழிகளிலும், மதங்களிலுமான மனிதர்கள் இருக்கிறார்கள். என்னை எவ்வாறு(எனது அனைத்து குறை நிறைகளுடன்)அடுத்தவர்கள் பார்க்க வேண்டும் என நான் நினைக்கிறேனோ, அதே கண்ணோட்டத்தில் அடுத்தவனையும் நான் காண முற்பட வேண்டும். முடிந்தவரை அடுத்தவனிடம் உள்ள நல்லவற்றைக் கற்பதிலும் காப்பியடிப்பதிலும் தவறொன்றுமில்லை. யாருக்கும் அறிவுரை சொல்லும் அளவுக்கு நமக்கு அறிவு இல்ல, அதே சமயத்தில் அடுத்தவர் நமக்கு சொல்லும் அறிவுரையை நாம் கற்றுக் கொள்வதில்(சரியானதாக படும் பட்சத்தில்) குறைந்து விடமாட்டோம், அடுத்தவர் நம்மிடம் அறிவுரை கேட்டால், 'கேட்டால் மட்டுமே' நமக்கு சரியென தோன்றுவதைச் சொல்லுவது என்பது இன்னொரு கொளுகை.

6. கொசுறு: பலவிதமான எதிர்மறைகளால்(paradox) உருவாக்கப் பட்டவன். அசைவம் சாப்பிட்டாலும் ஆட்டையோ, கோழியையோ அறுப்பதைப் பார்க்கப் பிடிக்காதவன். உணவுக்காக ஒரு உயிர் கொலையாவதைப் பார்ப்பதைத் தவிர்க்க frozen foodஐ தேடி ஒரு சூப்பர் மார்க்கெட் போய் வாங்குவேனே ஒழிய அதை உண்பதை நிறுத்தாதவன். இவ்வாறாகப் பல paradoxகளின் கூட்டே அடியேன்.

ஒன்னும் பிரிலை இல்ல? எப்படி பிரியும்? அல்லாமே பெளாசாஃபியாச்சே? :). அய்யா சாமிங்ளா! இதை படிக்கிற புண்ணியவான்களே, இது வரைக்கும் படிச்சிட்டு போர் அடிக்குதுன்னு அப்படியே ஓடிப் போயிடாதீங்க. இன்னும் கொஞ்சூண்டு தான் இருக்கு, அதையும் படிச்சிருங்க. ப்ளீஸ்!

இளையராஜாவின் அறுசுவை
மீஜிக்கைப் பத்தி வாயைத் தொறந்தாலே இளையராஜா பேரு தான் வரணுமான்னு என்னை நானே கேட்டுக்கறதுண்டு. ஆனா அதுக்குப் பதிலும் ஒடனே கெடச்சிடும் இவரு பாட்டுகள்ல இருக்குற 'கிக்' வேற எங்கேயும் கெடக்கறதில்ல...அதான். காலேஜ் படிக்கும் போது, இளையராஜா பாடல்களின் சிறப்பைப் பத்தி பேசி பரவசப்பட்ட அனுபவங்களும் பல உண்டு, நானும் எனது தனிமையும் ராஜா பாடல்களினால் உணர்ச்சி வயப்பட்டு திக்குமுக்காடி நின்ற அனுபவங்களும் பல உண்டு. இசைஞானியின் இசையில் ஆறு வெவ்வேறு சுவைகளைப்(சுவை என்பதை mood என்ற பொருளில் கொள்க) பத்தி எழுதறேன்.
1. வெகுளித் தனம்(Innocence) - இந்தப் பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டுகளில் ஒன்னு. சின்னப் பசங்க(வளர்சிதை பசங்க!) ஒரு தோப்புக்குள்ள டிராமா போட்டு வெளாடுற மாதிரியான ஒரு வித்தியாசமான பாட்டு. அவுங்களோட சின்ன சின்ன ஆசைகள், கனவுகள் இதெல்லாம் சொல்ற மாதிரி பாடல் வரிகள். படம் கல்லுக்குள் ஈரம். கேக்கும் போதே ஒரு உற்சாகம் வந்து தொற்றிக் கொள்ளும். இதே மாதிரியான இன்னொரு பாட்டு அழகி படத்துல வர்ற டமக்கு டமக்கு டம்.

தோப்பிலொரு நாடகம் நடக்குது ஏலேலங் கிளியே...

