Thursday, August 03, 2006

கயவன் பதில்கள் (அ) ஹாய் கயவன்!

ஹலோ! நான் தாங்க கயவன் பேசறேன். கேள்வி எல்லாம் பெருசா கேட்டுப் புட்டு பதிலும் சொல்லாம, ரிசால்டும் சொல்லாம பசிக்குதுன்னு நைட்டு எட்டரை மணிக்கே ஓடிப் போன அதே கயவன் தானுங்க. இப்ப நேத்து கேட்ட கேள்விக்கு பதில் சொல்றதா சொல்லி ஒரேடியா ஒரு பதிவு கயமைத்தனமும் பண்ணிக்கிறேனுங்க.

1. 'ஆக்னெஸ் கான்சே பொஜாசியூ' (Agnes Gonxhe Bojaxhiu) - இப்பெண்மணியை நாம் எவ்வாறு பிரபலமாக அறிகிறோம்?
பதில் : அன்னை தெரசா(Mother Teresa). இவர் அல்பேனியா(Albania) நாட்டைச் சேர்ந்தவர். பலர் சரியான பதிலைக் கூறியிருந்தார்கள்.


2. தன்னுடைய இறப்பிற்காகத் தானே இசைகோர்வை எழுதியதாக அறியப் பெறும் மேற்கத்திய இசை மேதை யார்? அவர் எழுதிய அந்த கடைசி இசைக் கோர்வையின் பெயர் என்ன?
பதில் : முதல் மாஸ்டர் கம்போசர்களில் ஒருவர் என அழைக்கப்படும் மோசார்ட்(Wolfgang Amadeus Mozart). இசை கோர்வையின் பெயர் 'தி ரிகொய்ம்'(The Requiem'). தன்னுடைய இறப்பிற்கு சில தினங்களுக்கு முன்னர் வேறு ஒருவருடைய மனைவியின் நினைவு நாள் அன்று இசைக்க தேவை என்று ஒரு தூதுவர் வந்து கேட்க, The Requiem முயற்சியில் ஈடுபட்டார் மோசார்ட். ஆனால் முழுதும் எழுதி முடிப்பதற்கு முன்னர் மோசார்ட் மர்மமான ஒரு காய்ச்சல் கண்டு காலம் ஆனார். மோசார்ட்டின் சிறந்த படைப்புகளில்(Master piece) ஒன்றாகக் கருதப்படுவது 'The Requiem'. இசையமைப்பாளரின் பெயரைச் சிலர் கூறியிருந்தாலும், இசை கோர்வையின் பெயரை யாரும் சொல்லவில்லை.

3. புலிட்சர் பரிசு பெற்ற இப்புகைப்படத்தின் தொடர்பு, எந்த வரலாற்று சம்பவத்தோடு உள்ளது? மேலதிக விபரங்கள் (புகைப்படம் எடுத்தவர், உடையின்றி ஓடி வரும் அப்பெண் குழந்தையின் பெயர் இவற்றையும் தெரிந்தவர்கள் கூறலாம்)

பதில் : வியட்நாம் போரின் போது விமானப்படையின் நபாம்(Napalm) என்ற ரசாயனத் தாக்குதலின் போது தன் உடம்பு பாதி எரிந்த நிலையில் ஓடி வரும் சிறுமியின் படம் அது. இப்போரின் அவலங்களையும், கொடுமைகளையும் உலகத்தினவர்களைத் திரும்பி பார்க்கச் செய்த படம். சிறுமியின் பெயர் ஃபான் தி கிம் ஃபுக்(Phan Thi Kim Phuc), படம் எடுக்கப்பட்ட நாள் ஜூன் 8, 1972. புகைப்படம் எடுத்தவர் Associated Pressஐச் சேர்ந்த நிக் உட்(Nick Ut). ஒடம்பு எரிஞ்ச நெலையில ஒடியாற புள்ளையைப் படம் எடுத்துருக்கானே பாவி, காப்பாத்தக் கூடாதுன்னு என்னைப் போலவே நெனக்கிறவங்களுக்கு அந்தச் சிறுமியை மருத்துவமனையில் சேர்த்து அவள் உயிரைக் காப்பாற்றியதும் நிக் தான்.

4. செவ்விந்தியர்களுடன்(American Indians) தொடர்பு படுத்தப் பெறும் தோலிலான கூடாரங்களின்(tents) பெயர் என்ன?
பதில் : டீபீ(Teepee). Red Indians என்று அழைக்கப் பட்டுக் கொண்டிருந்த இவர்களைத் தற்போது American Indians என்றோ Apache Indians என்றோ அழைக்கிறார்கள்.

5. '"Now we are all sons of bitches"' என்று கூறியவர் யார்? இவ்வாறு கூறுவதற்குப் பின்னணியாக அமைந்த வரலாற்று நிகழ்வு எது?
பதில் : கென்னத் பெயின்பிரிஜ்(Kenneth Bainbridge). மென்ஹட்டன் பிராஜக்ட்(Manhattan Project) என்று பெயர் கொண்டு இயங்கிக் கொண்டிருந்த அணுகுண்டு சோதனைகளின் முடிவுகளைப் பார்த்து பிராஜெக்டின் இயக்குநர் ஓபன்ஹெய்மரிடம்(J.Robert Oppenheimer) கூறியது. பலரும் ஓபன்ஹெய்மர் என்று பதிலளித்திருந்தனர். ஓபன்ஹெய்மர் கூறியது வேறு ஒரு மிகப் பிரபலமான வாக்கியம், பகவத் கீதையிலிருந்து எடுத்தாண்டது "I am become Death, the destroyer of worlds".

6. ஒரு ஜப்பானிய சமுராய் வீரனுக்கு 'மரியாதைக்குரிய மரணம்' எனக் கருதப் பெறும் தற்கொலைக்குப் பெயர் என்ன?
பதில் : செப்புகு(Sepukku) அல்லது ஹராகிரி(Hara Kiri). எதிரியிடம் மாட்டிக் கொள்வதை விட மரணிப்பதே ஒரு சமுராய் வீரனுக்கு அழகு என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்தது. எப்படி தற்கொலை செஞ்சிப்பாங்கன்னா கேக்கறீங்க? ரொம்ப சுலபம் ஜெண்டில்மென், உங்க வயித்தை நீங்களே கிழிச்சிக்கிட்டா நீங்களும் ஹரா கிரி செஞ்சிக்கிட்ட ஒரு சமுராய் வீரர் தான்.

7. பெங்கால் பிரிவினைக்குக் காரணமாகக் கருதப் பெறும் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநரின் பெயர் என்ன?
பதில் : கர்சன் துரை(Lord Curzon). கிழக்கு வங்காளம் என்றும் மேற்கு வங்காளம் என்றும் பிரிவினை நடந்த ஆண்டு 1905. கிழக்கு வங்காளத்தின் தற்போதைய பெயர் பங்கிளாதேஷ்.

8. காலணி வாங்கச் செல்லும் போது 7,8 என்று காலின் அளவை எடுக்கப் பயன்படும் அந்தப் பலகையின்(instrumentனு சொல்லலாமா?) பெயர் என்ன?
பதில் : பிரேணாக்(Brannock). ரொம்ப கடினமானதுன்னு நான் நெனச்ச கேள்வி. இதுக்கும் பல பேர் சரியான பதில் சொல்லிட்டாங்க. முதலில் விடை தந்தவர் ஒரு அனானிமஸ். அப்பா அனானிமஸுங்களா! உங்க பேரையும் கூட போட்டுக்கக் கூடாதா? தாவு தீந்துடுச்சு.

9. 'I have nothing to offer but blood, toil, tears and sweat' - இது எந்த உலகத் தலைவரின் பேச்சின்(speech) புகழ்பெற்ற வரிகள்.
பதில் : இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்(Winston Leonard Spencer Churchill). உலகத் தலைவர்களின் பேச்சுகளிலேயே மிகவும் தாக்கத்தை(inspirational) ஏற்படுத்திய ஒரு உரை.
http://www.winstonchurchill.org/i4a/pages/index.cfm?pageid=391

10. BMW என்பதன் ஆங்கில விரிவாக்கம் என்ன?
பதில் : பவேரியா மோட்டர் வர்க்ஸ்(Bavaria Motor Works). ஜெர்மன் மொழியில் 'Bayerische Motoren Werke AG'

11. வஸ்திரபூர், அகமதாபாத் - இவ்விடத்தில் எந்த நிறுவனத்தைக் காணலாம்?
பதில் : இந்திய மேலாண்மை கழகம்(Indian Institute of Management, Ahmedabad).

12. 1940களில் ஒரு தமிழ் திரைப்படத்தில் நடிக்க அக்காலத்தில் பெருந்தொகையாகக் கருதப்படும் ரூ.1 லட்சம் ஊதியமாகப் பெற்ற தமிழ் திரைப்பட நடிகை யார்? படத்தின் பேர் என்ன?
பதில் : கே.பி.சுந்தராம்பாள். படத்தின் பெயர் 'நந்தனார்'. ஒளவையார் என்று பலரும் கூறியிருந்தார்கள். பெண் வேடமிட்டு ஆண்கள் நடித்த அக்காலத்தில் ஆண் வேடமிட்டு கதாநாயகனாக(!) ஒரு பெண் நடித்தப் படம். இப்படத்தில் நடிப்பதைத் தவிர்க்க ஒரு லட்சம் ரூபாய் வேண்டுமென்று கே.பி.சு கேட்க, தயாரிப்பாளரும் ஒத்துக் கொண்டதால் இப்படத்தில் இவர் நடித்தார் என்று எப்போதோ கேள்வி பட்டது.

13. ஏழு எழுத்துகளைக் கொண்டு ஆங்கில வார்த்தைகளை உருவாக்கும் வார்த்தை விளையாட்டின்(board game) பேர் என்ன?
பதில் : ஸ்கிராபிள்(Scrabble). சிலர் விளையாட்டின் பெயர் ஏழு எழுத்துகளைக் கொண்டு உருவாக்கப் படுகிறது என்று எண்ணிவிட்டனர் என நினைக்கிறேன்.

14. ஃப்ரீ போட் வில்லி(Free Boat Willy) - இது எந்த ஹாலிவுட் கதாபாத்திரத்தின் அறிமுகப் படம்?
பதில் : மொதல்ல என்னை மன்னிக்கனும். படத்தோட பேரு "Steam Boat Willie". நான் தவறுதலா 'Free Boat Willy'னு கொடுத்துட்டேன். இப்படத்தில் தோன்றிய அந்த ஹாலிவுட் கதாபாத்திரம் 'மிக்கி மவுஸ்'(Mickey Mouse)

15. ஆபரேசன் டெசர்ட் ஸ்டார்ம்(Gulf war)இன் போது அமெரிக்கா தலைமையிலான allied forcesஇன் கமாண்டராக இருந்த ஜெனரலின் பெயர் என்ன?
பதில் : ஜெனரல் நார்மன் ஸ்வார்ஸ்காஃப்(Gen.Norman Schwarzkopf)

16. நாகை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி(Tranquebar) முதன்முதலில் எந்த வணிகக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது? (ஒரு சின்ன க்ளூ: இதுவும் ஒரு கிழக்கிந்திய கம்பெனி தான்)
பதில் : டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனி(Danish East India Company). எங்கோ இருக்கும் ஸ்கேண்டினேவிய நாடான டென்மார்க்கிலிருந்தும் தமிழ்நாட்டில் வந்து வணிகம் செய்திருக்கிறார்கள் என நினைக்கும் போது ஆச்சரியமாக உள்ளது. ஆயினும் ஆங்கில மற்றும் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனிகளைப் போல டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் இந்தியாவில் பலநாள் நிலைக்க இயலவில்லை. பலரும் டச்சு கிழக்கிந்திய கம்பெனி என்று கூறியிருந்தனர்.

17. டிரோமடரி(Dromedary) என்பது என்ன?
பதில் : ஒட்டகம். ஹி..ஹி...

