Sunday, July 02, 2006

ஆறு போட கூப்புட்டாக

இத்தனை வருச சர்வீசுல நாம செஞ்ச சாதனைகளைப் பத்தி ஆறு ஆறா எழுதச் சொல்லி 'மனதின் ஓசை' ஹமீது கூப்புட்டாக, நம்ம விவசாயி இளா கூப்புட்டாக... இப்பிடியே இன்னும் ஒரு நாலு "கூப்புட்டாக" வரிசையாப் போட்டா ரைமிங்கா படிக்கிறதுக்கு நல்லாத் தான் இருக்கும். அதுக்குன்னு பொய்யாச் சொல்ல முடியும்? இல்ல அதெல்லாம் சொல்லித் தான் நமக்குப் பழக்கமா?(சரி...சரி :) அடங்குறேன்) நம்மளப் பத்தி நாமளே தமுக்கு அடிச்சிக்கிறதுக்குத் தானே இப்பிடி ப்ளாக்கைத் தொறந்து வச்சி கல்லாவுல ஒக்காந்துருக்கோம்? அதுக்குன்னே ரெண்டு பேரு வெத்தலை பாக்கு வெச்சு அழைக்கும் போது கசக்குமா என்ன? நம்ம பதிவுகள்ல எங்கேயாச்சும் எப்படியாச்சும் சொருவிடனும்னு நெனச்சி ஸ்டாக்ல வச்சிருந்த பைசா பொறாத சில பல வெசயங்களை,, 'அவுக கூப்புட்டாக'வை சாக்கா வெச்சி இப்ப இங்கே கொண்டாந்து கொட்டறேன். கொட்டறதுக்கு வழிவகை ஏற்படுத்தி கொடுத்த மாவீரன்'மனசின் மைக்செட்' ஹமீது, எம்.ஏ.எல்.எல்.பி அவர்களே, வேளாண் தமிழன் 'விவ்' ரிச்சர்ட்ஸ் அவர்களே...ஒங்க ரெண்டு பேத்துக்கும் டேங்ஸ்பா.

மொதல்ல என்னைப் பத்தி ஆறு
1. பேரு : பேருக்கா பஞ்சம்? சென்னையில் வாழும்/வாழ்ந்த பல்லாயிரக் கணக்கான மோகன்களின் ஒரே பட்டப்பேரான 'லூஸ் மோகன்', மேல் வீட்டு ஆண்ட்டி சூட்டிய 'மோகு', வடநாட்டில் 'வாக்கப்பட்ட' பாவத்துக்காக 'மோகன் பியாரே', ஸ்கூலில் 'மோசி', காலேஜில் 'மாம்ஸ்' அல்லது 'மோகனா', ப்ளாக்கில் கைப்புள்ள

2. ஊரு : பல நாளா வெளியூரு தான். ஆனா நாப்பது வருசத்துக்கும் மேலா சென்னையில இருந்து, செம்பரம்பாக்கம் தண்ணி குடிச்சாலும் தோப்பனார் இன்னும் தன்னோட ஊரு சிதம்பரம்னு தான் சொல்லிக்கிறாரு.

3. படிப்பு/வேலை : எந்த கட்டைவிரலால கைநாட்டு வச்சா செல்லும்னு தெரியுற அளவுக்கு இருக்குது/ப்ளாக் படிக்கிறதுக்கு நடுவுல வேலை செய்யறதுக்கு வெளியூருல ஒக்காத்தி வச்சு பஞ்சப்படி அளக்கற ஒரு வேலையும் இருக்குது.

4. கடவுள் : இருக்காரு. நம்மோட மனசாட்சியும் கடவுளும் ஒன்னு தான் என்பது பல நாள் நம்பிக்கையா இருந்துச்சு. அதாவது இறை வழிபாடு என்பது அவசியமானது இல்ல அப்படிங்கிற மாதிரி. கொஞ்சம் பெரியவனா ஆனதும், நமக்கும் மேல ஒரு சக்தி இருக்கு. அந்த சக்தியின் தாக்கத்தினாலும் அருளினாலும் தான் நம்முடைய மனசாட்சியும் நல்வழியில் இயங்கி நமக்கு நல்வழி காட்டுகிறது, அதனால் அந்த சக்தியை(supreme power) வழிபடுதல், நம் மனசாட்சியினை(conscience) நல்வழியில் இட்டுச் செல்லவும், நாம் நல்ல செயல்களைச் செய்யவும், நல்ல எண்ணங்களை உருவாக்கிக் கொள்ளவும் உதவும் என்ற அளவில் தற்போது உள்ளது என்னுடைய கடவுள் நம்பிக்கை.

5. கொளுகை : அவரும் இருக்காருங்க. அவங்கவங்க அவங்கவங்களோட 'சொந்த வியாபாரத்தைக்' கவனிச்சாலே எல்லாரும் சந்தோஷமா இருக்கலாம்ங்கிறது நம்ம கொளுகை. என்னைப் போல ஒருவனும் இல்லை என நான் எண்ணுவது எவ்வாறு தவறாகாதோ அதே போல அடுத்தவன் எண்ணுவதிலும் தவறில்லை என்ற எண்ணம் எந்நாளும் என் மனதில் இருக்க வேண்டும். என்னைப் போலவே அனைத்து மனிதர்களும் இருக்க முடியாது என்பதனால் தான் பல நிறங்களிலும், உருவங்களிலும், மொழிகளிலும், மதங்களிலுமான மனிதர்கள் இருக்கிறார்கள். என்னை எவ்வாறு(எனது அனைத்து குறை நிறைகளுடன்)அடுத்தவர்கள் பார்க்க வேண்டும் என நான் நினைக்கிறேனோ, அதே கண்ணோட்டத்தில் அடுத்தவனையும் நான் காண முற்பட வேண்டும். முடிந்தவரை அடுத்தவனிடம் உள்ள நல்லவற்றைக் கற்பதிலும் காப்பியடிப்பதிலும் தவறொன்றுமில்லை. யாருக்கும் அறிவுரை சொல்லும் அளவுக்கு நமக்கு அறிவு இல்ல, அதே சமயத்தில் அடுத்தவர் நமக்கு சொல்லும் அறிவுரையை நாம் கற்றுக் கொள்வதில்(சரியானதாக படும் பட்சத்தில்) குறைந்து விடமாட்டோம், அடுத்தவர் நம்மிடம் அறிவுரை கேட்டால், 'கேட்டால் மட்டுமே' நமக்கு சரியென தோன்றுவதைச் சொல்லுவது என்பது இன்னொரு கொளுகை.

6. கொசுறு: பலவிதமான எதிர்மறைகளால்(paradox) உருவாக்கப் பட்டவன். அசைவம் சாப்பிட்டாலும் ஆட்டையோ, கோழியையோ அறுப்பதைப் பார்க்கப் பிடிக்காதவன். உணவுக்காக ஒரு உயிர் கொலையாவதைப் பார்ப்பதைத் தவிர்க்க frozen foodஐ தேடி ஒரு சூப்பர் மார்க்கெட் போய் வாங்குவேனே ஒழிய அதை உண்பதை நிறுத்தாதவன். இவ்வாறாகப் பல paradoxகளின் கூட்டே அடியேன்.

ஒன்னும் பிரிலை இல்ல? எப்படி பிரியும்? அல்லாமே பெளாசாஃபியாச்சே? :). அய்யா சாமிங்ளா! இதை படிக்கிற புண்ணியவான்களே, இது வரைக்கும் படிச்சிட்டு போர் அடிக்குதுன்னு அப்படியே ஓடிப் போயிடாதீங்க. இன்னும் கொஞ்சூண்டு தான் இருக்கு, அதையும் படிச்சிருங்க. ப்ளீஸ்!

இளையராஜாவின் அறுசுவை
மீஜிக்கைப் பத்தி வாயைத் தொறந்தாலே இளையராஜா பேரு தான் வரணுமான்னு என்னை நானே கேட்டுக்கறதுண்டு. ஆனா அதுக்குப் பதிலும் ஒடனே கெடச்சிடும் இவரு பாட்டுகள்ல இருக்குற 'கிக்' வேற எங்கேயும் கெடக்கறதில்ல...அதான். காலேஜ் படிக்கும் போது, இளையராஜா பாடல்களின் சிறப்பைப் பத்தி பேசி பரவசப்பட்ட அனுபவங்களும் பல உண்டு, நானும் எனது தனிமையும் ராஜா பாடல்களினால் உணர்ச்சி வயப்பட்டு திக்குமுக்காடி நின்ற அனுபவங்களும் பல உண்டு. இசைஞானியின் இசையில் ஆறு வெவ்வேறு சுவைகளைப்(சுவை என்பதை mood என்ற பொருளில் கொள்க) பத்தி எழுதறேன்.
1. வெகுளித் தனம்(Innocence) - இந்தப் பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டுகளில் ஒன்னு. சின்னப் பசங்க(வளர்சிதை பசங்க!) ஒரு தோப்புக்குள்ள டிராமா போட்டு வெளாடுற மாதிரியான ஒரு வித்தியாசமான பாட்டு. அவுங்களோட சின்ன சின்ன ஆசைகள், கனவுகள் இதெல்லாம் சொல்ற மாதிரி பாடல் வரிகள். படம் கல்லுக்குள் ஈரம். கேக்கும் போதே ஒரு உற்சாகம் வந்து தொற்றிக் கொள்ளும். இதே மாதிரியான இன்னொரு பாட்டு அழகி படத்துல வர்ற டமக்கு டமக்கு டம்.