2. காதல் - காதலைப் பத்தி பல பாடல்கள் இருந்தாலும், வித்தியாசமா இருக்கட்டுமேன்னு இந்த பாட்டைப் போடறேன். சுரேஷும், சுலோச்சனாவும் தெலுங்கு படத்துல வர்ற மாதிரியான ஸ்டெப் எல்லாம் போட்டு 'உடற்பயிற்சி' நடனம் எல்லாம் ஆடியிருந்தாலும் இன்னும் இந்த பாட்டைக் கேக்கும் போது ஃபிரெஷ்ஷாத் தான் இருக்கு. பாட்டுக்கு நடுவுல வர்ற இண்டர்லூட்ஸ்(interludes)க்கு எவ்வளவு மெனக்கெட்டிருக்காருன்னு பாருங்க. ராஜாவின் பல பாடல்களைப் போல, இப்படத்து இசைநிரப்பிகளும்(interludesக்கு நான் வச்ச பேரு ஹி...ஹி...) மனதில் நிக்கும். படம் வெள்ளை ரோஜா.

சோலைப்பூவில் வாடைத் தென்றல் ஆடும் நேரம்...

3. கோபம் - இந்த பாட்டோட ஆரம்பத்துல ஒரு வயலின் இசை வரும் பாருங்க. அதுவே ரொம்ப சிறப்பா இருக்கும், அதிலேருந்து மெதுவா நகர்ந்து கோபம் கொப்பளிக்கும் ஒரு டியூனுக்குக் கொண்டு போயிருப்பாரு பாருங்க. கேட்டதும் ரௌத்திரம் பழகத் தூண்டும் ஒரு பாடல். பாடலின் வெற்றிக்கு அதை எழுதிய கவிஞரின் பங்களிப்பும் உண்டு என்பதில் ஐயமில்லை. படம் கண் சிவந்தால் மண் சிவக்கும். இதை விட ஆக்ரோஷமான கோவமான பாட்டு வேணும்னா பிதாமகன் படத்து 'அடடா அகங்கார கைகளில்' பாட்டைக் கேட்டு பாருங்க.

மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால்...

4. சோகம் - இந்த படத்துல எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு இது. கமலையும், மறைந்த கன்னட நடிகர் டாக்டர். ராஜ்குமாரையும் பின்னணி பாட வைத்ததும் இளையராஜா தான். மனதைப் புழியும் சோகத்தைக் கமலும் வெகு அருமையாக வெளிக் கொணர்ந்திருப்பார். படம் விருமாண்டி.

மாட விளக்கே யாரு இப்போ தெருவோரம்...

5. நகைச்சுவை - இந்த பாட்டு ஒரு காதலிக்கும் காதலனுக்கும் நடுவுல இருக்குற ஒரு மெல்லிய நகைச்சுவை(subtle humour) கலந்த உரையாடலை ஆதாரமாக வைத்து எழுதப்பட்ட நையாண்டி பாடல். 'கோவணத்தில் ஒரு காசிருந்தா கோழி கூவ ஒரு பாட்டு வரும், பாட்டு படிக்கிற என் மாமா உன் கோவணத்தில் ஒரு காசிருக்கா?' என்று அவள் டீஸ் செய்ய 'கோவணமும் இல்ல கையில் காசுமில்ல, பாட்டு வருதே என்ன புள்ள, கோயில் சிலை போல உன்னை கண்டதால் ஏத்தம் கெடுதே கன்னி புள்ள' அப்படின்னு அண்ணல் காமெடியா பதிலும் சொல்லி தன்னோட லவ்ஸையும் வெளிப்படுத்தறாரு. பாடலாசிரியரும் இளையராஜா என்பது இப்பாடலின் சிறப்பு. படம் நினைவே ஒரு சங்கீதம்.

ஏத்தமய்யா ஏத்தம் ஒனக்கு ரொம்ப ஏத்தமய்யா ஏத்தம்...

