தபால் தலைகள் மூலமா பல விஷயங்களைத் தெரிஞ்சிக்க முடியும். அவை அங்குல அளவுள்ள அகராதிகள் என்பதும் உண்மை தான். ஆனால் கண்டதும் காண்பவர்க்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணும் ஒரு வேலையையும் தபால் தலைகள் செய்கின்றன. அவை வாழ்த்து தெரிவிப்பது. அஞ்சல் உறையில் ஒட்டப்பட்டிருக்கும் ஒரு சிறிய வண்ணமிகு காகிதத்தில் அழகிய படங்களையும் நல்வாழ்த்துச் செய்தியையும் கண்டால் யாருக்குத் தான் மனதில் மகிழ்ச்சி பிறக்காது? அவ்வாறு வாழ்த்து தெரிவிப்பதற்காக பல நாட்டுத் தபால்துறைகளாலும் வெளியிடப்பட்ட தபால் தலைகளை இப்பதிவில் காண்லாம்.
சிறு வயதில் 'Season's Greetings' என்ற வாழ்த்தைக் காணும் போதெல்லாம் குழப்பம் ஏற்படும். எந்த பண்டிகையினை ஒட்டி வாழ்த்துவதற்காக இப்படி வாழ்த்துகிறார்கள் என்று? ஆனால் டிசம்பர் கடைசியிலும், புத்தாண்டு துவக்கத்திலும் வரும் அனைத்து திருநாட்களுக்கும் ஒட்டுமொத்தமாக வாழ்த்து தெரிவிப்பதற்காகப் பயன்படுத்தப் பெறும் சொற்றொடர் தான் 'Season's Greetings'. அமெரிக்கா வெளியிட்டுள்ள வாழ்த்து தபால்தலை கீழே.
கிறிஸ்துமஸ் வரும் டிசம்பர் மாதத்தில் தான் யூதர்களின் எட்டு நாள் பண்டிகையான ஹனுக்கா(Hanukkah) கொண்டாடப்படுகிறது. வருடத்திற்கு வருடம் இந்த எட்டு நாட்களின் தேதிகள் மட்டும் மாறுபடுகிறது. நவம்பர் கடைசியிலும் டிசம்பர் துவக்கத்திலோ இவ்வெட்டு நாட்கள் அமைகின்றது. டென்மார்க் நாட்டுத் தபால் தலையைக் கீழே காணுங்கள். டேவிட்டின் நட்சத்திரத்தை(Star of David) ஒரு சிறுவன் தன் வீட்டு வாசலில் தொங்க விடுகிறான். பனிமழையையும் மகிழ்ச்சியான சிறுவனையும் பார்க்கறதற்கு நல்லா இருக்குதில்ல?
கீழே இருப்பது கணடா நாட்டுத் தபால் தலை. கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது நடக்கும் சாண்டாக்ளாஸின் ஊர்வலத்தைச் சித்தரிக்கும் வண்ணம் இத்தபால் தலை அமைந்திருக்கிறது. அத்துடன் ப்ரெஞ்சு மொழியில் கிறிஸ்துமஸ் திருநாளை 'நோயல்'(Noel) என்று அழைப்பார்கள் என்றும் தெரிந்து கொண்டேன். அத்துடன் கிறிஸ்துமஸ் பரிசு கொண்டு வரும் தாத்தாவான சாண்டா க்ளாஸையும் வெவ்வேறு நாட்டில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள். உதாரணமாக
ஃப்ரான்சு நாட்டில் 'Le Père Noël ' அல்லது க்றிஸ்துமஸ் தந்தை
ஸ்பெயினில் 'Papa Noël'
துருக்கியில் 'Noël Baba'
ஸ்விட்சர்லாந்தில் 'Christkind'
முழு பட்டியலும் வேண்டும் என்றால் இங்குச் சுட்டுங்கள்.
க்றிஸ்துமஸ் பண்டிகையையும் ஏசு க்றிஸ்துவின் அவதரிப்பையும் சித்தரிக்கும் அழகிய தபால்தலைகளை ராயல் மெயில் வெளியிட்டுள்ளது.
க்றிஸ்துமஸ் மரத்துடன் விக்டோரியா காலத்து உடைகள்(Victorian Dress) அணிந்து குதூகலிக்கும் குடும்பத்தினர்.