தோப்பிலொரு நாடகம் நடக்குது ஏலேலங் கிளியே...

2. காதல் - காதலைப் பத்தி பல பாடல்கள் இருந்தாலும், வித்தியாசமா இருக்கட்டுமேன்னு இந்த பாட்டைப் போடறேன். சுரேஷும், சுலோச்சனாவும் தெலுங்கு படத்துல வர்ற மாதிரியான ஸ்டெப் எல்லாம் போட்டு 'உடற்பயிற்சி' நடனம் எல்லாம் ஆடியிருந்தாலும் இன்னும் இந்த பாட்டைக் கேக்கும் போது ஃபிரெஷ்ஷாத் தான் இருக்கு. பாட்டுக்கு நடுவுல வர்ற இண்டர்லூட்ஸ்(interludes)க்கு எவ்வளவு மெனக்கெட்டிருக்காருன்னு பாருங்க. ராஜாவின் பல பாடல்களைப் போல, இப்படத்து இசைநிரப்பிகளும்(interludesக்கு நான் வச்ச பேரு ஹி...ஹி...) மனதில் நிக்கும். படம் வெள்ளை ரோஜா.

சோலைப்பூவில் வாடைத் தென்றல் ஆடும் நேரம்...

3. கோபம் - இந்த பாட்டோட ஆரம்பத்துல ஒரு வயலின் இசை வரும் பாருங்க. அதுவே ரொம்ப சிறப்பா இருக்கும், அதிலேருந்து மெதுவா நகர்ந்து கோபம் கொப்பளிக்கும் ஒரு டியூனுக்குக் கொண்டு போயிருப்பாரு பாருங்க. கேட்டதும் ரௌத்திரம் பழகத் தூண்டும் ஒரு பாடல். பாடலின் வெற்றிக்கு அதை எழுதிய கவிஞரின் பங்களிப்பும் உண்டு என்பதில் ஐயமில்லை. படம் கண் சிவந்தால் மண் சிவக்கும். இதை விட ஆக்ரோஷமான கோவமான பாட்டு வேணும்னா பிதாமகன் படத்து 'அடடா அகங்கார கைகளில்' பாட்டைக் கேட்டு பாருங்க.

மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால்...

4. சோகம் - இந்த படத்துல எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு இது. கமலையும், மறைந்த கன்னட நடிகர் டாக்டர். ராஜ்குமாரையும் பின்னணி பாட வைத்ததும் இளையராஜா தான். மனதைப் புழியும் சோகத்தைக் கமலும் வெகு அருமையாக வெளிக் கொணர்ந்திருப்பார். படம் விருமாண்டி.

மாட விளக்கே யாரு இப்போ தெருவோரம்...

5. நகைச்சுவை - இந்த பாட்டு ஒரு காதலிக்கும் காதலனுக்கும் நடுவுல இருக்குற ஒரு மெல்லிய நகைச்சுவை(subtle humour) கலந்த உரையாடலை ஆதாரமாக வைத்து எழுதப்பட்ட நையாண்டி பாடல். 'கோவணத்தில் ஒரு காசிருந்தா கோழி கூவ ஒரு பாட்டு வரும், பாட்டு படிக்கிற என் மாமா உன் கோவணத்தில் ஒரு காசிருக்கா?' என்று அவள் டீஸ் செய்ய 'கோவணமும் இல்ல கையில் காசுமில்ல, பாட்டு வருதே என்ன புள்ள, கோயில் சிலை போல உன்னை கண்டதால் ஏத்தம் கெடுதே கன்னி புள்ள' அப்படின்னு அண்ணல் காமெடியா பதிலும் சொல்லி தன்னோட லவ்ஸையும் வெளிப்படுத்தறாரு. பாடலாசிரியரும் இளையராஜா என்பது இப்பாடலின் சிறப்பு. படம் நினைவே ஒரு சங்கீதம்.

ஏத்தமய்யா ஏத்தம் ஒனக்கு ரொம்ப ஏத்தமய்யா ஏத்தம்...

6. பல சுவை - இத மாதிரி ஒரு பாட்டை என்னால போட முடிஞ்சதுன்னா, நான் பெருசா சாதிச்சிட்டதா நெனச்சிக்குவேன்னு ராஜாவோட புதல்வர் யுவன் சங்கர் ராஜா ஒரு பேட்டியில் சொல்லியிருந்தது ஞாபகம் வருது. ஒரு பாட்டுக்குள் இவ்வளவு உணர்வுகளா அப்படின்னு மலைக்க வைக்கிற ஒரு 'உணர்வுகளின் களஞ்சியம்' இந்த பாட்டு. மகிழ்ச்சி, சோகம், எதிர்பார்ப்பு இப்படின்னு பல வித 'மூட்களைப்' பார்க்க முடியும். இந்த இசையை சி மேஜர், டி மேஜர்னு பிரிக்கத் தெரியாதுன்னாலும் இது ஒரு 'class composition'ன்னு மட்டும் புரியுது. படம் அவதாரம்.

தென்றல் வந்து தீண்டும் போது...

ஆறு நிகழ்ச்சிகள்
நிஜ வாழ்வில் நிகழ்ந்த ஆறு குட்டி குட்டி சம்பவங்கள்.
1. புது தில்லியில் இருந்த போது கி.பி,2003இல் ஆர்.கே. புரத்தில் உள்ள தில்லி தமிழ்ச் சங்கத்தில் ஒரு வயலின் அரங்கேற்ற நிகழ்ச்சியைக் காணும் வாய்ப்பு கிடைச்சது. ரெண்டு சின்ன பசங்க, ஒரு சின்னப் பொண்ணு மூணு பேருக்கும் ஒரே நேரத்துல ஒரே மேடையில அரங்கேற்றம். அவர்களுக்கு வாழ்த்து சொல்ல இசை விமர்சகர் சுப்புடு வந்திருந்தார். பெரிய பெரிய வித்வானுகளுக்கே சிம்ம சொப்பனமா இருக்கும் சுப்புடு சின்னப் பசங்க வாசிப்பைப் பத்தி என்ன சொல்றாருன்னு கேக்க ஆவலா இருந்தேன். ஆனா மூணு பேருமே அருமையா வாசிச்சாங்க. சுப்புடு மேடையில ஏறினார் "மூணு கொழந்தைகளும் ரொம்ப நன்னா வாசிச்சா. குறிப்பா இந்த ராகத்துல இந்த கீர்த்தனைல வர்ற இந்த சங்கதி பெரியவாளுக்கே சிக்கலா இருக்கும்(அவரு எதைப் பத்தி சொன்னாருன்னு இப்ப எனக்கு நியாபகமில்ல). அதையே ரொம்ப நன்னா வாசிச்சா" அப்படின்னு அவரு பேசிட்டு இருக்கும் போது சால்வையைக் கொண்டாந்து போத்தினாங்க. அப்போ ஆன் தி ஸ்பாட் அடிச்சாரு பாருங்க ஒரு டைமிங் ஜோக் - "ஹ்ம்ம்...சால்வை எல்லாம் போத்துறான்னு தெரிஞ்சிருந்தா, ஆத்துக்காரியையும் கூட்டிண்டு வந்திருப்பேன்". ஹ்ம்ம்ம்...இப்பவே இந்த போடு போடறாரே...இவரு சின்ன வயசுல எப்படி இருந்திருப்பாருன்னு அப்ப நெனச்சுக்கிட்டேன்.

2. "பத்து வருசத்துக்கு முன்னால பெங்களூர் பக்கத்துல ஒரு விமான விபத்து. அதுல பொழச்சவங்க பன்னிரண்டு பேரு தான். அதுல நான் ஒருத்தன். ஆறு எடத்துல மல்டிபிள் ஃபிராக்சர்ஸ். இருந்தாலும் அடுத்த முப்பதாவது நாள் நான் ஆபீஸ்ல இருந்தேன். யூ கைஸ் டோண்ட் ஹேவ் ஸ்டேமினா(You guys don't have stamina)" - வைரல் ஃபீவருன்னு மூணு நாள் லீவு போட்டதுக்கு இப்படி ஒரு முழு நீல பீலாவை அவுத்து வுட்டவரு எங்க முன்னாள் பாஸ். இது ஒரு சின்ன உதாரணம் தான். இதை விட பெரிய பெரிய கதையெல்லாம் இருக்கு.

3. மேலே குறிப்பிட்ட பெரிய பெரிய கதையெல்லாம் நானும் என் கூட அப்ப வேலை செஞ்ச மூணு பேரும் பகிர்ந்துக்கறது மிதுன் என்ற நண்பருடன். பெங்காலி காரர். இதெல்லாம் ஒரு புக்காப் போடுங்களேன்னு உசுப்பேத்துவார். எங்களை விட மூணு லெவல் சீனியர்னாலும் ஜாலியாகப் பழகக் கூடியவர். போன வருடம் ஜூன் மாதம் 20ஆம் தேதி பேன்க்ரியாஸ் கேன்சருடன் இரண்டாண்டு காலம் போராடிவிட்டு இயற்கை எய்தினார். அவருடைய கடைசி சில தினங்களில் அவரைப் பார்க்கச் சென்ற போது அவருடைய துணைவியார் அழுததைக் கண்டது, நெஞ்சைக் கனக்கச் செய்த ஒரு நிகழ்வு. அந்த கம்பெனியை விட்டும் இப்ப நான் வெளியே வந்தாச்சு. இன்னும் கொஞ்சம் நாட்களில் பல விஷயங்களைப் போலவே மிதுனும் மறக்கப் பட்டு விட்டிருப்பார். எப்பவாச்சும் இதை திரும்ப படிச்சேன்னா அவருடன் பழகிய நினைவுகள் ஞாபகம் வர்றதுக்காக இதை எழுதி வெச்சிக்கிறேன்.