18. முகமது யுசுப் கான் என்ற இயற்பெயர் கொண்ட பிரபல இந்தி திரைப்பட நடிகரின் திரை பெயர் என்ன?
பதில் : திலிப் குமார். கொத்ஸ் சொன்னது போல 'மருதநாயகம்'(வரலாற்று நாயகன்) இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டதும் அவர் பெயர் முகமது யுசுப் கான் என்றானது.

19. 'The Day of the Jackal' என்ற ஆங்கிலத் திரைப்படம் எந்த வரலாற்றுச் சம்பவத்தினைத் தழுவி எடுக்கப் பட்டது?
பதில் : ஃபிரெஞ்சு அதிபரான சார்ல்ஸ் டி கால்(Charles de Gaulle)இன் மீது ஏற்பட்ட கொலை முயற்சியைத் தழுவி எடுக்கப் பட்டது.

20. 'சமஸ்கிருதத்தில் காயிதம் எழுது' என்று அறிவுறுத்தி தன் இளைய சகோதரருக்கு கடிதம் எழுதியவர் யார்? யார் வேண்டுமானாலும் இவ்வாறு கடிதம் எழுதலாம், அதில் என்ன சிறப்பு? இவ்வாறு எழுதியவர் ஒரு தமிழர். மிக மிகப் புகழ்பெற்றவர். யார் அவர்?
பதில் : சுப்பிரமணிய பாரதி. மிகச் சிலரே முயன்றிருந்தனர். சரியான பதில் அளித்தவர் ஒருவரே- அவர் நண்பர் முத்துகுமரன். சூப்பருங்க. இது எங்கோ எப்போதோ படித்தது. எனக்கும் மேற்கோள் எதுவும் நினைவில்லை. பாரதியாருக்கு அவருடைய இளைய சகோதரர் ஆங்கிலத்தில் கடிதம் எழுதியதும் அதை கண்டு 'நம் நாட்டில் எத்தனையோ மொழிகள் இருக்க அயலானின் மொழியான ஆங்கிலத்தில் ஏன் கடிதம் எழுதினாய். வேண்டுமானால் சம்ஸ்கிருதத்தில் காயிதம் எழுது' என்று தன் சகோதரருக்கு அறிவுறுத்தி பதில் மடல் இட்டார்.

கேள்வியைப் படித்ததும் தமிழை இகழ்ந்து சமஸ்கிருதத்தில் காயிதம் எழுது என்று பாரதியார் கூறியது போல தோன்றினாலும், இங்கு பாரதியார் அவ்வாறு எழுதியதின் காரணத்தை(context) ஆராய்வது நலம். பதினான்கு மொழிகளை அறிந்த ஒரு தமிழ் கவிஞன், 'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று நவின்றவன் சமஸ்கிருதத்தில் காயிதம் எழுதச் சொல்வதன் காரணம் என எனக்குப் படுவது - நம்மை அடிமை படுத்தி வைத்திருக்கும் மாற்றானின் மொழியான ஆங்கிலத்தைப் பேசுவதிலும் வளர்ப்பதையும் காட்டிலும் நம்மவர்களின் மொழியினை அறிந்து கொள்வதும் வளர்ப்பதும் தேசப் பற்றையும் வளர்க்கும் என்ற சிந்தனை இருந்திருக்க வேண்டும். I also feel that Bharathiar tries to strike a right balance between மொழிப் பற்று(Linguistic fervour) and தேசப் பற்று(Patriotism). ரெண்டு வரி தாங்க சொல்லிருக்கேன். கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.

என்னடா நேத்து க்யூஸ் ப்ரோக்ராம், இன்னிக்கு திடீர்னு அறிவுரை - என்னாச்சு இவனுக்கு? எதனால இப்படி பிளேடு போடுறான்னு தானே நெனக்கிறீங்க? ப்ளாக்கர் சொல்லுது இது என்னோட நூறாவது பதிவாம். சந்தோஷ் தன்னோட நூறாவது பதிவுல கார்கில் வீரர்களை நினைவு கூர்ந்து ஒரு நல்ல பதிவு போட்டது போல நாமும் எதாச்சும் உருப்படியா செய்யனும்னு ஒரு ரோசனை இருந்துச்சுங்க...அதுக்குத் தான் கொஞ்சம் பீட்டரைக் கலந்து வுட்டு ஒரு கருத்து சொல்லிருக்கொம்ங்க. நீங்கல்லாம் நெனக்கிற மாதிரி இன்னும் முழுசா முத்தலீங்கோ.

அப்புறம் குவிஸ்ஸில் யார் ஜெயிச்சாங்கனு ஒரு கேள்வி வரும். நூறாவது பதிவைச் சாக்கா வெச்சு இன்னுமொரு கயமைத் தனம் பண்ணிக்கிறேன். நம்பர் ஒன்னு, ரெண்டுன்னு யாரும் இல்லீங்கோ. க்யூஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை நாம புதுசா என்ன தெரிஞ்சிக்கிட்டோம்ங்கிறதை மட்டும் தான் கணக்குல எடுத்துக்கனும்...நான் அப்படி தான் எடுத்துக்கிருவேன். படுவா! நீ வெளியே வாடா எங்களை எல்லாம் மாங்கு மாங்குன்னு ஒக்காந்து பதில் போட வச்சிட்டு பெலசாஃபியா பேசுறே...ஒனக்குன்னு ஆட்டோ வருதுடின்னு மக்கள்ஸ் சவுண்டு வுடறது கேக்குதுங்க. அப்படியெல்லாம் எதுவும் செஞ்சிடாதீங்க. எனக்கு இன்னும் புள்ளக்குட்டி கூட இல்லீங்க. அதுனால பாவம் பாத்து வுட்டுடுங்க. அப்பிடியே தலை மேல துண்டைப் போட்டுக்கிட்டு குதிச்சு ஓடிப் போயிடுறேன்.

க்யூஸ்(குவிஸ் தான்) நடத்தறது எம்புட்டு கஷ்டம்னு புரிஞ்சிடுச்சுங்க. அமோக ஆதரவு தந்த நண்பர்கள் மகேந்திரன், மோகன் தாஸ், வியாபாரி, இளா, தேவ், கொத்தனார், உங்கள் நண்பன் சரவணன், மா.சிவகுமார், கோவி.கண்ணன், மின்னல், குமரன் எண்ணம், நியூஸ் ஃப்ரம் ப்ரசன்னா, லப்டப், மங்கை, ராசா, சிபி, நன்மனம், கப்பி பய, முத்துகுமரன், பிரபு ராஜா, ராம், ஹரிஹரன் மற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத நாலு அப்ரெண்டிசுங்க...சே அனானிமஸ்கள் அனைவருக்கும் எனது நன்றி. வின்னர், ரன்னர் தான் சொல்லலை எங்க பேரைக் கூட ஏன் சொல்லலைனு கேட்கற மாதிரி யாரு பேராவது வுட்டுப் போயிருந்தா உங்க பேரையும் சேத்துக்கங்க. நூறு பதிவுகள் வரை என்னை வளர வைத்து அழகு பார்த்த அனைத்து வலைப்பூ நண்பர்களுக்கும் இத்தருணத்தில் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள கடமை பட்டிருக்கிறேன்.

130 comments:

ILA (a) இளா said...

மாப்பு, நீ கெலிச்சுட்டே, வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன், நெக்ஸ்ட் மீட் பண்றேன்

ILA (a) இளா said...

எப்படியோ அரசியல், சாதி அப்படின்னு இல்லாம இப்படி போட்டோ, ஜி.கே அப்படின்னு மண்டையை பிச்சுக்கிறதும் நல்லாதான் இருக்கு. இப்படியே பதிவுலகம் இருந்தா நல்லா இருக்குமே. சந்தோஷமா இருக்குய்யா

இவண்
ஏழை விவசாயி
டிராக்டர் சங்கம்
கொங்கு மண்டலம்

கைப்புள்ள said...

//வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்//

அப்பிடியா? இப்ப எத்தனாப்பு படிக்கிறே தம்பி?
:)

கைப்புள்ள said...

//இப்படியே பதிவுலகம் இருந்தா நல்லா இருக்குமே. சந்தோஷமா இருக்குய்யா//

அப்பப்போ எக்கச்சக்கமா வாரி குழி தோண்டி பொதச்சாலும் பாசக்காரருன்னு ப்ரூவ் பண்ணிக்கிட்டுத் தான் இருக்கீங்க வெவசாயி. நன்றிங்கோ.

இவண்
ஏழை வாத்தியார் புள்ள
சித்தூர்கட் போஸ்ட்
ராஜஸ்தான்

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

அரசியல்வாதி ஸ்டைலில் படிக்கவும்

உங்களின் நூறு ஆயிரம் ஆக வேண்டும் ஆயிரம் லட்சமாக வேண்டும். லட்சத்தையும் பற்றி கவலைப் படாமல் லட்சியத்தைப் பற்றியும் கவலைப் படாமல் கலாயப்பதையே நோக்கமாக கொண்ட நீங்கள் இன்னும் பல சாதனைகளைப் புரிய வேண்டும் என்று இந்த சந்தர்பத்திலே கேட்டுக் கொள்கிறேன்.

துளசி கோபால் said...

கைப்புள்ளெ,

நீங்க வெறும் கலாய்ச்சல்தான்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். எங்கியோ போயிட்டீரே ஐயா.....!!!!

இதைத்தான் சொன்னாங்களொ,'எந்தப் புத்துலே எந்தப் பாம்பு இருக்கோ'ன்னு.

நல்லா இருங்கப்பு. நல்ல இருங்க.

Udhayakumar said...

கைப்பு, கலக்கிட்டீங்க.... ஊரெல்லாம் கண்ணு கண்ணுன்னு சொல்லி எங்கண்ணை நோகடிச்சிட்டாங்க... அதான் வர லேட்டாயிடுச்சு...

இலவசக்கொத்தனார் said...

சங்கத்தின் 100 நாட்கள், உமது 100ஆவது பதிவு. ரெண்டுக்கும் சேர்த்து வாழ்த்துக்கள்.

நியாயப்படி 100 வாழ்த்துப் பின்னூட்டம் போடணும், ஆனா நாம ஒண்ணு போட்டாலே 100 போட்டா மாதிரிதானே.

அதனால - வாழ்த்துக்கள் மாமோவ்.

Unknown said...

நேத்து உங்க கேள்விகளை பார்க்கலை. பாத்திருந்தாலும் பதில் தெரிஞ்சிருக்காது! ஆனா இன்னைக்கு பதில்களைப்படிக்க சுவாரசியமா இருந்தது. கடைசியில் சொன்ன கருத்தும், சொன்ன விதமும் அருமை. இந்த நூற்றாண்டிலும் கைபர், போலன் பற்றியெல்லாம் சண்டை போடறவங்க யோசிக்கவேண்டிய விஷயம்.

Unknown said...

//"I am become Death, the destroyer of worlds".//

அப்படியா சொன்னார்? இது என்னவோ 'ஐ ஆம் தி எஸ்கேப்' மாதிரியில்ல இருக்கு.

சதம் அடிச்சதுக்கு வாழ்த்துக்கள்!!!

உங்கள் நண்பன்(சரா) said...

//எப்படியோ அரசியல், சாதி அப்படின்னு இல்லாம இப்படி போட்டோ, ஜி.கே அப்படின்னு மண்டையை பிச்சுக்கிறதும் நல்லாதான் இருக்கு. சந்தோஷமா இருக்குய்யா//

இளா நீ நம் இணமடா...
உண்மையாகவே சங்கத்தில் பலமே ஜாதி,மத , அரசியல் இல்லாத பதிவுகள் தான்,


//இப்படியே பதிவுலகம் இருந்தா நல்லா இருக்குமே. //

வாருங்கள் ஒரு புது(பதி)வுகலம் அமைப்போம்,

அன்புடன்...
சரவணன்.

