Tuesday, November 13, 2007

எங்கே செல்லும் இந்த சாலை

படம் 1: சித்தூர்கட்டில் ஒரு மழைக்கால மா(சா)லை, ராஜஸ்தான்.

இப்படத்தில் ஒரு லேசி ஃபீல்(Lazy Feel) தெரியற மாதிரியே இருக்கும். எனக்கு இந்தப் படத்துல புடிச்ச விஷயமும் அது தான்.


படம் 2: நால்சரோவர் - சார்கேஜ் சாலை, குஜராத். சாலை சம்பந்தப் பட்ட என்னுடைய பெரும்பாலான படங்கள் பேருந்திலோ, காரிலோ பயணம் செய்து கொண்டிருக்கும் போது எடுப்பவை. இப்படம் காரில் மணிக்கு 100 கிமீ வேகத்தில் பயணிக்கும் போது எடுத்தது. கிராமங்களில் போக்குவரத்து நிலைமையையும் இப்படத்தின் மூலம் உணரலாம்.


படம் 3: நால்சரோவர் - சார்கேஜ் சாலை, இன்னொரு படம்.

படம் 4: மோடேரா - காந்திநகர் சாலை, குஜராத். சாலையைக் கடக்கும் பெரியவர். காரின் விண்ட்ஸ்க்ரீன் வழியாக எடுத்த படம்.

படம் 5: மோடேரா - காந்திநகர் சாலை, இன்னுமொரு படம். மின்கம்பங்கள் அளிக்கும் பெர்ஸ்பெக்ட்டிவ் இப்படத்தில் எனக்கு பிடித்தமானது.

படம் 6: மோடேரா - காந்திநகர் சாலை, ஒட்டக வண்டி

படம் 7: மோடேரா - காந்திநகர் சாலை, தூரத்தில் செல்லும் டாங்கர்.

படம் 8: திருப்பதி-சென்னை நெடுஞ்சாலை, புத்தூர் அருகில்.

படம் 9: மும்பை - உதய்பூர் தேசிய நெடுஞ்சாலை.

படம் 10: சாலையைக் கடக்கும் கொக்கு, இந்திய விமானப் படை அகாடெமி, ஐதராபாத்.

படம் 11: குன்னூர் சாலை, உதகை மலை ரயிலி பயணிக்கும் போது எடுத்தது.
படம் எண் 1 மற்றும் 9 போட்டிக்கானவை.

Tuesday, October 09, 2007

சன்னாகிதா குரூ?

நிகண்டு என்பது சொற்களுக்கான பொருள்களைத் தருவதற்காக ஆக்கப்பட்ட நூல்களாகும். தமிழில் அகராதிகளுக்கு முன்னோடியாக இருந்தவை இவையே. இந் நூல்கள் ஆரம்பத்தில் உரிச்சொற்பனுவல் என்ற தமிழ்ச் சொல்லால் அழைக்கப்பட்டது. எனினும் இச் சொல் நீளமாக இருந்ததனாலோ அல்லது இடைக் காலத்திலேற்பட்ட வடமொழிச் சொற்பயன்பாட்டு மோகம் காரணமாகவோ நிகண்டு என்ற வடமொழிப் பெயரே பிற்காலத்தில் நிலைபெற்று விட்டது.

நிகண்டுகள் செய்யுள் வடிவில் அமைந்தவை.

நிகண்டுகள்
திவாகர நிகண்டு (திவாகர முனிவர் இயறியது)
பிங்கல நிகண்டு (பிங்கலம் இயற்றியது)
சூடாமணி நிகண்டு (மண்டலபுருடர் இயற்றியது)
உரிச்சொல் நிகண்டு (காங்கேயர் இயற்றியது)
கயாதர நிகண்டு (கயாதர முனிவர் இயற்றியது)
ஆசிரிய நிகண்டு (ஆண்டிப்புலவர் இயற்றியது)
அகராதி நிகண்டு (இரேவண சித்தர் இயற்றியது)
அகம்பொருள் விளக்க நிகண்டு (அருமந்தைய தேசிகர் இயற்றியது)
பொதிகை நிகண்டு (சாமிநாத கவிராயர் இயற்றியது)
பொருள் தொகை நிகண்டு (சுப்பிரமணிய பாரதியார் இயற்றியது)
நாமதீப நிகண்டு (சிவ சுப்பிரமணியக் கவிராயர் இயற்றியது)
நானார்த்த தீபிகை (முத்துசாமிப் பிள்ளை இயற்றியது)

ஹி...ஹி...அதொன்னுமில்லீங்க. சொல்ல வந்த மேட்டர் ரொம்ப சிறுசு. அதை தமிழ்மணம் முகப்புலயே படிச்சிட்டு யாரும் ஓடிப் போயிட கூடாதில்ல...அதுக்கு தான் தமிழ் விக்கிபீடியாலேருந்து நிகண்டு பத்தி ச்ச்ச்சும்மா ஒரு கட் அண்ட் பேஸ்ட். மன்னிச்சுக்கங்கங்கங்கோ.

மேல் மாடியைக் கசக்கி புழிஞ்சு கடைஞ்சு ஜூஸ் போட்டு அன்புடன் குழுமம் நடத்துன படக்கவிதை போட்டிக்காக எழுதி அனுப்புன கவிதை.


அன்பின் வாசம்

மரணம் முத்தமிடக்காத்திருக்கும் மயான
பூமியிலும்
உன்னன்பின் வாசம்
என் உயிர்ப்பூவைப்
பூக்கச் செய்யும்


இப்ப பதிவோட தலைப்பை ஒரு தடவை படிச்சிட்டு துப்பிட்டு போங்க.

Wednesday, October 03, 2007

விழிக்கு உணவு

வேறென்னங்க? அக்டோபர் மாச புகைப்படப் போட்டிக்காகத் தான். எல்லா புகைப்படங்களுமே க்ளோசப்ல கேமராவோட 'டிஜிட்டல் மேக்ரோ' மோட்ல, புகைப்பட பிரம்மாக்கள் சொல்லற மாதிரி 'As close as it gets' என்ற முறையில் எடுத்தது.

1. சுடு சாதமும் போட்டியும் - இது வேற போட்டி :)



2. பாக்கறதுக்கு உப்புமா மாதிரி இருந்தாலும் கோப்பைக்குள்ள இருக்கறதை எங்க ஊர்ல 'ஐஸ்க்ரீம்'னு சொல்லுவாங்க.


3. பிரமிட் ஜல்லிகள்...சாரி ஜெல்லிகள்


4. பாதரசமா? பருப்பு ரசமா?


5. நூடுல்ஸ் மேல பச்சை பட்டாணி...அதுவும் முளை கட்டுனது??? அப்பத் தான் படம் அழகா நல்லா வரும்னு தங்கமணி கொடுத்த ஐடியா. எதிர்த்து பேச முடியுமா?:)


6. புளியம் பிரியாணியும்(இது மட்டும் அவங்க காதுக்கு எட்டுச்சு...நான் செத்தேன்) கோழி முட்டை தோசையும்


7. ஆணா? பெண்ணா?