4. ப்ள்ஸ் டூ முடிச்சிட்டு காலேஜுல் சேர்றதுக்காக டோட்(DOTE) பொறியியல் கல்லூரிகளின் விண்ணப்பப் படிவம் வாங்கிக் கொண்டு பல்லவன் பஸ்ஸுல் உக்காந்து வந்துட்டுருந்தேன். என் பக்கத்துல உக்காந்திருந்தவரு "தம்பி! DOTE காலேஜ் அப்ளிகேஷன் பார்ம் குடுக்க ஆரம்பிச்சிட்டாங்களா?" அப்படின்னு கேட்டாரு. "ஆமாங்க! நேத்துலேருந்து ஆரம்பிச்சிட்டாங்க"ன்னு சொன்னேன். "என் பொண்ணு கூட 95% வாங்கிருக்குப்பா. ஆனா எஞ்சினியரிங் வேணாம், நான் மெடிக்கல் தான் போவேன்னு சொல்றா" என்றார். நான் அதற்கு முந்தின வருடம் இருந்த கட் ஆஃப் விவரங்களைச் சொல்லிக்கிட்டிருந்தேன். எங்களுக்கு முன்னாடி உக்காந்திருந்த ஒருத்தரு "95%க்கெல்லாம் மெடிக்கல் சீட் கெடக்காது"ன்னு தானாவே வலிய வந்து ஒரு 'கருத்து' சொன்னாரு. என் பக்கத்துல உக்காந்திருந்தவருக்கு வந்துச்சு பாருங்க கோவம்"ஏங்க! உங்களை யாராச்சும் கேட்டாங்களா? அவன் அவன் எவ்வளவு டென்சன்ல இருக்கான்... இதுல வந்துட்டாங்க கெடக்காதுன்னு சொல்றதுக்கு. நான் அந்த தம்பி கிட்ட பேசிட்டிருக்கேன், உங்களுக்கு என்னங்க வந்தது. உங்க வேலை என்னமோ அத மட்டும் பாருங்க." அப்படின்னு பொரிஞ்சுத் தள்ளிட்டாரு. குழந்தைகளின் எதிர்காலத்தைக் குறித்து பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளும், கனவுகளும் எவ்வாறு இருக்கிறது என்று உணர்த்தியது அந்த நிகழ்வு.

5. நாலு ஆச்சா? ஆங்...ஒரு வாட்டி காலேஜ்ல ஃபிசிக்ஸ் லேப்ல சில பசங்க ரீடிங்கைத் தானாவே எழுதிக் கொண்டு போய் வாத்தியார் கிட்ட நீட்டுனதும், அவரு அதைப் பாத்துட்டு கூலாத் தமிழ்ல சொன்னது "தம்பி சீக்கிரம் போய் உண்மையா ஒரு தரம் ரீடிங் எடுத்துட்டு வந்துடுப்பா".

6. ஒரு வாட்டி நம்ம கூட்டாளி காட்டான் 'செல்வான் கான்' யாஹூ மெசஞ்சர்ல ஆன்லைன் வந்தப்போ 'ஹை'ன்னு சொன்னேன். அந்த நாய் எனக்குப் பதில் அனுப்புது 'a/s/l please'ன்னு. எனக்கு பல்பு குடுத்தை நெனச்சி கடுப்பு வந்தாலும் அப்புறமா பலமுறை நெனச்சி சிரிச்சிருக்கேன்.

ரசிக்கும்/ரசித்த/விரும்பும்/விரும்பிய ஆறு
1. ஒரு காலத்தில் தாவரங்களின் தாவரவியல் பேர்களைச்(Botanical names) சேகரிப்பதில் பயங்கரமான ஒரு ஆர்வம். காடு மேடு எல்லாம் சுத்தி புல், பூண்டெல்லாம் பொறுக்கிருக்கேன்.
2. கேலிகிராஃபி - நெடுங்காலமாக இருக்கும் ஒரு ஆர்வம். இப்பவும் அப்பப்போ(ஆடிக்கும் அமாவாசைக்கும்) பயிற்சி செய்யறதுண்டு.
3. தபால் தலை சேகரிப்பு - ஒரு 6 மாசத்துக்கு முந்தி வெறியாய் இருந்த இவ்விருப்பம் இப்போது கிடப்பது Cold storageஇல்.
4. பல மொழிகளைக் கற்றல் - அப்பப்போ பட்லர் மலையாளம், தெலுங்கு, கன்னடம் இதெல்லாம் பேச பிடிக்கும். ஞான் அப்பப்போ, மலையாளத்துல சம்சாரிக்கிறதைப் பாத்துட்டு என்னைக் குறிச்சு சிலருக்குச் சில சம்சயங்கள் உண்டு. பக்ஷே அதெல்லாம் நிங்களோட சொப்பனம்னு பரஞ்சிக்கிறேன். எனிக்கி இதில் வளர inderest...வேறொந்தும் இல்லா கேட்டோ:)
5. இப்பல்லாம் எங்கனா போறதுன்னா விமானத்துல அனுப்புறாங்களா? அதுல ஜன்னலோர சீட் வாங்கிட்டு எட்டிப் பாத்துட்டே வர்றது ரொம்ப பிடிக்கும். கீழே கண்ணு முன்னாடி ஒரு மேப் போட்ட மாதிரி இருக்குறதைப் பாக்குறது ஒரு தனி அழகு தான்.
6. சமீபகாலமா ஒரு நல்ல கேமரா வாங்கி The Hindu Folioல வர்ற மாதிரியான பயங்கரமான புகைப்படங்கள் எடுக்கணும்னு ஒரு விபரீத ஆசை. எந்த டிஜிட்டல் கேமரா வாங்கினா நல்லாருக்கும்னு யாராச்சும் சொன்னீங்கனா நல்லாருக்கும்.

அழைக்கும் அறுவர்
1. பேராசிரியர் முனை(னி)வர். க.பி. கார்த்திக் ஜெயந்த் - ஜாவா கோடிங் பத்தி மக்களுக்கு டிப்ஸ் குடுக்க ஆரம்பிச்ச இவரோட ப்ளாக், இப்ப கமலினி முகர்ஜி(யா?), அவுங்களைப் பாத்து "ஈ வேசவி சல்லாக்கா உந்தி"ன்னு சொல்ற லெவல்ல வந்து நிக்குது. டேட்டாபேஸ் சர்வரை ரீஸ்டார்ட் செய்யும் கடினமான பணிகளுக்கு நடுவேயும், போராளி 'காம்ரேட்' பாலாவின் துணையோடு க.பி.கழகத்தை நடத்தும் மருதைக்காரத் தம்பி.

2. 'வாரியார் புகழ்' மெட்டி ஒலி கோபி மாமா - பொட்டு வச்சு, ரிப்பன் கட்டி சிண்டு போட்டுக்கிட்டு இன்னும் பச்சப்புள்ள மாதிரி தெரிஞ்சாலும், வாரியார் சாமிகளைப் பத்திப் பெரிய விசயம் எல்லாம் எழுதறவரு. தமிழ், தெலுகு, மலையாளம் எல்லா மொழிகளுக்கும் எடிட்டர்(தமிழ்ல என்னப்பா?) போன்ற பெரிய பெரிய விசயத்தை எல்லாம் கண்டு புடிச்சு வச்சிக்கிட்டு மெட்டி ஒலி கோபி போலவே அமைதியா ஒக்காந்திருக்குற 'கோபி மாமா'.

3. வரிசங்கம் புகழ் சேதுக்கரசி 'மேடம்' - இவுங்க ப்ளாக்குக்கு 'பொல்லாத மௌனம்'னு பேரு. சரி வெறும் மௌனம் தானேன்னு நினைச்சா 'மௌனம் கலையும் வரை'னு ஒரு அபாய எச்சரிக்கை வேற குடுத்துருக்காங்க. ஆண்டாள் பாசுரத்துல வர்ற 'வரிசங்கத்துக்கு' அர்த்தம் எல்லாம் சொல்லி கொடுத்தாங்க. ஆனாலும் இவுங்க எங்க தமிழ் மிஸ் இல்ல :) இந்த அழைப்பை ஏத்துக்கிட்டு ஆறு பதிவு போட்டாச்சும் மௌனத்தைக் கலைக்கிறாங்களான்னு பாப்போம்.

4. காலேஜ் சீனியர் 'ஐயனார்' வி.எஸ்.எஸ்.ரவி - நம்ம காலேஜ் சீனியர். இவுரு காலத்துல நான் படிச்சிருந்தா எனக்கு டின்னு கட்டிருப்பாரு. அப்படிப்பட்ட பொல்லாத ராகிங் அனுபவங்களை அவரு ஃபர்ஸ்ட் இயர் படிக்கறப்போ "அக்காலத்துலேயே" சந்திச்சவரு. படிச்சது ஈ.சி.ஈ.ன்னாலும் ஒரு பாசத்துக்குக் கட்டுப்படு மெக்கானிக்கல் சீனியர்களுக்கு அஸைன்மெண்ட் எல்லாம் எழுதி குடுத்து, பத்தொன்பதாம் முனியாண்டின்னு பேரு வாங்குனவரு. இப்ப இணையத்துல ஐயனாரு கோயில் கட்டிக்கிட்டு இருக்கும் தஞ்சை தரணியின் தவப்புதல்வன்.

