Friday, November 24, 2006

சென்னையின் ஜீரோ...பதில்கள்

நேற்று முன் தினம் இட்ட பொது அறிவு கேள்வி பதிவுக்கான விடைகள் இதோ:
1. "அந்தா கானூன்" என்ற திரைப்படம் எந்த பிரபல நடிகரின் முதல் இந்தி திரைப்படம்?
ரஜினிகாந்த் Die Hard சூப்பர் ஸ்டார் ரசிகர்களான சிபி, கப்பி ஆகியோர் இக்கேள்விக்கு வெகு விரைவாக சரியான பதிலைச் சொல்லி விட்டார்கள்:)

2. வெற்றியின் தேவதையாகக் கருதப் பெறும் கிரேக்க கடவுளின் பெயரைத் தழுவி அமைந்துள்ள விளையாட்டு பொருட்கள் நிறுவனத்தின் பெயர் என்ன?
நைக்கி(Nike) Nikeயை "நைக்கி"ன்னு சொல்லனும்னு கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டது தான். (ஒரு காலத்துல நமக்கு அது நைக் தான்). Nike நைக்கின்னா Spike ஸ்பைக்கியான்னு யாரும் என்னைய கேக்கப்பிடாது. ஏன்னா...ஏன்னு எனக்கு தெரியாது :)
http://en.wikipedia.org/wiki/Nike%2C_Inc.

3. ஆர்க்டிக் கடல் பகுதியில் பெரும் எண்ணிக்கையில் கடலில் விழுந்து கூட்டுத் தற்கொலை(mass suicide) செய்து கொள்ளும் விலங்கினத்தின் பெயர் என்ன?
லெம்மிங்ஸ்(Lemmings). ஆர்க்டிக் கடலைக் கடக்க முடியாமல் லெம்மிங்குகள் மூழ்கி உயிர் விடுவதைத் தற்கொலை எனத் தவறாகக் குறிப்பிடுவதாக சில அறிஞர்கள் கூறுகிறார்கள். நல்ல காலம்...இந்த லெம்மிங் நாங்க சின்னப் பசங்களா இருக்கும் போது எங்க கண்ணுல படலை...இல்லன்னா "அம்மா ப்ளீஸ்மா! நாம ஒரு லெம்மிங் வளர்க்கலாம்மா"ன்னு நச்சரிச்சிருப்போம்.

http://en.wikipedia.org/wiki/Lemming

4. மலேசியா, புரூனை, இந்தோனேசியா இம்மூன்று நாடுகளினாலும் பங்கிடப் பட்டுக் கொள்ளும் தீவின் பெயர் என்ன? அதாவது இத்தீவில் ஒரு பகுதி மலேசியாவைச் சேர்ந்தது, ஒரு பகுதி புரூனையைச் சேர்ந்தது ஒரு பகுதி இந்தோனேசியாவைச் சேர்ந்தது.
போர்னியோ(Borneo) இது உலகின் மூன்றாவது பெரிய தீவு என்பது கூடுதல் தகவல்.
http://en.wikipedia.org/wiki/Borneo

5. கெம்ஸ்போர்டு துரையினால் 1919ஆம் ஆண்டு ஜம்ஷெட்ஜி டாட்டா அவர்களின் நினைவாக ஜம்ஷேட்பூர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஊரின் இயற்பெயர் என்ன?
சாக்சி(Sakchi) ஜம்ஷேட்ஜி நசர்வான்ஜி டாட்டா அவர்கள் நிறுவிய சாக்சி என்ற பெயருடன் இந்நகரத்தை, 1919 ஆம் ஆண்டு கெம்ஸ்போர்டு துரை(Lord Chelmsford) "ஜம்ஷேட்பூர்" எனப் பெயர் மாற்றம் செய்தார்.
http://en.wikipedia.org/wiki/Jamshedpur

6. ஸ்கூபா டைவிங் பற்றி கேள்வி பட்டிருப்போம்? ஆக்சிஜன் பிராணவாயுவை சிலிண்டருக்குள் நிரப்பி முதுகில் கட்டிக் கொண்டு ஆழ்கடலுக்குள் மூழ்குவதை ஸ்கூபா டைவிங் என்கிறோம். இதில் ஸ்கூபா (SCUBA) என்ற பதத்தின் விரிவாக்கம் என்ன?
Self Contained Underwater Breathing Apparatus என்பதின் சுருக்கமே SCUBA
http://en.wikipedia.org/wiki/Scuba_diving

7. மத்திய பிரதேச மாநிலத்தின் அரசு கைவினைப் பொருட்கள் அங்காடியின்(Handicrafts emporium) பெயர் என்ன?
ம்ருகநயனி(Mriganayani)க்வாலியர் நகரின் ராஜா மான்சிங்கின் மனைவியின் பெயர் தான் ம்ருகநயனி("மான் போன்ற கண்களை உடையவள்" என்பது இப்பெயருக்குப் பொருள்). நம்ம ஊருல மீனு அவங்க ஊருல மானு போலிருக்கு?:)ம்ருகநயனி என்ற பெயரில் தூர்தர்ஷனில் ஒரு இந்தி சீரியல் வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
http://www.mptourism.com/dest/gwa_ms.html (நன்றி : பாலராஜன் கீதா)

8. மாண்டோவி, ஜுவாரி இவ்விரண்டும் எந்த இந்திய மாநிலத்தில் அமைந்துள்ள நதிகளின் பெயர்கள்?
கோவா புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள பொறியியல் கல்லூரியான BITS, Goa(BITS Pilaniஇன் கிளை) ஜூவாரி நதியருகில் அமைந்திருப்பதாக அங்கு பணிபுரியும் என் நண்பர் ஒரு முறை தெரிவித்தார்.
http://en.wikipedia.org/wiki/Zuari