8. எல்லாரும் மாவாட்ட கத்துக்கிடனும்...:)



9. அழுதுகிட்டே எடுத்தது



10. முழிக்கிறத பாரு...


படங்கள் 2உம், 3உம் An& தன்னோட புகைப்படப் பதிவுல சொல்லிக் குடுத்த மாதிரி ஒரு சின்ன டேபிள் லேம்ப் வச்சி எடுத்தது. அவரு சொன்ன மாதிரி ஒரு கூடைக்குள்ளயோ வாளிக்குள்ளயோ வச்சி எடுத்திருந்தா இன்னும் நல்லா வந்திருக்கும் போல.

படங்கள் 7,8,9,10 : எப்பவோ எடுத்தது. சும்மாச்சிக்கும் போட்டு வச்சிருக்கேன்.

படங்கள் 1,2,3,4,5,6 - இதுலேருந்து எந்த ரெண்டு படங்களைப் போட்டிக்குக் கொடுக்கலாம்? சொல்லுங்க மக்கா.

படம் 3(ஜெல்லி) மற்றும் 5(நூடுல்ஸ்) இரண்டும் போட்டிக்கான படங்கள்.

Wednesday, September 12, 2007

எண்ணமெல்லாம் வண்ணமம்மா...


படம் :அவதாரம்
பாடல் :வாலி்
இசை:இளையராஜா
பாடியது:இளையராஜா, S ஜானகி


தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசிலே
திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ நினைப்பிலே

வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கு ஏத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா


(நினைவலைகளில் ஆழ்ந்திருக்கும் வேளையில், அடாலஜ், குஜராத், ஜனவரி 2007)



உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன் பொன்னம்மா சின்னக்கண்ணே..

தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசிலே
திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ நினைப்பிலே

எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது
ஒறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது


(அலமண்டா மலரின் அழகை ரசிக்கும் கொசு, சென்னை, செப்டம்பர் 2006)

எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனாய் பாடுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது

(கல்வாழை பூவுக்குள்ளே, சென்னை, செப்டம்பர் 2006)

ஓடை நீரோடை இந்த உலகம் அது போல
ஒடும் அது ஒடும் இந்தக் காலம் அது போல

நிலையா நில்லாது நினைவில் வரும் நிறங்களே.

(கார் விண்ட்ஸ்க்ரீனில் இருந்த ஸ்டிக்கர் நீல வானத்தை கருநீலமாக்கியது, கே ஆர் புரம் தொங்கு பாலம், பெங்களூர், ஜூலை 2007)


தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசிலே...

ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பொறந்தாலே உடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது

(வாழைப்பூவில் அமர்ந்திருக்கும் வண்டு, சென்னை, அக்டோபர் 2006)

ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் அலை போலே அழகெல்லாம் கோலம் போடுது


(பால்சம் மலர்கள், சென்னை, ஜனவரி 2007)


குயிலே குயிலினமே அந்த இசையாய் கூவுதம்மா
கிளியே கிளியினமே அதை கதையாய் பேசுதம்மா

(கொம்பில் அமர்ந்திருக்கும் நீர்காகங்கள், காங்கரியா ஏரி, குஜராத், டிசம்பர் 2006)


கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்புதான்

தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசிலே
திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ நினைப்பிலே

(தேசிய நெடுஞ்சாலை எண் 76, உதய்பூர், அக்டோபர் 2006)

வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கு ஏத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா

உண்மையிலே உள்ளது என்ன என்ன
வண்ணங்கள் என்ன என்ன


(Flickr-இல் அடுத்தவர்களின் புகைப்படங்களைப் பார்த்து கிடைத்த எண்ணங்கள், செப்டம்பர் 2007)

தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசிலே
திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ நினைப்பிலே
தமிழில் புகைப்படக் கலை - செப்டம்பர் 2007, வண்ணங்கள் தலைப்பிலான போட்டிக்காகன்னு - என்னென்னமோ ஐடியா பண்ணி வச்சேன்...தேதி முடிஞ்சுடுச்சா? அட! கடவுளே :(
முதல் இரு படங்களும் போட்டிக்கான படங்கள்.

Wednesday, August 08, 2007

ஹுடுகி...ஹுடுகி...

சின்ன வயசுல ஹிஸ்டரி மிஸ் திட்டித் திட்டித் தலையில ஏத்துன ஒரு விஷயம் - கேள்விகளுக்குப் பதில் எழுதும் போது வளவளன்னு பத்தி பத்தியா எழுதாம சுருக்கமா பாயிண்ட் பாயிண்டா எழுதனும்ங்கிறது தான். இதுக்காகவே நம்ம தோஸ்த் 'மன்னாரு'(பட்டப்பேரு தான்), பச்சை, சேப்பு, நீலம்னு கலர் கலரா பேனா கொண்டாருவான். அப்படி பேனா கெடக்கலைன்னா ஒரு க்ரேயான் பென்சில் வச்சாவது ஒரு நாலு வரி எழுதிட்டு நாப்பது அண்டர்லைன் பண்ணிக் காட்டிடுவான். சும்மா சொல்லப்பிடாது...இந்த உத்தியால மார்க்குகளையும் அள்ளிடுவான். கடந்த சில மாதங்களா அவ்வளவா ப்ளாக் பக்கம் வர முடியாத படிக்கு ஏகப்பட்ட ஆணி. அந்த அக்யாத வாசம் பீரியட்ல நடந்ததையெல்லாம் பாயிண்ட் பாயிண்டா அண்டர்லைன் பண்ணி எழுதலாம்னு தோணுனதுல விளைஞ்சது இந்தப் பதிவு.

1. ஆச்சுங்க...மாஸ்டர்லேருந்து மிஸ்டர் ஆகி ஒரு மாசத்துக்கும் மேல ஆச்சு :))) அவுட்.....டேய்னு போட்ட பதிவுக்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ். வாழ்த்துனவங்க, கலாய்ச்சவங்கன்னு லிஸ்ட் போட்டா அது ரொம்ப பெருசா போயிடும். எல்லாரோட அன்புக்கும் என்ன கைம்மாறு செய்யப் போறேன்னு தெரியலை. மனசு நெறைஞ்ச மகிழ்ச்சியோட எல்லாரோட அன்புக்கும் தலைவணங்கி எனது நன்றிகளைத் தெரிவிச்சிக்கிறேன்.