உங்கள் நண்பன்(சரா) said...

சங்கத்தின் 100 வது நாள் விழா மேடையில் வீற்றுருக்கும் விழா நாயகன் அண்ணன் கைப்பூ ...

100 வது பதிவு போட்டிருப்பது இன்னும் சிறப்பூ,

வாழ்த்துக்கள்...

வாழ்த்தவும் வயதில்லை, வணங்கவும் வயதில்லை அதனால் அப்படியே பக்கதுல குந்திக்கிறேன்.


அன்புடன்...
சரவணன்.

நன்மனம் said...

அருமை!!!

கவிதா | Kavitha said...

100 வது பதிவுக்கு என் மற்றும் அணில் குட்டியின் வாழ்த்துக்கள்.

நாகை சிவா said...

உன்ன திட்டலாம் என்று பாய்ஞ்சு வந்தேன். 100வது பதிவா இருப்பதால் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
நல்லா இருட

மா சிவகுமார் said...

வாழ்த்துக்கள்.

நல்ல கேள்விகள், அருமையான பதில் பதிவு. உங்கள் பதிவுகளின் நடையும் கருத்துச் செறிவும் என்னை எப்போதுமே வியக்கச் செய்திருக்கின்றன. நல்ல அறிவாளிகள்தான் நல்ல நகைச்சுவையாளர்களாக இருக்க முடியும் என்பது உங்கள் கைப்புள்ளை பாணி பதிவுகள் தெளிவு படுத்தி வந்தன. இப்போது இந்த நூறாவது பதிவு எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தது போல அமைந்து விட்டது.

உங்கள் சங்க உறுப்பினர்கள் ஆட்சேபித்துக் கொண்டிருந்தால், தனியாக இன்னொரு வலைப்பூவைத் தொடங்கியாவது இது மாதிரியான பதிவுகளையும் தொடர்ந்து வெளியிடுங்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்

கைப்புள்ள said...

//நேத்து உங்க கேள்விகளை பார்க்கலை. பாத்திருந்தாலும் பதில் தெரிஞ்சிருக்காது! ஆனா இன்னைக்கு பதில்களைப்படிக்க சுவாரசியமா இருந்தது. கடைசியில் சொன்ன கருத்தும், சொன்ன விதமும் அருமை.//

உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி ரமணி.

//இந்த நூற்றாண்டிலும் கைபர், போலன் பற்றியெல்லாம் சண்டை போடறவங்க யோசிக்கவேண்டிய விஷயம்//

யாரையும் குறிப்பிட்டு சொல்லலீங்க. நான் யாரையும் சப்போர்டும் பண்ணலை. இந்த விவாதத்தை இங்கே வளர்க்க வேண்டாங்க ப்ளீஸ். எல்லாரும் ஒத்துமையா இருக்கணும்ங்கிற கருத்தைத் தான் சொல்ல வந்தேன்.

கைப்புள்ள said...

//உங்களின் நூறு ஆயிரம் ஆக வேண்டும் ஆயிரம் லட்சமாக வேண்டும். லட்சத்தையும் பற்றி கவலைப் படாமல் லட்சியத்தைப் பற்றியும் கவலைப் படாமல் கலாயப்பதையே நோக்கமாக கொண்ட நீங்கள் இன்னும் பல சாதனைகளைப் புரிய வேண்டும் என்று இந்த சந்தர்பத்திலே கேட்டுக் கொள்கிறேன்.//

வாங்க குமரன்,
வாழ்த்துகளுக்கு நன்றி. எல்லாம் சரி தான் "கலாயப்பதையே நோக்கமாக கொண்ட" இது தான் இடிக்குது. கலாய்ப்புக்கு ஸ்பெல்லிங்கே தெரியாதவனை நீங்க இப்பிடி எல்லாம் கலாய்க்கப் பிடாது.
:)

நாகை சிவா said...

உன்ன எதுக்கு திட்ட வந்தேனு, கேட்குறியா அத உன்கிட்ட சொல்ல மாட்டேன்.
மக்களே! இந்த நியாயத்த நீங்களே கேளுங்க. போன பதிவுல கேள்வி கேட்டாருல, அவர் கேட்ட 20 கேள்விக்கும் டான் டானு சரியான பதில உடனே அதாவது முதல் பின்னூட்டத்திலே சொல்லிட்டேன். அது எப்படிங்கற மேட்டரு அப்புறமா சொல்லுறேன். நம்ம பின்னூட்டத்த பாத்தவுடன் எல்லாமே சரியான பதிலா இருக்கு இத பார்த்து எல்லாரும் காப்பி பண்ணிடுவாங்க அதனால இத நான் இப்ப வெளியிடாம வைக்குறேன் சொல்லி போன போட்டு அழூத கெஞ்சினார், நமக்கு தான் இளகிய மனசு ஆச்சே. அதுவும் கேட்பது நம்ம தல மறுக்க முடியுமா, நானும் சரினு சொல்லிட்டேன். ஆனா அந்த பதிவுக்கு 100 மேல பின்னூட்டம் வந்ததும் நம்மள மறந்துட்டாரு. சரி அதுல தான் அப்படினு பாத்தா, விடை சொல்லுற பதிவுலாச்சும் நம்மள பத்தி ஒரு வார்த்த சொல்லி இருக்கனுமா இல்லையா. சித்தூர்காட்ல தனியா சித்தாள் வேல பாக்கும் போதே இத்துன சித்து வேல பாக்குறார் மக்களே. இதுக்கு இவர என்ன பண்ணலாம்.

siva gnanamji(#18100882083107547329) said...

இப்படியே எல்லா பதிவுகளும் புத்திசாலித்தனமான பொழுதுபோக்குகளாக இருந்தால்
எப்படி இருக்கும்........?

ரவி said...

எனக்கு பதில் சோல்லுங்க....

இந்தியாவில பாக்கிஸ்தான் தீவிரவாதிங்க இருக்கமாதீரி

பாக்கிஸ்தான்ல இந்திய தீவிரவாதிங்க இரூப்பாங்களா?

ரவி said...

விஜயகாந்த் வழக்கமாக தீவிரவாதிகளை தேடி செல்லும் முட்டிக்கால் அளவு தண்ணீர் உள்ள டன்னல் எங்கு உள்ளது ?

ALIF AHAMED said...

வாழ்த்துக்கள் தல

ALIF AHAMED said...

கலாய்ப்புக்கு என்பதை தப்பில்லாமல் தானே எழுதிய தானை தலைவன் அண்ணன் கைப்பூ வாழ்க வாழ்க !!

ILA (a) இளா said...

//அப்பிடியா? இப்ப எத்தனாப்பு படிக்கிறே தம்பி?//
உங்க பேரன் படிக்கிற வகுப்புதான் தாத்தா

ILA (a) இளா said...

::MUST BE PUBLISHED::
கயவன்னு சொல்றீங்க அப்படின்னா கவயமத்தனம் பண்றவங்கதானே அர்த்தம்.

கைப்புள்ள said...

//"I am become Death, the destroyer of worlds".//

அப்படியா சொன்னார்? இது என்னவோ 'ஐ ஆம் தி எஸ்கேப்' மாதிரியில்ல இருக்கு.

சதம் அடிச்சதுக்கு வாழ்த்துக்கள்!!!//

அட ஆமாங்க உண்மையிலேயே அப்படித் தான் சொல்லிருக்காரு. இங்கே பாருங்க.
http://en.wikipedia.org/wiki/Manhattan_project

ஒரு வேளை ஓபென்ஹெய்மர், கவுண்டமணி கிட்ட இங்கிலீஷ் ட்யூசன் படிச்சாரோ என்னவோ?
:)

துபாய் ராஜா said...

கைப்பு,'நைன்டி' தாண்டி 'நூறு' அடிச்சதுக்கு வாழ்த்துக்கள்.அப்படியே குவார்ட்டர், ஹாஃப், ஃபுல்லுனு போய்க்கினே இரு நைனா !!! :-)

துபாய் ராஜா said...

// "அப்பிடியா? இப்ப எத்தனாப்பு படிக்கிறே தம்பி?//
உங்க பேரன் படிக்கிற வகுப்புதான் தாத்தா " //

இளா!அப்ப தலைப்பை "கி(ழ)யவன் பதில்கள் (அ) ஹாய் கி(ழ)யவன்!" னு
மாத்திடலாம் கண்ணு !!! :-)

கப்பி | Kappi said...

நாலு பேரு நாக்கு மேல பல்ல போட்டு பேசாம நல்லபடியா எழுதி நல்லா இரு தல..நல்லாவே இரு

நாமக்கல் சிபி said...

அட! நூறாவதை நான் கவனிக்கவே இல்லையே தலை!

வாழ்த்துக்கள் ஃபார் யுவர் செஞ்சுரி!

கைப்புள்ள said...

//கைப்பு, கலக்கிட்டீங்க.... ஊரெல்லாம் கண்ணு கண்ணுன்னு சொல்லி எங்கண்ணை நோகடிச்சிட்டாங்க... அதான் வர லேட்டாயிடுச்சு...//

வாங்க உதயகுமார்,
பாஸ்டன் பாலா பதிவுல நீங்க கலக்குனதை பாத்துட்டு நீங்க வருவீங்கன்னு உண்மையிலேயே எதிர்பார்த்தேன். சரி அடுத்த வாட்டி பாத்துக்கலாம்.
(அடுத்த வாட்டி வேற போடுவியான்னு யாரு சவுண்டு?)

கைப்புள்ள said...

//சங்கத்தின் 100 நாட்கள், உமது 100ஆவது பதிவு. ரெண்டுக்கும் சேர்த்து வாழ்த்துக்கள். //
டேங்ஸ் கொத்ஸ்

//நியாயப்படி 100 வாழ்த்துப் பின்னூட்டம் போடணும், ஆனா நாம ஒண்ணு போட்டாலே 100 போட்டா மாதிரிதானே//
அப்பிடித் தான் ஊருக்குள்ர பேசிக்கிறாய்ங்க.

//அதனால - வாழ்த்துக்கள் மாமோவ்//
இது யாரு Anatoly Karpov மாதிரி மாமோவ் ரஷியப் பேரு மாதிரி இருக்கு?

கைப்புள்ள said...

//இளா நீ நம் இணமடா...
உண்மையாகவே சங்கத்தில் பலமே ஜாதி,மத , அரசியல் இல்லாத பதிவுகள் தான்,//

சரவணா!
நீ இளாவைச் சின்னப் பையன்னு நெனச்சி வாடா போடான்னு எல்லாம் பேசுற? இது கொஞ்சம் கூட நல்லால்ல. அவருக்கு உன் வயசுல ஒரு பையன் இருக்கான். வேணா ஊருக்குள்ள கேட்டுப் பாரு.

Unknown said...

ஷ்பானிஸ்ல

னொமி ஆமெஸ்,
அமொரா,
இதெல்லாம் என்னா அப்றம்

"லிவின்லவீடா லோக்கா "

இது என்னா?

Syam said...

நாலு பேரு நல்லா இருக்கனும்னா 20 கேள்வியும் அதுக்கு பதிலும் தப்பில்ல....

நூறாவது பதிவு போட்ட சங்கத்தின் மூத்த சிங்கம் (அது தான் இளா சொல்லீட்டாரே) வாழ்க வாழ்க...

Syam said...

//ஆனா அந்த பதிவுக்கு 100 மேல பின்னூட்டம் வந்ததும் நம்மள மறந்துட்டாரு//

பங்கு சரியா சொன்ன...

நானும் ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்லல என்ன ஒரு தெனா வெட்டு இருந்தா என் பேரயும் விட்டு இருப்பார்.... :-)

Sridhar Harisekaran said...