5. 'நான் இன்னும் சின்னப்புள்ள தான்' புகழ் அனுசுயா'மேடம்' - 'நான் இன்னும் சின்னப்புள்ள தான்' இது தான் இவுங்களுக்கு ரொம்பப் பிடிச்ச டயலாக். நான் ஒரு வாரம் டேரா போட்ட ஜிசிடியில் நாலு வருசம் படிச்சிப் போட்டவுங்க. மாற்றான் வீட்டு அல்லியைக் கண்டு அல்லியா, லில்லியா, குமுதவல்லியான்னு இவுங்களுக்குச் சமீப காலமா ஒரு பெருத்த சந்தேகம். தீர்த்து வைக்கிறவங்களுக்கு பரிசெல்லாம் குடுக்கறாங்களாம்.

6. 'நாயகன்' நன்மனம் ஸ்ரீதர் - நம்ம வருத்தப்படாத வாலிபர் சங்கத்து ஒற்றர்படைத் தலைவர். 'நீங்க நல்லவரா கெட்டவரா'ன்னு லார்டு மெக்காலேவைப் பாத்து கேள்வி கேக்குற நல்ல மனம் கொண்ட 'நாயகன்'. காதலிக்க நேரமில்லை படம் எடுத்ததும் இவுரு தான்னு ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.

ரோல் நம்பர் 3 மற்றும் 5 - என்னையும் அறியாம அந்தத் தடை செய்யப்பட்ட சொல் வந்துடுச்சு. இந்த ஒரு தரம் மன்னிச்சு விட்டுருங்க. ப்ளீஸ் :)

யய்யா! சங்கிலி தொடர் ஆரம்பிக்கிற பெரியவங்களே! நாலு போயி ஆறு வந்துச்சு. ஆறுக்கு அப்புறம் நம்பரைக் கூட்டாதீங்கய்யா! அடுத்த தபா ஒன்னுலேருந்து ஆறுக்குள்ளே எதனா ஒரு ஒத்தப்படை நம்பரைக் குடுங்க, இல்லன்னா ஒன்னேகால் பதிவு அஞ்சேமுக்கால் பதிவுன்னு எதனா ஆரம்பிங்க. இத எழுதி முடிக்கிறதுக்குள்ள பெண்டு நிமிந்துடுச்சு.

சம்திங் டெல்ஸ் மீ டா கைப்புள்ள! இம்மாம் பெரிய பதிவைப் பாத்துட்டு உன்னைய பிச்சி பீஸ் பீஸ் ஆக்கப் போறாங்கனு.

83 comments:

கோவி.கண்ணன் said...

கைப்புள்ள... ஒனக்குள்ள இம்புட்டு இருக்கா ? அசத்திபுட்டிகளே அப்பு...
(இப்படித்தான் மொதல்ல ஆரம்பிச்சி நூலுவுடனும்)

Unknown said...

asaththal kaipu

ungka boss kathai superb:-)))

நாகை சிவா said...

இளையராஜாவின் எம்புட்டோ பாட்டு இருக்கும் போது, நல்லா தேடி தான்யா பாட்டை எல்லாம் போட்டு இருக்க. படத்து பெயரோட பாட்டின் முதல் வரியையும் சொல்லி இருந்தால் இன்னும் நல்லா இருந்து இருக்கும்.

//எனக்கு பல்பு குடுத்தை நெனச்சி கடுப்பு வந்தாலும் //
உனக்கு பல்பு வாங்குறது புதுசா என்ன?

//எந்த டிஜிட்டல் கேமரா வாங்கினா நல்லாருக்கும்னு யாராச்சும் சொன்னீங்கனா நல்லாருக்கும்.//
காசு அதிகமா இருந்தாலும் CANON யே வாங்கு. SONY யும் நல்லா தான் இருக்கும். என்கிட்ட இருப்பது SONY DSC P 200, 7.2 Mega Pixels. I am fully satisfied with that Camera. Eventhough CANON is the best.
Pixels - நாலு, ஐந்து இருந்தா கூட போதும்.

நாகை சிவா said...

//இப்படித்தான் மொதல்ல ஆரம்பிச்சி நூலுவுடனும்) //
ஹும், ஆரம்பிங்க கண்ணன். அப்படியே நானும் நூல பிடிச்சி பின்னாடியே வந்துறேன். :))

நன்மனம் said...

//காதலிக்க நேரமில்லை படம் எடுத்ததும் இவுரு தான்னு ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.//

படத்துக்கு காசு தான் தரல பேரையாவது கொஞ்சம் பரப்புங்கப்பானு சொன்னேன், யார் கிட்ட சொன்னா போய் சேரும்னு கரெக்டா தெரிஞ்சு கைப்பு காதுல விழற மாதிரி பேசி சொன்னத செஞ்சிட்டாங்கப்பா :-))

நல்ல வேலை கைப்புவோட முன்னால் பாஸ் மாதிரி என்ன பத்தி ஏத்தி விட்டு பரப்பி ஆப்பு வாங்க வெக்கல :-)

siva gnanamji(#18100882083107547329) said...

சின்னப்புள்ளே, வெள்ளாட்டுப்புள்ளேனு நினைச்சாக்கா
உண்ட்டே இவ்ளோவ் விவரம் இர்க்கா?

பலே பாண்டியா!

கைப்புள்ள said...

//(இப்படித்தான் மொதல்ல ஆரம்பிச்சி நூலுவுடனும்)//

ஓகே...ஓகே...ஆரம்பிச்சிட்டீங்க. நூல் வுட எப்ப வர்றீங்க கண்ணன்?
:)

manasu said...

அடிபொலி சேட்டா,தகர்ப்பன் பிரகடனம் கேட்டோ.

"simbly superb."

கைப்புள்ள said...

//asaththal kaipu

ungka boss kathai superb:-)))
//

வாங்க செல்வன்,
எங்க நான் பீலா வுடறேன்னு நெனச்சிடுவாங்களோன்னு பயந்தேன். சின்னப்பசங்க கதை சொல்லற மாதிரி எங்களுக்கு இந்த மாதிரி பல கதை சொல்லிருக்காரு. இப்ப இதை நெனச்சா நம்மள மாக்கான்னு நெனச்சி ஒருத்தரு இவ்வளவு கதை சொல்லிருக்காரா? அதையும் நாம கேட்டோமான்னு படு ஆச்சரியமா இருக்குது.
:)

கைப்புள்ள said...

//இளையராஜாவின் எம்புட்டோ பாட்டு இருக்கும் போது, நல்லா தேடி தான்யா பாட்டை எல்லாம் போட்டு இருக்க.//

ஒன்னு கூட தேறாத பாட்டுன்னு சொல்ல வர்றியா ராசா...எனக்கு அளுவாச்சி வருதுப்பா...சீக்கிரம் சொல்லு...அவ்வ்வ்வ்வ்

// படத்து பெயரோட பாட்டின் முதல் வரியையும் சொல்லி இருந்தால் இன்னும் நல்லா இருந்து இருக்கும்//
சங்கத்து சிங்கம் நீ சொல்லி கேக்காத இருப்பேனா. இப்ப பாட்டோட முதல் வரியையும் போட்டாச் போட்டாச்.

கைப்புள்ள said...

//உனக்கு பல்பு வாங்குறது புதுசா என்ன?//
நம்ம பதிவைப் புதுசாப் பாக்குறவங்க முழு விவரமும் தெரிஞ்சிக்கனும் இல்ல...அதான் போட்டுருக்கேன்.

கைப்புள்ள said...

//காசு அதிகமா இருந்தாலும் CANON யே வாங்கு.//

அப்படீங்கறே? செஞ்சிடறேன். ஆனா எனக்கு இந்த முன்னாடி நிக்குற ஆளு செமத் தெளிவாவும் ஒரு பத்து அடி பின்னால நிக்கிற ஆளு கலங்கலா out of focusல படம் எடுக்கக் கூடிய கேமரா வாங்கனும்னு ஆசை. அது வாங்கறதுக்காண்டி டிரங்க் பொட்டில நெறைய சில்லறை சேத்து வச்சிருக்கேன்ல.

கைப்புள்ள said...

//நல்ல வேலை கைப்புவோட முன்னால் பாஸ் மாதிரி என்ன பத்தி ஏத்தி விட்டு பரப்பி ஆப்பு வாங்க வெக்கல :-)//

ஆசைப் படறீங்க! உங்களோட அதே ஆளுங்க கிட்ட ஏற்பாடு பண்ணச் சொல்லி நான் சொல்லிடறேன். உங்காசையைக் கெடுப்பானேன்?
:)

எல்லாம் சரி! மறக்காம ஆறு பதிவு போட்டுடுங்க. ரைட்டா?

கைப்புள்ள said...

//சின்னப்புள்ளே, வெள்ளாட்டுப்புள்ளேனு நினைச்சாக்கா
உண்ட்டே இவ்ளோவ் விவரம் இர்க்கா?

பலே பாண்டியா!//

உங்க பாராட்டைக் கேக்கும் போது புல்லரிக்குது சிவஞானம்ஜி! ரொம்ப நன்றி.

நாகை சிவா said...

//ஒன்னு கூட தேறாத பாட்டுன்னு சொல்ல வர்றியா ராசா...எனக்கு அளுவாச்சி வருதுப்பா...சீக்கிரம் சொல்லு...அவ்வ்வ்வ்வ்//
சே...சே... நான் போயி அப்படி சொல்வேனா? அதிலும் அந்த கடைசி முனு பாட்டை பத்தி குறையா? கிடையவே கிடையாது. எம்புட்டோ பாட்டு இருக்கும் போது பொறுக்கி எடுத்து போட்டு இருக்க தான் சொல்ல வந்தேன்.