பிறை நிலவு வடிவில் சாண்டா கிளாஸ். அவருடன் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டிருக்கும் குழந்தைகள்.
குழந்தை ஏசுவிற்கு மஜாய் மன்னர்களின் பரிசு(Gifts of Magi).
நட்பு புன்னகை பூக்கும் சாண்டா க்ளாஸ்.
கிழக்கு திசையில் இருந்து ஏசுவைக் காண வந்த மஜாய் மன்னர்கள்(Magi or 'Three Wise Men from the East') ஒரு நட்சத்திரத்தைப் பின்பற்றி ஏசுவை வந்தடைந்தார்களாம்.
'Lo, the star which they saw in the east'
குழந்தை ஏசுவைச் சித்தரிக்கும் இன்னொரு படம்.
புனித மரியாளும் பரிசுத்த ஆவியும்.
'Blessed is thou amongst women'
புனித மரியாளும் குழந்தை ஏசுவும் - ஹங்கேரி நாட்டுத் தபால் தலை. மக்யார்(Magyar) என்பது அவர்களுடைய மொழியில் அந்நாட்டின் பெயர். அவர்களுடைய மொழியின் பெயரும் மக்யார் தான்.
ஜமைக்கா நாட்டின் க்றிஸ்துமஸ் தபால் தலை.
1993 ஆம் இலங்கையினால் வெளியிடப்பட்ட க்றிஸ்துமஸ் தபால் தலை. க்றிஸ்துமஸ் திருநாளை 'நத்தார்' என்றும் அழைக்கிறார்கள் என்று இத்தபால் தலையைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். ஒரு வேளை இலங்கையில் மட்டும் நத்தார் என்று அழைக்கிறார்களோ என கூகிளில் தேடியதில் 2006இல் எழுதப்பட்ட பாஸ்டன் பாலாவின் பதிவும் மலைநாடான் ஐயாவின் பதிவும் சிக்கியது. இன்று காலை பதிவர் மாயாவும் 'நத்தார்' வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். எல்லாருக்கும் தெரிந்த சொல்லான இது எனக்கு மட்டும் தான் பரிச்சயம் இல்லாது போய் விட்டது போலிருக்கு. இதிலிருந்து என்ன தெரியுதுன்னா 'கற்றது கைம்மண்ணளவு கல்லாதது ஸ்டாம்ப் அளவு".
சரி இத்தபால் தலையில் ஒரு சிறப்பு உள்ளது. அது என்னவென்று கண்டுபிடிக்க முடிந்தவர்கள் கண்டுபிடித்துச் சொல்லுங்கள். அடுத்த பதிவு இதனைப் பற்றியது தான்.
க்றிஸ்துமஸ் திருநாளுக்கு மட்டுமின்றி புத்தாண்டுக்கும் வாழ்த்து தெரிவிக்க பலநாட்டு தபால்துறைகளும் தபால்தலைகளை வெளியிடுகின்றன. 2008 ஆம் ஆண்டை வரவேற்பதற்காக இந்திய தபால்துறை 15 டிசம்பர் 2007 அன்று வெளியிட்டுள்ள ஐந்து அழகிய தபால் தலைகள் கீழே.
நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய க்றிஸ்துமஸ் திருநாள்(நத்தார் தினம்) வாழ்த்துகளையும் புத்தாண்டு நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Monday, December 24, 2007
'தலை'நகரம் - 4 (வாழ்த்துகள்)
Saturday, December 22, 2007
'தலை'நகரம் - 3
சென்ற பதிவில் பயன்பாட்டு முறைகளினால் தபால்தலைகளின் வகைகளைப் பார்த்தோம். அவை Definitive மற்றும் Commemorative என இரு வகைப்படும். இதை தவிர தபால்தலை சேகரிப்பாளர்கள்(Stamp Collectors அல்லது Philatelists)தபால்தலைகளை இரு வகைபடுத்துகின்றனர். அவையாவன -
1. பயன்படுத்தப்பட்ட தபால்தலைகள்(Used Stamps)- அஞ்சல் சேவையில் பயன்படுத்தப்பட்ட பின் தபால்தலை சேகரிப்பாளர்களால் சேகரிக்கப்படும் தபால்தலைகளை 'Used Stamps' என்கின்றனர். இவ்வகை தபால்தலைகளில் அனுப்பப்பட்ட அஞ்சல் அலுவலகத்தின் அலுவலக முத்திரை இருக்கும். அத்துடன் பயன்படுத்தப்பட்டமையால் தபால்தலையின் பின்புறம் பசையின் அடையாளம் இருக்கலாம்.