9. Quaid Post(க்வெய்ட் போஸ்ட்) என அழைக்கப்படும் பனிச் சிகரத்தை இந்திய ராணுவம் கைப்பற்ற அருஞ்சேவையாற்றி, அச்சேவைக்காக இந்திய ராணுவத்தின் மிக உயரிய விருதான பரம்வீர் சக்ரா வழங்கப் பட்ட ராணுவ வீரரின் பெயர் என்ன? அச்சிகரம் இப்போது எந்த பெயரில் அறியப் பெறுகிறது?
சுபேதார் நாயக். பாணா சிங்(Nb.Sub. Bana Singh). உயிரோடு இருக்கும் போதே பரம்வீர் சக்ரா வாங்கிய 14 வீரர்களில் இவரும் ஒருவர். அவருடைய நிகரற்ற சேவையைப் பாராட்டி Quaid Post என்னும் சிகரத்தின் பெயர் பாணா டாப்(Bana Top) என்று மாற்றியமைக்கப் பட்டது.
http://www.hindustantimes.com/2005/Apr/23/
5922_1332688,0015002500020000.htm


10. கீழே உள்ள படத்தில் இருக்கும் பறவையின் பெயர் என்ன?

சொர்க்கத்தின் பறவை(Bird of Paradise) இந்தோனேசியா, நியூ கினீ மற்றும் வடகிழக்கு ஆஸ்திரேலியாவில் காணப்படும் இப்பறவை, தன்னுடைய வண்ணமயமான இறகுகளுக்காக மிகப் புகழ்பெற்றது. பெண் பறவையைக் கவர ஆண் பறவை ஆடும் நடனமும்(mating dance) பார்க்க நன்றாக இருக்கும்(நானும் டிஸ்கவரில பாத்தது தானுங்க). சரியாகப் பதில் அளித்தவர் துளசியக்கா மட்டுமே. கலக்கல். எப்படி கண்டுபிடிச்சீங்க?
http://en.wikipedia.org/wiki/Bird_of_paradise

11. விஜிதரோஹனா விஜயமுனி - இப்பெயரை எந்த இந்திய தலைவரோடு தொடர்பு படுத்துவீர்கள்? ஏன்?
ராஜீவ் காந்தி. ஜூலை 29,1987இல் இலங்கை ஒப்பந்தத்தில் அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேயுடன் கையெழுத்திட்டு விட்டு, மறுநாள்(ஜூலை 30 அன்று) வீரர்களின் அணிவகுப்பைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த போது துப்பாக்கியால் ராஜீவைத் தாக்கிய இலங்கை கப்பல் படைவீரரின் பெயர் தான் விஜிதமுனி ரோஹனா டிசில்வா மன்னிக்கனும்...நான் பெயரைத் தவறுதலாக விஜிதரோஹனா விஜயமுனி என்று குறிப்பிட்டு விட்டேன். நேற்று கூகிளில் தேடித் தேடி அலுத்துப் போனவர்களிடத்தில் எல்லாம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் :( அப்படியிருந்தும் சில நண்பர்கள் சரியான பதிலளித்து விட்டார்கள்.
http://www.dailynews.lk/2001/11/03/wor03.html

12. சென்னை 150 கி.மீ., 350 கிமீ என மைல்கல்களில் பார்த்திருப்போம். அதற்கு அடிப்படையாக அமைந்துள்ள பெஞ்ச்மார்க் மைல்கல் எங்குள்ளது? அதாவது சென்னையின் ஜீரோ பாயிண்ட் எங்குள்ளது? அதாவது இந்த இடம் சென்னையிலிருந்து 150 கி.மீ தூரத்தில் இருக்கிறது எனச் சொல்ல வேண்டும் என்றால், சென்னையில் ஒரு இடத்திலிருந்து தொடங்கியிருக்க வேண்டும் இல்லையா? அந்த இடம் சென்னையில் எங்கிருக்கிறது? மிகத்துல்லியமான இடத்தைச் சொல்ல வேண்டும்.
பாலராஜன்கீதா அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சரியான பதிலை அவர் மட்டுமே கூறியிருக்கிறார். அவருடைய பதிலையே இங்கு பிரசுரிக்கிறேன். "சென்னை மருத்துவக் கல்லூரி விளையாட்டு மைதானத்திற்கு சற்று வெளியே, பொது மருத்துவமனை சாலை / பெரியார் சாலை(பூந்தமல்லி நெடுஞ்சாலை)யும், வலது பக்கத்தில் அண்ணா சாலையின் ஆரம்பத்திலிருந்து பூங்கா - கோட்டை இரயில் நிலையங்களுக்கிடையில் ஒவர்ப்ரிட்ஜ் வழியாக வரும் சாலையும் (முத்துசாமி சாலை என்றால் எங்கே என்று கேட்பீர்கள் - அதனால் இப்படி) சந்திக்கும் இடத்தில் ஒரு மைல்கல் உள்ளது. அங்குதான் சென்னையின் ஜீரோ பாயிண்ட் ஆரம்பிக்கிறது என்று எப்பவோ படித்த நினைவு"


13. மார்ச் 23, 1947 முதல் ஏப்ரல் 06, 1949 வரை தமிழகத்தின் முதல்வராக இருந்தவர் யார்?
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தமிழகத்தின்(சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் அப்போதைய மெட்ராஸ் ப்ரெசிடென்சி) பதினோறாவது முதலமைச்சர் இவர்.
http://en.wikipedia.org/
wiki/List_of_Chief_Ministers_of_Tamil_Nadu


14. முத்தங்களோடு தொடர்பு படுத்தப்படும் உலகப் புகழ்பெற்ற சாக்லெட்டுகளின் பெயர்(Brand Name) என்ன?
ஹெர்ஷேஸ் கிஸ்ஸஸ்(Hershey's Kisses) பென்சில்வேனியாவைச் சேர்ந்த என்ற ஹெர்ஷே நிறுவத்தினரால் தயாரிக்கப்படும் இந்த சாக்லேட்டுகளை, உற்பத்தி செய்யும் போது, இயந்திரங்கள் ஏற்படுத்தும் முத்தமிடுதல் போன்ற ஒலியினை முன்னிட்டு "ஹெர்ஷேஸ் கிஸ்ஸஸ்" எனப் பெயர் வந்ததாக இருக்கலாம் என்கிறார்கள் :)
http://www.hersheys.com/kisses/

