Thursday, December 28, 2006

ராஜஸ்தான் - ஒரு போட்டோ பயணம்

போன பிராஜெக்ட் அப்போ ராஜஸ்தான்ல பாத்த சில விஷயங்களை அதிகமாகப் பேசாம(வளவளனு எழுதாம) சுமாரான, படுசுமாரான சில படங்களை வச்சு விஷுவலாச்(!) சொல்லற ஒரு முயற்சி தான் இந்தப் பதிவு.


நாத் த்வாரா(Nathdwara) என்னும் இடத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீநாத்ஜி எனும் இறைவனின் படம். ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரிலிருந்து 50 கி.மீ.தொலைவில் உள்ளது இத்தலம். படத்தின் கீழே குஜராத்தி மொழியில் எழுதியிருப்பது "ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா", ஆகஸ்ட் 9,2006


ஸ்ரீநாத்ஜியின் இன்னுமொரு திரு உருவம், , ஆகஸ்ட் 9,2006


ஜிலேபி சுடறாங்க. நாத்த்வாரா, ஆகஸ்ட் 9,2006


சலவைக்கல்(மார்பிள்) தொழிற்சாலை, நாத் த்வாரா - உதய்பூர் சாலை, ஆகஸ்ட் 9,2006


உங்களுக்கு எத்தனை கன அடி வேணும்?, நாத் த்வாரா - உதய்பூர் சாலை, ஆகஸ்ட் 9,2006


"அழகான சரி சோடி, ஆனை மேல அம்பாரி...", உதய்பூர் பேலஸ் செல்லும் வழியில், ஆகஸ்ட் 9,2006


மகாராணா பிரதாப் சிங் தன்னுடைய தாத்தாவின் நினைவாக உருவாக்கிய உதய்பூர் நகரிலுள்ள, உதய்பூர் மாளிகையின்(சிட்டி பேலஸின்) முகப்பு, ஆகஸ்ட் 9,2006


அருங்காட்சியகத்தைத் தன்னகத்தே கொண்ட சிட்டி பேலஸின் இன்னுமொரு படம், ஆகஸ்ட் 9,2006


சூரியவம்சத்தினரின் முதற் கடவுளான சூரியனார் மீசையோடு, ஆகஸ்ட் 9,2006


முகலாயர்களுடன் நடைபெற்ற ஹல்திகாட்டி யுத்தத்தில் (Battle of Haldighati), காலில் பலத்த காயங்கள் ஏற்பட்ட போதும் தன் தலைவனான மகாராணா பிரதாப்சிங்கைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டுச் சேர்த்து விட்டப் பின்னரே தன் உயிரை விட்ட சேத்தக்(Chetak) குதிரையின் உருவ பொம்மை. யானைப்படைகளையும் கொண்டு போரிட்ட முகலாய ராணுவத்தைப் போலல்லாமல், ராஜபுத் வீரர்கள் குதிரைகளை மட்டுமே கொண்டு போரிட்டனர். குட்டி யானை போலத் தோன்றி தாக்க வரும் முகலாய யானைகளை ஏமாற்றுவதற்காகத் தும்பிக்கை போன்ற முகமூடி அணிந்திருக்கும் சேத்தக். உதய்பூர் சிட்டி பேலஸ் அருங்காட்சியகம், அகஸ்ட் 9,2006


தாஜ் லேக் பேலஸ் ஐந்து நட்சத்திர தங்கும் விடுதி. உதய்பூர் அருங்காட்சியகத்திலிருந்து காணக் கிடைக்கும் கோணம், ஆகஸ்ட் 9,2006


தார் பாலைவனத்தில் வெள்ளம் ஏற்படக் காரணமாயிருந்த அபரிமிதமான மழையினால் தளும்பி நிற்கும் உதய்பூர் ஏரி, ஆகஸ்ட் 9,2006