2. கிடாவெட்டு விழாவுக்கு சங்கத்து சிங்கங்கள் தேவ், பாண்டி, கப்பி, தள சிபி, பாலராஜன் கீதா சார், சென்னப்பட்டிண உறவுகள் பேராசிரியர் பாலா பாய், பொன்ஸ், மா.சிவகுமார் சார், ஆகியோர் வந்து சிறப்பிச்சிருந்தாங்க. தம்பி, கோவி கண்ணன்(உங்க ரெண்டு பேத்து பேருலயும் கள்ள வோட்டு போட்டுட்டாய்ங்கய்யா...பதிவர் பட்டறையிலும் ரிப்பீட்டேய்...யாரு அந்த கறுப்பு ஆடுன்னு கண்டுபிடிங்கோ). தனித்தனியா யாரையும் கவனிக்க முடியலை...மன்னிக்கனும். எல்லாமே ஜெட் ஸ்பீட்ல போய்க்கிட்டிருந்துச்சு.

3. ஆமதாபாளையத்துல இருந்த ஆணி எல்லாம் புடுங்கி முடிச்சதும். தேவையில்லாத ஆணியெல்லாம் புடுங்க விதி நம்மளை அனுப்பி வச்ச ஊரு பெங்களூரு...(பெண்களூருன்னு எல்லாரைப் போலவும் தெகிரியமா சொல்ல ஆசையிருந்தாலும், முழி நோண்டப்படும் அபாயம் இருக்கறதுன்னால அடக்கியே வாசிச்சிக்கிறேன்...அதோட எட்டப்பனுங்க எல்லா பக்கமும் வேற இருக்காய்ங்க). அப்புறம் பெங்களூர்ல, 'கண்டேன் ராயலை டேஷ் டேஷுக்கு அணியாய்', டேஷ் டேஷ்ல யாராருக்கு என்னென்ன தோணுதோ நிரப்பிக்கோங்க. ராயல் நல்ல புள்ளன்னு எனக்கு முன்னாலேயே தெரியும். ஆனா ராயல் கூட இருந்தவரு தான் 'பால் போல கள்ளும் உண்டு, நிறத்தாலே ரெண்டும் ஒன்று'ன்னு பாட வச்சிட்டாரு :)

4. உலகம் சுற்றும் வாலிபி அம்மா, அவுட்...டேய் பதிவுல எல்லாரோடையும் சேர்ந்து என்னை கலாய்ச்சிட்டு, மறுநாள் ரொம்ப அன்போட வாழ்த்தி ஒரு பின்னூட்டம் போட்டிருந்தாங்க. படிச்சிட்டு உண்மையிலேயே ரொம்ப நெகிழ்ந்து போயிட்டேன்...உங்களுக்கும் ரொம்ப நன்றிம்மா.

5. என்னிக்காச்சும் சன் டிவி நீங்கள் கேட்ட பாடல்ல விஜயசாரதி பேட்டி எடுத்து 'திருமணத்துக்கப்புறம் நீங்க பார்த்த முதல் படம் எது'ன்னு கேட்டா 'சிவாஜி'ன்னு சொல்லிக்கலாம். ஷ்ரேயா ஓவரா க்ளாமர் காட்டியிருக்காங்கன்னு ஏற்கனவே கேள்விபட்டிருந்ததுனாலயும், பக்கத்துல தங்கமணி இருந்ததுனாலயும் ஷ்ரேயா வர சீன்கள்ல மட்டும் நல்ல புள்ளயா கண்ணை மூடிக்கிட்டேன். அட...ஒரு நல்ல இம்ப்ரெஷன் பில்ட் பண்ணா உங்களுக்கெல்லாம் பொறுக்காதே...உடனே தாக்கி பின்னூட்டம் போட்டுருவீங்களே? பேராசிரியர் சாலமன் பாப்பையா...என்னத்த சொல்ல? ரொம்ப வருத்தப்பட வச்சிட்டாரு...நல்லாத் தானேங்கய்யா இருந்தீங்க? என்னாச்சு?

6. கிண்டி டைம்ஸ் : ஜிசிடி நினைவுகள்ங்கிற பதிவு எழுதி ஒரு வருஷம் ஆன போதிலும், ஒரு வருஷத்துக்கப்புறமும் அதை படிச்சிட்டு மறக்காம பின்னூட்டம் போட்டிருந்தாங்க மங்கை மேடம். அப்பவே அவங்களுக்கு நன்றி சொல்லனும்னு நெனைச்சேன்...better late than never...ரொம்ப நன்றி மேடம்.

7. பதினாறு வயசு சின்னப்பொண்ணு சங்கத்தின் நிரந்தர தலைவி(வலி) பாட்டியாகிட்டாங்க. பாட்டியான சந்தோஷத்துல எப்பவும் மொக்கை பதிவா போட்டு அம்பியைக் கதி கலங்கடிச்சிட்டு இருந்தவங்க ஜாலியான பதிவெல்லாம் போட ஆரம்பிச்சிட்டாங்க. பின்னூட்டம் போடலைன்னாலும் உங்க வீட்டு பக்கம் அப்பப்போ வந்துக்கிட்டுத் தான் இருக்கேங்கிறதுக்கு இதுவே சாட்சி.

8. தடிப்பசங்கள்ல சின்னவரு...முரளி...அதாங்க என் தம்பி, அகில இந்திய வானொலியின் ரெயின்போ எஃப் எம்ல பகுதி நேர வானொலி குதிரையோட்டியா(அதாங்க பார்ட் டைம் ரேடியோ ஜாக்கி) இருக்காரு. மாலை ஐந்து மணிக்கு ஒலிபரப்பாகும் 'நெட்வர்க் நேரம்'ங்கிற நிகழ்ச்சியையும், ஆறு மணிக்கு ஒலிபரப்பாகும் 'மெலடிஸ் ஃப்ரம் மெரினா'ங்கிற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கிட்டிருக்காரு. எத்தனை பேரு இன்னும் வானொலியைத் தவறாம கேக்கறாங்கங்கிறதுக்கு நேயர்களிடமிருந்து அவருடைய நிகழ்ச்சிக்கு வரும் பாராட்டு கடிதங்களே சான்று. ஒரு சகோதரனாய் நான் மகிழ்ச்சியடையும், பெருமைப்படும் நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. ஆகஸ்டு 15 அன்னிக்கு டிவி நாடக பிரபலம் பாஸ்கி அவர்களை என் தம்பி எடுத்த பேட்டி சென்னை பண்பலை வரிசை 101.4 MHZ ரெயின்போ எஃப் எம்மில் ஒலிபரப்பாகிறது. முடிஞ்சா கேட்டுப் பாருங்க.