பாட்டின் முதல் வரியை போட்தற்கு தாங்ஸ்......

கைப்புள்ள said...

// எம்புட்டோ பாட்டு இருக்கும் போது பொறுக்கி எடுத்து போட்டு இருக்க தான் சொல்ல வந்தேன்.//

அப்பச் சரி
:)

//பாட்டின் முதல் வரியை போட்தற்கு தாங்ஸ்......//
நமக்குள்ள எதுக்குபா தாங்ஸ்லாம்?

அனுசுயா said...

//'நான் இன்னும் சின்னப்புள்ள தான்' இது தான் இவுங்களுக்கு ரொம்பப் பிடிச்ச டயலாக்//
இப்படி வாரீட்டீங்களே கைப்பு. வழக்கமா உங்கள மத்தவங்கதான் கலாய்ப்பாங்க இப்ப நீங்க என்ன கலாய்க்கறீங்க. :)
ஆறு போட அழைச்சதுக்கு நன்றிங்கோ. உங்க கொளுகை ரொம்ப நல்லாயிருக்குதுங்க.

கைப்புள்ள said...

//அடிபொலி சேட்டா,தகர்ப்பன் பிரகடனம் கேட்டோ.

"simbly superb." //


மனசு சேட்டா!
ஆத்தியய காலம் தொட்டு தமுக்கு அடிக்கானெங்கில் எனிக்கி வளர இஷ்டம் கேட்டோ. அதே ஞான் சான்ஸ் கிட்டியதும் வேகமாயிட்டு அடிச்சி களைஞ்ஞு...நிங்களுடே பிரகடனம் கேட்டு ஞான் உத்திரிய ஹேப்பியாயி.
:)

கைப்புள்ள said...

//இப்படி வாரீட்டீங்களே கைப்பு. வழக்கமா உங்கள மத்தவங்கதான் கலாய்ப்பாங்க இப்ப நீங்க என்ன கலாய்க்கறீங்க. :)//
ஆண்டவா! என்ன இது இந்த அபலை பையனின் மீது அபாண்டம்? உங்களை எல்லாம் கலாய்ச்சிட்டு நான் இங்கே வாழ்ந்துட முடியுமா என்ன?
:)

//ஆறு போட அழைச்சதுக்கு நன்றிங்கோ. உங்க கொளுகை ரொம்ப நல்லாயிருக்குதுங்க. //
டேங்ஸ் அனுசுயா(என்னமோ போல இருக்குதுங்க. கவனிக்க...உங்களுக்காக என்னோட அச்சம், மடம் இதெல்லாம் விட்டு குடுத்துருக்கேன்)
:)

Ram.K said...

விருமாண்டி பாட்ட போட்டு அசத்திட்டீங்களே. உமக்கு நல்ல ரசனை தான்.

சந்தோஷத்துடன்
பச்சோந்தி.

கைப்புள்ள said...

//விருமாண்டி பாட்ட போட்டு அசத்திட்டீங்களே. உமக்கு நல்ல ரசனை தான்.

சந்தோஷத்துடன்
பச்சோந்தி//

உங்க பின்னூட்டத்தைப் பாத்து எனக்கும் ரொம்ப சந்தோஷம் சார். மிக்க நன்றி.

கப்பி | Kappi said...

கலக்கிப்புட்டீங்க கைப்பு..

//தென்றல் வந்து தீண்டும் '...class composition'..//

வழிமொழியறேன்...

ilavanji said...

உம்ம பதிவு கலக்கல் அறுசுவை விருந்து!

// You guys don't have stamina //

:)))

உம்ம டேமேசரை கேட்டதா சொல்லுங்க!

கைப்புள்ள said...

//கலக்கிப்புட்டீங்க கைப்பு..

//தென்றல் வந்து தீண்டும் '...class composition'..//

வழிமொழியறேன்... //

வாங்க கப்பி,
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க.

கைப்புள்ள said...

//உம்ம பதிவு கலக்கல் அறுசுவை விருந்து!//
ரொம்ப டேங்ஸ்ங்க வாத்தியாரே :)

// You guys don't have stamina //

:)))

உம்ம டேமேசரை கேட்டதா சொல்லுங்க!//
இவரு முன்னாள் டேமேஜர். அப்பக் கூட அவரு டேமேஜர் கெடயாது. பாஸ். இப்ப IT companyக்குள்ள நுழைஞ்சதும் தான் டேமேஜர், டேமேஜர் பேரைச் சொல்லி விளிக்கிறதெல்லாம். அப்பல்லாம் அடக்க ஒடுக்கமா இந்த மாதிரி கதையை எல்லாம் அமைதியா கேட்டுக்கற பொயப்பு தான்.
:)

manasu said...

ராஜா சாரிண்ட "How to name it" கேட்டிட்டுண்டோ கைப்பு சேட்டன்?

இல்லெங்கில் ஒரு பிராவசம் கேட்டா மதி... பின்ன தன்ன தானே திவசம் கேட்டுகொள்ளும்.

கைப்புள்ள said...

//ராஜா சாரிண்ட "How to name it" கேட்டிட்டுண்டோ கைப்பு சேட்டன்?

இல்லெங்கில் ஒரு பிராவசம் கேட்டா மதி... பின்ன தன்ன தானே திவசம் கேட்டுகொள்ளும்//

பல முறை கேட்டுருக்கேன் மனசு. அதப் பத்தி பேசற அளவுக்கும் எழுதற அளவுக்கும் நமக்கு சரக்கு இல்லை.

ஏற்கனவே ஒருத்தரு மலையாளத்தை வச்சி, என் மேல பயங்கர சந்தேகத்துல இருக்காரு. நான் பின்னேயும் மலையாளத்தில் உத்தரம் பரஞ்செங்கில் அவரு சந்தேகத்தை ஊர்ஜிதப் படுத்திக்க கிடுத்திக்கப் போறாரு.
:)

VSK said...

ராஜா மட்டுமா ஒரே பாட்டுல அத்தனை உணர்ச்சியையும் காட்டினவரு?
நீங்க கூடத்தான் இந்த ஒரு அற்புதமான பதிவுல சொல்லாமலே ஆறு" சுவையையும் காட்டியிருக்கீங்க!

நன்றாக இருந்தது!

Karthik Jayanth said...

தல,

இப்பதான் வூட்டுக்கு வந்தேன் ;-)

//ஒரு முழு நீல பீலாவை அவுத்து வுட்டவரு எங்க முன்னாள் பாஸ்.

எவ்ரி ஆபிஸ் எவ்ரி டேமேஜர்

//பக்ஷே அதெல்லாம் நிங்களோட சொப்பனம்னு பரஞ்சிக்கிறேன். எனிக்கி இதில் வளர இன்டெரெச்ட்...வேறொந்தும் இல்லா கேட்டோ:)

முருகேஷா நம்பிட்டேன் ;-)

//எந்த டிஜிட்டல் கேமரா வாங்கினா நல்லாருக்கும்னு யாராச்சும் சொன்னீங்கனா நல்லாருக்கும்.

cannon ட்ரை பண்ணு.

//இப்ப கமலினி முகர்ஜி(யா?), அவுங்களைப் பாத்து "ஈ வேசவி சல்லாக்கா உந்தி"ன்னு சொல்ற லெவல்ல வந்து நிக்குது.டேட்டாபேஸ் சர்வரை ரீஸ்டார்ட் செய்யும் கடினமான பணிகளுக்கு நடுவேயும்,

:D பத்தவச்சிடயே தல ;-)

கொஞ்சம் டையம் குடு. போன வாட்டி 4 பதிவுக்கே நாக்கு தள்ளிடுச்சி :-)

Ravichandran Somu said...

கைப்புள்ள,

அழைப்புக்கு நன்றி. நான் தற்போது நியுயார்க் நகரில் நடக்கும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை தமிழர் விழாவில் இருக்கிறேன். பாஸ்டன் வந்த பிறகு சிக்சர் அடிக்கிறேன்.

-ரவிச்சந்திரன்

மனதின் ஓசை said...

கைப்பு,
டவுட்டக்கீதே..எல்லாமே சொந்த சரக்குதானா? :-) இல்ல நாகேஷ் மாதிரி???

பாட்டெல்லாம் நல்லாத்தேன் இருக்கு...

//அந்த நாய் எனக்குப் பதில் அனுப்புது ''a/s/l please'ன்னு//
படிக்கிற அப்பவே சிரிப்பு வருது.. நல்ல பல்ப்புதான்..அப்பவே வாங்க ஆரம்பிச்சாச்சா? வெரி குட்...வெரி குட்..


ஆறு நல்லாவே இருக்கு மோகன்... உங்களுக்குள்ள இத்தன இருக்கா? இப்பொதுதான் தெரிந்து கொண்டேன்..
ஆங்...இத சொல்லணுமே..என் அழைப்பை எற்று (சிச்சீ..அதெல்லாம் வாணாம்..கைப்பு எவன் எப்ப கூப்பிடுவான்ன்னு பாத்துகிட்டு இருந்தா மாதிரி இருக்குன்னு யாரொ சொல்ராங்க பாரு..கைப்ப கலாய்க்க கூடாது..பாவம்..) பதிவிட்டதற்கு நன்றி..

மனதின் ஓசை said...

