Showing posts with label புகைப்படப் போட்டி. Show all posts
Showing posts with label புகைப்படப் போட்டி. Show all posts

Friday, June 12, 2009

I love Life

"எங்களை எல்லாம் ஃபோட்டோ புடிக்க மாட்டீங்களா"ன்னு கேட்டுக்கிட்டே ஒரு பெரியவர் என்கிட்டே வந்தாரு. ஜூலை மாசம் 2008ல வெண்பா வாத்தியார் ஒளி ஓவியர் ஜீவ்ஸ் அண்ணாச்சியின் ஆசிர்வாதத்தோட வாங்கிய என்னுடைய புது Panasonic கேமராவை எடுத்துக்கிட்டு நீலாங்கரை கடற்கரைக்குப் போயிருந்தேன். அப்போ கடல், கடலலைகள், நண்டுகள் இவைகளை எல்லாம் புகைப்படம் எடுத்துட்டு அலுத்துப் போய், பக்கத்துல இருந்த மீனவர் குப்பம் வழியா அப்படியே நடந்து போய்க்கிட்டிருந்தேன். கையில கேமரா இருந்ததை பாத்ததும் சின்னப் பசங்க எல்லாம் என்னை சுத்திக்கிட்டு "அண்ணா ஃபோட்டோ எடுணா"ன்னு கேட்டாங்க. நானும் அவங்களை ஃபோட்டோ எடுத்துட்டு கேமராவோட LCD திரையில நான் அவங்களை எடுத்த புகைப்படங்களைக் காட்டுனேன், அவங்களுக்கு ஒரு சந்தோஷம். எனக்கும் ஒரு சந்தோஷம். அப்போ தான் அந்த பெரியவர் என்னைப் பாத்து மேல சொல்லிருக்கற மாதிரி கேட்டாரு. ரோட்டுல போற வர்றவங்களை "உங்களை ஒரு ஃபோட்டோ எடுத்துக்கட்டுமா"ன்னு கேட்கற தைரியம் எனக்கு எப்போவும் இருந்ததில்லை. கேக்கறவங்க என்ன சொல்லுவாங்களோன்னு கூச்சமாவே இருக்கும். ஆனா ஒரு பெரியவர் சின்னப்பசங்களுக்கு நிகரா, தானாவே வந்து தன்னை படம் எடுக்கச் சொல்லிக் கேட்டதும் எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாத் தான் இருந்துச்சு.

அந்த பெரியவரைச் சில படங்கள் எடுத்து, அந்த படங்களை அவருக்கும் LCD திரையில் காண்பிச்சிட்டு வீட்டுக்கு வந்துட்டேன். அப்படங்களைக் கணினியில் தரவிறக்கம் செய்து பாத்த போது, அவர் மெல்லிதாகச் சிரிப்பது போல எனக்கு பட்டது. ஒரு வித நம்பிக்கையை வெளிப்படுத்தும் புன்னகையைப் போல எனக்கு பட்டது. அந்த படம் உங்கள் பார்வைக்கு.


ஒரு இந்திப் பாடலும் நினைவுக்கு வந்துச்சு. ஆழமான வரிகளைக் கொண்ட இதமான மெட்டினைக் கொண்ட அந்த பாடல் கீழே. என்னால் எவ்வளவு முடியுமோ அந்தளவுக்குத் தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். ஆங்கில மொழிபெயர்ப்பு, இணையத்தில் இருந்து எடுக்கப் பட்டது.

படம் : ஹர்ஜாயி(1982)
பாடல் : நிடா ஃபஸ்லி
இசை : R.D.பர்மன்
பாடியது : கிஷோர் குமார்

Kabhi palkon pe aansoo hain
Kabhi lab pe shikaayat hai
Magar aye zindagi phir bhi
Mujhe tujhse mohabbat hai

விழியோரங்களில் சில நேரங்களில் கண்ணீர் துளிகள்
உதட்டோரங்களில் சில நேரங்களில் வருத்தப் பேச்சுகள்
இவையெல்லாம் நீ எனக்கு தந்தாலும் வாழ்க்கையே
நான் உன்னை மனதாற விரும்புகிறேன்

There are times when my eyelashes are moistened by tears
There are times when my lips utter a word of complaint
But oh my dear life
I still love you from the bottom of my heart


(Kabhii palkon pe aansoo hain...)