9. மலேசிய மாரியாத்தா மை ஃபிரெண்டோட(இந்தப் பதிவில செமத்தியா சாமியாடிட்டாங்க) கூட்டு சேர்ந்துக்கிட்டு ராயல், பாண்டியா, போலீஸ்கார் இவங்களோட சின்ன குழந்தை பவன் கூட என்னை கலாய்ச்சதை கண்டு எக்கச்சக்கமா ஃபீல் பண்ணிப் பின்னூட்டம் போட்டிருக்கற மாயவரத்து அசாருதீன், துபாய் கா தோஸ்த் அபி அப்பாவுக்கு டன் கணக்குல டேங்கீஸுங்கோ. உங்க பாசத்தைக் கண்டு...எக்கச்சக்கமா கண்ணு கலங்குதுங்க...நீங்க ரொம்ப நல்லவருங்கோ...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். உங்க ஆசை படியே அடுத்த ஜென்மத்துலயாவது தீபா வெங்கட்டுக்கு நீங்க தாத்தாவா பொறக்க மனமாற வாழ்த்திக்கிறேன்.

10. தலைப்பு? மேட்டர் இல்லாம தலைப்பு வெப்பேனா. காலையில ஆப்பீஸ் போகும் போது எஃப் எம்ல கேட்ட ஒரு கன்னட பாட்டு கேக்கறதுக்கு ரொம்ப நல்லாருந்துச்சு. அந்த பாட்டு தான் ஹுடுகி...ஹுடுகி...(தமிழ்ல பாடுனா 'பெண்ணே...பெண்ணே). கீழே இருக்கு பாருங்க. படத்தோட பேரு ஐஸ்வர்யா. நடிச்சிருக்கறவங்க பேரு தீபிகா படுகோனே...முன்னாள் பூப்பந்தாட்ட வீரர் பிரகாஷ் படுகோனேவின் மகள் இவர்...பிரபல மாடல்...லீவைஸ் விளம்பரப் படத்துலயும் நடிச்சிருக்காங்க. அவங்க கூட உடற்பயிற்சி பண்ணறவரு பேரு உபேந்திரா. என்ன தான் வீடியோன்னாலும் அடக்க ஒடுக்கமா கண்ணை மூடிக்கிட்டதால அம்மணியைப் பாத்துட்டு 'சக்க த ஹாட் மகா'ன்னு(செம ஹாட் மச்சின்னு) பசங்க எல்லாம் சொல்லறதை வெறுமனே காதால மட்டும் தான் கேக்க முடிஞ்சது. அவங்க சொல்றது நெசம் தானுங்களா? :)

Thursday, August 02, 2007

போர்ட்ரெய்ட் புகைப்படப் போட்டிக்கு

படம் 1: போட்டோவுக்குப் போஸ் கொடுக்கும் குழந்தைகள், சித்தூர்கட், ஆகஸ்ட் 2006


படம் 2 : டூர் போன மகிழ்ச்சியில் ஃபிலிம் காட்டும் நண்பன், உதய்பூர், ஆகஸ்ட் 2006


படங்களுக்குப் பதிலா x தான் தெரியுதுன்னு சொல்றாங்க. அதுனால Flickrலேருந்து பப்ளிஷ் பண்ணிருக்கேன். படத்து மேல க்ளிக்குன்னா இன்னும் பெருசா தெரியும். பாத்து சொல்லுங்க மக்கா.
படம் 1 : ரிப்பீட்டே from Flickr

06Aug06 035-1
Originally uploaded by Kaipullai(கைப்புள்ள).



படம் 2 : ரிப்பீட்டே from Flickr

Gotcha!
Originally uploaded by Kaipullai(கைப்புள்ள).

Wednesday, July 18, 2007

தமிழில் புகைப்படக் கலை - ஜூலை2007 போட்டிக்கு

பொக்கேயில் சாமந்திப்பூக்கள்


சாமந்திப்பூ, என் வீட்டுத் தோட்டத்தில், ஜனவரி 2007

பொக்கே எங்கேயிருக்குன்னு தானே தேடறீங்க? - Bokeh இங்கிருக்கு


டேக் ஆஃப்

டேக் ஆஃப் செய்து கொண்டிருக்கும் சைபீரிய நாரைகள், நால்சரோவர் பறவைகள் சரணாலயம் குஜராத், ஜனவரி 2007

ரொம்ப நாளைக்கப்புறம் ப்ளாக் பக்கம் வந்ததுனால ஒரு கவிதை :

சூளுரை

ஆயிரமாயிரம் ஆணி சூரியன்கள்
சுட்டெரித்த போதிலும்
சாம்பலிலிருந்து உயிர்த்தெழும்
ஃபீனிக்ஸ் பறவையாய்
ஆணி புடுங்கி மீள்வேன்

Tuesday, May 01, 2007

அவுட்டே........ய்ய்ய்ய்!


அடுத்த மாசத்தோட ஆட்டம் ஒன்னு க்ளோஸ் ஆகப் போகுதுங்க :)

ஒரு ஓரமா நின்னு ஒட்டுக் கேட்டப்ப காதுல விழுந்தது -

அவுட்டானவங்க பேசிக்கிறது : மாட்டுனாண்டா!

அவுட்டாகாதவங்க பேசிக்கிறது : துரோகி!

Wednesday, February 07, 2007

சுடர் ஏந்து...சுடர் ஏத்து...செவ்வாக்கெழமை

புதுசா வரப் போற 'குஷி-2' படத்துல ஒரு சீன். படத்தோட ஹீரோ வெட்டி(விஜய்), தேன் குடிக்கப் போன எடத்துல ஒரு வெளக்கைப் பாத்துட்டு அதுலேருந்து ஒரு சுடரை ஏத்திக் கொண்டாந்து தமிழ் மணக்கற எடத்துக்கும் வலை தொங்கற மத்த எடங்களுக்கும் பொதுவா ஏத்தி வைக்கிறாரு. சுடரை ஏத்தி வச்சிட்டுத் தேடிப் பாத்தா,வெளக்கை அணையாம பாத்துக்க ஜோதிகா எங்கேயும் தென்படலை. சரி, ஆபத்துக்குப் பாவமில்லைன்னு அந்தப் பக்கமா போன நம்ம 12பி நாட்டாமை ஸ்யாமைப் பாத்துச் சுடரை அணையாம மத்த எடங்கள்லயும் ஏத்தி வைங்கய்யான்னு குடுக்கறாரு. ஆனா நம்ம ஜோதிகா...சே...சே...12பிக்குச் சுடரை ஏத்தி வைக்கறவங்களைக் கூப்பிடணும்னு தோணலை...ஏந்தறவங்களைக் கூப்புடனும்னு தான் தோணியிருக்கு. அதனால "தல தேன்கூடு சுடர் அடுத்து ஏந்த போறது நீங்கதான்...என்னோட போஸ்ட் பார்த்திட்டு ஆக வேண்டியத பாருங்க"ன்னு கேட்டுக்கிட்டாரு. ஏந்தச் சொன்ன ஸ்யாமோட அன்புக்குக் கட்டுப்பட்டுக் கையில வாழை மட்டைக் கூட இல்லாம ரிஸ்க் எடுத்து ஏந்திருக்கேன் சாமிகளா.



