tag:blogger.com,1999:blog-202893532024-03-14T04:02:01.157+05:30Kaipullai Calling...கைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comBlogger219125tag:blogger.com,1999:blog-20289353.post-3775628397497708042016-07-22T23:13:00.000+05:302016-07-22T23:14:22.584+05:30தோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
"எண்டே கண்ட்ரி யுனைட்டெட் கிங்டம், எண்டே சிட்டி லண்டன், எண்டே அம்மே எலிசபெத் அம்மே, எண்டே ஆஹாரம் ஃபிஷ் அண்ட் சிப்ஸ்" அப்படீங்கற விஷயங்கள் எல்லாம், கடையை மூடிட்டுப் போய் சில வருஷம் ஆனாலும் என்னோடு தொடர்புல இருக்கற சில பேருக்குத் தெரிஞ்சிருக்கலாம். "டேய்! நீ இருக்கற ஊரு லண்டனா?" அப்படின்னு விஷயம் தெரிஞ்சவங்க சிலர் கேக்கலாம். லண்டன்னா லண்டனே இல்லை...லண்டனுக்குப் பக்கத்துல...லண்டனுக்கு மிக அருகாமையில்...லண்டனின் திருவள்ளூர்னு சொல்லலாம். <br />
<br />
அப்படியாகப் பட்ட லண்டன் மாநகரிலே...சரி...சரி...லண்டனின் திருவள்ளூர் நகராட்சியில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்லலாம்னு நெனைக்கிறேன். சம்பவம் நடந்து ஒரு வருஷத்துக்கு மேல ஆனதுக்கப்புறம் இப்ப ஏன்...?<br />
<br />
இவ்வளோ நாளா எழுதாம இருந்ததுக்குக் காரணம் "Writer's Block" அப்படின்னு எனக்கு நானே சொல்லிக்கறேன். ஆனா "ரைட்டர்ஸ் ப்ளாக்" எல்லாம் ரைட்டருங்களுக்குத் தானே..."பீட் காண்ஸ்டபிள்" ஒனக்கு என்ன கேடுன்னு என் மனசாட்சி வந்து லந்து பண்ணுது. இருந்தாலும் பீட் காண்ஸ்டபிளுக்கும் ப்ளாக் வரும்னு எழுதச் சொல்லி உற்சாகப்படுத்துன ஆண்டிப்பட்டிக்காரங்க சில பேரோட ஒரே மன உறுதியைப் பாராட்டி கம்பெனி தர்ற அன்புப் பரிசு தான் இந்தப் பதிவு.<br />
<br />
"ஹலோ! உங்க கிட்ட கொஞ்சம் பேசலாமா?" - எதோ ஒரு வேலையா தெருவுல நடந்துப் போயிட்டு இருந்த என்னை நிறுத்திப் பேச்சுக் கொடுத்தது ஒரு நாற்பத்தஞ்சு வயசு மதிக்கத் தக்க ஒரு வெள்ளைக்காரர்.<br />
<br />
கண்ணாடி போட்டு தாடி வச்சிருந்த அந்த மனிதர் எதுவும் முகவரி கேக்கத் தான் நம்மக் கிட்ட பேசப் போறாருன்னு நெனைச்சேன். நானே வெளிநாட்டுக்காரன்...அது ஏன் என்னைப் பாத்து பேசனும்ங்கிறாருங்கிற ஒரு வித சந்தேகத்தோடயே பேச ஆரம்பிச்சேன்.<br />
<br />
"யெஸ்! ப்ளீஸ் டெல் மீ" - இது நான்,<br />
<br />
"இந்த ஊருல யாருக்கும் மனுசங்க மேலே மரியாதையே இல்லை" அப்படின்னாரு.<br />
<br />
முகவரி தான் கேக்கப் போறாருன்னு நெனைச்சுப் பேச ஆரம்பிச்ச எனக்கு ரொம்ப ஆச்சரியமாப் போச்சு. அதுக்கு மேலே அவர் கிட்ட பேசனுமா வேணாமான்னு ஒரு சந்தேகம் வேற. <br />
இருந்தாலும் "ஏன் அப்படி சொல்றீங்க"ன்னு கேட்டு வச்சேன்.<br />
<br />
"இங்கே இங்கிலாந்துல யார் கிட்டயாச்சும் சும்மா பேசப் போனா, பேசக் கூட மாட்டேங்கிறாங்க"<br />
<br />
வெறுமனே தலையாட்டிக்கிட்டு அவர் சொல்றதை கேட்டுட்டு இருந்தேன். "உன் கிட்ட யாரும் பேசலைன்னா அதுக்கு நான் என்னய்யா பண்ணறது?"ன்னு மனசுக்குள்ளே நெனச்சுக்கிட்டேன்.<br />
<br />
"இங்கே பணக்காரங்களுக்கு மட்டும் தான் மரியாதை. நல்ல பணம் இருந்து ஒரு ஃபெராரி கார் ஓட்டிக்கிட்டு வந்தா இந்த ஊரு பொண்ணுங்க பேசுவாங்க"<br />
<br />
"அடப் பாவி மனுஷா! இங்கிலாந்துப் பொண்ணுங்க உன் கிட்ட பேசலைங்கிற ஆதங்கத்தை ஒரு இந்தியா காரனைப் புடிச்சு மொக்கைப் போட்டுத் தீர்த்துக்கிட்டிருக்கியா?"ன்னு ஹை பிட்ச்சுல கேட்டது என் மைண்ட் வாய்ஸ் தான். <br />
<br />
"எங்க நாட்டுல எல்லாம் அப்படி கெடையாது தெரியுமா?"<br />
<br />
"நீங்க எந்த நாடு?<br />
<br />
"இத்தாலி. ஐ ஆம் ஃப்ரம் மிலன். நீங்க?" அப்படின்னாரு அவரு.<br />
<br />
இந்தியான்னு சொன்னா சண்டைக்கு வருவாரோன்னு ஒரு சின்னப் பயம் வேற இருந்தது. ஏன்னா இத்தாலி கடற்படையைச் சேர்ந்த ரெண்டு வீரர்கள் கேரள மீனவர்கள் இருவரைச் சுட்டுக் கொன்னுட்டாங்கன்னு கைது பண்ணி வச்சு அப்போ கொஞ்ச நாள் தான் ஆகி இருந்தது.<br />
<br />
இருந்தாலும் உண்மையைச் சொன்னேன்.<br />
<br />
"இந்தியா ரொம்ப அழகான நாடு"<br />
<br />
"நீங்க இந்தியாக்குப் போயிருக்கீங்களா?"ன்னு கேக்க நெனைச்சாலும் கேக்கலை. சோனியா காந்தியோட சொந்தக்காரரா இருப்பாருன்னு நெனைச்சிக்கிட்டேன்.<br />
<br />
"இத்தாலியும் அழகான நாடு தான். நான் ரோமுக்கும் பைசாவுக்கும் போயிருக்கேன்"அப்படின்னேன்.<br />
<br />
"ஓ! அப்படியா" அதுக்கு மேல அவரு நாட்டைப் பத்திப் பேசறதுல விருப்பம் காட்டலை. மறுபடியும் சமுதாயப் பிரச்சினைக்கே திரும்ப வந்தாரு. <br />
<br />
"ஒருத்தன் கிட்டப் பணம் இருக்கான்னு மட்டும் தான் இந்த ஊருப் பொண்னுங்க பாக்கறாங்க. அவன் கிட்ட இருக்கற நல்ல மனசை அவங்க பாக்கறதில்லை. தே டோண்ட் சீ த குட் ஹாற்ட்ட்(Heart)"<br />
<br />
ஹார்ட்ங்கிறதை அவர் 'ஹாற்ட்ட்'னு சொல்றப்போ தான் கவனிச்சேன் இத்தாலி மொழி பேசறவங்க ஆங்கிலம் பேசும் போது அதிகமா வல்லினம் உபயோகிக்கறாங்கன்னு. <br />
<br />
"எங்க நாட்டுல பொண்ணுங்க கிட்டப் போய்ப் பேசுனா அட்லீஸ்ட் பேசவாவது செய்வாங்க. புடிக்கலியா ஒதுங்கிக்குவாங்க. I respect that. ஆனா இங்கேயோ நம்மைப் பார்த்ததும் நீ இங்கிலாந்து நாட்டவன் கெடையாது. உன் கிட்டெல்லாம் பேச முடியாது"ன்னு சொல்லுவாங்க.<br />
<br />
"அதையும் மீறிப் பேச முயற்சிப் பண்ணா I will call the Police"ன்னு கத்துவாங்க.<br />
<br />
இங்கே வந்தப் புதுசுல வெள்ளையா இருக்கிறவன் எல்லாம் இங்கிலீஷ் பேசுவான்னு பல முறை நினைச்சதுண்டு. ஆனா இங்கிலாந்துல குறிப்பா லண்டன் சுத்துவட்டாரத்துல ஆங்கிலம் தெரியாத மத்த ஐரோப்பிய நாட்டவர்கள் பலர் இருக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன். ஆனா வெள்ளையா இருக்கறவனைப் பாத்து இவன் இங்கிலாந்து காரனா இல்லை மத்த ஐரோப்பிய நாட்டவனான்னு கண்டுபிடிக்கிற தெறமை இன்னும் எனக்கு வரலை. ஆனா அப்படி கண்டுபிடிக்க முடியும்னு இங்கேயே பல வருஷங்களா இருக்கற சில இந்தியர்கள் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கேன்.<br />
<br />
"ஒருத்தர் கிட்டப் பேசாமலேயே அவன் நல்லவனா கெட்டவனான்னு எப்படி சொல்ல முடியும்? பேசிப் பாருங்க...புடிக்கலைன்னா விட்டுடுங்க. They are very rude and they have hurt me many times"அப்படின்னு தன்னோட ஆதங்கத்தை எல்லாம் கொட்டித் தீர்த்தார்.<br />
<br />
"இந்தாளு இதையே ஒரு வேலையா வச்சிட்டுத் தான் சுத்தறாரு போல"ன்னு நெனச்சிக்கிட்டேன்.<br />
<br />
"உங்க நாட்டுல எப்படி? பொண்ணுங்க கிட்டப் போய்ப் பேசுனா பேசுவாங்களா? Are they friendly?"அப்படின்னு கேட்டார்.<br />
<br />
"Yes! Yes! எங்க நாட்டுல எல்லாம் பொண்ணுங்கக் கிட்டப் போய் பேசுனீங்கன்னா உடனே பேசிடுவாங்க" அப்படின்னு சும்மா அடிச்சு விட்டேன். <br />
நான் சொன்னதைக் கேட்டதும் அவர் முகத்தில் ஒரு புன்னகை.<br />
<br />
பின்னே"போய் பேசித் தான் பாரேன். சப்பல்ஸ் பிஞ்சிப் போயிடும்டா படுவா"ன்னு உண்மையையாச் சொல்ல முடியும்?<br />
<br />
"பொய்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த<br />
நன்மை பயக்கும் எனின்" - அப்படிங்கிறது உண்மை தான் போலிருக்கு?<br />
<br />
"Thanks for your time. Thanks for speaking to me. Have a nice day" அப்படீன்னு சொல்லிட்டுப் போயிட்டார். <br />
<br />
காலாகாலத்துல கல்யாணம் ஆகியிருந்தா பேரன் பேத்திக்கெல்லாம் பேறு காலம் நடந்திட்டு இருக்கும். அப்பேர்ப்பட்ட ஒரு ஆள் சுயமா தன்னுடைய துணையைத் தேர்ந்தெடுக்கத் தெரியாத, அம்மா அப்பா பார்த்து கல்யாணம் பண்ணி வச்ச ஒரு பையனைப் பார்த்துப் புலம்பிவிட்டுப் போவதை காலக் கொடுமை என்று சொல்லாமல் என்ன சொல்வது?<br />
<br />
"தனி ஒருவனுக்கு கேர்ள் ஃப்ரெண்டு இல்லையெனில் தனி ஒருவனாக இல்லாது துணைக்கு ஆள் சேர்த்துப் புலம்பிடுவோம்"னு இத்தாலியின் பாரதியார் யாராச்சும் எழுதி வச்சிருக்காங்களா தெரியலையே? :)</div>
கைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-20289353.post-58286579387339517832013-07-26T20:15:00.000+05:302013-07-26T20:20:10.013+05:30கொம்பன் சுறா வேட்டையாடும்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கடந்த சனியன்று மரியான் படம் பார்த்தேன். முதல் பாதியில் நாயகனுக்கும் நாயகிக்கும் உள்ள காதலையும் இரண்டாம் பாதியில் நாயகனை ஆபத்தான/இக்கட்டான ஒரு சூழ்நிலையில் இருந்து மீட்டுக் கொண்டு வருவது அவனுடைய அந்த காதல் தான் என மிக அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர். டிஸ்கவரி அலைவரிசையில் 'I shouldn't be alive' என்ற பெயர் கொண்ட உண்மை கதைகள் அடங்கிய நிகழ்ச்சி ஒன்று வரும். எனக்கு இது போன்று இக்கட்டுகளில் இருந்து மீண்டு வரும் கதைகளைப் பார்ப்பது மிகவும் பிடிக்கும். ஏனெனில் அதில் நமக்கும் ஏதாவது ஒரு பாடம் இருக்கும். <br />
உதாரணமாக அந்நிகழ்ச்சியில் ஒரு எபிசோட்டில் கண்ட கதை ஒன்றில், அமெரிக்காவில் ஒரு மாகாணத்தில் உறவினர்களைப் பார்த்து விட்டு ஒரு கணவனும் மனைவியும் தங்கள் கைக்குழந்தையுடன் வேறொரு மாகாணத்தில் உள்ளத் தங்கள் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருப்பர். அப்போது வழி மாறிச் சென்று பனிப்புயல் வீசிக் கொண்டிருக்கும் இடத்தில் சிக்கிக் கொள்வர். அதோடு கடும் குளிரின் காரணமாகக் காரில் பழுது ஏற்பட்டு அது நின்று விடும். அச்சமயத்தில் அக்கணவர் ஒரு முக்கியமான முடிவொன்று எடுப்பார். <br />
<br />
தன் மனைவியையும் குழந்தையையும் அந்த அத்துவானப் பிரதேசத்தில் சற்று பாதுகானப்பதாக உள்ள ஒரு குகையொன்றில் தங்க வைத்துவிட்டு உதவி தேடி கடும் குளிரில் பல மைல்கள் நடந்துச் செல்வார். அச்சமயத்தில் அவர் எடுத்த அந்த முடிவு தான் அவர்கள் மூவர் உயிரையும் காப்பாற்றும். மனைவியையும் கைக்குழந்தையையும் யாருமில்லா இடத்தில் தனியாக விட்டுச் செல்கிறோமே என்ற தயக்கமும் வருத்தமும் அவருக்கு இருந்தாலும் அம்முடிவை அவர் எடுக்கவில்லை என்றால் மூவரும் மடிவது உறுதி என்பதை அவர் உணர்வார். <br />
<br />
அதோடு பசியோடும் நீர்வேட்கையோடும் கடுங்குளிரில் நெடுந்தூரம் நடந்துச் செல்கையில் உடல் அயர்ச்சியினால் அவ்வப்போது சோர்ந்து விழுவார். அந்நிலையில் அவரை மீண்டும் எழுந்து நடக்கச் சொல்லித் தூண்டுவது தன் மனைவி மகனுடைய உயிரைக் காக்க வேண்டும் என்ற அக்கறையும் அன்பும் மட்டுமே. ஆக இக்கட்டானச் சூழ்நிலையில் இருந்து தப்பிக்க வேண்டும் எனில் அதில் இருந்து எப்படியாவது மீள வேண்டும் என்ற பலமான உந்துதலும் வழக்கத்திற்கு மாறாகச் சிந்தித்து செயல் படுத்தத் துணியும் முயற்சிகளுமே என்பது நான் அந்த டிஸ்கவரி நிகழ்ச்சியில் இருந்தும் மரியான் படத்திலும் அறிந்து கொள்ளும் பாடம். அவ்வகையில் மரியான் படம் எனக்குப் பிடித்திருந்தது சொல்ல வந்த கதையை இயக்குனர் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன். டிஸ்கவரி அலைவரிசையில் நான் கண்ட அந்த நிகழ்ச்சியைப் பற்றி மேலும் தகவல்கள் அறிந்து கொள்ள இந்தச் சுட்டியைப் பார்க்கவும்.<br />
<a href="http://en.wikipedia.org/wiki/Snowbound:_The_Jim_and_Jennifer_Stolpa_Story" rel="nofollow">http://en.wikipedia.org/wiki/Snowbound:_The_Jim_and_Jennifer_Stolpa_Story</a><br />
<br />
நிற்க. மரியான் படம் பார்த்து நான் கற்றுக் கொண்டதை மேலே எழுதியிருக்கிறேன். ஆனால் அப்படத்தைப் பார்ப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே அப்படத்தோடு தொடர்புடைய ஒரு தகவலைத் தெரிந்து கொண்டேன். அறிந்து கொண்ட இடம் சென்னை கலங்கரை விளக்கத்திற்குப் பின்புறம் உள்ள ஒரு மீன் கடையில் :) வஞ்சிரம் மீன் வாங்கிக் கொண்டிருந்த அக்கடையில் சுறா மீனும் இருந்தது. அக்கடையில் இருந்த சுறா மீன் ஒன்றின் தலைப் பகுதி மற்ற சுறாக்களைப் போன்று அல்லாமல் தட்டையாக இருந்தது. அவ்வகை சுறாக்களை நான் NatGeo, Animal Planet நிகழ்ச்சியில் கண்டிருக்கிறேன். அதன் ஆங்கிலப் பெயர் Hammerhead Shark. அதன் தமிழ்ப் பெயரைத் தெரிந்து கொள்வதற்காக மீன் விற்கும் அப்பெண்ணிடம் "இதுவும் சுறா தானா?" என்றேன். அதற்கு அவர் சொன்னார் "ஆமா இதுவும் சுறா தான்...கொம்பன் சுறா" <br />
<img alt="undefined" data-caption="" height="266" src="https://assets.knome.ultimatix.net/system/attachments/data/000/074/901/original_copy/ed30d568ff336fcdd61d6c1164121c9b239a7962.jpg?st=57SByCJSJmSwWyEKhiYqUg&e=1374850183" width="400" /><br />
<br />
<a href="http://en.wikipedia.org/wiki/Hammerhead_shark" rel="nofollow">http://en.wikipedia.org/wiki/Hammerhead_shark</a><br />
<br />
அதன் பிறகு வீட்டுக்கு வந்த பின் இந்த கொம்பன் சுறா என்ற பெயரை எங்கோ கேள்வி பட்டிருக்கிறோமே என நினைத்த போது மரியான் படத்தில் யுவன்சங்கர் ராஜா பாடிய "கொம்பன் சுறா வேட்டையாடும் கடல் ராசா நான்" என்ற பாடல் நினைவுக்கு வந்தது. இந்தக் கொம்பன் சுறாவைப் பற்றிப் படித்த போது தெரிந்து கொண்ட இன்னொரு தகவல் சுத்தியல் போன்ற தட்டையான அதன் தலையின் இரு புறமும் உள்ள அதன் கண்களைப் பற்றியது. அதாவது கொம்பன் சுறாவின் கண்கள் மற்ற சுறாக்களைப் போல இல்லாமல் வித்தியாசமான அமைப்பு கொண்டுள்ள காரணத்தால் விழிகளைச் சுழற்றி இச்சுறாவினால் 360 டிகிரியில் பார்க்க முடியும் என்பது. ஆனால் இந்தச் சிறப்பை மீறி இம்மீனிடம் மிகப்பெரிய ஒரு குறைபாடு ஒன்று உள்ளது. வித்தியாசமான அமைப்பு கொண்ட அதன் கண்களே அதன் குறைபாடு...இச்சுறாவினால் தனக்கு நேர் எதிரில் இருப்பவற்றைப் பார்க்க முடியாது என்பதே அது.<br />
<br />
சுறா மீன் கிட்டப் போனா கடிச்சி வச்சிரும்னு எல்லாருக்கும் தெரிஞ்சது தான் ஆனா இந்த கொம்பன் சுறா மீனின் முகத்துக்கு நேராப் போயி நின்னு "நீ என்ன பெரிய புலியா?"ன்னு கேட்டாக் கூட அது ஒன்னும் பண்ணாது :)</div>
கைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-20289353.post-27524550346925541662013-03-06T20:21:00.000+05:302013-03-06T20:21:26.133+05:30தோழி உண்டு தோழன் இல்லை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கடந்த ஞாயிறன்று சன் டிவியில் ஓரியோ சன் சிங்கர் பாட்டுப் போட்டியில் இரண்டு குழுந்தைகள் "தூது செல்ல ஒரு தோழி இல்லை எனத் துயர் கொண்டாயோ தலைவி" என்றப் பாடலைப் பாடினர். <br />
<br />
அதைப் பார்த்ததும், தமிழ் இலக்கியத்தில் தலைவியின் உள்ளக்கிடக்கையைத் தலைவனுக்கு உணர்த்தவும் தலைவியின் சார்பாகத் தூது செல்லவும் 'தோழி' ஒருத்தி இருந்திருக்கின்றாள், ஆனால் தலைவனின் சார்பாகத் தூது செல்ல 'தோழன்' என்பவன் இருந்ததில்லையே... அது ஏன் என்று ஒரு ஐயம் மனதில் தோன்றியது? :)<br />
<br />
பழந்தமிழர் வாழ்வில் காதலை எடுத்துச் சொல்ல உண்மையில் 'தோழி' என்று ஒருத்தி இருந்தாளா இல்லையா என்று அறிந்து கொள்ள வரலாற்றுச் சான்றுகள் இல்லாது போனாலும் (அவ்வாறு இருந்தாலும் நான் கேள்விப் பட்டதில்லை), தமிழ் இலக்கியங்களில் 'தோழி' எனும் ஒரு பாத்திரம் உள்ளது. <br />
தலைவிக்கு ஒரு 'தோழி' போல தலைவனுக்கு ஒரு 'தோழன்' ஏன் இல்லை? தோழியைப் போல தூது செல்ல தோழன் நம்பகமானவன் இல்லையா? <br />
உங்கள் கருத்து என்ன? </div>
கைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-20289353.post-7276564769857443852012-12-30T22:20:00.000+05:302012-12-30T22:20:36.824+05:30கையறுநிலை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நான் நானாய்ப் பிறந்ததற்கு<br />ஒருபோதும் வருந்தியதில்லை<br />
நான் ஆணாய்ப் பிறந்ததற்கு<br />வெட்கித் தலைகுனிந்து<br />
வேதனையில் உழன்று<br />ஆற்றாமையில் பிதற்றும்<br />
அத்தருணங்களை உணரும்<br />நிலை உனக்கு வந்தால்<br />
உலகை அழிக்காமல்<br />மாயர்கள் கணிப்பைப்<br />
பொய்யாக்கிய குற்றவுணர்வில் <br />குன்றி நீ போவாய் இறைவா!</div>
கைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-20289353.post-79165532675380313642011-09-19T09:42:00.003+05:302011-09-20T17:33:34.373+05:30ஒரு செப்டம்பர் மாசப் புலரியில்...<a href="http://3.bp.blogspot.com/_TXCaXL0id1A/SrYbggCgByI/AAAAAAAACi8/rrsqGOcXxno/s1600-h/Monday1.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 371px; height: 33px;" src="http://3.bp.blogspot.com/_TXCaXL0id1A/SrYbggCgByI/AAAAAAAACi8/rrsqGOcXxno/s400/Monday1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5383520649738192674" /></a><br /><br><br />"My momma always said, Life is like a box of chocolates. You never know what you're gonna get".<br />அது ஒரு செப்டம்பர் மாத திங்கட் கிழமை. எல்லா திங்கட்கிழமைகளைப் போலத் தான் அன்றும் இருநாட்கள் விடுமுறை கழிந்து அலுவலகம் செல்வது அவனுக்கு வேப்பங்காயாகக் கசந்தது. அவன்...நம் எல்லோரையும் போல ஒருவன். தன்னுடைய மொபைல் ஃபோனின் இயர்ஃபோனைக் காதில் செருகும் போது "Forrest Gump" திரைப்படத்தின் அவ்வசனம் அவனுக்கு நினைவுக்கு வந்தது. எந்த ஒரு பயணமுமே, வாழ்க்கை என்னும் பெரும்பயணத்தின் ஒரு infinitesimal part என்பதும் ஒவ்வொரு சிறிய பயணத்தையும் நினைவு தெரிந்த நாள் முதல் மண்ணோடு மண்ணாகிற நாள் வரை "over the years integrate" செய்தால் கிடைக்கும் net result ஒருவன் வாழ்ந்த வாழ்க்கை என்பதும் அவனுடைய நம்பிக்கை. பயணத்தின் போது மெல்வதற்கு எந்த நேரத்தில் எந்த சுவையுடைய சாக்லேட் கிடைக்கும் என்று தெரியாமல் இருப்பது தான் வாழ்க்கையினைச் சுவாரசியமாக வைத்திருக்க உதவுவது என்பது அவனுடைய கருத்து. அக்காரணத்தினாலேயே, தான் மேற்கொள்ளும் எந்த ஒரு பயணத்தின் போதும் தான் கேட்கும் பாடல்கள் ஒரே சுவையுடையதாக இல்லாமல் இருப்பதற்காக shuffle play மோடில் ஒலிக்க விடுவான். தான் தோன்றித் தனமாகப் பாடல்கள் ஒலிக்கும் போது வாழ்க்கையோட அந்த சிறு பகுதியில் எப்போ எந்த சுவையுடைய சாக்லேட் வரும் என்று தெரியாதென்பதால் எத்தனை முறை கேட்ட பாட்டானாலும் ஒரு சர்ப்ரைஸ் எலிமெண்ட் இருக்கும். <br /><br />"காலம்... நீ கைகள் தந்து இங்கு வந்த நேரம் உன் காதில் வந்து அன்று சொன்ன வேதம்" என்று டிஎம்எஸ் பாடிக் கொண்டிருக்கும் போது வீட்டிலிருந்து மெயின் ரோடு வரை வந்துவிட்டான். ஷேர் ஆட்டோ ஒன்று வந்தது. டிரைவருடன் சீட்டைப் பங்கு போட்டுக் கொண்டு ஒருவர் உட்கார்ந்திருந்தார். காலியாய் இருந்த பின் சீட்டில் திருவான்மியூர் என்று சொல்லி விட்டு ஏறி அமர்ந்து கொண்டான். அதன்பிறகு கொஞ்ச தூரம் வரை ஆட்டோவில் யாரும் ஏறவில்லை...அமைதி. அதன் காரணம் எம்எஸ்வி இசையமைத்த அந்த பாட்டு முடிந்திருந்தது. அடுத்த பாட்டு தானா வந்திருக்கனுமே ஏன் வரவில்லை என்று செல்ஃபோனைப் பாத்த போது தான் அந்த பாட்டை அவன் ஞாயிற்றுக் கிழமை இரவு பிரத்யேகமாக தேர்ந்தெடுத்து கேட்டது நினைவுக்கு வந்தது. அன்று ஏனோ அவனுக்கு 'என் உயிர் தோழன்' படத்தில் வரும் "ஏ ராசாத்தி" பாடல் கேட்க வேண்டும் போலிருந்தது. எப்போது கேட்டாலும் ஃபாஸ்ட் பார்வர்டு செய்யாமல் முழுவதுமாக அவன் விரும்பிக் கேட்கும் பாடல்களில் அதுவும் ஒன்ற. திருவான்மியூரில் ECR பஸ்ஸில் உட்கார்ந்து செல்ல இடம் கிடைக்குமா? எட்டரை மணிக்கு முன் ஷேர் ஆட்டோ காரர் திருவான்மியூரில் இறக்கி விட்டு விடுவாரா என்று பலவாறாக நினைத்துக் கொண்டு பயணித்துக் கொண்டிருந்த போதே 'ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்' என்று நெற்றிக்கண்ணைத் திறக்க ஆரம்பித்திருந்தார் ஜேசுதாஸ். <br /><br />அவன் கண் முன்னே ஒரு பெரியார் பஸ்...சாரி...விழுப்புரம் அரசுப் பேருந்து கல்பாக்கத்திலிருந்து வந்து அவனுடைய ஆட்டோவைக் கடந்து செல்லத் தொடங்கியிருந்தது. பஸ் அவ்வளவு கூட்டமில்லாமலும் இருந்தது. "கொஞ்சம் சீக்கிரம் போங்க அந்த பஸ்ஸைத் தான் நான் பிடிக்கனும்" என்று மனசுக்குள் நினைத்ததை அவன் ஆட்டோ ஓட்டுனரிடம் சொல்லவில்லை. அந்த நேரம் பார்த்து ஆட்டோவிலிருந்து ஒருவர் இறங்கினார். சில்லறை இல்லை என்று வீட்டுக்குப் போய் ஆளிடம் கொடுத்தனுப்புகிறேன் என்று விட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார். "அட பாவி மனுஷா காலங்காத்தால வண்டியில ஏறுறவன் ஒரு ஏழு ரூபாய் சில்லறை காசு எடுத்துட்டு வரக் கூடாது. அவனவனுக்கு எவ்வளவு ஆத்திரம் அவசரம் இருக்கும்?" என்று நினைத்துக் கொண்டான். நினைத்ததை விட சீக்கிரமாய் ஒரு ஆள் ஓடி வந்து சில்லறையைத் தரவும் ஆட்டோ புறப்பட்டது. 'ராமாயணம் பாராயணம் காதல் மந்திரம்' என்று ஜேசுதாஸ் பாடுவதில் மனம் கொஞ்சமும் ஒட்டவில்லை. "சே! கண்ணு முன்னாடி ஒரு காலியான பஸ்ஸை மிஸ் பண்ணிட்டோமே" என்ற நினைப்பு தான் அவனுக்கு மேலோங்கியிருந்தது. ஆட்டோ திருவான்மியூர் பேருந்து நிறுத்தம் அருகே நின்றதும் கண் முன்னே ஒரு ஆச்சர்யம். கல்பாக்கம் பேருந்து இன்னும் நின்று கொண்டிருந்தது. ஆட்டோவுக்குப் பத்து ரூபாயைக் கொடுத்து விட்டு மடிகணினி அடங்கிய பையையும் சாப்பாட்டு பையையும் அவசர அவசரமாகத் தூக்கிக் கொண்டு ஓடி பேருந்தில் ஏறிக் கொண்டான். <br /><br />நடத்துனரிடம் எதுவும் சொல்லாமல் பத்து ரூபாய் எடுத்து நீட்டினான். அவரும் எதுவும் சொல்லாமல் திருவான்மியூர் டு சென்னை என மின்னணு <br />இயந்திரத்தில் அச்சிட்டு வெளிவந்த பயணச்சீட்டை அவனிடம் கொடுத்தார். திருவான்மியூர் டு சென்னைன்னா அப்போ திருவான்மியூர் என்ன சென்னைக்கு வெளியிலா இருக்கு என நினைத்துக் கொண்டான். "ஷிவஷக்தியா யுக்தோ யதி பவதி ஷக்த ப்ரபவிதும்" என இளையராஜா ஜனனி ஜனனி பாடலைத் துவங்கி விட்டிருந்தார். பேருந்தும் கிடைத்து, உட்கார இடமும் கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் பாட்டில் கவனத்தைச் செலுத்தினான். 2005ஆம் ஆண்டு நேரு உள்விளையாட்டரங்கில் 'அன்றும் இன்றும் என்றும்' என பெயரிடப்பட்ட தன்னுடைய கச்சேரியை இளையராஜா இப்பாட்டுடன் தொடங்கிய போது பார்வையாளர் வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு இஸ்லாமிய பெண்மணி உணர்ச்சிவயப்பட்டு கண்கலங்கியதை ஜெயா தொலைக்காட்சியில் கண்டது அவனுக்கு நினைவுக்கு வந்தது. அப்பாடலின் துவக்கத்தில் வரும் சமஸ்கிருத சுலோகம் ஆதிசங்கரர் பாடிய சவுந்தர்ய லஹரி எனும் கோவையில் உள்ள ஒரு பாடல் என்பதும் அவனுக்கு நினைவுக்கு வந்தது. "மேகம் கொட்டட்டும்" பாடல் ஆரம்பிக்கும் போது பஸ் டைடல் பார்க் சிக்னலில் திரும்பி ராஜிவ் காந்தி சாலையில் பயணித்துக் கொண்டிருந்தது. துள்ளலான அப்பாடலை அதிவேகமாகப் பயணிக்கும் ஒரு பேருந்தில் சன்னல் ஓரத்தில் அமர்ந்து இளஞ்சூடான மெல்லிய காலை நேரக் காற்று முகத்தில் மோதும் போது மனதில் பொங்கும் உவகையை விவரிக்க வார்த்தைகள் ஏதும் வராமல் சிம்பிளாக "Simple pleasures of Life" என்று நினைத்துக் கொண்டான்.<br /><br />மத்திய கைலாஷ் ஸ்டாப்பில் பஸ் நின்றது. எட்டே முக்காலுக்கு முன்னராக பஸ் அங்கு வந்து சேர்ந்துவிட்டது. அவன் எதிர்பார்த்தது போலவே "லல்லு பிரசாத் யாதவ்" தன்னுடைய வழக்கமான briefcase பெட்டியுடன் ஏறினார். தன்னுடைய வழக்கமான கடைசி இருக்கையின் இடது கை சன்னலோர சீட்டில் அமர்ந்து கொண்டார். "லாலு பிரசாத்" என அவருக்கு அவன் பெயர் வைக்க காரணம் லாலு மாதிரியே அவருக்கும் தலையில் சட்டி கவிழ்த்தது போன்றதான ஒரு ஹேர்ஸ்டைல், லாலு மாதிரியே அவருக்கும் 'காதோரம் நரைச்ச முடி கன்னத்துல சொக்குது சொக்குது' தான். அவனுடைய லாலு, பேண்ட் சர்ட் அணிந்திருப்பார், ஆனால் சட்டையை இன் செய்ய மாட்டார், அந்த காலத்து ஜெமினி கணேசன் போல மிக மிக மெல்லிய மீசை ஒன்று வைத்திருப்பார். "சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோனுதடி" என்று கமல் பெண் பார்க்கும் போது பாட்டி வெற்றிலை வரக் வரக் என்று இடித்துக் கொண்டிருக்கும் போது பேருந்தில் பெருத்த கூட்டம் ஏறியிருந்தது. மத்திய கைலாயத்தில் பேருந்து நிற்கும் போது பெரும்பாலும் முதலில் ஏறுபவர் லாலுவாகத் தான் இருப்பார், பெரும்பாலும் அவருக்கு அவருடைய சீட் கிடைத்துவிடுவதையும் அவன் கவனித்திருக்கிறான். "சிறு கண்ணே செந்தமிழ்த் தேனே தந்தையின் பாசம் வென்றதடி" என்று கமல் பாடிக் கொண்டிருக்கும் போது சன்னல் வழியாகப் பார்த்தான். ஒரு தந்தை வித்யா மந்திர் பள்ளியில் படிக்கும் தன் மகளை ஸ்கூட்டரில் கூட்டிச் சென்று கொண்டிருந்தார். ஸ்கூட்டர் பின்சீட்டில் அமர்ந்து புத்தகத்தைத் திறந்து படித்துக் கொண்டிருக்கும் அப்பெண்ணைப் பார்த்ததும் பரீட்சைக்குச் சென்று கொண்டிருக்கிறாள் என்று புரிந்து கொள்ள அவனுக்கு வெகு நேரம் ஆகவில்லை. அவனுடைய சிறுவயதில் அவன் பெரிதும் ரசித்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த படித்த பள்ளி அது என்பதால் வித்யா மந்திரையும் அதன் சீருடையையும் நன்கு நினைவில் கொண்டிருந்தான். <br /><br />காந்தி மண்டபம் நிறுத்தத்தில் இறங்குவதற்காக பேருந்தில் அமர்ந்திருப்பவர்கள் முன்கூட்டியே எழுந்து கூட்டத்தில் முன்னேறி இறங்குமிடம் அருகே நின்று கொள்வது வழக்கம். அவனுக்கு இரு இருக்கைகளுக்கு முன்னர் இருவர் எழுந்து கொண்டனர். கம்பியைப் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்த ஒரு பெண் விரைவாகச் சென்று அமர்ந்து கொண்டாள். தன் பக்கத்தில் காலியாக இருந்த இன்னொரு இருக்கையில் தன் இடது கையை வைத்து இடம் பிடித்துக் கொண்டு "மாமா! சீக்கிரம் இங்கே வாங்க...சீட் இருக்கு" என்று பின்னால் நின்று கொண்டிருந்த தன் கணவனை அழைத்ததை அவன் உட்பட பேருந்தில் இருந்த பலரும் கவனித்திருந்தார்கள். தன் கணவர் தன் பக்கத்தில் வந்தமர்ந்ததும் அவள் முகத்தில் தோன்றிய உண்மையான மகிழ்ச்சியையும் அவள் உதட்டில் தவழ்ந்த மெல்லிய புன்னகையையும் அவன் கவனிக்கத் தவறவில்லை. தன் அன்பின் வெளிப்பாட்டை மற்றவர்கள் கண்டுவிட்டதை அவள் கண்டுகொண்டதாக அவனுக்குத் தோன்றவில்லை. "அன்புக்கும் உண்டோ அடைக்குந் தாழ்" என்று நினைத்துக் கொண்டான் அவன். "ஒரு சிரி கண்டால் கனி கண்டால் அது மதி" என்று மலையாளத்தில் பாடிக் கொண்டிருந்தனர் விஜய் யேசுதாசும் மஞ்சரியும். தன்னுடைய வாழ்வில் சினிமாவும், சினிமா பாடல்களும், சினிமா இசையும், சினிமா வசனங்களும் எந்தளவு வியாபித்துள்ளது என நினைத்துக் கொண்டான் அவன். காதல் என்ற உணர்வை அவனுக்கு அறிமுகப்படுத்தியது சினிமா தான், பலவிதமான எண்ணங்களைத் தூண்டும் சினிமா பாடல்களின் இசை அவனை பல விஷயங்களிலும் இன்ஸ்பையர் செய்துள்ளதை அவன் நினைவுகூர்ந்தான். வடிவேலு என்ற கலைஞன் வந்ததன் பின்னர் முயன்றும் கிடைக்காத ஒரு விஷயத்தை "வடை போச்சே" என்று பலரும் கூறுவதையும் நோட் செய்திருக்கிறான்.<br /><br />ராஜ்பவனைப் பேருந்து தாண்டியதும் "உழைப்பால் உயர்ந்த உத்தமர் P.ஆறுமுக நாயக்கர்" என்று ஓரிடத்தில் எழுதப்பட்டிருக்குமே அவ்விடத்தைக் கடந்து விட்டோமா என்று சன்னல் வழியாக எட்டிப் பார்த்தான். வேளச்சேரி சிக்னலுக்கு முன் Shepherd அண்ட் கம்பெனிக்கு அருகில் அவன் தேடியது கிடைத்தது. "வெந்து தணிந்தது காடு தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ" என்று யேசுதாஸ் பாடியதைக் கேட்ட போது எதை குறிப்பதற்காக பாரதி "தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ" என நினைத்துக் கொண்டான். செல்லம்மாள் மகளிர் கல்லூரி வாயிலில் "Abstinence Club" என்றிருந்த தட்டியைப் பார்த்ததும் "அடங்கொன்னியா! கட்டுன புருஷனைக் கஷ்டப்படுத்த இப்பெல்லாம் காலேஜ்லேயே கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சிட்டாங்களா?" என அவனுடைய கிரிமினல் புத்தி யோசித்தது. அதே தட்டியில் சிகப்பு வண்ணத்தில் வரையப்பட்டிருந்த ரிப்பனைப் பார்த்ததும் தான் இது ஏதோ எய்ட்ஸ் சம்பந்தப்பட்ட சமாச்சாரமாக இருக்கும் என சமாதானம் ஆனான் அவன். கிண்டி ரயில்நிலையம் நிறுத்தத்தில் வழக்கம் போல லாலு முதலில் இறங்கினார். இறங்கியதும் சிட்டாகப் பறந்து விடுவார்...பலமுறை அவர் அங்கிருந்து எங்கு செல்கிறார் எனப் பார்க்க முயற்சித்திருக்கிறான். ஆனால் அவன் அதில் வெற்றியடைந்ததில்லை. அவன் இறங்க வேண்டிய நிறுத்தமும் அது தான். பேருந்தினின்று இறங்கினான். காவலர்கள் விரட்டுவதைப் பொருட்படுத்தாமல் வரிசையாக நின்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோக்களில் ஒன்றில் ஏறிக் கொண்டான். ஆட்டோ அங்கேயே நிரம்பி விட்டது. அவன் முதுகுக்குப் பின்னர் பின்னிருக்கையில் மூன்று பேர் அமர்ந்திருந்தனர். முன்னிருக்கையில் அவனுடைய இருபக்கமும் இருவர் அமர்ந்திருந்தனர். முன்புறம் டிரைவருடன் இரண்டு பேர்...மொத்தம் எட்டு பேருடைய பாரத்தையும் சுமந்த பொதி கழுதையாக எந்த ஜென்மத்திலோ எந்த பிறவியிலோ செய்த பாவத்துக்குப் பலனை அனுபவித்துக் கொண்டிருந்தது அந்த ஆட்டோ. <br /><br />புனித தோமையார் மலை தேவாலயத்துக்குச் செல்லும் வழிக்கு மிக அருகாமையில் பட் ரோட்டில் அமைந்திருக்கும் புனித ஹெலன்ஸ் பெண்கள் மேனிலைப் பள்ளி அருகே ஆட்டோ நின்றது. அப்பள்ளியின் காவலாளி சாலையின் மறுபுறம் நின்று கொண்டிருந்த பிள்ளைகளைச் சாலையைக் கடக்க உதவி செய்து கொண்டிருந்தார். குண்டான வயதான மனிதர். காதில் இயரிங் எய்ட் அணிந்திருப்பார். இயக்குனர் பாலுமகேந்திரா போல ஒரு தொப்பி அணிந்திருப்பார். சில நாட்களாக அவ்விடத்தில் ஒரு போக்குவரத்து காவலர் நின்று அந்த வழியாகச் செல்லும் வாகனங்களின் போக்குவரத்தை நெறிபடுத்திக் கொண்டிருந்ததை அவன் கவனித்தான். போக்குவரத்து காவலர் இல்லாத காலத்திலும் அவ்வயதான பள்ளி காவலாளி கையில் ஒரு தடியை வைத்துக் கொண்டு சாலையின் குறுக்கே வந்து வாகனங்களை நிறுத்தி குழந்தைகள் சாலையைக் கடக்க உதவி செய்வார். சாலையைக் கடக்காமல் மறுபுறம் 'மசமச்'வென நிற்கும் குழந்தைகளைப் பல்லைக் கடித்துக் கொண்டு "வாம்மா! நின்னுக்கிட்டிருக்காதே" என்று மிரட்டுவதையும் அவன் கவனித்திருக்கிறான். ஆனால் அம்மிரட்டலில் பிள்ளைகள் பத்திரமாகச் சாலையைக் கடக்க வேண்டுமே என்ற உண்மையான அக்கறையை மட்டுமே கண்டிருக்கிறான் அவன். நாயகி என்னும் மிகவும் அபூர்வமான ராகத்தில் அமைந்த "வாரணமாயிரம் சூழ வலம் செய்து நாரணன் நம்பி நடக்கின்றான்" என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்த போது மவுண்ட் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் உள்ள சாம்ராஜ்ய யுத்த கல்லறைகளைக் கடந்து சென்று கொண்டிருந்தது அவனது ஆட்டோ. எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எங்கோ வந்து இறுதியாக உறங்கிக் கொண்டிருக்கும் அந்த முதலாம் உலகப் போர் வீரர்கள் "யார் பெத்த பிள்ளைகளோ?" என நினைத்துக் கொண்டான்.<br /><br />நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்துக்கு எதிரில் உள்ள கவிதா டிரைவிங் ஸ்கூலின் பெயர் பலகையில் ஒரு பெரியவரின் படம் வரையப்பட்டிருக்கும். அவர் தான் டிரைவிங் ஸ்கூலின் ஓனரோ? தன் மகளின் பெயரில் டிரைவிங் ஸ்கூலைத் துவங்கியிருப்பாரோ என்று யோசித்திருக்கிறான். "கிறுக்குப் பயலாடா நீ" என்று அவனை அவனே பலமுறை கேட்டுக் கொண்டுள்ளான். அதற்கான விடை தான் கிடைத்தபாடில்லை. ஆனால் அந்த கிறுக்குத்தனமும் அவனுக்குப் பிடித்து தானிருந்தது. திருவான்மியூருக்கு எட்டு மணிக்கு முன்னர் வந்து சேர்ந்திருந்தால் அவனுக்குக் கிடைத்திருக்கக் கூடிய M49 பேருந்து அவனுக்கு முன்னால் சென்று கொண்டிருந்தது. "அஞ்சு ரூபா பஸ் டிக்கட்டுல முடிய வேண்டியது, தேவையில்லாமல் 20 ரூபா ஷேர் ஆட்டோவுக்குக் கொடுக்கறோம்" என நினைத்துக் கொண்டான்...