தல! நேத்து உங்க பதிவ பார்ததும் தலை சுத்தி பைத்தியம் மாதிரி ஆயிட்டேன். சுத்தமா வேலையே ஒடல. உங்க 100 வது பதிவே இப்படி இருக்குதுனா இன்னும் 150, 200 பதிவு எல்லாம் கீழ்ப்பாக்கம் பக்கத்தில் இருந்துதான் படிக்கனும். ரொம்ப யோசிக்க வச்சிட்டிஙக.

ச்ரிதர்

Unknown said...

நூறு தல கொண்ட பதிவு கயவன் வாள்க - சீ, சரியா இல்லியே, நூறு பதிவு கண்ட கயவன் தல வாள்க!

குயுகுயு குயிஜூ: அநியாயத்துக்கு 8(IST)க்கெல்லாம் கடைய கட்டிட்டிங்க. நெசமாவே 14 பதில், கூகிளாண்டவர் சத்தியமா 5 பதில் தெரியுமாக்கும் எனக்கு. சரின்னு பாத்தா முக்காலே மூணு வீசம் பதில் போட்டுட்டாங்க, The Requiem மட்டும் கூகிள்-ல தேடறதான்னுட்டு விட்டுட்டேன்:-(

என்றாலும், சாதி, அரசியல்னு இல்லாம கலக்கும் கயவத் தல வாள்க! வ.வா.சங்கம் வாள்க. நூறு ஆயிரம், பல்லாயிரமாக வளர்க.

இப்பிடிக்கு, வ.வா.ச. கட்டடம் கூட்டுபவர் (அப்பிடி தான் சங்க ரகசியம் லாம் தெரியும்).

கைப்புள்ள said...

//சங்கத்தின் 100 வது நாள் விழா மேடையில் வீற்றுருக்கும் விழா நாயகன் அண்ணன் கைப்பூ ...
100 வது பதிவு போட்டிருப்பது இன்னும் சிறப்பூ,
வாழ்த்துக்கள்...
வாழ்த்தவும் வயதில்லை, வணங்கவும் வயதில்லை அதனால் அப்படியே பக்கதுல குந்திக்கிறேன்//

அறுபடை வீடு கொண்ட திருமுருகா அப்பனே ஞானபண்டிதா சரவணா,
வாழ்த்தெல்லாம் நல்லாத் தான் இருக்கு. ஆனா சரவணன்னு பேரு வச்சிருக்கே...அப்பப்ப நம்ம பேராசிரியர் கார்த்திக் எங்கேருந்தோ வந்து முருகேஷா முருகேஷான்னு வேற என்னை கூப்பிட்டு கதிகலங்க வச்சிட்டுப் போறாரு. 'மாப்பூ வச்சிட்டாண்டா ஆப்பு'ன்னு பொலம்பற அளவுக்குக் கொண்டு போய் என்னை வுட்டுட மாட்டேங்கிற நம்பிக்கைல நானும் கமுக்கமா நம்பி உன் பக்கத்துல குந்திக்கிறேன்.

கைப்புள்ள said...

//நீங்க வெறும் கலாய்ச்சல்தான்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். எங்கியோ போயிட்டீரே ஐயா.....!!!!//
எங்கேயும் போகலைங்கக்கா! இங்கண ராஜஸ்தான்ல தான் ஒக்காந்துருக்கேன்.

//இதைத்தான் சொன்னாங்களொ,'எந்தப் புத்துலே எந்தப் பாம்பு இருக்கோ'ன்னு//
பாம்பா எங்கே? ஐயோ பாம்ப்ரு....நான் எஸ்கேப்.

//நல்லா இருங்கப்பு. நல்ல இருங்க//
சொல்றதுக்கெல்லாம் சும்மா கிண்டல் பேச்சு பேசிக்கிட்டு இருந்தாலும் இந்த மாதிரி யாராச்சும் மனசாற வாழ்த்தும் போது உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமாத் தான் இருக்கு. இதையெல்லாம் கேக்க உண்மையிலேயே குடுத்து தான் வச்சிருக்கனும். ரொம்ப நன்றி.

கைப்புள்ள said...

//அருமை!!!//
வாங்க நன்மனம். பாராட்டுகளுக்கு நன்றி.

கைப்புள்ள said...

//100 வது பதிவுக்கு என் மற்றும் அணில் குட்டியின் வாழ்த்துக்கள்//

வாங்க கவிதாம்மா! உங்கள் இருவரின் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றி.

கைப்புள்ள said...

//உன்ன திட்டலாம் என்று பாய்ஞ்சு வந்தேன். 100வது பதிவா இருப்பதால் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்//
நீ புலி இல்ல...அதான் பாயுறே. கடிக்காம வாழ்த்து சொல்லியிருக்கே. ஆச்சரியமா இருக்கு? ஆமா! எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் நாய் கடிச்சதுனா தொப்புளை சுத்தி 16 ஊசி...புலி கடிச்சதுன்னா?

கைப்புள்ள said...

//உன்ன எதுக்கு திட்ட வந்தேனு, கேட்குறியா அத உன்கிட்ட சொல்ல மாட்டேன்.
மக்களே! இந்த நியாயத்த நீங்களே கேளுங்க. போன பதிவுல கேள்வி கேட்டாருல, அவர் கேட்ட 20 கேள்விக்கும் டான் டானு சரியான பதில உடனே அதாவது முதல் பின்னூட்டத்திலே சொல்லிட்டேன். அது எப்படிங்கற மேட்டரு அப்புறமா சொல்லுறேன். நம்ம பின்னூட்டத்த பாத்தவுடன் எல்லாமே சரியான பதிலா இருக்கு இத பார்த்து எல்லாரும் காப்பி பண்ணிடுவாங்க அதனால இத நான் இப்ப வெளியிடாம வைக்குறேன் சொல்லி போன போட்டு அழூத கெஞ்சினார், நமக்கு தான் இளகிய மனசு ஆச்சே//
ஆகா செல்லம்! இது தான் ஒன் கோவத்துக்குக் காரணமா? ஏன்ப்பா நீ அறிவாளி அதுவும் ஜிகேல சூரப்புலின்னு எனக்குத் தெரியும். ஆனா உன் கெட்ட நேரம் சங்கத்து ஆளாப் போயிட்டியே? 20 கேள்விக்கும் நாகை சிவா ஒருத்தர் தான் சரியான பதில் சொன்னாருன்னு சொன்னா நான் தான் ஏதோ கொஸ்டீன் பேப்பர் அவுட் பண்ணிட்டேன்னு மக்கள் நினைக்க மாட்டாங்க?...அதோட ஒங்க நாகை மாவட்டத்தைப் பத்தின கேள்வி வேற அதுல இருக்கு. நான் சொல்றதை கொஞ்சம் உன் புலி குணத்தையெல்லாம் ஏற கட்டிட்டு மனுசனா ஒக்காந்து யோசிச்சுப் பாரு ஒனக்கே புரியும்.

//அனா அந்த பதிவுக்கு 100 மேல பின்னூட்டம் வந்ததும் நம்மள மறந்துட்டாரு. சரி அதுல தான் அப்படினு பாத்தா, விடை சொல்லுற பதிவுலாச்சும் நம்மள பத்தி ஒரு வார்த்த சொல்லி இருக்கனுமா இல்லையா. சித்தூர்காட்ல தனியா சித்தாள் வேல பாக்கும் போதே இத்துன சித்து வேல பாக்குறார் மக்களே. இதுக்கு இவர என்ன பண்ணலாம்.//
உன்னை மாதிரி ஆளுங்களுக்காகத் தானே இத போட்டுருக்கேன்- "வின்னர், ரன்னர் தான் சொல்லலை எங்க பேரைக் கூட ஏன் சொல்லலைனு கேட்கற மாதிரி யாரு பேராவது வுட்டுப் போயிருந்தா உங்க பேரையும் சேத்துக்கங்க". இத படிச்சிட்டு வந்தும் இந்த மாதிரி ஒரு பின்னூட்டம் போடறியே உன்னை என்ன பண்ணலாம்னு அதே ஜனங்களைக் கொஞ்சம் கேட்டுச் சொல்லு.

கைப்புள்ள said...

//வாழ்த்துக்கள்.//
வாங்க சிவகுமார் சார்! உங்க புகைப்படத்தைப் பாத்தா உங்களை எங்கேயோ எப்பவோ பாத்த மாதிரியே இருக்கு. ஒரு ஆங்கிள்ல மேஜர்.ராஜ்யவர்தன்சிங் ராடோர் மாதிரி இருக்கீங்க. :)

//நல்ல கேள்விகள், அருமையான பதில் பதிவு. உங்கள் பதிவுகளின் நடையும் கருத்துச் செறிவும் என்னை எப்போதுமே வியக்கச் செய்திருக்கின்றன//உங்கள் பின்னூட்டம் மிகவும் ஊக்கம் அளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. நம் பதிவுகளைத் திறனாய்வு செய்து ஒருவர் வாசிக்கிறாரா என்று என்னும் போது மகிழ்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது.

//நல்ல அறிவாளிகள்தான் நல்ல நகைச்சுவையாளர்களாக இருக்க முடியும் என்பது உங்கள் கைப்புள்ளை பாணி பதிவுகள் தெளிவு படுத்தி வந்தன. இப்போது இந்த நூறாவது பதிவு எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தது போல அமைந்து விட்டது.//
மொதல்ல எங்க அம்மா கிட்ட உங்க பின்னூட்டத்தைக் காட்டனும். "உன்னையும் உன் தம்பியையும் வளர்த்து பெரியவனாக்குறதுக்குப் பதிலா ரெண்டு கழுதையை வளர்த்துருந்தா இந்நேரத்துக்கு பொதியாவது சுமக்கும்"னு சொல்லுவாங்க. இதை காட்டி இப்ப என்ன சொல்றீங்கன்னு கேட்கனும். மிக்க நன்றி.
:)

//உங்கள் சங்க உறுப்பினர்கள் ஆட்சேபித்துக் கொண்டிருந்தால், தனியாக இன்னொரு வலைப்பூவைத் தொடங்கியாவது இது மாதிரியான பதிவுகளையும் தொடர்ந்து வெளியிடுங்கள்.//
தங்களைப் போன்ற நண்பர்களின் ஆதரவோடு இது போன்ற பதிவுகள் கண்டிப்பாகத் தொடரும். ஆனால் இது போன்ற பதிவுகளை நான் இதுவரை வெளியிடாததற்கு சங்கத்து உறுப்பினர்கள் எவ்விதத்திலும் பொறுப்பல்ல. என்னுடைய சோம்பலே இதற்கு காரணம் என்று சொல்ல வேண்டும். மேலும், நான் என்னுடைய கடந்த பதிவில் கேட்ட சில கேள்விகளைத் தழுவிய பதிவுகள் வெகு காலமாக புதுப்பிக்கப் படாத என்னுடைய ஆங்கில பதிவில் ஏற்கனவே உள்ளன. ஆயினும் அப்பதிவுகளைக் காண்பார் எவருமில்லை. தமிழில் எழுதத் தொடங்கியதும், குறுகிய காலத்தில் ஒத்தக் கருத்துடைய நண்பர்களைப் பெற்றதை என் பாக்கியம் என்றே கருதுகிறேன். அவர்களும் நல்கிய முயற்சியினாலும் உழைப்பினாலும் 'கைப்புள்ள' என்ற பெயர் பிரபலமடைந்ததும் பின்னர் வ.வா.சங்கம் துவங்கியதும் இன்னும் பல நண்பர்களைப் பெறும் வாய்ப்பமைந்ததையும் என்பதனையும் என் பதிவுகள் பலரைச் சென்று சேர்வதற்குக் காரணமாக இருந்தது என்பதனையும் கூறத் தவறினால் நான் நன்றி மறந்தவனாவேன்.

கைப்புள்ள said...

//இப்படியே எல்லா பதிவுகளும் புத்திசாலித்தனமான பொழுதுபோக்குகளாக இருந்தால் எப்படி இருக்கும்........?//
தாங்கள் என் மீது வைத்துள்ள மதிப்புக்கு மிக்க நன்றி சார். ஆயின் சிறப்பாக எழுதும் பதிவர்கள் வலைப்பதிவுலகில் பலர் இருக்கிறார்கள் என்பது என் எண்ணம்.