தங்களுடைய நாட்டுப்புறப் பாடலான "நிம்பூடா நிம்பூடா" பாடும் பார்மேர் மாவட்ட இசை கலைஞர்கள். "ஹம் தில் தே சுகே சனம்" படத்தில் வரும் பாடல் இவர்களுடைய இசையிலிருந்து தான் திருடப்பட்டது என வருத்தத்துடன் தெரிவித்தார்கள்(ஏனெனில் காலம் காலமாக அவ்விசையைப் பாதுகாத்து வரும் இவர்களுக்கு ஒரு கிரெடிட்டும் கிடைக்கவில்லையாம்). திரைப்படத்தில் வரும் பாடலைப் போலவே இப்பாடலும், துள்ளல் இசையோடே அமைந்திருந்தது, சித்தூர்கட், ஆகஸ்ட் 8,2006


ஸ்பிக் மேகே நடத்திய இக்கலாச்சார நிகழ்ச்சியில் 'கல்பேலியா'(Kalbeliya) நடனம் ஆடும் பெண், சித்தூர்கட், ஆகஸ்ட் 8,2006


'கல்பேலியா' பாரம்பரிய நடனம் - இன்னொரு படம். பளிச்சிடும் பரோட்டாவையும், செங்கண் குறைப்பையும்(Red Eye Reduction) கவனிக்காம விட்டதுக்கு அடிக்க வந்துடாதீங்கப்பா:), சித்தூர்கட், ஆகஸ்ட் 8,2006

50 comments:

Anonymous said...

Superb Kaipullai....hope you had a nice time.

கைப்புள்ள said...

வாங்க தூயா,
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. ராஜஸ்தானில் கழித்த நான்கு மாத கால நினைவுகள் இன்னும் பசுமையாக இருக்கின்றன. மிக நல்ல அனுபவம் அது.

SP.VR. SUBBIAH said...

படங்களெல்லாம் அசத்தலாக இருக்கிறது
கைப்புள்ளே - உங்களை மாதிரியே!
பாராட்டுக்கள்

G.Ragavan said...

இப்படிப் படங்காட்டிக் காட்டி...ராசஸ்தானுக்கும் டூர் போடச் சொல்லித் தூண்டுறீகளேய்யா!

அந்த சோடியானைச் சவாரி படத்தைப் பொன்சுக்கு அனுப்பீட்டீங்களா? ஆனைகள் நலச்சங்கத்தை இப்ப அவங்கதான் நடத்துறாங்களாம்.

வடக்கத்திக்காரங்களுக்குச் சிலேபின்னா உயிரு. மொச்சு மொச்சுன்னு அதப் பிச்சுப் பிச்சு தின்னே பசியத் தீத்துக்குருவாங்களோன்னு நெனைக்க வைக்கிற அளவுக்குத் திம்பாங்க. இதே மாதிரி நம்ம தமிழர்களைப் பற்றி ஒரு பெங்காலி கமெண்ட்டு...கூப் பாத் காபி. ரொம்ப அரிசிச் சோறு சாப்பிடுவாங்களாம். :-)

அந்தக் குதிரை செஞ்சிருக்குற வேலையப் பாத்தீங்களா! அடடா! என்னடா தும்பிக்கை மாதிரி இருக்கேன்னு பாத்தேன். இப்பத்தான் வெவரம் புரியுது. குதிரையானை படத்தையும் பொன்சுக்கு அனுப்பீருங்க.

ராசஸ்தான்ல என்ன பிரச்சனைன்னா..அவங்க சாப்பாடு...நெய் ரொம்ப இருக்கும். அதே போல சைவச் சாப்பாடுதான் கெடைக்கும். எப்படி கைப்புள்ள சமாளிச்சீங்க?

கைப்புள்ள said...