ஆனால் குற்ற உணர்வெல்லாம் இல்லை. வருத்தப்பட நிறைய விஷயங்கள் இருக்கும் போது இதை பற்றியெல்லாம் கவலை படத் தொடங்கினால் கவலை மட்டுமே மிஞ்சும் என உணர்ந்திருந்தான் அவன். "காற்றினில் தேர் போல ஓடிடும் மானே தன்வழி போனாளே கனிமொழி எங்கே" என யேசுதாஸ் ரஜினி அங்கிளுக்காக மீனாவைத் தூங்க வைக்க முயற்சித்துக் கொண்டிருந்த போது அவனுடைய ஆட்டோ L&T Infotech வளாகத்துக்கு அருகில் இருந்தது. அவனுக்கு மோட்டார் சைக்கிளில் விபத்து ஏற்படுவதற்கு முன்னர் அவ்வளாகத்துக்குள்ளே தான் கறுப்பு நிற பல்சர் பைக்கை ஓட்டிச் சென்ற ஒரு பெண் செல்வதைத் தன்னுடைய பைக்கிலிருந்து அவன் கவனித்திருக்கிறான். சுடிதார் அணிந்த பெண்ணொருத்தி ஒருகாலத்தில் "Definitely male" என்று விளம்பரப்படுத்தப் பட்ட பைக் ஒன்றினை tame செய்து படு லாவகமாக ஓட்டிச் சென்றதையும் அவள் ஓட்டிய வேகத்தினையும் கண்டு வியந்திருக்கிறான். ஸ்டீரியோடைப்பை உடைத்தெறியும் அந்தப் பெண்ணின் துணிச்சல், பல ஸ்டீரியோடைப்களை இன்னும் கட்டிக் காத்து சோறு போடும் அவனுக்குப் பிடித்திருந்தது என்பது நகைமுரண். ஆனால் அவனைக் கேட்டால் அதை ஒத்துக்கொள்ள மாட்டான். அக்காட்சியில் கண்ட காண்ட்ராஸ்ட் எனக்குப் பிடித்திருந்தது என்று வாதிடுவான். <br /><br />"கோடி கோடி அடியவரில் நான் தான் கடைகோடி ஐயா" என நெக்குருகி ராஜா பாடும் போது அவனுடைய அலுவலகம் வந்திருந்தது. அவனை ஒத்த இயர்ஃபோன் பாவிப்பவர்கள் பலரும் தத்தம் ஷேர் ஆட்டோக்களிலிருந்தும் பேருந்துகளிலிருந்தும் இறங்கி அடுத்து என்ன சுவையுள்ள சாக்லேட் கிடைக்கிறது எனத் தெரிந்து கொள்ள அலுவலகத்துக்கு உள்ளே சென்று கொண்டிருந்தனர்.கைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.com20tag:blogger.com,1999:blog-20289353.post-53212223719019075882010-12-19T22:36:00.003+05:302010-12-19T22:45:11.447+05:30தூர்தர்ஷனும் இசைப்புயலும்கடந்த சில நாட்களாக முன்னைப் போல ஆக்டிவாகப் பதிவெழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன் பல வருடங்களுக்கு முன்னர் வந்த தொலைக்காட்சி விளம்பரங்களை நினைவு படுத்திப் பார்க்கலாமே என்ற ஒரு எண்ணம் உதித்தது. விளம்பரங்களின் பட்டியல் பெரியதாக இருந்ததால் அவற்றை எதாவது ஒரு வகையில்(criterion) கொண்டு பகுக்கலாமே என்று தோன்றியது. <br />ரோஜா படம் மூலமாகத் தான் முதன்முதலாக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களைக் கேட்டது என்றாலும், டிவி விளம்பரங்களின் மூலமாக மக்களிடம் நெருக்கமாகத் தான் இருந்துள்ளார் எனத் தெரிந்தது. திரைப்படங்களுக்கு இசை அமைப்பதற்கு முன்னர் அவர் விளம்பரப் படங்களுக்குத்(ad jingles) தான் இசையமைத்துக் கொண்டிருந்தார் என பலரும் கேள்வி பட்டிருப்போம். ஆனால் பழைய விளம்பரங்களைத் தேடிக் கொண்டிருந்த போது, அக்காலத்தில் நாம் ரசித்த பல விளம்பரப் படங்களுக்கும் அவர் இசையமைத்திருப்பது தெரிய வந்தது. "அட! இந்த விளம்பரத்துக்கும் இவர் தான் இசையமைத்தாரா?" என ஆச்சரியமாய் இருந்தது. அதை எல்லாம் பதிந்து வைக்கலாமே எனத் தோன்றியதன் விளைவு தான் இந்தப் பதிவு. சில விளம்பரங்கள் தூர்தர்ஷன் மட்டும் அல்லாமல் வேறு தொலைக்காட்சி சேனல்களிலும் வந்திருக்கலாம். <br /><br /><strong>Leo Coffee</strong><br />ஏ.ஆர்.ரகுமானின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட விளம்பரம் "லியோ காஃபி" விளம்பரம் என்று சொல்கிறார்கள். இவ்விளம்பரத்தைப் பார்த்து தான் இயக்குனர் மணிரத்னம் ரோஜா படத்தில் இசையமைக்க வாய்ப்பளித்தார் என்று இணணயத்தில் படித்தேன். மணிரத்னத்திடம் அவரை அறிமுகப்படுத்தியது அப்போது விளம்பரப் படங்களில் இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருந்த ராஜீவ் மேனன். இந்த விளம்பரம் வெளிவந்த காலத்தில் நான் பள்ளி செல்லும் சிறுவன். எப்போது வந்தாலும் நின்று பார்த்து விட்டுச் செல்லும் விளம்பரங்களில் இதுவும் ஒன்று. அவ்விளம்பரத்தில் வரும் அர்விந்த் சுவாமிக்கும் இப்போது இருக்கும் அர்விந்த் சுவாமிக்கும் எத்தனை மாற்றங்கள்? லியோ காஃபியின் தற்காலத்து விளம்பரத்தில் நடிகை ஆண்ட்ரியா வருகிறார். ஆனால் பழைய விளம்பரம் ஏற்படுத்தும் பாதிப்பும் கிளறும் நினைவுகளும் இப்புதிய விளம்பரத்தில் இல்லை. ஆண்ட்ரியா வரும் விளம்பரத்தைப் பார்க்க வேண்டும் என்றால் <a href="http://www.youtube.com/watch?v=qJLAl2UDW_I&NR=1">இங்கு</a> சுட்டுங்கள்.<br /><object width="480" height="385"><param name="movie" value="http://www.youtube.com/v/V9qmJ79YuCs?fs=1&hl=en_US"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/V9qmJ79YuCs?fs=1&hl=en_US" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"></embed></object><br /><br /><strong>Old Cinthol</strong><br />கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டு காலமாக இருக்கும் சோப் "பழைய சிந்தால் சோப்". அட, இதுலயும் அர்விந்த் சுவாமி தான் வருகிறார். இந்த சோப்பின் விளம்பரத்தைப் பார்த்தால் எப்போதும் மிகைப்படுத்தப் படாமல் சிம்பிளாக இருக்கும். பல சமயங்களில் விளம்பரங்களே கூட இருக்காது. சிகப்பு நிற அட்டையில் வெளிவரும் சோப் இது, புதிய சிந்தால் சோப்புக்குச் சற்று கவர்ச்சியான விளம்பரங்களை வெளியிடும் கோத்ரெஜ் நிறுவனம். பல வருடமாக உபயோகத்தில் இருக்கும் சோப் என்பதால் அந்த நற்பெயரிலேயே இன்னும் இந்த சோப் விற்றுக் கொண்டிருக்கிறது. தோல்நோய் மருத்துவர்களும் பரிந்துரைக்கும் உண்மையிலேயே நல்ல சோப் இது. அத்தகையதொரு சோப்புக்கு, மிகையில்லாத மெல்லிய இசை சேர்த்திருப்பது இவ்விளம்பரத்தின் சிறப்பு, இன்றளவும் நினைவில் நிலைக்கச் செய்திருப்பது இசையமைப்பாளரின் திறமை. <br /><object width="480" height="385"><param name="movie" value="http://www.youtube.com/v/C99aEm0cips?fs=1&hl=en_US"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/C99aEm0cips?fs=1&hl=en_US" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"></embed></object><br /><br /><strong>Asian Paints - Pongal</strong><br />சில நிறுவனங்கள், தனித்து நிற்கும் விளம்பரங்கள் வெளியிடுவதற்கு பெயர் போனவை. அத்தகைய ஒரு நிறுவனம் தான் ஏசியன் பெயிண்ட்ஸ். கையில் பெயிண்ட் ப்ரஷுடன் நிற்கும் பையனின் மேஸ்காட்டைக் கிட்டத்தட்ட நாற்பத்தைந்தாண்டு காலம் உபயோகித்து வந்தது ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம். அந்த சிறுவனின் பெயர் "கட்டூ(Gattu)". அவனை உருவாக்கியவர் பிரபல் கார்ட்டூன் ஓவியர் ஆர்.கே.லக்ஷ்மண் அவர்கள். இணையத்தில் தேடினால் ஏசியன் பெயிண்ட்ஸின் மார்க்கெட்டிங்கைப் பற்றி பல கேஸ் ஸ்ட்டிகள் கிடைக்கும், அந்த அளவுக்கு தங்களுடைய ப்ராண்ட்களின் மீது கவனமும் அக்கறையும் செலுத்தும் நிறுவனம் இது. பொங்கலுக்கு வெள்ளை அடிக்கும் நம்ம ஊர் பழக்கத்தைக் குறி வைத்து, தமிழ்நாட்டில் மட்டும் வெளியிடுவதற்காக எடுக்கப்பட்ட ஒரு விளம்பரமிது. இவ்விளம்பரத்தின் துவக்கத்தில் வரும் அதே "ஏலேலோ" இசையை ரோஜா படத்தில் சின்ன சின்ன ஆசை பாடலில் ஹோகேனக்கல்லில் பரிசல்கள் செல்லும் காட்சியிலும் பார்க்கலாம். <br /><a href="http://1.bp.blogspot.com/_TXCaXL0id1A/TQ488fanhGI/AAAAAAAAC4g/IDSVcnH-aw8/s1600/asian-paints-gattu.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 250px; height: 350px;" src="http://1.bp.blogspot.com/_TXCaXL0id1A/TQ488fanhGI/AAAAAAAAC4g/IDSVcnH-aw8/s400/asian-paints-gattu.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5552442400517358690" /></a><br /><object width="480" height="385"><param name="movie" value="http://www.youtube.com/v/Vz9wX4HXh6E?fs=1&hl=en_US"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/Vz9wX4HXh6E?fs=1&hl=en_US" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"></embed></object><br /><br /><strong>Titan </strong><br />முந்தைய மூன்று விளம்பரங்களும் தமிழ்நாட்டு ஆடியென்சை மட்டும் தொடுவன என்றால், இவ்விளம்பரமும் இனி வரும் விளம்பரங்களும் இந்தியா முழுவதும் பிரபலமானவை. "சாந்தி" என்னும் இந்தி சீரியலில் ராஜ்.ஜி.ஜே.சிங் எனும் கதாபாத்திரத்தில் நடித்த அமர் தல்வார் தான் இவ்விளம்பரத்தில் வரும் தந்தை. மால்குடி சுபா பாடி வெளிவந்த "வால்பாறை வட்டப்பாறை" ஆல்பமில் நடித்த சம்யுக்தா தான் இதில் மகளாக வருபவர். இவர் முன்னாள் தூர்தர்ஷன் ஆங்கில செய்தி வாசிப்பாளர் பி.சி.ராமகிருஷ்ணா அவர்களின் மகள். இது ஏ.ஆர்.ரகுமானின் இசையில் வெளிவந்தது என்பதனை youtube பார்த்து தான் தெரிந்துகொண்டேன். <br /><object width="480" height="385"><param name="movie" value="http://www.youtube.com/v/mzHLL2ZWAn0?fs=1&hl=en_US"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/mzHLL2ZWAn0?fs=1&hl=en_US" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"></embed></object><br /><br /><strong>MRF</strong><br />சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் பிரபலமான நிறுவனம் MRF. Madras Rubber Factory என்று ஒருகாலத்தில் இருந்த பெயர் தான் MRF ஆனது. ஆயினும் இப்போது பழைய பெயரை எங்கும் அவர்கள் பிரபல படுத்துவதில்லை. ஏசியன் பெயிண்ட்ஸைப் போலவே விளம்பரங்களில் வெகுவாக கவனம் செலுத்தும் நிறுவனம் இது. இவ்விளம்பரம் வந்து கொண்டிருந்த காலங்களில், அதில் கடைசியில் வருவது போலவே கீபோர்டில் சர்ரென்று விரல்களைத் தேய்க்க வேண்டும் என்று எண்ணியதுண்டு. அது இப்போது நிறைவேறி விட்டாலும், வெகுகாலம் கழித்து இந்த விளம்பரத்தைப் பார்த்த போது அந்த ஆசை எங்கிருந்து வந்தது என நினைவில் வந்தது :)<br /><object width="480" height="385"><param name="movie" value="http://www.youtube.com/v/xN9b4qIGoOE?fs=1&hl=en_US"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/xN9b4qIGoOE?fs=1&hl=en_US" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"></embed></object><br /><br /><strong>Garden Vareli</strong><br />லிசா ரே(Lisa Ray) தோன்றும் இவ்விளம்பரத்தின் இசை வெகு பிரபலம். சிறுவயதில் கார்டன் புடவைகளை எல்லாரும் அணிவது போல அணிய முடியாது, இதில் காட்டுவது போல காற்றில் பறக்க விடுவது போல தான் அணிய முடியும் எனப் பல காலம் நினைத்துக் கொண்டிருந்தேன். லிசா ரே ஒரு அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப் பட்டு சமீபத்தில் அதில் இருந்து மீண்டு வந்து விட்டதாக அறிவித்துள்ளார்.<br /><object width="480" height="385"><param name="movie" value="http://www.youtube.com/v/BLGOkI1g3Io?fs=1&hl=en_US"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/BLGOkI1g3Io?fs=1&hl=en_US" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"></embed></object><br /><br /><strong>Premier Pressure Cooker</strong><br />"பாசமான அன்னை பரிசாய் தந்த ப்ரீமியர் ஆசை ஆசையாய் கணவர் வாங்கித் தந்த ப்ரீமியர்" என ஆரம்பிக்கும் விளம்பரம், டிவியில் அதிகமாக இவ்விளம்பரத்தைப் பார்த்த ஞாபகம் இல்லை. இருப்பினும் இப்போது பார்த்த போது நன்றாக இருப்பதாகத் தோன்றியது. <br /><object width="480" height="385"><param name="movie" value="http://www.youtube.com/v/DkJvg_i4oZE?fs=1&hl=en_US"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/DkJvg_i4oZE?fs=1&hl=en_US" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"></embed></object><br /><br /><strong>Spirit of Unity Concerts</strong><br />முன்னொரு காலத்தில் ஞாயிறு காலை 10.30 மணிக்கு தூர்தர்ஷனில் தேசிய தொலைக்காட்சியில் "Spirit of Unit Concerts" என்ற நிகழ்ச்சி ஒன்று வெளிவரும். இதில் துவக்கத்தில் வரும் title music கேட்பதற்காகவே காத்து கிடப்பேன். அந்நிகழ்ச்சியில் வரும் மற்ற கச்சேரிகள் எதையும் கூர்ந்து கவனித்ததில்லை. இந்த டைட்டில் இசை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. <br /><object width="480" height="385"><param name="movie" value="http://www.youtube.com/v/3fJh5FLKbUM?fs=1&hl=en_US"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/3fJh5FLKbUM?fs=1&hl=en_US" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"></embed></object><br /><br />கடைசியாக ரோஜா திரைப்படத்துக்காக தேசிய விருது பெற்றதற்குப் பின் சுரபி என்னும் நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் பேட்டியைக் காணலாம். இதில் அவருடைய பெயரை அப்துல் ரகுமான் என்று தவறாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். தன்னுடைய இசையில் மேற்கத்திய இசையின் தாக்கம் காலம் செல்ல செல்ல குறையும் என்று குறிப்பிட்டிருக்கிறார். வெகுவாகப் பிரபலம் ஆவதற்கு முன் வந்த முதல் சில விளம்பரங்களில் ஒன்று இது.<br /><object width="480" height="385"><param name="movie" value="http://www.youtube.com/v/rqeEegDzDDM?fs=1&hl=en_US"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/rqeEegDzDDM?fs=1&hl=en_US" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"></embed></object>கைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-20289353.post-17916324925940620062010-12-07T22:22:00.007+05:302010-12-08T09:42:59.534+05:30பாடி ஸ்டெடியா இருக்கு, மைண்ட் ஆஃப் ஆயிடுச்சுவீட்டிற்கும் திருப்பெரும்புதூருக்கும் இடையேயான 65 கி.மீ (ஒரு வழி தூரம்) பயணத்தைக் காரில் கடக்கும் போது கேட்பதற்காக, என்னிடமிருந்த பாடல்கள் தொகுப்பிலிருந்து சிலவற்றைத் தேர்ந்தெடுத்து நானே சில இசை குறுந்தகடுகளைத் தயாரித்தேன். நாங்கள் சப்போர்ட் அளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டு நிறுவனத்தின் இந்திய பிரிவிற்கு ஒரு ப்ராஜெக்ட் செய்வது நிமித்தமாகவே தினசரி திருப்பெரும்புதூர் பயணம். ஆனால் ஆறு மாதமாகப் பதிவு எதையும் எழுதாமல் இருப்பதற்கு கழுத்தை நெரிக்கும் வேலை, நேரமின்மை என்று காரணம் சொல்வதில் உண்மை இல்லையென்று எனக்கே தெரிகிறது. இதை காட்டிலும் பிசியாக இருந்த போதும் பதிவெழுதிக் கொண்டிருந்த காலம் ஒன்று உண்டு. ஆனால் இப்போதோ..."எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்" கதை தான். <br /><br />சரி அதை விடுவோம். குறுந்தகடு பத்தி சொன்னேன் இல்லையா...பயணத்தின் போது கேட்ட ஒரு பாடல் என்னை வெகுவாகக் கவர்ந்தது. 'கதர்'(Gadar) என்ற இந்தி திரைப்படத்தில் வரும் "உட் ஜா காலே காவான்" என்று பஞ்சாபி மொழியில் தொடங்கும் பாடல் தான் அது. இப்பாடலை இதற்கு முன்னர் பல முறை டிவியில் பார்த்திருந்த போது அறிந்திராத ஒரு இனிமை அன்று கார் ஸ்டீரியோவில் கேட்கும் போது உணர முடிந்தது. இது போல சில பாடல்களின் அருமையைக் கார் ஸ்டீரியோவில் கேட்டு தான் உணர்ந்திருக்கிறேன். தமிழ் விடு தூது, தத்தை விடு தூது, நாரை விடு தூது என்றெல்லாம் கேள்வி பட்டிருப்போம். ஆனால் இப்பாடலில் கதாநாயகன் தன் உள்ளக்கிடக்கையை காகத்தினை தூதனுப்பி வெளிப்படுத்துகிறார். பாடலின் இசையமைப்பாளர் உத்தம் சிங், பாடியவர்கள் அல்கா யாக்னிக், உதித் நாராயண். தமிழ் பாடல்களைக் குதறி துப்பும் உதித், இந்தியில் சிறப்பாகவே பாடுகிறார்.<br /><br /><object width="480" height="385"><param name="movie" value="http://www.youtube.com/v/ZNnwjc4r4Fw?fs=1&hl=en_US"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/ZNnwjc4r4Fw?fs=1&hl=en_US" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"></embed></object><br /><br />இப்பாடல் வரிகளின் பொருளைத் தெரிந்து கொள்ள விரும்பினால், கீழே உள்ள சுட்டியைக் க்ளிக்குங்கள்.<br /><a href="http://www.ukindia.com/zip2/zgadar.htm">http://www.ukindia.com/zip2/zgadar.htm</a><br /><br />****************************************************<br />இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை நெறிபடுத்தும் BCCI என்ற அமைப்பு பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட ஒரு வணிக அமைப்பு என்பது சமீபத்தில் சீனாவில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுகளைப் பார்த்த போது உறுதியானது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் முதன்முறையாக 2010 ஆம் ஆண்டில் அறிமுகப் படுத்தப்பட்டது. இப்போட்டிகளில் தங்கப் பதக்கத்தை வென்றது பங்களாதேஷ் நாட்டு அணி. இந்திய அணி அச்சமயத்தில் நியூசிலாந்து நாட்டுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்தது. அதனால் அப்போட்டிகளில் இந்திய சர்வதேச அணியால் பங்குகொள்ள இயலாமையைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் இந்தியாவின் தரப்பிலிருந்து ஒரு இரண்டாம் தர அணியைக் கூட இப்போட்டிகளுக்கு அனுப்ப முடியாத நிலை பிசிசிஐக்கு ஏற்பட்டது எப்படி என்பது புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. கோடிகளில் பணம் புரண்டால் மட்டுமே பிசிசிஐ கண்டு கொள்ளும் போலிருக்கிறது, ஒரு சர்வதேச விளையாட்டுப் போட்டியில் நம் தேசத்தின் சார்பாகப் பதக்கம் வாங்குவதில் பெருமை வேண்டுமானால் கிடைக்கும், அதை வைத்துக் கொண்டு என்ன செய்ய என்ற எண்ணம் தான் காரணமோ?<br /><br />****************************************************<br />சமீபத்தில் ஒரு நாள் சாலையில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் "Hero Honda Pleasure" என்ற இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். அதை பார்த்ததுமே அந்த வாகனத்துக்கான விளம்பரம் நினைவுக்கு வந்தது. நடிகை பிரியங்கா சோப்ரா "Why should boys have all the fun?" என்று சொல்லி அது பெண்களுக்கான வாகனம் என்பது போல விளம்பரப் படுத்தியது நினைவுக்கு வந்தது. அவ்வளவு நல்ல வாகனமாக Hero Honda Pleasure இருக்கும் பட்சத்தில் "Why should girls have all the fun?" என்று அந்த இளைஞரும் நினைத்திருப்பாரோ? :) <br /><br /><br />****************************************************<br />சமீப காலங்களில் மனதை மிகவும் பாதித்த சம்பவம் ஒன்று உண்டென்றால், அக்டோபர் இறுதியில் கோவையில் இரு பள்ளிக் குழந்தைகள் கடத்திக் கொல்லப் பட்ட நிகழ்வு தான். அதை நினைத்து நினைத்து எத்தனை முறை அழுதேன் என்று நினைவில் இல்லை. கடத்திக் கொண்டு போன பாவிகள் பணம் வாங்கிக் கொண்டு விட்டிருந்திருக்கலாம் இல்லையா?, போலிஸ் பிடித்து விடுவார்கள் என்ற பயம் வந்ததும் பொள்ளாச்சி அருகிலேயே குழந்தைகளை இறக்கி விட்டுவிட்டு தலைமறைவாகி இருக்கலாம் இல்லையா? இவ்வாறாக பல "ifs and buts" நினைப்புகள். அதற்கு பின்னர் அந்த மிருகங்கள் செய்ததை கேள்வி பட்ட போதே நெஞ்சம் பதறியது. இதையெல்லாம் செஞ்சா மாட்டிக்குவோம்னு அந்த கயவர்களுக்குத் தோன்றியிருக்காதா? அப்படி தோன்றியிருந்தால் அவ்வாறு செய்திருப்பார்களா என மறுபடியும் ஒரு நினைப்பு. அக்குழந்தைகளின் பெற்றோர்களின் நிலையை நினைத்துப் பார்க்கவே கடினமாகவே இருக்கிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அந்த சிறுவனின் சடலத்தை வாய்க்காலிலிருந்து மீட்டதைப் பார்த்த போது, அக்குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களுக்கான எல்லா கதவுகளும் ஒரே நேரத்தில் மூடிக் கொண்டன, ஆனால் இந்த பாவிகளுக்கோ கோர்ட் கேஸ் அப்படின்னு பல கதவுகள் பல வருஷம் திறந்து இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் ஒரு சில நாட்களிலேயே இக்குற்றத்தில் தொடர்புடையவர்களில் ஒருவன் போலீஸ் என்கவுண்டரில் பலியான செய்தி கேட்டு ஒரு வித ஆறுதல் கிடைத்தது. என்கவுண்டர் நடைபெற்றதற்கான காரணங்களாகப் போலீஸ் தரப்பு சொல்லியதை கூட்டிக் கழித்து பார்த்தால் "இது என்கவுண்டர் அல்ல திட்டமிட்டு செய்யப் பட்டக் கொலை என்று "மனித உரிமை பேசுபவர்களது"(க்ரிமினல்களுக்கு மட்டும்) கூற்று உண்மையாக இருக்கக் கூடிய வாய்ப்பு தென்படுகிறது. அது உண்மையாகவே இருந்தாலும் கூட "so what" என்று மட்டுமே நினைக்கத் தோன்றுகிறது. எஞ்சியிருக்கும் இன்னொரு கயவனுக்கு இப்போது கிடைத்திருக்கும் தண்டனை நீதிமன்றம் வழங்கப் போகும் தண்டனையை விட பெரிய தண்டனையே. <br /><br />என்னை "கைப்புள்ள"யாக மட்டுமில்லாமல் அறிந்திருப்பவர்களுக்கு, இக்கொலை சம்பவம் பற்றிக் கேள்வி பட்டதும் என் நினைவு வந்திருக்க வாய்ப்புண்டு. ஏனெனில் குழந்தைகளைக் கடத்திக் கொன்றவனதும் பெயரும் எனது இயற்பெயரும் ஒன்று தான். மோகன்ராஜ் என்கிற டாக்சி டிரைவர் தான் பிரதானக் குற்றவாளி என்று அறிந்ததும் "அட படுபாவி! நம்ம பேரை இப்படி கெடுத்து வச்சிருக்கானே" என்று தான் தோன்றியது. "Mohanraj" என்ற தேடுசொல் கொடுத்து கூகிளில் தேடினால் முதல் பக்கத்தில் இந்த பாதகனின் பெயர் இன்றும் வருகிறது, இன்னும் சில காலத்துக்கு வந்து கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன். எட்டு-பத்து வருடத்துக்கு முன்னர் எனது பெயர் "IIT Delhi" வலைதளத்தில் "மாணவர்" என்ற வகையில் கூகிளின் முதல் பக்கத்தில் வந்து கொண்டிருந்தது. ஆனால் அப்போதெல்லாம் பிரபலம் ஆகாத என் பெயர் கடந்த இரு மாதங்களில் அனைவருக்கும் பரிச்சயமான பெயராகிப் போயிருந்தது. இந்த பெயரின் காரணமாக நான் எது நடக்கக் கூடாதுன்னு நினைத்தேனோ அது எனக்கு நடந்தது. குழந்தைகளின் கொலை செய்தி வந்த மறுநாள் காரில் அலுவலகத்தில் கூட வேலை செய்யும் நண்பரோடு திருப்பெரும்புதூர் சென்று கொண்டிருந்தேன். "கோயம்புத்தூர் குழந்தைகள் கொலை கேசில் கொலை செஞ்சவனோட பேரும் மோகன்ராஜ்"தானாம் என்றார் நண்பர். ஏற்கனவே இக்கொலை செய்தியைக் கேட்டு மனம் மிகவும் கனத்துப் போயிருந்தது, என் பெயரை இப்பாதகனோடு தொடர்பு படுத்தி யாரும் எதுவும் பேச மாட்டார்கள் என்றே நினைத்திருந்தேன். நண்பர் அவ்வாறு சொல்லியதும் என்ன சொல்வது என்றே ஒரு கணம் புரியவில்லை, நான் என்ன சொல்வேன் என்று அவர் எதிர்பார்த்தாரோ தெரியவில்லை, வெறுமனே "ஹ்ம்ம்" என்றேன். அவரும் மேற்கொண்டு எதுவும் சொல்லவில்லை. <br /><br />கடந்த ஆண்டில் "கான்" என்ற தன்னுடைய இரண்டாம் பெயரின்(Surname) காரணமாக இந்தி திரைப்பட நடிகர் ஷாருக் கான், நியு ஆர்க் எனும் அமெரிக்க விமான நிலையத்தில் சந்தேகத்தின் காரணமாக விசாரிக்கப் பட்டார். இதற்கு தன்னுடைய மறைமுக எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக, கான் என்ற பெயர் உள்ளவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் அல்ல என்று பொருள்படும் வண்ணம் "My Name is Khan" என்ற ஒரு திரைப்படத்தை தன் மனைவியைத் தயாரிக்க வைத்து அதில் நடித்தார். அவருக்கு இருக்கும் வசதிக்கு அவர் எதை வேண்டுமானாலும் செய்யலாம். நாமும் "My name is Mohanraj" என்று நம்மால முடிஞ்சது ஒரு பதிவை எழுதி வைப்போமான்னு தோனுச்சு. ஆனால் கடந்த சில மாதங்களாக நடப்பது போலவே பதிவுக்கு தலைப்பு மட்டும் தான் தோனுச்சு, அதுல என்ன மேட்டர் எழுதறதுன்னு தெரியலை. கடந்த சில மாதங்களாகவே...வேணாம் விடுங்க...பதிவோட தலைப்பை படிச்சுக்கங்க :)<br /><br />****************************************************<br />நந்தலாலா படம் பாத்தேன். நல்லாருந்துச்சு. படத்தில் சில இடங்களில் எனக்கு ஒப்புதல் இல்லை, இருந்தாலும் இது ஒரு நல்ல படம் என்பதில் சந்தேகமில்லை. படம் முழுதும் பல குறியீடுகள் இருப்பதாக நான் உணர்ந்தேன். உதாரணமாக பாஸ்கர் மணிக்கும், அகிக்கும் வழிகாட்டும் கால் ஊனம் கொண்ட அந்த நபர். ஒற்றைக் காலுடன் கரடு முரடான காடு மலை எல்லாம் கடந்து செல்லக் கூடிய அந்நபரால், பாஸ்கர் மணி உதிர்த்த கடுஞ்சொல் ஒன்றினால் மன தைரியம் உடைந்து எழ முடியாமல் மறுபடியும் மறுபடியும் கீழே விழும் காட்சி அருமை. <br /><br />படத்தில் இளையராஜாவின் இசையும் ஒரு கதாபாத்திரம் போலவே செயல்படுகிறது. இருப்பினும் இசை சில இடங்களில் பின்னணியில் இல்லாமல் முன்னணியில் இருப்பது போல எனக்கு தோன்றியது. சில இடங்களில் அது நெருடலாகத் தோன்றியது. ஒரு வேளை திரையரங்கத்தில் நான் உட்கார்ந்திருந்த சீட்டுக்கு வெகு அருகாமையில் ஸ்பீக்கர் இருந்ததும் ஒரு காரணமோ என்னவோ? <br /><br />கலைஞர் தொலைக்காட்சியில் நந்தலாலா படத்துக்காக இளையராஜாவுடன் மிஷ்கின் நடத்திய நேர்காணலைக் கண்ட போது பல வருடங்களாக மனதில் இருந்த ஒரு சந்தேகத்துக்குப் பதில் கிடைத்தது. கீழே உள்ள காணொளியில் 3:24லிருந்து 4:30 வரை ராஜா சொல்வதை கேளுங்கள்.<br /><br /><object width="480" height="385"><param name="movie" value="http://www.youtube.com/v/ddjXNjReG2o?fs=1&hl=en_US"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/ddjXNjReG2o?fs=1&hl=en_US" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"></embed></object><br /><br />"என்னை விட்டுப் போகாதே" திரைப்படத்தில் ராமராஜன் பாடுவதாக வரும் "பொன்னைப் போல ஆத்தா" பாடல் நான் அடிக்கடி விரும்பிக் கேட்கும் பாடல்களில் ஒன்று. கர்நாடக சங்கீத கச்சேரிகளில் மட்டுமே பயன்படுத்தப் படும் 'முகர்சிங்' இசை கருவியின் இசையுடன் தொடங்குவது இப்பாடலின் சிறப்பு. <br /><object width="480" height="385"><param name="movie" value="http://www.youtube.com/v/igpdCX8UNFw?fs=1&hl=en_US"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/igpdCX8UNFw?fs=1&hl=en_US" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"></embed></object><br /><br />இப்பாடலின் வரிகள் மறைந்த தன் தாயினை நினைத்து பற்றி ஒரு மகன் பாடுவது போல அமைந்திருக்கும். கீழே உள்ள வரிகளில் பாடல் ஆசிரியர் என்ன சொல்ல வருகிறார் என பல முறை யோசித்ததுண்டு. அப்பாடல் வரிகளின் பொருள் தெரிந்து கொள்வதற்கான என் தேடலும் தொடர்ந்து கொண்டேயிருந்தது, கலைஞர் டிவியில் நந்தலாலா படத்துக்கான இளையராஜாவின் நேர்காணலைக் காணும் வரை. <br /><br />"வெட்டியில ஊரைச் சுத்தும் வேலையத்த மகனும் உண்டு<br />வெட்டிப் பய என்னை போல எத்தனையோ பேரும் உண்டு<br />கெட்டுப் போன மகளும் உண்டு<br />தட்டுக் கெட்ட தங்கையும் உண்டு<br />கேடு கெட்ட தந்தையும் உண்டு<br />கூறு கெட்ட தாரமும் உண்டு<br />கெட்டுப் போன தாயி இல்லையடி ஆத்தா<br />கெட்டுப் போன தாயி எங்கும் இல்லவே இல்லை"<br /><br />இப்பாடலையும் இளையராஜா தான் எழுதியிருப்பார் என நினைக்கிறேன், ஆனால் அதை இணையத்தில் இருந்து உறுதி செய்து கொள்ள முடியவில்லை. ஆதிசங்கரரின் ஸ்லோகம் ஒன்றினால் இன்ஸ்பையர் ஆகி இப்பாடல் வரிகளை எழுதியிருப்பார் போலும். <br /><br />Vidhera gnanena dravina virahena alasathaya,<br />Vidheyasakya thaw thava charanayor yachyathirabhooth,<br />Hadethath kshanthavyam anani sa kalodharini shive,<br />Kuputhro jayetha kwachidapi, kumatha na bhavathi. <br /><br />I forgot to salute your feet due to ignorance of rules,<br />In search of money, being lazy and inefficient.<br />Oh, mother of all the world and giver of all that is good,<br />It is easy for you to excuse me,<br />For a bad son may be born but there can be no bad mother.<br /><br />என் அறியாமையின் காரணமாகவும், பொருள் தேடுவதில் முனைப்பாக இருந்ததினாலும், என்னுடைய சோம்பலின் காரணமாகவும் உலகத்தை எல்லாம் காக்கும் அன்னை உன்னை வழிபட தவறிவிட்டேன், என்னை மன்னிப்பது உனக்கு எளிதானது, ஏனெனில் கெட்ட மகன் ஒருவன் இருக்கலாம் ஆயினும் கெட்ட தாய் என்றொருவள் இருக்க முடியாது.<br /><br />"இளையராஜா என் குரு" என்ற தலைப்பில் பதிவெழுத தலைப்பும் எழுத மேட்டரும் இருக்கிறது. ஆனால் அதற்கான நேரம் தான் இன்னும் அமையவில்லை என எண்ணுகிறேன். தலைவர் ஒவ்வொரு முறையும் பேசும் போது அவரிடமிருந்து கற்றுக் கொள்ள எப்போதும் ஏதாவது ஒன்று இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஒரு நல்லாசானைப் போல இம்முறை என்னுடைய ஐயத்தையும் தீர்த்து வேறு வைத்திருக்கிறார். <br />"பொன்னைப் போல ஆத்தா" பாடல் வரிகளுக்கான பொருள் புரிந்தது. ஆனால் தான் பெற்ற குழந்தையையே குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்து விட்டு அனாதையாக்கிச் செல்லும் தாய்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். அவ்வாறானவர்களை ஏன் மோசமான அல்லது கெட்ட தாய் என்று கூற முடியாது என்று விளங்கிக் கொள்ள முடியவில்லை...தேடல் மீண்டும் தொடர்கிறது.கைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.com20tag:blogger.com,1999:blog-20289353.post-30679192927705548762010-07-25T21:49:00.003+05:302010-07-25T22:01:15.149+05:30பொண்டாட்டியைப் பிரசவத்துக்கு அனுப்பிட்டு நிறைவு பகுதி...<a href="http://kaipullai.blogspot.com/2010/07/blog-post.html">இரண்டாம் பகுதி</a><br /><br /><a href="http://kaipullai.blogspot.com/2010/03/blog-post.html">முதல் பகுதி</a><br /><br />2008 ஆம் ஆண்டு ஜூலை மாசம் 12 ஆம் தேதி - திப்பசந்திராவில் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த அந்த பூங்காவுக்கு முதன் முதலா நான் போன நாள். காரணம், அதுக்கு சில நாளுங்களுக்கு முன்னாடி தான் புகைப்படக் கலை பிதாமகர் "ஜீவ்ஸ் அண்ணாச்சி"யின் ஆற்றுபடுத்துதலின் பேரில் Panasonic Lumix DMC-FZ18 கேமரா வாங்கியிருந்தேன். முன்னே வச்சிருந்த Canon Ixusஐ விட இந்த கேமராவில் வசதிகள் அதிகம், ஜூம் செய்யும் திறனும் அதிகம். "நீ புரொபஷனல் குரியர் ஆயிட்டே...DSLR வாங்கிக்க"ன்னு பயங்கரமா உற்சாகம் குடுத்ததும் அவரே தான். ஆனா DSLR வாங்கி படம் பிடிக்கற அளவுக்கு நான் இன்னும் வளரலியோன்னு எனக்கு ஒரு சந்தேகம் இருந்துக்கிட்டே இருந்தது. அதனால சாதாரண பாயிண்ட் அண்ட் ஷூட் கேமராவுக்கும் உயர்தர DSLR கேமராவுக்கும் இடைபட்ட Prosumer கேமராவான பேனசானிக் கேமராவைத் தேர்வு செய்தேன். அந்த கேமராவைப் பழ(க்)குவதற்காகப் படங்களை எடுக்கலாம் என்று எண்ணி அன்னிக்கு அந்த பூங்காவுக்குப் போனேன்.<br /><br />ஜூலை மாசம் 12 ஆம் தேதி ஒரு சனிக்கிழமை. அப்போ தங்கமணியும் பெங்களூர்ல தான் இருந்தாங்க. ஏன்னா வளைகாப்பு ஜூலை 18ஆம் தேதி சென்னையில் எங்க வீட்டில் நடந்தது. அதுக்கப்புறம் தான் அவங்களை அவங்க வீட்டுக்குக் கூட்டிட்டு போயிட்டாங்க. தங்கமணி ஊர்ல இருந்தப்போ நான் பூங்காவுக்கு எப்படி தனியாப் போனேன்னு ஞாபகம் வரமாட்டேங்குது. ஏன்னா நான் பார்க்கனும்னு நினைச்சிட்டிருந்த சில இடங்களுக்கு, மக்கள் போன சில டூர்களை மிஸ் பண்ணியிருக்கேன் - உதாரணத்துக்கு ஜீவ்ஸ்/சிவிஆர்/சிபி ஆர்கனைஸ் பண்ண இம்சை அரசி அவங்களோட திருமணம் கம் கொல்லிமலை டூர், அப்புறம் எங்க ஆஃபிஸ்ல ப்ராஜெக்ட் சார்பாக ஆர்கனைஸ் செய்யப்பட்ட மசினகுடி டூர். உண்மையிலேயே மலை சார்ந்த குறிஞ்சி திணை இடங்களைப் பார்ப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம் என்றாலும், என்னமோ போகனும்னே தோனலை...பொண்டாட்டி பிரசவத்துக்குப் போகப் போற சமயத்திலே <a href="http://www.hummaa.com/music/song/Oru+Naalum+Unai+Maravaaga/130202#">"விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்"</a>னு தான் இருந்துச்சு:) இதே காரணத்துக்காகவே ஆபீசில் ஏற்பாடு செய்திருந்த இன்னொரு டூருக்கும் நான் போகலை. அதனால எனக்கு கொஞ்சம் கெட்ட பேரு...இப்போ சமீபத்துல ஒரு கெட் டுகெதர் ஒரு ரிசார்ட்ல ஆர்கனைஸ் பண்ணியிருந்தாங்க. எங்க ப்ராஜெக்ட் மேனேஜர் "நீ இதுக்காச்சும் வருவே இல்லை"ன்னு ஒரு சந்தேகத்தோட கேட்டார், நான் ஏதோ வேணும்னே அவாய்ட் பண்ண மாதிரி. ஆனா அந்த நேரத்துல டூர் போகறதை பத்தி யோசிச்சு கூட பார்க்க முடியலை, மிஸ் பண்ணிட்டோமேன்னு வருத்தமும் படலை. <br /><br />மாலை ஆறு மணி போல அந்த பூங்காவுக்கு நான் போனேன். அது புகைப்படம் எடுக்கறதுக்கு ஏத்த சமயம் கெடையாது. வெளிச்சம் கம்மியா இருந்ததுனால படங்கள் அவ்வளவு திருப்திகரமா வரலை. உடனே ஜீவ்ஸ் அண்ணாச்சிக்கு ஃபோன் பண்ணி 'background blur' எல்லாம் வரலைன்னு வருத்தப்பட்டு சொன்னேன். அவரு "அட! என்ன நீரு இப்போ தான் கேமரா வாங்கிருக்கீரு...