இதான் சாக்குன்னு வாயைத் தொறக்க வச்சி நெருப்புக் கோழி முட்டை மாதிரி இருக்கற வெளக்கோடச் சேத்துச் சுடரை என் வாயில வைச்சி திணிச்சிடாதீங்கப்பு. சுடர் ஏத்துனதுக்கு ஆதாரமா அஞ்சு கேள்விக்குப் பதில் சொல்லணுமாம்லே? எதோ ராத்திரில வெளக்கை எரிய வுட்டுத் தூக்கக் கலக்கத்துல கிறுக்குனது...

1. கைப்புள்ளனு பேரு உங்களுக்கு எப்படி வந்துச்சு...சொந்த பேரா, தானா வந்த பேரா, காரணப்பேரா, இல்ல பட்டபேரா?
இந்த நக்கல் தானே வேணாங்கிறது? இருந்தாலும் இந்தப் பேரைக் கருவா வச்சி கற்பனை பண்ணுனப்பத் தோணுனது கீழே.

கைப்புள்ள - சொந்தப் பேரா இருந்திருந்தா :

அ. "ஹேப்பி பர்த்டே டூ யூ...ஹேப்பி பர்த்டே டூ யூ...ஹேப்பி பர்த்டே...டியர் கைப்புள்ள! ஹேப்பி பர்த்டே டூ யூ"

ஆ. "எழிலன்" - ப்ரெசெண்ட் மிஸ்
"ஜகன்னாதன்" - ப்ரெசெண்ட் மிஸ்
"ஜோசஃப்" - ப்ரெசெண்ட் மிஸ்
"கைப்புள்ள" - ...
"கைப்புள்ள" - ...
"க்கைப்புள்ள..."

"டேய் கைப்புள்ள! மிஸ் உன்னைத் தாண்டா கூப்புடறாங்க"
"யெஸ் மிஸ்...ப்ரெசெண்ட் மிஸ்"
"கைப்புள்ள!...லேட்டா வர்ற்தோட இல்லாம க்ளாசுலேயே தூக்கம் வேறயா?...அட்டெண்டென்சு எடுக்கறது கூடத் தெரியாமத் தூங்கறியா நீ? கெட் அவுட் ஆஃப் மை க்ளாஸ்"

இ. "குழந்தைகள் தினச் சிறப்பு நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக "நேருவும் குழந்தைகளும்" என்றத் தலைப்பில் இப்போது மேடையில் பேச வருவது எங்கள் பள்ளியின் எட்டாம் வகுப்பு அ பிரிவின் மாணவர் கைப்புள்ள"

ஈ. நாலாவது வருஷ ப்ராஜெக்ட் ரிப்போர்டின் அட்டையில்"A Model Study for Removal of Vortices in Lower Mettur Barrage Power House No.4 at Ooratchikkottai" - Final Year B.E. Project in Civil Engineering by K.Dyeaneshwaran, Kaipullai and A.P.Arun Prasad Raja

கைப்புள்ள - தானா வந்தப் பேரா இருந்திருந்தா :

"அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தாயே! கைப்புள்ளன்னு பேர் தந்து அகிலம் அறிய வைத்தாய் நீயே"ன்னு சரஸ்வதி சபதம் ரேஞ்சுக்கு ஒரு பாட்டு பாடியிருக்கலாம்.

கைப்புள்ள - காரணப் பேரா இருந்திருந்தா :

அ. பத்தாம் வகுப்பு தமிழ் பாட நூலில் பாடம் எண்.10 'அஞ்சா நெஞ்சன் கைப்புள்ள'யில் இரண்டாவது பத்தியில்

"வண்ண வண்ணமாக வளைந்து நெளிந்து அடி வாங்குவதில் வீரனான அஞ்சாநெஞ்சன் கைப்புள்ள, குழந்தை வயதிலிருந்து கழுதை வயது வரை கை சூப்பும் பழக்கத்தைக் கொண்டிருந்தக் காரணத்தால் கைப்புள்ள என்று எல்லோராலும் பாசத்துடன் அழைக்கப் பட்டார். நாளடைவில் அவருடைய சொந்தப் பெயர் மறக்கப் பட்டு காரணப் பெயரினாலேயே அனைவராலும் அறியப் பெற்றார்."
(அதாவது நாளைக்கு வரலாற்றுல எடம் புடிச்சதுக்கப்புறம்...)

கைப்புள்ள - பட்டப் பேரா இருந்திருந்தா :
B.A, B.Sc, M.A, M.Sc மாதிரி B.K.(Bachelor of Kaipullaiology), M.K.(Master of Kaipullaiology) பட்டம் குடுக்கலாம்.

சரி சரி...ரொம்பக் கடிச்சிட்டேன்னு நெனக்கிறேன். 'கைப்புள்ள' கதாபாத்திரத்தின் குணநலன்கள்(!) எனக்கு ரொம்பப் புடிச்சதுனாலயும், 'கைப்புள்ள'ங்கிற பேரு வித்தியாசமா இருந்ததுனாலயும் அந்தப் பேரை எனக்கு நானே சூட்டிக்கிட்டேன்யா...சூட்டிக்கிட்டேன்யா.

2. வருத்தபடாத வாலிபர் சங்கம் னு ஆரம்பிச்சு,அதுக்கு ஒரு ஆபீஸ் புடிச்சி,போட்டு போர்டு மாட்டி, ஒரு பென்ஸ் கார் வாங்கி அதல ஏறி எங்கள தள்ள வெச்சு தெனமும் போய் அடி வாங்கிட்டு வரதுக்கு ஐடியா எப்படி தோனுச்சு?
மாட்டிக்கினியா? ஹிஸ்டரில நீ வீக்குன்னு தெரிஞ்சுப் போச்சு நைனா. எனக்கு எங்க ஐடியா தோணுச்சு? பென்ஸ் கார் வாங்கற ஐடியா பொன்ஸும் தேவும் சேர்ந்து யோசிச்சதுனால வந்தது. உண்மையில ஆப்பு வாங்குறது மட்டும் தான் நானு...வக்கிறதுக்கு ஒரு குரூப்பு ராப்பகலா உழைச்சிக்கிட்டு இருக்கு.

3.அகமதாபாத் சப்பாத்திஸ் பத்தி நச்சுனு நாலு வரில சொல்லுங்க?
மறுபடியும் கலத் சவால். கேள்வியே தப்பாயிருக்கே? அகமதாபாளையத்துல சப்பாத்திஸ் எல்லாம் ஃபேமஸ் இல்லப்பா...இந்தப் பக்கமெல்லாம் டோக்லா தான். மஞ்சக் கலர்ல கடுகு, பச்சை மிளகாய், கொஞ்சமா தேங்காப்பூ போட்டு கடலை மாவுல பண்ணிருப்பாங்க. அத சாப்புடும் போதெல்லாம், நம்ம புத்திக்கு மட்டும் என்னமோ இட்லி உப்புமா சாப்புடற மாதிரியே இருக்கும். சரி....சரி...டென்சன் ஆவாதே... நீ கேக்கற டோக்லாவும் நல்லாத் தான் இருக்கும். அக்டோபர் மாசத்துல நவராத்திரி சமயத்துல ரெண்டு குச்சி எடுத்துக்கிட்டுப் பாளையத்துப் பக்கம் வந்தீன்னா டோக்லாவோட டாண்டியா கூட ஆடலாம்.