2. பயன்படுத்தப்படாத புதிய தபால்தலைகள்(Unused or Mint Stamps)- அஞ்சல் துறையால் வெளியிடப்பட்டதும் உபயோகப் படுத்தப்படாமல் சேகரிக்கப்படும் தபால்தலைகளை 'Mint Stamps'என்கின்றனர். தபால்தலையின் மதிப்பைப் பொறுத்தவரை பயன்படுத்தப்படாத தபால்தலைகளுக்கு சேகரிப்பாளர்களிடம் அதிக மதிப்புள்ளது. எனினும் பிரபலங்கள் பயன்படுத்திய தபால்தலைகளுக்கு இன்றளவும் பெருமதிப்புள்ளது. உதாரணமாக மார்ட்டின் லூதர் கிங்கோ, மகாத்மா காந்தியோ எழுதிய பழைய கடிதத்தில் உள்ள பயன்படுத்தப்பட்ட தபால்தலைக்கோ அல்லது அஞ்சல் உறைக்கோ அதிக மதிப்புள்ளது.
கீழே இருப்பது சவுதி அரேபிய நாட்டு தபால்துறையால் மெக்காவில் உள்ள 'காபா'வைச் ((Kaaba)சித்தரிக்கும் தபால் தலை. புனித ஹஜ் யாத்திரையை மேற்கொள்ளும் ஹாஜிக்கள் காபாவை ஏழு முறை சுற்றி வருவார்கள் எனத் தெரிந்து கொண்டேன். தபால்தலையைப் பார்த்த மாத்திரத்திலேயே இது ஒரு பயன்படுத்தப்பட்ட அஞ்சல் வில்லை எனப் புரிந்திருக்கும்.

ஃபின்லாந்து நாட்டின் நூல்கண்டு அஞ்சல் வில்லை.

தபால்தலைகளில் உள்ள தகவல்களைக் கவனமாகக் கவனிக்கத் தொடங்கி விட்டால் அதை விட சிறந்த பொழுதுபோக்கு வேறில்லை. தபால்தலைகள் சொல்லும் கதைகளும் ஏராளம். பல சமயங்களில் இவை ஒரு அங்குல அளவுள்ள அகராதிகளாகவும் விளங்கும். கதைகளை முழுமையாகச் சொல்ல முடியாவிட்டாலும் ஒரு விஷயத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை இவை ஏற்படுத்தும் என்பது மட்டும் உறுதி.
உதாரணமாக உருகுவே நாட்டுத் தபால்துறையினரால் 1999ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இத்தபால்தலையைப் பாருங்கள்.

'Los Ultimos Charruas'என்றால் ஸ்பேனிஷ் மொழியில் 'கடைசி சருவாக்கள்' எனப் பொருள். என்னவென்று தெரிந்து கொள்ள நேற்று விகிபீடியாவையும் கூகிளையும் தேடியதில் தெரிந்த விஷயங்கள் ஆச்சரியப்பட வைத்தன. உருகுவே நாட்டில் 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்களான ஸ்பேனிஷ் நாட்டவர்கள் கால்பதிப்பதற்கு முன் வாழ்ந்த பழங்குடியின மக்கள் தான் சருவாக்கள்(Charruas). வேட்டையாடுவதும் மீன்பிடிப்பதும் இவர்களுடைய தொழில்களாக இருந்து வந்துள்ளன. இவர்களை உருகுவே இந்தியர்கள்(Uruguay Indians) என்றும் அழைக்கின்றனர். அம்மண்ணின் மைந்தர்களான சருவாக்கள் ஸ்பேனியர்கள் கால்பதிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பின்னர் பல்லாண்டு காலம் ஸ்பேனியர்களுடன் போர் நடந்து வந்துள்ளது. அப்பகுதியில் மற்ற பழங்குடியினருடன் இவர்களுக்கு இருந்த பகையின் காரணத்தாலும், ஐரோப்பியர்களுடன் இருந்த விரோதத்தின் காரணத்தாலும், இவ்வின மக்கள் பல்லாயிரக் கணக்கில் மடியத் தொடங்கினர். அத்துடன் ஸ்பேனியர்கள் இவர்களைத் தேடிக் கண்டுபிடித்தும் அழித்து வந்துள்ளனர். 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் வெறும் 18 சருவாக்கள் மட்டுமே இருந்துள்ளனர். கேள்விப்படவே மிக விநோதமாக இருந்தது. மிருகங்களில் அழிவுநிலையில் உள்ள ஜீவராசிகள்(endangered species) எனச் சொல்வோமே அது போல இருந்தது. மண்ணாசையின் காரணமாக ஒரு இனத்தையே இன்னொரு இனம் அழித்த செய்தி நம்புவதற்குச் சற்று கடினமாகவும் வருத்தமளிக்க வைப்பதாகவும் இருந்தது.