Jo aataa hai vo jaataa hai
Yeh duniya aani jaani hai
Yahaan har shay musafir hai
Safar mein zindagaani hai
Ujaalon ki zaroorat hai
Andhera meri kismat hai

வருபவர் எல்லாம் போவோரே
இவ்வுலகத்தில் போவதும் வருவதும் வாடிக்கை
வாழ்க்கை என்னும் பயணத்தில்
இங்குள்ளோர் அனைவரும் பயணிகளே
வெளிச்சத்தின் தேவை எனக்கிருந்தாலும்
எனக்கு விதிக்கப் பட்டிருப்பது என்னவோ இருட்டு தான்

Whoever comes has to go
This world is full of comings and goings
Here every pawn is a traveller
In the journey of life
There is a need for light
Darkness is in my fate

Kabhii palkon pe aansoo hain
Kabhi lab pe shikaayat hai
Magar aye zindagi phir bhi mujhe tujhse mohabbat hai

விழியோரங்களில் சில நேரங்களில் கண்ணீர் துளிகள்
உதட்டோரங்களில் சில நேரங்களில் வருத்தப் பேச்சுகள்
இவையெல்லாம் நீ எனக்கு தந்தாலும் வாழ்க்கையே
நான் உன்னை மனதாற விரும்புகிறேன்

There are times when my eyelashes are moistened by tears
There are times when my lips utter a word of complaint
But oh my dear life
I still love you from the bottom of my heart

Zaraa aye zindagi tham le
Tera deedaar to kar loon
Kabhii dekha nahin jisko
Use main pyaar to kar loon
Abhi se chhod ke mat jaa
Abhi teri zaroorat hai

வாழ்க்கையே சற்று ஓய்வெடுத்துக் கொள்
உன் திருமுகம் பார்க்கும் வாய்ப்பை எனக்கு கொடுப்பதற்காக
யாரை நான் பார்த்ததே இல்லையோ
அவளைக் காதலித்துக் கொள்வதற்காக
என்னை இப்போதே விட்டு விட்டுச் சென்று விடாதே
உன்னுடைய அருகாமை எனக்கு மிக தேவை

Oh life stop and take a breath
Give me a chance to see you
Let me love the one
I have never seen before
Don't leave me and go
I need you now

Kabhi palkon pe aansoo hain
Kabhi lab pe shikaayat hai
Magar aye zindagi phir bhi mujhe tujhse mohabbat hai

விழியோரங்களில் சில நேரங்களில் கண்ணீர் துளிகள்
உதட்டோரங்களில் சில நேரங்களில் வருத்தப் பேச்சுகள்
இவையெல்லாம் நீ எனக்கு தந்தாலும் வாழ்க்கையே
நான் உன்னை மனதாற விரும்புகிறேன்

There are times when my eyelashes are moistened by tears
There are times when my lips utter a word of complaint
But oh my dear life
I still love you from the bottom of my heart

Koi anjaan sa chehraa
Ubharta hai phizaon mein
Ye kiski aahatein jaagi
Meri khamosh raahon mein
Abhi aye mauta mat aanaa
Mera veeraan jannat hai

என் கீழ்வானத்தில் நான் அறிந்திராத
முகம் ஒன்று எனக்கு தெரிகிறதே
இது யாருடைய காலடித் தடங்கள்
என் மயானமான பாதையில் கேட்கிறது?
மரணமே என்னை வந்து தொடாதே
என்னுடைய சொர்க்கம் இன்னும் துணையின்றியே இருக்கிறது

Some unknown face is rising in the horizon
Whose footsteps can be heard in my silent path
Death don't come just yet, my heaven is still empty

Kabhi palkon pe aansoo hain
Kabhi lab pe shikaayat hai
Magar aye zindagi phir bhi mujhe tujhse mohabbat hai

விழியோரங்களில் சில நேரங்களில் கண்ணீர் துளிகள்
உதட்டோரங்களில் சில நேரங்களில் வருத்தப் பேச்சுகள்
இவையெல்லாம் நீ எனக்கு தந்தாலும் வாழ்க்கையே
நான் உன்னை மனதாற விரும்புகிறேன்

There are times when my eyelashes are moistened by tears
There are times when my lips utter a word of complaint
But oh my dear life
I still love you from the bottom of my heart



Get this widget | Track details | eSnips Social DNA


என்னுடைய போன பதிவில் அறிமுகமான நண்பர் பாசகியின் இந்தப் பதிவையும் படிச்சிப் பாருங்க. அருமையா எழுதிருக்காரு.
வாழ்ந்து பாருங்க பாஸ்...

