Sunday, December 30, 2012

கையறுநிலை

நான் நானாய்ப் பிறந்ததற்கு
ஒருபோதும் வருந்தியதில்லை
நான் ஆணாய்ப் பிறந்ததற்கு
வெட்கித் தலைகுனிந்து
வேதனையில் உழன்று
ஆற்றாமையில் பிதற்றும்
அத்தருணங்களை உணரும்
நிலை உனக்கு வந்தால்
உலகை அழிக்காமல்
மாயர்கள் கணிப்பைப்
பொய்யாக்கிய குற்றவுணர்வில்
குன்றி நீ போவாய் இறைவா!