15. திருவண்ணாமலையில் தியானத்தில் ஆழ்ந்திருந்த போது கரையான்களால் உடல் அரிக்கப் பட்ட நிலையில் இருந்த ரமண மகரிஷியைக் கண்டறிந்து உலகுக்கு அறிமுகப் படுத்திய துறவியின் பெயர் என்ன?
சேஷாத்ரி சுவாமிகள் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இவர், தன்னுடைய 19ஆம் அகவையில் துறவு பூண்டார். இவர் தொட்டதெல்லாம் விளங்கியதால் இவருக்கு "தங்கக்கை சேஷாத்ரி" என்ற பெயரும் இருப்பதாகத் தெரிந்து கொண்டேன்.
http://www.arunachalasamudra.org/seshadri.html தளத்தில் படித்தது "Sometimes Sri Seshadri Swamigal, the older by ten years would be called ‘elder Seshadri’ (anna) and Sri Ramana ‘younger Seshadri’ (thambi). One time a devotee told Sri Ramana that everyone called Seshadri a mad man. Ramana smilingly replied that there were three mad men in Arunachala. One was Seshadri, the second was Arunachaleswarar and the third was himself."
இதையும் பாருங்கள் - http://www.omarunachala.com/seshadri.asp

கலந்து கொண்டு பதிலளித்த நண்பர்கள் அனைவருக்கும், என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

சென்னையின் ஜீரோ?...க்யூஸ் பதிவு

பதினைந்து கேள்விகளைக் கொண்ட ஒரு பொது அறிவு க்யூஸுங்க(Quiz தான்) இது. முயற்சி பண்ணுங்களேன் ப்ளீஸ்.
1. "அந்தா கானூன்" என்ற திரைப்படம் எந்த பிரபல நடிகரின் முதல் இந்தி திரைப்படம்?

2. வெற்றியின் தேவதையாகக் கருதப் பெறும் கிரேக்க கடவுளின் பெயரைத் தழுவி அமைந்துள்ள விளையாட்டு பொருட்கள் நிறுவனத்தின் பெயர் என்ன?

3. ஆர்க்டிக் கடல் பகுதியில் பெரும் எண்ணிக்கையில் கடலில் விழுந்து கூட்டுத் தற்கொலை(mass suicide) செய்து கொள்ளும் விலங்கினத்தின் பெயர் என்ன?

4. மலேசியா, புரூனை, இந்தோனேசியா இம்மூன்று நாடுகளினாலும் பங்கிடப் பட்டுக் கொள்ளும் தீவின் பெயர் என்ன? அதாவது இத்தீவில் ஒரு பகுதி மலேசியாவைச் சேர்ந்தது, ஒரு பகுதி புரூனையைச் சேர்ந்தது ஒரு பகுதி இந்தோனேசியாவைச் சேர்ந்தது.

5. கெம்ஸ்போர்டு துரையினால் 1919ஆம் ஆண்டு ஜம்ஷெட்ஜி டாட்டா அவர்களின் நினைவாக ஜம்ஷேட்பூர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஊரின் இயற்பெயர் என்ன?

6. ஸ்கூபா டைவிங் பற்றி கேள்வி பட்டிருப்போம்? ஆக்சிஜன் பிராணவாயுவை சிலிண்டருக்குள் நிரப்பி முதுகில் கட்டிக் கொண்டு ஆழ்கடலுக்குள் மூழ்குவதை ஸ்கூபா டைவிங் என்கிறோம். இதில் ஸ்கூபா (SCUBA) என்ற பதத்தின் விரிவாக்கம் என்ன?

7. மத்திய பிரதேச மாநிலத்தின் அரசு கைவினைப் பொருட்கள் அங்காடியின்(Handicrafts emporium) பெயர் என்ன?

8. மாண்டோவி, ஜுவாரி இவ்விரண்டும் எந்த இந்திய மாநிலத்தில் அமைந்துள்ள நதிகளின் பெயர்கள்?

9. Quaid Post(க்வெய்ட் போஸ்ட்) என அழைக்கப்படும் பனிச் சிகரத்தை இந்திய ராணுவம் கைப்பற்ற அருஞ்சேவையாற்றி, அச்சேவைக்காக இந்திய ராணுவத்தின் மிக உயரிய விருதான பரம்வீர் சக்ரா வழங்கப் பட்ட ராணுவ வீரரின் பெயர் என்ன? அச்சிகரம் இப்போது எந்த பெயரில் அறியப் பெறுகிறது?

10. கீழே உள்ள படத்தில் இருக்கும் பறவையின் பெயர் என்ன?


11. விஜிதரோஹனா விஜயமுனி - இப்பெயரை எந்த இந்திய தலைவரோடு தொடர்பு படுத்துவீர்கள்? ஏன்?

12. சென்னை 150 கி.மீ., 350 கிமீ என மைல்கல்களில் பார்த்திருப்போம். அதற்கு அடிப்படையாக அமைந்துள்ள பெஞ்ச்மார்க் மைல்கல் எங்குள்ளது? அதாவது சென்னையின் ஜீரோ பாயிண்ட் எங்குள்ளது? அதாவது இந்த இடம் சென்னையிலிருந்து 150 கி.மீ தூரத்தில் இருக்கிறது எனச் சொல்ல வேண்டும் என்றால், சென்னையில் ஒரு இடத்திலிருந்து தொடங்கியிருக்க வேண்டும் இல்லையா? அந்த இடம் சென்னையில் எங்கிருக்கிறது? மிகத்துல்லியமான இடத்தைச் சொல்ல வேண்டும்.

13. மார்ச் 23, 1947 முதல் ஏப்ரல் 06, 1949 வரை தமிழகத்தின் முதல்வராக இருந்தவர் யார்?