மேலே உள்ள படம் ஜூன் மாதம் PiT புகைப்படப் போட்டிக்கும்.

Tuesday, October 14, 2008

J&J - அக்டோபர் மாத PIT போட்டிக்கு

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்காக நானே(!) பண்ண விளம்பரம் ஒன்னு கீழே இருக்குது பாருங்க. அது தான் இந்த மாச PIT போட்டிக்கான எனது புகைப்படம். நானே படம் எடுத்து, நானே ஒரு கான்செப்ட் தயாரிச்சு, நானே காப்பி எழுதி செஞ்சிருக்கேன். எப்படி இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்க. தாங்கள் தயாரிக்கும் பொருட்களின் தன்மையைப் பற்றியோ அதன் மூலக்கூறுகளைப் பற்றியோ, அல்லது பயன்களைப் பற்றியோ அதிகமாக எதையும் சொல்லாமல், சில சமயம் தாங்கள் எத்தனை பொருட்களைத்(Products) தயாரிக்கிறோம், எங்கள் நிறுவனம் எவ்வளவு பெரிது, எத்தனை நாடுகளில் இருக்கிறோம், எத்தனை வருடங்களாக இருக்கிறோம் என்று சும்மா வெயிட் காட்டுவதற்காகக் கூட பல சமயங்களில் நிறுவனங்கள் சில கேம்பெயின்களை நடத்துவார்கள். அத்தகைய ஒரு வெயிட் காட்டும் விதமான விளம்பரம் தான் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்காக என் கற்பனையில் நானே தயாரித்தது. என் மகளுக்காக வாங்கி வைத்திருந்ததை எல்லாம் அடுக்கி ஒரு படம் புடிச்சி ஒப்பேத்தியாச்சு :)


இது முன்ன எடுத்து வைச்சது. சும்மா பார்வைக்கு.


படங்களின் மேலே க்ளிக் செய்து பார்த்தால் இன்னும் பெரிதாகத் தெரியும்.

Monday, September 15, 2008

அடாலஜ் படிகிணறு - PIT கட்டமைப்பு போட்டிக்காக

மக்களே! பில்டப் எல்லாம் பலமா குடுத்து ஒரு மறுநுழைவு பதிவு போடணும்னு தான் எண்ணம். ஆனா ரொம்ப நாளா எதுவும் எழுதாம் டச்சு விட்டதுனால "தேவர் மகன்" ரேவதி சொல்ற மாதிரி "வெறும் காத்து தாங்க வருது". இது தமிழில் புகைப்படக்கலை குழுமம் அறிவிச்சிருக்குற கட்டமைப்பு புகைப்படப் போட்டிக்கான ஒரு பதிவு, கூடவே 2007 ஆம் ஆண்டின் துவக்கத்தில் குஜராத் மாநிலத்தில் சுற்றி பார்த்த அடாலஜ் எனும் இடத்தைப் பற்றிய ஒரு சிறு பயணக் குறிப்பு.

அடாலஜ் என்னும் இடம் குஜராத் மாநிலத்தில் வணிகத் தலைநகரமான அகமதாபாத்துக்கும், தலைநகரமான காந்திநகருக்கும் இடையே சார்கேஜ்-காந்திநகர் சாலையில் அமைந்துள்ளது. அகமதாபாத் நகரின் எந்த ஒரு பயணக் கையேட்டை(Tourist Guide)எடுத்தாலும் இவ்விடம் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடம் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அகமதாபாத்திலிருந்து இவ்விடத்திற்கு அரசு பேருந்துகளில் செல்லலாம், அல்லது நம்மூர் ஷேர் ஆட்டோ போல அகமதாபாத்தில் ஷேர் ஜீப் இயக்குகிறார்கள், அதிலும் செல்லலாம். என்ன ஒன்று ஒரு சீட்டில் ஐந்து பேரைத் திணித்து விடுவார்கள்.