அதுக்குள்ள எல்லாம் வந்துருமா? முயற்சி பண்ணிக்கிட்டே இருங்க ஓய்"னு ஆறுதல் சொன்னாரு. அவரு சொன்னதை கேட்டதும் கொஞ்சம் தெம்பா இருந்துச்சு. வெளிச்சம் கம்மியா இருந்தாலும், வானத்தை நோக்கிப் பார்த்தா ஓரளவுக்கு வெளிச்சம் ஓகேவா இருக்கற மாதிரி இருந்துச்சு. சரி கேமராவோட 18x ஜூமைப் பரிசோதிச்சுப் பார்த்துடுவோம்னு நிலாவை படமெடுத்தேன். நிலவிலிருக்கும் craterகள்(பள்ளங்கள்) கூடத் தெரிஞ்சது. மனசுக்குச் சந்தோஷம் தர்ற ஒரு படம் கெடைச்சுச்சு. அது மேலும் நல்ல படங்கள் எடுக்க ஊக்கமா அமைஞ்சது. <br /><a href="http://4.bp.blogspot.com/_TXCaXL0id1A/TDCdyPABkcI/AAAAAAAAC2Y/h0eZOOArWh8/s1600/Moon.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 268px;" src="http://4.bp.blogspot.com/_TXCaXL0id1A/TDCdyPABkcI/AAAAAAAAC2Y/h0eZOOArWh8/s400/Moon.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5490061432110289346" /></a><br /><br />அந்த நேரம் பார்க்ல ஒரு பையன் சைக்கிள் ஓட்டிக்கிட்டு இருந்தான். "அங்கிள் ஒன் ஃபோட்டோ" என்றான். நானும் ஒரு படம் எடுத்தேன். படம் எடுக்கிறேன் என்று தெரிந்ததும் சைக்கிளில் சுற்றி சுற்றி வந்து போஸ் கொடுத்து சைக்கிள் ஓட்டுவது போல படம் எடுக்கச் சொன்னான். யாரையாச்சும் உங்களை படம் எடுக்கட்டுமான்னு கேக்கறதுக்கு எனக்கு எப்பவுமே ஒரு தயக்கம் இருக்கும். தானாகவே வர்ற வாய்ப்பை எதுக்கு விடனும்னு நானும் நிறைய படங்களை எடுத்தேன். நான் ஃபோட்டோ எடுப்பதை தெரிந்து கொண்டு அந்த பையனின் நண்பர்கள் சில பேரும் வந்து ஃபோட்டோ எடுக்க போஸ் கொடுக்க ஆரம்பித்தார்கள். டிஜிட்டல் கேமராவில் ஃபோட்டோ எடுத்து விட்டு, எடுத்த படத்தை அவர்களுக்கு LCD திரையில் காண்பிக்க வேண்டும். அதை பார்த்து விட்டு அவர்கள் மகிழ்வார்கள், அவங்க மகிழ்ச்சியை பார்ப்பதில் நமக்கு ஒரு மகிழ்ச்சி. எனக்கு எப்போதுமே கேமரா முன்னே நிற்பதை விட, கேமராவுக்குப் பின்னே நின்று புகைப்படம் எடுப்பதில் நாட்டம் அதிகம். அதிலும் குழந்தைகளைப் புகைப்படம் எடுப்பது இன்று வரை எனக்கு சவாலாகவே இருந்து வருகிறது. ஏனெனில் அவர்களுடைய அசைவுகள் மின்னல் வேகத்தில் இருக்கும். அதற்கேற்றாற் போல படம் எடுப்பது என்பது என்னை பொறுத்த வரை மிகவும் சவாலானது மற்றும் சந்தோஷம் அளிக்கும் விஷயம். <br /><br /><a href="http://4.bp.blogspot.com/_TXCaXL0id1A/TAKGwZiOFMI/AAAAAAAACx8/0afwYkMnwbc/s1600/P1030514.JPG"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_TXCaXL0id1A/TAKGwZiOFMI/AAAAAAAACx8/0afwYkMnwbc/s400/P1030514.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5477088262882202818" /></a><br /><br /><a href="http://3.bp.blogspot.com/_TXCaXL0id1A/TAKGw4mLo-I/AAAAAAAACyE/w9T2h9pIGy4/s1600/P1030516.JPG"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_TXCaXL0id1A/TAKGw4mLo-I/AAAAAAAACyE/w9T2h9pIGy4/s400/P1030516.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5477088271220319202" /></a><br /><br />அன்று நான் எடுத்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது இந்த படம் தான். அக்குழந்தையின் முகத்தில் தெரியும் innocence(வெகுளித்தனம்) தான் அதற்கு காரணம் என நினைக்கிறேன். அன்று நிலவை புகைப்படம் எடுத்தபோது எந்தளவு மகிழ்ச்சி அடைந்தேனோ அதை விட இரட்டிப்பு மகிழ்ச்சி இந்த பிள்ளை நிலவைப் புகைப்படம் எடுத்த போது கிடைத்தது. கேமராவின் ஆட்டோ மோடில் ஃப்ளாஷ் உபயோகித்து எடுத்த படம் இது. <br /><a href="http://3.bp.blogspot.com/_TXCaXL0id1A/TAKHQnicU6I/AAAAAAAACyM/Hf0UEdWv-kc/s1600/P1030527.JPG"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 381px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_TXCaXL0id1A/TAKHQnicU6I/AAAAAAAACyM/Hf0UEdWv-kc/s400/P1030527.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5477088816397046690" /></a><br /><br />வீட்டுக்குப் போனதும் நான் எடுத்த படங்களைத் தங்கமணிக்கும் காட்டினேன். அவங்களும் சந்தோஷப் பட்டாங்க. அதுக்கப்புறம் ஜூலை 18ஆம் தேதி வளைகாப்பு முடிஞ்சதும் அவங்க அம்மா வீட்டுக்குப் போயிட்டாங்க. இந்த நேரத்துல ஒரு சின்ன கிளை கதை ஓட்டுவோம். உலகத்துலேயே அதிக பரிணாம வளர்ச்சி பெற்ற உயிரினம் எதுன்னு சொல்லுங்க பார்க்கலாம்? கரப்பான் பூச்சி. பல கோடி ஆண்டுகளா இந்த உயிரினம் தன்னை தானே மேம்படுத்திக்கிட்டே வந்துருக்காம், தனக்கு ஏற்படக் கூடிய எல்லாவிதமான தடங்கல்களையும் சமாளிக்கிறதுக்காக மிகவும் evolve ஆன உயிரினம் அது. ஜப்பான் நாட்டில் ஹிரோஷிமா நாகசாகியில அணுகுண்டு வீசப்பட்டு பல லட்சம் மக்கள் மாண்ட போதும் அந்நகரில் வாழ்ந்த கரப்பான்பூச்சிகள் மட்டும் மடியவில்லையாம். அப்படின்னா அது எவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கும் யோசிச்சிப் பாருங்க. அப்பேர்ப்பட்ட கரப்பான் பூச்சிக்கே தாய்க்குலத்தைப் பார்த்தா பயம் போலிருக்கு. நமக்கு இருக்கற மாதிரியே கரப்பான்களுக்கும் கரப்பான் இனத்து தாய்க்குலத்து கிட்ட பயம் இருக்கும், அது இயல்பானது தான் ஒன்னும் பெரிய விஷயம் இல்லை. <br /><br />ஆனா அதுங்களுக்கு மனித இனத்தின் தாய்க்குலத்தின் மீது அதை விட பயம் போல இருக்கு. ஏன்னா தங்கமணி வீட்டுல இருக்கற வரைக்கும் கரப்பான்பூச்சி வீட்டுல இல்லை. அவங்க அந்தாண்ட போனதும் வீட்டுக்குள்ளே குட்டி குட்டியா நிறைய கரப்பான்பூச்சிகள் வந்து சேர ஆரம்பிச்சது. இதுக்கே வீட்டை நான் சுத்தமா தான் வச்சிருந்தேன். பனீர்ல(பாலாடை கட்டி) போரிக் ஆசிட் பவுடரை(Boric Acid) சிறு சிறு உருண்டைகளா சேர்த்து உருட்டி வச்சா அதை சாப்பிட்டுட்டு கரப்பான் பூச்சிகள் எல்லாம் செத்துடும்னு யாரோ சொன்னதை கேட்டு அதையும் செய்து பார்த்தேன். ஆனா ப்ரேக்ஃபாஸ்டுக்கும் லஞ்சுக்கும் "பனீர் பட்டர் மசாலா" சாப்பிடற மாதிரி கரப்பான் பூச்சிகள் எல்லாம் சாப்புட்டு கொழுத்த மாதிரி தெரிஞ்சதே தவிர ஒழிஞ்ச மாதிரி தெரியலை. அதுங்க பாட்டுக்கு ஜாலியா வீட்டுல அங்கேயும் இங்கேயும் சுத்தி வந்ததுங்க, என்னை ஒரு பொருட்டாவே மதிக்கலை. ஹ்ம்ம்ம்....கரப்பான்பூச்சிகளுக்குக் கூட நம்ம மேல பயம் இல்லை...அதுங்களுக்குக் கூட தெரிஞ்சிருக்கு இவன் ஒரு டம்மி பீஸ்னு. <br /><br />இப்படியே கரப்பான்களோட உலகப் போரை நடத்திக்கிட்டு ஆஃபிசுக்கும் போய்க்கிட்டுன்னு இப்படியே சில தினங்கள் கழிஞ்சது. ஜூலை மாசம் 24ஆம் தேதி ஒரு ஐடியா தோனுச்சு, இருட்டுற வேளையில சில நாட்களுக்கு முன்னாடி போன அந்த பூங்காவுக்குக் கொஞ்சம் வெளிச்சம் இருக்கும் போதே போனா என்னன்னு. அதனால அன்னிக்கு நாலு மணிக்கே ஆஃபீசுலேருந்து கெளம்பி வீட்டுக்குப் போய் கேமராவை எடுத்துக்கிட்டு பூங்காவுக்குப் போனேன். கிட்டத்தட்ட அஞ்சு மணி இருக்கும். ஆனா பெருத்த ஏமாற்றம். குழந்தைகள் யாரும் அப்போ இல்லை. அப்படியே கொஞ்ச நேரம் அங்கேயே சுத்திக்கிட்டு இருந்தேன். போன முறை நான் பார்த்த குழந்தைகள்ல சிலர் அஞ்சரை மணிக்கு வந்தாங்க. ஆனா அவங்க பாட்டுக்கு வெளையாடிக்கிட்டு இருந்தாங்க. என்னை ஃபோட்டோ எடுக்கச் சொல்லி யாரும் கேக்கலை. ஆஃபீசுலேருந்து சீக்கிரம் வந்தும் பயன் இல்லையேன்னு கொஞ்சம் ஏமாத்தமா தான் இருந்துச்சு. அப்போ அன்னைக்கு நான் படம் எடுத்த போது இருந்த நெட்டையான ஒரு பொண்ணு "அங்கிள்! எங்களை படம் எடுக்கறீங்களா?"ன்னு ஆங்கிலத்துல கேட்டுச்சு. சரி, எடுக்கறேன்னு ஒத்துக்கிட்டதும் தான் தாமதம், தன்னோட மூனு தோழிகளை அழைச்சுக்கிட்டு வந்துடுச்சு. <br /><br />கீழே இருக்கற படங்கள் எல்லாம் மிக மிக இயல்பா, spontaneousஆ அந்த குழந்தைகள் போஸ் கொடுக்க கொடுக்க நானா எடுத்தது. அப்படி நில்லுங்க, இப்படி பாருங்கன்னு நான் எதுவுமே சொல்லலை. அவங்க எப்படி விருப்பப் பட்டு எடுக்கனும்னு நெனைச்சாங்களோ அது மாதிரி தான் நான் எடுத்தேன். ஒவ்வொரு படம் எடுத்ததும் அதுல ஒரு வாண்டு ஒடி வந்து "அங்கிள்! தோசி" அப்படின்னு கன்னடத்துல சொல்லி கேமராவைப் பிடிச்சு இழுக்கும். நானும் எல்சிடி திரையில நான் அவங்களை எடுத்த படங்களைக் காட்டுவேன். அதாவது "தோசி" அப்படின்னா கன்னடத்துல கேமராவைக் காட்டச் சொல்லி கேக்கறதுன்னு அப்புறமா தெரிஞ்சுக்கிட்டேன். உக்காந்துக்கிட்டு, படுத்துக்கிட்டு, புல்லாங்குழல் வாசிக்கிற மாதிரி இப்படின்னு பலவிதமான போஸ் கொடுத்தாங்க அந்த குழந்தைங்க. வெளிச்சம் கம்மியாயிட்டதனாலயும், அந்த கேமரா எனக்கே புதுசுங்கிறதுனாலயும் நான் எடுத்த நிறைய படங்கள் அவ்வளவு நல்லா வரலை. அன்னிக்கு நான் எடுத்ததுல ஓரளவுக்கு சுமாரான படங்களைக் கீழே போட்டுருக்கேன். <br /><a href="http://3.bp.blogspot.com/_TXCaXL0id1A/TAKI7glkpMI/AAAAAAAACyU/m1TKgjGu4gA/s1600/P1040380.JPG"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 220px;" src="http://3.bp.blogspot.com/_TXCaXL0id1A/TAKI7glkpMI/AAAAAAAACyU/m1TKgjGu4gA/s400/P1040380.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5477090652777129154" /></a><br /><br /><a href="http://2.bp.blogspot.com/_TXCaXL0id1A/TAKI8GaVLQI/AAAAAAAACyc/sEg0dAQAEt0/s1600/P1040381.JPG"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_TXCaXL0id1A/TAKI8GaVLQI/AAAAAAAACyc/sEg0dAQAEt0/s400/P1040381.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5477090662930525442" /></a><br /> <br />அந்த தோழிகள் நாலு பேரும் ரொம்ப இயல்பா, எந்த கவலையும் இல்லாம, சந்தோஷமா புகைப்படத்துக்குப் போஸ் கொடுத்ததை பாத்தப்போ எனக்கு பிரம்மா படத்துல வர்ற "<a href="http://www.youtube.com/watch?v=CztV3oi4aGc">இவள் ஒரு இளங்குருவி எழுந்து ஆடும் மலர்க்கொடி</a>" அப்படிங்கிற பாட்டு நியாபகத்துக்கு வந்துச்சு. குறிப்பா ஏன் அந்த பாட்டு நியாபகத்துக்கு வந்துச்சுன்னு இப்போ யோசிச்சா ஒரு விதமான "free spirit" அந்த குழந்தைகளிடம் பாக்க முடிந்ததாக நினைவு. இதுக்கு மேல இதை எப்படி விளக்குறதுன்னு தெரியலை. அதோட எட்டாம் வகுப்பு ஆங்கில துணைப்பாடத்துல படிச்ச "The Little Women" அப்படிங்கிற சுருக்கப்பட்ட புதினமும்(abridged novel) நியாபகத்துக்கு வந்தது. லூயிஸா எம்.ஆல்காட்(Louisa M.Alcott) என்ற எழுத்தாளர் நூற்றி நாற்பது வருடங்களுக்கு முன்னர் எழுதிய நாவல் அது. அந்த கதையில நாலு பெண்கள் இருப்பாங்க - மெக்(Meg), ஜோ(Jo), பெத்(Beth) மற்றும் ஏமி(Amy). சகோதரிகளான அந்த நாலு பெண்களுக்கு நடுவில் நடக்கும் கதையே அந்த புதினம். பாசம், கோபம், துரோகம்னு பல விதமான உணர்ச்சிகள் அந்த கதையில் சொல்லப் பட்டிருந்ததாக நினைவு. அந்த கதையோட ஞாபகம் இருக்குன்னு யோசிச்சு பார்த்தா, மைக்கேல மதன காமராஜன் படத்துல காமேசுவரன் கமல் சொல்லுவாரே "எனக்கு அக்கா கெடையாது, தங்கச்சி கெடையாது"ன்னு அதே மாதிரி தான் எனக்கும்...ஒரு வேளை அக்கா, தங்கச்சி உள்ள குடும்பங்கள் இப்படி தான் இருக்குமோங்கிற ஆர்வத்தை அந்த நாவல் தூண்டி இருக்கலாம். <br /><br />இப்படி அவங்களோட அந்த நட்பைப் பார்த்ததும் என் மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சியை குலைப்பது போல ஒரு சம்பவம் நடந்தது. போட்டோ எடுத்துக் கொள்ளும் மும்முரத்தில் தோழிகள் நால்வரும் ஒருவரை ஒருவர் முந்தி நின்று படம் எடுத்துக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். அதில் ஒரு பெண் தான் முன்னால் நிற்க வேண்டும் என்று அடம்பிடிக்க மற்ற தோழிகள் அதற்கு ஒத்துக் கொள்ளாமல் போக அவர்களுக்குள் சண்டை வந்து விட்டது. கன்னடத்தில் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டு "தூ தூ" என்று துப்பிக் கொண்டு சண்டை போட்டுக்க ஆரம்பிச்சிட்டாங்க. முன்னால் நிற்க வேண்டும் என்று அடம்பிடித்த பெண் கோவித்துக் கொண்டு போய்விட்டாள். எனக்கு மனசுக்கு மிகவும் கஷ்டமாய் போய்விட்டது. "ஃபோட்டோ எடுக்கறேன்னு ஆரம்பிச்சதுனால தானே ஒத்துமையா விளையாடிட்டு இருந்த அந்த தோழிகளுக்குள் சண்டை வந்தது, அவர்களுக்குள் பிரிவினை வர நான் காரணமாகி விட்டேனே" என்ற குற்றவுணர்ச்சிக்கு நான் ஆளானேன். எனக்கு கன்னடம் ஓரளவுக்குப் புரிந்தாலும் பேச வராததால் அவர்களுக்குப் புரியும் வகையில் ஆங்கிலத்தில் "Please don't fight" என்று சமாதானப் படுத்த முயற்சி செய்தேன். மற்ற மூவரும் அதை பற்றி கவலை படவில்லை. "எங்க மூனு பேரையும் ஃபோட்டோ எடுங்க" என்று போஸ் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். <br /><br />திடீர் என்று என்னை முதன் முதலில் ஃபோட்டோ எடுக்கச் சொன்ன நெட்டையான அந்த பெண், "ஒன் மினிட்" என்று சொல்லிவிட்டு ஓடினாள். சண்டையிட்டு விட்டுச் சென்ற தங்களுடைய அந்த தோழியை எங்கிருந்தோ கூட்டிக் கொண்டு வந்தாள். கோபித்துக் கொண்டு போன அந்தப் பெண் அழுதிருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. உடனே மற்ற மூவரும் சேர்ந்து "சாரி" சொல்லி சமாதானப் படுத்தினார்கள். ஒரு படி மேலே போய் அவளுக்கு முத்தமிட்டு சமாதானப் படுத்தினார்கள் இருவர். <br /><a href="http://2.bp.blogspot.com/_TXCaXL0id1A/TAKJuRE4mdI/AAAAAAAACyk/AuzhbQLrGvg/s1600/P1040396.JPG"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_TXCaXL0id1A/TAKJuRE4mdI/AAAAAAAACyk/AuzhbQLrGvg/s400/P1040396.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5477091524786821586" /></a><br /><br />ஒரு வழிப்போக்கனாய், ஒரு மூன்றாம் மனிதனாய் இருந்தாலும் அந்த நேரம் அங்கிருந்து அந்த "little women" நால்வருக்கிடையில் நடந்த அந்த நிகழ்வுகளைப் பார்த்தது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. என் குற்ற உணர்வில் இருந்தும் நான் விடுபட்டேன். அதன்பிறகும் நால்வரும் ஒன்றாகச் சேர்ந்து ஒரு சிலையின் மீது ஏறி நின்று போஸ் கொடுத்தார்கள். இதுவும் நான் எடுத்ததில் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. <br /><a href="http://4.bp.blogspot.com/_TXCaXL0id1A/TAKJu6AQhvI/AAAAAAAACys/d5OyCmyabIg/s1600/P1040405.JPG"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_TXCaXL0id1A/TAKJu6AQhvI/AAAAAAAACys/d5OyCmyabIg/s400/P1040405.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5477091535773271794" /></a><br /><br />அதன் பிறகு அவர்களுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். எந்தெந்த வகுப்பில் படிக்கிறார்கள், அவர்களுக்குத் தமிழ் தெரியுமா என்றெல்லாம். <br />ஒவ்வொரும் ஒவ்வொரு வகுப்பு நெட்டையான அந்த பெண் மட்டும் தான் ஐந்தாம் வகுப்பு, மற்ற வாண்டுகள் எல்லாம் மூன்றாம் வகுப்பு, நான்காம் வகுப்பு இப்படி தான். தமிழில் அவர்களுக்கு ஒரு சில வார்த்தைகளே தெரிந்திருந்தது. அதன் பின்னர் "உங்க பேரை எல்லாம் சொல்லுங்க" என்றேன் நான். "ராஜேஸ்வரி" என்றாள் நெட்டைப் பெண். "நௌஷீன் ஃபாத்திமா" என்றாள் சண்டையிட்டுக் கொண்டு சென்ற அந்த பெண். "ரம்யா" என்றாள் தோசி தோசி என்று கேமராவைப் பிடுங்கிய அந்த பெண். நாலாவது பெண்ணும் தன் பேரைச் சொன்னாள், ஆனால் எனக்கு அது தற்போது நினைவில் இல்லை. என்ன நினைத்தாளோ தெரியவில்லை "என் பேரு பிரதீபா அங்கிள், நான் சும்மா சொன்னேன்" என்றாள் அந்த நெட்டைப் பெண். அவள் சொன்னதைக் கேட்டதும் மற்ற பெண்களும் தாங்கள் சொல்லிய பெயர் தங்கள் உண்மையான பெயர் இல்லையென்று தங்கள் பெயர் வேறு என்று வெவ்வேறு பெயரைச் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்றும், அவர்கள் முதலில் சொல்லிய பெயர் தான் அவர்களுடைய உண்மையான பெயரென்றும் எனக்குத் தெரியும். ஏனென்றால் ஃபோட்டோவுக்குப் போஸ் கொடுக்கும் போது ஒருவரை ஒருவர் கூப்பிடும் போது அவர்கள் பெயரை நான் ஏற்கனவே கேட்டிருந்தேன். நான் பெயரைக் கேட்டதன் நோக்கம் நான்காவது பெண்ணின் பெயர் ரொம்பவும் வித்தியாசமாக இருந்தது...அது என்ன என்று உறுதிபடுத்திக் கொள்வதற்காகத் தான்.<br /><br />அந்த நேரம் பார்த்து தங்கமணி சென்னையிலிருந்து என்னை என் கைபேசியில் இருந்து அழைத்தார். நான் பார்க்கில் ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருப்பதாகச் சொன்னேன். ரம்யா என்ற வாண்டு "யார் அங்கிள்" என்று கேட்டாள். என்ன சொல்வது என்று புரியாமல் "ஆண்ட்டி" என்றேன். தெளிவாகப் புரிய வைப்பதற்காக "நன்ன ஹெண்ட்தி"(என் மனைவி) என்றேன். உடனே கைபேசியை என் கையில் இருந்து பிடுங்க ஆரம்பித்து விட்டாள். சரி என்று கைபேசியை அவளிடம் ஒப்படைத்தேன். அவளும் தங்கமணியுடன் சில நிமிடங்கள் எதோ பேசிக் கொண்டிருந்தாள், "யெஸ் ஆண்ட்டி", "நோ ஆண்ட்டி" என்று மட்டும் பதில் வந்து கொண்டிருந்தது. அதன் பிறகு நால்வரிடமும் என் செல்பேசி கைமாறி விட்டு ஒரு ஐந்து நிமிஷத்துக்கு அப்புறம் என் கைக்குத் திரும்ப வந்தது. அவர்கள் பேசிக் கொண்டிருந்த அந்த ஒரு சில நிமிடங்களில் அந்த பெண்களின முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. அப்படி என்ன தான் பேசிக் கொண்டிருந்தார்கள் என்ற ஆர்வம் தாங்க மாட்டாமல் "அப்படி என்ன தான் பேசிட்டு இருந்தீங்க" என்று தங்கமணியைக் கேட்டேன். "ஒன்னுமில்லை...சும்மா ஜெனரலாத் தான்" என்றார்கள். சும்மா ஜெனரலாப் பேசுனதுக்கா அவர்களின் முகங்களில் அவ்வளவு பூரிப்பு என்று எனக்கு ஒரு ஆச்சரியம். அப்புறம் தான் இந்த மரமண்டையில் உரைத்தது - பெத்த புருஷனாவே இருந்தாலும்...சே...கட்டுன புருஷனாவே இருந்தாலும் ஒரு girl-to-girl talkஇலோ or for that matter ஒரு girl-to-woman talkஇலோ உடம்பில் Y க்ரோமோசோம்கள் கொண்டவர்களுக்கு இடமில்லை என்ற உண்மை :)<br /><br />அதன் பிறகு அந்த பெண்கள் என்னிடம் பேச ஆரம்பித்தார்கள். "அங்கிள்! என் உண்மையான பெயர் ராஜேஸ்வரி தான்" என்றாள் நெட்டைப் பெண். அவள் தான் அந்த நால்வருக்கும் கேங் லீடராக இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் அவள் அவ்வாறு சொன்னதும் மற்ற மூவரும் தாங்கள் என்னிடம் முன்னர் தெரிவித்த பெயர் தான் தங்கள் உண்மையான பெயர் என்று சொன்னார்கள். அவர்கள் பேசியதை கேட்டது என்னை வியப்பின் உச்சத்துக்கே இட்டுச் சென்றது. முதலில் ஏன் பொய்யான பெயரைச் சொன்னார்கள் என்று கேட்க எனக்கு அப்போது தோன்றவில்லை. அதாவது ஃபோட்டோ எடுக்கும் என்னுடைய பின்புலத்தைப் பற்றித் தெரியாத காரணத்தால் முதலில் உண்மையான பெயரைச் சொல்லியதை மாற்றிச் சொல்லியதாகவும், பின்னர் நான் திருமணமானவன் என்றும் என்னை நம்பியும் ஒரு பெண் இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டதும் ஆணான என் மீது அவர்களுக்கு ஒரு நம்பகத் தன்மை தோன்றியதாகவும் நானே யூகித்துக் கொள்கிறேன். எது எப்படியோ எட்டு ஒன்பது வயதே நிரம்பிய அக்குழந்தைகளின் "defence mechanism" கண்டு நான் மலைத்துப் போனேன் என்பது உண்மை. <br /><br />இதே போல சமீபத்தில் சென்னையில் எங்கள் வீட்டுக்கு அருக்கில் என் நண்பன் திருமுருகனும் நானும் இதை போலவே அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் கேட்டார்கள் என்று ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருந்தோம். ஒரு பெண் மட்டும் "ஏன் ஃபோட்டோ எடுக்கறீங்க" என்று கேட்டுக் கொண்டே இருந்தாள். அவளும் ஃபோட்டோவுக்குப் போஸ் கொடுத்தாள் என்றாலும் "சும்மா தான் நீங்க கேட்டீங்கன்னு எடுக்கறோம்" என்று நாங்கள் அளித்த பதில் அவளுக்கு அவ்வளவு திருப்தியாய் இருக்கவில்லை. காலம் கெட்டுக் கிடக்கும் இந்த வேளையில் முன் பின் தெரியாதவர்களிடம்(குறிப்பாக ஆண்களிடம்) அந்த பெண் குழந்தைகள் என்னுடைய பின்புலம் பற்றி தெரியாத போது தங்கள் உண்மையான பெயர் சொல்லாமல் இருந்தது சரி தான் என்று கொண்டாலும், ஒரு முன்னாள் பேச்சிலன்(ர்) என்ற முறையில் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால் கல்யாணம் ஆகாமல் இருக்கும் இளைஞர்கள் எல்லாரும் அயோக்கியர்களும் இல்லை, கல்யாணம் ஆன ஆண்கள் எல்லாரும் உத்தமர்களும் இல்லை. அப்போ யார் நல்லவன், யார் கெட்டவன் என்று எப்படி அடையாளம் கண்டு கொள்வது? என்னிடம் அதற்கான விடையில்லை. சண்டையிட்டு பிரிந்து சென்ற தோழியை சமாதானப் படுத்தி அழைத்து வரச் சொல்லித் தூண்டிய இயற்கையே "Raghavan Instinct" மாதிரி ஒரு instinctஐத் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள அக்குழந்தைகளுக்கு அருளும் என்று நம்புவோமாக. <br /><br />இந்தப் படங்களை எடுத்து, சில நாட்களுக்கு அப்புறம் Flickr வலைதளத்தை மேய்ந்து கொண்டிருந்தேன். அங்கு நான் பெரிதும் மதிக்கும் "Light and Life" என்ற பெயரில் தான் எடுக்கும் புகைப்படங்களை வலையேற்றும் திரு.முரளி எனும் நண்பர் பெங்களூரு மடிவாலா காய்கறி சந்தையில், காய்கறி விற்பவர்களைத் தான் எடுத்திருந்த புகைப்படங்களை வலையேற்றி இருந்தார். சில நாட்களுக்குப் பிறகு தான் எடுத்தப் படங்களைப் ப்ரிண்ட் போட்டு தான் படம் எடுத்தவர்களிடம் அப்படங்களைக் கொடுக்கும் போது மேலும் சில படங்கள் எடுத்து அதனையும் வெளியிட்டிருந்தார். படத்தைப் பெற்றுக் கொண்டவர்களின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி. "சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம் அடுத்தவர்களை சந்தோஷப் படுத்திப் பார்ப்பது" என்று அவரே தன்னுடைய தளத்தில் சொல்லியிருந்ததைப் பார்த்ததும் "அட! இந்த ஐடியாவை நாமும் காப்பி அடிக்கலாமே"ன்னு தோனுச்சு. முரளி அவர்களின் படங்களை கீழே உள்ள சுட்டிகளில் காணலாம்.<br /><br /><a href="http://www.flickr.com/photos/murali-art/2881332696">http://www.flickr.com/photos/murali-art/2881332696</a><br /><br /><a href="http://www.flickr.com/photos/murali-art/2896947339">http://www.flickr.com/photos/murali-art/2896947339</a><br /><br /><a href="http://www.flickr.com/photos/murali-art/2877215473">http://www.flickr.com/photos/murali-art/2877215473</a><br /><br /><a href="http://www.flickr.com/photos/murali-art/2896946339">http://www.flickr.com/photos/murali-art/2896946339</a><br /><br />நானும் அதே மாதிரி நான் எடுத்த படங்களைப் ப்ரிண்ட் போட்டேன். ப்ரிண்ட் போட்டுக் கொண்டு அந்த குழந்தைகளைச் சந்திக்கலாம் என்று நான் நினைத்தது அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை. காரணம் அதன் பிறகு ஓரிரு வாரங்கள் தொடர்ச்சியாக மாலை வேளைகளில் மழை பேய்ந்ததால் குழந்தைகள் யாரும் பூங்காவுக்கு வரவில்லை. ஒரு நாள் ஆஃபிசிலிருந்து நாலரை மணிக்கே கிளம்பி பூங்காவுக்குச் சென்று ஏழு மணி வரைக்கும் காத்திருந்து பார்த்த போதும் யாரும் வரவில்லை...அப்போது செப்டம்பர் மாதம் துவங்கியிருந்தது...ஒரு வேளை தசரா விடுமுறைக்கு எங்காவது ஊருக்குப் போய்விட்டார்களா என்று தோன்றியது. அதன் பிறகு மனைவி பிரசவத்திற்குச் சென்று விட்டதால், திப்பசந்திராவில் உள்ள வீட்டைக் காலி செய்து விட்டு கோரமங்கலாவில் உள்ள கம்பெனியின் தங்கும் விடுதிக்குச் செல்லும் நாள் நெருங்க ஆரம்பித்து விட்டது. நான் ப்ரிண்ட் போட்டு வைத்திருக்கும் படங்களைக் கொடுக்காமலேயே செல்ல நேரிடுமோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். படங்களைக் கொடுப்பதற்காக நான்காவது முயற்சி ஒன்றை மேற்கொண்டேன். அன்றும் பூங்காவில் நான் அறிந்திருந்த குழந்தைகள் யாரும் இல்லை. பெருத்த ஏமாற்றமாக இருந்தது. <br /><br />அப்போது அதிருஷ்டவசமாக ராஜேஸ்வரி என்ற அந்த பெண் பூங்காவுக்கு அருகில் இருந்த ஒரு வீட்டின் பால்கனியில் நின்று கொண்டு இன்னொரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். கீழே நின்று சைகை காட்டி அவளை கீழே வரச் சொன்னேன். முதலில் "வர மாட்டேன்" என்று தலையாட்டினாள். பின்பு என்ன நினைத்தாளோ தெரியவில்லை, தனியாகக் கீழே இறங்கி வந்தாள். "வாட் அங்கிள்" என்றாள். நான் ப்ரிண்ட் போட்டு எடுத்து வந்திருந்த படங்களை "ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்று கொடுத்து விடு" என்று சொல்லி நான் படங்களைப் போட்டு எடுத்து வந்திருந்த கவரை அவளிடம் நீட்டினேன். அவள் படங்களை எடுத்துப் பார்த்து விட்டு "ஹவ் மச் அங்கிள்?" என்றாள். படங்களைப் பார்த்த மாத்திரத்தில் வெள்ளப் பெருக்கு போல அவள் முகத்தில் மகிழ்ச்சி பொங்கும் என்று எதிர்பார்த்திருந்த எனக்குச் சப்பென்றாகி விட்டது. "எனக்கு எதுவும் வேண்டாம். மறக்காமல் எல்லோருக்கும் ஒவ்வொரு படம் கொடுத்து விடு" என்று சொன்னேன். அவளும் "தாங்க்ஸ்" என்று சொல்லிவிட்டு அவளுடைய வீட்டுக்குள் ஓடி விட்டாள். முரளி அவர்கள் மடிவாலா மார்க்கெட்டில் பார்க்க முடிந்த மகிழ்ச்சியை நான் அந்த குழந்தைகளின் முகத்தில் கடைசி வரை பார்க்கவே முடியவில்லை. <br /><br />பொண்டாட்டியைப் பிரசவத்துக்கு அனுப்பிய சில மாதங்களில் நடந்த நிகழ்வுகளை ஒருவாறாக எழுதி முடிச்சிட்டேன். அடுத்த பதிவு(எப்போ வருமோ!) வரும் வரை...அவ்ளோ தான்.கைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-20289353.post-15128885720359894762010-07-10T19:20:00.003+05:302010-07-10T21:01:40.578+05:30பொண்டாட்டியைப் பிரசவத்துக்கு அனுப்பிட்டு பார்ட் டூ...<a href="http://kaipullai.blogspot.com/2010/03/blog-post.html">"பொண்டாட்டியைப் பிரசவத்துக்கு அனுப்பிட்டு..."</a> பதிவோட தொடர்ச்சி.<br /><br />ஒரு மன்னிப்பு கேட்டுக்கிட்டு இந்தப் பதிவைத் துவங்கிக்கிறேன்...கிட்டத்தட்ட மூனு மாசத்துக்கு அப்புறம் இரண்டாம் பகுதி போடறதுக்காக. போன பதிவுக்கு தலைப்பை வைக்கும் போது அதை படிச்சவங்க பலரும் புரிஞ்சிக்கிட்ட மாதிரி ஒரு அர்த்தம் பதிவுல இருக்குன்னு சத்தியமா எனக்கு தோனவே இல்லை. ஒரு அப்பாவி கெடச்சதும் எல்லாரும் ஒன்னா சேர்ந்து ஓட்டி எடுத்துட்டாங்க. அதுலயும் கிட்டத்தட்ட ஒரு வருஷமா தலைமறைவா இருந்த 'மாயவரம் ஷேக்' அபி அப்பா "கேப்"புல கிடா வெட்டி ரெண்டு கமெண்டு போட்டுட்டாரு(ரெண்டும் ஒரே கமெண்ட் வேற). இருங்க அப்பாஜி...உங்களைத் தனியா கவனிச்சிக்கிறேன். யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வராமலயா போகும்? இதுக்கு மேலயும் இந்தப் பதிவுக்கு "கேப்" விட்டா ரெண்டாவது புள்ளைக்கு "ஃபர்ஸ்ட் பர்த்டே"வும் கொண்டாடிடுவாங்கங்கிறதுனால கமெண்டுல பலரும் சொன்னா மாதிரி "இரண்டாம் குழந்தை" அது இதுன்னு எதுவும் இல்லைன்னு(இப்போதைக்கு) ஆணித்தரமா சொல்லிக்கிறேன் :) முதல் குழந்தையைப் பெறுவதற்காக அம்மணி ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி தாய் வீட்டுக்குப் போனப்போ நடந்தவைக்களை நினைவு கூறுவதே இந்தப் பதிவுகளின் நோக்கம். <br /><br />பொண்டாட்டியைத் தாய் வீட்டுக்கு அனுப்புனதுக்கும் குழந்தை பிறக்கறதுக்கும் நடுவிலான இந்த இடைபட்ட காலத்தில் தான் பெரும்பாலான கணவன்மார்களுக்கு <a href="http://dictionary.reference.com/browse/horny">'கொம்பு'</a> முளைச்சது போல இருக்குமாம்னு "கொம்பு சீவும் மென்பொருள் நிறுவனங்கள்" ங்கிற தலைப்புல சமீபத்துல நடந்து முடிஞ்ச உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தான் சமர்ப்பித்த ஆய்வு கட்டுரையில சொல்லிருக்காரு நம்ம <a href="http://ammanchi.blogspot.com/">அம்பி</a>. அதன் காரணமாகவே பன்னெடுங்காலமாக தாய் வீட்டுக்குச் சென்றிருக்கும் தன் மனைவி திரும்பி வரும் போது அவளுக்குத் துணையாக இருக்கட்டுமேங்கிற எண்ணத்தில் ஒரு 'சக கிழற்றியை' ஏற்பாடு செய்யும் வழக்கம் இருந்ததாம். ஆனா மனைவியான கிழற்றியும், துணையா இருக்கட்டுமேன்னு கொண்டு வரப்பட்ட சக கிழற்றியும், களத்தில் இறங்கி ஒருவருக்கு ஒருவர் குடுமிப்புடி சண்டை போடும் போது "சக களத்தி" ஆகி நாளடைவில் ஒருவருக்கு ஒருவர் "சக்களத்தி" ஆகி விடுகிறார்கள் என்று சொல்கிறது அம்பி அவர்களின் ஆய்வு. <br /><br />ஆனா அந்த பழக்கம் இப்போ கணவர்கள் மத்தியில் வழக்கொழிஞ்சு போயிடுச்சாம். மேலும் டேமேஜர், அப்புரைசல், டிராபிக் ஜாம் இப்படின்னு எந்தவிதமான பிரச்சினைகளுமில்லாத ஒரு காலக்கட்டத்துக்கு ஏத்த சமூக வழக்கம் அது என்கிறார். இக்காலக்கட்டத்துக்கு அது ஒவ்வாதென்பதும் குறிப்பாக மென்பொருள் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு இந்த பழங்கால சமூக முறையைப் பின்பற்றும் வாய்ப்பு வேலை பளுவின் காரணமாக அவர்களுடைய நிறுவனங்களாலேயே மறைமுகமாக மறுக்கப்பட்டு விடுவதாகவும், அதனால இந்த தொன்மையான தமிழர் பண்பாடு அழிந்துவிட்டதாகவும் சொல்றாரு. OMRனு பேர் உள்ள ரோடு சென்னையிலயும் இருக்கு, பெங்களூர்லயும் இருக்கு...ஆறு மணிக்கு மேல இந்த ரோட்டுல எந்த ஊர்ல மாட்டுனாலும் சரி, வீடு போய் சேர ரெண்டு மணி நேரம் ஆகும் அதுக்கப்புறம் எங்கேருந்து மேல சொன்னதெல்லாம் சாத்தியப்படும்னு தன்னுடைய ஆய்வை இந்த சமூகத்தை நோக்கிய ஒரு கேள்வியோட நிறைவு செஞ்சிருக்காரு அம்பி. அம்பியோட ஆய்வைப் பத்தி கருத்து சொல்லற அளவுக்குத் தகுதியோ அனுபவமோ இல்லாத காரணத்தால நான் என் சொந்தக் கதைக்கு நகர்ந்துக்கறேன் :) <br /><br />கல்யாணம் முடிஞ்சதும் கிட்டத்தட்ட ஒன்னரை வருஷம் நானும் என் மனைவியும் பெங்களூரில்(2007-2008)இருந்தோம்...பழைய HAL ஏர்போர்ட் பக்கத்துல திப்பசந்திரா அப்படிங்கற இடத்துல தான் வீடு. கல்யாணத்துக்கு முன்னாடி தன்னோட வேலையைத் தானே செஞ்சிக்கனும், யாரையும் எதிர்பார்க்கக் கூடாது அப்படின்னு அம்மா சொல்லிக் குடுத்த நல்ல விஷயங்கள் எல்லாம் கல்யாணம் ஆன சில நாட்கள்லேயே மறந்து போயிடும் போலிருக்கு. காரணம், கல்யாணத்துக்கப்புறம் மனைவி கிட்ட நம்மோட சில பொறுப்புகளை ஒப்படைச்சிட்டு கொஞ்சம் ஃப்ரீ ஆகிடறோம். ஆனா தன்னோட வேலைகளை எப்போதும் தானே செஞ்சி பழகிக்கறது நல்லதுங்கிறது மனைவி பிரசவத்துக்குத் தாய் வீட்டுக்குப் போகும் போது தான் உரைக்க ஆரம்பிக்குது. காலையில எழுந்து தானே டீ போட்டு குடிச்சிட்டு, துணியைத் துவைச்சு காய வச்சிட்டு, ஓட்ஸோ மேகியோ பொங்கித் தின்னுட்டு, சாயந்திரம் வந்து காய வச்ச துணிகளைக் கொடியிலேருந்து எடுத்து ஐயன் பண்ணக் குடுத்துட்டு, ராத்திரி சாப்பாட்டுக்கு என்ன பண்ணலாம் இப்படின்னு யோசிச்சிக்கிட்டு, இதுக்கு நடுவால வீட்டுல யாருமில்லைங்கிற காரணத்தால மிஸ் ஆகிப் போகற குரியர்களும், ஃபோன் பில்களும், கேபிள் பில்களையும் எப்படியோ சரி பண்ணி...யப்பப்பா...பொண்டாட்டி பாத்து பாத்து நமக்காக எல்லா வேலைகளையும் செஞ்சு அனுபவிச்சு பழக்கப் பட்டுட்டு தனக்கு தானே ஹவுஸ் வைஃபா வேலை பாக்கறது ரொம்ப கஷ்டமான காரியம் தான். <br /><br />ஆயிரம் தான் சொல்லுங்க...இந்த பொண்ணுங்களுக்கு அம்மா வீட்டுக்குப் போகற மாதிரி ஒரு சந்தோஷமான விஷயம் வேற எதுவும் இருக்காதுன்னு நெனக்கிறேன். பொறந்து வளர்ந்த இடம்ங்கிறதுனால அங்கே ரொம்ப சந்தோஷமாவும் பாதுகாப்பாவும் உணர்வாங்கன்னு நெனக்கிறேன். அதனால தான் முதல் பிரசவத்துக்குத் தாய் வீட்டுக்குப் போகற வழக்கம் இருக்கும் போலிருக்கு. அதை நான் கண்கூடாவே பார்த்திருக்கறேன். பெங்களூர்ல இருக்கறப்போ ரெகுலர் செக்கப்புக்காக மாசா மாசம் டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போவேன். பொதுவா ஆட்டோவுல தான் போவோம். சில சமயம் அஞ்சு கிலோ மீட்டர் தூரத்துல இருக்கற க்ளினிக்குக்கு டாக்சில கூட போயிருக்கோம். அப்போல்லாம் ஆட்டோ ஸ்பீட் பிரேக்கர்லயோ பள்ளத்துலயோ ஏறி இறங்கும் போது "வயிறு வலிக்கிற மாதிரி இருக்குங்க...கொஞ்சம் மெதுவா போகச் சொல்லுங்க"ன்னு சொல்லுவாங்க. நானும் ஆட்டோ டிரைவர் கிட்ட எனக்கு தெரிஞ்ச கன்னடத்துல "சொல்பா ஸ்லோ ஹோகி"ன்னு எதோ உளறி புரிய வைப்பேன். ஒன்பதாவது மாசத்துல பிரசவத்துக்கு ரெண்டு வாரமே இருக்கும் போது சென்னையில அவங்க அம்மா வீட்டுல இருக்கறப்போ ஒரு முறை செக்கப்புக்கு அதே மாதிரி கூட்டிக்கிட்டு போனேன். ரோடு ரொம்ப குண்டும் குழியுமா இருந்துச்சு. எதாச்சும் சொல்லுவாங்கன்னு எதிர்பார்த்தேன். ஒன்னுமே சொல்ல காணோம். <br /><br />ஆச்சரியம் தாங்க முடியாம "ரோடு ரொம்ப மோசமா இருக்கு, ஒன்னும் கஷ்டமா இல்லியா"ன்னு கேட்டேன். அதுக்கு அவங்க சிரிச்சிக்கிட்டே சொன்ன பதில் "பழகிப் போச்சுங்க". மூனாவது மாசத்துலேருந்து எட்டாவது மாசம் வரை பெங்களூரில் இருந்த போது ஒரு நாளும் "பழகிடுச்சு" என்ற வார்த்தை வெளியே வந்தது கெடையாது. நானும் ஒவ்வொரு வாட்டியும் ஆட்டோ டிரைவர் கிட்ட 'சொல்ப ஸ்லோ ஹோகி' னு சொல்ல மறந்தது கிடையாது. உண்மையிலேயே ஒன்பதாவது மாசத்துல ஆட்டோ பள்ளத்துல எறங்கும் போது வலி தெரியாம இருந்துருக்கலாம்...