6. பல சுவை - இத மாதிரி ஒரு பாட்டை என்னால போட முடிஞ்சதுன்னா, நான் பெருசா சாதிச்சிட்டதா நெனச்சிக்குவேன்னு ராஜாவோட புதல்வர் யுவன் சங்கர் ராஜா ஒரு பேட்டியில் சொல்லியிருந்தது ஞாபகம் வருது. ஒரு பாட்டுக்குள் இவ்வளவு உணர்வுகளா அப்படின்னு மலைக்க வைக்கிற ஒரு 'உணர்வுகளின் களஞ்சியம்' இந்த பாட்டு. மகிழ்ச்சி, சோகம், எதிர்பார்ப்பு இப்படின்னு பல வித 'மூட்களைப்' பார்க்க முடியும். இந்த இசையை சி மேஜர், டி மேஜர்னு பிரிக்கத் தெரியாதுன்னாலும் இது ஒரு 'class composition'ன்னு மட்டும் புரியுது. படம் அவதாரம்.

தென்றல் வந்து தீண்டும் போது...

ஆறு நிகழ்ச்சிகள்
நிஜ வாழ்வில் நிகழ்ந்த ஆறு குட்டி குட்டி சம்பவங்கள்.
1. புது தில்லியில் இருந்த போது கி.பி,2003இல் ஆர்.கே. புரத்தில் உள்ள தில்லி தமிழ்ச் சங்கத்தில் ஒரு வயலின் அரங்கேற்ற நிகழ்ச்சியைக் காணும் வாய்ப்பு கிடைச்சது. ரெண்டு சின்ன பசங்க, ஒரு சின்னப் பொண்ணு மூணு பேருக்கும் ஒரே நேரத்துல ஒரே மேடையில அரங்கேற்றம். அவர்களுக்கு வாழ்த்து சொல்ல இசை விமர்சகர் சுப்புடு வந்திருந்தார். பெரிய பெரிய வித்வானுகளுக்கே சிம்ம சொப்பனமா இருக்கும் சுப்புடு சின்னப் பசங்க வாசிப்பைப் பத்தி என்ன சொல்றாருன்னு கேக்க ஆவலா இருந்தேன். ஆனா மூணு பேருமே அருமையா வாசிச்சாங்க. சுப்புடு மேடையில ஏறினார் "மூணு கொழந்தைகளும் ரொம்ப நன்னா வாசிச்சா. குறிப்பா இந்த ராகத்துல இந்த கீர்த்தனைல வர்ற இந்த சங்கதி பெரியவாளுக்கே சிக்கலா இருக்கும்(அவரு எதைப் பத்தி சொன்னாருன்னு இப்ப எனக்கு நியாபகமில்ல). அதையே ரொம்ப நன்னா வாசிச்சா" அப்படின்னு அவரு பேசிட்டு இருக்கும் போது சால்வையைக் கொண்டாந்து போத்தினாங்க. அப்போ ஆன் தி ஸ்பாட் அடிச்சாரு பாருங்க ஒரு டைமிங் ஜோக் - "ஹ்ம்ம்...சால்வை எல்லாம் போத்துறான்னு தெரிஞ்சிருந்தா, ஆத்துக்காரியையும் கூட்டிண்டு வந்திருப்பேன்". ஹ்ம்ம்ம்...இப்பவே இந்த போடு போடறாரே...இவரு சின்ன வயசுல எப்படி இருந்திருப்பாருன்னு அப்ப நெனச்சுக்கிட்டேன்.

2. "பத்து வருசத்துக்கு முன்னால பெங்களூர் பக்கத்துல ஒரு விமான விபத்து. அதுல பொழச்சவங்க பன்னிரண்டு பேரு தான். அதுல நான் ஒருத்தன். ஆறு எடத்துல மல்டிபிள் ஃபிராக்சர்ஸ். இருந்தாலும் அடுத்த முப்பதாவது நாள் நான் ஆபீஸ்ல இருந்தேன். யூ கைஸ் டோண்ட் ஹேவ் ஸ்டேமினா(You guys don't have stamina)" - வைரல் ஃபீவருன்னு மூணு நாள் லீவு போட்டதுக்கு இப்படி ஒரு முழு நீல பீலாவை அவுத்து வுட்டவரு எங்க முன்னாள் பாஸ். இது ஒரு சின்ன உதாரணம் தான். இதை விட பெரிய பெரிய கதையெல்லாம் இருக்கு.