அடாலஜில் நமக்கு காணக் கிடைப்பது ஒரு படிகிணறு. ஆங்கிலத்தில் இதை Stepwell என்று சொல்கிறார்கள். குஜராத்தி மொழியில் வாவ்(Vav) என்றும் இந்தியில் பாவ்டி(Bhaoli) என்றும் சொல்கிறார்கள். சாதாரண ஒரு கிணற்றை இப்படியெல்லாம் கலைநயத்துடன் அழகாகக் கட்ட முடியும் என்பதைக் கண்டு வியந்து போனேன். இக்கிணறை அரசக் குடும்பத்தினர் நீராடப் பயன்படுத்தினர் என்று அங்கு சென்று தெரிந்து கொண்டேன். ஆனால் விவசாயத்துக்கு நீர்பாசனத்துக்காகவும் இவ்வகை கிணறுகள் பயன்படுத்தப்பட்டதாக விக்கிபீடியா தெரிவிக்கிறது.

அடாலஜ் படிகிணறு - அறிவிப்பு பலகை

சாதாரண ஒரு கிணற்றில் எப்பேர்ப்பட்ட வேலைபாடுகள் பாருங்கள். அந்த காலத்துல ஆணிபுடுங்கறது எல்லாம் வேறுவிதமா இருந்துருக்கு :(

குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் Sandstone என்னும் கல்லில் வேலைபாடுகள் செய்யப்பட்ட பல புராதன சின்னங்கள் உள்ளன. தற்கால கட்டுமானங்களான ஸ்வாமிநாராயண் கோயில்(துப்பாக்கிச் சூடு புகழ்) மற்றும் பல இந்து, சமண கோவில்களிலும் இத்தகைய அதிசயத்தக்க வேலைபாடுகளைக் காணலாம்.

படிகிணறுச் சுவற்றில் ஜோடிகிளிகள்.

மேலே இருக்கற படம் தான் போட்டிக்கு. படிகிணறு செல்வதற்கு அழகிய வேலைபாடுகள் நிறைந்த ஒரு மாளிகையின்(மாளிகைன்னு சொன்னா மிகையாகாது)வழியாகச் செல்ல வேண்டும். அதன் முகப்புத் தோற்றம் தான் இது. Horizontal(தமிழ்ல என்னங்க)ஆகவும் பல அடுக்குகளைக் கொண்டது இம்மாளிகை. பாத்தா தெரியுதுல்ல...நிழல்கள் படத்துல பூங்கதவே தாழ்திறவாய் பாட்டுல வர்ற மாதிரி நுழைவாயிலுக்குள்ள நுழைவாயில். இந்த பல்லடுக்கு Horizontal Layerகளின் கடைசி லேயரில் தான் படிகிணறு இருக்கின்றது. Horizontalஆக மட்டுமில்லாம Verticalஆகவும் ஐந்தடுக்கு கொண்டது இந்த அடாலஜ் படிகிணறு.

மேலே குறிப்பிட்டுள்ள மாளிகை வழியாக படிகிணறுக்குச் செல்லும் வழி.

படி கிணறு போகும் வழியை மேலிருந்து ஃபோகஸ் செய்து எடுத்த படம்.

ஐந்தடுக்கு கொண்ட படிகிணறின் பிரமாண்டத்தை மேலே உள்ள படத்தில் காணலாம். எட்டு கோணங்களைக் கொண்ட இக்கிணறின் சுற்றளவை வான் நோக்கி எடுக்கப் பட்ட இப்படத்தின் மூலமாக அரிதியிடலாம். உண்மையிலேயே மிகப் பெரிய ஒரு கட்டிடம் இந்த படிகிணறு. இந்தப் படத்தை கிணற்றின் நீர் துவாரம்(Water Hole) அருகே நின்று கொண்டு எடுத்தேன். சுற்றிலும் சுவர்களில் கண்கவரும் அழகிய வேலைபாடுகளும், இப்படிகிணறின் பிரம்மாணடமும் உங்கள் மனதைக் கண்டிப்பாகக் கவரும். அகமதாபாத் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் அடாலஜ் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு இடம். ரொம்ப நாளைக்கு அப்புறமா இந்த பதிவு எழுதியிருக்கேன். பதிவைப் பத்தியும் படங்களைப் பத்தியும் உங்க மேலான கருத்துகளைச் சொல்லிட்டு போங்க. அப்புறம்...படங்கள் மேலே க்ளிக்கி பாத்தா இன்னும் கொஞ்சம் பெருசாத் தெரியும்.