கைப்புள்ள said...

//எனக்கு பதில் சோல்லுங்க....
இந்தியாவில பாக்கிஸ்தான் தீவிரவாதிங்க இருக்கமாதீரி
பாக்கிஸ்தான்ல இந்திய தீவிரவாதிங்க இரூப்பாங்களா?//
வாம்மா ஷோபனா ரவி,
சாரி...சாரி...ஒரு ஸ்மால் டங் ஆஃப் தி ஸ்லிப்ல மிஸ்டேக் ஆகிப் போச்சு...கண்டுக்காதமா செந்தழல் ரவி. ஆங்...என்ன கேள்வி கேட்ட...Well actually speaking...In India Pakistan terrorists....you know...கொஞ்சம் இருப்பா நம்ம நாகை சிவாவுக்கு ஐ.நாவுல லீவு தர மாட்டேனுட்டாங்களாம். அதுக்கு சிபாரிசா ஐ.நா.சபைல நம்ம அன்னானுக்கு போன் பண்ணிக்கிட்டு இருந்தேன்...லைன் இப்பத் தான் கெடச்சிருக்கு...கொஞ்சம் வெயிட்டு...பயலோட லீவு விசயம் பேசிட்டு வந்துர்றேன்.

கைப்புள்ள said...

//விஜயகாந்த் வழக்கமாக தீவிரவாதிகளை தேடி செல்லும் முட்டிக்கால் அளவு தண்ணீர் உள்ள டன்னல் எங்கு உள்ளது ?//
இப்ப கேட்டியே இது நீ ஒரு விஞ்ஞானின்னு ப்ரூவ் பண்ணற கேள்வி. ஒனக்கு புரியற மாதிரி சுருக்கமாவே சொல்றேன் கேட்டுக்க...நம்ம அடையாறு இருக்குல்ல அடையாறு அங்க மத்திய கைலாஸ் புள்ளாரு கோயிலு இருக்கு கேள்வி பட்டிருக்கியா? அதான்பா ராஜ்பவன்லேருந்து அடையார் சிக்னல் போவ சொள்ள ஒன் பீச்சாங்கை பக்கம் வரும் பாரு அதே கோயில் தான். அங்கே சிக்னல்ல நிக்க சொள்ள உசாரா நின்னுக்க. வண்டி பேப்பர் எல்லாம் இல்லன்னா மாமாவுக்கு வேற நூறு ரூவா அழுவனும். அந்த மத்திய கைலாஸ் சிக்னலாண்ட சோத்தாங்கை பக்கம் திரும்புனதும் உன் பீச்சாங்கை பக்கம் கெனால் வரும் பாரு அதான்பா அதுல தண்ணிக்கு பதிலா இப்ப ரெயில் கூட ஓடுதே அதான். இந்த சாஃப்ட்வேர் எழுதுற புள்ளைங்கல்லாம் வேலை செய்யுற எதோ பார்க்கோ பீச்சோ இருக்கு பாரு அந்த ரோடு தான். அதே ரோட்டுல நேரா எங்கயும் திரும்பாம ஒரு பர்லாங் போய்க்கினே இரு...அதுக்குன்னு அப்பிடியே நேரா பார்க்கு வரைக்கும் போயிராதே....உன் சோத்தாங்கை பக்கம் ஒரு தூங்குமூஞ்சி மரம் வரும். அந்த மரத்தைப் பாத்ததும் சடார்னு ஒரு பிரேக் போட்டு ஸ்டாப் பண்ணி ஒரு ரைட் அடிச்சிக்க...அப்பிடியே ரைட்டுல உள்ள ஒரு அரை கி.மீ. போனின்னா மாடர்ன் ரொட்டி கம்பெனி வரும்...அங்கே போவாதே அங்க ஒனக்கு ரொட்டி தான் கெடக்கும்... அது பக்கத்தாப்புல இந்த எடை கல்லு, தராசு இதுக்கெல்லாம் சீல் குத்துற கவர்மெண்ட் கம்பெனி இருக்குது...அங்கே போனின்னா ஒனக்கும் ஐஎஸ்ஐ சீல் குத்திடுவாங்க...அதுனால அங்கேயும் உள்ள பூந்துடாத. அதுக்கு நேர் எதுத்த மாதிரி 'நம்ம பொரட்சித் தலிவர்' பேருல படம் எடுக்குற ஸ்டூடியோ கட்டி வச்சிக்கிறான். அங்கன தான் நம்ம கேப்டன் கெட்டவங்களைப் பந்தாடுற அந்த எடம் இருக்குது. என் பேரைச் சொல்லி வாச்மேனுக்கிட்ட சாவி வாங்கி அந்த டன்னலைப் பாத்துக்க. எதுனா ரப்ச்சர் பண்ணான்னா மட்டும் நம்ம கையில வந்து சொல்லிக்க...சரியா?

கைப்புள்ள said...

//வாழ்த்துக்கள் தல//
ரொம்ப டேங்ஸ்பா.
//கலாய்ப்புக்கு என்பதை தப்பில்லாமல் தானே எழுதிய தானை தலைவன் அண்ணன் கைப்பூ வாழ்க வாழ்க !!//
மின்னலு! இது எல்லாம் மட்டும் நல்லா வக்கணையா பேசு. உன் பதிவுக்குப் பின்னூட்டம் போட வந்தா மட்டும் எர்ரர் வர்ற வைச்சு என்னை ஒவ்வொரு தடவையும் தொரத்தி அடிச்சிடு. அதெப்படிய்யா உன் பதிவுல மட்டும் ப்ளாக்கர் என்னை லாகின்/பாஸ்வர்டு மட்டும் கேக்கவே மாட்டேங்குது?

கைப்புள்ள said...

//உங்க பேரன் படிக்கிற வகுப்புதான் தாத்தா//
வயசைக் குறைச்சு காட்டனும்னு என்னங்க உங்களுக்கு அப்பிடி ஒரு புடிவாதம்? கேளுங்க மக்களே! இந்த வயசுலயும் மனுசன் வீக்கோ டர்மெரிக் பூசிக்கிறாராம்...இன்னும் கூடுதலா வயசைக் குறைச்சு காட்டனும்னா ஓரு டியூப் பேர் அண்ட் லவ்லியைப் பிதுக்கவும் அஞ்சறதில்லையாம் க்கிறாராம்...தோளுக்கு மேலே வளந்த பையனை வச்சிருக்குற நீங்க இந்த பேச்செல்லாம் பேசறதை கேக்கறதுக்கு எனக்கே அசிங்கமா இருக்கு. இனிமவாச்சும் இந்த ஜிகினா வேலையெல்லாம் குறைச்சிட்டு ஒழுங்கா குடும்பத்தைக் கவனிங்கய்யா.

கைப்புள்ள said...

//கைப்பு,'நைன்டி' தாண்டி 'நூறு' அடிச்சதுக்கு வாழ்த்துக்கள்.அப்படியே குவார்ட்டர், ஹாஃப், ஃபுல்லுனு போய்க்கினே இரு நைனா !!! :-)//
வாங்கய்யா புது மாப்பிளை! வாழ்த்துக்கு நன்றி. க.பி.யா இல்லாத போதே இம்புட்டு தைரியமா குவார்ட்டர், ஹாஃப்னு பேசறே? எப்பிடி?

//இளா!அப்ப தலைப்பை "கி(ழ)யவன் பதில்கள் (அ) ஹாய் கி(ழ)யவன்!" னு மாத்திடலாம் கண்ணு !!! :-)//
என்னா இருந்தாலும் நானும் நீயும் ஒரே துபாய், ஒரே விவேகானந்தர் குறுக்கு தெரு. நீ வெவசாயி கூட சேந்துக்கிட்டு என்னை வார்றது அவ்வளவா நல்லால்ல...அது ஒனக்கும் நல்லதுல்ல சொல்லிட்டேன் ஆமா!

கைப்புள்ள said...

//நாலு பேரு நாக்கு மேல பல்ல போட்டு பேசாம நல்லபடியா எழுதி நல்லா இரு தல..நல்லாவே இரு//
கப்பீஸ்,
வாழ்த்துக்கு நன்றிப்பா.

இனி வரும் காலத்திலும்
'அகம்' அது புறம் அது
தெறிக்காமல்
சிரம் அது மெய் மேல்
இருந்து நல்வழியில்
உயிர் வளர்க்க
வேண்டுவதே யல்லால் வேறொன்றும்
யாம் வேண்டோம் பராபரமே!
:)

கைப்புள்ள said...

//அட! நூறாவதை நான் கவனிக்கவே இல்லையே தலை!
வாழ்த்துக்கள் ஃபார் யுவர் செஞ்சுரி!//
நக்கல் சிகரமே! ஒரு வட்டத்துக்குள் நாலு குவார்ட்டரை அடக்கி வரலாறு படைத்த அன்பின் டாக்டரே! நின் வாழ்த்துகளுக்கு நன்றி. வாழி நீவிர்! வாழிய பல்லாண்டு!!

கைப்புள்ள said...

//::MUST BE PUBLISHED::
கயவன்னு சொல்றீங்க அப்படின்னா கவயமத்தனம் பண்றவங்கதானே அர்த்தம்//
வழக்கம் போல ஒன்னும் பிரில. எளுதுன ஒங்களுக்காச்சும் பிரியுதான்னு ஒருக்கா படிச்சிப் பாத்து சொல்லுங்க.

நன்மனம் said...

//...அதான்பா ராஜ்பவன்லேருந்து அடையார் சிக்னல் போவ சொள்ள ஒன் பீச்சாங்கை பக்கம் வரும் பாரு அதே கோயில் தான்.... //

மருக்கா படி....

இது தெரிஞ்சே சொன்னதா இல்ல ஸ்மால் மிஷ்டேக்கா!!!

ஆனாலும் ரூட் மேப், மர லொகேசனோட கொடுத்து அசத்திட்ட கைப்புள்ள.... அது சரி நீ எதுக்கு அந்த சீல் குத்தற கம்பெனியாண்ட போன, அத சொல்லு...:-)

சாரிபா 100க்கு வாழ்த்து சொல்ல உட்டுபோச்சு, இந்த புடி ஒரு வாழ்த்து.

இராம்/Raam said...

தல,

உன்னை பத்தி கவிஜ எழுதினாதுக்கு வெளிநாட்டிலிருந்து திட்டி மெயில் அனுப்பியிருக்கனுங்க....

துபாய் ராஜா said...

//"இம்புட்டு தைரியமா குவார்ட்டர், ஹாஃப்னு பேசறே? எப்பிடி?"//

உறவுக்காரங்கல்லாம் ஊர்ல இருக்க தைரியம்தான்.

// "நானும் நீயும் ஒரே துபாய், ஒரே விவேகானந்தர் குறுக்கு தெரு. நீ வெவசாயி கூட சேந்துக்கிட்டு என்னை வார்றது அவ்வளவா நல்லால்ல...அது ஒனக்கும் நல்லதுல்ல சொல்லிட்டேன் ஆமா! " //.

அடவுடு தல!நாமெல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு.
ரெண்டுக்குள்ள ரெண்டு.ஊருக்கு வந்த
இடத்துல வெவசாயிக்கும்,நமக்கும் ஒரு உறவு ஃபார்ம் ஆயிடுச்சுப்பா.

ILA (a) இளா said...

//::MUST BE PUBLISHED::
கயவன்னு சொல்றீங்க அப்படின்னா கவயமத்தனம் பண்றவங்கதானே அர்த்தம்//
கயவன்னு சொல்றீங்க அப்படின்னா கயமத்தனம் பண்றவங்கதானே அர்த்தம். போலீஸ்காரரே......

ILA (a) இளா said...