3. மேலே குறிப்பிட்ட பெரிய பெரிய கதையெல்லாம் நானும் என் கூட அப்ப வேலை செஞ்ச மூணு பேரும் பகிர்ந்துக்கறது மிதுன் என்ற நண்பருடன். பெங்காலி காரர். இதெல்லாம் ஒரு புக்காப் போடுங்களேன்னு உசுப்பேத்துவார். எங்களை விட மூணு லெவல் சீனியர்னாலும் ஜாலியாகப் பழகக் கூடியவர். போன வருடம் ஜூன் மாதம் 20ஆம் தேதி பேன்க்ரியாஸ் கேன்சருடன் இரண்டாண்டு காலம் போராடிவிட்டு இயற்கை எய்தினார். அவருடைய கடைசி சில தினங்களில் அவரைப் பார்க்கச் சென்ற போது அவருடைய துணைவியார் அழுததைக் கண்டது, நெஞ்சைக் கனக்கச் செய்த ஒரு நிகழ்வு. அந்த கம்பெனியை விட்டும் இப்ப நான் வெளியே வந்தாச்சு. இன்னும் கொஞ்சம் நாட்களில் பல விஷயங்களைப் போலவே மிதுனும் மறக்கப் பட்டு விட்டிருப்பார். எப்பவாச்சும் இதை திரும்ப படிச்சேன்னா அவருடன் பழகிய நினைவுகள் ஞாபகம் வர்றதுக்காக இதை எழுதி வெச்சிக்கிறேன்.

4. ப்ள்ஸ் டூ முடிச்சிட்டு காலேஜுல் சேர்றதுக்காக டோட்(DOTE) பொறியியல் கல்லூரிகளின் விண்ணப்பப் படிவம் வாங்கிக் கொண்டு பல்லவன் பஸ்ஸுல் உக்காந்து வந்துட்டுருந்தேன். என் பக்கத்துல உக்காந்திருந்தவரு "தம்பி! DOTE காலேஜ் அப்ளிகேஷன் பார்ம் குடுக்க ஆரம்பிச்சிட்டாங்களா?" அப்படின்னு கேட்டாரு. "ஆமாங்க! நேத்துலேருந்து ஆரம்பிச்சிட்டாங்க"ன்னு சொன்னேன். "என் பொண்ணு கூட 95% வாங்கிருக்குப்பா. ஆனா எஞ்சினியரிங் வேணாம், நான் மெடிக்கல் தான் போவேன்னு சொல்றா" என்றார். நான் அதற்கு முந்தின வருடம் இருந்த கட் ஆஃப் விவரங்களைச் சொல்லிக்கிட்டிருந்தேன். எங்களுக்கு முன்னாடி உக்காந்திருந்த ஒருத்தரு "95%க்கெல்லாம் மெடிக்கல் சீட் கெடக்காது"ன்னு தானாவே வலிய வந்து ஒரு 'கருத்து' சொன்னாரு. என் பக்கத்துல உக்காந்திருந்தவருக்கு வந்துச்சு பாருங்க கோவம்"ஏங்க! உங்களை யாராச்சும் கேட்டாங்களா? அவன் அவன் எவ்வளவு டென்சன்ல இருக்கான்... இதுல வந்துட்டாங்க கெடக்காதுன்னு சொல்றதுக்கு. நான் அந்த தம்பி கிட்ட பேசிட்டிருக்கேன், உங்களுக்கு என்னங்க வந்தது. உங்க வேலை என்னமோ அத மட்டும் பாருங்க." அப்படின்னு பொரிஞ்சுத் தள்ளிட்டாரு. குழந்தைகளின் எதிர்காலத்தைக் குறித்து பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளும், கனவுகளும் எவ்வாறு இருக்கிறது என்று உணர்த்தியது அந்த நிகழ்வு.

5. நாலு ஆச்சா? ஆங்...ஒரு வாட்டி காலேஜ்ல ஃபிசிக்ஸ் லேப்ல சில பசங்க ரீடிங்கைத் தானாவே எழுதிக் கொண்டு போய் வாத்தியார் கிட்ட நீட்டுனதும், அவரு அதைப் பாத்துட்டு கூலாத் தமிழ்ல சொன்னது "தம்பி சீக்கிரம் போய் உண்மையா ஒரு தரம் ரீடிங் எடுத்துட்டு வந்துடுப்பா".

6. ஒரு வாட்டி நம்ம கூட்டாளி காட்டான் 'செல்வான் கான்' யாஹூ மெசஞ்சர்ல ஆன்லைன் வந்தப்போ 'ஹை'ன்னு சொன்னேன். அந்த நாய் எனக்குப் பதில் அனுப்புது 'a/s/l please'ன்னு. எனக்கு பல்பு குடுத்தை நெனச்சி கடுப்பு வந்தாலும் அப்புறமா பலமுறை நெனச்சி சிரிச்சிருக்கேன்.