14. முத்தங்களோடு தொடர்பு படுத்தப்படும் உலகப் புகழ்பெற்ற சாக்லெட்டுகளின் பெயர்(Brand Name) என்ன?

15. திருவண்ணாமலையில் தியானத்தில் ஆழ்ந்திருந்த போது கரையான்களால் உடல் அரிக்கப் பட்ட நிலையில் இருந்த ரமண மகரிஷியைக் கண்டறிந்து உலகுக்கு அறிமுகப் படுத்திய துறவியின் பெயர் என்ன?

Thursday, November 16, 2006

வயசாயிடுச்சாங்க?

கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஆபீஸ்லேருந்து கெஸ்ட் அவுஸுக்குக் கார்ல திரும்பி வந்துட்டு இருக்கும் போது காரோட விண்ட்ஸ்க்ரீன் வழியாப் பாத்த காட்சி பயங்கரமான அதிர்ச்சியைத் தந்தது. அது என்னன்னா எங்க வண்டிக்கு முன்னாடி ஸ்கூட்டி ஓட்டிட்டுப் போயிட்டிருந்த ஒரு பொண்ணு(காலேஜ் படிக்கிற வயசு இருக்கும்னு நெனக்கிறேன்)காதுல மொபைலை வச்சிப் பேசிட்டுப் போச்சு. டூ வீலர்ல மொபைல்ல பேசிட்டே வண்டியே ஒட்டிட்டுப் போறதுன்னா எப்படின்னு கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க. கழுத்தை ஒரு பக்கமா சாய்ச்சு காதுக்கும் தோள்பட்டைக்கும் நடுவுல மொபைலுக்கு முட்டுக் கொடுத்து ரோட்டையும் பாத்து வண்டியையும் ஓட்டிக்கிட்டு பேசிட்டுப் போவணும். பேசி முடிச்சிட்டு ஒத்தை கையால வண்டியை ஓட்டிக்கிட்டே, மொபைலை எடுத்து ஜீன்ஸ் பின் பாக்கெட்ல சொருவி வச்சிக்கிச்சு. எங்க வண்டி எப்படியும் ஒரு நாப்பதுல போயிட்டிருந்துருக்கும்...எங்க முன்னாடி அந்த ஸ்கூட்டி போனதுனால அநேகமா அதுவும் அந்த வேகத்துல தான் போயிருக்கும். அதே வேகத்துல போன்ல பேசிக்கிட்டே ஒரு சிக்னல்ல வண்டியையும் அந்த பொண்ணு திருப்புச்சு. அந்த நேரம் எதிர் பக்கத்துலேருந்து ஒரு வண்டி வேற வந்துச்சு...ஸ்கூட்டி லைட்டா ஆட்டம் வேற கண்டுச்சு. நாங்க பின்னாடி கார்ல வந்துக்கிட்டு இதப் பாத்துக்கிட்டே இருந்தோம். இதப் பாத்ததும் எனக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி, ஒரு பக்கம் செம கோபம். மொபைல்ல பேசற அந்த ரெண்டு நிமிஷம் வண்டியை ரோட்டு ஓரமா நிறுத்திட்டு பேசிட்டு போனாத் தான் என்னான்னு? அதுவும் அந்த பொண்ணு ஓட்டிட்டு போனது நடு ரோட்டுல...வலது கை பக்கமா...வேகமா நகர்ற வாகனங்கள் போற லேன் அது.


கைபேசியில் பேசும் போது நம்ம கவனம் எல்லாம் பேச்சுல தான் இருக்கும், அதனால வண்டி ஓட்டும் போது மொபைல்ல பேசாதீங்கன்னு எவ்வளவு விளம்பரம் பண்ணறாங்க...ஆபத்துன்னு தெரிஞ்சே எதுக்கு வம்பை விலை கொடுத்து வாங்கனும்...அதோட இத படிச்சவங்களே பெரிய நகரங்கள்ல இருக்கறவங்க கூட பண்ணறாங்களேன்னு ஒரு ஆதங்கம். என் வாய் சும்மா இருக்காம "இந்த மாதிரி போன்ல பேசிட்டே வண்டியை ஓட்டறவங்களைப் போலீஸ் புடிச்சி ரோட்டோரத்துல வச்சி கன்னத்துலேயே ரெண்டு அறையனும்" அப்படின்னேன். எங்க கூட வண்டியில வந்துட்டிருந்த எங்க சீனியர் "ஏம்ப்பா உனக்கு அந்த பொண்ணு மேல என்னப்பா கோவம்?" அப்படின்னு சிரிச்சிட்டே கேட்டாரு. நான் சொன்னேன்"சார்! பொண்ணுங்கிறதுனால கன்னத்துல அறையனும்னு சொல்லலை. இந்த மாதிரி வண்டி ஓட்டும் போது போன் பேசறது, நம்ம உயிருக்கும் அடுத்தவங்க உயிருக்கும் ஆபத்துன்னு தெரிஞ்சே செய்யறாங்க பாருங்க...அவங்க ஆணா இருந்தாலும் சரி பொண்ணா இருந்தாலும் சரி அவங்களுக்கு இந்த தண்டனை தரனும்"னு சொன்னேன். அதுக்கு அவரு"அதுக்குத் தானேப்பா மொபைல்ல பேசினா ஃபைன்னு சட்டம் எல்லாம் இருக்கு"ன்னு சொன்னாரு. நானும் அப்ப கொஞ்சம் டென்சனா இருந்ததுனால "இல்லீங்க சார்! இந்த மாதிரி தப்புக்கு எல்லாம் 5000 ரூபாய் ஃபைன்னு சொன்னீங்கன்னா 500 ரூபாய் லஞ்சம் குடுத்துட்டு போயிடுவாங்க...500 ரூபாய் ஃபைன்னு சொன்னா 50 ரூபாய் லஞ்சம் குடுத்துட்டுத் தப்பிச்சிடுவாங்க. ரோட்டுலேயே நாலு பேருக்கு நடுவுல செவுள்லேயே ஒன்னு வுட்டீங்கன்னா நாளைக்கு அந்த அவமானத்துக்குப் பயந்துக்கிட்டு யாரும் இந்த மாதிரி செய்ய மாட்டாங்க"னு சொன்னேன். அதை கேட்ட அவரு "Mohanraj! You have a point. But it also goes to prove that you are becoming an old man"அப்படின்னாரு. எனக்கா இதை கேட்டு பயங்கர ஷாக்...ஏன்னா சொன்னவரு எப்பவும் சீரியஸாப் பேசறவரு...கிண்டல், நக்கல் இதெல்லாம் பண்ணாதவரு. "எதனால சார் அப்படி சொல்றீங்க?"ன்னு கேட்டேன். "இந்த மாதிரி ரோட்டுல வச்சி பொளேர்னு அரையறதைப் பத்தி எல்லாம் வயசானவங்க தான் யோசிப்பாங்க. நான் பல முறை அந்த மாதிரி யோசிச்சிருக்கேன்" அப்படின்னாரு. ஆஹா! என்னடா இது...55 வயசு ஆனவரு நம்மளையும் அவரோட லிஸ்டுல சேத்துட்டாரேன்னு நெனச்சேன். ஆனா இத பத்தி நானே ஓரிரு சமயங்கள்ல யோசிச்சிருக்குறேன். நாம தனியா ரூம்புக்குள்ள ஒக்காந்து யோசிச்சதை, ஒருத்தரு சபையிலே வச்சி கேட்டுருக்காரே ஒரு வேளை உண்மையா இருக்குமோ அப்படின்னு ஒரு analysisக்குத் தான் இந்தப் பதிவு.