Monday, July 07, 2008

இரவு நேரம் - PIT சூலைத் திங்கள் போட்டிக்காக


அண்மையில் சென்னைக்குச் சென்றிருந்தேன். எத்தனையோ முறை மெரினா கடற்கரைக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் திருவான்மியூர் கடற்கரைக்கு ஒரு சில முறை தான் சென்றிருக்கிறேன். அங்கே எடுத்த படம் இது. சிறுவயதில் ரசித்த விஷயங்களை சிறிது வயதான பிறகு மறுபடியும் கண்டுகொள்வதென்பதும் ஒரு மகிழ்ச்சி தான். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே சென்னையில் இது போல தள்ளுவண்டியில் சோன்பப்டி விற்பவர்களைக் கண்டிருக்கிறேன். இப்போதெல்லாம் தெருவில் இவ்வாறு சோன்பப்டி விற்பவர்களைக் காணமுடிவதில்லை. கடற்கரையில் சென்றால் மட்டும் காணும் வாய்ப்பிருக்கிறது. முன்னாளில் பெட்ரோமேக்ஸ் விளக்கின் வெளிச்சத்தில் விற்றுக் கொண்டிருந்தவர்கள், இப்போதெல்லாம் பேட்டரி விளக்கின் வெளிச்சத்தில் விற்பதைக் காணலாம். சோன் பப்டி வாங்கிச் சாப்பிடத் தோன்றவில்லை என்றாலும், அக்காட்சியைப் படம் பிடித்துக் கொள்ள கண்டிப்பாகத் தோன்றியது.


பெங்களூரில், எங்கள் வீட்டின் அருகில் தனியாக நின்றிருந்தத் தள்ளுவண்டி. கார்களும், பேருந்துகளும் சாலையில் ஏற்படுத்திய வெளிச்சத்தில் இவ்வண்டியைத் தனியாகப் படம் பிடித்துக் கொள்ளத் தோன்றியது. வண்டிக்குச் சொந்தக்காரர் சுற்றும் முற்றும் தென்படாததும் வசதியாக அமைந்தது.

இரண்டு ரூபாய்க்குச் சோளம் வாங்கிக் கொண்டு க்ளிக்கிய படம் இது. சோளத்தைத் தெளிவாகப் ஃபோகஸ் செய்ததால், சாலையில் செல்லும் வாகனங்களினால் படத்திற்குப் பெரிதாக இடையூறு ஏதுமில்லை.

தங்கமணி காய்கறி வாங்கிக் கொண்டிருந்த போது ஒரு ஓரமாக நின்று கொண்டு க்ளிக்கித் தள்ளியதில் தேறிய ஒரு படம். தெருவில் செல்பவர்களையும், இது போன்று பொருள்களை விற்பவர்களையும் படத்திற்குப் போஸ் தரச் சொல்லிக் கேட்பதில் இருக்கும் கூச்சம் இன்னும் விலகிய பாடில்லை. தங்க்ஸ் காய்கறி வாங்கிக் கொண்டிருந்த தைரியத்தில் எடுத்த படங்கள் இவை.

க்ளிக்கிக் கொண்டிருந்த போது நிகழ்ந்த உரையாடல்.

தங்க்ஸ் : "ஏங்க! காலிஃப்ளவர் வாங்கட்டுமா?"
நான் : "உம்ம்ம்"
தங்கஸ் : "வாழைக்காய் வாங்கட்டுமா?"
நான் : "உம்ம்ம்"
தங்கஸ் : "முள்ளங்கி வாங்கட்டுமா?"
நான் : "உம்ம்ம்"
தங்கஸ் : "சேப்பங்கிழங்கு வாங்கட்டுமா?"
நான் : "உம்ம்ம்"
தங்கஸ் : "அது தான் உங்களுக்குப் பிடிக்காதே?"
நான் : "பரவால்லை...வாங்கு...வாங்கு..."(மனதில் எக்ஸ்போசர், காம்போசிஷன், சப்ஜெக்ட், ஃபோகஸ் இது பற்றிய கணிப்புகள் ஓடிக் கொண்டிருக்கின்றன...சேப்பங்கிழங்கு என்பது ஷட்டர் ஸ்பீடு என்று அநேகமாகக் காதில் விழுந்திருக்க வேண்டும்)
தங்க்ஸ் : "வாங்கி முடிச்சாச்சு. காசு குடுங்க"