1833 ஆம் ஆண்டு மொத்தம் நான்கு சருவாக்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர். அவர்களையும் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக பிரான்சு நாட்டின் தலைநகரான பாரிசிற்கு நாடு கடத்தியுள்ளனர். அங்கும் மிருகங்களை விட கீழ்தரமாக இவர்களை நடத்தியுள்ளனர். பாரிசில் இவர்களைக் காட்சி பொருட்களைப் போல கண்ட ஒரு ஓவியர் வரைந்த படம் தான் தபால்தலையாக வெளியிடப்பட்டுள்ளது. இதே காட்சியைச் சித்தரிக்கும் வண்ணம் உருகுவே நாட்டு தலைநகரான மாண்டிவீடியோவில் இதே போன்றொரு சிலையையும் நிறுவியிருக்கிறார்கள். மேலும் விபரம் தேவையானால் இத்தபால்தலை வெளியீட்டை ஒட்டி உருகுவே தபால்துறையின் வலைதளத்தில் வெளியான விபரங்களைப் பாருங்கள்.
மேலே உள்ளது அப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதி.
உருகுவே என்றதும் உங்களுக்கெல்லாம் ஞாபகத்துக்கு வருவது யார்? தமிழ்கூறு இவ்வலைப்பூவுலகில் ஒரே ஒருத்தர் தான். ஆமாங்க, சருவாக்களின் கதையை அறிந்து கொள்ள காரணமாக இருந்த இந்த Mint stamp - காஞ்சித் தமிழ்மகன், தென்னமேரிக்க தென்றல், டெக்ஸால் ஷகீலா...சே...டகீலா, வருங்கால உருகுவே ஜனாதிபதி, ஸ்பேனிஷ் மொழிஞாயிறு, ஜாவா பாவலர் கவிஞ்சர் கப்பிநிலவர் அவர்களுடைய உபயம் என்று நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையே இருக்கும் சானல் தீவுகளின்(Channel Islands) ஒரு பகுதியான அல்டெர்னி(Alderney) நாட்டின் வண்ணமிகு தபால்தலைகளைப் பாருங்கள். அல்டெர்னியில் உள்ள காட்சிகளையும் அத்தீவின் பெருமைகளையும் தெரியப்படுத்துவதற்காக வெளியிடப்பட்டுள்ள தபால்தலை தொடர்(series) கீழே. இத்தபால்தலைகளில் இருந்து தெரிந்து கொண்டது - இங்கிலாந்து ராணியின் குடியாட்சியின் கீழ் இன்னும் சில பகுதிகள் உள்ளன - அல்டெர்னி, குவெர்ன்சி, சார்க் ஆகிய தீவுகள் சானல் தீவுகளில் அடக்கம், இதை தவிர பசிபிக் பெருங்கடலிலும் பல தீவுகள் உள்ளன. கவுண்டி(County), ஷெரீஃப்(Sheriff) போன்று பெய்லிவிக்(Bailiwick) என்றொரு administrative division(தமிழ்ல என்னங்க?) இருப்பதைத் தெரிந்து கொண்டேன்.