//ஆனா எனக்கு இந்த முன்னாடி நிக்குற ஆளு செமத் தெளிவாவும் ஒரு பத்து அடி பின்னால நிக்கிற ஆளு கலங்கலா out of focusல படம் எடுக்கக் கூடிய கேமரா வாங்கனும்னு ஆசை.//

இல்ல, முன்னாடி நிக்குற ஆளு out of focusலயும் ஒரு பத்து அடி பின்னால நிக்கிற பிகர் கலங்கலா செமத் தெளிவாவும் படம் எடுக்கக் கூடிய கேமரா வாங்கனும்னு ஆசையா?

கைப்புள்ள said...

//ராஜா மட்டுமா ஒரே பாட்டுல அத்தனை உணர்ச்சியையும் காட்டினவரு?
நீங்க கூடத்தான் இந்த ஒரு அற்புதமான பதிவுல சொல்லாமலே ஆறு" சுவையையும் காட்டியிருக்கீங்க!

நன்றாக இருந்தது!//

வருகைக்கு மிக்க நன்றி எஸ்கே சார்! என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது தங்களுடைய பின்னூட்டம்.

கைப்புள்ள said...

//எவ்ரி ஆபிஸ் எவ்ரி டேமேஜர்//
யூ டூ சேம் ப்ளட்?
:)


//முருகேஷா நம்பிட்டேன் ;-)//
பின்ன...நம்பற மாதிரி தெளிவா திருத்தமா இல்ல சொல்லிருக்கோம்?

//cannon ட்ரை பண்ணு.//
நான் நிகான் நெனச்சு வச்சிருந்தேன். ஆனா ரெண்டு பேரு கேனான் பத்தி சொல்லிருக்கீங்க. மறுபரிசீலனை செய்யறேன்.

//:D பத்தவச்சிடயே தல ;-)//
வெல்கம் :)

//கொஞ்சம் டையம் குடு. போன வாட்டி 4 பதிவுக்கே நாக்கு தள்ளிடுச்சி :-)//
பொறுமையா போடு...ஆனா ஆடி மாசம் ஆரம்பிக்கிறதுக்குள்ள போட்டுடு.
சுப காரியங்களுக்கு சரியில்லைன்னு சொல்லுவாங்க.
:)

கைப்புள்ள said...

//அழைப்புக்கு நன்றி. நான் தற்போது நியுயார்க் நகரில் நடக்கும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை தமிழர் விழாவில் இருக்கிறேன். பாஸ்டன் வந்த பிறகு சிக்சர் அடிக்கிறேன்.//

ஓகே சார்! நியூயார்க்ல டெஸ்ட் மேச்சை முடிச்சிட்டு வாங்க. சிக்ஸர் நச்சுன்னு அடிக்கனும் சொல்லிட்டேன்.
:)

கைப்புள்ள said...

//டவுட்டக்கீதே..எல்லாமே சொந்த சரக்குதானா? :-) இல்ல நாகேஷ் மாதிரி???//
சொந்த சரக்கு தான்...பின்ன சித்தூர்கட்ல மண்டபத்துல எவனோ எழுதி குடுத்ததையா கொண்டாந்து போட்டுருக்கேன்...நான் எழுதுனது தான்...நான் எழுதுனது தான்.
:)

//படிக்கிற அப்பவே சிரிப்பு வருது.. நல்ல பல்ப்புதான்..அப்பவே வாங்க ஆரம்பிச்சாச்சா? வெரி குட்...வெரி குட்..//
அப்பவே இல்ல...அதுக்கு முன்னாலேயிருந்தே...எம் கடன் பல்பு வாங்கி கிடப்பதே...
:)

//ஆறு நல்லாவே இருக்கு மோகன்... உங்களுக்குள்ள இத்தன இருக்கா? இப்பொதுதான் தெரிந்து கொண்டேன்..//
பயப்படற அளவுக்கு ஒன்னும் இல்ல...எல்லாம் அரைகுறை தான்...எதுவும் ஒயுங்காத் தெரியாது.

//ஆங்...இத சொல்லணுமே..என் அழைப்பை எற்று (சிச்சீ..அதெல்லாம் வாணாம்..கைப்பு எவன் எப்ப கூப்பிடுவான்ன்னு பாத்துகிட்டு இருந்தா மாதிரி இருக்குன்னு யாரொ சொல்ராங்க பாரு..கைப்ப கலாய்க்க கூடாது..பாவம்..) பதிவிட்டதற்கு நன்றி..//
நமக்குள்ள எதுக்கு நன்னியெல்லாம்? அடுத்து எப்போ கூப்புட போறீக?
:)

கைப்புள்ள said...

//இல்ல, முன்னாடி நிக்குற ஆளு out of focusலயும் ஒரு பத்து அடி பின்னால நிக்கிற பிகர் கலங்கலா செமத் தெளிவாவும் படம் எடுக்கக் கூடிய கேமரா வாங்கனும்னு ஆசையா?
//

மகாஜனங்களே!
மாவீரரு எதோ சொல்றாரே? உங்க யாருக்காச்சும் எதனா புரியுதா? எனக்கு புரியலைப்பா
:)

ALIF AHAMED said...

//வரிசங்கம் புகழ் சேதுக்கரசி 'மேடம்' - இவுங்க ப்ளாக்குக்கு 'பொல்லாத மௌனம்'னு பேரு. சரி வெறும் மௌனம் தானேன்னு நினைச்சா 'மௌனம் கலையும் வரை'னு ஒரு அபாய எச்சரிக்கை வேற குடுத்துருக்காங்க//

, சேதுக்கரசி said...
மேடமா??? என் பேரைப் பார்த்ததும் உங்க ஸ்கூல் தமிழ் மிஸ் ஞாபகம் வந்தா அதுக்கு நான் என்ன பண்றது? நோ மேடம் ப்ளீஸ்.

//நோ மேடம் ப்ளீஸ். //
வாங்க சேதுக்கரசி மேட...தப்பு...தப்பு...வாங்க சேதுக்கரசி(வெரல் நுனி வரைக்கும் வந்துருச்சுங்க...கஷ்டப்பட்டு நிறுத்துனேன்),

ஐயோ! உங்க மனசையும் நான் புண்படுத்திட்டேனா?

:::)))))))

கைப்புள்ள said...

//ஐயோ! உங்க மனசையும் நான் புண்படுத்திட்டேனா?

:::)))))))
//

பத்த வக்கிறியே பரட்டை?
:))

ALIF AHAMED said...

தப்ப சுட்டி காட்டினா இப்பிடியா சொல்லுறது :(


(மேடத்திக்கிட்ட நான் சொல்லாவே இல்லயே ::)) )

கைப்புள்ள said...

//தப்ப சுட்டி காட்டினா இப்பிடியா சொல்லுறது :(


(மேடத்திக்கிட்ட நான் சொல்லாவே இல்லயே ::)) //

யய்யா மின்னலு! நான் வல்லை இந்த டேஞ்சரான வெளாட்டுக்கு...என்னைய வுட்டுடு.
:(

சேதுக்கரசி said...

யாருங்க அது "மின்னுது மின்னல்"? கைப்பு விடற லூட்டியையெல்லாம் உடனே பிடிச்சு quote போட்டு பின்னூட்டம் இடறார்? "மின்னுது மின்னல்" வாழ்க! :-)

சேதுக்கரசி said...

கைப்புள்ளை நான் உங்களுக்கு நன்றி சொல்ல ரொம்ப கடமைப்பட்டிருக்கேன். பின்ன, என்னையும் ஒரு வலைப்பதிவரா மதிச்சு 6 விளையாட்டுக்கு அழைச்சிருக்கீங்களே? :-D ஒரு வருசம் முன்னாடி, வலைப்பூன்னா கிலோ என்ன விலைன்னு கேட்ட என்னையெல்லாம் பதிவு செய்யச் சொல்லி ஊக்குவிக்கிற உங்களை நினைச்சா பெருமையாவும் மகிழ்ச்சியாவும் இருக்கு. அதே சமயம், என்னது, இவருக்கு உருப்படியா வேற யாரும் கிடைக்கலியோ அழைக்கன்னும் யோசிக்கவேண்டியிருக்கு! ஹாஹா...

எப்படியோ 6 விளையாட்டுக்குக் கூப்பிட்டாவது என்னைப் பதிவு போடவைக்கலாம்னு பார்க்கிறீங்க... ஆனா நான் எப்படி ஆளு! இதுக்கெல்லாம் உஷாரா இருக்கமாட்டேன்? இதோ இன்னும் 5 மணிநேரத்துல விமானத்துக்குப் போகணும். இப்படி உக்காந்து தமிழ்மணத்துல பராக்குப் பார்த்துக்கிட்டிருந்தேன்னாப் போகவேண்டியதுதான்! தாயகத்துக்குப் போறேனுங்கோ! சுமார் 3 மாசம் கழிச்சு தான் வலைப்பூக்கள் பக்கம் மறுபடியும் வரமுடியும்.

6 விளையாட்டில் பங்கேற்காமைக்கு வருந்துகிறேன் (அப்படின்னு சம்பிரதாயத்துக்குச் சொல்லிக்கிறேன் :-)) 2007-ம் வருசம் பதிவு போட ஆரம்பிக்கலாமான்னு ஒரு சின்ன யோசனை... பார்ப்போம்.. வணக்கம்!

சேதுக்கரசி said...

இப்ப 2 பின்னூட்டம் அனுப்பினேன் (இது 3வது) முந்தைய இரண்டும் வந்துதான்னு confirm பண்ணிடுங்க ப்ளீஸ்... கணினியை இழுத்து மூடினாத்தான் விமானத்தைப் பிடிக்கமுடியும். விடு ஜூட்ட்ட்....

Syam said...

