Sunday, April 13, 2008

நானும் எனது தனிமையும்

தமிழில் புகைப்படக்கலை ஏப்ரல் மாதப் போட்டி தலைப்பைக் கேள்வி பட்டதும் தலைப்புக்கு ஏத்த படம் எடுக்கனும்னே தோணலை. தலைப்பைக் கேட்டதும் இரெண்டு பாட்டு தான் ஞாபகத்துக்கு வந்துச்சு. தலைப்புக்கு கீழே இருக்கிற படங்கள் பொருந்துதோ இல்லையோ பாட்டுங்க 'சிக்'னு பொருந்தும்னு நெனக்கிறேன்.

முதல் பாட்டு ஒரு இந்திப் பாட்டு. அமிதாப் பச்சனின் கணீர் குரலில் வரும் ஒரு பாட்டு. வசனம்னு கூட சொல்லலாம். அமிதாப் உணர்ச்சி பூர்வமாப் பேசற வசனத்துக்கு நடுவுல லதா பாடுவாங்க. என்னால முடிஞ்ச அளவுக்கு அமிதாப் பகுதியை மொழிப்பெயர்த்து போட்டுருக்கேன். ஓகேவா இருக்கா?

படம் : சில்சிலா(1981)
பாடல் : ஜாவேத் அக்தர்
இசை : ஷிவ்ஹரி
பாடியது : அமிதாப் பச்சன், லதா மங்கேஷ்கர்

Main aur meri tanhaai aksar yeh baatein karte hain
நானும் எனது தனிமையும் அடிக்கடி பேசிக் கொள்வதுண்டு
Tum hoti to kaisa hota, tum yeh kehti, tum voh kehti
நீ இருந்தால் இப்படி நடக்கும், நீ இதை சொல்வாய் நீ அதை சொல்வாய்
Tum is baat pe hairaan hoti, tum us baat pe kitni hansti
நீ இச்செயலால் கோபப்படுவாய், நீ அச்செயலால் எப்படி சிரிப்பாய்
Tum hoti to aisa hota, tum hoti to vaisa hota
நீ இருந்தால் அப்படி நடக்கும் நீ இருந்தால் இப்படி நடக்கும் இப்படியெல்லாம்
Main aur meri tanhaai aksar yeh baatein karte hain
நானும் எனது தனிமையும் அடிக்கடி பேசிக் கொள்வதுண்டு

Yeh raat hai, yeh tumhaari zulfein khuli hui hai
இது இரவா அல்லது பரந்து விரிந்த உனது கூந்தலா?
Hai chaandni ya tumhaari nazrein se meri raatein dhuli hui hai
இது நிலவெளியா அல்லது உன் விழிகளால் வெள்ளையடிக்கப்பட்ட இரவா?
Yeh chaand hai ya tumhaara kangan
இது வெண்ணிலவா அல்லது உன் கைகளால் அலங்கரிக்கப்பட்ட வளையலா?
Sitaarein hai ya tumhaara aanchal
இவை நட்சத்திரங்களா அல்லது உனது புடவை தலைப்பா?
Hawa ka jhonka hai ya tumhaare badan ki khushboo
எனை மோதுவது காற்றின் அலையா அல்லது உன் தேகத்தின் வாசமா?
Yeh pattiyon ki hai sarsaraahat ke tumne chupke se kuch kaha hai
இவை இலைகளின் சலசலப்பா அல்லது உனது உதடுகளின் முணுமுணுப்பா?
Yeh sochta hoon main kab se gumsum
எப்போதிலிருந்து நான் வார்த்தைகளற்று போனேன் என்று நினைத்து பார்க்கும்
Ke jab ki mujhko bhi yeh khabar hai
வேளையில் எனக்கும் இது தெரிந்து தான் இருக்கின்றது
Ke tum nahin ho, kahin nahin ho
நீ இங்கு இல்லை, இல்லவே இல்லையென
Magar yeh dil hai ke keh raha hai
ஆனல் இந்த பாழும் இதயம் சொல்கின்றது
Ke tum yahin ho, yahin kahin ho
நீ இங்கு தான் இருக்கிறாய் இங்கு தான் எங்கோ இருக்கின்றாய் என்று





Get this widget


அடுத்த பாட்டும் இசையைக் குறைச்சு வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மெல்லிசை மன்னர் போட்டுருக்கற ஒரு பாட்டு. எஸ்.பி.பி அப்படியே தன் குரலால் இப்பாட்டுக்கு உயிர் கொடுத்துருப்பார் பாருங்க. எனக்கு மிகவும் பிடித்த பாட்டுகளில் இதுவும் ஒன்று.

படம் : வறுமையின் நிறம் சிவப்பு
பாடல் : மகாகவி பாரதியார்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியது : எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செம்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுதடி
பாவை தெரியுதடி

(தீர்த்தக்)

மேனி கொதிக்குதடி தலை சுற்றியே வேதனை செய்குதடி
வானின் இடத்தையெல்லாம் இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார்
மோனத்திருக்குதடி இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே
நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத் துழலுவதோ (2)

(தீர்த்தக்)





போட்டிக்குக் கொக்கு(முதல்) படத்தைக் கொடுக்கலாம்னு இருக்கேன். சரிங்களா?