ரசிக்கும்/ரசித்த/விரும்பும்/விரும்பிய ஆறு
1. ஒரு காலத்தில் தாவரங்களின் தாவரவியல் பேர்களைச்(Botanical names) சேகரிப்பதில் பயங்கரமான ஒரு ஆர்வம். காடு மேடு எல்லாம் சுத்தி புல், பூண்டெல்லாம் பொறுக்கிருக்கேன்.
2. கேலிகிராஃபி - நெடுங்காலமாக இருக்கும் ஒரு ஆர்வம். இப்பவும் அப்பப்போ(ஆடிக்கும் அமாவாசைக்கும்) பயிற்சி செய்யறதுண்டு.
3. தபால் தலை சேகரிப்பு - ஒரு 6 மாசத்துக்கு முந்தி வெறியாய் இருந்த இவ்விருப்பம் இப்போது கிடப்பது Cold storageஇல்.
4. பல மொழிகளைக் கற்றல் - அப்பப்போ பட்லர் மலையாளம், தெலுங்கு, கன்னடம் இதெல்லாம் பேச பிடிக்கும். ஞான் அப்பப்போ, மலையாளத்துல சம்சாரிக்கிறதைப் பாத்துட்டு என்னைக் குறிச்சு சிலருக்குச் சில சம்சயங்கள் உண்டு. பக்ஷே அதெல்லாம் நிங்களோட சொப்பனம்னு பரஞ்சிக்கிறேன். எனிக்கி இதில் வளர inderest...வேறொந்தும் இல்லா கேட்டோ:)
5. இப்பல்லாம் எங்கனா போறதுன்னா விமானத்துல அனுப்புறாங்களா? அதுல ஜன்னலோர சீட் வாங்கிட்டு எட்டிப் பாத்துட்டே வர்றது ரொம்ப பிடிக்கும். கீழே கண்ணு முன்னாடி ஒரு மேப் போட்ட மாதிரி இருக்குறதைப் பாக்குறது ஒரு தனி அழகு தான்.
6. சமீபகாலமா ஒரு நல்ல கேமரா வாங்கி The Hindu Folioல வர்ற மாதிரியான பயங்கரமான புகைப்படங்கள் எடுக்கணும்னு ஒரு விபரீத ஆசை. எந்த டிஜிட்டல் கேமரா வாங்கினா நல்லாருக்கும்னு யாராச்சும் சொன்னீங்கனா நல்லாருக்கும்.

அழைக்கும் அறுவர்
1. பேராசிரியர் முனை(னி)வர். க.பி. கார்த்திக் ஜெயந்த் - ஜாவா கோடிங் பத்தி மக்களுக்கு டிப்ஸ் குடுக்க ஆரம்பிச்ச இவரோட ப்ளாக், இப்ப கமலினி முகர்ஜி(யா?), அவுங்களைப் பாத்து "ஈ வேசவி சல்லாக்கா உந்தி"ன்னு சொல்ற லெவல்ல வந்து நிக்குது. டேட்டாபேஸ் சர்வரை ரீஸ்டார்ட் செய்யும் கடினமான பணிகளுக்கு நடுவேயும், போராளி 'காம்ரேட்' பாலாவின் துணையோடு க.பி.கழகத்தை நடத்தும் மருதைக்காரத் தம்பி.

2. 'வாரியார் புகழ்' மெட்டி ஒலி கோபி மாமா - பொட்டு வச்சு, ரிப்பன் கட்டி சிண்டு போட்டுக்கிட்டு இன்னும் பச்சப்புள்ள மாதிரி தெரிஞ்சாலும், வாரியார் சாமிகளைப் பத்திப் பெரிய விசயம் எல்லாம் எழுதறவரு. தமிழ், தெலுகு, மலையாளம் எல்லா மொழிகளுக்கும் எடிட்டர்(தமிழ்ல என்னப்பா?) போன்ற பெரிய பெரிய விசயத்தை எல்லாம் கண்டு புடிச்சு வச்சிக்கிட்டு மெட்டி ஒலி கோபி போலவே அமைதியா ஒக்காந்திருக்குற 'கோபி மாமா'.