//ஆறு எடத்துல மல்டிபிள் ஃபிராக்சர்ஸ். இருந்தாலும் அடுத்த முப்பதாவது நாள் நான் ஆபீஸ்ல இருந்தேன்//

கட்டதொரை & Co அடிக்கர அடிய அப்படியே தொடைச்சு போட்டு பழகின உங்களுக்கு இது எல்லாம் எம்மாத்திரம்...

பல சுவையோட உங்க 6 சூப்பர்.. :-)

மனதின் ஓசை said...

//அப்பவே இல்ல...அதுக்கு முன்னாலேயிருந்தே...//
அப்படியா? என்னவோ போங்க... கடமையே கண்ணா இருந்து இருக்கீங்கன்னு சொல்லுங்க...

// அடுத்து எப்போ கூப்புட போறீக?//
ஏன்..எங்கேயாச்சும் எப்படியாச்சும் சொருவிடனும்னு நெனச்சி ஸ்டாக்ல வச்சிருந்த பைசா பொறாத சில பல வெசயங்கள் இன்னும் இருக்குதா?
சரி சரி.. நம்மள யாரவது கூப்டா கூப்பிடறேன்.. சரியா?

ILA (a) இளா said...

//இன்னும் கொஞ்சம் நாட்களில் பல விஷயங்களைப் போலவே மிதுனும் மறக்கப் பட்டு விட்டிருப்பார்//
மனசுல எவ்வளவோ கிண்டல், நக்கல் இருந்தாலும், இந்த வரிய படிச்ச பிறகு பின்னூட்டமே போட தோணல. நான் இது மாதிரி 3 நண்பர்களை இழந்து இருக்கிறேன், காலம் அவர்களை மறக்க செய்தாலும், வேகமா போற உலகத்துல எங்கேயாவது ஒரு நொடி அவுங்களை ஞாபகப்படுத்திடுது. அப்போ கண்ணீர் விட முடியாட்டாலும் அந்த கணம் மெளனமா ஆகிடுது மனசு.

தகடூர் கோபி(Gopi) said...

பாசக்கார பயலாயிருக்காம்ய்யா... எங்க மாட்டுனாலும் நம்மளயும் சேத்தி வச்சி மாட்டிவிட்டுர்றாய்ங்கய்யா...

:-))

கைப்புள்ள,

நம்மளையும் ஆறு போட கூப்டத்துக்கு ரொம்ப சந்தோசமப்பு.

ஊரு விட்டு ஊரு ஐ ஆம் தி எஸ்கேப் ஆகி வந்ததால புதுக் கணினியில சில தொழில்நுட்ப சிக்கல்கள். இன்னும் ரெண்டு மூனு நாளுல சரியானதும் ஆறு பதிவு போட்டுறலாம்.

ஓக்கே?

நாமக்கல் சிபி said...

தலை! அப்படியே நம்ம ஆறாம் திணைக்கு வந்து கொஞ்சம் சிரிச்சுட்டுப் போறது

ALIF AHAMED said...

கைப்புள்ள இந்தா பிடி ஐம்பது...........என்னது பொற்காசா ஹி ஹி பின்னுட்டம்தான்

ஜொள்ளுப்பாண்டி said...

கைப்பூ ரொம்ம்ம்ப பெரியா ஆறு மாதிரி ஒரு பதுவை போட்டு இருக்கீயளே ரெண்டு நாளாச்சு படிச்சு முடிக்க ! :))

தல உயிர் தப்பிப் பொழச்சவரா நீங்க?? படிக்கரப்போ சிலிர்த்துபோச்சு போங்க ! :)

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

ஆறு பதிவு எழுதுவது எப்படின்னு ஒரு பதிவு போடலாம் கலக்கீட்டீங்க தல....

கால்கரி சிவா said...

//பத்து வருசத்துக்கு முன்னால பெங்களூர் பக்கத்துல ஒரு விமான விபத்து. அதுல பொழச்சவங்க பன்னிரண்டு பேரு தான். அதுல நான் ஒருத்தன்.//

மறு பிறவி கண்ட கைப்பூ 100 ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள்

Jeyapalan said...

// அதுல ஜன்னலோர சீட் வாங்கிட்டு எட்டிப் பாத்துட்டே வர்றது ரொம்ப பிடிக்கும். கீழே கண்ணு முன்னாடி ஒரு மேப் போட்ட மாதிரி இருக்குறதைப் பாக்குறது ஒரு தனி அழகு தான்//

இந்த வகை ஆட்களுக்குத் தானே
கூகிள் செய்மதி படங்கள். நான் எஙளூரிலிருக்கும், ஈழத்தில், யாழ்ப்பாணத்திலிருக்கும் எங்கள் வீட்டையே பார்த்திரிக்கிறேன். நீங்களும் பாருங்கள்.

சென்னை இதோ.

http://maps.google.com/?ie=UTF8&ll=10.301408,79.790955&spn=1.575391,2.05719&t=k&om=1

Ravichandran Somu said...

Super Six !!

கலக்கிட்டே கைப்புள்ள !

Geetha Sambasivam said...

உங்க ஆறு பதிவு எல்லாமே நல்லா இருக்கு. பங்களூர் விமான விபத்திலே தப்பிப் பிழைச்சது ஏதோ கடவுள் செயல்தான். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும். கடவுள் நம்பிக்கையைப் பற்றிய உங்கள் எண்ணமும் தெளிவாக இருக்கிறது.

Thiru said...

//சம்திங் டெல்ஸ் மீ டா கைப்புள்ள! இம்மாம் பெரிய பதிவைப் பாத்துட்டு உன்னைய பிச்சி பீஸ் பீஸ் ஆக்கப் போறாங்கனு.// Super da..Chance-a kudukkala..!

Thiru said...

//சம்திங் டெல்ஸ் மீ டா கைப்புள்ள! இம்மாம் பெரிய பதிவைப் பாத்துட்டு உன்னைய பிச்சி பீஸ் பீஸ் ஆக்கப் போறாங்கனு.// Super da..Chance-a kudukkala..!

கைப்புள்ள said...

//யாருங்க அது "மின்னுது மின்னல்"? கைப்பு விடற லூட்டியையெல்லாம் உடனே பிடிச்சு quote போட்டு பின்னூட்டம் இடறார்? "மின்னுது மின்னல்" வாழ்க! :-)//

என்னைய போட்டுக் குடுத்து உனக்கு ரசிகர்களைத் தேடிக்கிற...மின்னலு நல்லாருய்யா!

கைப்புள்ள said...

//6 விளையாட்டில் பங்கேற்காமைக்கு வருந்துகிறேன் (அப்படின்னு சம்பிரதாயத்துக்குச் சொல்லிக்கிறேன் :-)) 2007-ம் வருசம் பதிவு போட ஆரம்பிக்கலாமான்னு ஒரு சின்ன யோசனை... பார்ப்போம்.. வணக்கம்!//

வாங்க சேதுக்கரசி,
இவ்வளவு நேரம் இந்தியா வந்து சேர்ந்திருப்பீங்கன்னு நெனக்கிறேன். தங்கள் மூன்று மாத லீவு இனிதே அமைய என் வாழ்த்துகள். 2007னு சொல்லிட்டீங்க...அதையும் நம்ம ஆறு பதிவோட ஆரம்பிச்சிடுங்க.
:)

கைப்புள்ள said...

//கட்டதொரை & Co அடிக்கர அடிய அப்படியே தொடைச்சு போட்டு பழகின உங்களுக்கு இது எல்லாம் எம்மாத்திரம்...//
ஆளாளுக்கும் இப்ப நல்லா பேச கத்துக்கிட்டீங்கய்யா...நல்லாருங்க.
:)

//பல சுவையோட உங்க 6 சூப்பர்.. :-)//
தேங்க்ஸ்மா.

கைப்புள்ள said...

//ஏன்..எங்கேயாச்சும் எப்படியாச்சும் சொருவிடனும்னு நெனச்சி ஸ்டாக்ல வச்சிருந்த பைசா பொறாத சில பல வெசயங்கள் இன்னும் இருக்குதா?//
அஆம்பா...சொருவனும்னு நெனச்ச பல மேட்டர் இந்த தபா மிஸ்ஸாயிடுச்சு.

//சரி சரி.. நம்மள யாரவது கூப்டா கூப்பிடறேன்.. சரியா?//
அடியேன் பாக்கியம்.
:)

கைப்புள்ள said...

//மனசுல எவ்வளவோ கிண்டல், நக்கல் இருந்தாலும், இந்த வரிய படிச்ச பிறகு பின்னூட்டமே போட தோணல. நான் இது மாதிரி 3 நண்பர்களை இழந்து இருக்கிறேன், காலம் அவர்களை மறக்க செய்தாலும், வேகமா போற உலகத்துல எங்கேயாவது ஒரு நொடி அவுங்களை ஞாபகப்படுத்திடுது. அப்போ கண்ணீர் விட முடியாட்டாலும் அந்த கணம் மெளனமா ஆகிடுது மனசு.//

வெவசாயி! ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. நீங்க எழுதியிருக்கிறதை நானும் அப்பப்ப உணர்ந்திருக்கேன்.

கைப்புள்ள said...

//ஊரு விட்டு ஊரு ஐ ஆம் தி எஸ்கேப் ஆகி வந்ததால புதுக் கணினியில சில தொழில்நுட்ப சிக்கல்கள். இன்னும் ரெண்டு மூனு நாளுல சரியானதும் ஆறு பதிவு போட்டுறலாம்.

ஓக்கே?//

வாங்க கோபி,
டபுள் ஓகே. டைம் கெடக்கும் போது போடுங்க.