//படங்களெல்லாம் அசத்தலாக இருக்கிறது
கைப்புள்ளே - உங்களை மாதிரியே!
பாராட்டுக்கள்//

மிக்க நன்றி சுப்பையா சார். நீங்கள் என் மீது வைத்திருக்கும் மதிப்புக்கு மிக்க நன்றி. என்னை நெகிழச் செய்தது தங்கள் பின்னூட்டம். நன்றி.

கானா பிரபா said...

படங்களப் போட்டு ரணகளமாக்கீட்டீரே அப்பு,பார்ப்போம் 2007 இல் சந்தர்ப்பம் வாய்க்குதான்னு

கைப்புள்ள said...

//இப்படிப் படங்காட்டிக் காட்டி...ராசஸ்தானுக்கும் டூர் போடச் சொல்லித் தூண்டுறீகளேய்யா!//
வாங்க ராகவன்,
உண்மையிலேயே சுத்தி பார்க்க நிறைய இடம் இருக்குங்க. Incredible Indiaனு இந்திய சுற்றுலா வளர்ச்சி கழகம் செய்யும் விளம்பரத்தில் ராஜஸ்தான் மாநிலத்துக்கும் ஒரு பெரும்பங்கு இருக்கிறது.

//அந்த சோடியானைச் சவாரி படத்தைப் பொன்சுக்கு அனுப்பீட்டீங்களா? ஆனைகள் நலச்சங்கத்தை இப்ப அவங்கதான் நடத்துறாங்களாம்//
:D

//வடக்கத்திக்காரங்களுக்குச் சிலேபின்னா உயிரு. மொச்சு மொச்சுன்னு அதப் பிச்சுப் பிச்சு தின்னே பசியத் தீத்துக்குருவாங்களோன்னு நெனைக்க வைக்கிற அளவுக்குத் திம்பாங்க. இதே மாதிரி நம்ம தமிழர்களைப் பற்றி ஒரு பெங்காலி கமெண்ட்டு...கூப் பாத் காபி. ரொம்ப அரிசிச் சோறு சாப்பிடுவாங்களாம். :-)//
ஆமாங்க! நானே காலை சிற்றுண்டிக்கு ஜிலேபி பல நாள் சாப்புட்டுருக்கேன். காலைச் சிற்றுண்டி மட்டும் தான்னு நெனச்சா மாலையிலயும் டீ, சமோசாவோட ஜிலேபி சாப்புடுவாங்க. போனா போவுதுன்னு மதியம் மட்டும் விட்டு வச்சிடுவாங்க. :)

பெங்காலி காரங்களா நம்மளைப் பாத்து அரிசி சோறு அதிகம் சாப்புடறவங்கன்னு சொல்றாங்க? அவுங்களே நல்லா அரிசி சோறு சாப்புடுவாங்களே?
:)

//அந்தக் குதிரை செஞ்சிருக்குற வேலையப் பாத்தீங்களா! அடடா! என்னடா தும்பிக்கை மாதிரி இருக்கேன்னு பாத்தேன். இப்பத்தான் வெவரம் புரியுது. குதிரையானை படத்தையும் பொன்சுக்கு அனுப்பீருங்க.//
'குதிரையானை' - ஹைய்யா! புது சொல் ஒரு சொல். நீங்க சொன்ன மாதிரியே இதையும் அனுப்பிடறேன்.

//ராசஸ்தான்ல என்ன பிரச்சனைன்னா..அவங்க சாப்பாடு...நெய் ரொம்ப இருக்கும். அதே போல சைவச் சாப்பாடுதான் கெடைக்கும். எப்படி கைப்புள்ள சமாளிச்சீங்க?//
அது தாங்க...அதே தாங்க. ஒரு 5-6 கிலோ எடை கூடுன காரணம். நான் இருந்த எடத்துல, வெளியிலே எங்கயாச்சும் போனா ரெண்டொரு ஓட்டல்ல தான் அசைவம் கெடைக்கும். அதுவும் நல்ல நாள் பெரு நாள் அமாவாசை பெளர்ணமின்னா அசைவ ஓட்டல்லயே அசைவம் கெடைக்காது.
:)

கைப்புள்ள said...