சே! இவ்வளவு சீக்கிரம் வாங்கி முடிச்சாச்சான்னு நெனச்சிக்கிட்டே காசைக் கொடுத்துக் கொண்டே...வாங்கி வைத்திருந்த காய்கறிகளைப் பார்க்கிறேன்.

நான் : "சேப்பங்கிழங்கு தான் புடிக்காதுன்னு தெரியுமில்லை. அதை போய் வாங்கிருக்கே?"
தங்க்ஸ் : "காய் வாங்கப் போகும் போது கூட கேமரா கொண்டு வராதீங்கன்னு சொன்னா கேட்டா தானே?"
நான் : (
முதலில் இருக்கும் சோன்பப்டி விற்பவர் படத்தைப் போட்டிக்குக் கொடுக்கலாம்னு இருக்கேன்.

Friday, June 13, 2008

A Day at Work - ஒரு முயற்சி

ஜூன் மாத PIT புகைப்படப் போட்டி அறிவித்த பிறகு எடுக்கப்பட்ட படங்கள் சில
1. ஒகேனக்கல் - படகைச் சுமந்து செல்லும் போட்மேன்

2. ஐந்து ரூபாய் கொடுத்தால் பாறை மீதிருந்து தண்ணீரில் குதிக்க தயாராக இருக்கும் சிறுவன்

3. ஐந்து ரூபாய் சிறுவன் at work.

4. ஒசூர் - துணி வியாபாரி

5. கப்பன் பார்க், பெங்களூரு - நாய் பொழப்பு

6. கப்பன் பார்க், பெங்களூரு - பலூன் விற்கும் பெண்ணும், குழந்தையும்(அவ்வளவு தெளிவா இல்லை)

முன்பே எடுத்த படங்கள் சில
7. பசவங்குடி, பப்பிள்ஸ் விற்பவர்.

8. பட்டு புடவை நெய்பவர். புடவையின் பெயர் படோலா. இடம் பாடன், குஜராத். ஒரு புடவையின் விலை...அதிகமில்லை ஜெண்டில்மென்...ஒன்லி 90,000 ரூபாய். வருடத்தில் எட்டு புடவைகள் தான் நெய்வார்களாம்.

9. "தால் பாட்டி" சமைச்சிட்டு இருக்காங்க. இடம் - தனேஷ்வர் தேவ், மத்திய பிரதேசம்

10. வேலையில் ஒட்டகம்


இதப் பாத்தா இது தோனுமே - "ஏ. சும்மா உக்காந்துருக்கற நாயையோ, மனுசனையோ போட்டோ எடுத்துட்டு, இவுங்களோட அன்னாட வேலை சும்மா உக்காந்துருக்கறது தான்னு லந்து பண்ணப்பிடாது"...ஹி...ஹி...சும்மா லந்துக்கு

Wednesday, May 07, 2008

குழிக்குள்ள சோடியை இறக்கியாச்சு

அழகான சரி சோடி...



ஆனை மேல அம்பாரி...

கணக்கா வழக்கா கடல் போல் ஏராளம்...




முதல் படம் போட்டிக்கு...மத்ததெல்லாம் ச்ச்ச்சும்மா...:)

Sunday, April 13, 2008

நானும் எனது தனிமையும்

தமிழில் புகைப்படக்கலை ஏப்ரல் மாதப் போட்டி தலைப்பைக் கேள்வி பட்டதும் தலைப்புக்கு ஏத்த படம் எடுக்கனும்னே தோணலை. தலைப்பைக் கேட்டதும் இரெண்டு பாட்டு தான் ஞாபகத்துக்கு வந்துச்சு. தலைப்புக்கு கீழே இருக்கிற படங்கள் பொருந்துதோ இல்லையோ பாட்டுங்க 'சிக்'னு பொருந்தும்னு நெனக்கிறேன்.