கீழே இருப்பது எகிப்து நாட்டின் பயன்படுத்தப்பட்ட தபால்தலை ஒன்று. புராதனச் சின்னம் என்று தெரிகிறது, என்னவென்று தெரியவில்லை...அரபிக் மொழியில்(?) ஏதோ எழுதியிருக்கிறது. அதை படிக்கத் தெரிந்தவர்கள், தெரிந்து சொன்னால் நன்றியுடையவனாவேன்.

பசிபிக் பெருங்கடலில் உள்ள துவாலு எனும் தீவின் பாரம்பரிய நடனங்களில் ஒன்றான ஃபட்டேலேவைச்(Fatele) சித்தரிக்கும் மிண்ட் தபால்தலை கீழே. வாடிகனுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிகச்சிறிய நாடு என்பது துவாலு தீவின் சிறப்பு.

அடுத்த பதிவு : வாழ்த்தும் தலைகள்
Monday, December 10, 2007
எதப்'பூ' அனுப்பலாம்?
கன்ஃபீசன்ஸ்...மனுஷனா பொறந்தா ஒரே கன்ஃபீசன்ஸ் தான்யா. ஒரு கலைஞனுக்கு/ஒரு படைப்பாளிகளுக்கு அவனுடைய படைப்புகள் எல்லாம் கொழந்தைங்க மாதிரின்னு சொல்லுவாய்ங்க. அதே மாதிரி நம்ம படங்கள் எல்லாம் நமக்கு கொழந்தைங்க மாதிரி. (யாரும் இந்த மாதிரி எல்லாம் சொல்ல மாட்டீங்க...அதனால நானே சொல்லிக்கிறேன்...ஹி...ஹி...). வழக்கம் போல ஒரே கன்ஃபீஷன்ஸ்..எந்த கொழந்தையை ஸ்கூலுக்கு அனுப்பலாம்னு...
கொழந்தைங்கன்னா பெத்தவங்க பேரைக் காப்பாத்தணுமா இல்லியா? சொல்லுங்க? இது வரைக்கும் ஸ்கூலுக்கு ஒரு ஏழேட்டு கொழந்தைங்களை அனுப்பிருக்கேன். பேரை வாங்கிட்டு வாங்கடான்னா வாத்தியாரு கிட்ட மண்டைல கொட்டு வாங்கிட்டு ஃபெயிலாகி நிக்கிதுங்க ஒன்னொன்னும். இந்த தடவையாவது அட்லீஸ்ட் பார்டர் பாஸ் வாங்கற கொழந்தையா பாத்து அனுப்பனும்னு ஆசை. இதுல எதப்'பூ' அனுப்பலாம்...பாத்துச் சீக்கிரம் சொல்லுங்க.
பிற்தயாரிப்பு செய்யப்பட்ட கீழே உள்ள இருபடங்களும் (படம் 1 மற்றும் 5)புகைப்படப் போட்டிக்கானவை. தேர்ந்தெடுக்க உதவியாகக் கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி...நன்றி...நன்றி!! கொயந்தை பார்டர் மார்க்ல 5வதோ 6வதாவோ வந்தாக்கா அங்கிளுங்க கிட்டயும் ஆண்ட்டி கிட்டயும் ஆசிர்வாதம் வாங்க அனுப்பி வக்கிறேன் :)
1. சங்கு புஷ்பம்
2. கீழே இருக்கற படங்கள் 2,3,4,5,6 மட்டும் தான் போட்டிக்கின்னு தனியா எடுத்தது...மத்ததெல்லாம் பழைய சரக்கு தான்.
3. எடுத்த இடம் - லால் பாக்? கப்பன் பார்க்? மலர் கண்காட்சி? இல்லீங்கோ? பெங்களூர் ஜி.பி.ஓ(General Post Office). போஸ்ட் ஆப்பீஸ்ல பூவைப் படம் புடிக்கிற அளவுக்கு முத்திப் போச்சு.
4.
5.
6.
7. வெள்ளை செம்பருத்தி
8. பட்டிப்பூ - வேற பேரு இருந்தா சொல்லுங்கய்யா
9. பால்சம்
10. கேக்டஸ் மலர்
11. பேரெல்லாம் கேக்கப்பிடாது
12. கல் வாழை
13. சாமந்தி சூழ்ந்த தடாகத்தில் ரோஜா