4.இது பிப்ரவரி மாசம்ங்கறதால இந்த வருசம் ப்ரபோஸ் பண்ண கார்டு, கெக்கே பொக்கே எல்லாம் வாங்கி வெச்சுட்டீங்களா?
ஏம்ப்பா...இம்புட்டு ஆப்பையும் வாங்கிட்டு நான் சிங்கிள் பீசா நடமாடுறது கூட உனக்குப் பொறுக்கலையா? பொக்கே வாங்கச் சொல்லி ஐடியா குடுத்து ஒரேயடியா எனக்கு மலர் வளையம் வைக்க ஏற்பாடா? வளர்ந்தப் பயலுங்களே நம்மளைப் பாத்து அங்கிள்னு சொல்லிக் கேவலப் படுத்தறானுவ. இந்த லட்சணத்துல ப்ரபோஸ் பண்ணறேன்னு போயி அங்கேயும் போய் அசிங்கப் படணுமா? அதுவும் இல்லாம நம்ம பாளையத்துப் பக்கம் பார்க்ல காதல் பறவைகளாச் சுத்தற பொண்ணு-பசங்களைக் கலாச்சாரத்தைக் காப்பாத்தறோம்னு ஒரு குரூப்பு கெளம்பி அடிச்சித் துவைச்சிருக்காய்ங்க. கீழே இருக்கற நியூஸைப் பாருப்பா.

VHP Workers thrash young couples

ஆயிரம் தான் இருந்தாலும் நம்ம ஊருல நம்ம ஆளுங்கக் கையால அடி வாங்குறது வேற? பாஷை தெரியாம ஊருல அடி வாங்கிட்டு மனசுக்கு இதமா அய்யோ அம்மான்னு கத்தக் கூட முடியாம என்னத்துக்கு வீணாப் போய் அடியை வாங்கிக்கிட்டு? சின்னப்புள்ளத் தனமால்ல இருக்கு?

5.நம்ம ஊர் தலைவருங்கள்ள (இருந்த/இருக்கிற) யார உங்களுக்கு ரொம்ப்ப பிடிக்கும்..ஏன்?
"எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்"ங்கிற வாக்குக்கு ஏத்த மாதிரி வாழ்ந்து காட்டிய கர்மவீரர் காமராஜர். தனக்குக் கிடைக்காத கல்வி, பல்லாயிரக் கணக்கான ஏழைக் குழந்தைகளுக்குக் கிடைக்க வழிவகை புரிந்தவர். ஐஐடி சென்னை நிறுவப் படப் போற சமயத்துல அது ஆந்திராவில அமையணுமா இல்ல தமிழகத்துல அமையணுமான்னு பலத்த விவாதம் நடைப்பெற்றுச்சாம். ஆனா அப்படியொரு சிறப்பான கல்விக் கழகம் சென்னையில் வர வேண்டும் என்பதற்காக அப்போது முதல்வராக இருந்த காமராஜர் அனைத்து வசதிகளையும் செய்து தந்ததோடு, அப்போது அடர்ந்த வனப் பகுதியாக இருந்த கிண்டியில் ஏழு கி.மீ.சுற்றளவு கொண்ட ஒரு மிகப் பெரிய இடத்தையும் ஐஐடி வளாகம் அமைவதற்காக அளித்தார் என எங்கோ எப்போதோ கேள்விப் பட்டிருக்கேன். இது போல அவர் செய்த பல நல்ல காரியங்களைப் பற்றி டண்டணக்கா என்ற பதிவர் தன்னுடைய வலைப்பூவில் பதிந்திருக்கிறார்.

இந்தச் சுடரை(வாழைமட்டை இல்லாம) ஏந்த சொல்லற அளவுக்கு நான் இரக்கமில்லாதவனில்ல. அதனால வைகை வேந்தன் அன்புத் தம்பி ராயல் 'ராம்'சாமியைச் சுடர் ஏத்தும் சுடர்மணியாக இருக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.

1. குரூ...பெங்களூருதல்லி நிமகே இஷ்டமான, ப்ரீத்தியான நாலு சமாச்சாரங்கள் சொல்ல பேக்கோ.
2. அவ்வப்போது ராயலைக் கவிதை எழுதத் தூண்டுதலாக இருப்பது என்ன?
3. உன்னோட வாழ்க்கையில நடந்த, இக்கட்டான சூழ்நிலையில் மாட்டி மீண்ட மாதிரி ஏதாவது ஒரு சம்பவம்/அல்லது நகைச்சுவை சம்பவம் ஒன்னைச் சொல்லப்பா?
4. மிசஸ் ராயல் பத்தி மிஸ்டர் ராயலின் கனவுகள் என்னென்ன?
5. தமிழ் திரையுலகில் உங்களைக் கவர்ந்த இரு திரைப்படக் காட்சிகளைச் சொல்லவும். ஏன் பிடிச்சிருக்கும்னும் சொல்லணும்?

செவ்வாக் கெழமையும் அதுவுமா ரொம்ப நாளைக்கப்புறம் சுடர் ஏத்(ந்)திருக்கேன். டச் வுட்டதுனால கொஞ்சம் கூடக் குறைய இருந்தாலும், சுடரை ஏத்தி வச்ச நம்ம வெட்டிக்குப் பதினாலாம் தேதிக்குள்ள ஒரு அமெரிக்கன் ஜோதிகா கெடைக்கணும்னு வாழ்த்தி, தன்னோட கடலை மேட்டர் எல்லாம் தைரியமா ப்ளாக்ல எழுதுன நம்ம 12பி, அவங்க தங்கமணி கிட்ட மொத்து வாங்காம தப்பிக்கனும்னு வேண்டிச் சுடரை அணையாம பாதுகாப்பாப் பக்குவமாக் கொண்டு போங்க சாமிங்களான்னு கேட்டுக்கறேன்.