முதல் பாட்டு ஒரு இந்திப் பாட்டு. அமிதாப் பச்சனின் கணீர் குரலில் வரும் ஒரு பாட்டு. வசனம்னு கூட சொல்லலாம். அமிதாப் உணர்ச்சி பூர்வமாப் பேசற வசனத்துக்கு நடுவுல லதா பாடுவாங்க. என்னால முடிஞ்ச அளவுக்கு அமிதாப் பகுதியை மொழிப்பெயர்த்து போட்டுருக்கேன். ஓகேவா இருக்கா?

படம் : சில்சிலா(1981)
பாடல் : ஜாவேத் அக்தர்
இசை : ஷிவ்ஹரி
பாடியது : அமிதாப் பச்சன், லதா மங்கேஷ்கர்

Main aur meri tanhaai aksar yeh baatein karte hain
நானும் எனது தனிமையும் அடிக்கடி பேசிக் கொள்வதுண்டு
Tum hoti to kaisa hota, tum yeh kehti, tum voh kehti
நீ இருந்தால் இப்படி நடக்கும், நீ இதை சொல்வாய் நீ அதை சொல்வாய்
Tum is baat pe hairaan hoti, tum us baat pe kitni hansti
நீ இச்செயலால் கோபப்படுவாய், நீ அச்செயலால் எப்படி சிரிப்பாய்
Tum hoti to aisa hota, tum hoti to vaisa hota
நீ இருந்தால் அப்படி நடக்கும் நீ இருந்தால் இப்படி நடக்கும் இப்படியெல்லாம்
Main aur meri tanhaai aksar yeh baatein karte hain
நானும் எனது தனிமையும் அடிக்கடி பேசிக் கொள்வதுண்டு

Yeh raat hai, yeh tumhaari zulfein khuli hui hai
இது இரவா அல்லது பரந்து விரிந்த உனது கூந்தலா?
Hai chaandni ya tumhaari nazrein se meri raatein dhuli hui hai
இது நிலவெளியா அல்லது உன் விழிகளால் வெள்ளையடிக்கப்பட்ட இரவா?
Yeh chaand hai ya tumhaara kangan
இது வெண்ணிலவா அல்லது உன் கைகளால் அலங்கரிக்கப்பட்ட வளையலா?
Sitaarein hai ya tumhaara aanchal
இவை நட்சத்திரங்களா அல்லது உனது புடவை தலைப்பா?
Hawa ka jhonka hai ya tumhaare badan ki khushboo
எனை மோதுவது காற்றின் அலையா அல்லது உன் தேகத்தின் வாசமா?
Yeh pattiyon ki hai sarsaraahat ke tumne chupke se kuch kaha hai
இவை இலைகளின் சலசலப்பா அல்லது உனது உதடுகளின் முணுமுணுப்பா?
Yeh sochta hoon main kab se gumsum
எப்போதிலிருந்து நான் வார்த்தைகளற்று போனேன் என்று நினைத்து பார்க்கும்
Ke jab ki mujhko bhi yeh khabar hai
வேளையில் எனக்கும் இது தெரிந்து தான் இருக்கின்றது
Ke tum nahin ho, kahin nahin ho
நீ இங்கு இல்லை, இல்லவே இல்லையென
Magar yeh dil hai ke keh raha hai
ஆனல் இந்த பாழும் இதயம் சொல்கின்றது
Ke tum yahin ho, yahin kahin ho
நீ இங்கு தான் இருக்கிறாய் இங்கு தான் எங்கோ இருக்கின்றாய் என்று





Get this widget


அடுத்த பாட்டும் இசையைக் குறைச்சு வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மெல்லிசை மன்னர் போட்டுருக்கற ஒரு பாட்டு. எஸ்.பி.பி அப்படியே தன் குரலால் இப்பாட்டுக்கு உயிர் கொடுத்துருப்பார் பாருங்க. எனக்கு மிகவும் பிடித்த பாட்டுகளில் இதுவும் ஒன்று.