ஆனா முதல் பிரசவத்துக்கு அம்மா வீட்டுக்குப் போனப்புறம் பொண்ணுங்களுக்கு ஒரு அசாத்திய தைரியம் வந்துடும்ங்கிறது என்னுடைய கணிப்பு. அது வரைக்கும் பார்த்து பயந்த எந்த கஷ்டமும் பெருசா தெரியாது போலிருக்கு, அவங்க முகத்துலயும் ஒரு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் பார்க்கலாம். ஒரு வேளை அதனால தான் அந்த காலத்துல பெரியவங்க முதல் பிரசவத்துக்கு பொண்ணுங்க தாய் வீட்டுக்குப் போகனும்னு ஒரு முறையை ஏற்படுத்தி வச்சிருக்காங்களோ என்னவோ? எனக்கு ஏனோ என் மனைவியின் முதல் பிரசவத்தை என் கிட்ட வச்சி பார்க்கனும்னே இருந்துச்சு. மத்த சம்பிரதாயங்களைக் குத்தம் சொல்றவங்க கூட யாரும் முதல் பிரசவத்துக்குத் தாய் வீட்டுக்கு அனுப்பறதை பத்தி 'எதுக்கு இந்த தேவையில்லாத பழைய சம்பிரதாயங்கள்'னு சொல்லறது இல்லை. முதல் பிரசவம்ங்கிறது தாய்வீட்டுல நடத்தறதே நல்லதுங்கிற ஞானம் எனக்கு ஒரு ஆட்டோவில் பிறந்தது :)<br /><br />இந்த காலத்துல பொறக்கற குழந்தைகளில் பெரும்பாலானவர்களுக்கும் பண்டைய ரோமானிய(Roman) அரசியலில் இருந்த ஒருவருக்கும் தொடர்பு இருக்குன்னு சொன்னா ஆச்சரியப் படுவீங்க தானே? என்னோட பொண்ணு அர்ச்சனாவுக்குக் கூட இந்த ரோமானியரோட ஒரு தூரத்து தொடர்பு இருக்கு. யாரு அந்த ரோமானியர்? சீசர்(Caesar). வெறும் சீசர் தான்...ஷேக்ஸ்பியரால் ஆங்கில இலக்கியத்தில் ஏத்தி வைக்கப்பட்ட ஜூலியஸ் சீசர்(Julius Caesar) கிடையாது. சரி யார் அவர்? அது என்ன தொடர்பு? ஜூலியஸ் சீசரோட முன்னோர்களில் ஒருவர்...அவரோட பேரும் சீசர் தான்னு சொல்றாங்க. அவர் தான் பெண்ணின் வயிற்றை மருத்துவ முறையில் அறுத்து பிறக்க வைக்கப்பட்ட உலகின் முதல் குழந்தைன்னு சொல்றாங்க. அதனால தான் இந்த மாதிரியான ஒரு அறுவை சிகிச்சைக்கு <a href="http://en.wikipedia.org/wiki/Caesarean_section">"Caesarean Operation"</a> அல்லது சிசேரியன் செக்ஷன் அப்படின்னு பேரு. சீசர் வழி வந்ததால சீசரியன் ஆப்பரேஷன்னு தானே பேரு இருக்கனும் எதுக்கு 'சிசேரியன்' னு சொல்றாங்கன்னு இன்னும் புரியலை. முன்னொரு காலத்துல சிசேரியன் ஆப்பரேஷனோட ஸ்பெல்லிங் 'Scissorian Operation'னு நெனச்சிட்டிருந்தேன்:) <br /><br />அர்ச்சனாவைப் பொறுத்த வரை அவ பொறக்கறதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி செக்கப்புக்குப் போனப்போ கூட தங்கமணியோட உடல்நிலை நல்லாருக்கு, நார்மல் டெலிவரியே ஆகும்னு சொன்னாங்க. ஆனா அதுக்கு அடுத்த வாரம் செக்கப்புக்குப் போனப்போ குழந்தையைத் தாயின் வயித்துக்குள்ள பாதுகாப்பா வைத்திருக்க உதவும் amniotic fluid ரொம்ப குறைஞ்சுடுச்சு, உடனே ஆப்பரேஷன் செய்யனும் அப்படின்னு சொல்லிட்டாங்க. சிசேரியன் ஆப்பரேஷனோட பின்விளைவுகளை(காயம் ஆறும் போது ஏற்படும் வலி, வெயிட் தூக்கப் பிடாது, நடமாடப் பிடாது அப்படின்னு சில கட்டுப்பாடுகள்) நெனச்சி மனைவியும் நானும் தயங்குனப்போ "இது ப்ரைமி-Primy (ஒரு பெண்ணுக்குப் பிறக்கும் முதல் குழந்தை என்பதை குறிப்பிட பயன்படும் மருத்துவச் சொல்), பின்னால எதாச்சும் பிரச்சனை வந்துச்சுன்னா என்னை சொல்லக் கூடாது"ன்னு சொல்லிட்டாங்க. சரின்னு எங்க குழந்தை சீசரிய வழிப்படி பிறப்பதற்கு இருவரும் ஒப்பு கொண்டோம். கடைசி வரைக்கும் அந்த இறுதி செக்கப்பின் போது எடுக்கப்பட்ட ஸ்கேன் ரிப்போர்ட்டை எங்களுக்குத் தரவே இல்லை. இப்போ தரோம் அப்போ தரோம்னு ஏதேதோ காரணம் சொல்லி மழுப்பிட்டாங்க. நாங்களும் குழந்தை நல்லபடியா பொறந்த சந்தோஷத்துல அதை ஒரு பொருட்டா எடுத்துக்கலை. அப்புறமா தான் தெரிஞ்சுச்சு என் மனைவி அந்த மருத்துவமனையில் தங்கியிருந்த நான்கு நாட்களில் பிறந்த ஆறு குழந்தைகளுமே 'சீசரியன் குழந்தைகள்' என்று. ஆக பிரசவத்துக்கு மனைவியை சேர்க்கப் போற மருத்துவமனை மற்றும் பிரசவம் பார்க்கப் போகும் டாக்டரின் வரலாறையும் தீர விசாரித்துக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஞானம் என் குழந்தை பிறந்தப்போ எனக்கு பிறந்தது. <br /><br />நிற்க. ஆக்சுவலி வாட் ஐ வாண்ட்டட் டு சே இஸ்...அதாவது...சொல்ல வந்த மேட்டர் இன்னும் சொன்ன பாடில்லை :( கிளை கதைகளே மைல் நீளத்துக்குப் போனதால அடுத்த பதிவுல பொண்டாட்டியைப் பிரசவத்துக்கு அனுப்புனதுக்கப்புறம் ஏற்பட்ட சில மறக்க முடியாத அனுபவங்களைச் சொல்றேன். கண்டிப்பா போன பதிவைப் போல நாலு மாசம் இடைவெளி விழாதுன்னு நம்பறேன். அதோட நம்பிக்கை தான் வாழ்க்கைன்னும் சொல்லிக்கிறேன்...எனக்கு நானே:)கைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-20289353.post-11808712773991169252010-03-29T11:45:00.000+05:302010-03-29T11:47:14.850+05:30பொண்டாட்டியைப் பிரசவத்துக்கு அனுப்பிட்டு..."பிரசவம்ங்கிறது ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒரு மறு ஜென்மம் மாதிரி" அப்படிங்கற உண்மை தமிழ்ப் படங்களைப் பார்க்கும் எந்தவொரு சராசரி ரசிகனுக்கும் தெரியும். ஒரு ஆணுக்குப் பிரசவம் குறித்த மெய்யும் பொய்யுமான பல விஷயங்களைப் போதிப்பது திரைப்படங்கள் தான் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். தமிழ்த் திரைப்படங்களில் பிரசவம் குறித்த காட்சிகள் பல விஷயங்களுக்காகப் பல விதங்களில் பயன்படுகிறது. உதாரணமாக கர்ப்பமாக இருக்கும் தங்கையின் வளைகாப்பில் அண்ணன் பாட்டு பாடுவதற்காகவும், தனக்கு பிறக்கப் போகும் குழந்தையை நினைத்து கதாநாயகன் பாடுவது போலவும், ஒரு காட்சியில் "மூன்று மாதம் முழுகாமல்" இருக்கும் கதாநாயகி அல்லது ஹீரோவுக்கு மிகவும் வேண்டப்பட்ட பெண்மணி அதற்கடுத்த காட்சியிலேயே "நிறைமாத கர்ப்பிணியாக மாறி" பிரசவ வேதனையில் துடிக்கும் போது, வில்லன்களின் தாக்குதலைத் துவம்சம் செய்து க்ளைமாக்ஸ் காட்சியில் அழகான குழந்தை பிறந்து "சுபம்" போடவும் உதவும். இவ்வளவு ஏன்...ஏதாவது ஒரு நடிகை கால்ஷீட் ப்ராப்ளம் செய்கிறார் என்றார் அவருடைய கதாபாத்திரத்தின் கதையை முடித்துக் கொள்ளவும் இந்த "பிரசவ மேட்டர்" உதவும். பிரசவம் குறித்த சில கலைச் சொற்களைக் கற்றுக் கொள்ளவும் சினிமா மிகவும் உதவுகிறது. உதாரணமாக மசக்கை, பச்சை உடம்புகாரி, வாயும் வயிறுமா இருக்கா, முழுகாம இருக்கா, மாசமா இருக்கா, இரட்டை நாடி, வவுத்து புள்ளைக்காரி போன்ற technical termsஐ எல்லாம் கற்றுக் கொள்ள சினிமாவை விட்டால் வேறு வழி ஏது? :)<br /><br />சினிமா பிரசவங்கள் நகைப்புக்குரியதாய்த் தோன்றினாலும், நம் சொந்த வாழ்க்கையில் நமக்கு தெரிந்த/அல்லது வேண்டப்பட்ட ஒரு பெண்ணுக்குக் குழந்தை பிறக்கப் போகிறது எனத் தெரியும் போது அவளுக்கு நல்ல படியாகக் குழந்தை பிறக்க வேண்டுமே என்ற ஒரு எதிர்பார்ப்பு நம்மை அறியாமலேயே வந்து ஒட்டிக் கொள்கிறது. மருத்துவத் துறையில் நிறைய வளர்ச்சிகள் ஏற்பட்டு குழந்தை பிறப்பு என்பது ஒரு சாதாரண நிகழ்வு என்ற நிலை வந்தாலும் கூட நமது சொந்தங்கள் அல்லது நமக்கு வேண்டப்பட்டவர்களுடைய குழந்தை பிறப்பு எனும் போது ஒரு விதப் பதற்றம் நம் மனதில் குடி கொள்வது தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது. இதுவே பிரசவம் தன்னுடைய மனைவிக்கு எனும் போதும் பிறக்கப் போவது தன்னுடைய வாரிசு எனும் போதும் ஒருவனுடைய மனதில் இருக்கும் உணர்வுகளை வார்த்தைகளால் வடிப்பது கடினம் என்றே எண்ணுகிறேன். மகிழ்ச்சி, அச்சம், எதிர்பார்ப்பு, கவலை போன்ற பலவித உணர்வுகளும் சேர்ந்த ஒரு வித விசித்திர கலவை அந்த உணர்வு. அதை அனுபவித்தவர்களுக்கே அது எவ்வாறு இருக்கும் எனத் தெரியும். பிரசவத்தின் போது வலியும் வேதனையும் ஒரு பெண்ணுக்குத் தான் என்பதும் அவள் மனதாலும், உடலாலும் தாங்கிக் கொள்ள வேண்டிய கணம் அதிகம் என்பதை பலவிடங்களில் படித்துத் தெரிந்து கொண்டாலும் பலர் சொல்லக் கேட்டிருந்தாலும் அதை எந்நாளும் உணரும் சக்தியற்றவன் ஆண் என்னும் நினைக்கும் போது ஒரு வித குற்றவுணர்ச்சி தோன்றி மறைகிறது. பாலைவன ரோஜாக்கள் படத்தின் பாடல் வரிகளான "காதல் என்பது பொதுவுடைமை கஷ்டம் மட்டும் தானே தனி உடைமை" என்னும் வரிகள் நான் என் குழந்தையின் பிறப்பை எதிர்நோக்கியிருந்த காலங்களில் பல முறை என் நினைவுக்கு வந்து சென்றதுண்டு.<br /><br />பொதுவாகவே நம் சமூகத்தில் கருவுற்றிருக்கும் ஒரு பெண்ணின் மீது அவளை சுற்றியிருப்பவர்கள் கூடுதல் அக்கறை எடுத்து கவனிப்பதுண்டு. பேறு காலத்தில் செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை, உண்ணக் கூடியவை, உண்ணக் கூடாதவை என்பது பற்றிய பலவிதமான அறிவுரைகள் பலரிடமிருந்தும் கிடைக்கும். அவ்வறிவுரைகளை அப்பெண் செயல்படுத்துகிறாளா இல்லையா என்று பார்த்துக் கொள்ளக் கூடிய கடமை அவளுடய கணவனுடையதானது. அவள் அதை செயல்படுத்த வில்லை என அறிவுரை சொன்னவருக்குத் தெரிய வரும் போது "மாசமாருக்கற பொண்ணுப்பா கொஞ்சம் கவனமா பாத்துக்கக் கூடாதா? நீ தான் இதெல்லாம் பாத்து செய்யனும்" என்ற அறிவுரை அவளுடைய கணவனுக்குக் கிடைக்கும். பேருந்துகளிலோ பொது இடங்களிலோ கர்ப்பிணி பெண் உட்கார இடமில்லாமல நின்று கொண்டிருந்தால் எழுந்து இடம் தர வேண்டும் என்று பெற்றோர்கள் மூலமாக சிறுவர்களாக இருக்கும் போதே அறிவுறுத்தப் படுகிறது நம் சமூகத்தில். டெல்லியில் என்னுடன் பணிபுரிந்த ஒரு நண்பன் பின்னாளில் பெங்களூரில் பணிபுரிந்தான். அவனுடைய மனைவி கருவுற்றிருந்த போது அவன் குடியிருந்த வீட்டு ஓனரே வளைகாப்பு விழா நடத்தினாராம். கன்னடப் பெண்மணியான அவர் வட இந்தியாவைச் சேர்ந்த நண்பனின் மனைவிக்கு தென்னிந்திய முறைப்படி நடத்திய வளைகாப்பு விழாவின் படங்களை நண்பன் எனக்கு அனுப்பி வைத்தான். மற்ற நேரங்களில் எப்படியோ, பெரும்பாலான குடும்பங்களில் ஒரு பெண் இன்னொரு உயிரைத் தன்னுள் தாங்கிக் கொண்டிருக்கும் போது அவளுக்குண்டான மரியாதையும், அவள் மீது மற்றவர்கள் காண்பிக்கும் அக்கறையும் அதிகரிக்கத் தான் செய்கிறது.<br /><br />"Exceptions are always a rule" என்று ஆங்கிலத்தில் ஒரு கூற்று இருக்கிறது. ஒரு விஷயம் இவ்வாறு இருக்கும் அல்லது இவ்வாறு நடக்கும் என்ற தீர்மானத்திற்கு வருவதற்கு முன் அவ்வாறு இல்லாது போதலுக்கான சாத்தியக்கூறுகளும் இருக்கத் தான் செய்கின்றன என்பதை ஒத்துக் கொண்டு தான் ஆக வேண்டும். துரதிருஷ்ட வசமாக நான் அவ்வாறான 'exception' ஒன்றைத் தான் முதலில் தெரிந்து கொண்டேன். முன்ஷி பிரேம்சந்த் என்பவர் இந்தி மொழி இலக்கிய உலகின் தூண்களில் ஒருவராகக் கருதப் படுகிறார். ஒரு பத்து-பதினைந்து வருடங்களுக்கு முன் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது மாலை வேளைகளில் இந்தி வகுப்புகளுக்குச் சென்று கொண்டிருந்தேன். நான் எட்டாம் வகுப்போ ஒன்பதாம் வகுப்போ படித்துக் கொண்டிருக்கும் போது இந்தி வகுப்புகளில் பிரவேஷிகாவோ(Praveshika) விஷாரத்தோ (Visharadh Poorvardh) படித்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு தாளில் பிரபல எழுத்தாளர்கள் எழுதிய கதைகள் அடங்கிய புத்தகம் ஒன்று உண்டு. அதில் பிரேம்சந்த் அவர்கள் எழுதிய 'மதுவா'(Madhua) என்ற ஒரு கதை படித்திருக்கிறேன். கதையின் பெயர் அது தான் என்று நினைக்கிறேன்...சரியாக நினைவில்லை. வட இந்திய கிராமம் ஒன்றில் இரவு வேளையில் நடக்கும் நிகழ்வு ஒன்றினை கதைகளமாக ஆக்கியிருப்பார் ஆசிரியர். ஒரு குடிகார கணவன், அவனுக்கு ஒரு குடிகார தகப்பன். மனைவி கருவுற்றிருப்பாள். நிறைமாத கர்ப்பிணி. ஆள் அரவமற்ற ஒரு அத்துவான சூழ்நிலையில் அவர்கள் குடிசை அமைந்திருக்கும். தந்தையும், மகனும் குடிசையின் வெளியில் ஒரு லேண்டர்ன் விளக்கின் ஒளியில் அமர்ந்து கொண்டு குடித்துக் கொண்டிருப்பார்கள். குடித்துக் கொண்டிருக்கும் கணவன் தன் மனைவியை மதுவுடன் சேர்த்து சாப்பிடுவதற்காக உருளைக் கிழங்குகளை அவித்துத் தரச் சொல்வான். அவளால் இயலாத நிலைமையிலும் அவள் உருளைக்கிழங்குகளை வேக வைத்து தருவாள். சூடான உருளைக்கிழங்கின் தோலினை உரித்து வாயில் போட்டு இருவரும் தின்பார்கள். வாய் சுடுவதையும் பொருட்படுத்தாது மது அருந்துவதுமாகவும் கிழங்கு தின்பதுமாகவும் இருப்பார்கள். <br /><br />இந்நிலையில் அப்பெண்ணுக்குப் பிரசவ வலி எடுத்துக் கொள்ளும். வலி தாங்க முடியாது அவள் கதறுவாள். அதை பொருட்படுத்தாது அப்பனும் மகனும் குடித்துக் கொண்டிருப்பார்கள். பிரசவத்தின் போது கூட இருந்து உதவுவதற்கு யாருமில்லாது அப்பெண் இறந்து போவாள். கதையில் குழந்தை பிறந்து அத்தாய் இறப்பாளா, அல்லது சிசுவோடு சேர்ந்து அவள் மரித்தாளா என்பது இப்போது சரியாக நினைவில் இல்லை. ஆனால் நான் மேலே சொன்னவற்றை 'graphic detail'இல் எழுதியிருப்பார் ஆசிரியர். அக்கதை என்னை ஆழமாகப் பாதித்தது மட்டும் உண்மை. இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்ற எண்ணம் அப்போது என் மனதில் எழுந்தது. இவ்வளவு வருடமாகியும் இக்கதை நினைவில் இருப்பதற்கு அது ஏற்படுத்திய பாதிப்பு தான் காரணம். காலம் செல்ல செல்ல கதையில் சொல்லப் பட்டது போன்றதும் இதை விட அவலமானதுமான சம்பவங்களைப் பற்றிப் படிக்கும் போது இலக்கியம் என்பது சமூகத்தின் பிரதிபலிப்பு தான் என்பது உறுதியானது. "பூந்தோட்டக் காவல்காரன்" என்றொரு படம். விஜயகாந்த், ராதிகா நடித்திருப்பார்கள். அதில் ஒரு காட்சியில் வில்லன்களுடன் விஜயகாந்துக்கு மோதல் ஏற்படும். சண்டையின் போது விஜயகாந்தை அடியாள் ஒருவன் பலமான உருட்டுக் கட்டை கொண்டு ஓங்கி அடிப்பான். அதை தடுக்க வரும் ராதிகாவின் வயிற்றில் உருட்டுக் கட்டையின் அடி விழும். இக்காட்சியை சிறு வயதில் சில முறை பார்த்திருக்கிறேன். சமீபத்தில் ஒரு நாள் அப்படத்தின் பாடல் ஒன்றைப் பார்க்க நேரிட்டது. மேலே சொன்ன அக்காட்சி நினைவுக்கு வந்தது. ஆனால் இம்முறை ஏனோ அக்காட்சியை நினைத்த மாத்திரத்தில் உடம்பு நடுங்கியது, ஒரு வித வேதனை மனதில் உருவானது, . அக்காட்சியை நினைக்காமல் மறக்க வேண்டும் என்று மனம் கட்டளையிட்டுக் கொண்டே இருந்தது. ஒரு வேளை அச்சமயம் ஒரு குழந்தைக்குத் தந்தையாகியிருந்ததால் அத்தகைய ஒரு காட்சியை நினைத்துப் பார்க்கக் கூட கஷ்டமாக இருந்ததோ என்னவோ?<br /><br />பொதுவாகவே ஒரு ஆணின் மனதில் கருவுற்றிருக்கும் பெண்ணைப் பார்க்கும் போது அவள் ஒரு vulnerable நிலையில் இருக்கிறாள் என்ற ஒரு 'ஐயோ பாவம்' உணர்வு தான் மேலிடும். சமூகத்தால் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் 'டிரெய்னிங்' அத்தகையது. ஆறாவது மாதம் வரை நீச்சல் பயிற்சி மேற்கொள்ளலாம், ஏரோபிக்ஸ் செய்யலாம், கார் ஓட்டலாம் என்றெல்லாம் 'What to expect when you are expecting' புத்தகத்தில் எழுதப் பட்டிருந்ததைப் படித்த போது ஆச்சரியமே மேலிட்டது. பிரசவ வலி எடுத்து மருத்துவமனைக்குச் சென்ற போது "இது 'false pain' தான் சிறிது நேரம் கழித்து வாருங்கள்" என்று சொல்லித் திருப்பி அனுப்பப் பட்டதையும், "வலி அதிகமாக இருக்கிறது ஸ்ட்ரெச்சர் கொண்டு வாருங்கள்" என்று கதறும் பெண்ணிடம் "அதெல்லாம் முடியாது பிரசவ அறை வரை நடந்தே தான் வர வேண்டும்" என்று கூறியதையும் எனக்குத் தெரிந்த சில பெண்களின் மூலமாகக் கேள்வி பட்ட போது ஆச்சரியமாக இருந்த போதிலும் அத்தகைய சூழ்நிலையில் மருத்துவர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் எனத் தெரிந்து கொள்ள முடிந்தது. <br /><br />நிற்க. இந்த பதிவின் தலைப்பில் நான் எழுத நினைத்தது ஒரு வரி கூட இன்னும் எழுதவில்லை. அப்பதிவிற்கு ஒரு முன்னோட்டம் கொடுக்க ஆரம்பித்து அதுவே ஒரு பதிவின் அளவிற்கு நீண்டு விட்டதால், சொல்ல வந்த மேட்டர் வேறொரு பதிவில்...கைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.com30tag:blogger.com,1999:blog-20289353.post-87085306612073958072010-03-15T00:07:00.002+05:302010-03-15T12:53:06.731+05:30திரைப்படம் எடுக்கும் எண்ணம் - 2<a href="http://kaipullai.blogspot.com/2010/03/1.html">திரைப்படம் எடுக்கும் எண்ணம் - 1</a>-ன் தொடர்ச்சி<br /><br />தப்பிச் சென்ற சிறை கைதியான ஊமைத்துரையைப் பின் தொடர்ந்து வந்த ஆங்கிலேயர்கள், மாயமாக ஒரு கோட்டை நிற்பதை கண்டு மலைக்கிறார்கள். இதன் பின்னர் உக்கிரமாக நடைபெறும் போரினை விரிவாகத் திரையில் சொல்கிறோம். ஆறு நாட்களில் உருவாக்கப் பட்ட கோட்டை ஆங்கிலேயர்களின் பீரங்கிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்ததையும், போரின் போது ஆங்கிலேய படையினர் எவ்வளவு கொடூரமாகத் தாக்கி அழிக்கப்பட்டனர் என்பதனையும் காட்டுகிறோம். பல நாட்கள் பீரங்கி தாக்குதலுக்குப் பின் வீழ்ந்த கோட்டைக்குள் உட்புகுந்த படையினர், கோட்டையைப் பாதுகாக்க பாஞ்சாலங்குறிச்சி மக்கள் எந்தளவு ஆக்ரோஷமாகப் போராடியிருக்கிறார்கள் என்பதனை வீழ்ந்து கிடக்கும் சடலங்களைக் கண்டு தெரிந்து கொள்வதை சொல்கிறோம். <br /><br />பின்னர் எட்டையபுர பாளையக்காரரின் படைகளின் உதவியைக் கொண்டு கோட்டை விழுந்ததும் தப்பித்துச் சென்ற ஊமைத்துரையைப் பின் தொடர்ந்து செல்வதையும், போரில் படுகாயமடைந்த ஊமைத்துரையைச் சுந்தரலிங்கம் என்ற தளபதி தன் தாயிடம் சொல்லி காப்பாற்றச் சொல்வதையும், எட்டையபுர வீரர்கள் ஊமைத்துரையை அடையாளம் காணாமல் இருக்க தன் மகன் அம்மை நோய் கண்டு இறந்து விட்டதாகப் பொய் சொல்லி காப்பாற்றுவதையும், அவர் உடல்நலன் தேறும் வரை பணிவிடை செய்வதையும் காட்டுகிறோம். பாளையங்கோட்டை சிறையில் இருந்து ஊமைத்துரையை மீட்டவர்களில் முதன்மையானவர் தான் இந்த சுந்தரலிங்கம் என்பதனையும் நிறுவுகிறோம். <br /><br />கோட்டையின் வீழ்ச்சிக்குப் பின் தப்பிச் செல்லும் ஊமைத்துரையும், அவருடைய வீரர்களும் சிவகங்கை பாளையக்காரர் மருதுபாண்டியரின் உதவி கோருவதையும், சின்ன மருதுவின் ஜம்பு தீபகர்ப்ப பிரகடனம், மற்றும் மருதிருவரின் உதவியோடு ஊமைத்துரை மறுபடியும் வெள்ளையரை எதிர்ப்பதையும், கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கடும் சண்டைக்குப் பின் ஊமைத்துரையை விருப்பாட்சி எனும் இடத்தில் சிறை பிடித்து பாஞ்சாலங்குறிச்சி கோட்டையின் பீரங்கி மேட்டில் வைத்து ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டதையும் காட்டுகிறோம். இப்பதிவில் முதல் சில பத்திகளில் காட்சிகளை விரிவாகச் சொல்லியது போல பின்வரும் பத்திகளில் சொல்லாது போனதை நானறிவேன். அதற்கு காரணம் அக்காட்சிகளை இன்னும் விரிவாக வரலாற்று ஆய்வு செய்து வலுவாக்க வேண்டும். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அக்காட்சிகளைப் பற்றி இன்னும் யோசிக்கவில்லை. மேலே சொன்ன வரலாற்று கதையினை ஆவணப்படம் போல் எடுப்பதா, குறும்படமாக எடுப்பதா இல்லை முழுநீள திரைப்படமாக எடுப்பதா என்றெல்லாம் எதுவுமே யோசிக்கவில்லை. திரைப்படத்துக்கு தேவையான கதைக்கும், திரைக்கதைக்குமான வேறுபாடு எனக்கு தெரியாது. இவை இரண்டையும் எழுதுவது என்றால் எப்படி என்றும் எனக்கு தெரியாது. சரி, அந்த விவாதத்திற்குள் இப்போது செல்ல வேண்டாம். மேலே சொல்லியிருப்பது ஒரு அவுட்லைன் தான். <br /><br />இந்தப் படத்துக்கான வரலாற்றுச் சான்றுகளாக இப்போரில் ஆங்கிலேயர்கள் தரப்பில் பங்கு கொண்ட கர்னல் வெல்சு அவர்கள் எழுதிய "Military Reminiscences" என்ற புத்தகமும், தமிழிலும் ஆங்கிலத்திலும் பல்வேறு வரலாற்று ஆசிரியர்களால் எழுதப்பட்ட கட்டபொம்மன், ஊமைத்துரை பற்றிய வரலாற்று நூல்களும், மற்றும் பாரம்பரிய கலை வடிவங்களான கதை பாடல்களுமாக இருக்கும். வரலாற்று கதையை வேறொரு கலை வடிவமாக மாற்ற முற்படும் போது படைப்பாளிகள் எடுத்துக் கொள்ளும் சுதந்திரத்தை எடுத்துக் கொள்ளாமல் ஒரு படம் எடுக்க முடியுமா என ஒரு எண்ணமும் இருக்கிறது. உதாரணமாக ஊமைத்துரை மணமானவரா இல்லையா என்பது போன்ற அவருடைய தனிப்பட்ட வாழ்வினைப் பற்றிய குறிப்புகள் இதுவரை எதுவும் கிடைக்கவில்லை. கதையின் நீளத்தைக் கூட்டுவதற்காகவும், காண்பவர்களுக்கு ஆர்வத்தைக் கூட்டுவதற்காகவும் அவருக்கு ஒரு காதலி இருப்பது போலவும் ஓரிரு டூயட் பாடல்கள் வைப்பது போன்ற சுதந்திரங்கள் எதனையும் எடுத்துக் கொள்ளாமல், ஊமைத்துரை வாழ்ந்த வாழ்க்கைக்கு உண்மையாக ஒரு படம் எடுக்க முடியுமா? தெரியவில்லை. <br /><br />வரலாற்றை பிற்சேர்க்கைகள் இல்லாமல் உள்ளது உள்ளது உள்ள படி சொல்ல முடியுமா என்ற சந்தேகமும் உள்ளது. உதாரணமாக கட்டபொம்மன் ஆங்கிலேயர்களுடன் போரிடும் போது அண்டை பாளையங்களைச் சேர்ந்தவர்களின் உதவிகள் அவருக்குக் கிட்ட வில்லை. ஏன்? கட்டபொம்மன் அண்டை பாளையங்களில் புகுந்து கொள்ளையடித்தார் என்று பல வரலாற்று ஆசிரியர்களும் சொல்கிறார்கள். ஆனால் பாளையக்காரர்களின் வரலாற்றை ஓளிவடிவமாக ஆவணப்படுத்திய முக்கிய சாட்சியங்களில் ஒன்றான வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் அவ்வாறு எதுவும் சொல்லப்பட்டதாக நினைவில்லை. ஆனால் கட்டபொம்மன் ஆங்கிலேயர்களுக்கு அடி பணியாமல் போரிட்டு வீரமரணம் எய்தினார் என்பது உண்மை. இதை ஆங்கிலேயர்களும் ஒத்துக் கொள்கின்றனார். நம் திரைப்படத்தில் கதை நாயகனை ஒரு சாதாரண மனிதனாக அவனுடைய நிறைகளை நிரம்பச் சொல்லும் போது குறைகளையும் மறைக்காமல் சொல்லி சித்தரிக்க முடியுமா என்ற ஒரு எண்ணம் இருக்கிறது. சமீப காலங்களில் கதை நாயகனின் குறைகளைச் சொல்லியும் அவனை நாயகனாக நிறுவிய படம் பருத்தி வீரன். <br /><br />ஊமைத்துரையை நேரில் கண்ட கர்னல் வெல்சு ஊமைத்துரையின் தோற்றத்தை இவ்வாறு விவரிக்கிறார். "He was a tall, slender lad, of a very sickly appearance, yet possessing that energy of mind which in troubled times always gains pre-eminence". ஆகவே ஊமைத்துரை வேடத்திற்கு மெலிதான, உயரமான ஒரு நடிகர் யார் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஊமைத்துரை வாய் பேச முடியாதவர் என்பதால் கண்களால் உணர்வுகளைச் சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். ஊமைத்துரை இறக்கும் போதே அவருக்கு வயது முப்பத்தைந்தாக இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். தினமும் ஜிம்முக்குப் போய் முறுக்கேறிய நரம்புகளுடன் சிக்ஸ் பேக் அல்லது எய்ட் பேக் கொண்ட நடிகராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நாம் எடுக்கும் படம் ஒரு 'metrosexual male'ஐப் பற்றியதல்ல. ஆகவே அத்தகைய நடிகர் நம்முடைய கதைக்கு சரிவர மாட்டார் என்று நினைக்கிறேன். ஊமைத்துரையாக நடிப்பவர் நாம் அன்றாடம் பார்க்கும் மனிதர்களில் ஒருவரைப் போன்று இருக்கலாம். ஆனால் வெல்ஷ் அவர்கள் சொல்லும் எனர்ஜியைக் காட்டக் கூடிய நடிகராக இருக்க வேண்டும். ஒரு படி மேலே போய் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் கட்டபொம்மன் சந்ததியினரைச் சந்தித்து அவர்களில் ஒரு இளைஞருக்கு DNA பரிசோதனையின் மூலமாக அவருடைய முன்னோர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என கண்டுபிடிக்க முயற்சி செய்யலாம் என்ற எண்ணம் ஒன்று உள்ளது. <br /><br />கர்னல் வெல்சின் ஊமைத்துரையைப் பற்றி மேலும் இவ்வாறு எழுதியிருக்கிறார்.<br />"and he was generally the foremost in executing those plans, for our annihilation. Whatever undisciplined valour could effect, was sure to be achieved wherever he appeared ; though poor Oomee was at last doomed to grace a gallows, in reward for the most disinterested and purest patriotism. He had escaped, as it were, by miracle, in every previous engagement, although every soldier in our camp was most anxious to destroy so notorious and celebrated a chieftain." ஆங்கிலேயர்களை அழிக்க திட்டம் பெரும்பங்கு திட்டம் தீட்டியது ஊமைத்துரை என்று வெல்ஷ் குறிப்பிட்டுள்ளதையும் "celebrated chieftain" என்று அவர் சொல்லியிருப்பதையும் காட்சிகளாக வடிக்க மிகவும் சிரமப் பட வேண்டியிருக்கும் என்றே தோன்றுகிறது. ஏனெனில் தமிழ் வரலாற்று ஆசிரியர்களும், கதை சொல்லிகளும் ஊமைத்துரையைப் பற்றி இந்தளவுக்கு உயரிய வார்த்தைகளில் விவரித்திருப்பதாகத் தெரியவில்லை.<br /><br />இசைக்கு ஒரே ஒரு சாய்ஸ் தான் - அது இளையராஜா என்று ஏற்கனவே சொல்லியாயிற்று. ஒளிப்பதிவாளர் - தாரே ஜமீன் பர் இந்தி படத்துக்கு ஒளிப்பதிவு செய்த திரு, நீரவ் ஷா, ரவி.கே.சந்திரன் இவர்களில் யார் என்று முடிவு செய்யவில்லை. ஊமைத்துரை பற்றிய வரலாற்று சான்றுகளுக்காக இணையத்தில் தேடிக் கொண்டிருந்த போது எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தென் தமிழ்நாட்டு பாளையக்காரர்கள் பற்றி ஏற்கனவே ஆய்வு செய்திருப்பதை தெரிந்து கொண்டேன். அவரை வசனம் எழுதச் சொல்லலாம் என்று எண்ணம். பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர்களின் மூதாதையர்கள் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட கம்பளத்தவர்கள் என்ற காரணத்தினால் படத்தில் பேசப்படும் தமிழ் - நெல்லை சுற்றுவட்டாரத்தில் பேசப்படும் தமிழாக இருந்தாலும், அவர்களுடைய பேசுமொழியில் தெலுங்கு கலப்பு இருந்திருக்கிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும். அது இல்லாமலும் இருந்திருக்கலாம். ஆயினும் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் கட்டபொம்மன்/ஊமைத்துரை வம்சத்தினரைச் சந்தித்துப் பேசினால் ஓரளவு யூகிக்க முடியும் என நினைக்கிறேன். <br /><br />இப்போதுள்ள படங்களில் காட்டப்படும் நெல்லைத்தமிழைப் போல வெறும் வாலே, போலே என வார்த்தைக்கு வார்த்தை லே போடும் exaggerationsகளை எல்லாம் மீறி உண்மையில் அழகாக இருக்கும் என்பது என் எண்ணம். அந்த அழகினையும் நம் படத்தில் ஆவனப் படுத்த முயல்வோம். நம்முடைய படம் ஆரம்பிப்பது கட்டபொம்மனின் மறைவுக்குப் பின்னர். ஆகவே கட்டபொம்மனைப் பற்றிய காட்சிகளை ஃப்ளாஷ்பேக்காகக் காட்ட வேண்டுமா கூடாதா என்ற கேள்வியும் இருக்கிறது. தமிழில் உள்ள வரலாற்றுச் சான்றுகளில் கட்டபொம்மனைப் பற்றிய செய்திகள் இருக்கும் அளவிற்கு, ஊமைத்துரையைப் பற்றிய செய்திகள் அவ்வளவாக இல்லை. ஊமைத்துரையைப் பற்றி ஏன் படம் எடுக்க வேண்டும் என என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்? <br /><br />கட்டபொம்மனைப் பற்றி மாற்று கருத்துள்ள வரலாற்று ஆசிரியர்கள் கூட ஊமைத்துரையைப் பற்றி எதுவும் தவறாக எழுதி நான் பார்க்கவில்லை. மேலும் வெல்ஷ் அவர்களின் கூற்றுபடி ஊமைத்துரையை மக்கள் பெரிதும் விரும்பினர். அவர் நினைத்ததை சிரமேற் கொண்டு செயல்படுத்த ஆயத்தமாக இருந்தனர். எந்தவொரு சுதந்திரப் போராட்டமும் வெற்றி பெற அது ஒரு மக்கள் புரட்சியாய் இருப்பது இன்றியமையாததாகும். அந்த வகையில் அனைத்து சாதி மக்களையும் புரட்சியில் பங்குபெற செய்த ஊமைத்துரை என்ற தலைவன் தன்னிகரற்றவனாகத் திகழ்ந்திருப்பதற்கான குறிப்புகள் உள்ளன. அத்தோடு ஆங்கிலேயர்களின் ஏகாபத்தியத்திற்கு எதிராகத் தமிழகத்தில் தோன்றிய முதல் கிளர்ச்சி இது என்ற வகையில் ஊமைத்துரை பங்குபெற்று சண்டையிட்டு மடிந்த பாளையக்காரர் போர் முக்கியமானதாகும். அந்த நிகழ்வை மிகையில்லாமல் சொல்வது என்ற எண்ணம் தான் ஊமைத்துரை பற்றிய படம் எடுப்பதற்குண்டான காரணம். <br /><br />பி.கு: பல நாட்களாக மனதில் இருந்த ஒரு எண்ணத்தை எழுத்து வடிவமாக வலையேற்றி இருக்கிறேன். சினிமா தான் என் கனவு, என் வாழ்க்கை என்றெல்லாம் சொல்ல மாட்டேன். அது உண்மையுமில்லை. ஒரு வரலாற்று நிகழ்வை சினிமாவாக எடுத்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனை தான் இந்த பதிவு. அவ்வளவு தான் :)கைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-20289353.post-64325690820363488262010-03-14T23:51:00.004+05:302010-03-15T10:24:55.100+05:30திரைப்படம் எடுக்கும் எண்ணம் - 1ஒரு பாதை. விலங்குகளும் மனிதர்களும் நடந்து சென்ற காலடித் தடங்களால் உருவான ஒரு மண் பாதை. அந்தப் பாதையில், தன்னுடைய இரண்டு ஆடுகளைக் கையில் பிடித்துக் கொண்டு ஒரு மனிதர் நடந்து செல்கிறார். அவருடைய நடையில் ஒரு வேகம் தெரிகிறது. முகத்தில் ஒரு வெறுமை தெரிகிறது. அப்பாதை, சில ஓலை குடிசைகள் அமைந்துள்ள மேடான ஒரு இடத்திற்கு இட்டுச் செல்கிறது. அம்மனிதர் தன் நடையை ஒரு குடிசையை நோக்கிச் செலுத்துகிறார். ஆடுகள் இரண்டையும் குடிசைக்கு வெளியே கட்டிப் போட்டு விட்டு , குடிசையின் உள்ளே செல்கிறார். அவருடைய மனைவி குடிசையில் உள்ள ஒரு சில பொருட்களை மூட்டை கட்டுவதில் மும்முரமாக இருக்கிறார். வெகுநேரமாக அழுது களைத்த கண்களில் சோகம் தெரிகிறது. "நேரமாச்சு, வா கெளம்பலாம்" என்கிறார் தெலுங்கு மொழியில். "பெறந்து வளர்ந்த பூமியை விட்டு போகணும்ங்கிறீங்களே" என்கிறார் அவருடைய மனைவி. "என்ன பண்ணறது, இந்த மண்ணுல நாம உயிர் வாழ இனிமே ஒன்னும் இல்லை, போய் தான் ஆகனும்" என்று சொல்லி மனைவியை ஆதரவாகப் பிடித்துக் கொள்கிறார். <br /><br />பின்னர் தங்கள் உடைமைகளையும், தாங்கள் வைத்து வணங்கும் பெண் தெய்வத்தின் மண் சிலையையும் எடுத்துக் கொண்டு, வாசலில் கட்டியிருக்கும் ஆடுகளை அவிழ்த்துக் கொண்டு வீட்டை விட்டுக் கிளம்புகிறார்கள். அவ்விடத்தில் வாழும் அம்மனிதரைப் போன்ற ஏனையோர்களும் தத்தம் மனைவி, மக்கள், விலங்குகள் ஆகியவற்றை கூட்டிக் கொண்டு அங்கிருந்து செல்கிறார்கள். ஆண்கள் அனைவரும் கம்பளங்களைத் தங்கள் தோள் மேல் போர்த்தியிருக்கிறார்கள். இந்த இடத்துல மெலிந்து போன சில பசு மாடுகளும், சோக முகம் கொண்ட மனிதர்களும் நடந்து போறதை லோ-ஆங்கிளில் காட்டறோம். "வடக்கு ஆந்திர பிரதேசம், கி.பி.12 ஆம் நூற்றாண்டு" என சப்-டைட்டிலில் காட்டறோம். அம்மக்கள் பல துயரங்களை அனுபவித்து தென் தமிழ்நாட்டை அடைகிறார்கள். முதல் காட்சியில் காட்டப்பட்ட அம்மனிதர், அங்குள்ள மன்னன் ஒருவனிடத்தில் சேவகனாக சேர்கிறார். அம்மன்னனின் நன்மதிப்பை பெறுகிறார். நாட்டின் ஒரு சிறிய பகுதியை நிர்வகிக்கும் பொறுப்பும் அவருக்குக் கிடைக்கிறது. இதை எல்லாம் ஒன்னரை-ரெண்டு நிமிஷத்துக்குள்ள, கோர்வையான சில காட்சிகளின் மூலமாக மிகைப் படுத்தாமல் சொல்கிறோம். <br /><br />அடுத்த காட்சி ஆரம்பிப்பதற்கு முன்னர் நாய்கள் ஆக்ரோஷமாகக் குரைக்கும் ஒலி கேட்கிறது. காட்சி திரையில் ஆரம்பிக்கும் போது நாய்கள் ஒரு புதருக்குள்ளிலிருந்து வேகமாக வெளிப்பட்டு முன்னோக்கி வேகமாக ஓடுவது காண்பிக்கப் படுகிறது. நாய்களுக்குப் பின்னால் அம்மனிதர் ஒரு குதிரையில் வந்து கொண்டிருக்கிறார். நாய்களுக்கு முன்னால் காட்டு முயல் ஒன்று வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வேட்டை நாய்கள் வேகமாக ஓடுவது காட்டு முயலைப் பிடிக்க என்பது காட்சியிலிருந்து தெரிவிக்கப் படுகிறது. நாய்கள் காட்டு முயலைப் பிடித்தாக வேண்டும் என்ற ஆர்வம், நாய்களின் எஜமானரான அம்மனிதரின் முகத்தில் தெரிகிறது. அடர்ந்த காட்டுக்குள் நாய்கள் முயலைத் துரத்துவதும், மனிதர் குதிரையில் பின் தொடர்ந்து வருவதும் ஆக்சன் ஷாட்டாகக் காண்பிக்கப் படுகிறது. தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்த முயல் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும், தன் இது வரை ஓடி வந்த திசையை நோக்கித் திரும்புகிறது, வேட்டை நாய்களை நேருக்கு நேராகப் பார்க்கின்றது. அதுவரை பயந்து ஓடிக் கொண்டிருந்த முயல், வேட்டை நாய்களைத் துரத்த ஆரம்பிக்கிறது. நாய்களை ஒரு முயல் துரத்துவதையும், தன்னை கடந்து அவைகள் ஓடுவதையும் அத்திசையை நோக்கி அம்மனிதர் பார்க்கிறார். <br /><br />முயல் எந்த இடத்தில் திரும்பி நாய்களைத் துரத்த ஆரம்பித்ததோ அந்த இடத்திற்கு தன் குதிரையில் இருந்து இறங்கி நடநதுச் செல்கிறார். அவருடைய கண்களில் தெரியும் வியப்பைப் பார்வையாளருக்குக் காட்டுகிறோம். அவருடைய கருவிழிகளுக்குள்ளே, அவ்விடம் வளர்ச்சி பெறுவதையும் ஒரு கோட்டை உருவாவதையும் காட்டுகின்றோம். இப்போது கேமரா அம்மனிதரின் தலைக்கு மேல் செல்கிறது, மேலே எழும்பிக் கொண்டே இருக்கிறது, அவருடைய தலை ஒரு சிறு புள்ளியாகத் தெரியும் வரை. இவ்விடத்தில் அப்புள்ளி சேட்டிலைட் இமேஜரியாக(Satellite Imagery) மாறுகிறது. புள்ளி தெரிந்த அதே இடத்தில் சேட்டிலைட் இமேஜரியின் மீது ஒரு புள்ளி வைத்து "பாஞ்சாலங்குறிச்சி, கி.