//படங்களப் போட்டு ரணகளமாக்கீட்டீரே அப்பு,பார்ப்போம் 2007 இல் சந்தர்ப்பம் வாய்க்குதான்னு//

வாங்க கானாபிரபா,
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி. வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா பார்க்க வேண்டிய ஒரு மாநிலம் தான் ராஜஸ்தான்.

கதிர் said...

ஒளி ஓவியர் கைப்புள்ள!
சைதக் குதிரைய பத்தி படிச்சிருக்கேன் தல!

புத்தகத்தோட பேர் தெரியல, மேவார் ராணான்னு நினைக்கிறேன்.

படங்கள் எல்லாம் நல்லா இருக்கு!

Syam said...

thala,

Wish you a Wonderful New Year!!!

later meet panren :-)

கைப்புள்ள said...

//ஒளி ஓவியர் கைப்புள்ள! //

ஹி...ஹி...கொஞ்சம் டூ மச்னாலும் கேக்க நல்லாத் தான் இருக்கு. டேங்கீஸ்பா
:)

//சைதக் குதிரைய பத்தி படிச்சிருக்கேன் தல!

புத்தகத்தோட பேர் தெரியல, மேவார் ராணான்னு நினைக்கிறேன். //
சரியாத் தான் சொல்லிருக்கீங்க. மகாராணா பிரதாப் சிங், மேவார் ராஜியத்தை ஆண்ட அரசர் தான். உதய்பூர், சித்தூர்கட் இதெல்லாம் மேவார் ராஜியத்தில் இருந்த ஊர்கள் தான்.

//படங்கள் எல்லாம் நல்லா இருக்கு!//
ரொம்ப நன்றி தம்பி.

கைப்புள்ள said...

//thala,

Wish you a Wonderful New Year!!!

later meet panren :-) //

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் ஸ்யாம். மிக்க நன்றி.

Arunkumar said...

படங்கள் சூப்பர். ஓசில ராஜஸ்தான் சுத்தி காமிச்சிட்டீங்க :)

Wish you and your loved ones, a very Happy and Prosperous New Year 2007 !!

பாலராஜன்கீதா said...

நாளை 29-12 அன்று ஏதேனும் சிறப்பு பதிவு உண்டா ? தமிழ்வலைப்பதிவுகளில் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கைப்புள்ளைக்கு இனிய வாழ்த்துகள்.

என்றென்றும் அன்புடன்,

பாலராஜன்கீதா

கைப்புள்ள said...

//படங்கள் சூப்பர். ஓசில ராஜஸ்தான் சுத்தி காமிச்சிட்டீங்க :)//
ரொம்ப நன்றி அருண்குமார்.

//
Wish you and your loved ones, a very Happy and Prosperous New Year 2007 !! //
தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அருண்.

கைப்புள்ள said...

//நாளை 29-12 அன்று ஏதேனும் சிறப்பு பதிவு உண்டா ? தமிழ்வலைப்பதிவுகளில் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கைப்புள்ளைக்கு இனிய வாழ்த்துகள்.

என்றென்றும் அன்புடன்,

பாலராஜன்கீதா //

வாங்க பாலராஜன் சார்,
உங்க பின்னூட்டத்தைப் படிச்சிட்டு சந்தோஷத்துல திக்குமுக்காடிட்டு இருக்கேன். இவ்வளவு உன்னிப்பா கவனிச்சு முதல் பதிவு போட்ட நாள் முதல் கொண்டு ஞாபகம் வச்சிருந்து வாழ்த்திருக்கீங்க. உங்க அன்புக்கு நான் எப்படி கைம்மாறு செய்யப் போறேன்னு தெரியலை. மிக்க நன்றி.