[அரசு பதில்கள் (அ) ஹாய் மதன்]
ஹாய் மதனில எழுத்துப்பிழை, தேவ் என்னான்னு கேளு.
பெரிய....... நெனப்பு.

Unknown said...

ஹாய் என்பது வடமொழிச் சொல்.. அதைத் திருத்தி தமிழில் எழுதுமாறு உன்னை மிரட்டுகிறோம்.. ஆமா.. சுத்தத் தமிழில் பதிவுகளுக்குப் பெயர் வச்சா வரி விலக்கு உண்டா மோகா:)

நன்மனம் said...

//... வரி விலக்கு உண்டா...//

முதுகுல வரி வாங்காம விலக்கு உண்டு :-)

dondu(#11168674346665545885) said...

வணங்க வயதில்லை, வாழ்த்துகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கைப்புள்ள said...

//ஷ்பானிஸ்ல

னொமி ஆமெஸ்,
அமொரா,
இதெல்லாம் என்னா அப்றம்

"லிவின்லவீடா லோக்கா "

இது என்னா?//

ஸ்பானிஷ் நம்ம வருங்கால சின்ன மாமியார் டங்கா இருந்தாலும், நம்ம கப்பி இந்த ஸ்பானிஷ் மொழிபெயர்ப்பு எல்லாம் பண்ணுறதுக்கு ரொம்ப ஆர்வமா இருப்பாப்புல...அதுனால பெருந்தன்மையோட ஸ்பானிஷ் சின்ன புலவர் கப்பியை இக்கேள்விக்கு பதில் சொல்ல அழைக்கிறேன்.

கைப்புள்ள said...

//நாலு பேரு நல்லா இருக்கனும்னா 20 கேள்வியும் அதுக்கு பதிலும் தப்பில்ல....//
நாயகன் டயலாக்? ஓகே...ஓகே :)

//நூறாவது பதிவு போட்ட சங்கத்தின் மூத்த சிங்கம் (அது தான் இளா சொல்லீட்டாரே) வாழ்க வாழ்க...//
வாழ்த்துக்கு நன்றி 12பி.

//பங்கு சரியா சொன்ன...
நானும் ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்லல என்ன ஒரு தெனா வெட்டு இருந்தா என் பேரயும் விட்டு இருப்பார்.... :-)//
இப்பவாச்சும் நம்ம சுயரூபத்தைத் தெரிஞ்சிக்கினீங்களே...அது வரைக்கும் சந்தோசம்.
:)

கைப்புள்ள said...

//தல! நேத்து உங்க பதிவ பார்ததும் தலை சுத்தி பைத்தியம் மாதிரி ஆயிட்டேன். சுத்தமா வேலையே ஒடல. உங்க 100 வது பதிவே இப்படி இருக்குதுனா இன்னும் 150, 200 பதிவு எல்லாம் கீழ்ப்பாக்கம் பக்கத்தில் இருந்துதான் படிக்கனும். ரொம்ப யோசிக்க வச்சிட்டிஙக.//
அப்படியே எனக்கும் உன்கூட கீழ்பாக்கத்துல ஒரு பெட்டுக்குச் சொல்லிடு...படம் எடுக்குற மேட்டருல நம்ம நெலமையும் இப்ப அப்பிடித் தான் இருக்கு

கைப்புள்ள said...

//குயுகுயு குயிஜூ: அநியாயத்துக்கு 8(IST)க்கெல்லாம் கடைய கட்டிட்டிங்க. நெசமாவே 14 பதில், கூகிளாண்டவர் சத்தியமா 5 பதில் தெரியுமாக்கும் எனக்கு. சரின்னு பாத்தா முக்காலே மூணு வீசம் பதில் போட்டுட்டாங்க, The Requiem மட்டும் கூகிள்-ல தேடறதான்னுட்டு விட்டுட்டேன்:-(//
யக்கா...வாயக்கா! எப்பிடிக்கீறே? மாமா குழந்தைங்கல்லாம் எப்பிடிக்கீறாங்க. இன்னும் கூட பொழுது போவலைன்னா புள்ளைங்களுக்குத் தொல்லை குடுத்துக்குனு தான் இருக்கியா? ஒன் தம்பி 'கயவன்' எனக்கே இருவது கேள்வி கேக்க தெரிஞ்சா அக்கா காரி ஒனக்கு யம்மாந் தெரிஞ்சிருக்கும்?
நீ படு ஸ்மார்ட்னு தான் நம்ம பசங்க எல்லாருக்கும் ஏற்கனவே தெரியுமே? :)

//என்றாலும், சாதி, அரசியல்னு இல்லாம கலக்கும் கயவத் தல வாள்க! வ.வா.சங்கம் வாள்க. நூறு ஆயிரம், பல்லாயிரமாக வளர்க//
ஐயயே! என்னாயக்கா இப்ப்பிடி ஃபீலிங்ஸ் உட்டுக்கறே. நீ சொல்றதைக் கேக்க சொள்ள எனக்கும் ஒரே ஃபீலிங்ஸ் ஆயிப்போவுது. இருந்தாலும் வாள்த்துக்கு டேங்கஸ் சொல்லிக்கிறேன்.

//இப்பிடிக்கு, வ.வா.ச. கட்டடம் கூட்டுபவர் (அப்பிடி தான் சங்க ரகசியம் லாம் தெரியும்)//
கூட்டுற வேலை ஒனக்கு வேணாம் யக்கா. இதெல்லாம் தெரிஞ்சா மாமா என்னைய கீச்சிடுவாரு. இனிமே ஃபுல் ரைட்சோட சபையில வந்து குந்திக்க...சரியா?

கைப்புள்ள said...

//...அதான்பா ராஜ்பவன்லேருந்து அடையார் சிக்னல் போவ சொள்ள ஒன் பீச்சாங்கை பக்கம் வரும் பாரு அதே கோயில் தான்....
//மருக்கா படி....
இது தெரிஞ்சே சொன்னதா இல்ல ஸ்மால் மிஷ்டேக்கா!!!//
மிஷ்டேக் தான்! ஆனா மத்திய கைலாஸ் சிக்னல்ல பீச்சாங்கை பக்கம் திரும்புனா சிஎல்ஆர்ஐ காம்பவுண்டு செவுத்துல முட்டுவோம்னு கூடவா ரவிக்குத் தெரியாது? எப்பிடியோ கண்டிபுடிச்சி கரீட்டா சோத்தாங்கை பக்கம் திரும்பிப்பாப்புல.
:)

//ஆனாலும் ரூட் மேப், மர லொகேசனோட கொடுத்து அசத்திட்ட கைப்புள்ள.... அது சரி நீ எதுக்கு அந்த சீல் குத்தற கம்பெனியாண்ட போன, அத சொல்லு...:-)//
என்னா கேள்வி இது? ஐஎஸ்ஐ முத்திரை குத்திக்கத் தான். கேக்குற தோரணையை எல்லாம் பாத்தா நீங்க அங்க BISல தான் ஐ எஸ் ஐ சீல் குத்தற மாதிரி தெரியுது?

(மெய்யாலுமே கேட்டீங்கன்னா காலேஜ் படிக்க சொள்ள கான்க்ரீட் டிசைன் கோட்புக் எஸ்பி-6னு நெனக்கிறேன் அது வாங்கப் போயிருந்தேன்)

கைப்புள்ள said...

//உன்னை பத்தி கவிஜ எழுதினாதுக்கு வெளிநாட்டிலிருந்து திட்டி மெயில் அனுப்பியிருக்கனுங்க....//
ஆமாம் பின்ன? நீ கலாய்ச்சி எழுதிருந்தா பரவாயில்லை...தறுதலையா சுத்திட்டுத் திரியறவனைப் பத்தி காப்பியத் தலைவன் ரேஞ்சுக்கு எழுதுனா திட்டாம பின்ன கொஞ்சுவாங்களா?

கைப்புள்ள said...

//அடவுடு தல!நாமெல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு.
ரெண்டுக்குள்ள ரெண்டு.ஊருக்கு வந்த
இடத்துல வெவசாயிக்கும்,நமக்கும் ஒரு உறவு ஃபார்ம் ஆயிடுச்சுப்பா.//
விவசாயி ஒரு மார்க்கமான ஆளு அம்புட்டுத் தான் சொல்வேன். நீ பச்சை மண்ணு. அந்தாளோட சேர்ந்து கெட்டுப் போயிராத...

கைப்புள்ள said...

//[அரசு பதில்கள் (அ) ஹாய் மதன்]
ஹாய் மதனில எழுத்துப்பிழை//
அது உங்களுக்கு இலக்கணம் தெரியாத குற்றம்.

கைப்புள்ள said...

//ஹாய் என்பது வடமொழிச் சொல்.. அதைத் திருத்தி தமிழில் எழுதுமாறு உன்னை மிரட்டுகிறோம்//
அப்போ ஆனந்த விகடன்ல எழுதுற மதனையும் மெரட்டப் போறியா என்ன?

//.. ஆமா.. சுத்தத் தமிழில் பதிவுகளுக்குப் பெயர் வச்சா வரி விலக்கு உண்டா மோகா:)//
ஒற்றர்படைத் தலைவர் கீழே சொல்லிருக்காரு பாத்துக்கோ.

கைப்புள்ள said...

//
முதுகுல வரி வாங்காம விலக்கு உண்டு :-)//
:)))

கைப்புள்ள said...

//வணங்க வயதில்லை, வாழ்த்துகிறேன்.//
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி டோண்டு சார். தங்கள் வாழ்த்தைக் கண்டு மிகவும் மகிழ்ந்தேன்.

பொன்ஸ்~~Poorna said...

கைப்ஸ், வெளியிலிருந்து ஒரு வாழ்த்து..


பின்ன.. இப்படி பதிவெல்லாம் போட்டா நெருங்க முடியுமா!!

இன்னும் அதிக நூறுகளைப் பெற வாழ்த்துக்கள்.. :)))

துபாய் ராஜா said...

// " நீ பச்சை மண்ணு.விவசாயி ஒரு மார்க்கமான ஆளு அம்புட்டுத் தான் சொல்வேன். " //

கைப்பு,மண்ணுக்கும்,விவசாயிக்கும் உள்ள உறவுதான் ஊரறிந்த விஷயம் ஆச்சே.உனக்கு தெரியாதா என்ன??!!!.

கைப்புள்ள said...

//பின்ன.. இப்படி பதிவெல்லாம் போட்டா நெருங்க முடியுமா!! //
அதுக்குன்னு என்னை அநியாயத்துக்குக் கலாய்க்கறீங்க!

//இன்னும் அதிக நூறுகளைப் பெற வாழ்த்துக்கள்.. :)))//
வாழ்த்துகளுக்கு நன்றி பொன்ஸ்.

கைப்புள்ள said...

//கைப்பு,மண்ணுக்கும்,விவசாயிக்கும் உள்ள உறவுதான் ஊரறிந்த விஷயம் ஆச்சே.உனக்கு தெரியாதா என்ன??!!!.//
விவசாயியும் பச்சைமண்ணும் இன்னிக்கு போல என்னிக்கும் ஒன்னும் மண்ணுமா ஒன்னா இருங்கடே!
:))

ALIF AHAMED said...

தமிழ் மண முகப்பில் தெரிய மிண்டும் வாழ்த்து சொல்லிகிறேன்

துபாய் ராஜா said...

// "விவசாயியும் பச்சைமண்ணும் இன்னிக்கு போல என்னிக்கும் ஒன்னும் மண்ணுமா ஒன்னா இருங்கடே!" //

வாழ்த்துன்னா இதுதான் வாழ்த்து நைனா

ambi said...

கொஞ்சம் லேட்டா வந்துட்டேனே! இல்லைனா பின்னி இருப்போம்ல!

நூறு அடிச்சதுக்கு வாழ்த்துக்கள். உங்க ரேஞ்ச்சுக்கு ஆயிரம் அடிப்பீங்க கைபுள்ள! (நான் பதிவுகளை சொன்னேன்! தப்ப எடுத்துக்க படாது!) :))

ALIF AHAMED said...