படம் : வறுமையின் நிறம் சிவப்பு
பாடல் : மகாகவி பாரதியார்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியது : எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செம்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுதடி
பாவை தெரியுதடி

(தீர்த்தக்)

மேனி கொதிக்குதடி தலை சுற்றியே வேதனை செய்குதடி
வானின் இடத்தையெல்லாம் இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார்
மோனத்திருக்குதடி இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே
நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத் துழலுவதோ (2)

(தீர்த்தக்)





போட்டிக்குக் கொக்கு(முதல்) படத்தைக் கொடுக்கலாம்னு இருக்கேன். சரிங்களா?

Wednesday, March 12, 2008

பிரதிபலிப்பு - PIT மார்ச் மாத போட்டிக்காக

படம் 1:

Snow White

படம் 2:

Laughing Buddha

Friday, January 11, 2008

ஜனவரி 2008 - PIT போட்டிக்காக

படம் 1 : எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடனும்


படம் 2 : சூரியப் புள்ளிகள்(Sun spots) - எனது படுக்கையறையிலிருந்து


நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

Monday, December 10, 2007

எதப்'பூ' அனுப்பலாம்?

கன்ஃபீசன்ஸ்...மனுஷனா பொறந்தா ஒரே கன்ஃபீசன்ஸ் தான்யா. ஒரு கலைஞனுக்கு/ஒரு படைப்பாளிகளுக்கு அவனுடைய படைப்புகள் எல்லாம் கொழந்தைங்க மாதிரின்னு சொல்லுவாய்ங்க. அதே மாதிரி நம்ம படங்கள் எல்லாம் நமக்கு கொழந்தைங்க மாதிரி. (யாரும் இந்த மாதிரி எல்லாம் சொல்ல மாட்டீங்க...அதனால நானே சொல்லிக்கிறேன்...ஹி...ஹி...). வழக்கம் போல ஒரே கன்ஃபீஷன்ஸ்..எந்த கொழந்தையை ஸ்கூலுக்கு அனுப்பலாம்னு...

கொழந்தைங்கன்னா பெத்தவங்க பேரைக் காப்பாத்தணுமா இல்லியா? சொல்லுங்க? இது வரைக்கும் ஸ்கூலுக்கு ஒரு ஏழேட்டு கொழந்தைங்களை அனுப்பிருக்கேன். பேரை வாங்கிட்டு வாங்கடான்னா வாத்தியாரு கிட்ட மண்டைல கொட்டு வாங்கிட்டு ஃபெயிலாகி நிக்கிதுங்க ஒன்னொன்னும். இந்த தடவையாவது அட்லீஸ்ட் பார்டர் பாஸ் வாங்கற கொழந்தையா பாத்து அனுப்பனும்னு ஆசை. இதுல எதப்'பூ' அனுப்பலாம்...பாத்துச் சீக்கிரம் சொல்லுங்க.

பிற்தயாரிப்பு செய்யப்பட்ட கீழே உள்ள இருபடங்களும் (படம் 1 மற்றும் 5)புகைப்படப் போட்டிக்கானவை. தேர்ந்தெடுக்க உதவியாகக் கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி...நன்றி...நன்றி!! கொயந்தை பார்டர் மார்க்ல 5வதோ 6வதாவோ வந்தாக்கா அங்கிளுங்க கிட்டயும் ஆண்ட்டி கிட்டயும் ஆசிர்வாதம் வாங்க அனுப்பி வக்கிறேன் :)




1. சங்கு புஷ்பம்

2. கீழே இருக்கற படங்கள் 2,3,4,5,6 மட்டும் தான் போட்டிக்கின்னு தனியா எடுத்தது...மத்ததெல்லாம் பழைய சரக்கு தான்.

3. எடுத்த இடம் - லால் பாக்? கப்பன் பார்க்? மலர் கண்காட்சி? இல்லீங்கோ? பெங்களூர் ஜி.பி.ஓ(General Post Office). போஸ்ட் ஆப்பீஸ்ல பூவைப் படம் புடிக்கிற அளவுக்கு முத்திப் போச்சு.

4.

5.

6.

7. வெள்ளை செம்பருத்தி

8. பட்டிப்பூ - வேற பேரு இருந்தா சொல்லுங்கய்யா

9. பால்சம்

10. கேக்டஸ் மலர்

11. பேரெல்லாம் கேக்கப்பிடாது

12. கல் வாழை

13. சாமந்தி சூழ்ந்த தடாகத்தில் ரோஜா