3. வரிசங்கம் புகழ் சேதுக்கரசி 'மேடம்' - இவுங்க ப்ளாக்குக்கு 'பொல்லாத மௌனம்'னு பேரு. சரி வெறும் மௌனம் தானேன்னு நினைச்சா 'மௌனம் கலையும் வரை'னு ஒரு அபாய எச்சரிக்கை வேற குடுத்துருக்காங்க. ஆண்டாள் பாசுரத்துல வர்ற 'வரிசங்கத்துக்கு' அர்த்தம் எல்லாம் சொல்லி கொடுத்தாங்க. ஆனாலும் இவுங்க எங்க தமிழ் மிஸ் இல்ல :) இந்த அழைப்பை ஏத்துக்கிட்டு ஆறு பதிவு போட்டாச்சும் மௌனத்தைக் கலைக்கிறாங்களான்னு பாப்போம்.

4. காலேஜ் சீனியர் 'ஐயனார்' வி.எஸ்.எஸ்.ரவி - நம்ம காலேஜ் சீனியர். இவுரு காலத்துல நான் படிச்சிருந்தா எனக்கு டின்னு கட்டிருப்பாரு. அப்படிப்பட்ட பொல்லாத ராகிங் அனுபவங்களை அவரு ஃபர்ஸ்ட் இயர் படிக்கறப்போ "அக்காலத்துலேயே" சந்திச்சவரு. படிச்சது ஈ.சி.ஈ.ன்னாலும் ஒரு பாசத்துக்குக் கட்டுப்படு மெக்கானிக்கல் சீனியர்களுக்கு அஸைன்மெண்ட் எல்லாம் எழுதி குடுத்து, பத்தொன்பதாம் முனியாண்டின்னு பேரு வாங்குனவரு. இப்ப இணையத்துல ஐயனாரு கோயில் கட்டிக்கிட்டு இருக்கும் தஞ்சை தரணியின் தவப்புதல்வன்.

5. 'நான் இன்னும் சின்னப்புள்ள தான்' புகழ் அனுசுயா'மேடம்' - 'நான் இன்னும் சின்னப்புள்ள தான்' இது தான் இவுங்களுக்கு ரொம்பப் பிடிச்ச டயலாக். நான் ஒரு வாரம் டேரா போட்ட ஜிசிடியில் நாலு வருசம் படிச்சிப் போட்டவுங்க. மாற்றான் வீட்டு அல்லியைக் கண்டு அல்லியா, லில்லியா, குமுதவல்லியான்னு இவுங்களுக்குச் சமீப காலமா ஒரு பெருத்த சந்தேகம். தீர்த்து வைக்கிறவங்களுக்கு பரிசெல்லாம் குடுக்கறாங்களாம்.

6. 'நாயகன்' நன்மனம் ஸ்ரீதர் - நம்ம வருத்தப்படாத வாலிபர் சங்கத்து ஒற்றர்படைத் தலைவர். 'நீங்க நல்லவரா கெட்டவரா'ன்னு லார்டு மெக்காலேவைப் பாத்து கேள்வி கேக்குற நல்ல மனம் கொண்ட 'நாயகன்'. காதலிக்க நேரமில்லை படம் எடுத்ததும் இவுரு தான்னு ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.

ரோல் நம்பர் 3 மற்றும் 5 - என்னையும் அறியாம அந்தத் தடை செய்யப்பட்ட சொல் வந்துடுச்சு. இந்த ஒரு தரம் மன்னிச்சு விட்டுருங்க. ப்ளீஸ் :)

யய்யா! சங்கிலி தொடர் ஆரம்பிக்கிற பெரியவங்களே! நாலு போயி ஆறு வந்துச்சு. ஆறுக்கு அப்புறம் நம்பரைக் கூட்டாதீங்கய்யா! அடுத்த தபா ஒன்னுலேருந்து ஆறுக்குள்ளே எதனா ஒரு ஒத்தப்படை நம்பரைக் குடுங்க, இல்லன்னா ஒன்னேகால் பதிவு அஞ்சேமுக்கால் பதிவுன்னு எதனா ஆரம்பிங்க. இத எழுதி முடிக்கிறதுக்குள்ள பெண்டு நிமிந்துடுச்சு.

சம்திங் டெல்ஸ் மீ டா கைப்புள்ள! இம்மாம் பெரிய பதிவைப் பாத்துட்டு உன்னைய பிச்சி பீஸ் பீஸ் ஆக்கப் போறாங்கனு.