இது வரை சிறப்பு பதிவென்று எதையும் யோசிக்கவில்லை. நாளை இரவு முயல்கிறேன். அகம் மகிழச் செய்து விட்டீர்கள். மிக்க நன்றி.

கப்பி | Kappi said...

ஒளி ஓவியர், புகைப்பட விஞ்ஞானி,பரோட்டா பாண்டி, தல கைப்பு வாழ்க வாழ்க!

கப்பி | Kappi said...

ஒளி ஓவியர், புகைப்பட விஞ்ஞானி,பரோட்டா பாண்டி, தல கைப்பு வாழ்க வாழ்க!

கப்பி | Kappi said...

அட ஆண்டு விழாவா???
பந்தல் போட்டு, மைக் செட்டு கட்ட ஆள் அனுப்பியாச்சு!!

வாழ்த்துக்கள் தல!! கலக்குங்க! :)

சேதுக்கரசி said...

போட்டோ எல்லாம் கலக்கலா இருக்கு. இப்படிப் பதிவு போட்டீங்கன்னாத் தான் 5 நிமிசத்துல படிச்சு முடிக்கமுடியுது. இல்லன்னா அரைமணிநேரம் ஆகுது. ஹூம்.. (பெருமூச்சு) நானும் பார்க்க விரும்பும் இடங்கள் ஜெய்பூர், உதய்பூர்.

Anonymous said...

I have been to Udaipur one of the best cities in India.

Anonymous said...

கைப்புள்ள!
இப்படிப் பெரியபுள்ள போல நல்ல படமெடுத்துள்ளீர்கள். மிக நன்று பாராட்டுக்கள்.
யோகன் பாரிஸ்

Srikanth said...

அய் ஆசிட், ஏய் பிளேடு, டேய் நான் இங்கினதாம்டா இருந்தேன், அல்லாரும் லைன்ல வாங்க சொல்லிப்புட்டேன், ஏய் யாருப்பா அது ஊடால கால்ல வுடுறது. என்னா கூட்டம், என்னா கூட்டம், பின்ன தல சுட்ட ஜிலேபி வாங்குறதுனா சும்மாவா...

மு.கார்த்திகேயன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே..

இந்த வருடத்தில் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் நம்மை சேர்த்து வைத்த இந்த பிளாக்கருக்கு நன்றி.

இந்த புதிய வருடத்தில் ஆண்டவனிடன் நீங்கள் வேண்டும் யாவும் கிடைக்கப்பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்களும் குடும்பத்தினரும் எல்லா வித இன்பங்களும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேலும் மேன்மை அடைந்து சிறக்க வாழ்த்துக்கள்

Anonymous said...

படங்காட்டுறீங்க கைப்பு...

Sumathi. said...

ஹாய் கைப்பு,

நீங்க போட்டுருக்கற படத்த பாத்தா...

உடனே ராஜஸ்தான் போகனும் போல இருக்கு. அருமையான படங்கள்.அழகான விளக்கம்...பாதி பாத்த நிறைவு...
ரொம்ப நல்லாயிருக்கு கைப்பு.இது மாதிரி வடக்கே உள்ள சில நல்ல இடங்களைப் பத்தி சொல்லுங்க.. நானும் போக ட்ரை பன்னுறேன்..(oc la A/C paas irukku, aduvum varushathukku 3)வேஸ்ட் பன்ன கூடாதில்ல...

உங்களுக்கு எனது "புத்தாண்டு வாழ்த்துக்கள்"

Deekshanya said...

alagana snaps.. hope u enjoyed the trip a lot. intha mathiri historic places parthu rasipathu oru arumaiyana anubavam!
happy new year thala..

நாமக்கல் சிபி said...

தல வாழ்த்துக்கள்!!!

ஆண்டு விழாக்கு ஏற்பாடு பண்ணிடலாம்....

அப்பறம் வழக்கம் போல எங்களை ஊர் சுத்தி காட்னதுக்கு நொம்ப நன்றி ;)

Dubukku said...