போன மாசத்துல ஒரு நாள், சாயந்திரம் ஒரு எட்டரை மணி இருக்கும். எட்டரை மணி பிரைம் டைம் ஸ்லாட்டுல இருந்த சூப்பர் 10 கவுண்ட் டவுன், பெப்சி உமாவின் உங்கள் சாய்ஸ், திரை விமர்சனம், நீங்கள் கேட்ட பாடல் இதெல்லாத்தையும் மெகா சீரியலுக்குக் கெடக்கிற மெகா துட்டுக்கு ஆசை பட்டு ஒட்டு மொத்தமா ஞாயித்துக் கெழமைக்கு மாத்துன சன் டிவியின் உலக மகா பேராசையைக் கரிச்சுக் கொட்டிட்டே ரிமோட்டை வச்சி நோண்டிக்கிட்டு இருந்தேன்(ஆமதாபாளையத்துலயும் சன்னை விட்டா வேற ஒரு தமிழ் சேனலும் வர்றதில்லை). அப்போ சோனி டிவியில "பூகி-ஊகி"ன்னு (Boogie-Woogie)ஒரு நிகழ்ச்சி வந்தது. சன் டிவியில் முன்ன வந்துட்டு இருந்த "தில்லானா தில்லானா" மாதிரியான ஒரு நடனப் போட்டி நிகழ்ச்சி இந்த பூகி-ஊகி. எனக்கு மிகவும் பிடித்த ஒரு நிகழ்ச்சி இது. பங்கேற்கும் போட்டியாளர்களின் திறமையையும், அவர்களுடைய உத்வேகத்தையும் கண்டு பல முறை மலைத்துப் போயிருக்கிறேன். குறிப்பாக அந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் வந்து கலந்து கொள்ளும் போது பார்க்கணுமே? மிக அருமையாக இருக்கும். குழந்தைகள் ஆடும் வேகத்தைப் பெரியவர்களால் கூட பல சமயம் ஈடு கொடுக்க முடியாது. அதனுடன் சிறு குழந்தைகள் செய்யும் முகபாவங்களைப் பார்க்க வேண்டுமே...மிகவும் அழகாகவும் ரசிக்கும் படியாகவும் இருக்கும். அன்று நான் பார்த்ததும் குழந்தைகள் பங்கு பெற்ற ஒரு நிகழ்ச்சி தான். அந்நிகழ்ச்சியை நான் பார்க்க ஆரம்பித்த நேரம் ஒரு பெண் குழந்தை ஒரு பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்தது. அதை கண்டதும் எனக்கு ஒரு அதிர்ச்சி. காரணம், அக்குழந்தை ஆடிய பாடல் அத்தகைய பாடல்.
ஹிந்தி படங்களில் குறிப்பாக பீஹாரை மையமாக வைத்து வரும் படங்களில் வரும் ஒரு குலுக்கு நடனப் பாடல். பல கிராமத்து ஆண்கள் அமர்ந்து ரசிக்க அரைகுறை உடை அணிந்த ஒரு பெண் ஆடுவது போல அமைந்த ஒரு இரட்டை அர்த்தம் கொண்ட பாடல். அதை விட கொடுமை அப்பாடலுக்கு அக்குழந்தை அணிந்திருந்த உடை...சினிமாவில் வருவது போல முதுகு முழுவதும் தெரிவது போல அமைந்த ஒரு சிறிய மார்பு கச்சை. ஆடும் போது அக்குழந்தை காட்டிய முகபாவங்களும் அத்தகைய பாடல்களுக்கு, சினிமாவில் எப்படியிருக்குமோ அது போலவே இருந்தது(எப்படியென்று மேலும் விவரிக்கத் தேவையில்லை என நினைக்கிறேன்). அக்குழந்தை பாடலோடு ஒன்றி நன்றாக ஆடியிருந்த போதும் ஏனோ என்னால் அதை ரசிக்க முடியவில்லை. அதை காணும் போது வருத்தமாக இருந்தது. ஆடி முடித்த பின்னர் நடுவராக அமர்ந்திருந்த நடன இயக்குநர் ஜாவீத் ஜாஃப்ரி அக்குழந்தையைப் பார்த்து "இப்பாடலை உனக்கு செலக்ட் பண்ணி கொடுத்தது யார்" எனக் கேட்டார். அதற்கு அக்குழந்தை "எங்க மம்மி" என மழலையில் சொன்னது. மிஞ்சி மிஞ்சிப் போனால் அக்குழ்ந்தைக்கு ஐந்து அல்லது ஆறு வயசிருக்கும். சரியாகப் பேசக் கூட இன்னும் பயிலாத குழந்தையை மார்பு கச்சையோடு பார்க்கும் போது உண்மையிலேயே மனம் வேதனை அடைந்தது. இதை எப்படி பெற்றோர்கள் அனுமதித்தார்கள் என நினைத்துக் கொண்டிருக்கும் போதே ஜாவீத் அக்குழந்தையின் பெற்றோர்களிடம் "நல்லா ஆடுச்சு உங்க பொண்ணு. ஆனா பாடலைக் கொஞ்சம் பார்த்து தேர்வு பண்ணுங்க. இந்த மாதிரி அர்த்தம் கொண்ட பாடல்களுக்குக் குழந்தைகள் ஆடுனா நல்லாருக்காது. அதோட குழந்தையே இந்த பாடலுக்கு ஆடறேன்னு சொன்னா கூட நீங்க தடுக்கனும். குழந்தைகள் குழந்தைகளா இருக்கும் போது தான் நல்லாருக்கும்" அப்படின்னார். குழந்தைகள் குழந்தைகளாக இருக்கும் வரையே அழகு என்பதே என் எண்ணமும். குழந்தைகள் அறிவுப்பூர்வமாகப் பேசுவதை ரசிக்கலாம், சுட்டித் தனம் செய்வதை ரசிக்கலாம், ஓடி விளையாடுவதை ரசிக்கலாம். வயதுக்கு மீறிய செயல்களைச் செய்யும் போது ஏனோ ரசிக்க முடிவதில்லை. கவலையில்லாத குழந்தைப் பருவம் என்பது அதிகப் பட்சம் போனால் 10 அல்லது 11 வயது வரையிருக்கும். அதற்கு பிறகு அவர்கள் மீதும் பல எதிர்பார்ப்புகள் திணிக்கப் படுகிறது. இந்நிலையில் அவர்களுக்குக் கிடைக்கும் அந்த 10-11 ஆண்டு காலத்தை அவர்கள் குழந்தைகளாக இருக்க அனுமதிப்பதே நல்லதல்லவா?