நூறாவது பதிவில் நூறு அடிக்க மிண்டும் வாழ்த்துக்கள்

உங்கள் நண்பன்(சரா) said...

போலீஸ்க்கார்: ஏண்டா "சரவணா" ஸ்டோர்ல திருடுன...?

திருடன்: சோனியா அகர்வால் தான் சார் சொல்லுச்சு

போலீஸ்க்கார்: என்ன சொல்லுச்சு..?

திருடன்:எடுத்துக்கோ.... எடுத்துக்கோ... அண்ணாச்சி கடையில எடுத்துக்கோனு,

தல பாவம் நீ! பின்னூட்டம் போட்டு போட்டு கலச்சுப் போயிருப்ப அதான் ஒரு சின்ன டமாசு...


அன்புடன்...
சரவணன்.

கப்பி | Kappi said...

//அதுனால பெருந்தன்மையோட ஸ்பானிஷ் சின்ன புலவர் கப்பியை //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

அதுக்காக விழா நாயகனான நீ கொஸ்டினை எனக்கு டைவர்ட் பண்ணி ஆப்படிக்க கூடாது....

இரு தல..இவரு கேட்டிருக்கறது எங்கியோ பாத்தா மாதிரி கீது...பழைய கொஸ்டின் பேப்பர் எல்லாத்தையும் பாத்துட்டு வரேன்..

கைப்புள்ள said...

//நூறு அடிச்சதுக்கு வாழ்த்துக்கள். உங்க ரேஞ்ச்சுக்கு ஆயிரம் அடிப்பீங்க கைபுள்ள! (நான் பதிவுகளை சொன்னேன்! தப்ப எடுத்துக்க படாது!) :))//

வாழ்த்துகளுக்கு நன்றி. தப்பா எடுத்துக்க என்ன இருக்குன்னு எழுதலாம்னு இருந்தேன். ஆனாலும் ஒரு சின்ன டவுட்டு...இதுல உள்குத்து,வெளிகுத்து,ஸைட்குத்து எதுவும் இல்லியே?
:)

கைப்புள்ள said...

//தமிழ் மண முகப்பில் தெரிய மிண்டும் வாழ்த்து சொல்லிகிறேன்//

மின்னலு! உன் பாசம் புரியுது...ஆனா இதெல்லாம் கொஞ்சம் ஓவரு...
:)

கைப்புள்ள said...

//தல பாவம் நீ! பின்னூட்டம் போட்டு போட்டு கலச்சுப் போயிருப்ப அதான் ஒரு சின்ன டமாசு...//

இதுலேருந்து கயவனாகறதுக்கு ஒனக்கு இன்னும் நெறைய நாள் ஆகும்னு தெரியுது. பொழக்கத் தெரியாத புள்ளையா இருக்கியே? இதே ஜோக்கை சோனியா படம் போட்டு உன் பதிவுல போட்டுருந்தா பதிவுக்குப் பதிவு பின்னூட்டத்தத்துக்குப் பின்னூட்டம்.

ஆனாலும் ஜோக் நல்லாவே இருக்கு. டேங்ஸ்.
:)

உங்கள் நண்பன்(சரா) said...

தல... உன்னோட சங்கத்து புதுஆளு நானு நீ சொல்லியும் நான் பண்ணாம விடுவேனா,நான் புதுசில்லையா நீ தான் சொல்லிக் கொடுக்கோனும்
இதோ போட்டுடுவோம் தனி பதிவு...
உன்னை நம்ம்பித்தான் இந்தப் புதுப் பதிவு மறந்துடாமா வந்து பின்னூட்டமிடு


அன்புடன்...
சரவணன்.

கைப்புள்ள said...

//இரு தல..இவரு கேட்டிருக்கறது எங்கியோ பாத்தா மாதிரி கீது...பழைய கொஸ்டின் பேப்பர் எல்லாத்தையும் பாத்துட்டு வரேன்...//
என்னா கப்பி? இதுக்கெல்லாம் கூட கொஸ்டின் பேங்க் இருக்கா என்ன?

Unknown said...

குவிஸ் வச்ச கைப்புவுக்கு ஒரு கொஸின்
1.இங்க என்னா நடக்குது?

கப்பி | Kappi said...

//னொமி ஆமெஸ்,
அமொரா,
இதெல்லாம் என்னா அப்றம்

"லிவின்லவீடா லோக்கா "
//

கொஸ்டின் பேங்க் இல்ல கைப்ஸ்..இது ஏற்கனவே அவர் என்கிட்ட கேட்டது...இங்க ரிபீட்ட்ட்டு..

லிவின்லவீடா லோக்கா-ன்னா 'சிறுபுள்ளத் தனமான வாழ்க்கை' அப்டின்னு வச்சிக்கலாம்...மத்த ரெண்டும் சாய்ஸ்ல வுட்டுடறேன்.. :P

சிவா இந்த பக்கம் வந்தா கேளூ..அவரும் ஸ்பானிஷ் 'புலி' தான்..

அடுத்தவனை மாட்டி விட்டாதான் நாம எஸ்கேப்பாக முடியுது...கலிகாலம்டா சாமீ....

கைப்புள்ள said...

//1.இங்க என்னா நடக்குது?//

இதுக்கே இப்படின்னா நம்ம சங்கத்துப் பக்கம்போனீங்கன்னா மயக்கம் போட்டு இல்ல விழுந்துடுவீங்க போலிருக்கு?
:)

கைப்புள்ள said...

//சிவா இந்த பக்கம் வந்தா கேளூ..அவரும் ஸ்பானிஷ் 'புலி' தான்..//
யாரு நம்ம புலியா? ஆஹா இந்த விஷயம் எனக்குத் தெரியாமப் போச்சே? சிவா செல்லம் எங்கமா இருக்கே?

//அடுத்தவனை மாட்டி விட்டாதான் நாம எஸ்கேப்பாக முடியுது...கலிகாலம்டா சாமீ....//
ஹ்ம்ம்ம்....இருந்தாலும் நீ பெருசை மாட்டி விட்டுருக்கலாம்.
:)

Unknown said...

அட அங்கயும் போயி ரெண்டு பிட்ட போட்டாச்சய்யா யாருமே கவணிக்கலை
சரி உங்களுக்கும் அதையே போடுவோம் :))
வவா சங்கத்தில் பிளவு ! குவாட்டர் கோவிந்தன் துப்புகிறார்.
உலகம் ஆகஸ்டு 3. இந்த மாத வவா சங்க அட்லாஸ் வாலிபராக ஆப்பு வாங்கும் கொங்குராஸாவை பின்னூட்டமிட்டு பெரிய ஆளாக்க கூடாது என்றும் அப்படி செய்தால் தன்னால் தொடர்ந்து களப்பணியாற்ற முடியாதென்றும் இலவசகொத்தனார் போர்க்கொடி உயர்த்தி உள்ளார். அதற்கு பயந்தே கொங்குராசா இந்த மாத அட்லாஸ் வாலிபராக இருந்தும் வயதான வாலிபரான போனமாத அட்லாஸ் வாலிபர் கொத்ஸுக்கு இன்னும் பின்னூட லஞ்சம் கொடுக்கப் படுகிரதாம். இத் தகவலை அறிந்த கொங்குராசா தனது ஆதரவை சங்கத்தில் இருந்து விலக்கிக் கொள்ள விவசாய அணிகளிடம் ஆலோசித்து வருகிறாராம். அப்படி விலகும் போது தன்னோடே, இளா, கைப்பு, நாகை சிவா இன்னும் தனது ஆதரவாளர்களையும் அழைத்து புதிய வவா சங்கம் ஆரம்பிக்கும் முடிவில் இருக்கிராராம் அதனால் தான் தேர்தல் களப்பணி செலவாக இப்போது குவாட்டர் பதிவை நாசூக்காக தனது ஆதரவாளர்களிடம் சொல்கிரார். சங்கத்தில் பிளவி ஏற்படுவதை பொன்ஸ் விரும்பவில்லை என்றும் அப்படி பிரிந்தால் தான் தனிக் கட்சி ஆரம்பிக்கவும் இப்போதே முடிவெடுத்தே தனது சின்னமான யானை சின்னத்தில் இருந்து கப்பலுக்கு மாறிவிட்டாராம். சங்க உறுப்பினர்கள் இது குறித்து அச்சப் பட தேவையில்லை என போனமாத பின்னூட்ட நாயகர் சொல்லி விட்டாராம் . குவாட்டர் கோவிந்தனின் செய்தி அறிக்கைகளின் படி

Unknown said...

hola kaipullai qué que sucede aquí

கப்பி | Kappi said...

//ஆஹா இந்த விஷயம் எனக்குத் தெரியாமப் போச்சே?//
//ஹ்ம்ம்ம்....இருந்தாலும் நீ பெருசை மாட்டி விட்டுருக்கலாம்//

பெருசு என் ஆஸ்தான ஸ்பானிஷ் குருவாச்சே..குரு பக்தி தான் ;)

இப்ப நான் புலியைப் பத்தி சொல்லலைனா இந்த மேட்டர் மக்களுக்கு தெரிஞ்சிருக்குமா??

நாகை சிவா said...

//யாரு நம்ம புலியா? ஆஹா இந்த விஷயம் எனக்குத் தெரியாமப் போச்சே? சிவா செல்லம் எங்கமா இருக்கே?//
இங்கன தான் இருக்கேன். என்ன டவுட்டா இருந்தாலும் கேளு சொல்லுறேன்.
:))))

நாகை சிவா said...

//அதோட ஒங்க நாகை மாவட்டத்தைப் பத்தின கேள்வி வேற அதுல இருக்கு. நான் சொல்றதை கொஞ்சம் உன் புலி குணத்தையெல்லாம் ஏற கட்டிட்டு மனுசனா ஒக்காந்து யோசிச்சுப் பாரு ஒனக்கே புரியும்.//
உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
புரியுது

கைப்புள்ள said...

//குவாட்டர் கோவிந்தனின் செய்தி அறிக்கைகளின் படி//

குவாட்டர் கோவிந்தனின் செய்தி அறிக்கைகளின் படி...படி...என்னாங்க? அப்படியே வினையெச்சமா? ஆங்..வினையெச்சமா முடிச்சிட்டீங்களே? மேலே சொன்னா தானே புரியும்?
:)))

கைப்புள்ள said...

//hola kaipullai qué que sucede aquí//

இருங்க என்ன சொல்லிருக்கீங்கன்னு புலியைக் கேட்டுத் தெரிஞ்சிக்கிறேன்.

கைப்புள்ள said...

//இங்கன தான் இருக்கேன். என்ன டவுட்டா இருந்தாலும் கேளு சொல்லுறேன்.
:))))//

சரி! இங்க தான் இருக்கியா? முதல் கட்டமா..."hola kaipullai qué que sucede aquí" க்யூல நின்னா எதோ கைப்புள்ளக்கு தரேன்னு மகேந்திரன் சொல்லிருக்காரு...அது என்னன்னு எனக்கு சொல்லு. அவரு தர்றதுல ஒரு அஞ்சோ பத்தோ ஒனக்கும் தர்றேன்.
:))

Unknown said...

El siva querido de Nagai no le dice que la respuesta justa lo tuerza con cualquier otra palabra loca satisfaga

Unknown said...

el kaipullai es retira su ayuda del sangam del vava que él dijo en papel de las noticias "allí es hoy porción de gente que hacía la corrupción del comentario así que no deseo permanecer allí"
:)))mahendhiran
:)))nagai siva
:)))kappy guy

கைப்புள்ள said...