பி.12ஆம் நூற்றாண்டு" எனக் காட்டுகிறோம். அந்த புள்ளியிலிருந்து வலப் பக்கமாக சிறிது தூரம்(ஒரு சில மில்லிமீட்டர்கள்) சேட்டிலைட் இமேஜரியின் மீது கேமரா பயணிக்கிறது. அங்கு இன்னுமொரு புள்ளி தெரிகிறது. அப்புள்ளியின் அருகே "கயத்தாறு, அக்டோபர் 17, கி.பி.1799" எனக் காட்டுகிறோம். அந்த புள்ளியிலிருந்து கேமரா உள்நோக்கி கீழிறங்க ஆரம்பிக்கிறது. இறங்கிக் கொண்டே இருக்கிறது. ஆகாய விமானத்தில் இருந்து கீழே பார்த்தால் எவ்வாறு பூமி தெரியுமோ அவ்வாறு நிலம் தெரியத் துவங்குகிறது. <br /><br />மேலும் கேமரா கீழே இறங்குகிறது. பச்சையான மேற்பரப்பு தெரிகிறது. கேமரா இன்னும் கீழிறங்குகிறது. கேமரா கீழிறங்குவது ஒரு மரத்தினூடாக என்பது பார்ப்பவருக்குத் தெளிவாகிறது. அம்மரம் ஒரு புளியமரம் என்று கேமரா கீழிறங்கும் போது தெரியும், புளிய மர இலைகள் மூலமாகவும், மரத்தில் தொங்கும் புளியம்பழங்களின் மூலமாகவும் பார்ப்பவர் தெரிந்து கொள்கிறார். கீழிறங்கிக் கொண்டிருக்கும் கேமராவுக்கு ஒரு பெரிய மரக்கிளை தெரிகிறது. அம்மரக் கிளையில் தடிமனான ஒரு கயிறு கட்டப் பட்டிருப்பது தெரிகிறது. கேமரா இன்னும் கீழிறங்குகிறது. கீழே தொங்கிக் கொண்டிருக்கும் கயிறைக் காட்டிக் கொண்டே கேமரா கீழிறங்குகிறது. இடுப்பு வரை வெற்றுடம்பாக இருக்கும் ஒரு சடலம் கயிறில் தொங்கிக் கொண்டிருப்பதை காட்டுகிறோம். கேமரா காட்டுவது அச்சடலத்தின் முதுகு பகுதியை தான். கறுத்த உடல் நிறம் கொண்ட அம்மனிதனின் கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டிருக்கிறது. கால்களில் வசதி படைத்தவர்கள் அணியும் காப்புகள் அணிந்திருப்பது தெரிகிறது. பின்னணியில் மக்கள் அழுது புலம்புவதையும், கயிற்றில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருக்கும் மனிதனைப் போல உடையணிந்த இன்னும் சிலர் விலங்கிடப்பட்டு துப்பாக்கி ஏந்திய வீரர்களால் இழுத்துச் செல்லப் படுவதையும் காட்டுகின்றோம். இக்காட்சி முழுவதும் சூரியன் மறைந்த மாலை நேரத்தில்(ஆனால் இருள் சூழாத) படமாக்கப் படுகிறது. <br /><br />அடுத்த காட்சி விளக்கு வைத்த மாலை வேளையில் தொடங்குகிறது. விபூதி பட்டை அணிந்த பக்தர்கள் கூட்டம் ஒன்று காவடி தூக்கிக் கொண்டு, காவடி சிந்து பாடிக் கொண்டு துப்பாக்கி ஏந்திய வீரர்கள் காவல் காக்கும் ஒரு வாயிலை நோக்கி வருகிறது. அவர்களிடம் விபரம் கேட்டுக் கொண்ட காவலாளிகள் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர். காவடி எடுத்து வந்தவர்கள், காவலாளிகளின் கண்களிலிருந்து மறைந்ததும் வெவ்வேறு திசைகளில் பிரிகிறார்கள். காவடிக்குள்ளிலிருந்து அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை எடுத்து தங்கள் உடைகளுக்குள் மறைத்து கொள்கிறார்கள். இருள் கவியத் தொடங்கியதும் வெவ்வேறு திசைகளிலிருந்து மறைந்து மெல்ல மெல்ல ஒரு கோட்டையை நோக்கி வருகின்றனர். அங்கு காவலாளிகளை மறைந்திருந்து தாக்கிக் கொன்று கோட்டைக்குள் புகுகின்றனர். <br /><br />கோட்டைக்குள் அவர்கள் எதையோ தேடிக் கொண்டே இருக்கின்றனர். அப்போது அங்கு ஒரு சிறை கதவு தெரிகிறது. அதை தாக்கி உடைத்து, சிறைக்குள்ளிருக்கும் நபரின் கைவிலங்குகளை உடைக்கின்றனர். அவருடைய கைகளை முத்தமிடுகின்றனர். கோட்டையின் ஒரு பகுதியை உடைத்துக் கொண்டு வீரர்களும், அந்நபரும் வெளியேறுகின்றனர். அப்போது படத்தின் பெயர் போடுகின்றோம் - "ஊமைத்துரை". பாளையங்கோட்டை சிறையிலிருந்து ஊமைத்துரையை மீட்டு கொண்டு வரும் போது ஆங்கிலேய தளபதிகளும், அவர்களுடைய படைவீரர்கள் அனைவரும் அவர்கள் தப்பிச் சென்ற பாதையில் இருந்து சற்றே விலகி ஒரு இடத்தில் விருந்தில் கலந்து கொண்டிருந்ததையும், வீரர்கள் அந்நேரத்தில் ஆங்கிலேயர்களைத் தாக்கியிருந்தால் வரலாறு மாறியிருக்க வாய்ப்பிருந்ததையும் காட்டுகிறோம். <br /><br />சில நாட்கள் காலாட் பயணத்திற்குப் பிறகு தங்கள் சொந்த மண்ணான பாஞ்சாலங்குறிச்சியை அடைகின்றனர். தமது அண்ணன் கட்டபொம்மனின் மறைவிற்குப் பின் ஆங்கிலேயர்களால் அழிக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை அனைத்து சாதி மக்களின் உதவியையும் கொண்டு ஆறே நாட்களில் மறுபடியும் கட்டி முடிக்கின்றான். இந்த சிச்சுவேஷனில் ஒரு பாட்டு வருகிறது. படத்திற்கு இசை - இசைஞானி இளையராஜா. அதாவது இரவு பகலாக மக்கள் மண்சுமந்து அந்த கோட்டையைக் கட்டும் போது களைப்பு தெரியாமல் இருக்க அவர்கள் பாடுவது போல ஒரு பாட்டு வருகிறது. களிமண்ணும் சுண்ணாம்பும் பதநீரும் கரும்புச் சக்கையும் சேர்த்த கலவையை வைத்து கட்டும் போது எழுப்பப் படும் ஒலியோடு பாடல் தொடங்குகிறது. <br /><br />வேட்டை நாயை விரட்டிய முயலின் கதையோடு ஆரம்பிக்கிறது பாடல். அத்தகைய பெருமைகளைக் கொண்ட பாஞ்சாலங்குறிச்சி என்பது வீரம் விளைந்த மண் என்பது நிறுவப் பெறுகிறது. அடுத்து கட்டபொம்மனின் பெருமைகளைச் சொல்கிறது, வணிகம் செய்ய வந்த வெளிநாட்டவர்க்கு வரி கொடுக்க மறுத்தது, அவர்களுடன் போரிட்டு வீர மரணம் அடைந்தது இவை எல்லாவற்றையும் இயல்பான மொழியில் ஒரு கதை பாடல் போல ஒலிக்கிறது இந்தப் பாடல். பாடலில் பல்வேறு உணர்ச்சிகள் காட்டப் படுகிறது. பாஞ்சாலங்குறிச்சி மண்ணின் பெருமை சொல்லும் இடத்திலும், கட்டபொம்மனின் வீரதீர பெருமைகளைச் சொல்லும் இடத்திலும் ஒருவித மகிழ்ச்சி உணர்வும், கட்டபொம்மன் மறைந்தது பற்றிப் பாடும் போது சோகமும் கலந்த கலவையாக இப்பாடல் வரும். கடைசியாக நீங்களா? நாங்களா? மோதி பார்த்துடுவோம் வாங்கடா வெள்ளையர்களா என்று சவால் விடும் தொனியில் பாடல் முடிவடையும்.<br /><br />(தொடரும்...)<br /><a href="http://kaipullai.blogspot.com/2010/03/2.html">திரைப்படம் எடுக்கும் எண்ணம் - 2</a>கைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-20289353.post-76717542245500846492010-03-11T11:34:00.002+05:302010-03-11T11:40:12.304+05:30பள்ளிக்கூட நினைவுகள் - Back to School - குவிஸ் பதிவுவணக்கம் நண்பர்களே. பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடக்கும் நேரமிது. இது போக பள்ளியில் படிக்கும் பிற வகுப்புகளில் உள்ள மாணவர்களும் தத்தம் ஆண்டுத் தேர்வுகளுக்காகத் தம்மை தாமே தயார்படுத்திக் கொண்டிருப்பார்கள். இந்த நேரத்தில், பள்ளிப் படிப்பை பல ஆண்டுகளுக்கு முன்னால் முடித்த நாம், அப்போது நாம் படித்ததை நினைவு கூர்ந்து ஒரு தேர்வு எழுதினால் எப்படி இருக்கும் எனத் தோன்றியது. தேர்வு என்ற சொல் உங்களுக்கு ஒவ்வாது போனால் குவிஸ் போட்டி என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம் :)<br /><br />நாம் பள்ளிக் கூடத்தில் படித்த தமிழ் செய்யுள், துணைப்பாட நூலிலிருந்தும் ஆங்கில செய்யுள்(Poetry) மற்றும் உரைநடை(Prose) நூலிலிருந்தும் சில வரிகளை எடுத்து இங்கே கொடுத்திருக்கிறேன். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் - செய்யுள் அல்லது கதையின் பெயர், ஆசிரியர் பெயர் இவற்றைக் குறிப்பிட வேண்டும். <br /><br />தமிழ்<br /><br />1. "ஆற்று வெள்ளம் நாளை வரத்தோற்று தேகுறி - மலை<br /> யாளமின்னல் ஈழ மின்னல் சூழமின்னுதே<br /> நேற்று இன்றும் கொம்பு சுற்றிக் காற்றடிக்குதே - கேணி<br /> நீர்ப்படு சொறித் தவளை கூப்பிடுகுதே"<br /><br />2. "இதுபொறுப்ப தில்லை - தம்பி<br /> எரிதழல் கொண்டுவா<br /> கதிரை வைத்திழந்தான் - அண்ணன்<br /> கையை எரித்திடுவோம்"<br /><br />3. "உலகம் யாவையுந் தாமுள வாக்கலும்<br /> நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா<br /> அலகி லாவிளை யாட்டுடை யாரவர்<br /> தலைவ ரன்னவர்க்கேசர ணாங்களே"<br /><br />4. "பலசான் றீரே பல்சான் றீரே<br /> கயன்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட்<br /> பயனின் மூப்பிற் பல்சான் றீரே<br /> கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன்<br /> பிணிக்குங் காலை யிரங்குவிர் மாதோ"<br /><br />5. "மாட்டையவிழ்த்தாய்விட்டது. <br /><br />மனைவி 'மாடு' எழுபது ரூபாயிற்றே. 'குழந்தைகளுக்குப் பாலாயிற்றே' என்று தடுத்தாள். மே வரும்படி வேறு வருகிறதாம். <br /><br />"என் புள்ளெகள் நீத்தண்ணி குடிச்சு வளந்துக்கிடும்" என்று விட்டார்.<br /><br /><br />ஆங்கிலம்<br /><br />1. But he fancied his English, finished and refined at no less a place than the University of Oxford. He was fond of conversation, and like a cultured Englishman, he could talk on almost any subject—books, politics, people. How frequently had he heart English people say that he spoke like an Englishman! <br /><br />2. He ran his hand along the trunk of the tree and put his finger to the tip of a leaf. ‘I wonder,’ he whispered. ‘Is this what it feels to be God?’<br /><br />3. "His state Is kingly: thousands at his bidding speed,<br /> And post o'er land and ocean without rest;<br /> They also serve who only stand and wait."<br /><br />4. "I was angry with my friend: <br /> I told my wrath, my wrath did end. <br /> I was angry with my foe; <br /> I told it not, my wrath did grow"<br /><br />5. Another bus, the last on the road, sailed by indifferent to the shouts of the passengers to stop. “They stick by each other—the villains” was the comment.<br /><br />உங்கள் பதில்கள் உடனடியாக வெளியிடப் படாது. சரியா? தவறா? என்று மட்டும் சொல்கிறேன். கூடுதலாகப் பாடலின் பொருள், கதையின் கரு கொடுத்தாலும் நலம். இவ்வரிகளைப் படிக்கும் போது தங்கள் மனதில் தோன்றும் நினைவுகளையும், எண்ணங்களையும் பகிர்ந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். சரியான பதில்களோடு இன்னுமொரு பதிவோடு வருகிறேன். நன்றி.கைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.com27tag:blogger.com,1999:blog-20289353.post-52868837664224101122010-01-27T15:02:00.003+05:302010-01-27T15:21:33.987+05:30This Day That Age"The Hindu" ஆங்கில நாளிதழில் கடைசி பக்கத்தை கவனித்தவர்களுக்கு இந்தப் பதிவின் தலைப்புக்கான காரணம் புரியும். இதே நாளில் பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றிய செய்திகளை 'This Day That Age" பகுதியில் நினைவு கூர்வார்கள். உதாரணமாக 1945ஆம் ஆண்டு அதே நாள் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஹிண்டுவில் பிரசுரமான சில செய்திகளைத் தருவார்கள். அதே பாணியில் இதே நாள் ஜனவரி 27 ஆம் தேதி 2006 ஆம் ஆண்டு இவ்வலைப்பூவில் என்ன எழுதியிருந்தேன் என்று புரட்டிப் பார்த்தன் விளைவே இப்பதிவு. ஒரே நாளில் இரண்டு பதிவுகள் எழுதி பதிப்பிக்கும் அளவிற்கு ப்ளாக் பைத்தியமாக இருந்தது நினைவுக்கு வருகிறது. ஹ்ம்ம்ம்....அதெல்லாம் ஒரு காலம் :(<br /><br /><a href="http://kaipullai.blogspot.com/2006/01/blog-post_113838203775645069.html">மறவேன் மறவேன் என்று...</a><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/4425/1766/1600/11043.jpg"><img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/4425/1766/400/11043.jpg" border="0" /></a><br />"மறவேன் மறவேன் என்று வேலின் மேல்<br />ஆணையிட்ட மன்னரும் மறந்தாரோ மயிலே"<br /><br />தூர்தர்ஷன் மட்டுமே ஒரே தொலைக்காட்சி சேனல் என்று இருந்த காலத்தில், இரவு 9.00 மணிக்கு தேசிய ஒளிபரப்பு தொடங்குவதற்கு முன் மெல்லிசை பாடல்கள் ஒளிபரப்பப்படும். டி.கே.கலா(கில்லி புகழ்) பாடிய மேற்கண்ட பாடல் அடிக்கடி வரும். ராஜா ரவி வர்மாவின் இவ்வோவியத்தைக் கண்டதும் அப்பாடல் தான் நினைவுக்கு வந்தது. அப்பாடலை எவரேனும் நினைவில் கொண்டிருந்தால் மற்ற வரிகளையும் தெரியப்படுத்துங்கள்.<br /><br /><span style="color:#ff0000;">நாலு வருஷமாத் தேடியும் இந்த பாடலைக் இணையத்தில் கேட்பதற்கான சுட்டிகளோ, ஒலிப்பேழைகளோ, குறுந்தகடுகளோ எங்கும் கிடைத்தபாடில்லை :(</span><br /><br /><a href="http://kaipullai.blogspot.com/2006/01/blog-post_27.html">சொல்றோம்ல : மல்லிகட்டாணி</a><br /><br />ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் மல்லிகட்டாணி(Mulligatawny) சூப் என்பது ரொம்பவே பிரபலம். இந்த மல்லிகட்டாணி சூப்புக்கும், தமிழர் உணவு முறைமைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஐந்து நட்சத்திர ஓட்டல்களில்(நான் அறிந்த வரை) ஏனோ நாம் வீட்டிலோ அல்லது சாதாரண ஓட்டல்களிலோ சாப்பிடும் போது கிடைக்கும் பாரம்பரிய சுவை கிடைத்ததில்லை. அப்படி இருக்க மல்லிகட்டாணிக்கும் தமிழ் உணவு முறைக்கும் என்ன தொடர்பு?<br /><br />மல்லிகட்டாணி நாம் சாப்பிடும் எந்த ஒரு உணவு வகை போலவும் இல்லையே என்று தோன்றும். சுவையில் வேண்டுமானால் தொடர்பு இல்லாமல் இருக்கலாம்...ஆனால் பெயரில் தொடர்பு கண்டிப்பாக இருக்கிறது. மல்லிகட்டாணி என்ற பெயர் "மிளகு + தண்ணி"யிலிருந்து மறுவி வந்ததேயாகும். Mulligatawny = Milagu + Tanni. ஆங்கிலோ-இந்திய வம்சாவழியினர்(Anglo-Indians) தமிழர்களிடமிருந்து கற்ற ஒரு உணவு வகை 'ரசம்'. இதை அவர்கள் மிளகு தண்ணி என்று அழைத்தார்கள். சோற்றுடனும் நூடுல்சுடனும் சேர்த்து அவர்கள் இதை உண்டனர். ஆங்கிலேயர்கள் ஆங்கிலோ-இந்தியர்களிடமிருந்து 'மிளகு தண்ணியைக்' கற்றுச் சென்று அதனை மல்லிகட்டாணி ஆக்கி விட்டார்கள். அடுத்த முறை மல்லிகட்டாணி சூப் குடிக்கும் போது ரசத்தை தான் வேறு பெயரில் நிறைய காசு குடித்து குடிக்கிறோம்னு ஞாபகம் வச்சுக்குங்க.<br /><br />இதனை <a href="http://en.wikipedia.org/wiki/Mulligatawny">விக்கிபீடியாவிலும்</a> காணலாம்.<br /><br />டிஸ்கி : பதிவெழுத நேரமும் சரக்கும் இல்லாத போது பழைய பதிவுகளை வச்சே 2010ஆம் வருஷத்தை ஒரு கொசுவத்தியோடத் தொடங்கியாச்சு.கைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-20289353.post-90516275623366367402009-12-21T22:40:00.012+05:302009-12-22T22:11:49.131+05:30படு ரொமாண்டிக்கான பாடல் ஒன்னு...பழைய பாடல்கள் அப்பப்போ கேக்கறதுண்டுன்னாலும், ஒரு சில பாடல்களைக் கேக்கும் போது "பலமுறை இந்த பாட்டைக் கேட்டுருக்கோம், ஆனா இந்த பாட்டோட அழகை இது நாள் வரைக்கும் கவனிக்காம இருந்துட்டோமே" அப்படின்னு தோனும். அப்படி பட்ட பாடல் ஒன்னைப் பத்தி இன்னிக்குச் சொல்றேன். படு ரொமாண்டிக்கான அழகான காதல் ரசம் ததும்பும் பாடல்...வேற யாரு எழுதிருக்க முடியும். கவியரசர் கண்ணதாசன் தான். கர்ணா படத்துல வர்ற "மலரே மௌனமா?" பாடல் அமைஞ்ச தர்பாரி கானடா ராகத்துல அமைஞ்ச இன்னொரு சூப்பர் பாடல் இது. எனக்கு இப்பாடலில் மிகவும் பிடித்த சில பஞ்ச் வரிகளை சிவப்புல குறிச்சிருக்கேன்.<br /><br />படம் : போலீஸ்காரன் மகள்<br />இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி<br />பாடல் : கண்ணதாசன்<br />பாடியவர்கள் : P.B.ஸ்ரீநிவாஸ் & S.ஜானகி<br /><br />PBS:<br />பொன் என்பேன் சிறு பூவென்பேன்<br />பொன் என்பேன் சிறு பூவென்பேன்<br />காணும் கண்ணென்பேன்<br />வேறு என்னென்பேன்<br /><br />SJ:<br />என்னென்பேன் கலை ஏடென்பேன்<br />என்னென்பேன் கலை ஏடென்பேன்<br />கண்கள் நானென்றால் பார்வை நீயென்பேன்<br />Both:<br />ஆஹாஹா ... ஓஹோஹோ ...<br /><br />PBS:<br />கொத்துமலர் எடுத்து முத்துச் சரம் தொடுத்து<br />சிட்டு முகம் பார்த்தே சிரித்திருப்பேன்<br />கொத்துமலர் எடுத்து முத்துச் சரம் தொடுத்து<br />சிட்டு முகம் பார்த்தே சிரித்திருப்பேன்<br /><br />SJ:<br />தொட்டவுடன் நெஞ்சில் துள்ளி வரும் வெள்ளம்<br />கண்டு கண்டு நானும் களித்திருப்பேன்<br />தொட்டவுடன் நெஞ்சில் துள்ளி வரும் வெள்ளம்<br />கண்டு கண்டு நானும் களித்திருப்பேன்<br /><br />PBS:<br />உன்னை நான் அறிவேன் என்னை நீ அறிவாய்<br />உன்னை நான் அறிவேன் என்னை நீ அறிவாய்<br />உன்னை நான் அறிவேன் என்னை நீ அறிவாய்<br />உன்னை நான் அறிவேன் என்னை நீ அறிவாய்<br /><br />SJ:<br /><strong><span style="color:#cc0000;">நம்மை நாம் அறிவோம் வேறு யார் அறிவார்<br />நம்மை நாம் அறிவோம் வேறு யார் அறிவார்</span></strong><br /><br />PBS (Background humming by SJ):<br />பொன் என்பேன் சிறு பூவென்பேன்<br />பொன் என்பேன் சிறு பூவென்பேன்<br />காணும் கண்ணென்பேன்<br />வேறு என்னென்பேன்<br /><br />SJ:<br />சின்னச் சின்ன பறவை அன்னை அவள் மடியில்<br />தவழ்வது போல் நான் தவழ்ந்திருப்பேன்<br />சின்னச் சின்ன பறவை அன்னை அவள் மடியில்<br />தவழ்வது போல் நான் தவழ்ந்திருப்பேன்<br /><br />PBS:<br /><span style="color:#cc0000;"><strong>கண்ணை மெல்ல மறைத்து உன்னைக் கையில் எடுத்து<br />காலமெல்லாம் நான் அணைத்திருப்பேன்</strong><br /></span>கண்ணை மெல்ல மறைத்து உன்னைக் கையில் எடுத்து<br />காலமெல்லாம் நான் அணைத்திருப்பேன்<br /><br />SJ:<br /><strong><span style="color:#cc0000;">உன்னை நினைத்திருப்பேன் என்னை மறந்திருப்பேன்</span></strong><br /><br />PBS:<br />கண்ணில் கலந்திருப்பேன் நெஞ்சில் நிறைந்திருப்பேன்<br /><br />SJ (Background humming by PBS):<br />என்னென்பேன் கலை ஏடென்பேன்<br />என்னென்பேன் கலை ஏடென்பேன்<br />கண்கள் நானென்றால் பார்வை நீயென்பேன்<br /><br /><img style="visibility:hidden;width:0px;height:0px;" border=0 width=0 height=0 src="http://counters.gigya.com/wildfire/IMP/CXNID=2000002.0NXC/bHQ9MTI2MTQxOTIwODIzNCZwdD*xMjYxNDE5MjI3Njg3JnA9NTQ5MTIyJmQ9Jm49YmxvZ2dlciZnPTEmbz**OTY4MjI3MDEyNTg*ZGE*YTg4MjFhNTFlMWNkN2M1YyZvZj*w.gif" /><table border=0><tr><td align=center><embed src="http://www.dishant.com/FlxPlayer.swf?HTMLURL=http://www.dishant.com/trackPlaylist.php?trackid=&HTMLNAME=59626&SERVERIP=69.13.37.212&ONSCRAP=&SHUFFLE=FALSE&REPEAT=" quality="high" bgcolor="#333333" width="360" height="120" name="FlxPlayer" align="middle" allowScriptAccess="always" type="application/x-shockwave-flash" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" FlashVars="gig_lt=1261419208234&gig_pt=1261419227687&gig_g=1&gig_n=blogger"></embed></td></tr><tr><td align=center><a href="http://www.dishant.com" target="_blank">This feature is powered by Dishant.com - Home of Indian Music</a></td></tr></table><br /> <br />'வர்ல்ட் மூவிஸ்' சேனல்ல எப்பவோ அரைகுறையா பாத்துட்டு நிறுத்திய இரானிய திரைப்படம் ஒன்னு ஞாபகத்துக்கு வந்துச்சு. இரானிய படங்கள் பாத்தா தான் உலகத் திரைப்படங்கள் பாத்ததா ஒத்துக்குவாங்கன்னு தமிழ் வலையுலகில் இயங்கி வர்ற இந்த மூனு வருஷ காலத்துல புரிஞ்சிக்கிட்டேன். இரானிய திரைப்படம் பத்தி ஞாபகத்துக்கு வந்துச்சுன்னு சொன்னேன் இல்லியா? சென்னை திரும்பறதுக்காகப் பாரிஸ்லேருந்து துபாய் வந்துட்டுருந்த போது எமிரேட்ஸ் விமானத்துல இருந்த தொலைக்காட்சி திரையில 'Arabic Movies' அப்படீங்கற லிஸ்டைப் பார்த்துட்டு வந்தது. ஆனா இரானிய படங்கள் வேறு அரேபிய திரைப்படங்கள் வேறுன்னு அஞ்சு நிமிஷம் பாத்ததுமே புரிஞ்சுடுச்சு. அரேபிய நாடுகளில் பாலிவுட் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கறது ஏன்னும் புரிஞ்சது.<br /><br />ஏன்னா நான் பார்த்த படம் அப்படி. படத்தோட பேரு Omar w.Salma. இதே படத்தோட இரண்டாவது பகுதியும் வந்துட்டதா கேள்வி பட்டேன். பாலிவுட் மசாலா திரைப்படங்களே தோத்துப் போற அளவுக்கு பயங்கர மசாலா கதை. "கோகுலத்தின் சீதை" மாதிரி ப்ளேபாய்களான அப்பா-மகன் இருவர். அப்படி பட்ட ப்ளேபாயான ஓமரை எப்படி சல்மாவின் காதல் திருத்துகிறது என்பதே கதை. <br /><br /><a href="http://3.bp.blogspot.com/_TXCaXL0id1A/Sy-5TahURqI/AAAAAAAACtE/PNK6mx7O9ZI/s1600-h/OwSalma.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 249px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_TXCaXL0id1A/Sy-5TahURqI/AAAAAAAACtE/PNK6mx7O9ZI/s400/OwSalma.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5417752619937711778" /></a><br /><br />படத்தை பயங்கர கில்மாவா எடுத்துருக்காங்க. சல்மாவா நடிச்சிருக்கற அம்மணி மாய் அஸ் எல்தீன்(Mai Ezz El Din) செம க்யூட்டுங்க. சிரிச்சா ரொம்பா அழகா இருக்காங்க. திருத்தம்...சிரிச்சாலும் ரொம்ப அழகா இருக்காங்க. இரானிய படங்கள் மாதிரி இருக்கும்னு எதிர்பார்த்த நான் பார்த்த அந்த அரேபிய படம் எனக்கு பல ஆச்சரியங்களைத் தந்தது. மேற்கத்திய நாடுகளுக்கு இணையான உடைகள். துள்ளலான இசை. இன்னும் பல பல :)<br /><br /><a href="http://3.bp.blogspot.com/_TXCaXL0id1A/Sy-tW80yQfI/AAAAAAAACs0/cc6yUUIvAbU/s1600-h/Mai.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5417739486546248178" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 289px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_TXCaXL0id1A/Sy-tW80yQfI/AAAAAAAACs0/cc6yUUIvAbU/s400/Mai.jpg" border="0" /></a> <br /><br /><a href="http://3.bp.blogspot.com/_TXCaXL0id1A/Sy-4uOadtCI/AAAAAAAACs8/UuAmA-xxAQE/s1600-h/OmarwSalma.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://3.bp.blogspot.com/_TXCaXL0id1A/Sy-4uOadtCI/AAAAAAAACs8/UuAmA-xxAQE/s400/OmarwSalma.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5417751981032584226" /></a><br /><br /><br />இந்த மாதிரி படங்கள் எல்லாம் எந்த அரேபிய நாட்டுல எடுக்கறாங்க சாமி? துபாய் மக்கள்ஸ் யாராச்சும் இந்த மொழி படங்களைப் பாத்துருக்கீங்களா? உங்களுக்கு தெரிஞ்ச விபரங்களைச் சொல்லிட்டு போங்கங்கோ!<br /><br /><strong>பி.கு:</strong> நான் ஓமர் சல்மா படத்தை sub-title இல்லாம தான் பார்த்தேன் :)கைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-20289353.post-1243693884979222462009-12-08T03:45:00.007+05:302009-12-08T04:11:50.526+05:30பாரிமுனையில் கைப்புள்ள"அடுத்த வாரம் நான் பாரிசுக்குப் போறேன்"<br /><br />"பஸ்லியா? டிரெயின்லயா?"<br /><br />ஒரு சோதனையா ரெண்டு மூனு பேரு இதே கேள்வியைக் கேட்டுட்டாங்க. அதனால ஒரு வரலாற்றுச் சான்றா இருக்கட்டுமேன்னு -<br /><br /><br /><p><a href="http://1.bp.blogspot.com/_TXCaXL0id1A/Sx2AQC7RjvI/AAAAAAAACsk/kCp6B1g2MX0/s1600-h/P1130210.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5412623340320952050" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_TXCaXL0id1A/Sx2AQC7RjvI/AAAAAAAACsk/kCp6B1g2MX0/s400/P1130210.JPG" border="0" /></a><br /><br />மேல இருக்கும் படம் மோனாலிசா ஓவியம் இருக்கும் லூவர் அருங்காட்சியகத்தில்(Louvre Museum) எடுத்தது.<br /><br /><a href="http://1.bp.blogspot.com/_TXCaXL0id1A/Sx2BU1eOksI/AAAAAAAACss/jyOqATk8SgE/s1600-h/P1120858.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5412624522120434370" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 300px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_TXCaXL0id1A/Sx2BU1eOksI/AAAAAAAACss/jyOqATk8SgE/s400/P1120858.JPG" border="0" /></a><br /><br /><span style="color:#cc0000;"><span style="color:#666666;">ரொம்ப நாளா ஒரு பதிவு டிராஃப்டலேயே இருக்கு. அப்போ எழுதி வச்சதை அப்படியே இப்ப இந்த பதிவுல போடறேன். நாய் சேகராகிய நான், கிம்ச்சீ நினைவுகள் அப்படின்னு எல்லாம் தலைப்பு யோசிச்சு வச்சு இன்று "light of the day" காணப் போகும் அந்த அரைகுறை பதிவுக்கு வயசு மூனு.</span><br /><br />"நாய் சேகராகிய நான்<br />11.11.2003<br /><br />கிம்ச்சீ நினைவுகள்<br /><br /><br />நானும் பயணம் சம்பந்தப் பட்ட பதிவு எதுவும் எழுதக் கூடாது எழுதக் கூடாதுன்னு பாத்து பாத்துருந்து, ஒரு வாரமா கை துறுதுறுன்னும் போதெல்லாம் கூட கட்டிப் போட்டு வச்சிருந்தேன். சொம்மா பயணத்தையே எழுதிட்டிருந்தாலும் போர் அடிச்சிடுமில்லியா...அதான். ஆனா பாருங்க இன்னிக்கு நம்ம தம்பி ராயல் ராம் சாமியோட பேசிட்டு இருக்கும் போது "நீங்க எங்கேயும் ஃபாரின்லாம் போனதில்லியா"ன்னு ஒரு கேள்வி கேட்டு வச்சாரு. (கறி தோசை, ஈரல் இட்லி இது போல இன்னும் சில சமாசாரங்களைப் பத்தி சொல்லி நாக்கு ஊற வச்சி வெறுப்பேத்தி விட்டுட்டு தான் இந்த கேள்வியைக் கேட்டாரு. கறி தோசையோட ரெசிப்பி எல்லாம் வேணும்னா </span><a href="http://raamcm.blogspot.com/"><span style="color:#cc0000;">ராயலைக்</span></a><span style="color:#cc0000;"> கேளுங்க). "அட ஆமா இல்லை...நாம கூட மூனு வருசத்துக்கு முன்னாடியே ஃபாரின் ரிட்டன் இல்ல?:)"அப்படின்னு நினைச்சிக்கிட்டேன். "போயிருக்குறேம்பா ஒரே ஒரு வாட்டி போயிருக்குறேன்" அப்படின்னேன். "எந்த ஊரு"ன்னு கேட்டாரு ராம். "கொரியா"ன்னு சொல்லி வாயை மூடறதுக்குள்ள லகலகன்னு ஒரு சிரிப்பு. "உங்களுக்கு இந்த நாடு தான் கெடச்சிதா...அமெரிக்கா, யூகே மாதிரி வேற நல்ல ஊரே கெடக்கலியா?"ன்னு ஒரு கேள்வி கேட்டாரு.<br /><br />அப்பவே தலைபாடா அடிச்சிக்கிட்ட்டாரு ஆப்டெக்ல நமக்கு ப்ரொக்ராமிங் சொல்லிக் குடுத்த வாத்தியாரு... "பாயிண்டர்ஸையும், அரேஸையும் டர்போ சில ஒழுங்கா படிச்சிக்க... அப்ப தான் கஷ்டமான ப்ராப்ளங்களுக்கும் சுலபமா ப்ரோகிராம் எழுத முடியும்னு". கேட்டோமா அதையெல்லாம்? இல்லியே...லேப்ல போய் ஒக்காந்தா கை தானாவே graphics.hக்கும் conio.hக்கும் தானே போவும்? அப்பவே ஒழுங்கா ஒரு ஃபாக்டோரியல், ஃபிபோனேசி இந்த மாதிரி எதாச்சும் ஒரு புரோகிராம் உருப்படியா எழுத கத்துக்கிட்டிருந்தோம்னா இந்நேரம் நமக்கும் ஆஃபிஸ்ல ஃபைவ் டே வீக் கிடைச்சிருக்கும், அமெரிக்கா, ஆஸ்திரேலியான்னு ஆன்சைட்டும் கெடச்சிருக்கும், நம்ம 12பி ஸ்யாம் மாதிரி "</span><a href="http://dhinamum-ennai-kavani.blogspot.com/2006/11/repeattttttt-uuuuuuuuu.html"><span style="color:#cc0000;">"ஹியர் டு கோ"</span></a><span style="color:#cc0000;">ன்னு சோக்கா பீட்டரும் வுட்டுருக்கலாம். நமக்கு எங்கே...மலைக்கு நடுவுலேருந்து சூரியன் உதிக்கற மாதிரியும், சக்கரம் சுத்தற மாதிரியும் அவுட்புட் வர்ற கிராஃபிக்ஸ் ப்ரோகிராம்ல தானே மனசு லயிச்சிச்சு?<br /><br /><br /><object height="355" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/HtK5YlGczuM&rel=1"><param name="wmode" value="transparent"><embed src=" http://www.youtube.com/v/HtK5YlGczuM&rel=1" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"></embed></object><br /><br />கொசுவத்தி சுத்தனும்னு நெனச்சி எழுத உக்காந்தா, கொசு மட்டும் தான் வருது, வத்தி வர மாட்டேங்குது. சரி எதோ ஒப்பேத்தறேன். இன்னைய தேதியிலிருந்து ஒரு இருபது வருஷத்துக்கு முன்னாடி...முன்னாடி என்னானு கேக்கறீங்க? அதானே? இன்னைய தேதியிலிருந்து இருபது வருஷத்துக்கு முன்னாடி இப்போ இருக்கறதை விட ஒரு இருபது வயசு இளமையா இருந்தேன். இப்ப பெருத்து கறுத்தக்குட்டியா ஆயிட்டாலும் அப்போ சிறுத்தை குட்டியா இருந்தேன். அந்த சிறுத்தை..." </span></p><p> </p><br /><br />இப்போ படிச்சிப் பாக்கும் போது எனக்கே அந்த டிராஃப்ட் ரொம்ப சில்லறையா தெரியுது. கொடுமை என்னன்னா கறுத்தக் குட்டி, சிறுத்தை குட்டின்னு எல்லாம் பில்டப் குடுத்து எழுதுன அந்த பத்தி ஏன் எழுதனேன்னு எவ்வளோ யோசிச்சாலும் இன்னும் நியாபகத்துக்கு வர மாட்டேங்குது. <br /><br />இந்த பதிவு இன்னிக்கு வருதுன்னா அதுக்கு காரணம் இந்த பாட்டு தான். ஏனோ இரவு பதினோரு மணிக்குக் கேட்டுக்கிட்டு இருக்கும் போது மனசு கொஞ்சம் லேசான நேரத்துல எதாச்சும் எழுதுவோமேன்னு தோனுச்சு. நீங்களும் கேட்டுப் பாருங்க.<br /><br /><object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/7BH196iBkz0&hl=en_US&fs=1&"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/7BH196iBkz0&hl=en_US&fs=1&" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object><br /><br />அடுத்த வாரம் இந்த நேரமெல்லாம்...ரிட்டர்ன் ஆஃப் தி கைப்புள்ள.கைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-20289353.post-71603226998048965172009-09-30T20:53:00.005+05:302009-09-30T23:39:33.601+05:30விஜய் டிவியும் அனிமல் ப்ளானெட்டும்ஒரு ரெண்டு மாசம் முன்னாடி இருக்கும்னு நெனைக்கிறேன், ஞாயித்துக் கிழமை சாயந்திரம் விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சி போய்க்கிட்டுருந்தது. அன்னைக்கு விவாதிக்கப்பட்ட தலைப்பு வாழ்க்கையில் முடிவுகள் எடுப்பதில் மனதை உபயோகிப்பவர்கள் Vs மூளையை உபயோகிப்பவர்கள் அப்படின்னுட்டு. மனதை உபயோகிப்பவர்கள் என்ற தரப்பில் பேசியவர்கள் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களாம். அந்த நேரத்தில் அவர்களுக்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்து விடுவார்களாம். நல்லது செய்ய போய் ஏமாந்து போன அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். <br /><br />மூளையை உபயோகிப்பவர்கள் என்ற தரப்பில் பேசியவர்கள் எதையும் தீர்க்கமாக ஆய்ந்து முடிவெடுப்பார்களாம். உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்களாம். ஒரு விஷயத்தில் இருக்கிற லாஜிக்கைத் தவறாமல் பார்த்து ஆராய்ந்து முடிவெடுப்பார்களாம். இரு தரப்பினருக்கும் இடையே விவாதம் நடைபெற்று சூடு பற்றிக் கொண்டிருந்தது. மனதை உபயோகிப்பவர்கள் Vs மூளையை உபயோகிப்பவர்கள் என்ற தலைப்பே தவறு என்று என் தந்தையார் கூறினார். அதை பற்றிய விவாதம் இப்போது நமக்கு வேண்டாம். <br /><br />மனதை உபயோகித்து முடிவெடுப்பதாகச் சொல்லிய அணியினர் மூளையை உபயோகித்து முடிவெடுப்பதாகச் சொல்லிய அணியினரைப் பார்த்து "நீங்கள் ஒரு நெடுஞ்சாலையில் உங்கள் காரில் அதிவேகமாகச் சென்று கொண்டிருக்கிறீர்கள், அப்போது உங்கள் பாதையின் குறுக்கே ஒரு மாடோ அல்லது ஒரு நாயோ குறுக்கிடுகிறது என்று வைத்துக் கொள்வோம். வண்டியை அபாயமில்லாமல் நிறுத்துமளவுக்கு உங்களிடம் நேரமில்லை. அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டார்கள். <br /><br />அப்போது மூளை அணியினைச் சேர்ந்த ஒரு பெண்மணி "நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கும் போது என்னால் வண்டியை நிறுத்த முடியாத போது அந்த நாயின் மீது ஏற்றி விட்டுச் சென்று விடுவேன். அந்நேரத்தில் என்னுயிரையும் எந்நலனைப் பற்றி மட்டும் தான் சிந்திப்பேன்" என்றார். உடனே மனது அணியில் இருந்தவர்கள் நாங்களாக இருந்தால் எங்கள் உயிருக்கு ஆபத்து வந்தாலும் நாயைக் காப்பாற்றவே கடைசி வரை முயல்வோம் என்றனர். <br /><br />அதன் பின்னர் மனது அணியில் இருந்தவர்கள் "நாயோ மாடோ சாலையைக் கடப்பதாக நினைக்க வேண்டாம். நீங்கள் பெற்ற உங்களுடைய குழந்தை நெடுஞ்சாலையில் அவசரமாகக் குறுக்கே வந்து விடுகிறது, நீங்கள் வேகமாக வண்டியை ஓட்டிக் கொண்டு வந்து விடுகிறீர்கள், இப்போது என்ன செய்வீர்கள்" என்று கேட்டனர். அதற்கு மூளை அணியில் முன்னர் பதில் சொன்ன அதே பெண் சொன்னார் "நாயாக இருந்தாலும், மாடாக இருந்தாலும், நான் பெற்ற என் குழந்தையாக இருந்தாலும் எனக்கு ஆபத்து ஏற்படுகிறது என்ற சூழ்நிலை ஏற்படும் போது நான் நிற்காமல், குறுக்கே வருபவர்கள் மீது ஏற்றிக் கொண்டு சென்று கொண்டே இருப்பேன்" என்றார். <br /><br />அது வரை அவர் பேசியது ஒரு மாற்று கருத்து என்ற அளவில் ஓரளவு ஏற்றுக் கொள்ளும்படியானது என்று வைத்துக் கொண்டாலும் அதற்குப் பின் அவர் சொல்லியது தான் என்னை மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் கொள்ளச் செய்தது "குழந்தை வேண்டுமானால் இன்னொன்று பெற்றுக் கொள்ளலாம். நம்முயிருக்கே ஆபத்து எனும் போது இவ்வாறு செய்வதில் தவறொன்றுமில்லை" என்றார். இதை கேட்டதும் எனக்கு ரத்தம் கொதிக்கத் தொடங்கியது. அவர் கடைசியில் சொல்லிய கருத்து மிகவும் ஆபாசமானது என்பது என் எண்ணம். ஆணும் பெண்ணும் இணைந்து துய்க்கும் இன்பத்தின் உபரி (by-product) தான் குழந்தை என்ற ஒரு எண்ணம் கொண்டவரால் மட்டும் தான் இவ்வாறு பேச முடியும் என்பது என் கருத்து. <br /><br />ஒரு வேளை உண்மையில் அத்தகைய சூழ்நிலையில் அப்பெண் அவ்வாறு செய்யக் கூடியவராக இல்லாமலும் இருக்கலாம். நாம் சொல்லிய கருத்தில் இருந்து எந்நிலையிலும் பின்வாங்கக் கூடாது என்ற ஒரு வைராக்கியத்திலும் அவ்வாறு பேசி இருக்கலாம். அப்பெண்ணே தான் பேசியதைப் பின்னாளில் பார்த்தால் கண்டிப்பாக வருந்தலாம். கேவலம் ஒரு விவாதத்தில் ஜெயிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாமா? இவ்வாறு பேசி ஜெயித்து யாருக்கு எதை நிரூபிக்கப் போகிறோம் என ஒரு கணம் மனதை உபயோகித்து வேண்டாம், மூளையை உபயோகித்தாவது ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம் இல்லையா? <br /><br />இதே போல் தான் நீயா நானா நிகழ்ச்சியில் நான் பார்த்த வேறு சில பாகங்களில் பங்கு பெற்ற கணவன்-மனைவியர் சிலர் பேசிய பேச்சுக்களும். எதிர் அணியில் இருந்த கணவனைப் பற்றி "என் கணவர் இந்த மாதிரி" என்று கணவரின் சில குறைகளைப் பற்றி மனைவியும், "என் மனைவி இந்த மாதிரி" என்று மனைவியின் சில குறைகளைப் பற்றி கணவரும் கூறுவதைப் பார்த்திருக்கிறேன். ரெண்டு பேர் தனியாக உட்கார்ந்து பேசிக் கொள்ள வேண்டிய ஒரு விஷயத்தை ஒரு அரங்கத்தில் எல்லோர் முன்னிலையிலும் கூறுவதை என்னால் ஏனோ sportiveஆக எடுத்துக் கொள்ள முடியவில்லை. <br /><br />தன்னுடைய வாழ்க்கைத்துணை தன்னுடைய குறைகளைப் பற்றி ஒரு பொதுவிடத்தில் வேற்று மனிதர்களிடம் கூறுவதைப் பார்த்து "நீ என்னிடம் இதை முன்பே சொல்லியிருக்கலாமே" என்ற பார்வை பார்த்த ஒரு சிலரையும் அந்நிகழ்ச்சியில் கண்டிருக்கிறேன். தன்னுடைய வாழ்க்கைத் துணையின் குறைகளைப் பற்றி வேற்று மனிதர்களிடம் பகிர்ந்து கொண்டுவிட்டு நாளை தன் கணவரையோ மனைவியையோ எவ்வாறு கண்ணோடு கண் வைத்து நேருக்கு நேராகப் பார்த்து பேசுவார்கள் என்பதும் எனக்கு இன்னும் விளங்கவில்லை. விஜய் டிவிக்கு அது வியாபாரம், சம்பந்தப் பட்டவர்களுக்கு அது வாழ்க்கையில்லையா? ஏன் அதை உணர மறுக்கிறார்கள்? <br /><br />நான்கு நாட்களுக்கு முன் அனிமல் ப்ளானெட் (Animal Planet) அலைவரிசையில் ஒரு நிகழ்ச்சியைக் கண்டேன். 