Friday, January 12, 2007

பொங்கல் ஸ்பெஷல் - குவிஸ் பதிவு

பதினைந்து பொது அறிவு கேள்விகளைக் கொண்ட ஒரு குவிஸ் பதிவு இது. முயற்சி செய்து பாருங்கள் நண்பர்களே!
1. மென்பொருள் துறைக்கும், BPO துறைக்கும் மிகப் புகழ்பெற்ற இடங்களில் ஒன்றான இவ்விடத்தில் பஞ்சப் பாண்டவர்கள் குரு துரோணாச்சாரியாரிடம் கல்வி கற்றனர். ஊரின் பெயர் என்ன?
2. ஃபவுஜி(Fauji) எனும் இந்தித் தொலைக்காட்சித் தொடரின் மூலமாக அறிமுகமான பிரபல நடிகர் யார்?
3. AJJ எனும் குறியீட்டைக்(Station Code) கொண்டு இந்திய இரயில்வே துறையினரால் அறியப்பெறும் ஊர் எது?
4. மேக்யார்(Magyar) எனும் இயற்பெயர் கொண்ட ஐரோப்பிய நாட்டை நாம் எவ்வாறு அறிகிறோம்?
5. பன்னிரண்டாம் நூற்றாண்டில் தற்போதைய கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் பிறந்து இறைவன் 'சென்ன மல்லிகார்ஜுனா'வின் பால் தீராத காதல் கொண்டு பற்றுகளைத் துறந்து நிர்வாண நிலை எய்திய பெண் துறவியின் பெயர் என்ன?
6. செளத்ரி எனும் கதாபாத்திர பெயர் ஏற்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்தத் தமிழ் திரைப்படம் எது?
7. முதலாம் உலகப் போரின் போது சென்னை உயர்நீதிமன்ற கட்டிடத்தின் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்திய ஜெர்மானிய கப்பலின் பெயர் என்ன?
8. பூ வேலைப்பாட்டினைப் பற்றிய ஜப்பானிய கலையின் பெயர் என்ன?
9. 'உலகின் மிகப் பெரிய வைரம்' எனும் அறியப்பெறும் வைரக்கல்லின் பெயர் என்ன?
10. நடிகர் விஜயகாந்த் அறிமுகமான 'ஒரு தூரத்து இடிமுழக்கம்' என்ற திரைப்படத்தின் இசையமைப்பாளர் யார்?
11. கப்பல்களில் அதிகப் படியான சரக்கு ஏற்றப்பட்டுள்ளதா எனக் கண்டறிய கப்பலின் இருபுறங்களிலும் வரையப்பட்டிருக்கும் கோடுகளின் பெயர் என்ன?
12. உலகின் மிகச்சிறிய நாய் இனத்தின் பெயர் என்ன?
13. வீரபாண்டிய கட்டபொம்மனின் இளைய சகோதரரான ஊமைத்துரையின் இயற்பெயர் என்ன?
14. 17ஆம் நூற்றாண்டில், இத்தாலி நாட்டினைச் சேர்ந்த ஸ்டிரேடிவேரி(Stradivari) குடும்பத்தினர் தயாரித்த இக்கருவிகள்(ஸ்டிரேடிவேரியஸ் Stradivarius என்று அறியப்படுபவை) தற்போது உலகம் முழுவதும் மொத்தம் 700 மட்டுமே உள்ளன. பல்லாயிரக் கணக்கான டாலர்கள் மதிப்பு கொண்டவை இக்கருவிகள். எந்த கருவியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்?
15. இஸ்ரேல் நாட்டின் தேசிய விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் பெயர் என்ன?

Thursday, January 04, 2007

கார்மரண்டுகளுடன் புதுவருட ஏவாள்

01.01.2000-2004 : புது தில்லி
01.01.2005-2006 : இந்தூர்
01.01.2007 : அகமதாபாத்

இதனால சகலமானவர்களுக்கும் தெரிவிச்சிக்கறது என்னன்னா, கடந்த ஏழாண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் 'வடக்கப் பாக்க' நம்ம புத்தாண்டு அமைஞ்சு போச்சுங்க. ஒன்னாம் தேதி வேலை நாள்ங்கிறதாலே 'ஒன்னாம் தேதி கூட ஆபிஸ் வந்து கடமை கருப்பசாமியா வேலை செய்யறான்பா'ன்னு புத்தாண்டு வாழ்த்து சொல்ல ஃபோன் செஞ்சவங்க கிட்டேருந்து ஒரு நல்ல பேரு, ஒரு சர்டிபிகேட் ...ஒரு...ஒரு...பரிதாபம்...ஒரு...ஒரு...பச்சாதாபம் (எப்படி வேணா வச்சிக்கலாம்) இதெல்லாம் கெடச்சதுங்க. அதை தவிர்த்து கொட்டாய்ல தான் பாக்க முடியலை, ஓசியிலே டிவியிலயாச்சும் பாக்கலாம்னு நெனச்சி வச்சிருந்த 'எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி' கூட பாக்க முடியாம...அட சன் டிவி பக்கமே தலை வைக்க முடியாம, எல்லா நாளையும் போலத் தான் போச்சு புத்தாண்டு நாள். ஆனாலும் 2006 ஆம் ஆண்டின் கடைசி நாள் செம சூப்பரா அமைஞ்சதுங்க. இதுக்கு முன்னாடி நினைவு வச்சிக்கிற மாதிரி அமைஞ்ச டிசம்பர் 31ன்னு பாத்தா, 1994ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்னிக்குச் சென்னை தேவி தியேட்டரில் சாயங்கால ஆட்டம் பாத்த 'தேவர் மகன்' படத்தைச் சொல்லலாம். படத்தைப் பாத்துட்டுத் திரும்ப வரும் போது என்னமோ நாமளே ரெண்டு தலையைச் சீவிட்டு நடந்து வர்ற ஃபீலிங் தான் போங்க. அங்கேருந்து வேகமா ஃபாஸ்ட் பார்வர்டு செஞ்சி ஒரு 'ட்வெல்வ் இயர்ஸ்' ஓட்டுனா இந்தப் பதிவோட சிச்சுவேசனான 31 டிசம்பர் 2006 வருதுங்க. இந்த வட்டம் தலையைச் சீவற ஃபீலிங் எல்லாம் வரலைன்னாலும் மனதில் சந்தோஷச் சீவல்களைச் சில்லறையாய் சிதறச் செய்தச் சில்லென்ற டிசம்பர் மாத அந்திப் பொழுதா அமைஞ்சதுங்க அது.

பில்டப்பு போதுங்க...மேட்டர் என்னன்னா முப்பத்தொன்னாம் தேதி வடக்கு அகமதாபாத்ல இருக்கற காங்கரியா ஏரிக்கு(Kankaria Lake), நானும் என்னோட தமிழ் நண்பரும் போனோம்ங்க. சும்மா என்ன தான் இருக்குன்னு பாத்துட்டு வரலாம்னு போனது, பல தரப்பட்ட அனுபவங்களை ஒரே மாலைப் பொழுதில் ஒரு நான்கு-ஐந்து மணி நேரத்துக்குள் தருவதாக அமைஞ்சது.

காங்கரியா ஏரி இருக்கறது, நாங்க இருக்கற எடத்துலேருந்து ஒரு 15 கி.மீ.தூரத்துல. வீட்டுலேருந்து ஆட்டோல போறப்ப, வண்ணம் தீட்டுன யானையைப் படம் புடிக்கலாம்னு ஓடற ஆட்டோலேருந்து அவசர அவசரமா ஃபோகஸ் பண்ணி எடுத்த படம்.