வணக்கம் தல. Nice photos.
உங்கலுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Geetha Sambasivam said...

எங்க ராஜஸ்தானைப் பற்றிய அரிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம்ம், "ஹல்திகாட்டி" என்ற பெயரிலே ஒரு கவிதை இருக்கு. அதிலேயே ராணா பிரதாப்பைப் பத்தியும் வரும். அதைப் படிக்கிறப்போ குதிரை வேகமாப் போற மாதிரியான சந்த அமைப்போட இருக்கும். ராஜாவிற்காகத் தியாகம் செய்த குதிரைஅது. அதுபோல "பன்னா பாய்" என்ற செவிலித்தாயும் மிகவும் போற்றப்படுவார். உதயப்பூர் ராஜ வம்சம் சூரிய வம்சம்,என்றும், ராமரின் வழித் தோன்றல்கள் என்றும் கூறுவார்கள். பழைய நினைவுகள், எப்போவுமே அற்புதம் தான்.

Karthikeyan said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Karthikeyan said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Anonymous said...

ரொம்ப நல்லாயிருக்கு கைப்புள்ள.
மேலும், இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
புதிய இடுக்கைகளில் "செல்லி" வலைப் ப்திவையும் பாருங்க.

இராம்/Raam said...

தல,

படமெல்லாம் சோக்கா இருக்கு.... இங்கெனெ பெங்களுருலேருந்து நீ படம் காமிச்சு இருக்கிற ஊருக்கெல்லாம் போயிட்டு திரும்ப எம்பூட்டு ஆவுமோ, அம்புட்டெயும் என்னோட அக்கவுண்ட்லே போட்டு விடு தல...

உன்னோட புகழை பரப்பிக்கிட்டே அந்த ஊரெல்லாம் சுத்தி பார்த்திட்டு வந்திரேன்.... :-))))

கைப்புள்ள said...

//ஒளி ஓவியர், புகைப்பட விஞ்ஞானி,பரோட்டா பாண்டி, தல கைப்பு வாழ்க வாழ்க!//

மீதி பட்டம் எல்லாம் கூட டூ மச் தான் ஆனா இந்த 'பரோட்டா பாண்டி' ரொம்ப த்ரீ மச்பா. இன்னும் பரோட்டா ஆக சில வருஷம் இருக்கறவனை இப்பவே பரோட்டா பாண்டின்னு கூப்புடறது மனித உரிமை மீறல்...ஆமா சொல்லிட்டேன்.

கைப்புள்ள said...

//போட்டோ எல்லாம் கலக்கலா இருக்கு. இப்படிப் பதிவு போட்டீங்கன்னாத் தான் 5 நிமிசத்துல படிச்சு முடிக்கமுடியுது. இல்லன்னா அரைமணிநேரம் ஆகுது. ஹூம்.. (பெருமூச்சு) நானும் பார்க்க விரும்பும் இடங்கள் ஜெய்பூர், உதய்பூர்//

வாங்க மேடம்,
படிக்க எளிமையான பதிவிட முயற்சி செய்யறேன். நம்ம அடுத்தப் பதிவையும் படிச்சிப் பாருங்க. ஜெய்பூர், உதய்பூர் ரெண்டும் சுற்றுலாத் தலம் தான். வாய்ப்பு கெடைச்சாப் பாருங்க.

கைப்புள்ள said...

//I have been to Udaipur one of the best cities in India//

வாங்க அனானிமஸ்,
உங்க கருத்துக்கு மிக்க நன்றி.

கைப்புள்ள said...

//இப்படிப் பெரியபுள்ள போல நல்ல படமெடுத்துள்ளீர்கள். மிக நன்று பாராட்டுக்கள்.
யோகன் பாரிஸ் //

வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி யோகன் ஐயா.

கைப்புள்ள said...