'Heart of a Lioness' என்பது அந்நிகழ்ச்சியின் தலைப்பு. சபா டக்ளஸ் ஹாமில்டன்(Saba Douglas Hamilton) என்பவர் வனவிலங்குகளைப் பற்றி ஆய்வு மேற்கொள்பவரும், தொலைக்காட்சித் தொகுப்பாளரும் ஆவார். கிழக்காப்பிரிக்க நாட்டான கீனியாவில் பிறந்து வளர்ந்தவரான அவர் இங்கிலாந்தை மூலமாகக் கொண்டவர். சம்புரு வனவிலங்கு சரணாலயத்தில் (Samburu Wildlife Reserve) தாங்கள் கண்ட ஒரு விநோதமான காட்சியைப் பற்றி சபாவிற்குத் தெரியப் படுத்துகின்றனர் வனவிலங்கு பாதுகாவலர்கள். <br /><br />ஒரிக்ஸ் (Oryx) எனும் வகை மானின் குட்டி ஒன்றை ஒரு பெண் சிங்கம் வளர்ப்பதைப் பற்றிய செய்தி தான் அது. அதை நம்ப முடியாமல் தானே கண்டறிவதற்காக சபா காட்டுக்குள் பயணித்து ஒரு ஆவணப் படத்தை எடுத்திருக்கிறார். அப்படம் தான் "Heart of a Lioness". முதன் முதலில் மான் குட்டியின் பின்னே அப்பெண் சிங்கம் மெல்ல நடந்து செல்வதைப் பார்த்து நான் அடைந்த ஆச்சரியத்திற்கு அளவே இல்லை. ஆப்பிரிக்க காடுகளில் மிகுந்த அனுபவம் கொண்ட சபாவும் தான் இது போல ஒரு நிகழ்வை அது வரை கண்டதே இல்லை என்கிறார். <br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUz3L3__da5K3hxBdxxCXDZCiz1Rw5sqqX6ldEzUS9NFSImYR56ahJWJxTkPtCvWrE6KGam1iMaeLANXrolPMzAu3hQs4jctN0BYM8ETNeJav5TjeuqslcCpv3NGC-uehmblEa/s1600-h/saba_douglashamilton.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 166px; height: 221px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUz3L3__da5K3hxBdxxCXDZCiz1Rw5sqqX6ldEzUS9NFSImYR56ahJWJxTkPtCvWrE6KGam1iMaeLANXrolPMzAu3hQs4jctN0BYM8ETNeJav5TjeuqslcCpv3NGC-uehmblEa/s400/saba_douglashamilton.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5386938896203085266" /></a> <br /><br />அச்சிங்கத்திற்கு அங்கிருந்த மக்கள் 'Kamunyak' என்று பெயர் சூட்டியிருந்தனர். அப்பெயருக்கு அவர்களுடைய மொழியில் 'ஆசிர்வதிக்கப்பட்டவள் - Blessed One' என்று பொருளாம். தன்னுடைய உணவாகக் கூடிய ஒரு பிராணியைக் கமுன்யாக், பேணி வளர்ப்பதற்கான காரணத்தை அறிய முற்படுகிறார் சபா. சிங்கங்களைப் பற்றிய ஆய்வாளர் ஒருவரின் மூலம் கமுன்யாக்கின் இவ்விசித்திர குணத்திற்கான காரணம் ஒரளவுக்குத் தெரிய வருகிறது. அது சிங்கங்கள் எப்போதும் ஒரு சமூகமாக(Pride) வாழ்வன. மற்ற கொடிய விலங்குகளைப் போல் அல்லாமல் சிங்கங்கள் ஆண் சிங்கம், சில பெண் சிங்கங்கள், அதன் குட்டிகள் என்று எப்போதும் ஒரு கூட்டமாகவே வாழும் தன்மையுடையவை. <br /><br />காடுகளில் மனிதர்களின் குறுக்கீட்டால், காடுகள் சுருங்கி அதன் காரணமாக சிங்கங்களின் வாழும் முறைமையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுவிடுகின்றன. கிழக்கு ஆப்பிரிக்க பழங்குடியினரான மசாய் இன மக்கள் சிங்கங்களைத் தங்களுடைய மிகப்பெரும் எதிரிகளாகக் கருதுகின்றனர். அத்தோடு சிங்கங்களை வேட்டையாடுதல் வீரத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இவ்வாறு பல்வேறு காரணங்களினால், தன்னுடைய இயல்பான குடும்ப நிலை பாதிக்கப்பட்டு தன் சொந்தங்களை எல்லாம் இழந்து ஒரு சிங்கம் அனாதையாவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனவாம். அவ்வாறு கமுன்யாக் எனும் அச்சிங்கம் தனிமை படுத்தப் பட்டிருக்கலாம். அதனுடைய குட்டிகளை அது பறிகொடுத்திருக்கலாம். <br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhh54GrwBi8MYTG0xqREHoeLN2ostOeOZvxpYLLVzJwduSRIdSf5YfCW2uHJRfYEdvecisYgmX4gSIomr39f7oacYj0iW5zklE_NI5twxki4Hq8pfwgznrWE2nEERA80bV3ouEd/s1600-h/Kamunyak.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 283px; height: 231px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhh54GrwBi8MYTG0xqREHoeLN2ostOeOZvxpYLLVzJwduSRIdSf5YfCW2uHJRfYEdvecisYgmX4gSIomr39f7oacYj0iW5zklE_NI5twxki4Hq8pfwgznrWE2nEERA80bV3ouEd/s400/Kamunyak.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5386164419273839682" /></a><br /><br />அதன் காரணமாக, தன் குட்டியை ஒத்த மான் குட்டியைத் தன்னுடைய குட்டியாகப் பாவித்து அன்பாய் நடத்துகிறது. மான் குட்டி சிங்கத்திடம் வந்து சேர்ந்த நாளிலிருந்து இமை பொழுதும் அக்குட்டியை விட்டுப் பிரியாமல் தன் கண்காணிப்பிலேயே வைத்துக் கொண்டதாம் கமுன்யாக். கிட்டத்தட்ட 15 நாட்கள் இரவும் பகலும் சிங்கத்தையும், மான் குட்டியையும் பின் தொடர்கிறார் சபா. அக்காலக் கட்டத்தில் கமுன்யாக் வேட்டையாடச் செல்லவில்லையாம். ஒன்றும் சாப்பிடவும் இல்லையாம். மான் குட்டியைக் கொன்று தின்று வரும் மற்ற விலங்குகளையும் கமுன்யாக் விரட்டி விடுமாம். தன் குட்டியைத் தன்னொடு கொண்டு செல்ல வந்த தாய் மானையும் கமுன்யாக் விரட்டி விட்டதாம். <br /><br />பதினைந்து நாட்கள் கண்ணும் கருத்துமாக மான் குட்டியைத் தன் கண்காணிப்பிலேயே வைத்துக் கொண்டது அச்சிங்கம். மான்குட்டியும் சரியாக உணவு உட்கொள்ளவில்லை என்ற போதிலும், அவ்வப்போது புல் மேயும். சிங்கங்களை எதிரிகளாகக் கருதும் மசாய் இன மக்களாலேயே, இச்சிங்கம் கடவுளால் அனுப்பி வைக்கப்பட்ட தூதர் என்ற ரீதியில் போற்றப் பெற்றது. சிங்கம் ஆகாரம் ஏதும் உட்கொள்ளாமல் வாடுவதைக் கண்ட வனவிலங்கு சரணாலயத்தின் வார்டனும் சிங்கத்துக்கு மாமிசம் தரச் செய்கிறார். கமுன்யாக் அதையும் சாப்பிட மறுக்கிறது. <br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDmJRBR0Wlhi_mj7oYCAVY-ip71fENvcNGH0RTsa3jQES0RANAFkw6nBynBD5jqTUOx-8db9NsPNRvHuMOugCooveuwOFpkSUWLNbQgP8wEOdCD2Z2aUrPnB9Jb4dBKox8-iqi/s1600-h/heart_of_the_lioness.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 265px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDmJRBR0Wlhi_mj7oYCAVY-ip71fENvcNGH0RTsa3jQES0RANAFkw6nBynBD5jqTUOx-8db9NsPNRvHuMOugCooveuwOFpkSUWLNbQgP8wEOdCD2Z2aUrPnB9Jb4dBKox8-iqi/s400/heart_of_the_lioness.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5386164423996379442" /></a><br /><br />பதினாறாம் நாள், கமுன்யாக்கும் அம்மான் குட்டியும் ஒரு குட்டையில் சிறிது நீரருந்துகின்றன. அதன் பின்னர் சிங்கம் அயர்ந்து கொஞ்சம் இளைப்பாறுகிறது. மான் குட்டி சிங்கத்தின் பார்வையிலிருந்து சற்றே விலகிச் செல்லுகிறது. கமுன்யாக்கும் அதை பின் தொடராமல் அமர்ந்திருக்கிறது. அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு பெரிய ஆண் சிங்கம் மான்குட்டியைத் தூக்கிக் கொண்டு சென்று விடுகிறது. இதை நேரடியாகப் படம் பிடித்துக் கொண்டிருந்த சபா நாதழுதழுக்கப் பேசியதை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை. அதன் பின்னர் நடந்தது எந்தக் கல்லையும் கரையச் செய்வது. <br /><br />தான் பெற்ற தன் குட்டியைப் பறிகொடுத்தது போல கமுன்யாக் செய்வதறியாது திகைக்கிறது. ஆண் சிங்கம் மான் குட்டியைத் தூக்கிச் சென்ற இடத்திற்கு கமுன்யாக் பின் தொடர்ந்து செல்கிறது. ஆனால் வலிமை பொருந்திய பெரிய சிங்கத்தை எதிர்த்து போராடும் சக்தியில்லாமல் தான் பதினைந்து நாட்களாகப் பார்த்து பார்த்து வளர்த்த மான்குட்டி கொல்லப்படுவதை பார்க்கிறது. கமுன்யாக் என்ற அந்த சிங்கம் அந்நேரத்தில் எப்படி நடந்து கொண்டது என்பதை அந்நிகழ்ச்சியைப் பார்த்தால் மட்டுமே உணர முடியும். <br /><br />இது எல்லாம் நடந்தது 2001 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில். அதன் பின்னர் கமுன்யாக் மேலும் 5 மான் குட்டிகளை வளர்த்ததாம். ஆனால் முதல் மான்குட்டியைப் போல மற்ற குட்டிகளால் நீண்ட நாட்கள் தாக்குப் பிடிக்க முடியவில்லையாம். 2004ஆம் ஆண்டுக்குப் பின்னர் கமுன்யாக்கை யாரும் பார்க்கவில்லையாம். ஆனால் அச்சிங்கத்திற்கு ஒரு தேவதைக்குரிய மதிப்பினையும் மரியாதையையும் தந்திருக்கின்றனர் அங்குள்ள மக்கள். <br /><br />இந்நிகழ்ச்சிக்குத் தொடர்புடைய சுட்டிகள் சில:<br /><br /><a href="http://animal.discovery.com/fansites/wildkingdom/lioness/videogallery/videogallery.html">அனிமல் ப்ளானெட் காணொளிகள்</a><br /><br /><a href="http://www.lewa.org/oryx-lioness.php">http://www.lewa.org/oryx-lioness.php</a><br /><br /><a href="http://www.douglas-hamilton.com/Site/HolFAQ.html">http://www.douglas-hamilton.com/Site/HolFAQ.html<br /></a><br /><br />மான்குட்டியை வளர்க்கும் சிங்கத்தினைப் பற்றிய நிகழ்ச்சியினை அனிமல் ப்ளானெட்டில் கண்டதும் எனக்கு விஜய் டிவியில் நான் இரு மாதங்களுக்கு முன்னர் கண்டிருந்த நீயா நானா நிகழ்ச்சியில் அப்பெண் பேசிய பேச்சு நினைவுக்கு வந்தது. தன்னுடைய உணவாகக் கூடிய ஒரு உயிரிடம் அன்பு செலுத்தும் ஒரு கொடிய விலங்கையும், வறட்டு வாதத்துக்காகத் தான் பெற்ற பிள்ளையானாலும் பலி கொடுப்பதைப் பற்றி சிறிதும் கூச்சமின்றி பேசும் பெண்ணையும் பார்த்தது உண்மையிலேயே விந்தையிலும் விந்தை தான். அனிமல் ப்ளானெட்டில் கண்ட நிகழ்ச்சியைப் பற்றி கூகிளில் தேடிக் கொண்டிருந்த போது, அந்நிகழ்ச்சியை ஏற்கனவே பார்த்திருந்தவர்கள் சிலர், விவிலியத்தில்(Bible) இருந்து சில வரிகளை மேற்கோள் காட்டியிருந்தனர். அது - <br /><br />"The wolf also shall dwell with the lamb, The leopard shall lie down with the young goat,<br />The calf and the young lion and the fatling together; And a little child shall lead them."<br />Isaiah 11:6 <br /><br />ஓநாயோடு செம்மறி ஆட்டுக்குட்டியும், சிறுத்தையோடு ஆடும், சிங்கத்தோடு கன்றுக்குட்டியும் அன்போடு தன் இயல்பை மாற்றிக் கொண்டு உறவாடும் காலத்தில், இவ்விலங்குகளை விட உயர்ந்த மதி கொண்ட மனிதன் தன்னுடைய இயல்பினை மறந்து விலங்கினின்றும் தாழ்ந்து கொண்டே செல்கிறான் என்பதறிந்து வேதனையே மிஞ்சுகிறது.கைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.com31tag:blogger.com,1999:blog-20289353.post-36226021751438939632009-09-07T23:30:00.004+05:302009-09-08T09:32:57.054+05:30வேண்டாதவைகள்அன்னிக்கு ஒரு நாள் ஞாயித்துக் கெழமை. வீட்டுலேருந்து தெருவுல இறங்கி நடந்து எங்கேயோ போய்க்கிட்டிருந்தேன். தெருவுல பத்து வயசு பையன் ஒருத்தன் சத்தமா பாட்டு பாடிக்கிட்டு போய்க்கிட்டுருந்தான். "ச்சூ...ச்சூ...மாரி... ச்சூ...ச்சூ...மாரி..." அப்படிங்கிற பூ படத்து பாட்டை. பாட்டோட இந்த முதல் வரியைப் பாடுன அந்த பையன் பாட்டுக்கு நடுவுல இருக்குற வரிகளைப் பாடலை. அவனுக்கு மறந்து போச்சா...இல்லை ஞாபகத்துக்கு வரலியா என்னன்னு தெரியலை. ஆனா பாட்டோட கடைசி வரியை மட்டும் அழுத்தம் திருத்தமா பாடுனான். "கொல்லை பக்கம் போகாத கொட்டி கெடக்கு ஜாங்கிரி" அப்படின்னு. அந்த கடைசி வரியைப் பாடுனப்போ அந்த பையன் ரொம்ப எஞ்சாய் பண்ணி பாடுன மாதிரி இருந்துச்சு. முகமெல்லாம் ஒரே சிரிப்பு. பாட்டோட மத்த வரிகளை எல்லாம் விட்டுட்டு அந்த பையன் இந்த கடைசி வரியை மட்டும் பாடுனதை பாத்த எனக்கும் சிரிப்பு சிரிப்பா வந்துச்சு. வெட்கத்தை விட்டு உண்மையைச் சொல்லனும்னா அந்த பாட்டை டிவில முதல் முறை கேட்டப்பவே அந்த கடைசி வரி மட்டும் தான் என் மனசுல நின்னுச்சு. "அடுத்தவன் கிட்ட இருக்கற நல்லதை எல்லாம் விட்டுடுங்க வேண்டாததை எல்லாம் கத்துக்கிட்டு வந்துருங்க" அப்படின்னு சின்ன வயசுல அம்மா அடிக்கடி திட்டுனதும் ஞாபகம் வந்துச்சு. பள்ளிக்கூட நண்பன் மன்னாரு(பட்டப்பெயர் தான்) கூட, நாங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரி வீணா போற சம்பவம் எதாச்சும் நடந்துச்சுன்னா - உதாரணத்துக்கு ரெண்டு பேரும் பரிட்சையில ஒரே மாதிரி கம்மி மார்க் வாங்குனாலோ, க்ளாஸ்ல பேசி ஒன்னா வெளியே நின்னாலோ ஒரு வாக்கியத்தை அடிக்கடி சொல்லுவான் "டேய் வுடுடா! நாம ரெண்டு பேரும் ஒரே குட்டையில ஊறுன மட்டைங்க. இதை எல்லாம் போய் பெருசா எடுத்துக்கிட்டு"ன்னு. இது காலப்போக்குல "ஒரே குட்டை...ஒரே மட்டை..வுடுடா"ன்னு சுருக்கமா சொன்னாலும் புரிஞ்சுக்கற மாதிரி ஆகிப் போச்சு. வலையுலகத்துலேயும் நான் ஊறுன அதே குட்டையில் ஊறிய சில "எஞ்சோட்டு ஃப்ரெண்டுங்க" இருப்பாங்கங்கிற நம்பிக்கையில ஒரு முழுக்க முழுக்க வேண்டாத சமாச்சாரங்களை உள்ளடக்குன பதிவு. இப்பதிவு ஒரு சாராருக்கு ஒவ்வாமையைத் தரலாம். அப்படி தர்ற பட்சத்தில் இந்தப் பதிவைச் சாய்ஸ்ல விட்டுடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். <br /><br />அப்போ ஆறாவது படிச்சிட்டுருந்தேன்னு நெனைக்கிறேன். வருஷம் அனேகமா 1989ஆ தான் இருக்கனும். அப்போ இந்தியாவின் பிரதம மந்திரியா இருந்த ராஜீவ் காந்தி அப்போதைய சோவியத் யூனியன்ல சுற்றுப்பயணம் மேற்கொள்ளறாரு. அரசு முறை பயணத்தில் அவருக்கு வழங்கப்பட்ட வரவேற்பினை தூர்தர்ஷனில் நேரடியாக ஒளிபரப்பினார்கள். எனக்கு 'live'ஆகப் பார்த்த ஞாபகம் தான். மாஸ்கோவில் அவருக்கு ரஷிய நாட்டின் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு வழங்கப்படுகிறது. எப்படி? ரஷிய நாட்டின் பாரம்பரிய உடை அணிந்த ஒரு இளம்பெண் ஒரு தட்டில் பெரிய கேக் ஒன்றை ஏந்தி ராஜீவை வரவேற்க வருகிறார். பெரிய கேக்கின் நடுவில் ஒரு சிறிய கின்னத்தில் உப்பு வைக்கப்பட்டிருக்கிறது. அந்நாட்டின் பாரம்பரிய வரவேற்பு முறையின் படி, வரவேற்கப்பட்டவர் கேக்கின் ஒரு சிறு துண்டை எடுத்து கின்னத்தில் உள்ள உப்பில் தோய்த்து சாப்பிட வேண்டும். ராஜீவும் அவ்வண்ணமே செய்கிறார். ஆனால் அதற்கு முன்னர் அவர் செய்தது தான் என் கவனத்தைக் கவர்ந்தது - அவர் செய்தது அவ்விளம்பெண்ணின் இதழோடு இதழ் பதித்தது. மறுநாள் வெளிவந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் ராஜீவ் ரஷிய பெண்ணை முத்தமிடும் படம் முதல் பக்கத்தில் வெளியானது. அன்று ஸ்கூலுக்குச் சென்றதும் எஞ்சோட்டு பையன் ஒருத்தன் என்னை பார்த்து கேட்டது "டேய்! நேத்து ராஜீவ் காந்தி எப்படி கிஸ் அடிச்சான் பாத்தியா?" :) இது நாள் வரையிலும் ராஜீவும் மிக்கைல் கோர்பசேவும் அப்பயணத்தின் போது என்ன பேசிக் கொண்டார்கள் என்பதும், அப்பயணத்தின் முக்கியத்துவம் என்னவென்பதும் எனக்குத் தெரியாது. அதெல்லாம் யாருக்கு வேணும்ங்கறீங்களா? அதுவும் சரி தான். நிற்க. பிரபலமாக இருக்கும் நடிகர்கள், அரசியல்வாதிகள் இவர்களை எல்லாம் வயது வித்தியாசம் பார்க்காமல் ஏக வசனத்தில் குறிப்பிடும் பண்பு எப்படி வந்தது என யோசித்துப் பார்க்கிறேன். கம்பனையும், பாரதியையும், இளங்கோவையும், கண்ணனையும் பற்றிப் பேசும் போது சொன்னான், செய்தான், எழுதினான், பாடினான் என்று உரிமையோடு அழைக்கிற அதே நெருக்கம் தான்னு நெனைக்கிறேன் :)<br /><br />நாளமில்லா சுரப்பிகள் ஹார்மோன்களை லிட்டர் லிட்டராக சுரப்பதை நிறுத்தி தினமும் அரை லிட்டர் என்ற வீதத்தில் சுரந்து கொண்டிருந்த பதின்ம வயதுகள் முடிவடையவிருந்த பருவம் அது. கிண்டி பொறியியல் கல்லூரியில் முதலாண்டு படித்துக் கொண்டிருந்தேன். 1995ஆம் ஆண்டில் வெளிவந்த எத்தனை தமிழ் படங்களைத் தியேட்டரில் பார்த்திருப்பேன் என நினைவிலில்லை. ஆனால் 'U' சான்றிதழ் அல்லாத அவ்வாண்டில் வெளிவந்த சில 'பெயர் பெற்ற' படங்களை நானும் எஞ்சோட்டுப் பையன்களும் தியேட்டரில் தவறாது பார்த்துவிடுவோம். அது போல தான் ஒரு பிரபல ஆங்கில 'expletive' ஒன்றைத் தலைப்பாகக் கொண்டு கிரிக்கெட் விளையாட்டின் ஆடுகளத்தை நினைவுபடுத்தும் சென்னை ஆனந்த் தியட்டேரில் அப்போது ஓடிக் கொண்டிருந்த படத்தைப் பார்க்க நானும் எனது கூட்டாளிகள் இருவரும் புதன் கிழமை மதிய க்ளாஸ்களை பங்க் அடித்து விட்டு மதியான சாப்பாட்டை ஏசிடெக் கேண்டீனில் சாப்பிட்டு விட்டு கிளம்பினோம். பெசண்ட் நகரிலிருந்து அயனாவரம் வரை செல்லும் 23C வழித்தடப் பேருந்தில் காந்தி மண்டபம் நிறுத்தத்தில் மூவரும் ஏறினோம். ஷோ ஆரம்பிக்க கொஞ்ச நேரமே இருந்த காரணத்தினால் பேருந்து ஆயிரம் விளக்கு மசூதிக்கு எதிரில் மெதுவாக செல்லும் போதே இறங்கி விட வேண்டும் என்று மூவரும் முடிவு செய்தோம். அப்படி இறங்காவிட்டால் பஸ் டிவிஎஸ் பேருந்து நிறுத்தத்தில் தான் நிற்கும். நீண்ட தூரம் பின்புறம் நடந்து வர வேண்டும். அந்த ப்ளான் பிரகாரம் நான் முதலில் பஸ்சின் கடைசி படிக்கட்டில் நின்று கொண்டிருந்தேன். எனக்கு பின்னாடி என் கூட்டாளிஸ் ரெண்டு பேரும் நின்று கொண்டிருந்தார்கள். ஆனால் எதிர்பார்த்தபடி பஸ் ஆயிரம் விளக்கு எதிரில் ஸ்லோவாகவில்லை. என் பின்னாடி நின்று கொண்டிருந்த ரெண்டு பேரில் ஒருவன் எதிர்பாராத விதமாக என்னை பஸ்சிலிருந்து தள்ளி விட்டு விட்டான். எப்படியோ சேதாரம் இல்லாமல் சிங்கிள் பீஸாகக் கீழே இறங்கிவிட்டேன். என்னுடன் வந்த ரெண்டு பேரும் டிவிஎஸ் வரை பஸ்சிலேயே சென்று விட்டனர். <br /><br />இந்த இடத்தில் கதையின் ஹீரோ...அட நான் தானுங்கோ...சராசரி தமிழ் பட ஹீரோ மாதிரி செயல்படாமல் ஒரு ஹாலிவுட் ஹீரோ மாதிரி வித்தியாசமாக செயல்பட்டேன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அப்படி என்ன பண்ணேன்? பஸ்சுலேருந்து நாம தள்ளி விட்டவன் செத்தானா பொழச்சானான்னு ரெண்டு பேரும் பயந்துக்கிட்டே டிவிஎஸ் பஸ் ஸ்டாப்லேருந்து பின்னோக்கி ஆனந்த் தியேட்டர் வரை வேக வேகமாக நடந்து வந்தார்கள். அப்படி ஓட்டமும் நடையுமாக வந்தவர்களை வரவேற்ற கதையின் ஹீரோ சொன்னது "டேய்! 20 ரூ டிக்கெட் தாண்டா கெடைச்சது. படம் போடப் போறான் சீக்கிரமா வாங்கடா". படத்தின் முதல் பாதியை என்னோடு அமைதியாகப் பார்த்த இருவரும் இடைவேளையின் போது விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினார்கள். "டேய் மாமா! பஸ்சுலேருந்து தள்ளி விட்டுட்டோம்னு நீ எங்க சட்டையைப் புடிப்பேன்னு பயந்துக்கிட்டே வந்தோம். நீ என்னடான்ன டைம் வேஸ்ட் பண்ணாம டிக்கெட் வாங்கி வச்சிட்டு வெயிட் பண்ணிக்கிட்டிருக்கே...அதுவும் பால்கனி டிக்கெட்" என்றார்கள். அப்போ தான் நானும் தெரிஞ்சிக்கிட்டேன் இந்த மாதிரி ஓடற பஸ்சுலேருந்து யாராச்சும் தள்ளி விட்டாங்கன்னா அவங்க சட்டையைப் புடிக்கனும்னுட்டு. ஓடற பஸ்சுலேருந்து ரிஸ்க் எடுத்து பாக்கற அளவுக்குப் படத்துல "ஒன்னும்" இல்லை. ஒரு வேளை பஸ்சுலேருந்து விழுந்து எதாவது ஒன்னு ஆயிருந்துச்சுன்னா மறுநாள் தினத்தந்தில ஹெட்லைன்ஸ் எப்படி வரும்னு யோசிச்சுப் பார்த்தேன் - "கில்பான்சி படம் பார்க்க சென்ற அண்ணா பல்கலைக்கழக மாணவர் 23சி பஸ் ஏறி டிக்கட் வாங்கினார். வர்க் ஷாப் காக்கி சீருடை அணிந்திருந்தார்". கேக்கவே கொஞ்சம் கேவலமா தான் இருக்கில்ல? ஆனா ஒன்னே ஒன்னு சொல்லிக்க ஆசை படறேன். <br /><br />அன்னிக்கு என்கூட பஸ்சுல வந்த ரெண்டு பேருல ஒருத்தன்(அதாவது என்னை புடிச்சித் தள்ளாதவன்) ஒருத்தன் என்ன ஒருத்தன் - அவன் பேரு தியானேசுவரன் - <a href="http://kaipullai.blogspot.com/2006/12/blog-post_23.html">ஷேன் வார்னையும் இளையராஜாவையும்</a> ஒப்பிட்டு பதிவெழுதினானே அவனே தான் - கில்பான்சி படத்திலும் ஒரு நேர்மையையும் ethicsஐயும் எதிர்பார்க்கும் அவனை மாதிரி ஆன ஆளை இது வரைக்கும் நான் பாத்ததேயில்லைங்கங்கோ. நான் சொல்லும் காலகட்டத்தில் பலராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு பழம்பெரும் "விஞ்ஞான் நூலின்" பெயரைக் கொண்டு எடுக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணரின் பக்தையான மலையாள தேசத்தோடு தொடர்புடைய அந்த இயக்குனரின் படம் அவனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. "ஒளிவிளக்கான" இயக்குனரால எடுக்கப்பட்ட "பஞ்சபூதங்களில்" ஒன்றின் பெயரைக் கொண்ட அந்த திரைப்படத்தைப் பார்த்து விட்டு பெரிதும் பாராட்டினான். "மச்சி! ஏண்டா உனக்கு அந்த படம் பிடிக்கலை, இந்த படம் பிடிச்சிருக்குன்னு கேட்டேன்". அதுக்கு அவன் சொன்ன பதில் "என்னடா படம் அது? கேவலமா இருந்துச்சு. அந்த படத்தைப் பார்த்தா எதோ வாழறதே கில்மாவுக்காகத் தாங்கிற மாதிரி இருக்கு. ஆனா இந்த படம் ஃபீலிங்சுக்கு முக்கியத்துவம் குடுக்குது மச்சி. நம்மளை நம்பி வந்தவங்களோட உணர்வுகளைப் புரிஞ்சுக்கலைன்னா என்னாகும்னு நல்லா சொல்லிருக்காங்க. நல்ல படம் அது" அப்படின்னான். பட்...அந்த சின்ன வயசுலேயே அவ்வளவு நீதியோடயும் நியாயத்தோடயும் நேர்மையோடயும் சிந்திச்ச அவனோட அந்த அப்ரோச் எனக்கும் பிடிச்சிருந்தது :)கைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.com27tag:blogger.com,1999:blog-20289353.post-10553830704398819612009-08-12T06:53:00.001+05:302009-08-12T09:46:35.288+05:30ஒரு வித்வானைப் பாத்து கேக்கற கேள்வியாய்யா இது?டிவியில எதோ ஒரு நிகழ்ச்சிக்கு இடையில விளம்பரம் ஒன்னு வந்தது. ஹேப்பிடெண்ட் Happydent சூயிங் கம்முக்கான விளம்பரம் அது. ஹேப்பிடெண்ட் சூயிங் கம் மென்னுட்டு யானையோட தந்தமெல்லாம் பளிச்சுன்னு வெளிச்சம் அடிக்கிற மாதிரி வரும். <br /><br />"அம்மா! பேசாம நம்மளும் இந்த மாதிரி ஒரு யானை வளர்க்கலாமா?"<br /><br />"ஏன்?" - இது மை த மம்மி.<br /><br />"நம்ம வீட்டுக்கு வர்ற வழியெல்லாம் இருட்டா இருக்குல்ல? இந்த மாதிரி யானை இருந்துச்சுன்னா வழியெல்லாம் தந்தத்தால வெளிச்சம் கொடுத்துக்கிட்டே வருமில்ல கார் ஹெட்லைட் மாதிரி?"<br /><br />"யானைக்கு சாப்பாடு?"<br /><br />"அதான் அர்ச்சனாக்கு(என்னோட பொண்ணு) தெனம் மத்தியானம் மம்மம் ஊட்டறீங்கல்ல? அதை தான் அவ முழுசா சாப்பிடாம மிச்சம் வெச்சிடறால்ல? அதை தெனமும் ஒரு வேளை அந்த யானைக்குப் போட்டா அதை சாப்பிட்டுக்கிட்டு தானா ஒரு ஓரமா நம்ம வீட்டுல வளர்ந்துக்கிட்டு போவுது"<br /><br />அந்த நேரம் பாத்து சீன்ல எண்ட்ரி ஆன எங்கப்பா சொன்னது "நாங்க உன்னை அடிக்கிறோமோ இல்லையோ, கண்டிப்பா இந்த மாதிரி ஐடியா கொடுக்கிறதுக்காக யானை வந்து உன்னை பொடறியிலேயே அடிக்கும்"<br /><br />ஒரு வேளை நாம உண்மையிலேயே 'born ahead of time'ஓ? யாருமே நம்மளைப் புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்களே?<br /><br />****************************************************<br /><br />கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸோட மைசூர்பா எல்லாரும் வாங்கி சாப்பிடுங்க. உடம்புக்கு நல்லதோ இல்லையோ...மூளைக்கு ரொம்ப நல்லது. சமீபத்துல எங்க ஆஃபிசு நண்பர் ஒருவர் தன் சொந்த ஊரான கோவைக்குப் போயிட்டு வரும் போது கிருஷ்ணா ஸ்வீட்ஸ்லேருந்து மைசூர்பா வாங்கிட்டு வந்து எல்லாருக்கும் தந்தாரு. <br /><br />நான் அதை அதிகமா கூட சாப்பிடலைங்க. கொஞ்சமா கிள்ளி தான் வாயில போட்டேன். திடீர்னு எனக்கு ஒன்னு தோனுச்சு. பஞ்சதந்திரம் படத்துல நாயர் கேரக்டர்ல வர்ற ஜெயராம் சொல்லுவார்ல - "என் பையனுக்கு ஹார்ட்ல தொளா" அப்படின்னு. அந்த மாதிரி ஹார்ட்ல துளை இருக்கறவங்க, தினமும் நெய், வெண்ணை மற்றும் இதர கொழுப்பு சத்தும் கொலஸ்டராலும் உள்ள உணவுகளையோ இல்ல இனிப்புகளையோ சாப்பிட்டா என்னன்னு?<br /><br />ஏன்னா அதிகக் கொழுப்புச் சத்தும் கொலஸ்டராலும் உள்ள உணவுகளைச் சாப்பிட்டா இதயத்துல அடைப்பு ஏற்படும்ல? ஏற்கனவே இதயத்துல ஓட்டை இருந்துச்சுன்னா இது மாதிரி சாப்பிடறதுனால அது அந்த ஓட்டையைப் போய் அடைச்சிடும்ல?<br /><br />ஓப்பன் ஹார்ட் சர்ஜரி, பை பாஸ் சர்ஜரி இதெல்லாம் பண்ணறதுக்குப் பதிலா மைசூர்பா தெரபி பண்ணலாம் தானே? இந்த கண்டுபிடிப்புக்கு காசு பணம் எல்லாம் வேணாம்ங்க. ஏதோ ஒரு நோபல் பரிசோ, ஒரு பாரத் ரத்னாவோ இல்லை ஒரு ஆஸ்கர் அவார்டோ பாத்து போட்டு குடுத்தா நல்லாருக்கும். <br /><br />****************************************************<br /><br />நேத்து காலையில ஆஃபிசு போறதுக்கு பஸ்சுக்காகத் திருவான்மியூர் டெர்மினஸ் கிட்ட நின்னுக்கிட்டிருந்தேன். ஃபுல் ஷர்ட், ஃபுல் பேண்ட் போட்டு டக் இன் பண்ணிக்கிட்டு, கால்ல பாலிஷ் செஞ்ச ஷூ போட்டுக்கிட்டு காதுல இயர்ஃபோன் மாட்டிக்கிட்டு மொபைல் ஃபோன்ல பாட்டு கேட்டுக்கிட்டு நின்னுக்கிட்டிருந்தேன். போதாக்குறைக்கு முதுகுல லேப்டாப் பேக் வேற மாட்டிருந்தேன். வெள்ளை வேட்டியை மடிச்சி கட்டிக்கிட்டு ஒரு பச்சை கலர் துண்டைக் கழுத்துல போட்டுக்கிட்டு, அவ்வை ஷண்முகி படத்துல ஷண்முகி மாமி சொல்ற மாதிரி காதெல்லாம் குசுகுசுன்னு வெள்ளை முடியோட ஒரு பெரியவர் என்கிட்ட வந்தாரு.<br /><br />பஸ் டெர்மினஸ் பக்கம் கையைக் காட்டி "உள்ள பஸ் இருக்குங்களா தம்பி"னு கேட்டார்.<br /><br />பஸ் டெர்மினஸுக்குள்ள பஸ் இல்லாம எப்படி இருக்கும். இவரு எந்த நம்பர் பஸ்ஸைப் பத்தி கேட்கறாருன்னு நெனச்சிக்கிட்டே என் காதுல மாட்டிருந்த இயர் ஃபோனைக் கழட்டிட்டு கொஞ்சம் குனிஞ்சு கேட்டப்போ தான் அவர் கேட்டது தெளிவா காதுல விழுந்தது "உள்ளுக்குள்ள கக்கூஸ் இருக்குங்களா தம்பி"<br /><br />"உள்ளே போய் கேட்டு பாருங்க" அப்படின்னேன். அதுக்கப்புறம் பஸ் வந்தது, நான் அதுல ஏறி ஆஃபிசு போயிட்டேன். <br /><br />ஆஃபிஸ் முடிஞ்சு நண்பர் ஒருத்தர் தன்னோட கார்ல அடையாறுல டிராப் பண்ணார். கார்ல CDல எதோ பாட்டு ஓடிட்டிருந்தது. அது புடிக்காம எஃப் எம் ரேடியோ வச்சாரு. சூரியன் எஃப் எம்ல புதுசா சினிமா நகைச்சுவை காட்சிகளின் ஒலி வடிவத்தை ஒலிபரப்பறாங்க போல. சொன்னா நம்ப மாட்டீங்க. அவரு ரேடியோ வச்ச நேரம் "என்ன பாத்து ஏண்டா அந்த கேள்வியைக் கேட்டே? இத்தனை பேரு இருக்காங்கல்ல அவங்களை எல்லாம் கேட்டிருக்கலாம்ல? அது ஏண்டா என்னை பாத்து கேட்டே? ஒரு வித்வானைப் பாத்து கேக்கற கேள்வியாய்யா இது"ன்னு செந்திலைக் கவுண்டர் திட்டிக்கிட்டிருந்தாரு. அதை கேட்டுட்டு அப்படியே எனக்கு புல்லரிச்சு போச்சு. <br /><br />****************************************************<br /><br /><a href ="http://kaipullai.blogspot.com/2008/02/blog-post_1202.html">தேசதுரோக கேசுங்கிற</a> சந்தேகத்துல தில்லி போலீஸ் என்னை விசாரிச்சு இன்னையோட சரியா எட்டு வருஷம் முடியுதுங்க. "தேச துரோக கேஸ் அளவுக்கெல்லாம் நான் வர்த் இல்லைய்யா"ன்னு எவ்வளவோ சொல்லியும் நம்ப மறுத்துட்டாங்க. இப்போ பாருங்க அதை பத்தியெல்லாம் பதிவெழுதி பெருமை பட்டுக்க வேண்டியிருக்கு?<br /><br />****************************************************<br /><br />என் தம்பி(எங்க சித்தி பையன்) அவனுக்கும் எனக்கும் 18 வய்சு வித்தியாசம்னு ஏற்கனவே சொல்லிருக்கேன். அவன் ஆரம்பத்துலேருந்து வட இந்தியாவுலேயே செண்ட்ரல் ஸ்கூல்ல படிச்சதுனால அவனுக்குத் தமிழ் அதிகமா தெரியாது. வீட்டுல நல்லா தமிழ் பேசுவான்னாலும் சில செந்தமிழ் வார்த்தைகள் எல்லாம் சொன்னா அவனுக்குப் புரியாது. சில வருஷங்கள் முன்னாடி வரைக்கும் அவனை வலுக்கட்டாயமா உக்கார வச்சி - "டேய்! இப்ப நீயே இருக்குறே...நாளைக்கே நீ படிச்சி வளர்ந்து பெரியவனாகி நம்ம நாட்டோட பிரதம மந்திரியாவோ, முதல் குடிமகனாவோ ஆயிட்டேன்னு வை, அப்போ நம்மளோட சமூகத்துல மலிந்து கிடக்கிற கொடுமைகளையும் மூட பழக்க வழக்கங்களையும் போக்குறதுக்காகவும், மத நல்லிணக்கம் ஏற்படறதுக்காகவும் நீ என்ன பண்ண போறே"ன்னு கேப்பேன். அவனும் "மத நல்லிணக்கம்னா என்னண்ணா?" அப்படின்னுவான். நானும் எதோ எனக்கு தெரிஞ்ச அளவுக்கு லைட்டா விளக்கம் கொடுப்பேன். அவனும் யோசிச்சு பாத்துட்டு "தெரியலியேண்ணா" அப்படின்னுவான். "ஒரு இந்திய நாட்டு பிரஜையா இருந்துக்கிட்டு உன்னை வளர்த்து ஆளாக்குன சமுதாயத்துக்காக ஒன்னும் செய்யாம தெரியலியேன்னு பதில் சொல்றியே. தெரியலியேங்கிறதெல்லாம் ஒரு பதிலாடா"ன்னுவேன். <br /><br />நான் இந்த மாதிரி அவனை பாக்கறப்பெல்லாம் கேக்க ஆரம்பிச்சதை பாத்து கொஞ்ச நாள்ல அவனும் உஷாராயிட்டான். நான் "இப்ப நீயே இருக்கறே" அப்படின்னு ஆரம்பிச்சாலே "அண்ணா அம்மா கூப்பிடறாங்க, தண்ணி தாகம் எடுக்குது" அப்படின்னுட்டு ஓடிடுவான். ஓட முடியாத படி இக்கட்டான சூழ்நிலையில மாட்டிக்கிட்டான்னா "ஏழைகளுக்கு உதவி செய்வேன்" அப்படின்னுவான். "என்ன உதவிடா"ன்னு நானும் குடைஞ்சா "வயசான பாட்டிகளுக்கெல்லாம் இலவசமா கண்ணாடி வாங்கி தருவேன், ஸ்கூல்ல படிக்கிற பசங்களுக்கெல்லாம் இலவசமா புக்ஸ் வாங்கி தருவேன்" அப்படின்னு எதாச்சும் சொல்லிட்டு ஓடிடுவான்.<br /><br />சமீபத்துல ஒரு நாள் பஸ்சுல ஜன்னலோர சீட்டுல அவன் உக்காந்துருந்தான், அவன் பக்கத்துல நான். தப்பிச்சு ஓட முடியாத படி என் கஸ்டடிக்குள்ள இருந்தான். மேலே கேட்ட மாதிரியே ஒரு கேள்வி கேட்டேன். "அண்ணா! ஏற்கனவே மெட்ராஸ்ல வெயில் ரொம்ப அதிகமா இருக்குது. நீங்க வேற வறுத்தெடுக்காதீங்க" அப்படின்னான். <br /><br />இந்த காலத்து பசங்க எவ்வளவு சீக்கிரம் பெரியவங்களாயிடுறாங்க? இல்லீங்களா? :)<br /><br />****************************************************<br /><br />ஆறு வருஷ கொடுமைக்கு கடைசியா ஒரு நல்ல விடிவுகாலம் கெடைக்கப் போவுதுன்னு நெனக்கிறேன். கன்னியாஸ்திரி வேடத்துல இருக்கற அபி ஆதியைப் பாத்து "டேய்! இது வரைக்கும் நான் உன் கிட்ட சண்டை கூட போட்டதில்லைடா. நான் செஞ்சதெல்லாம் தற்காப்பு தான். இனி நடக்கப் போறது தான் போர்" அப்படீங்கறாங்க. உடனே ஆதியும் "இறுதிக்கட்ட போரா"ன்னு கேக்கறாரு. அபியும் "ஆமாம்டா இறுதிக் கட்ட போர்"னு கன்ஃபர்ம் பண்ணியிருக்காங்க. ஒரு மூனு மாசத்துக்கு முன்னாடியே கோலங்கள் இயக்குனர் திருச்செல்வத்துக்கு சினிமா இயக்கற வாய்ப்பு கெடைக்கிருக்குன்னு குங்குமம் பத்திரிகைல போட்டுருந்துச்சு. அதனால சீக்கிரமே கோலங்கள் சீரியலை முடிக்கப் போறதாவும் சொல்லிருந்தாங்க. இதை உண்மைன்னு நம்பி கோலங்களால் பாதிக்கப்பட்ட என்னை போன்ற இன்னொரு அலுவலக நண்பர் கிட்ட இந்த விஷயத்தைச் சொன்னேன். அவரும் சந்தோஷமா இந்த விஷயத்தைப் போய் வீட்டுல சொல்லி வாங்கி கட்டிக்கிட்டாராம். இப்போ அபியும் ஆதியுமே கன்ஃபர்ம் பண்ணிட்டாங்க...