என்ன தான் பெற்றோர்களுக்குத் தங்கள் குழந்தை வளர்ந்து சீக்கிரம் பெரியவனாக/பெரியவளாக ஆக வேண்டும்...அதை கண் குளிர பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும் "பருவத்தே பயிர் செய்" என்பதை நினைவில் நிறுத்த வேண்டும். இதே போன்று, வயதுக்கு மீறி ஒரு குழந்தை பேசுவது கண்டு எரிச்சல் உண்டானது "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தைக் கண்டு. இப்படத்தைப் பற்றி சர்ச்சையைக் கிளப்புவதல்ல என் நோக்கம். மணி ரத்னத்தின் பல படங்களை நானும் ரசித்திருக்கிறேன்...இப்படத்திலேயே பல எதார்த்தங்களினூடே நானும் ஒன்றிப் போயிருக்கிறேன். மணி ரத்னத்தின் படம் என்பதாலேயே குளிரையும் பொருட்படுத்தாமல் தில்லியில் இரண்டாண்டுகளுக்கு முன்னர் இப்படம் திரையிடப்பட்ட போது தனியாகச் சென்று பார்த்தேன். முதற் பாதியில் வெகுவாக மனதைக் கவர்ந்தது. ஆனால் இரண்டாம் பகுதியில் தன்னுடைய உண்மையான தாயை இலங்கையில் சென்று தேடும் போது, அக்குழந்தை பேசும் வயதுக்கு மீறிய பேச்சுகளும் செய்கைகளும் எரிச்சலை ஏற்படுத்தியது. நல்ல காலம் அப்போது என் கூட யாரும் வரவில்லை. வந்திருந்தால் அவனைப் படம் பார்க்க விடாமல் புலம்பி தீர்த்திருப்பேன். யார் என்றே பார்த்திராத தன்னுடைய உண்மையானத் தாயைத் தேடும் போது சிம்ரனைப் பார்த்து கீர்த்தனா பேசும் "நீங்க எங்க அம்மா இல்ல. எங்க அம்மா இலங்கையில இருக்காங்க"ன்னு சொல்றதெல்லாம் டூ மச்சாகப் பட்டது. இது போல இன்னும் சில வசனங்கள் அது சினிமாவில் வரும் ஒரு கற்பனை உரையாடல் என்ற உண்மையையும் தாண்டி படம் பார்த்த என்னை கோபம் கொள்ளச் செய்தது. பேபி கீர்த்தனாவைக் குறை சொல்லவில்லை. இயக்குநர் சொல்லிக் கொடுத்த மாதிரி கீர்த்தனா வசனம் பேசி அழகாக நடித்திருக்கிறாள். என்ன தான் கதை என்றாலும் இது வரை சீராட்டிப் பாராட்டி வளர்த்த தன் தாயைப் பார்த்து "நீங்க எங்க அம்மா இல்ல" என்று சொல்லும் தைரியமும் முதிர்ச்சியும் ஒரு ஒன்பது வயது குழந்தைக்கு உண்மையில் வருமா என்பதே என்னுடைய கேள்வி. ஒரு வேளை இந்த காலத்து குழந்தைகள் அவ்வாறு யோசிக்குமா? அவ்வாறு யோசித்தாலும் பெற்றோர் என்னும் ஒரு பாதுகாப்பை விட்டு விட்டு வேறு ஒரு இடம் தேடும் ஒரு தன்னம்பிக்கையும், தைரியமும் இருக்குமா? யாராச்சும் தெரிஞ்சவங்க சொல்லுங்க.