கைப்புள்ள said...

//தலை! அப்படியே நம்ம ஆறாம் திணைக்கு வந்து கொஞ்சம் சிரிச்சுட்டுப் போறது//

திணைல உள்ளேன் அய்யா ஏற்கனவே போட்டாச்சு.

கைப்புள்ள said...

//கைப்பூ ரொம்ம்ம்ப பெரியா ஆறு மாதிரி ஒரு பதுவை போட்டு இருக்கீயளே ரெண்டு நாளாச்சு படிச்சு முடிக்க ! :))//

வாய்யா பாண்டி!
எழுதி முடிக்க எம்புட்டு நாளாயிருக்கும்னு யோசிச்சி பாரு.

கைப்புள்ள said...

//ஆறு பதிவு எழுதுவது எப்படின்னு ஒரு பதிவு போடலாம் கலக்கீட்டீங்க தல....//

வாங்க குமரன்,
தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

கைப்புள்ள said...

//கைப்புள்ள இந்தா பிடி ஐம்பது...........என்னது பொற்காசா ஹி ஹி பின்னுட்டம்தான்//

மின்னலு! டேங்ஸ்பா.
:)

கைப்புள்ள said...

//மறு பிறவி கண்ட கைப்பூ 100 ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள்//

வாங்க சிவா சார்,
நம்ம பக்கம் முதல் முறையா வந்திருக்கீங்க... நன்றி. மறு பிறவி கண்டது நான் இல்லீங்க. என் பாஸ். அவரு சொன்ன கதை தான் இது.
:)

கைப்புள்ள said...

//இந்த வகை ஆட்களுக்குத் தானே
கூகிள் செய்மதி படங்கள். நான் எஙளூரிலிருக்கும், ஈழத்தில், யாழ்ப்பாணத்திலிருக்கும் எங்கள் வீட்டையே பார்த்திரிக்கிறேன். நீங்களும் பாருங்கள்.

சென்னை இதோ.

http://maps.google.com/?ie=UTF8&ll=10.301408,79.790955&spn=1.575391,2.05719//

வாங்க ஜெயபால்,
முதல் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி. நீங்கள் குறிப்பிட்டுள்ள தளத்தைப் பார்த்திருக்கிறேன். அத்துடன் Google Earth என்ற மென்பொருளை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டால் உலகின் எந்த மூலையை வேண்டுமானாலும் காணலாம்.

நான் சொல்லாத இன்னொரு செய்தி : GIS(Geographic Information Systems) துறையில் 3 ஆண்டு காலம் பணிபுரிந்துள்ளதால் Map(வரைபடங்களைக்) குறித்து ஓரளவு தெரியும்.

இந்தப் பதிவையும் பாருங்க.
http://kaipullai.blogspot.com/2006/04/other-stories_09.html

கைப்புள்ள said...

//Super Six !!

கலக்கிட்டே கைப்புள்ள !//

வாங்க ரவி சார்,
ரொம்ப நன்றிங்க.

கைப்புள்ள said...

//உங்க ஆறு பதிவு எல்லாமே நல்லா இருக்கு. //
வாங்க மேடம்! நன்றிங்க.

//பங்களூர் விமான விபத்திலே தப்பிப் பிழைச்சது ஏதோ கடவுள் செயல்தான்.//
இதப் படிச்சதும் பயங்கரமா சிரிப்பு வந்துடுச்சு. பிழைச்சது நான் இல்லீங்க. எங்க பாஸ் சொன்ன கதை அது. உண்மையான்னு ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம். ஜொ.பாண்டி உங்களுக்கும் இதே பதில் தான்.

// கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும். கடவுள் நம்பிக்கையைப் பற்றிய உங்கள் எண்ணமும் தெளிவாக இருக்கிறது. //
எல்லாம் 'அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' தான் மேடம்.

கைப்புள்ள said...

////சம்திங் டெல்ஸ் மீ டா கைப்புள்ள! இம்மாம் பெரிய பதிவைப் பாத்துட்டு உன்னைய பிச்சி பீஸ் பீஸ் ஆக்கப் போறாங்கனு.// Super da..Chance-a kudukkala..!//

வாடா மச்சி!
தேங்க்ஸ்டா. ரெண்டு தடவை கமெண்டு போட்டதுக்கும் சேர்த்து தான்.
:)

பொன்ஸ்~~Poorna said...

ஆறு போடச் சொன்னா, இப்படி ஆளைக் கூறு போடுறது மாதிரி இம்மாம் பெரிய பதிவு போட்டிருக்கீயளேன்னு முன்னாடி பார்த்தப்போ படிக்காமயே அபீட் ஆய்ட்டேன்..

ஆனாலும் தல, நீங்க சூப்பர்.. நல்லாத் தான் எழுதி இருக்கீங்க.. ஆறு பதிவுல, ஒன்பது ரசத்தையும் சும்மா பிச்சி உதறி இருக்கீங்க..

உங்க கொள்கை, கடவுள், கொசுறு மூணும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு..

மொத்தத்தில், ஆறு போட்டு நூறு காணப் போகும் எங்கள் அண்ணன் தலைவர் கைப்புள்ள!!!

வாழ்க வாழ்க!!

Unknown said...

கைப்புள்ள, உங்க வித்தியாசமான பாடல் தேர்வுகளையும் ரசிக்கும்படியான நிகழ்ச்சிகளையும் மிகவும் ரசித்தேன். ரெண்டு நிகழ்ச்சி எழுதறதுக்கே திக்கின அனுபவம் இருக்கறதால ஆறு நிகழ்ச்சி எழுத நீங்க என்ன பாடுபட்டிருப்பீங்கனு புரியுது. சும்மா லிஸ்ட் போடாம ஹிட் லிஸ்ட் போட்டதுக்கு ஒரு ஓ!!

Unknown said...

மோகா ஆறு சுவைகளையும் கலந்துக் கட்டி அடிச்சிருக்க.. புல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்திடா...

ஆங்காங்கே சிரிக்க வச்சு.. லேசா கண்ணைக் கட்ட வச்சு.. மனசையும் கனக்க வச்சிடுச்சு உன் ஆறு பதிவு... நல்லாயிருக்குடா

G.Ragavan said...

ஆகா இம்மாம் பெரிய பதிவு...இம்மாம் பெரிய பதிவு......ஆறாறா ஓடியிருக்கே!

பாட்டுகள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. தென்றல் வந்து பாட்டு பலருக்குப் பிடிச்ச பாட்டு. ஆனா எனக்கு அந்தப் பாட்டைக் கேட்டாலே கழுத்தை நெறிக்கிற மாதிரி இருக்கும். ஏன்னே தெரியலை. நல்ல பாட்டுன்னுதான் நெனைக்கிறேன்.

Deekshanya said...

very nice write up.romba nalla irunthathu. Moreover enaku antha winner comedy plus kaipulla characterisation romba ishtam. Good comedy in the recent times na. I enjoyed your blog. esp abt your bengali senior, teacher,senior,etc. aweesome.
rgds
deekshanya

Deekshanya said...

very nice write up.romba nalla irunthathu. Moreover enaku antha winner comedy plus kaipulla characterisation romba ishtam. Good comedy in the recent times na. I enjoyed your blog. esp abt your bengali senior, teacher,senior,etc. aweesome.
rgds
deekshanya

ரவி said...

கலக்கிப்பிட்டே கைப்பு....சூப்பர்..

Anonymous said...

Really superb.. the way you narrated.. really nice mohan raj.. how is new job. Then Canon A 720 is superb digital camera. I bought Canon A 610 previous model. Really nice you can try.

Unknown said...

கைப்புஅண்ணே...

சூப்பரா சிக்ஸர் அடிச்சிட்டீங்க

இந்த கேமரா வாங்கர மேட்டர் வந்து உஷாரா செலக்ட் பண்ணுங்க..

http://dpreview.com ல போய்ட்டு அவங்க சொல்லிருக்கிற விவரங்களை பாருங்க..


என்னோட பர்ஸனல் சாய்ஸ்

mid range : ( around 20 - 25 K )

panasonic fz30

or
Canon Power shot s3 - IS

ரெண்டும் அற்புதமா இருக்கும். 12 எக்ஸ் ஜூம் கூட.. வாழ்கைல அடிக்கடி உபயோகமாறது.. வாங்கும் போதே நல்லதா வாங்குங்க..

SLR range : ( around 50 K including lense )

Nikon D70S
or
Cannon EOSXX (check for current version )


இதெல்லாம் போட்டோ மேல பைத்தியமா இருந்தா வாங்கலாம். என்னோடது நிக்கான் டி70 எஸ்.. அப்படியே படம் காமிக்குது ;).

இல்ல பட்ஜெட் கம்மி... ஸ்டார்டிங் ரேஞ் அப்படின்னா

canon powershot a620( or select suitable one for you ) or
nikon coolpix p3 ( or select suitable one for you )


எதுக்கும் ஒருமுறை dpreview.com la போய் விவரத்த பாத்து முடிவு பண்ணுங்க.


but i still prefer mid range with 12 x ZOOM ( panasonic or Canon... ... IMHO these 2 are the best for that range and worth for money)


கூடவே பல்பெரியற மாதிரி உங்க போட்டோ ஒன்னு போட்டீங்களே அது மாதிரி போட்டுட்டே இருங்க.. வாழ்த்துகள்

அன்புடன்
ஐயப்பன்

ILA (a) இளா said...

//வேளாண் தமிழன் 'விவ்' ரிச்சர்ட்ஸ் //நல்ல தமிழ் பேரை இப்படியா கொலை பண்றது.