ஜனவரி 14 நாடெங்கும் மகர சங்கராந்தி பண்டிகை கொண்டாடப் படுகிறது. எப்போதும் நம்ம பொங்கலும், மகர சங்கராந்தியும் ஒரே நாள்ல தான் வரும். ஆனா இந்த வாட்டி மகர சங்கராந்தி பொங்கலுக்கு ஒரு நாள் முன்னாடியே வந்துடுச்சு. மகர சங்கராந்தி அன்னிக்கு இந்தப் பக்கம் பின்பற்றப்படுகிற சடங்கு/வழக்கம் அப்படின்னு பாத்தா அது பட்டம் விடறதுங்க. போன பொங்கலுக்கு ஐதராபாத் போயிருந்த போதும் இதப் பாக்க முடிஞ்சது. தீபாவளிக்குப் பட்டாசு கடை போல இந்தப் பக்கம் எல்லாம் கீழே பாக்கற மாதிரி அங்கங்கே 'பட்டம்' விக்கிற கடைங்க முளைச்சுடுது.


பட்டம் விடற நூலுக்காக 'மாஞ்சா' போடறாங்க.


காங்கரியா ஏரியில் 'புலி'யுடன் மகிழ்ச்சியாக விளையாடி மகிழும் குழந்தைகள். ஒவ்வொரு முறையும் இந்தப் படத்தைப் பார்க்கும் போதும் ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.


ஏரியில் சூரியன் மறையும் ஒரு சில்ஹுவெட் படம்.


இன்னொரு சில்ஹுவெட் படம். க்ளிக் செஞ்சு பாத்தீங்கன்னா படம் பெருசாத் தெரியும். இந்தப் படம் மட்டுமில்ல...எல்லாப் படங்களுமே.


மேற்கு பக்கத்தில் சில்ஹுவெட். கிழக்குப் பக்கம் திரும்பிப் பார்த்தால் ஏரியின் நடுவில் ஒரு ஃபவுண்டேனும், படகுகளும். நாங்களும் தோணியிலே ஏரியைச் சுத்தி ஒரு ரவுண்டு போனோம்.


மரத்தின் மீது அமர்ந்திருக்கும் கார்மரண்ட்(Cormorant) பறவைகள். இந்த வகை பறவைகளை இதற்கு முன் நான் நேரில் பார்த்தது கிடையாது. ஆனால் எதோ ஒரு வித்தியாசமான பறவை தான், அநேகமாக குளிர்காலத்தில் இனப் பெருக்கத்திற்காக வேற்று கண்டங்களுக்கு வரும் 'migratory' பறவைகளாக இருக்கக் கூடும் என்று படம் பிடித்துத் தள்ளினேன்.


மேற்கு புறம் திரும்பியதும், ஏரியில் ஒரு கொம்பின் மீது அமர்ந்திருந்த ஒரு கார்மரண்ட் குடும்பம்.


கார்மரண்ட் பறவை பற்றித் தெரிந்து கொள்ள விகிபீடியாவைப் பார்த்ததில் அறிந்து கொண்டது : குளிர்காலத்தில் இடம் பெயரும் பறவைகள் ஆனாலும் கார்மரண்டு பறவைகள் உலகம் முழுவதும் காணப் பெறுகின்றனவாம். ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் இப்பறவைகளை மீன்களைப் பிடித்து வரப் பழக்குவார்களாம். மீனை கார்மரண்ட் விழுங்கி விடாமல் இருக்க அதன் கழுத்தில் ஒரு வளையத்தை அணிவிப்பார்களாம்.


ஒன்பது மீட்டர் ஆழம் வரை மூழ்கி அருமையாக மீன் பிடிக்குமாம் இப்பறவை. படத்தைப் பெரிதாக்கிப் பார்த்தால், ஒரு கார்மரண்ட் நீரில் நீந்துவதைக் காணலாம்.


வாத்து போல நீந்தினாலும், மிக அருமையாகப் பறக்கவும் செய்யுமாம் கார்மரண்ட். இப்பறவையின் அறிவியல் பெயரான 'Phalocrocorax என்பதன் பொருள் லத்தீன் மொழியில் 'நீர் காகம்'(Water Raven) என்பதாகும்.


இறக்கைகளை விரித்து காற்றில் உலர்த்தும் பழக்கத்தினை உடையது கார்மரண்ட். விகிபீடியாவில் எழுதியிருந்தது போலவே இறக்கை விரித்து படம் பிடிக்கக் கார்மரண்ட் பறவை போஸ் கொடுத்ததும் நம் அதிருஷ்டம் என்றே கொள்ள வேண்டும்.


கார்மரண்ட்களைப் போதும் போதும் எனும் அளவிற்குப் படம் எடுத்துவிட்டு அங்கேயே நடைபெற்ற ஒலி-ஒளி லேசர் கண்காட்சியையும் கண்டுகளித்தோம்.


காங்கரியா ஏரிக்கு எதிரிலேயே ஒரு மீன் கண்காட்சியகம் இருந்தது. அங்கே எடுத்த சில படங்கள் கீழே. மீன் பெயரைச் சரியாகக் கவனிக்கவில்லை.


உதட்டழகி. பேர் தெரியாததால் இந்த சப்பை கட்டு.


கேமராவின் ஃபிளாஷை நிறுத்தாததால் பாழான பல படங்களில் இதுவும் ஒன்று. பிரன்ஹா(Piranha) என்று பெயர் இடப் பட்டிருந்தது இந்த மீன் தொட்டியின் மீது. பிரன்ஹா ஆளைக் கடிக்கிற ஒரு முரட்டு மீனுன்னு கேள்வி பட்டுருக்கேன். ஆனா இதைப் பாத்தா அப்படி எதுவும் தெரியலை இல்லை?


இது நம்ம எல்லாத்துக்கும் தெரிஞ்ச தங்க மீன். தொட்டியின் மேல் வைக்கப்பட்டிருந்தப் பெயர் பலகையில் இருந்த பெயர் 'Bubble eyed Gold fish'.


இப்படியாக யானை, பட்டம், மாஞ்சா, குழந்தைகள், கார்மரண்ட், ஏரி, ஒலி-ஒளி, மீன் கண்காட்சி அப்படின்னு பலவிதமான அனுபவங்களோடு செவிக்கும் விழிக்கும் மகிழ்ச்சியூட்டக் கூடிய ஒரு மாலை பொழுதாக அமைஞ்சதுங்க 31 டிசம்பர் 2006.

(பி.கு : New Year Eveக்கு 'புதுவருட ஏவாள்'னு மொழிபெயர்ப்பு பண்ணிக் குடுத்தது யாருன்னு மட்டும் கேக்காதீங்க. நான் தலை போனாலும் சொல்ல மாட்டேன்னு காட் ப்ராமிஸ் பண்ணி கிள்ளி ரைட்டு போட்டுருக்கேன்.)