இது வரை நம்ம பதிவுல வராத கோப தாப மேட்டர் எல்லாம் இன்னிக்குப் போட்டாச்சு. சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிறதுங்கிறதை இது வரைக்கும் பதிவுகள்ல உபயோகிச்சதில்லை. இன்னிக்கு அதை செயல்லயும் காட்டியாச்சு...சொல்லியும் காட்டியாச்சு. வூடு பூந்து அடிக்கிறவங்க கொஞ்சம் மெதுவா அடிங்க...ஓகேவா? சரி...இதெல்லாம் படிச்சிட்டு ஒரு 'angry young man' இல்லன்னா ஒரு 'angry old man' இமேஜ் உண்டாகியிருக்கும்னு நெனக்கிறேன். அப்படி எதுவும் உருவாகியிருந்தால் ஒன்னும் செய்ய முடியாது :) அதுக்கு முன்னாடி என் நிஜ வாழ்க்கையில் நடந்த ஒரு படு பயங்கரமான உண்மை சம்பவத்தை விவரிக்கிறேன். ஆனா தயவு செய்து இளகிய இதயம் கொண்டவர்கள் இதற்கு மேல் படிக்காதீர்கள். அதை படித்து விட்டு சொல்லொணா துயரத்தில் உங்கள் மனம் ஆழ்ந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை. போன வருடத்தில் ஒரு நாள், பழைய கம்பெனியில் இந்தூரில் வேலை செய்து கொண்டிருந்த சமயம், வேலை நிமித்தமாக இந்தூரிலிருந்து ரயிலில் மும்பை செல்ல வேண்டியிருந்தது. ப்ளாட்பாரத்தில் ரயில் வந்து நின்றதும், பேச்சிலர் பசங்களுக்கே உரிய செய்கையான ரிசர்வேஷன் லிஸ்டைச் சரி பார்த்தலை முதல் வேலையாகச் செய்தேன். நம்ம பேரு லிஸ்ட்ல வந்துருக்கான்னு பாக்கற ஆர்வத்தை விட, ரயில் பயணத்துல கூட கடலை போட எதாவது ஃபிகர் இருக்குமான்னு தெரிஞ்சிக்கிற ஆர்வம் தான் அது:) நம்ம லக்கு பாருங்க அன்னிக்குன்னு பாத்து நம்ம சீட்டு நம்பருக்குப் பக்கத்து நம்பர்கள்ல ஒரு பொண்ணோட பேரும் இருந்தது. சரின்னு வண்டிக்குள்ள ஏறி உக்காந்தா இந்த பதிவுல பல இடங்களில் எழுதியிருக்கும் அதே ஷாக் மெகாவாட் கணக்குல அடிச்சது. காரணம் "வந்தது வந்தாள் துணையுடன் வந்தாள்". சரி...இதெல்லாம் நமக்கு சகஜம் தானே? நம்ம லக்குக்கும் நம்ம மோரக்கட்டைக்கும் எத்தனை ரயில் பயணங்கள்ல நாம கடலை போட்டுட்டே போயிருக்கோம்னு நெனச்சி என்னை நானே தேத்திக்கிட்டேன். அந்த பெண்ணின் கணவனுக்கு என்னை விட மிஞ்சிப் போனால் ஒரு வயது குறைவாக இருக்கும். (வட நாட்டுல தான் சின்ன வயசிலேயே கதற கதற புடிச்சி கட்டி வச்சிடுவாங்களே?) நல்ல உயரமாக இருந்தார், நல்ல நிறம். ரயில் பயணத்தில் என்னிடம் அவர்களும் பேசவில்லை நானும் பேசவில்லை. இப்படியே சென்றது அப்பயணம். இரவு படுக்கும் நேரம் வந்தது. அப்போது தான் அந்த பெண்ணின் கணவர் என்னிடம் முதல் முறையாகப் பேசினார். அவர் கேட்டது "அங்கிள்! என் வைஃப் பிரெக்னெண்டா இருக்கா. எங்க ரெண்டு பேருக்கும் அப்பர் பெர்த் குடுத்துருக்காங்க. இஃப் யூ டோண்ட் மைண்ட் உங்க லோயர் பெர்த்தை எக்சேஞ்ச் பண்ணிக்கிட்டு கொஞ்சம் மேல படுத்துக்குறீங்களா?"ன்னு. இதை கேட்டதும் ஒரு பேச்சிலர் மனசு என்ன பாடுபட்டிருக்கும்னு யோசிச்சுப் பாருங்க. கண்ணாடி போட்டு, மீசை வச்சிருக்கறவங்க எல்லாம் அங்கிளாடா? அப்படி பாத்தா எங்க ஊருக்கு வந்து பாத்தீன்னா பாதி பேரு அங்கிள் தாண்டான்னு சத்தமா கத்தனும் போல இருந்தது. ஆனா நம்ம நெஞ்சாங்கூட்டுக்குள்ள இருக்கறது சாதாரண் ஹார்ட் இல்லியே...எதையும் எந்த விதமான மெகா ஆப்பையும் தாங்கும் லயன் ஹார்ட்டாச்சே? அதனால அங்கிள் என்னும் அவப்பெயர் பெற்ற பின்னும் ஒன்னும் பேசாமல் அப்பர் பெர்த்ல போயி படுத்துக்கிட்டேன். இப்போ வார்னிங்கையும் மீறி மேலே படிச்சவங்க எத்தனை பேரு கோ கொள்ளன்னு அழுதீங்கன்னு உண்மையைச் சொல்லுங்க.