//அய் ஆசிட், ஏய் பிளேடு, டேய் நான் இங்கினதாம்டா இருந்தேன், அல்லாரும் லைன்ல வாங்க சொல்லிப்புட்டேன், ஏய் யாருப்பா அது ஊடால கால்ல வுடுறது. என்னா கூட்டம், என்னா கூட்டம், பின்ன தல சுட்ட ஜிலேபி வாங்குறதுனா சும்மாவா...//

பின்னறியேப்பா! லுங்கி கட்டிக்கிட்டு மண்டையைச் சொறிஞ்சிக்கிட்டு நிக்கறது நான் தான்னு கண்டுபிடிச்சிட்டியா?
:)

கைப்புள்ள said...

வருகைக்கும் மிக்க நன்றி டுபுக்கு சார், தீக்ஷண்யா, கீதா மேடம், கார்த்திக், பாலாஜி, ராம், ராம், செல்லி, ஜி, சுமதி மேடம், கார்த்திகேயன்.

உங்கள் அனைவரது கருத்துகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் எனது உளங்கனிந்த நன்றி.

ரவி said...

படங்கள் சூப்பர்...லேக் பேலஸ் கட்டண விவரம் நெட்டில் கிடைக்குதா ?

கைப்புள்ள said...

//படங்கள் சூப்பர்...லேக் பேலஸ் கட்டண விவரம் நெட்டில் கிடைக்குதா ? //

வாங்க ரவி,
தாஜ் லேக் பேலஸ் என்பது ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டல். அதப் பத்தி தான் கேக்கறீங்கன்னு நெனக்கிறேன். ஐடிசி ஹோட்டல்சோட தளத்துல இந்த ஹோட்டலின் கட்டண விபரம் இருக்குமென நினைக்கிறேன். ஆனால் இந்த இடத்தில் எந்த ஒரு பொருளுக்கும் ஃபைவ் ஸ்டார் விலை தான். சாதாரணமாக ஏரியில் படகில் செல்வதற்கு 5-10ரூ என்றால், இந்த ஹோட்டலுக்குப் படகில் செல்லவே ரூ.250 கட்டணமாம். அதோடு எனக்குத் தெரிந்த வரை ஒரு இரவுக்கு 8000-9000 வரை கட்டணம் வசூலிப்பதாகக் கேள்வி. அருங்காட்சியகம் அமைந்திருக்கும் சிட்டி பேலசைச் சுத்திப் பார்க்க 50 ரூ கட்டணம். பொறுமையாக ரசித்துப் பாக்க ஒரு நாள் முழுசா தேவை. 150 ரூ குடுத்து ஒரு ஆங்கில கைடு வச்சிக்கறது நல்லது.

Boston Bala said...

சிவப்பு லோலாக்கு குலுங்குது... படங்கள் அந்தக்கால விசிட்களை நினைவுக்குக் கொண்டு வருகிறது

சேதுக்கரசி said...

//சிவப்பு லோலாக்கு குலுங்குது...//

இது என்னங்க? புரியலியே? :-)

கைப்புள்ள said...

//சிவப்பு லோலாக்கு குலுங்குது... படங்கள் அந்தக்கால விசிட்களை நினைவுக்குக் கொண்டு வருகிறது //

வாங்க பாபா,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. ஆஹா அது என்ன சிவப்பு லோலாக்கு?
:)

கைப்புள்ள said...

////சிவப்பு லோலாக்கு குலுங்குது...//

இது என்னங்க? புரியலியே? :-) //

அநேகமா காதல் கோட்டை படத்து பாட்டைச் சொல்றாருன்னு நெனக்கிறேன்.
:)

குமரன் (Kumaran) said...

Pictures are Super

குமரன் (Kumaran) said...

போட்டோ பயணம் அருமையாக இருக்கிறது கைப்புள்ள. கொடுத்து வச்சவர் நீங்க> :-)

இலவசக்கொத்தனார் said...

மீ 50?