இறுதிக் கட்ட போர்னு. எப்படியும் இன்னும் ஒரு வருஷத்துல இறுதிக் கட்ட போர் முடிஞ்சிடாதுங்க?<br /><br />****************************************************கைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.com31tag:blogger.com,1999:blog-20289353.post-86730065423091409482009-07-18T19:54:00.000+05:302009-07-18T19:58:46.728+05:30இதையெல்லாம் சொன்னா எனக்கு கிறுக்கு புடிச்சுருக்கும்பாங்கநான் கூட ஒரு ஸ்லம்டாக் மில்லியனேர் தாங்க. உனக்கு எந்த போட்டியில ஒரு கோடி ரூபாய் கெடைச்சுதுன்னெல்லாம் கேக்கப்பிடாது. அந்த படத்துல கதாநாயகனைக் கேக்கற கேள்விகளுக்கும் அவன் வாழ்வில் நிகழ்ந்த ஏதோ ஒரு சம்பவத்துக்கும் தொடர்பிருப்பதாக இருக்கும். அதனால அக்கேள்விகளுக்கு அவன் சரியான பதில் சொல்வான். ஹாட் சீட்ல உக்கார வைச்சு யாரும் என்னை கேள்வி எல்லாம் கேக்கலைன்னாலும், எனக்கு நியாபகத்துல இருக்கற சில பல பிஸ்கோத்து விஷயங்களுக்கும், நான் என் வாழ்வில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்ட கேட்ட சில நிகழ்வுகளுக்கும் தொடர்பு இருக்கிறது. அப்படிப்பட்ட பிஸ்கோத்து விஷயங்கள் எனக்கு இன்னமும் நியாபகம் இருக்கக் காரணமாக இருந்த அந்நிகழ்வுகளை நினைவு கூறும் ஈக்வலி பிஸ்கோத்துத் தனமான பதிவு இது. <br /><br />1. 2004ஆம் ஆண்டில் ஒரு நாள்னு நினைக்கிறேன். அப்போ நான் டெல்லியில இருந்தேன். ஞாயித்துக்கிழமை காலை டிபன் சாப்பிட்டுட்டு டிவி போட்டா சன் டிவில சப்தஸ்வரங்கள் ஓடிக்கிட்டிருக்கு. அந்த நிகழ்ச்சியில ஒரு பொண்ணு பாடிக்கிட்டு இருந்துச்சு. அதை பாத்ததும் எனக்கு ஆச்சரியம். அந்த பொண்ணோட முகம் ரொம்ப பரிச்சயமா இருந்துச்சு. சின்ன வயசுல எங்கேயோ பாத்துருக்கோமேன்னு நெனச்சிட்டு இருக்கும் போதே அந்த பொண்ணோட பேரும் சட்டுன்னு நியாபகம் வந்துடுச்சு. அப்படியே கொசுவத்தியை ஒரு பதினைஞ்சு வருஷம் பின்நோக்கி சுத்துனேன். அப்போ நாங்க சென்னையில் திருவல்லிக்கேணியில் வாழ்ந்துட்டு இருந்தோம். பள்ளிக்கூடம் முடிஞ்சதும் மாலை வேளைகளில் அக்பர் சாகிப் தெருவில் மசூதிக்கு எதிரில் இருந்த திருவல்லிக்கேணி ஹிந்தி வித்யாலயாவில் ஹிந்தி வகுப்புகளுக்குப் போயிக்கிட்டிருந்தேன். அந்த வகுப்புகள்ல தான் அந்த பொண்ணும் ஹிந்தி படிச்சுது. நான் அப்போ ஏழாவது படிச்சிட்டு இருந்தேன். அந்த பொண்ணு அப்போ அஞ்சாவது படிச்சிட்டுருக்கும்னு நெனக்கிறேன். ஆனா அந்த பொண்ணோட பேரும் முகமும் நியாபகம் இருந்ததுக்குக் காரணம் 'ராஷ்ட்ரபாஷா' வகுப்பில் ரெண்டு பேரும் ஒன்னா படிச்சோம்ங்கிறது இல்லை. அங்கே சுந்தர்ராஜன் சார் சுந்தர்ராஜன் சார்னு ஒரு மாஸ்டர் இருந்தார். அரசாங்கப் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டு மாலை வேளைகளில் ஹிந்தி வகுப்பு எடுக்கிறதுக்காகத் தினமும் கே.கே.நகர்லேருந்து திருவல்லிக்கேணி வருவார். அவரை மாதிரி ஒரு பர்ஃபெக்ஷனிஸ்டைப் பாக்க முடியாது. தான் எடுக்கிற வகுப்புகளுக்கான நோட்ஸை ரொம்ப சிரத்தை எடுத்து எழுதி வச்சிருப்பாரு. ஒவ்வொரு பாடத்துக்கும் ஒவ்வொரு நம்பர் கொடுத்து மாணவர்களுக்கு அந்த நோட்ஸை விநியோகம் பண்ணறதுக்குன்னு ஒரு சிஸ்டம் வச்சிருப்பாரு. <br /><br />ஹிந்தி வகுப்புகளை மிஸ் பண்ணாம எல்லா நோட்ஸ்களையும் ஒழுங்கா எழுதி வச்சிருந்தேன். ஒரு நாள் நான் மேல சொன்ன அந்த பொண்ணு என்கிட்ட வந்து "போன ரெண்டு வாரமா எனக்கு ஃபீவர். அதனால நான் க்ளாஸுக்கு வரலை. உங்க நோட்ஸை வீட்டுக்குத் தந்தீங்கன்னா எழுதிட்டுத் தரேன்"னு சொல்லி வாங்கிக்கிட்டு போச்சு. நான் எழுதி வச்சிருந்த அந்த நோட்டு புத்தகத்தை வாங்கிட்டுப் போன அந்த பொண்ணு அதுக்கப்புறம் ஒரு ரெண்டு வாரத்துக்கு க்ளாஸுக்கு வரலை. மாஸ்டர் ஒவ்வொரு க்ளாஸ்லயும் கொடுக்கற நோட்ஸை என்னால எழுத முடியலை. சில பாடங்களை நான் வேற நோட்ல எழுதி வைக்க வேண்டியதாப் போச்சு. அதுக்கு மேல நான் கொடுத்த் என் நோட்புக்குக்கு என்னாச்சோங்கிற கவலை வந்துடுச்சு. சரின்னுட்டு மாஸ்டர் கிட்ட அந்த பொண்ணோட வீட்டு விலாசத்தை வாங்கிக்கிட்டு அவங்க வீட்டுக்கே போய் கேக்கலாம்னு முடிவு பண்ணேன். அவங்க வீடும் திருவல்லிக்கேணியில் பெரிய தெருவுல தான் இருந்துச்சு. பக்கத்துல தானே இருக்குன்னு க்ளாஸ் ஆரம்பிக்கிறதுக்கு ஒரு கால் மணி நேரத்துக்கு முன்னாடி அவங்க வீட்டுக்குப் போனேன். மணி ஒரு அஞ்சே முக்கால் இருக்கும். அவங்க வீட்டுல அவங்க அப்பா தான் இருந்தார். நான் அவங்க வீட்டுக்கு வந்த காரணத்தைச் சொன்னேன். "She is sleeping. You please wait. I will call her" அப்படின்னாரு. அப்புறம் "Come on my Child, some one has come to see you" அப்படின்னு தன் மகளைக் கூப்பிட்டாரு. <br /><br />இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல்ல இங்கிலீஷ் பேசச் சொன்னாலே நானெல்லாம் பேசுனதில்லை. வீட்டுல கூட இங்கிலீஷ் பேசறவங்க இருக்காங்கன்னு நான் கேள்வி பட்டுருக்கேன். ஆனா அப்போ தான் முதன்முறையா பார்த்தேன். அதோட அப்பல்லாம் மதியானம் தூங்கற பழக்கம் எனக்கு கிடையாது. தூங்கவும் எங்க வீட்டுல விட மாட்டாங்க. "விளக்கு வைக்கிற நேரத்துல கை கால் கழுவிட்டு சாமி கும்பிட்டுட்டு படிக்க ஒக்காந்துடணும்" இது எங்கம்மா தடிப்பசங்க எங்க ரெண்டு பேருக்கும் போட்ட ரூல். கிட்டத்தட்ட ஆறு மணி ஆகுது, ஹிந்தி க்ளாசுக்கு வேற நேரம் ஆகுது, தூங்கிட்டுருக்கற பொண்ணை அவங்க அப்பா இப்படி கொஞ்சி கொஞ்சி கூப்பிடறாரேன்னு எனக்கு ஒரே ஆச்சரியம். அவங்க அப்பா கூப்பிட்டதும் கண்ணைக் கசக்கிட்டே அந்த பொண்ணு ஷிம்மீஸோட கீழே இறங்கி வந்துச்சு. இங்கே ஒரு கிளை கதை சுத்திக்கறேன். இந்த ஷிம்மீஸ் பத்தியெல்லாம் உனக்கு எப்படி தெரியும்னு நீங்க கேக்கறது எனக்கு புரியுது. சின்ன வயசுல வீட்டுக்குப் பக்கத்துல இருக்கற பொண்ணுங்க யாராச்சும் வீட்டுக்கு வந்தா எங்கம்மா "போம்மா! போய் கவுன் மாட்டிக்கிட்டு வா. ஷிம்மீஸோடயா வெளியில வர்றது"ன்னு கேப்பாங்க. பனியனோட நாங்க வெளியில போனாலும் எங்க ரெண்டு பேருக்கும் திட்டு தான். ஸோ அப்போ தான் தெரியும் வெள்ளை கலர்ல இருக்கற அந்த கவுன் பேரு தான் ஷிம்மீஸ்னு. இங்கே இன்னொரு கிளை கதை சுத்திக்கிறேன். சமீபத்துல ஒரு நாள் எனக்கு ஒரு சந்தேகம். இந்த ஷிம்மீஸ்ங்கிற வார்த்தைக்கு ஸ்பெல்லிங் என்னன்னு. அது ஆங்கில வார்த்தையா தமிழ் வார்த்தையான்னு ஒரு சந்தேகம். எல்லாம் ஒரு பொது அறிவு சந்தேகம் தான் :) <br /><br />Shimmy, Shimmies அப்படின்னு போட்டு கூகிள்ல தேடுனா ரிசல்டுகள் வந்தது. அப்போ முதலை படம் போட்ட நான் வச்சிருந்த லெக்காஸ்ட்(Lacoste) டி-ஷர்ட் பத்தியும் நினைவு வந்துச்சு. அந்த சட்டையில 'La Chemise Lacoste' அப்படின்னு எழுதிருக்கும். நான் அதை பல நாள் 'லா கெமிஸ் லெக்காஸ்ட்'னு தான் படிச்சிருக்கேன். ஆனா பிரெஞ்சு மொழியில 'Che' னு ஆரம்பிச்சா அதை 'ஷே'னு படிக்கனும்னு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் செவாலியே விருது வாங்கனப்போ தெரிஞ்சுக்கிட்டேன். Chemise அப்படிங்கறதை 'ஷெமிஸ்' னு படிக்கலாம்னு தோனுச்சு. ஷெமிஸ்னா என்னான்னு www.dictionary.comல தேடியதும் "A woman's loose fitting shirt like undergarment'னும் பழைய ஃபிரெஞ்சு மொழியில் "Shirt" அப்படின்னும் தெரிஞ்சது. அநேகமா Shimmy, Shimmies சொற்களுக்கு Chemise என்ற ஃபிரெஞ்சு சொல் மூலமா இருந்துருக்கலாம் போலிருக்கு. திரும்பவும் இப்போ மெயின் கதைக்கு வருவோம். அதுக்கப்புறம் என்னோட நோட் புத்தகத்தை வாங்கிக்கிட்டு நான் வந்துட்டேன். அப்புறம் இன்னொரு விஷயம் நான் IITல படிச்சிட்டு இருந்தப்போ என் பேரைப் போட்டு கூகிள்ல தேடுனா முதல் பத்து பக்கங்கள்ல ஐஐடி வலைதளத்தில் என் பேரு வரும். அதே நெனப்புல...சரி இந்த பொண்ணு சப்தஸ்வரங்கள்ல எல்லாம் பாடிருக்கே ஒரு வேளை பிரபலம் ஆகிடுச்சோன்னு ஒரு நாள் கூகிள்ல தேடுனேன். மறுபடியும் ஒரு பொது அறிவுக்காகத் தான்:) பாத்தா விஜய் ஆண்டனி இசையில் சுக்ரன் படத்தில் அந்த பொண்ணோட அதே பேரு அதே இனிஷியல் உள்ள ஒருத்தங்க "உச்சி முதல் பாதம் வரை" அப்படின்னு ஒரு பாட்டு பாடிருக்காங்க. அநேகமா ரெண்டு பேரும் ஒன்னாத் தான் இருப்பாங்கன்னு நெனக்கிறேன். <br /><br />http://www.thenisai.com/tamil/songs-music/sukran-tamil-songs.htm<br /><br />2. காதலன் படத்துல 'ஊர்வசி ஊர்வசி' பாட்டுல பிரபு தேவா அண்ணா மேம்பாலத்துல ஒரு பஸ் மேலே ஏறி ஆடிக்கிட்டு வருவாரு பாத்துருக்கீங்களா? சென்னையில் ஓடற பேருந்துகள்ல ஒவ்வொரு பேருந்துக்கும் சைடுல அந்த பேருந்தோட டிப்போ எண் எழுதிருக்கும். பிரபு தேவா ஆடிக்கிட்டு வந்த அந்த பஸ்ஸோட டிப்போ எண் 'BF505'. அடுத்த வாட்டி ஊர்வசி ஊர்வசி பாட்டு பாத்தீங்கன்னா கவனிச்சு பாருங்க. அந்த பேருந்து அப்போல்லாம் பட்டிணப்பாக்கத்துலேருந்து சுங்கச்சாவடி போற 'C6' என்ற வழித்தடத்தில் ஓடிக்கிட்டு இருந்துச்சு. இப்போ அந்த வழித்தடமே இல்லை. பிற்காலத்துல A, B, Cஅப்படின்னு டிப்போ பேரைக் குறிக்கிறதுக்காகப் பயன்படுத்தப் பட்ட எழுத்துகள் ரெண்டெழுத்துகளா மாத்தப் பட்டது. அதன்படி அடையார் டிப்போவைச் சேர்ந்த அந்த பஸ் 'ADF505'ஆக மாற்றப்பட்டது. இது எல்லாம் நியாபகம் இருக்கறதுக்குக் காரணம் நான் ஒரு நாள் ஸ்கூல் முடிச்சிட்டு மயிலை இராதாகிருஷ்ணன் சாலையிலிருக்கும் எல்லோ பேஜஸ் பேருந்து நிறுத்ததில் இருந்து திருவல்லிக்கேணி பெரிய தெரு வர்றதுக்கு 45B வழித்தடம் கொண்ட பஸ்ஸில் நின்னுக்கிட்டு வந்துட்டு இருந்தேன். எங்க பஸ்ஸுக்கு முன்னாடி சைக்கிளில் ஒரு முஸ்லிம் பெரியவர் போய்க்கிட்டிருந்தார். அவரு ராணி மேரி கல்லூரி கிட்டே இடது பக்கம் கடற்கரை சாலையில் திரும்பினார். அப்போ கடற்கரை சாலையில் வானொலி நிலையம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து புறப்பட்டு C6 வழித்தடத்தில் அந்த BF505 டிப்போ எண் கொண்ட பேருந்து வேகமாக வந்தது. சைக்கிளில் போய்க்கிட்டிருந்த அந்த பெரியவரைப் பின்னாளில் இருந்து அந்த பஸ் இடித்தது. இதை நான் 45B பஸ்ஸில் நின்னுக்கிட்டு பாத்துட்டு இருந்தேன். இதெல்லாம் ஏன் நியாபகம் இருக்கு? இதனால யாருக்கு என்ன பயன்னு தெரியலை. ஆனா இந்த மாதிரி டிரிவியா(trivia) விஷயங்கள் மனசுல நல்லா நிக்குது அது ஏன்னு தெரியலை. <br /><br />3. இன்னொரு விநோதமான பழக்கம் ஒன்னு எனக்கு இருக்கு. யாரையாச்சும் ஒருத்தங்களைப் பாத்தா இவங்க இந்த பிரபலம் மாதிரி இருக்காங்களே, இல்லை ஏற்கனவே பாத்த இன்னொருத்தர் மாதிரி இருக்காங்களேன்னு தோனும். இது மாதிரி தான் நிஜ வாழ்க்கையில் கிழக்கே போகும் ரயில் ராதிகா, டிங்கிள் சிறுவர் புத்தகத்தில் வரும் சுப்பாண்டி, லிட்டில் மெர்மேய்டு இவங்களை எல்லாம் பாத்துருக்கேன்:) 2000 ஆண்டுல ஒரு நாள், அப்போ நான் சம்மர் ப்ராஜெக்ட் செஞ்சிக்கிட்டு இருந்தேன். தில்லி கரோல் பாக்ல இருக்கற ஒரு அலுவலகத்துக்குத் தான் தினமும் போவேன். அங்கே ஒரு சர்தார்ஜி ஒருத்தர் வந்திருந்தாரு. அவரு நான் அந்த ப்ராஜெக்ட் செய்திட்டு இருந்த அந்த கம்பெனியோட வாடிக்கையாளர். அவரைப் பாத்ததும் இவரை எங்கேயோ பாத்துருக்கேன்னு தோனுச்சு. ரொம்ப யோசிச்சிப் பாத்ததுல எங்களுக்கு "Structural Engineering" வகுப்பு எடுத்த எங்க பேராசிரியர்மாதிரியே இருந்தாரு அந்த கறுப்பு சர்தார்ஜி :) இதே மாதிரி நான் இந்தூர்ல இருக்கும் போது தனசேகர்னு ஒரு பையன் என் கூட ஆஃபிசுக்கு பஸ்ல வருவான். பஸ்ல வரும் போது தான் அவனோட பழக்கம். தமிழ் பையன். ஆனா எங்க கம்பெனிக்கு கன்சல்டண்டா சென்னையிலிருந்து வந்துருந்தாப்பல. 2006 வரைக்கும் டச்ல இருந்தோம். அதுக்கப்புறம் டச் விட்டுப் போச்சு. சமீபத்துல திடீர்னு ஒரு நாள் என் சென்னை நம்பருக்கு ஃபோன் பண்ணான். எனக்கு பயங்கர ஆச்சரியம். ஏன்னா நான் அந்த இடைப்பட்ட காலத்துல சித்தூர்கட், அகமதாபாத், பெங்களூர்னு பல இடங்களில் இருந்தேன். ஆனா அதை எல்லாம் மீறி சரியா என்னை என் சென்னை நம்பர்ல புடிச்சான். 'நான் தனசேகர் பேசறேன்'ன்னு சொன்னதும் எனக்கு சட்டுன்னு யாருன்னு புரியலை. மேலே முதல் வரியில இருக்கற டெக்னாலஜியை உபயோகிச்சப்புறம் தான் நினைவு வந்தது - அந்த பையன் யாருன்னு. அந்த பையனோட நான் தொடர்பு படுத்தி வச்சிருந்த முகம் பழைய நடிகை சுமித்ராவோடது. அச்சு அசலா சுமித்ராவுக்கு மீசை வச்ச மாதிரியே இருப்பான். சிரிச்சான்னா சுமித்ரா மாதிரியே கன்னத்துல குழி விழும். "ஏய்! சுமித்ரா எப்படிப்பா இருக்கறே"ன்னு நான் கேட்டதும் "அட கடவுளே! இன்னும் நீங்க அந்த பேரை மறக்கலியா"அப்படின்னான். உங்கள்ல யாருக்காச்சும் இந்த மாதிரி தோணியிருக்கா? <br /><br />4. இது என்னோட இருநூறாவது பதிவு. நூறாவது பதிவு போட்டது 2006ல. முதல் நூறு போட ஆறு மாசம், அடுத்த நூறு போட மூனு வருஷம். இதையெல்லாம் சொன்னா எனக்கு கிறுக்கு புடிச்சுருக்கும்பாங்களோ?கைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.com42tag:blogger.com,1999:blog-20289353.post-86109903980747107022009-07-09T19:09:00.003+05:302009-07-10T14:11:13.667+05:30Indian Short Stories : The Postmasterஒன்னு கவனிச்சிருக்கீங்களா? நம்ம பக்கத்துல இருக்கற சில விஷயங்களோட அருமை, நாம அதுக்குப் பக்கத்துல இருக்கறப்ப புரியறதில்லை. அந்த விஷயம் நம்மை விட்டு தூரம் போகும் போதோ இல்லை நாம தூரம் போயிடும் போதோ தான் அதோட அருமை புரியுது. இது ஒன்னும் பெரிய கண்டுபிடிப்பெல்லாம் இல்லை, எல்லாருக்கும் தெரிஞ்ச சாதாரணமான மேட்டர் தான். சின்ன வயசுல நூலகத்துலேருந்து எடுத்துட்டு வந்து புத்தகங்கள் படிப்பேன் - பெரும்பாலும் காமிக்ஸ், கதை புத்தகங்கள் தான். அதுவும் வெளிநாட்டு எழுத்தாளர்கள் எழுதுன ஆங்கில கதைகள் தான். அப்புறமா எப்பவோ எப்படியோ ஆர்.கே.நாராயணன் பத்தித் தெரிஞ்சிக்கிட்டேன். அதுக்கப்புறம் அவர் என்னை வெளிநாட்டு எழுத்தாளர்கள் பக்கம் போக விடலை. கதைகள் படிக்கிறதுலயும் சிறுகதைகள்னா எனக்கு ரொம்ப பிடிக்கும், தொடர்கதைகள்/நாவல்களில் அவ்வளவா விருப்பம் இருந்ததில்லை. லேண்ட்மார்க், ஒடிசி போன்ற பெரிய புத்தகக் கடைகளுக்குப் போனோம்னா 'Indian Writing' அப்படின்னே ஒரு தனிப் பகுதி இருக்கும். அப்படியே கதைகள் படிக்கனும்னா 'Indian Writing' பகுதியில் இருக்கும் இந்திய எழுத்தாளர்களால் எழுதப்பட்ட கதைகளைத் தான் நான் விரும்பிப் படிக்கிறது. ஏன்னா இந்த கதைகள்ல இருக்கற கதாபாத்திரங்களோடவும், காட்சிகளோடவும் நம்மை நாமே தொடர்பு படுத்திப் பாத்துக்க முடியும். <br /><br />எனக்கு ரொம்ப பிடிச்ச கதைகள்ல ஒன்னு இரவீந்திரநாத் தாகூர் அவர்களால் வங்காள மொழியில் எழுதப்பட்டு, ஆங்கிலேயர் ஒருவரால் மொழிபெயர்க்கப் பட்ட "The Postmaster" என்ற கதை. ஆங்கில கதை தான்னாலும் எல்லாரும் ரசிக்கனும்ங்கிறதுக்காக நான் என் தமிழ் வலைப்பூவில் இதை போடறேன். இந்த கதை மெட்ரிகுலேஷன் பாடத் திட்டத்தில்(நான் படிச்ச காலத்தில்), எட்டாம் வகுப்பு ஆங்கில புத்தகத்தில் ஒரு பாடமாக இருந்தது. அப்போ அந்த கதை என் மனசைத் தொட்ட மாதிரி எனக்கு தோனலை. ஆனா ஏனோ எனக்கு நினைவில் இருந்து, பல வருடங்கள் கழித்து அந்த கதையின் அருமை புரிந்து, அந்த ஒரு கதைக்காக இரவீந்திரநாத் தாகூர் அவர்களின் கதைத் தொகுப்பையே வாங்க வைத்தது. <br />கதை என்னன்னு சுருக்கமாச் சொல்லிடறேன். கல்கத்தாவிலிருந்து உலாப்பூர் எனும் சின்னஞ்சிறு கிராமத்துக்கு போஸ்ட் மாஸ்டராக மாற்றம் பெற்று வருகிறார் கதையின் நாயகனான போஸ்ட்மாஸ்டர். சிறிய கிராமம் என்பதால் அங்கே அவருக்கு அவ்வளவா வேலையில்லை, அதோட அவருக்கு அந்த இடம் பிடிக்கவும் இல்லை. அந்த கிராமத்தில் ரத்தன் என்ற பேருடைய ஒரு பதின்மூன்று வயது மதிக்கத் தக்க பெண் இருந்தாள். யாருமில்லா அனாதை பெண் அவள். போஸ்ட்மாஸ்டருக்கு எடுபிடியாக சில வேலைகள் செய்து கொண்டு தபால் அலுவலகம் அருகேயே வசித்து வந்தாள். அது வரை தான் யாரிடமிருந்தும் கண்டிராத அக்கறையை போஸ்ட்மாஸ்டர் தன் மீது செலுத்தக் கண்டு அவர் மீது மிகுந்த மரியாதை கொள்கிறாள். போஸ்ட்மாஸ்டர் அவருக்கு எழுதப் படிக்கக் கற்றுத் தருகிறார். திடீரென போஸ்ட்மாஸ்டருக்கு உடம்பு சரியில்லாமல் போகிறது. ஒரு தாயாய், தங்கையாய் கூடவே இருந்து அவரை குணப்படுத்துகிறாள் ரத்தன். உடம்பு சரியானதும் அவ்வூரில் இருந்து மாற்றம் வேண்டி மேலிடத்துக்கு விண்ணப்பிக்கிறார் போஸ்ட்மாஸ்டர். அவருடைய விண்ணப்பத்தை மேலிடம் நிராகரித்த காரணத்தினால், தன் வேலையை ராஜினாமா செய்து விட்டு கல்கத்தாவுக்குத் திரும்ப உத்தேசிக்கிறார். அப்போது தன்னையும் அவருடன் கூட்டிச் செல்லுமாறு அந்த சின்ன பெண் வேண்டுகிறாள். 'அது எப்படி முடியும்' என்று கேட்டுவிட்டு போஸ்ட்மாஸ்டர் சென்று விடுகிறார். கதை சுருக்கத்தை எழுதும் போதே உணர்ச்சிகள் மேலிடுகிறது. அதனால் ஆங்கிலத்தில் கதையைப் படிச்சிப் பாருங்க. எனக்கு தோன்றியதை அங்கங்கே சொல்லுகிறேன். <br /><br />For his first job, the postmaster came to the village of Ulapur. It was a very humble village. There was an indigo-factory near by, and the British manager had with much effort established a new post office. <br /><br />The postmaster was a Calcutta boy - he was a fish out of water in a village like this. His office was in a dark thatched hut; there was a pond next to it, scummed over with weeds, and jungle all around. The indigo agents and employees had hardly- any spare time, and were not suitable company for an educated man. Or rather, his Calcutta background made him a bad mixer - in an unfamiliar place he was either arrogant or ill-at-ease. So there was not much contact between him and the residents in the area. <br /><br />But he had very little work to. do. Sometimes he tried to write poems. The bliss of spending one's life watching the leaves trembling in the trees or the clouds in the sky - that was what the poems expressed. God knew, however, that if a genie out of an Arab tale had come and cut down all the leafy trees overnight, made a road, and blocked out the sky with rows of tall buildings, this half-dead, well-bred young man would have come alive again. <br /><br />The postmaster's salary was meagre. He had to cook for himself, and an orphaned village-girl did housework for him in return for a little food. Her name was Ratan, and she was about twelve or thirteen. It seemed unlikely that she would get married. In the evenings, when smoke curled up from the village cowsheds, crickets sounded in the bushes, and a band of intoxicated Baul singers in the next village sang raucously to the clapping of their hands, the postmaster would sit on his dark veranda and let his poetic feelings be stirred by the stirring of the leaves. Then he would go inside, light a dim lamp in a corner of the room and call for Ratan. Ratan would be waiting at the door for this, but she did not come at the first call - she would call back, 'What is it, Dadababu, what do you want?' <br /><br />'What are you doing?' the postmaster would say. <br /><br />'I must go and light the stove in the kitchen <br /><br />'You can do your kitchen work later. Get my hookah ready for me.' <br /><br />Soon Ratan came in, puffing out her cheeks as she blew on the bowl of the hookah. Taking it from her, the postmaster would say abruptly, 'So, Ratan, what do you remember about your mother?' She would talk for a long time: some things she remembered, others she did not. Her father loved her more -than her mother did, but she did not remember much about him. He used to come home in the evening after working hard all day, and one or two evenings were clearly etched in her memory. As she talked, Ratan edged nearer to the postmaster, and would end up sitting on the ground at his feet. She remembered her little brother: one distant day, during the rainy season, they had stood on the edge of a flooded pit and played at catching fish with sticks broken off trees - this memory was far more vividly fixed in her mind than many more important things. Sometimes these conversations went on late into the night, and the postmaster then felt too sleepy to cook. There would be some vegetable curry left over from midday, and Ratan would quickly light the stove and heat some chapati: they made their supper out of that. <br /><br />Occasionally, sitting on a low wooden office-stool in a corner of his large hut, the postmaster would speak of his family - his younger brother, mother and elder sister - all those for whom his heart ached, alone and exiled as he was. He told this illiterate young girl things which were often in his mind but which he would never have dreamt of divulging to the indigo employees and it seemed quite natural to do so. Eventually Ratan referred to the postmaster's family - his mother, sister and brother - as if they were old friends. She even formed affectionate imaginary pictures of them in her mind. <br /><br />பல இடங்களிலும் இக்கதையை நம்மோடு தொடர்பு படுத்திக் கொள்ள முடிகிறது. மேலே உள்ள பத்தியும் அத்தகையது தான். நமக்கு தெரிந்தவர்கள் தம்முடைய உறவினர்களைப் பற்றி நம்மிடம் சொல்லும் போது, அவர்களைப் பற்றிய ஒரு உருவகத்தை மனதில் வைத்துக் கொள்வோம். "எங்க சித்தின்னா எனக்கு உயிர்" என்று நம் நண்பன் நம்மிடம் சொன்னால். ஒரு கனிவான பெண்ணின் முகம் நம் மனதில் உருவகப் படுத்திப் பார்ப்பதை நம்மால் தடுக்க முடியாது. போஸ்ட்மாஸ்டரின் குடும்பத்தைப் பற்றிய உருவகங்களையும் தன் மனதில் உருவாக்கிக் கொள்கிறாள் ரத்தன். <br /><br />It was a fine afternoon in the rainy season. The breeze was softly humid; there was a smell of sunshine on wet grass and leaves. Earth's breath - hot with fatigue - seemed to brush against the skin. A persistent bird cried out monotonously somewhere, making repeated and pathetic appeals at Nature's midday durbar. The postmaster had hardly any work: truly the only things to look at were the smooth, shiny, rain-washed leaves quivering, the layers of sun-whitened, broken-up clouds left over from the rain. He watched, and felt how it would be to have a close companion here, a human object for the heart's most intimate affections. Gradually it seemed that the bird was saying precisely this, again and again; that in the afternoon shade and solitude the same meaning was in the rustle of the leaves. Few would believe or imagine that a poorly paid sub-postmaster in a small village could have such feelings in the deep, idle stillness of the afternoon. <br /><br />இயற்கையை இதை விட அழகாக வர்ணிக்க முடியுமா? மேலே உள்ள பத்தி ஒரு "reader's delight" என்றால் அது மிகையில்லை. <br /><br />Sighing heavily, the postmaster called for Ratan. Ratan was at that moment stretched out under a guava tree, eating unripe guavas. At the sound of her master's call she got up at once and ran to him. <br /><br />'Yes, Dadababu, you called?' she said, breathlessly. <br /><br />'I'm going to teach you to read a little,' said the postmaster. He taught her daily at midday from then on, starting with the vowels but quickly progressing to the consonants and conjuncts. <br /><br />During the month of Sraban, the rain was continuous. Ditches, pits and channels filled to overflowing with water. The croaking of frogs and the patter of rain went on day and night. It was virtually impossible to get about by road - one had to go to market by boat. One day it rained torrentially from dawn. The postmaster's pupil waited for a long time at the door, but when the usual call failed to come, she quietly entered the room, with her bundle of books. She saw the postmaster lying on his bed: thinking that he was resting, she began to tip-toe out again. Suddenly she heard him call ' her. She turned round and quickly went up to him saying, 'Weren't you asleep, Dadababu?' <br /><br />'I don't feel well,' said the postmaster painfully. 'Have a look - feel my forehead.' <br /><br />He felt in need of comfort, ill and miserable as he was, in this isolated place, the rain pouring down. He remembered the touch on his forehead of soft hands, conch-shell bangles. He wished his mother or sister were sitting here next to him, soothing his illness and loneliness with feminine tenderness. And his longings did not stay unfulfilled. The young girl Ratan was not a young girl now. From that moment on she took on the role of a mother, calling the doctor, giving him pills at the right time, staying awake at his bedside all night long, cooking him convalescent meals, and saying a hundred times, 'Are you feeling a bit better, Dadababu?' <br /><br />கதையிலேயே மிகவும் பிடித்த இடம் எனக்கு மேலே உள்ள பத்தி தான். ஏனென்றால் இதை நானும் உணர்ந்திருக்கிறேன். தில்லியில் நான் மட்டும் தனியாக இருக்கும் போது என்றாவது உடம்பு சரியில்லாமல் போகும் போது அம்மா மென்மையாக நெற்றியைத் தொட்டுப் பார்த்து 'இப்போ ஜூரம் எப்படிப்பா இருக்கு'ன்னு கேட்டால் எப்படி இருக்கும் என்று தோன்றியதுண்டு. அவ்வேளைகளில் மேலே உள்ள இவ்வரிகளும் நினைவுக்கு வந்து விடும். அச்சமயங்களில் விழியோரங்களில் வடியும் நீர்த் துளிகளை என்ன செய்தாலும் நிறுத்து இயலாது. <br /><br />Many days later, the postmaster got up from his bed, thin and weak. He had decided that enough was enough: somehow he would have to move from this place. He wrote at once to his head office in Calcutta, applying for a transfer on grounds of ill-health. <br /><br />Released from nursing the postmaster, Ratan once again took up her normal place outside his door. But his call did not come for her as before. Sometimes she would peep in and see the postmaster sitting distractedly on his stool or lying on his bed. While she sat expecting his summons, he was anxiously awaiting a reply to his application. She sat outside the door going over her old lessons numerous times. She was terrified that if he suddenly summoned her again one day, the conjunct consonants would all be muddled up in her mind. Eventually, after several weeks, his call came again one evening. With eager heart, Ratan rushed into the room. 'Did you call, Dadababu?' she asked. <br /><br />'I'm leaving tomorrow, Ratan,' said the postmaster. <br /><br />‘Where are you going, Dadababu?' <br /><br />'I'm going home.' <br /><br />'When are you coming back?' <br /><br />'I shan't come back again.' <br /><br />Ratan did not question him further. The postmaster himself told her that he had applied for a transfer, but his application had been rejected; so he was resigning from his post and returning home. For several minutes, neither of them spoke. The lamp flickered weakly; through a hole in the crumbling thatched roof, rain-water steadily dripped on to an earthenware dish. Ratan then went slowly out to the kitchen to make some chapati. She made them with none of her usual energy. She kept stopping, turning things over in her mind. When the postmaster had had his meal, she suddenly asked, 'Dadababu, will you take me home with you?' <br /><br />'How could I do that!' said the postmaster, laughing. He saw no need to explain to the girl why the idea was impossible. <br /><br />All night long, whether dreaming or awake, Ratan felt the postmaster's laugh ringing in her ears. 'How could I do that!' <br /><br />When he rose at dawn, the postmaster saw that his bath-water had been put out ready for him (he bathed according to Calcutta habits, in water brought in a bucket). Ratan had not been able to bring herself to ask him what time he would be leaving; she had carried the bath-water up from the river late at night, in case he needed it early in the morning. As soon as he finished his bath, the postmaster called her. She entered the room softly and looked at him without speaking, waiting for her orders. 'Ratan,' he said, 'I'll tell the man who replaces me that he should look after you as I have; you mustn't worry just because I'm going.' <br /><br />No doubt this remark was inspired by kind and generous feelings, but who can fathom the feelings of a woman? Ratan had meekly suffered many scoldings from her master, but these kindly words were more than she could bear. The passion in her heart exploded, and she cried, 'No, no, you mustn't say anything to anyone - I don't want to stay here.' The postmaster was taken aback: he had never seen Ratan behave like that before. <br /><br />ஏனோ தெரியவில்லை, காதல் கொண்டேன் திரைப்படத்தில் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதிய பாடல் வரிகள் தான் மேலே இருக்கும் வரிகளைப் படித்தால் மனதில் தோன்றுவது.