மேலே நம்ம கோபதாபங்களையும் நம்ம லயன்ஹார்ட் ரயில் அனுபவத்தையும் படிச்சிருப்பீங்க. எல்லாமே நியாயமானது தான்...எல்லாத்துலயும் பொண்ணுங்களைப் பத்தி எழுதிருந்தாலும் அது அவங்களுக்கு எதிரா எழுதுனது இல்லன்னு புரிஞ்சிக்கிட்டிருப்பீங்க அதுக்கெல்லாம் ரொம்ப நன்றி:). ஏற்கனவே இந்த பொற்கொடி பாப்பா நம்மளை "கைப்பு அங்குள் கைப்பு அங்குள்"னு கூப்பிடுது. Again at the risk of being branded "Uncle" உங்க கிட்ட எல்லாம் ஒரு கேள்வி - இதையெல்லாம் படிச்சா ஒங்களுக்கு என்னங்க தோணுது? நமக்கு மட்டும் ஏன் இந்த விஷயத்தைப் பாத்து கோவம் வருது? கார்ல என்கூட இன்னும் நாலு பேரு இருந்தாங்க...அவங்களுக்கெல்லாம் ஒன்னும் தோணலியே? அதே மாதிரி ஊரே கொண்டாடற நேஷனல் அவார்டு வாங்கின "கன்னத்தில் முத்தமிட்டால்" படம் ஏன் எனக்கு எரிச்சலாப் படனும்? உண்மையிலேயே நமுக்கு வயசாயிடுச்சாங்க?:)

Thursday, November 09, 2006

என்ன வண்டு கடிச்சிடுச்சுபா?

என்ன தமிழ்மண வலைப்பூ நண்பர்களே? என்ன நலமா? என்ன நான் நலம்? என்ன சே எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க? என்ன இன்னிக்கு ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு பயணம் சம்பந்தப்படாத பதிவெழுதலாம்னு ஆபிசிலிருந்து சீக்கிரம் வந்தேனா? என்ன அந்த நேரம் பாத்து கூகிள் சேட்ல ரெண்டு அப்பாவிங்க இன்னிக்கு ஆன்லைன் வந்தாங்களா? என்ன அந்த பாழாப் போன நேரம் ஒரு வண்டு வந்து என்னை கடிச்சி வச்சிச்சா? என்ன அந்த வண்டு பேரு "என்ன வண்டாம்"லே? என்ன அந்த வண்டு கடிச்ச நேரத்துலேருந்து எது எழுதுனாலும் "என்ன" சேர்ந்துக்குதா? என்ன பாவம் அந்த ரெண்டு பச்சை மண்ணுங்களும் போனா போவுது போனா போவுதுன்னு மரியாதை குடுத்து ஒரு அரை மணி நேரம் தாக்கு புடிச்சாங்க?

என்ன ஆனாலும் ராத்திரி நேரம்...ஆபிஸ்லேருந்து கெளம்பாம வயித்து பசியோட எம்புட்டு நேரம் தான் தாக்கு பிடிப்பாங்க? என்ன என்ன இருந்தாலும் என்னை அந்த வண்டு கடிச்சிருக்கக் கூடாது? என்ன என்ன இருந்தாலும் வண்டு கடிச்ச அந்த நேரத்துல அந்த ரெண்டு அப்பாவிங்களும் என்கிட்ட மாட்டிருக்கக் கூடாது? என்ன நான் போட்டு கடிச்ச கடியில ரெண்டு பேரும் துண்டை காணோம் துணியைக் காணோம்னு ஓடிட்டாங்க? என்ன ஆனாலும் "என்ன பைத்தியம்" புடிச்சாலும், மனிதாபிமானம்னு ஒன்னு இருக்கு இல்லியா?? என்ன அதனால தான் என்னோட அந்த 'என்ன பைத்தியம்' இருக்கும் போதே மனப்பூர்வமா மன்னிப்பு கேட்டு ஒரு ப்ளாக் எழுதலாம்னு ஒரு சின்ன எண்ணம்? என்ன ஆனா என்ன தான் 'என்ன பைத்தியம்' புடிச்சாலும் கடிப்பட்ட அந்த ரெண்டு பேரோட பேரை மட்டும் நான் சொல்லவே இல்லை பாருங்க? என்ன வண்டு கடிச்சாலும் அம்புட்டு ஸ்டெடி நானு? என்ன இந்த பதிவைப் போட்டுட்டு கொஞ்ச நேரத்துல தூங்கப் போயிடுவேனுங்கோ? என்ன காலைல தூங்கி எந்திரிச்சா இந்த 'என்ன பைத்தியம்' தெளிஞ்சிடும்னு நெனக்கிறேன்? என்ன அப்படியே ஒரு வேளை தெளியலைன்னு வையுங்க...? என்ன என்ன தெளியலைன்னா? என்ன அதெல்லாம் கண்டிப்பாத் தெளிஞ்சிடும்? என்ன நான் போட்ட பிளேடு தாங்காம ஆபிசுலேருந்து ரெண்டு பேரும் அழுதுகிட்டே போயிருக்காங்க? என்ன நாளைக்கும் தெளியலைன்னா என்னை கல்லெடுத்து அடிச்சி க்ளோஸ் பண்ணிடுவாங்க?


என்ன சரி...ஒரு கிறுக்கு பயலைப் பாக்க வந்துட்டீங்க? என்ன வந்ததுக்கு ரெண்டு படத்தைக் காட்டுறேன்...பாத்துட்டு கொஞ்சம் துப்பிட்டு போங்க சாமியோவ்?

என்ன இந்த மஞ்சா கலருலே ஒரு பூவு தெரியுதே...அது தான் அலமண்டா பூவு? என்ன அது கொத்து கொத்தா பூக்கும் பாக்க ரொம்ப அழகா இருக்கும்?


என்ன மூக்குத்தி பூ மேலே காத்து உக்காந்து பேசுதம்மா?


என்ன செவ்வரளி தோட்டத்துலே உன்னை நெனச்சேன்?


என்ன என்ன பழம் இதுன்னு சொல்லுங்க? என்ன சின்னதா வெள்ளை கலர்ல ஒரு பூவும் இருந்துச்சு?


என்ன இதை படிச்சிட்டு கொலைவெறி வருதா?? என்ன கொலைவெறியோட ஒரு பின்னூட்டம் போடுங்க அம்மா, ஐயா?