//இப்ப நான் புலியைப் பத்தி சொல்லலைனா இந்த மேட்டர் மக்களுக்கு தெரிஞ்சிருக்குமா?? //

கப்பி!
வாழ்க உன் ஸ்பேனிஷ் தொண்டு. இன்று முதல் நீ ஸ்பேனிஷ் கம்பன் என்றும் புலி ஸ்பேனிஷ் ஒட்டக்கூத்தன் என்றும் மகேந்திரன் ஸ்பேனிஷ் தொல்காப்பியன் என்றும் பெருசு ஸ்பேனிஷ் திருவள்ளுவர் என்றும் அழைக்கப் படுவர்.

கைப்புள்ள said...

கூகிள் சொல்லுது:
The wanted siva of Nagai does not say to him that the right answer twists it with any other crazy word satisfies

மகேந்திரரே என்னாங்க இது?
:)

நன்மனம் said...

//கூகிள் சொல்லுது:
The wanted siva of Nagai does not say to him that the right answer twists it with any other crazy word satisfies

மகேந்திரரே என்னாங்க இது?
:) //

இதாங்க டாப்பு, நம்ம சாத்தான் குளத்தான் பதிவுல ஒருத்தரு இங்லிஸ்லேந்து தமிழுக்கு ஒரு சூப்பர் மொழி பெயர்ப்பு பண்ணிருப்பாரு அத மாதிரி இருக்கு.

மகேந்திரரே, எங்க இருக்கீங்க சீக்கிரம் வாங்க :-)

அனுசுயா said...

100 வது பதிவு போட்டு 100 க்கும் மேல பின்னூட்டம் வாங்கியிருக்கும் தல கைப்புவுக்கு நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..

நாகை சிவா said...

//..."hola kaipullai qué que sucede aquí" க்யூல நின்னா எதோ கைப்புள்ளக்கு தரேன்னு மகேந்திரன் சொல்லிருக்காரு...அது என்னன்னு எனக்கு சொல்லு.//
ஏலேய் இங்கன என்ன நடக்குதுனு
கேட்டு இருக்காரு. பதில் சொல்லு

நாகை சிவா said...

//el kaipullai es retira su ayuda del sangam del vava que él dijo en papel de las noticias "allí es hoy porción de gente que hacía la corrupción del comentario así que no deseo permanecer allí" :)))mahendhiran :)))nagai siva :)))kappy guy//
செல்லம் இதுக்கு எல்லாம் எங்க தல அசர மாட்டாரு. நாங்க பதிவு தலைப்பயே கயவன் பதில்கள் என்று தானே வச்சு இருக்கோம். அப்புறம் கயமதனத்துக்கு பயந்து விலகிடுவோமா என்ன. அது சரி, இதுல என் பெயர ஏன் சேர்த்து விட்ட....

நாகை சிவா said...

//El siva querido de Nagai no le dice que la respuesta justa lo tuerza con cualquier otra palabra loca satisfaga //
தல கிட்ட ஏதையும் மறைக்க மாட்டேன். அவரு கேட்டா நான் கண்டிப்பாக சொல்லுவேன். என்ன பத்தி நீ என்னனு நினைச்ச......

தல, கைப்பேசிய அணைச்சி வச்சுட்டியா
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

ALIF AHAMED said...

வலை உலக
அனைவருக்கும்

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

கைப்புள்ள said...

மகேந்திர வர்மரே!
கிழுமத்தூர்ல தாய்மொழியில்(ஸ்பானிஷ்) கல்வி கற்றிருக்கீங்கன்னு மட்டும் புரியுது. பாருங்க உங்க அளவுக்கு ஸ்பானிஷ் தெரியாம கூகிளே இங்கிலிபீசுல தப்பு தப்பா ஒளறிக் கொட்டுது.

//el kaipullai es retira su ayuda del sangam del vava que él dijo en papel de las noticias "allí es hoy porción de gente que hacía la corrupción del comentario así que no deseo permanecer allí"
:)))mahendhiran
:)))nagai siva
:)))kappy guy//

இதுக்கு கூகிள் என்னா சொல்லுதுன்னா:
"kaipullai is retires its aid of sangam of vava that he said in paper of the news “is today portion of people there who made the corruption of the commentary so desire not to remain there” :)))they mahendhiran :)))nagai siva :)))kappy guy "

சூப்பரா பேரு வச்சோம்ல ஒங்களுக்கு 'ஸ்பேனிஷ் தொல்காப்பிரு'ன்னு.
:)

கைப்புள்ள said...

//100 வது பதிவு போட்டு 100 க்கும் மேல பின்னூட்டம் வாங்கியிருக்கும் தல கைப்புவுக்கு நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..//

வருகைக்கும் தங்கள் வாழ்த்துகளுக்கும் நன்றி அனுசுயா.

கைப்புள்ள said...

//ஏலேய் இங்கன என்ன நடக்குதுனு
கேட்டு இருக்காரு. பதில் சொல்லு//

Holaன்னா ஏலேய்யா? 1992ல பார்செலோனா ஒலிம்பிக்ஸ் நடக்கும் போது Hola Barcelonaன்னு ஸ்டேடியத்துல எழுதிருந்தானுவ. அப்ப அதுக்கு அர்த்தம் ஏலேய் பார்செலோனாவா?
:)

கைப்புள்ள said...

//அது சரி, இதுல என் பெயர ஏன் சேர்த்து விட்ட.... //

எப்பிடி புலி ஒன்னால இப்பிடி ஒன்னும் புரியாத அப்பாவி வேஷம் போட முடியுது?
:)

கைப்புள்ள said...

//தல, கைப்பேசிய அணைச்சி வச்சுட்டியா
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் //

நண்பர்கள் அனைவருக்கும் எனது நண்பர்கள் தின வாழ்த்துகள்.

அது வந்து புலி...நேத்து இங்கே ஒரு மலையடிவாரம் பக்கத்துல ஒரு பிக்னிக்குக்கு இட்டுக்குன்னு போயிட்டாங்க....அங்கே சிக்னல் கெடக்கல. அதுனால தான்.

இராம்/Raam said...

//ஆமாம் பின்ன? நீ கலாய்ச்சி எழுதிருந்தா பரவாயில்லை...தறுதலையா சுத்திட்டுத் திரியறவனைப் பத்தி காப்பியத் தலைவன் ரேஞ்சுக்கு எழுதுனா திட்டாம பின்ன கொஞ்சுவாங்களா? //

தல,
காப்பின்னா நரசுஸ்'ஆ, ப்ரூ'வா இல்லை, நெஸ்காப்பியா...... :-)

நாகை சிவா said...

//தல,
காப்பின்னா நரசுஸ்'ஆ, ப்ரூ'வா இல்லை, நெஸ்காப்பியா...... :-) //
ராம் தல எப்பவும் லியோ காப்பி தான்

ஸ்ரீவி சிவா said...

கைப்பு,கலக்கிட்டீங்க அப்பு!!!
"கண்ணுல பட்டவங்க எல்லாரையும் கலாய்க்கிற காவாளிப் பய!
வாயக் கொடுத்து உடம்புல புண் வாங்குற கப்பிப் பய!"
அப்படின்னு உங்களை தப்பா நினைச்சுருந்தேன் தல!
என்ன மன்னிச்சிருங்க!!!அவ்வ்வ்வ்வ்...

கப்பி | Kappi said...

//கப்பி!
வாழ்க உன் ஸ்பேனிஷ் தொண்டு. இன்று முதல் நீ ஸ்பேனிஷ் கம்பன்//

முருகேஷா..நான் கேட்டேனா??? :))

//எப்பிடி புலி ஒன்னால இப்பிடி ஒன்னும் புரியாத அப்பாவி வேஷம் போட முடியுது?
//

புலி உன் ரகசியம் தலிக்கு தெரிஞ்சு போச்சோ?? :)))

VSK said...

நூறுக்கு சிறப்பா? உங்கள் திறமைக்கு சிறப்பா என்று தெரியவில்லை!

வாழ்த்த வயதுண்டு! வாழ்த்துகிறேன்!

எதையும் தனித்தன்மையுடன் சிறப்புறச் செய்யும் உங்கள் திறமை மென்மேலும் வளர்க!!

மனதின் ஓசை said...

தல, 100க்கு வாழ்த்துக்கள்..இந்த பக்கம் கொஞ்ஜம் பாக்கல.. அதுக்குள்ள ஏதோ குவிஸ்ங்கற.. அதுக்கு பதிலுங்கற.. என்னமோ போ..100க்கு மேல பின்னுட்டம் வாஙினு கீர...நல்லா இரு..

ஆனா ஒன்னு மட்டும் பிரில..
//அவருக்கு உன் வயசுல ஒரு பையன் இருக்கான். வேணா ஊருக்குள்ள கேட்டுப் பாரு. //

ஊருக்குள்ள எதுக்கு போய் கேக்கனும்..குடும்பத்துல கொழப்பத்த உண்டு பன்னதய்யா..

ILA (a) இளா said...

//விவசாயியும் பச்சைமண்ணும் //
ஏம்ப்பு இப்படி தலையில என்ன இருக்குன்னு இப்படியா சபையில சொல்றது?

கைப்புள்ள said...

//ராம் தல எப்பவும் லியோ காப்பி தான்//

யப்பா புலி! ராயல் ராம்சாமி சொன்னதாச்சும் எதோ குத்துமதிப்பா புரிஞ்சுது. நீ என்னா சொல்ல வர்றேன்னு சத்தியமா புரியலை. இன்சைட் பஞ்ச்??

கைப்புள்ள said...

//கைப்பு,கலக்கிட்டீங்க அப்பு!!!
"கண்ணுல பட்டவங்க எல்லாரையும் கலாய்க்கிற காவாளிப் பய!
வாயக் கொடுத்து உடம்புல புண் வாங்குற கப்பிப் பய!"
அப்படின்னு உங்களை தப்பா நினைச்சுருந்தேன் தல!
என்ன மன்னிச்சிருங்க!!!அவ்வ்வ்வ்வ்... //

பால்கோவாபுரி பாவலர் சிவகுமார் அவர்களே,
முதல் முறையா நம்ம பக்கம் வந்துருக்கீங்க. டேங்ஸூங்கோ. என்ன பத்தி என்ன வேணா பேசுங்க. ஆனா உருகுவேல உசுரைக் குடுத்து காதல் (தோல்வி) கதையெல்லாம் எளுதற கப்பி பயலைப் பத்தி தப்பாப் பேசப்பிடாது.
:)

கைப்புள்ள said...

//முருகேஷா..நான் கேட்டேனா??? :))//
ஒனக்கும் முருகேஷா??? :((

//புலி உன் ரகசியம் தலிக்கு தெரிஞ்சு போச்சோ?? :))) //
நம்ம சூடான் சூரரு "புலி தோல் போர்த்திய நரி"ன்னு நான் இன்னும் சொல்லவே இல்லியே? அதுக்குள்ள ஒனக்கு எப்பிடி கப்பி தெரிஞ்சுது?
:)

கைப்புள்ள said...

//நூறுக்கு சிறப்பா? உங்கள் திறமைக்கு சிறப்பா என்று தெரியவில்லை!//
பலமுறை தங்கள் வாழ்த்து பின்னூட்டங்களைக் கண்டு எல்லையில்லா மகிழ்ச்சி கொண்டிருக்கிறேன். இதுவும் அத்தகையது என்று சொல்ல தேவையில்லை.

//வாழ்த்த வயதுண்டு! வாழ்த்துகிறேன்!
எதையும் தனித்தன்மையுடன் சிறப்புறச் செய்யும் உங்கள் திறமை மென்மேலும் வளர்க!!//
சிரந்தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறேன், மிக்க நன்றி சார்.

Unknown said...

hola kaipullai usted no paró todavía este poste sirve por favor escribe a otro uno

Syam said...

என்ன தல ஒன்னும் சத்ததயே கானோம் ஓணான்(டி) கடிச்சிட்டுதா... :-)

Sud Gopal said...

கொஞ்சம் லேட்டாயிடுச்சே.

மிஸ்டர் கைப்புள்ள.பெட்டர் லக் னெக்ஸ்ட் டைம்...