<br /><br />"காதல் இல்லை இது காமம் இல்லை<br />இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை"<br /><br />அண்ணா என்று பொருள்பட 'தாதா' என்று ரத்தன் போஸ்ட்மாஸ்டரை அழைத்தாலும். இக்கதையில் சொல்லப்பட்டிருக்கும் உறவுக்குப் பெயரில்லை என்றே எனக்கு தோன்றுகிறது. <br /><br />A new postmaster came. After explaining the job to him, the resigning postmaster got ready to leave. Before going, he called Ratan and said, 'Ratan, I've never been able to pay you anything. Today before I go I want to give you something, to last you for a few days.' Except for the little that he needed for the journey, he took out all the salary that was in his pocket. But Ratan sank to the ground and clung to his feet, saying, 'I beg you, Dadababu, I beg you - don't give me any money.' Then she fled, running. <br /><br />The departing postmaster sighed, picked up his carpet-bag, put his umbrella over his shoulder, and, with a coolie carrying his blue-and-white-striped tin trunk on his head, slowly made his way towards the boat. <br /><br />When he was on the boat and it had set sail, when the swollen flood-waters of the river started to heave like the Earth's brimming tears, the postmaster felt a huge anguish: the image of a simple young village-girl's grief-stricken face seemed to speak a great inarticulate universal sorrow. He felt a sharp desire to go back: should he not fetch that orphaned girl, whom the world had abandoned? But the wind was filling the sails by then, the swollen river was flowing fiercely, the village had been left behind, the riverside burning-ground was in view. Detached by the current of the river and the journey ahead, he reflected philosophically that in life there are many separations, many deaths. What point was there in going, back? Who belonged to whom in this world? <br /><br />But Ratan had no such philosophy to console her. All she could do was wander near the post office, weeping copiously. Maybe a faint hope lingered in her mind that Dadababu might return; and this was enough to tie her to the spot, prevent her from going far. Oh poor, unthinking human heart! Error will not go away, logic and reason are slow to penetrate. We cling with both arms to false hope, refusing to believe the weightiest proofs against it, embracing it with all our strength. In the end it escapes, ripping our veins and draining our heart's blood; until, regaining consciousness, we rush to fall into snares of delusion all over again. <br /><br />கதையைப் படித்து முடித்ததும் பல விதமான உணர்ச்சிகள் மனதில் தோன்றுவதை என்னால் தடுக்க முடிந்ததில்லை. அனாதையான ஒரு சின்ன பெண் அன்புக்காக ஏங்குகிறாள். நல்ல உள்ளம் கொண்ட ஒரு மனிதர் அவர் வாழ்வில் தோன்றுகிறார். அவள் எதிர்பார்த்த அன்பு அவளுக்கு சில நாட்கள் கிடைக்கிறது. ஆனால் அந்த அன்பும் அக்கறையும் அவளுக்குத் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கும் என நம்பத் தொடங்குகிறாள் அப்பெண். ஆனால் தன் பயணத்தின் போது சந்திக்கும் ஒரு சகப் பயணியைப் போலவே அப்பெண்ணை நினைக்கிறார் அம்மனிதர். அவ்விடத்தை விட்டுச் செல்லும் வேளையில் அம்மனிதருக்கும் மனம் பாரமாக இருந்த போதிலும் "இதெல்லாம் வாழ்வின் ஒரு பகுதியே" என்று தன்னைத் தானே தேற்றிக் கொள்கிறார். ஆனால் கல்வியறிவில்லாத அப்பெண்ணுக்கோ அத்தகைய சித்தாந்தங்கள் எதுவும் தெரியவும் இல்லை, அவளால் அவற்றை புரிந்து கொள்ளவும் முடியவில்லை. ஒரு விதத்தில் நாமும் பல இடங்களிலும் அந்த சின்னப் பெண் ரத்தனைப் போலத் தான் நடந்து கொள்கிறோம் என எண்ணுகிறேன். இதற்கு மேல் என்னிடம் சொல்ல வார்த்தைகள் இல்லை. <br /><br />இக்கதையை 1950களில் 'தீன் கன்யா' என்ற பேரில் சத்யஜித் ரே அவர்கள் வங்காள மொழியில் ஒரு திரைப்படமாக எடுத்திருக்கிறார். மூன்று வெவ்வேறு கதைகளினைக் கொண்ட அப்படத்தில் தி போஸ்ட்மாஸ்டரும் ஒரு கதை. இந்த கதையை விஷுவலாக எப்படி சொல்லியிருக்கிறார் என்று பார்ப்பதற்காகவே அப்படத்தின் டிவிடியைத் தேடி அரும்பாடுபட்டு வாங்கினேன். ஆனால் இக்கதையைப் படிக்கும் போது தோன்றிய உணர்வுகள் திரைப்படமாகப் பார்க்கும் போது எனக்குத் தோன்றவில்லை. <br /><br />மேலே உள்ள கதை இணையத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சுருக்கப்பட்ட வடிவம் தான்(abridged version). புத்தகத்தில் இருப்பது போலவே இக்கதையைப் படிக்க வேண்டும் என்றால் கீழே உள்ள சுட்டியில் பதிவர் ஒருவர் புத்தகத்தின் பக்கங்களை ஸ்கேன் செய்து வலையேற்றியிருக்கிறார் படித்துப் பாருங்கள். <br /><a href="http://solitary-vine.blogspot.com/2008/08/postmaster-by-rabindranath-tagore.html">http://solitary-vine.blogspot.com/2008/08/postmaster-by-rabindranath-tagore.html</a><br /><br />இக்கதையை அழகாக ஆய்வு செய்து ஆங்கிலத்தில் ஒரு பதிவெழுதியிருக்கிறார் சம்யுக்தா என்ற பதிவர். அதையும் படித்துப் பாருங்கள். <br /><a href="http://beautifulmind-sam.blogspot.com/2008/07/postmaster-by-rabindranath-tagore.html">http://beautifulmind-sam.blogspot.com/2008/07/postmaster-by-rabindranath-tagore.html</a>கைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-20289353.post-37443587910333971262009-07-07T16:36:00.005+05:302009-08-12T14:17:41.318+05:30IV Std 'E' Sectionசில பள்ளிக்கூட நினைவுகள்...ஆணி புடுங்கற நேரத்துல சட்டுன்னு மனசுல வந்தது.<br /><br />****************************************************<br /><br />"உன் ரப்பரைக் கொஞ்சம் கொடேன், அழிச்சிட்டுத் தரேன்"<br />"ஐ...அஸ்கு புஸ்கு"<br /><br />இப்ப யாராச்சும் என்கிட்ட எதாச்சும் கேக்கனும், அவங்களுக்கு நான் அஸ்கு புஸ்கு சொல்லனும்னு ரொம்ப ஆசையா இருக்கு :(<br /><br />உதாரணத்துக்கு "கேன் ஐ பாரோ யுவர் லேப்டாப் அடாப்டர் ஃபார் சம்டைம்?" - "Can I borrow your Laptop Adaptor for sometime?"<br />"ஐ...அஸ்கு புஸ்கு"ன்னு சொன்னா மனசுக்கு எவ்வளவு இதமாயிருக்கும்? நம்ம மனசுக்குத் தான் :)<br /><br />****************************************************<br /><br />"வாட் இஸ் தி நாய்ஸ் ஓவர் தேர்"(What is the noise over there?)<br />"மிஸ் திஸ் பாய் இஸ் கில்லிங் மீ மிஸ்"<br /><br />****************************************************<br /><br />"ரப்பர் எப்படி செய்வாங்க தெரியுமாடா?"<br />"தெரியாதே"<br />"பென்சில் தோல் சீவி அதை பாத்திரத்துல போட்டு பால் ஊத்தி <br />மறு நாள் காலைல பாத்தா ரப்பர் வந்துருக்கும்"<br /><br />இதை உண்மைன்னு நம்பி பென்சில் சீவி பென்சில் பாக்ஸ்ல போட்டு வீட்டுக்குப் பல தடவை எடுத்துட்டு போயும் பாம்புக்கு...சே...பென்சில் தோலுக்குப் பால் ஊத்த விட்டதில்லை :(<br /><br />****************************************************<br /><br />"மயில் றெக்கை இருக்கில்ல அத புக்குக்குள்ள வெச்சி அரிசி போட்டேன்னு வை...மறு நாள் மயில் குட்டி கிடைக்கும்"<br />"நெஜமாவாடா?"<br />"ஆமாம்டா...எங்க வீட்டுல அந்த மயில் குட்டி பெருசாயி முட்டை கூட போட்டுச்சே"<br /><br />****************************************************<br /><br />"டேய்! அவன் ஷுல சாணியை மிதிச்சிட்டு வந்திருக்காண்டா"<br />"சீத்தாங்கோல் விடுடா"<br /><br />ரெண்டு பேரும் சேர்ந்துக்கிட்டு - <br />"ஐயயே...சாணி மிதிச்சிட்டு வந்திருக்கான்...சீத்தாங்கோல்"<br /><br />- ஸ்கூலைத் தவிர இந்த சீத்தாங்கோலை எங்கேயுமே பயன்படுத்துனது இல்லை. அதுக்கு என்ன அர்த்தம்னு இன்னிக்கு வரைக்கும் தெரியாது.<br /><br />****************************************************<br /><br />ரிங்கா ரிங்கா ரோஸஸ்<br />பாக்கெட் ஃபுல் ஆஃப் போஸஸ்<br />ஹஷ்ஷா புஷ்ஷா<br />ஆல் ஆஃப் யூ டவுன்(வீ ஆல் ஃபால் டவுன்)<br /><br />Ring-a Ring-a roses,<br />Pocket full of poses.<br />Husha, Busha.<br />We all fall down.<br /><br />- ஸ்கூலை விட வீட்டு பக்கத்துல இருக்கற பசங்களோடயும் (பொண்ணுங்களோடயும் தான்:) ) இந்தப் பாட்டைப் பாடிக்கிட்டு கையைப் புடிச்சிக்கிட்டு ரவுண்டு சுத்தி கீழே விழுந்த நியாபகம் அதிகமா இருக்கு.<br /><br />****************************************************<br /><br />"நேத்து ஒலியும் ஒளியும்ல புன்னகை மன்னன் படத்துலேருந்து பாட்டு போட்டான் பாத்தியா?"<br />"ஆமா, நானும் பாத்தேன்"<br />"அதுல சப்பாத்திக்கு குருமா குருமா பாட்டுல சார்லி சாப்ளின் வேஷம் போட்டுக்கிட்டு கமல் ஓடி வந்து திடீர்னு ரேவதி கன்னத்தைக் கிள்ளி முத்தம் குடுப்பான் பாத்தியா?"<br />"அட பாவி...இரு இரு மிஸ் கிட்ட சொல்றேன்"<br />"டேய் சொல்லாதடா"<br />"நான் சொல்லத் தான் போறேன்"<br />"நீயும் தானே லேஸ் கட்ட கீழே குனியும் போது பதினாறும் பெற்று ப்ளாட்ஃபாரத்தில் வாழ்கன்னு சொன்னியே அதை நான் மிஸ் கிட்ட சொல்லுவேன்"<br />"சொல்லிக்கோ"<br />"அப்போ நீயும் சொல்லிக்கோ"<br />"மிஸ் மேல உனக்கு பயம் இல்லையா?"<br />"உனக்கு பயம் இல்லையா?"<br />"நான் சொன்னதை விட நீ சொன்னது தான் பெரிய விஷயம்"<br /><br />கலைஞானியோட படத்தை ரசிச்சி ஒரு வார்த்தை சொல்லிட்டதுக்காக நாலாவதுலேருந்து<br />அஞ்சாவது போற வரைக்கும் இப்படியே ஒருத்தன் என்னை ப்ளாக்மெயில் பண்ணிக்கிட்டே<br />இருந்தான். ப்ளாக்மெயில் பண்ணவன் பேரு ரஜினிகாந்த். உண்மையாவேங்க.<br /><br />****************************************************<br /><br />ஹ்ம்ம்ம்...வயசானாலும் மனசு இன்னும் குழந்தையாவே இருக்கே...என்ன பண்ணறது? :(கைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.com28tag:blogger.com,1999:blog-20289353.post-66399545471042040702009-07-01T17:02:00.002+05:302009-07-01T17:07:05.360+05:30இலக்கியவானில் உதயம் பகலவன் ப்ரமிளாநேத்து வழக்கம் போல கடுமையா உழைச்சிட்டு இருந்தேன். உங்க வீட்டு உழைப்பு எங்க வீட்டு உழைப்பு இல்லை...முத்து முத்தா முகத்துல வியர்த்து இருக்கறதைத் தொடைச்சிக் கூட விட்டுக்காத கடும் உழைப்பு. அதுவா பூமியின் புவி ஈர்ப்பு சக்தியின் காரணமா நிலத்துல கீழே விழுந்தா தான் உண்டு. நெத்தி வியர்வையை நிலமே கேட்டு வாங்கிக்கிற மாதிரியான உழைப்புன்னு வையுங்களேன். அந்த நேரத்தில் தான் என்னோட கூகிள் சாட் பொட்டியில், பார்த்தனின் தடந்தோள்களை அலங்கரிக்கும் காண்டீபத்தின் ரீங்காரத்தையும், பார்த்தனின் சாரதியின் இதழ்களைத் தழுவும் பேறு பெற்ற பஞ்சஜன்யத்தின் ஆஹாகாரத்தையும் ஒத்த ஒரு ஒலி கேட்டது "Are you there?"ன்னு. <br /><br />அந்த ஒலிக்குச் சொந்தக்காரர், நான் வலையுலகில் நுழைந்த நாளிலிருந்தே அறிந்த ஒரு நண்பர். <a href="http://shibispadaippugal.blogspot.com/2009/06/blog-post.html">"உரையாடல் சிறுகதை போட்டிக்கு நான் ஒரு கதை எழுதிருக்கேன். கொஞ்சம் படிச்சிப் பாருங்க"ன்னு ஒரு லிங்க் கொடுத்தார்.</a> அவருடைய பல முகங்களை நான் பாத்திருக்கிறேன் - அறம் செய்ய விரும்புறவரா, ஆறுவது சிணுங்கறவரா,<br />இயல்வது கரக்கறவரா, ஈவது விலக்கறவரா, உடையது விளம்பறவரா, ஊக்கமது கைவிடாதவரா, எண் எழுத்து இகழாதவரா, ஏற்பது இகழாதவரா, ஐயமிட்டு உண்ணறவரா, ஒப்புரவு ஒழுகறவரா, ஓதுவது ஒழியறவரா, ஒளவியம் பேசறவரா இப்படின்னு பல முகங்கள். ஆனா அன்னிக்கு அந்த பதிவைப் படிச்சிட்டு நான் பாத்த முகம் "அடங்கொன்னியா! இந்த ஆளு இங்கே இருக்க வேண்டிய ஆளே இல்லைடா"ன்னு நெனைக்க வச்சது. "இங்கே இருக்க வேண்டிய ஆள் இல்லைன்னா, பின்ன வேலூர் ஜெயில்ல இருக்க வேண்டியவரா"ன்னு எல்லாம் கேக்கப்பிடாது. <br /><br />இவ்வளவு சீரிய(ஸ்) இலக்கியவாதிக்கு, ஒரு இலக்கியவாதிக்கே இணையான புனைப்பெயரும் இருப்பது தேவையானது என நான் நினைத்தேன். "இலக்கியவாதியான உங்களுக்கு ஒரு இலக்கியத் தரமான புனைப்பெயர் வைக்கணுமே?" அப்படின்னேன். "நீங்களே வையுங்களேன்"னு ரொம்பப் பெருந்தன்மையோட அந்த பாக்கியத்தை எனக்கு அளிச்சார். எனக்கு ரெண்டு பேரு மனசுல தோனுச்சு. முதல் பேர் "விழிவிண்மீனுக்கடியவன்". <br />விழிவிண்மீனுக்கடியவன் = விழி + விண்மீனுக்கு + அடியவன்<br />விழி = நயனம்(நயன்)<br />விண்மீன் = தாரா<br />அடியவன் = தாசன்(தாஸ்)<br /><br />இரண்டாவதா எனக்கு ஒரு பேரு தோனுச்சு. அது தான் தன்னோட இலக்கிய வாழ்க்கைக்கு ஏத்ததா இருக்கும்னு அதையே ஏத்துக்கிட்டாரு. அந்த பேரு...<br /><br />"பகலவன் ப்ரமிளா"<br /><br />அந்த பேருக்கான விளக்கம் - பகலவனான ஞாயிறு ஒளி பொருந்தியவன். அளவிலாத சக்தியைக் கொண்டவன் அவன். இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் சக்திக்குக் காரணமாயிருப்பவனும் அவனே. இவ்வளவு வலு பொருந்தியவனாய் இருந்தாலும் தடாகத்தில் மலரும் மெல்லிய தாமரை மலரை மலரச் செய்பவனும் அவனே. ஆயினும் பாலைவனத்தில் அகப்பட்டுக் கொள்ளும் உயிரினங்களைப் பாரபட்சமின்றிச் சுட்டெரிக்கவும் அவன் தயங்குவதில்லை. இத்தன்மைத்தாய பகலவனை ஒத்தவரான கவிஞர், தன்னுடைய மக்களை மகிழ்விக்கக் கூடிய எழுத்துகளின் காரணமாய் படிப்பவர் முகங்களை மலரச் செய்பவர், அதே சமயம் தவறு செய்பவர் என்று அவர் தம் மனதில் கருதி விட்டால் எந்த ஒரு பாரபட்சமுமின்றி சுட்டெரிக்கத் தயங்காதவர்.<br /><br />பகலவன் சரி...அது என்ன ப்ரமிளா? எதுக்கு அந்த பேரு? ஒன்னுமில்லை சாரே. சீரியஸ் இலக்கியம் எழுதறவங்க தன் புனைப் பேருல ஒரு பாதியிலாவது ஒரு அம்மணி பேரை வச்சி எழுதாம சாதிச்சதா வரலாறே கெடையாது. ப்ரமிளாங்கிற பேரைக் கேட்டதும் என்ன தோனும்? பலருக்கு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அரங்கேற்றம் படம் நியாபகத்துக்கு வரலாம், வெகு பலருக்கு சேச்சி நடிச்சி பிரபலமான தம்புராட்டி படம் நியாபகத்துக்கு வரலாம். க்ளாமரும் நடிப்பும் ஒரு சேர நிரம்பிய ஓல்டு ஆனாலும் கோல்டான ப்ரமிளாவைப் போன்ற கவர்ச்சியான எழுத்துக்குச் சொந்தக்காரர் என்பது இந்த புனைப் பெயரின் இரண்டாம் பாகத்தில் தொக்கி நிற்கும் பொருள். <br /><br />எழுத்தாளர், இலக்கியவாதி, இதழியலாளர் இப்படியாக இன்னும் பல ஆளர்களை ஆளப் போகும் 'பகலவன் ப்ரமிளா'வின் வலைப்பூ கீழே. <br /><br /><br /><br />பகலவனும் சரி ப்ரமிளாவும் சரி இரண்டு காண்டிராஸ்டிங் சிறப்புகளைக் கொண்டிருப்பவர்கள் ஆதலால் சிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் பெயரான "பகலவன் ப்ரமிளா" ஜனனம். பேரு பாக்க காமெடியா இருந்தாலும் பதிவெல்லாம் டெரரா தான் இருக்கும். சீரியஸ் இலக்கியம் மட்டும் தான் எழுதுவார் பகலவன் ப்ரமிளா. ஏகவசனமா இருந்தாலும் அவருடைய இலக்கிய படைப்புகளை வாசித்து விட்டு "நீ இலக்கியவாதிடா, நீ இலக்கியவாதிடா, நீ இலக்கியவாதிடா"ன்னு மயில்சாமி மாதிரி உணர்ச்சிவசப்பட்டு பாராட்டற காலமும் வரத் தான் போகுது. அதை நானும் பாக்கத் தான் போறேன். அந்த நாள் வரும் போது...வரும் போது...வேணாம்... வரும் போது சொல்றேன் என்ன பண்ணுவேன்னு.<br /><br /><a href="http://neerootru.blogspot.com/">நீர் ஊற்று</a>கைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.com20tag:blogger.com,1999:blog-20289353.post-15336499623694294812009-06-30T19:42:00.001+05:302009-07-01T16:08:04.547+05:30ஜீஜாபாய் கதைகள் : இந்த காலத்துப் பொண்ணுங்க!ஜீஜாபாய் யாருன்னு எல்லாருக்கும் தெரியும் தானே? மராட்டிய மாமன்னர் சிவாஜியின் அம்மா தான் ஜீஜாபாய். சிறுவயது முதலே தன் மகனுக்குக் கதைகள் சொல்லி அவரை ஒரு அறிவாளியாகவும், நீதிமானாகவும், வீரனாகவும் வளர்த்தார். கதை கேட்டா அறிவாளி ஆவறோமா, நீதிமான் ஆகறோமா இல்லை வீரனாகறோமான்னு எல்லாம் எனக்கு தெரியாது. ஆனா கதை கேக்கறது எனக்கு ரொம்ப புடிக்கும், அதுல இருக்கற ஃபேண்டஸி எலிமெண்ட்டுக்காக. அதுவும் எங்க வீட்டு ஜீஜாபாய் சொன்னா ரொம்ப சுவாரசியமா இருக்கும். ஆ...ன்னு வாயைப் பிளந்துக்கிட்டு கேப்பேன். நான் மாவீரன் சிவாஜின்னா எங்கம்மா ஜீஜாபாய் தானே...ஹி...ஹி... எங்கம்மா அதுவும் கதையைச் சொன்னா சும்மா சொல்ல மாட்டாங்க, திரைக்கதையோட வசனத்தோட ஏற்ற இறக்கத்தோட கிட்டத்தட்ட நடிச்சே காட்டுவாங்க. அப்படி எங்கம்மா கிட்ட கேட்ட ஒரு கதை/நிகழ்வு/உரையாடல் தான் இது.<br /><br />என் மகள் பிறந்திருந்த நேரம் அது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மனைவியையும் மகளையும் பார்ப்பதற்காக நானும் என் அம்மாவும் அப்பாவும் அம்பத்தூர் சென்று விட்டு ஒரு மாலை வேளையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். திருவான்மியூர் செல்லும் 47D பேருந்தில் மூவரும் ஏறினோம். மூவருக்கும் வெவ்வேறு இடங்களில் உட்கார இடம் கிடைத்தது. அம்மாவுக்கு ஒரு பழக்கம். வீட்டில் இருக்கும் போது பொதுவாகத் தூங்க மாட்டாங்க. ஆனா எங்கேயாச்சும் வெளியே பேருந்துலேயே ரயிலிலேயோ போறதுன்னா போதும் ஏறி உக்காந்ததுமே தூக்கம் வந்துடும். ஆனா பக்கத்துல யாராச்சும் உக்காந்து பேச்சு குடுத்துக்கிட்டே வந்தாங்கன்னா தூங்க மாட்டாங்க. அப்படி ஒரு விநோதமான பழக்கம். எங்கம்மா மகளிர் இருக்கைகள் இருக்கற இட புறத்துலயும் நானும் எங்கப்பாவும் வலது புறத்துலயும் உக்கார்ந்துருந்தோம். அன்னிக்கு எங்கம்மா பக்கத்துல ஒரு 20 வயசு மதிக்கத் தக்க பொண்ணு உக்கார்ந்துருந்துச்சு. ஏறி உக்காந்ததும் தூங்குவாங்களே என்ன பண்ணறாங்கன்னு திரும்பி பார்த்தேன். அந்த பொண்ணு கிட்டே பேசிட்டு வந்துட்டு இருந்தாங்க. இன்னும் கொஞ்ச தூரம் போனதும் மறுபடியும் பார்த்தேன். இப்போ முன்னைவிட சுவாரசியமா சிரிச்சி சிரிச்சி ரெண்டு பேரும் பேசிக்கிட்டே வந்தாங்க. அட! என்னடா இவ்வளோ ஆழமா பேசிக்கிட்டு வராங்களேன்னு நானும் கவனிச்சிக்கிட்டே வரேன். ஆனா அவங்க சிரிச்சி பேசிக்கிறது மட்டும் குறையவே இல்லை. என் பக்கத்துல உக்காந்துருந்தவன் என்னை மாதிரியே காதுல (ஐ-பாட்) மாட்டிக்கிட்டு இருந்ததுனால என் கிட்ட யாரும் பேச வேற இல்லை. அதனால எனக்கு வேற ஒரே பொறாமை. கடைசியா அந்த பொண்ணு தி.நகர் பேருந்து நிலையத்து கிட்ட இறங்கி எங்கம்மாவுக்கு கை காட்டிட்டு போற வரைக்கும் அவங்க பேசிக்கிட்டே தான் வந்தாங்க. அந்த பொண்ணு இறங்கிப் போனதும் தூங்க ஆரம்பிச்சிட்டாங்க. <br /><br />வீட்டுக்குப் போனதும் முதல் வேலையா அப்படி என்ன அவ்வளவு இண்டெரெஸ்டிங்கா சிரிச்சி சிரிச்சி பேசிக்கிட்டே வந்தாங்கன்னு தெரிஞ்சிக்க எனக்கு ஒரே ஆர்வம். எங்கம்மா எனக்கு மிமிக்ரியோட ஏற்ற இறக்கத்தோட சொன்ன கதையோட உரையாடல் வடிவம் தான் கீழே. <br /><br />"டைம் என்னங்க ஆச்சு"<br /><br />"ஆறு நாப்பதுமா"<br /><br />"நீங்க எது வரைக்கும் போறீங்க ஆண்ட்டி?"<br /><br />"திருவான்மியூர் வரைக்கும்மா"<br /><br />என்னை காட்டி "அந்த அங்கிள் கூடத் தான் வந்தீங்களா?" :(<br /><br />"அங்கிள் முன்னாடி உக்கார்ந்துருக்காரு பாரு அவரு தான். அது என் பையன்". இதை சொல்லிட்டு எங்கம்மா என் கிட்ட சொன்னது "இருபது வயசு பொண்ணே உன்னை அங்கிள்ங்கிறா. முதல்ல தொப்பையைக் குறைச்சிக்க" அதுக்கு நான் சொன்னேன்"இனிமே தொப்பை இருந்தா என்ன இல்லாட்டி என்ன, அதான் கல்யாணம் ஆகி குழந்தை கூட பொறந்துடுச்சே"ன்னு. நறுக்குன்னு மண்டையில ஒரு கொட்டு விழுந்துச்சு.<br /><br />"சாரி ஆண்ட்டி"<br /><br />"அம்பத்தூர்ல தான் உங்க வீடா?"<br /><br />"இல்லம்மா, மருமகளுக்குக் குழந்தை பொறந்துருக்கு. அதை பாத்துட்டு வீட்டுக்குப் போயிக்கிட்டிருக்கோம்"<br /><br />"எங்க வீடு எங்கேருக்கு சொல்லுங்க பாப்போம்"<br /><br />"தெரியலையேம்மா"<br /><br />"நீங்க போற வழில தான்"<br /><br />"நாங்க போற வழில நெறைய இடம் இருக்கு. நான் எதைன்னு சொல்லறது?"<br /><br />"சும்மா ஒரு கெஸ் பண்ணுங்களேன்"<br /><br />"சைதாப்பேட்டையா?"<br /><br />"அதான் இல்லை. டி.நகர்ல தான் எங்க வீடு. டி.நகர் பஸ் ஸ்டாண்டுக்குப் பின்னாடி ஒரு ரோடு போகுதில்லை. அதுல செக்கண்ட் லெஃப்ட் திரும்புனா ஒரு அபார்ட்மெண்ட் வரும். அதுல ஃபிஃப்த் ஃப்ளோர்ல தான் எங்க வீடு"<br /><br />"ஓஹோ"<br /><br />"அம்பத்தூர்ல என் ஃப்ரெண்டு வீடு இருக்கு. அங்கே தான் போயிட்டு வரேன்"<br /><br />"அப்படியா? என்னம்மா பண்ணறே நீ"<br /><br />"நான் கரெஸ்ல B.C.A.படிக்கிறேன் ஆண்ட்டி"<br /><br />"கரெஸ்னா என்னம்மா?"<br /><br />"என்னது உங்களுக்கு கரெஸ்னா என்னன்னு தெரியாதா?"<br /><br />"தெரியாதும்மா"<br /><br />"கரெஸ்பாண்டென்ஸ்ல போஸ்டல்ல படிக்கிறதை தான் ஷார்ட்டா கரெஸ்னு சொல்லுவாங்க"<br /><br />"அப்படியாம்மா"<br /><br />"ஆண்ட்டி! நான் ரொம்ப குண்டா இருக்கேனா ஆண்ட்டி?"<br /><br />"ஏம்மா! உனக்கு என்ன? நல்லா ஸ்லிம்மா அழகாத் தானே இருக்கே?"<br /><br />"போங்க ஆண்ட்டி. நீங்க பொய் சொல்றீங்க. நான் குண்டா இருக்கேன்னு எனக்கே தெரியும். இப்போ என்னோட வெயிட் எவ்வளோ தெரியுமா 46 கேஜி. நான் 40 கேஜி யைத் தாண்டுனதேயில்லை".<br /><br />"இதெல்லாம் போய் ஒரு வெயிட்டுன்னு சொல்லறியேம்மா. இந்த வயசுல நல்லா சாப்பிட்டு உடம்பைப் பாத்துக்க வேணாமா?"<br /><br />"என் வெயிட் அதிகமாயிடுச்சுன்னு நான் அஞ்சு மாடி படிக்கட்டுல தான் ஏறிப் போறேன். லிஃப்ட் எல்லாம் கூட யூஸ் பண்ணறதில்லை. டி.நகர் பஸ் ஸ்டாண்டுலேருந்து எங்க வீட்டுக்குப் போக 15 நிமிஷம் ஆகும். அது கூட நான் ஆட்டோல போகாம நடந்தே தான் போறேன்"<br /><br />"ஹ்ம்ம்ம்"<br /><br />"என் பேரு என்னன்னு சொல்லுங்க பாப்போம்?"<br /><br />"...."<br /><br />"என்னை பாத்து நான் க்றிஸ்டியன்னு நீங்க நெனச்சிருப்பீங்க. அதான் இல்லை. நான் ஹிண்டு தான். ஃப்ரெண்டு வீட்டுலேருந்து வரும் போது என் பொட்டு கீழே விழுந்துடுச்சு. என் பேரு பத்மப்ரியா"<br /><br />"இல்லைம்மா. அப்படியெதுவும் நான் நெனக்கலை"<br /><br />"எங்க வீட்டுலேயே நானும் எங்கப்பாவும் தான் கறுப்பு. எங்கப்பாவுக்கும் அம்மாவுக்கும் லவ் மேரேஜ். எங்கம்மா மலையாளி. என் தம்பி எங்கம்மா மாதிரி நல்லா சிவப்பா இருப்பான். எங்கப்பா கறுப்பா இருந்தாலும் தங்கம் தெரியுமா?"<br /><br />"தம்பி என்னம்மா பண்ணறான்"<br /><br />"இப்போ தான் லெவெந்த் படிக்கிறான் ஆண்ட்டி"<br /><br />"திருவான்மியூர்ல இறங்கப் போறதாச் சொன்னீங்களே? உங்க வீடு அங்கே தானா?"<br /><br />"இல்லம்மா. இன்னும் கொஞ்சம் தூரம் போகனும் ECRல இருக்கு"<br /><br />"ஹை! ECRஆ. அங்கே தான் விஜய் வீடு கூட இருக்கு இல்லை"<br /><br />"ஆமாம்மா. உனக்கு விஜய்ன்னா ரொம்ப பிடிக்குமா?"<br /><br />"ஆமாம் ஆண்ட்டி! விஜய் படம்ன்னா ஒன்னு விடாமப் பாத்துடுவேன்"<br /><br />"அப்போ ஒரு நாள் எங்க வீட்டுக்கு வாயேன். அப்படியே விஜயையும் பாத்துட்டுப் போ"<br /><br />"அதெல்லாம் வேணாம் ஆண்ட்டி. இப்படியே தூரத்துலேருந்து விஜயைப் பாக்கறது தான் எனக்கு புடிச்சிருக்கு."<br /><br />"ஆனா கல்யாணம்னு ஒன்னு பண்ணிக்கிட்டா விஜய் மாதிரி நல்லா ஹைட்டா அழகா இருக்கற பையனைத் தான் பண்ணிப்பேன் ஆண்ட்டி. அதுக்கு தான் என் வெயிட்டைக் கூட குறைச்சிக்கிட்டு இருக்கேன். எங்க சித்தி பொண்ணு ஒருத்தி இருக்கா. அவ தோனின்னா உயிரையே விடுவா. தோனி மாதிரி மாப்பிள்ள தான் வேணும்னு இப்பவே சொல்லிக்கிட்டு இருக்கா."<br /><br />"ஆண்ட்டி! நீங்க ஃப்ரீ டைம்ல என்ன ஆண்ட்டி பண்ணுவீங்க?"<br /><br />"வீட்டு வேலையே சரியாயிருக்கும்மா. அப்படி கொஞ்சம் டைம் கெடைச்சதுன்னா டிவி பார்ப்பேன்"<br /><br />"மதியானம் தூங்க மாட்டீங்களா?"<br /><br />"இல்லம்மா"<br /><br />"நானும் தூங்க மாட்டேன். ஆனா எங்கம்மாவுக்கு மத்தியானம் தூங்கல்லைன்னா சாயந்திரம் எல்லாம் ரொம்ப கஷ்டப் படுவாங்க"<br /><br />"நீ என்னம்மா பண்ணுவே ஃப்ரீ டைம்ல"<br /><br />"டிவி பாப்பேன், பாட்டு கேப்பேன். ஃப்ரெண்ட்சுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவேன்".<br /><br />"ஹ்ம்ம்ம்"<br /><br />"ஆண்ட்டி உங்க மொபைல் நம்பர் குடுங்க. நான் உங்களுக்கும் இனிமே எஸ்எம்எஸ் அனுப்பறேன்"<br /><br />"என் கிட்ட மொபைல் இல்லையேம்மா"<br /><br />"அங்கிள் கிட்ட சொல்லி ஒரு மொபைல் வாங்கிக்கங்க ஆண்ட்டி. மொபைல் ரொம்ப யூஸ்ஃபுல்"<br /><br />"சரிம்மா"<br /><br />"நான் எறங்க வேண்டிய எடம் வந்துடுச்சு ஆண்ட்டி. அப்புறம் பாக்கலாம். டாட்டா"<br /><br />"சரிம்மா"<br /><br />இந்த முழு கதையையும் கேட்டுட்டு, எனக்கும் என் தம்பிக்கும் நல்ல டைம்பாஸ் ஆச்சு. கதையைச் சொல்லிட்டு எங்கம்மா சொன்னது "இந்த காலத்து பொண்ணுங்களும் அவங்க நெனப்புங்களும்"கைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-20289353.post-169671467921882062009-06-25T17:32:00.001+05:302009-06-25T17:35:16.429+05:30ஸ்பெஷல் எஃபெக்ட்ஸோடு கிரிக்கெட் வெளையாடுதல்"வெயிட்ஸ் ஃபார் தி க்ரீஸ். இருடா கூச் போட்டுக்கிட்டு வந்துடறேன். கூச் இல்லாம சரியா ரன் வர மாட்டேங்குது". எங்க வீட்டு மொட்டை மாடில நானும் என் தம்பியும் அண்டர் ஆர்ம்ஸ் கிரிக்கெட் ஆடும் போது பேசப்படற வசனம் தான் மேல பாத்தது. அது என்னா கூச்? முன்னாள் இங்கிலாந்து கேப்டன் க்ரஹாம் கூச்சைப்(Graham Gooch) பத்தி தான் என் தம்பி சொல்றது. அது சரி? அது என்ன கூச் போட்டுக்கிட்டு விளையாடறது? 1980-கள்ல டிவில கிரிக்கெட் உன்னிப்பா நீங்க கவனிச்சிருந்தீங்கன்னா - பேட்ஸ்மேன் க்ளவ்ஸ்(Gloves) போட்டுக்கிட்டு வெளையாடும் போது சில வகை க்ளவ்ஸ்ககளில் ஆட்காட்டி விரலும் நடு விரலும் சேர்ந்தாப் போல ஒரே விரலா இருக்கற மாதிரி இருக்கும். இந்த மாதிரி க்ளவ்ஸை நாங்க முதன் முதல்ல பார்த்தது க்ரஹாம் கூச் போட்டுக்கிட்டு வெளையாடும் போது தான். அதனால அதுக்கு கூச்னே பேரு வச்சிட்டோம். நானும் என் தம்பியும் கிரிக்கெட்டைக் கவனிக்கிறோமோ இல்லையோ, கிரிக்கெட் வீரர்கள் உபயோகிக்கிற உபகரணங்களையும் அவங்க செய்யற சேஷ்டைகளையும் ரொம்ப உன்னிப்பா கவனிப்போம். குறிப்பா எந்தெந்த பேட்ஸ்மேன் எந்தெந்த பேட் உபயோகிக்கிறாங்கன்னு கவனிக்கிறது எங்க ரெண்டு பேருக்குமே ரொம்ப புடிக்கும். ஏன்னா அதை எல்லாம் நாங்க மொட்டை மாடியில கிரிக்கெட் விளையாடும் போது பண்ணலாமில்ல அதுக்குத் தான். அப்போல்லாம் அப்படி ஒரு அல்ப சந்தோஷம். இந்த மாதிரி கிரிக்கெட்டில் நாங்க நோட் பண்ண கடைபிடிச்ச எட்செட்ரா சமாச்சாரங்களைப் பத்தினது தான் இந்தப் பதிவு. கிரிக்கெட் நுணுக்கங்கள் பத்தி இதுல எதுவும் இருக்காது. ஏன்னா அத பத்தி எனக்கு எதுவும் தெரியாது :)<br /><br />கூச் னு சொன்னேன் இல்லை? அது எப்படி இருக்கும்? கீழே கூச்சோட படத்துல அவரோட க்ளவ்ஸை உன்னிப்பா பாருங்க. <br /><a href="http://3.bp.blogspot.com/_TXCaXL0id1A/SjiqUKk8FmI/AAAAAAAACYA/Dmah79-8enw/s1600-h/Gooch_handling203.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 203px; height: 270px;" src="http://3.bp.blogspot.com/_TXCaXL0id1A/SjiqUKk8FmI/AAAAAAAACYA/Dmah79-8enw/s400/Gooch_handling203.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5348211820915856994" /></a><br /><a href="http://3.bp.blogspot.com/_TXCaXL0id1A/SjiqT6zVkeI/AAAAAAAACX4/0UeB80dxFFM/s1600-h/gooch.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 257px;" src="http://3.bp.blogspot.com/_TXCaXL0id1A/SjiqT6zVkeI/AAAAAAAACX4/0UeB80dxFFM/s400/gooch.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5348211816681279970" /></a><br />இதுல சரியாத் தெரியலைன்னா அதுக்குக் கீழே இருக்கற அலன் பார்டர் படத்தைப் பாருங்க. <br /><a href="http://2.bp.blogspot.com/_TXCaXL0id1A/SjiqUNKvlKI/AAAAAAAACYI/t8doBtPz0Wg/s1600-h/Allan_Border.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 289px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_TXCaXL0id1A/SjiqUNKvlKI/AAAAAAAACYI/t8doBtPz0Wg/s400/Allan_Border.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5348211821611291810" /></a><br /><br /><br />இந்தப் படத்துல நான் சொல்ற 'கூச்' தெளிவாத் தெரியும். எந்த பேட்ஸ்மேன் போட்டிருந்தாலும் இந்த மாதிரி க்ளவ்ஸ் போட்டிருந்தாங்கன்னா அது எங்களை பொறுத்த வரை 'கூச் வச்ச க்ளவ்ஸ்' தான். "சரி நான் கூச் போட்டுக்கிட்டு வரேன்"னு மேல என் தம்பி சொன்னாருல்ல? அதுக்கு என்ன அர்த்தம்னு தானே கேக்கறீங்க. பந்தை உருட்டிப் போட்டு மொட்டை மாடில நாங்க கிரிக்கெட் விளையாடுனாலும், கிரிக்கெட் வீரர்கள் கடை பிடிக்கிற அத்தனை ஸ்டைலையும் பந்தாவையும் நாங்களும் கடைபிடிப்போம். எங்க தாத்தா ஏர் ஃபோர்ஸ்ல பஞ்சாப்ல இருந்த போது அவருக்குக் கிடைச்ச ஒரு நீல கலர் கம்பளி க்ளவ்ஸ் ஒன்னு தான் எங்க கிரிக்கெட் க்ளவ்ஸ். மெட்ராஸ்ல அடிக்கிற வெயிலுக்கு கம்பளி க்ளவ்ஸ் எல்லாம் போட்டா உள்ளங்கைல வேர்த்துக் கொட்டும். ஆனாலும் நாங்க க்ளவ்ஸ் இல்லாம கிரிக்கெட் ஆடுனதே கெடையாது. க்ளவ்ஸ் ஏற்பாடு பண்ணியாச்சு. க்ளவ்ஸ்ல கூச் இல்லாம வெளையாடுனா ரன் சரியா அடிக்க முடியாதே? அதுக்கு என்ன பண்ணறது? சைக்கிள் பிராண்ட் த்ரீ இன் ஒன் ஊதுபத்தி அட்டை பெட்டி இருக்கில்ல. அது நீளமா இருக்கும். அதை சரிசமமா மூனு துண்டுகளா அகல வாக்குல கத்திரிகோலால வெட்டிப்போம். அதுல ஒரு துண்டு எங்களுக்கு கூச் செய்யப் போதும். அந்த அட்டைப் பெட்டி துண்டை எடுத்து அது மேல ஒரு வெள்ளை பேப்பரைச் சுத்தி "Power" லோகோ வரைஞ்சுக்கிட்டா கூச் தயார். <br /><a href="http://3.bp.blogspot.com/_TXCaXL0id1A/SjeTCjnb7pI/AAAAAAAACXw/JgImJAZ5olk/s1600-h/Power_Logo.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 256px;" src="http://3.bp.blogspot.com/_TXCaXL0id1A/SjeTCjnb7pI/AAAAAAAACXw/JgImJAZ5olk/s400/Power_Logo.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5347904754655424146" /></a><br />அதை அப்படியே எடுத்து வலது கையில க்ளவுஸை மாட்டிக்கிட்டு முதல் ரெண்டு வெரல்ல எடுத்து சொருகிக்க வேண்டியது தான். இது தான் கூச். <br /><br />இப்பவே கண்ணைக் கட்டுதா? அட...இன்னும் இருக்குங்க. கூச் வச்ச க்ளவ்ஸ் போட்டுக்கிட்டா மட்டும் போதாதுன்னு என்னோட தம்பி பேட்(Pad) எல்லாம் கால்ல கட்டுவாரு. அது எப்படின்னு கேக்கறீங்களே? முன்னெல்லாம் க்ரீம் பிஸ்கெட் டப்பாக்குள்ள பிஸ்கெட் நமத்து போகாம இருக்க வெள்ளை கலர்ல வரி வரியா ஒரு காகிதம் வெப்பாங்க தெரியுமா? அது தான் என் தம்பியோட கிரிக்கெட் பேட். கால்ல வச்சா அந்த பேப்பர் முட்டிக்குக் கீழே ஒரு நாலு இன்ச் தான் வரும். இருந்தாலும் அதை மறக்காம ரப்பர் பேண்ட் போட்டு கட்டிக்கிட்டுத் தான் வெளையாடுவாரு. இதுக்கே மொட்டை மாடி கிரிக்கெட்ல LBW எல்லாம் கெடையாது, வெளையாடறதும் எழுபத்தியஞ்சு பைசா சின்ன ரப்பர் பந்தை வச்சு தான். இந்த கிரிக்கெட் மேட்ச்ல எல்லாம் 50 ரன்னோ 100 ரன்னோ அடிச்சா பேட்ஸ்மேன் பேட்டை உயரத் தூக்கி காட்டுவாரு பாத்துருக்கீங்களா? அதே மாதிரி நானும் என் தம்பியும் மட்டும் ஆடற மேட்ச்ல 50-ஓ, 100-ஓ அடிச்சா மொட்டை மாடில பேட்டை எல்லாம் தூக்கிக் காப்போம். யாரும் பாக்கலைன்னாலும் கை தட்டுலன்னாலும் பேட்டைத் தூக்கி தான் காமிப்போம். அப்போ பிரபலமா இருந்த அசாருதீன் ஒவ்வொரு முறை பந்தை அடிக்கறதுக்கு முன்னாடியும் தன்னோட கழுத்துல இருக்கற ஒரு கறுப்பு கலர் தாயத்தை வெளியில இழுத்துத் தொட்டுப்பாரு. அது மாதிரி எங்களுக்கும் செய்யனும்னு ஆசை. தாயத்து வேணும்னு வீட்டுல கேட்டா எங்களை மந்திரிச்சு விட்டுடுவாங்க இல்லை. அதுக்காக பழைய கயிறு ஒன்னை எடுத்து அதுல அம்மன் டாலரையோ முருகன் டாலரையோ கோத்துக்கிட்டு அதை கழுத்துல மாட்டிக்கிறது. ஒவ்வொரு பந்தையும் அடிக்கிறதுக்கும் முன்னாடி சட்டைக்குள்ளிருந்து டாலரை இழுத்து இழுத்து தொட்டுப் பாத்துப்போம். இதுவாச்சும் பரவால்லை. சில சமயம் பேட்ஸ்மென் பிட்சை சமப் படுத்தறதுக்காக பேட்டை வச்சி தரையில குத்துவாங்க பாத்துருக்கீங்களா? அதை கூட நாங்க மொட்டை மாடில செஞ்சிருக்கோம். "யாருடா மொட்டை மாடில லொட்டு லொட்டுன்னு தட்டுறது"ன்னு கீழே இருந்து அம்மாவோ அப்பாவோ வந்து திட்டுன்னாலும் அந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் எல்லாம் குடுக்காம கிரிக்கெட் வெளையாடலன்னா வெளையாடுன மாதிரியே இருக்காது. <br /><br />(ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் தொடரும்...)<br /><br />பி.கு: 'க்ளவ்ஸ்'னு இருக்கற இடத்துல எல்லாம் 'க்'-க்குப் பதிலா 'ப்' போட்டு படிச்சிட்டு கமெண்ட் போட்டால் மிக மிகக் கொடூரமான முறையில் தயவு தாட்சண்யமின்றி மட்டுறுத்தப் படும் என எச்சரிக்கப்படுகிறது.கைப்புள்ளhttp://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.com26